கடல்சங்கில் நீரெடுத்து

சங்குக்குள் சமுத்திரத்தை

அடைத்து வைப்போம்

அம்புலியிலொரு துண்டு

வாங்கி வந்துன் மூக்குத்தியில்

ஒட்டி வைத்தழகு பார்ப்போம்

வீட்டுக் கூரையிலமர்ந்து

கதைத்து மழை வந்தால்

கூரைக்கே குடையென

நாம் ஆகுவோம்

விழுதோடிப் படர்ந்த

பழஞ்சுவர்களில் நம் குறித்த

காதல் சித்திரங்கள்

வரைந்து வைப்போம்

**

வேப்பமரக் காற்றை

குளிர்வித்து நம்

அறைமுழுதும் நிரப்பிடுவோம்

காலைப் பனிக்குக் கட்டளையிட்டு

நம் வெளியெங்கும்

சந்தனமணத்தைத் தூவச் செய்வோம்

உன் ஊடல்கள் தீர்க்கவென

நான் இன்னும் என்னவெல்லாம்

சொல்லவேண்டும்

சொல்

- எம்.ரிஷான் ஷெரீப்

 

 

Comments

1 comment

1
viji
எம்.ரிஷான் ஷெரீப் Eluthiya Ovaru Ovaru Kavithayum megavum nantraga irugerathu. Epadi Sir Ungala Ipadi Elutha Mutiyuthu Anyway Very Nice Sir

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.