கருத்த முலையிலிருந்து
பொழியும்
வெள்ளை தாய்ப்பாலாக
பொழிகிறது மழை..!
 
கறுப்புக் குடைப் பிடித்து
வானம் முழுக்க
வலம் வருகிறது மேகம்..!
 
பூமியை முத்தமிடும்
ஒவ்வொரு மழைத்துளியும்
உறங்கிக் கிடக்கும் உயிரை
உசுப்பி விடுகின்றன..!
 
பூக்களுக்கு
தேனை ஊட்டி விடும்
மழைத்துளிகள்
வானவில்லுக்கு
வண்ணங்களை பரிசளிக்கின்றன..!
 
காதலைப் போலவே
கரைந்து விடும் மேகத்திற்கு
வானவில் வந்து
வண்ணங்களின் அணிவகுப்பால்
வணக்கம் சொல்கிறது..!
 
ஒரு மழையைப் போல
பிறர்காக வாழாத மனிதன்
ஒரு இரவு நேரத்தின்
ஈசலைப் போல வாழ்ந்து
இறந்து போகிறான்..!

- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

2 comments

2
aadhan
enna solkirirgal intha kavithai moolam enRe puriyavillai.enennamo sollumpodhu enna thodarpu?malaiyai vidave mattreenga kavidhai eluduravanga yaarum.waste
PRABHA
உறங்கிக்கிடக்கும் உயிரை உசுப்பிவிடும் மழை வரிகள் அருமை !

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.