பால் வெள்ளையில்
சின்னச்சின்ன மஞ்சள் பூக்கள்

நீல ஆகாயத்தில்
நீந்தும் வண்ணப் பலூன்கள்

துள்ளியோடும் ஜெர்ரிகளைத்
துரத்தும் டாம்கள்

பசுஞ்சோலையில் மரவிழுதைப்
பற்றியாடும் டோராக்கள்.

கைக்கு இரண்டாகச் சுழற்றியபடி
சிக்னல் நிறுத்தத்தில்
வண்டிகளுக்கு நடுவே
புகுந்து புறப்பட்டு
கவனம் ஈர்த்துக் கொண்டிருந்த
குடை வியாபாரி

சடசடவென மழை பூக்கவும்
அவசரமாய்க் குடைகளை மடக்கிப்
பத்திரமாய்ப் பைக்குள் திணித்தவாறு
ஒதுங்க இடம் தேடுகிறான்.

***
- ராமலக்ஷ்மி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.