உயிர் சிறகுகள் விரித்திருக்கும்
பட்டாம்பூச்சிகளை சேகரித்த
வெளிர்வண்ண குடுவையுடன்
தனிமையின் வனத்தில்
பயணிக்கிறாள் விழிகளற்றவள்..
கடக்கும் இலையற்ற மரம் ஒன்றிற்கு
ஒவ்வொரு பட்டாம்பூச்சியென
வெளியெடுத்து சின்னாபின்னமாக்கி
வனமெங்கும் பிய்த்தெறிகிறாள்..
வண்ணங்கள் தூவி தாழப் பறக்கும் பூவொன்று
அடர்வனத்தினூடே பயணிக்க
பிய்த்தெறியப்பட்ட ஒவ்வொரு அங்கமும்
புதுவண்ண பட்டாம்பூச்சியாக
சிறகுகள் விரிக்கின்றன...
வான்முழுதும் பட்டாம்பூச்சியாய் நிறைந்தபிறகு
இலையற்ற மரங்களில் தாவி தாவி
வனத்தைக் கடக்க துவங்குகிறார்கள்
கைகோர்த்தபடி பூவும் அவளும்...

- தேனப்பன் [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]

Comments

3 comments

3
இளங்கோ
@ தேனப்பன்
*
அந்த வனத்துக்குள் இட்டுச் சென்று தன்னந்தனியே விட்டுச் சென்றதைப் போல் இருக்கிறது...
எங்கு திரும்பினாலும் வண்ணங்கள்..
வாழ்த்து... தம்பி..!
தேனப்பன்
மிக்க நன்றி இளங்கோ அண்ணா..
சோமா
வான்முழுதும் பட்டாம்பூச்சியாய் நிறைந்தபிறகு
இலையற்ற மரங்களில் தாவி தாவி
வனத்தைக் கடக்க துவங்குகிறார்கள்
கைகோர்த்தபடி பூவும் அவளும்...
நினைத்துப்பார்த்தேன்..என் சிறகுகளில் வண்ணம் முளைப்பதை தவிர்க்க முடியவில்லை.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.