என் கரத்தை
இறுக்கப் பிணைத்து
உரக்கச் சொல்லியிருக்கிறாய்
நான் நீ என்றும்
நீ நானென்றும்!

பேசி தீர்க்க வேண்டிய
சில மனஸ்தாபங்களையும்
சொல்லி புரிய வைக்க வேண்டிய
சில உணர்வுகளையும்
ஒரு காதல்
மற்றுமொரு அகங்காரம்
ஒடுக்கி வைத்திருப்பதென்னவோ
அப்பட்டமான நிஜம்!

இணைய உரையாடல்களில்
நீ ஒளிய வேண்டியதில்லை...
தொலைப்பேசி அழைப்புகளை
நீ துண்டிக்க வேண்டியதில்லை...
சமூக வலையமைப்புகளில்
எனை நீக்க வேண்டியதில்லை!

நான் ஆணென்ற
ஒரு செருக்கும் உண்டெனக்கு!

நீ
தாழிடாமலே தூங்கலாம்...
இனியும் தட்டுவதாயில்லை
புறக்கணிப்பின் கதவுகளை...!

- ரசிகன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.