ஆழ் நித்திரை
என்பதென்னவோ 
பொய்த்துப்போன விஷயம் எனக்கு!

நிலா ஒரு பக்கம்...
நீ மறுபக்கம்..
இடையிலமர்ந்து விடுகிறது
கவிதையெனும் காமம்!

நீ தள்ளிவிடுகிறாய்...
இரவு வெளிச்சத்தில்
ஒரு புள்ளியாகி விடுகிறேன்!

பெய்யெனப் பெய்கிறது
காதல்...
எனை எடுத்து வைத்துக்கொள்கிறாய்...

ஒரு கையால்
தலைகோதி
மறுகையால் தட்டிக்கொடுக்க 
கால் மடித்து தூங்குகிறேன் 
உன் உள்ளங்கையில்...

காதலுக்கும்
காமத்துக்குமான
இச்சிறிய இடைவெளியில்
என் தூக்கம்
ஒரு அழகான பின்னணி இசையோடு
புணர்ந்து கொண்டிருக்கிறது!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.