உதிர்ந்து கிடந்த
எழுத்துக்களைப் பரிசீலித்துக்
கொண்டிருந்தேன்...
சலங்கையொலி
தூரத்தில் தொடங்கியிருந்தது..
நாட்டியக்காரி யாரும்
நடக்க வாய்ப்பிலாத
இடமும் பொழுதும் தாண்டி
என் எழுத்துக்களைச்
செல்லம் கொஞ்சவிடாமல்
இம்சித்து நெருங்கியது
அந்த ஒலி...
பூம்பூம் மாடோ, கிருஷ்ணா வேடதாரியோ ...
சுற்றிவளைத்த ஆர்வத்தினால்
வாசல் வந்தபோது
வெறித்த சாலையில்
மணலாவது கொஞ்சம் கிடந்திருக்கலாம்.
- உமா மோகன்
சற்றுக் குழப்பமாய் இருக்கிறது..வெறித்த சிமெண்ட் சாலையில் எதுவுமே வராமல் எங்கிருந்து வந்தது சல் சல் சத்தம்...