கடக்கும் பாதையில்
நித்தம் ஒரு நெருடல்...
பக்கத்து இருக்கையில்
நடுத்தரவயது பெண்மணி.
ஈரமான விழிகளுடன்!!
பேருந்து நிறுத்தத்தில்
ஒவ்வொருவராய் கைபிடித்து உலுக்கும்.
காசுக்காக பச்சிளம்பிஞ்சு!
குரைத்துக் கொண்டே பின்வந்து
வாரியெடுக்கவா கோரிக்கை?.
தெருவோர நாய்க்குட்டி!
சொகுசான மாடி வீட்டினுள்ளும்
எட்டி பார்க்கத்தான் செய்கிறது!!
மெல்லியதொரு விசும்பல்!
வீசி எறியப்பட்ட
மல்லிகை மலர்கள் அனைத்தும்
காய்ந்து உலர்ந்தவை தானா??
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ!
- ஆர்.என்.ரவிக்கும் சீமானுக்கும் கால்டுவெல் மீது கோபம் ஏன்?
- தேர்தல் ஆணையத்தை காணவில்லை!
- ராகுல் - மோடி நேரடி விவாதம்
- கொள்ளைக்காரர்கள், காட்டின் பாதுகாவலர்களாக மாறிய கதை
- சிறு மழைக்கு காத்திருக்கிறேன்
- நானமர்ந்த இரகசியக் கூடு
- சு.ம. திருமணமும் பு.ம. திருமணமும்
- பெரியார் முழக்கம் மே 16, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!
- விவரங்கள்
- தேனப்பன்
- பிரிவு: கவிதைகள்