என் முகங்களைக்
களைந்து பயணிக்கிறேன்
முகங்களற்ற வெளியில்...
அங்கு இருவர்
பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது.
கூர்ந்து கவனிக்க முயற்சித்தேன்
அவர்கள் பேசிக்கொள்ளும் மொழி
எனக்கு புரிபடுவதாயில்லை
முகங்களேதும் இல்லாததால்
அடையாளம் காணுதலும்
இயலாமற்போனது
இறுதியில் கபகபவெனச்சிரித்தான் ஒருவன்
சப்தமேதுமின்றி முடங்கிப்போனான் ஒருவன்
சிரித்தவனும்
முடங்கிப்போனவனும்
யாரென அறிய இயலவில்லை.
களைந்த முகம்
மீளத்திரும்பியபோது
சிரித்ததும் முடங்கியதும்
யாரெனப்புரிந்தது.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ!
- ஆர்.என்.ரவிக்கும் சீமானுக்கும் கால்டுவெல் மீது கோபம் ஏன்?
- தேர்தல் ஆணையத்தை காணவில்லை!
- ராகுல் - மோடி நேரடி விவாதம்
- கொள்ளைக்காரர்கள், காட்டின் பாதுகாவலர்களாக மாறிய கதை
- சிறு மழைக்கு காத்திருக்கிறேன்
- நானமர்ந்த இரகசியக் கூடு
- சு.ம. திருமணமும் பு.ம. திருமணமும்
- பெரியார் முழக்கம் மே 16, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!
- விவரங்கள்
- சின்னப்பயல்
- பிரிவு: கவிதைகள்