நம் முத்தங்களின்
எச்சில்களில் நமக்கான
கரைகளைக் கழுவிய
அந்த தினங்கள் மறைந்து
கானல் நீராய் விரிகிறது.
இடையில் முளைத்த
உன் மீதான வெறுப்புகளை
அள்ளிப் போட்டுக் கொண்டு
கண்களை அகல விரித்து
கானல் நீர் நோக்கி
என் வாகனத்தை
விரைக்கிறேன்.
பொட்டல் காடுகளுகளின்
தலைக்கு நேர் வகுடு
எடுத்ததாய் நீளும் சாலையின்
தொலைவில் பல்லிளித்து
அழைக்கும் கானல் நீர்களை
மோதிக் கொன்று விட்டு
நகர்கிறது என் வாகனம்
என் பிணத்தை
ஏற்றிக் கொண்டு.
- சோமா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- கலகம் செய்யும் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா
- 11வது புதுச்சேரி சர்வதேச ஆவணப்பட குறும்பட திருவிழா
- The Man Who Sold His Skin - துனிசியா நாட்டு படம்
- ஏழைக்குழந்தைகள் படும் பாடும் அதிக பட்ச வன்முறை உலகமும்
- அமனித உயிர்கள் நடமாட்டம் அபாயமானதா...?
- காணாமல் போகிறவர்கள்
- ‘சிலுவை’ நாவல் அனுபவங்கள்
- துட்டி வீடு
- வானம் மேயும் வெளிச்சம்
- வரப் போகும் தேர்தல்
- விவரங்கள்
- சோமா
- பிரிவு: கவிதைகள்