*

ஓலமிட்டுத் தொலைகிறது

கருப்பு பகலிலான

வெள்ளை நிழல்கள்

 

மனதை

கொக்கி போட்டு இழுக்கிறது

வந்துகொண்டிருக்கும் ஒருவனின்

ஈட்டிப் பார்வை

 

அவனது

கூரான பார்வையில்

மோதிப் பிளந்தது

பிராண வாயு

 

மூன்றாம் நுரையீரல்

மூச்சடைத்துத் திணறியது

 

புலம்பும் மரங்கள்

அழுவதை நிறுத்தப் போவதில்லை

 

பட்டாசுகள்

காற்றைக் கிழித்து

வெடித்துச் சிரித்தன

 

உலாவும் தென்றலில்

மரணம் மணக்கிறது

 

புகை நிழல்கள்

விண்மீன்களை விழுங்கி

குரூரமாய் நகைத்தது

 

முடிவாக

"மரங்கள் நடுவோம்"

என்றார்கள்....!!!

 

***

- கலாசுரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.