உன்னை
குரூரமான
ஆரவாரத்தோடு
சூழ்ந்து கொண்ட
இந்த இரவு மழையை
எவருக்கும் தெரியாமல்
இரு கைகளிலும்
ஏந்திக்கொள்கிறேன்

முன்வரும்
மின்னலின் ஒளியில்
அது
மிளிர்கிறது

பின்வரும்
இடியோசையில்
அது
அதிர்கிறது

அதில்
எவ்வித நிழலும்
விழாதபடி
மறைத்து வைத்திருக்கிறேன்
உனது பிரக்ஞ்ஞையை
காகிதமெனக் கிழித்து
என்னிடம்
தூதனுப்புகிறாய்

மழையற்ற
இரவொன்று உன்னிடம்
பத்திரப்பட்டிருப்பதாக...

அந்த
இரவின் மின்னல்கள்
ஒளியற்றும்
இடியோசைகள்
சப்தமற்றும்
இருப்பதாக..

அந்த இரவின்
கோப்பைக்குள்
வெகுளித்தனமான
நிழல்களை
ஊற்றி வைத்திருப்பதாக..

மற்றும்
அந்தக் கோப்பையை
மீதமின்றி
சுவைத்துப் பருகுவது
உனக்கு
மிகவும் பிடித்திருப்பதாக...

- கலாசுரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.