ஈயென இரத்தலுக்கு
இறப்பே மேலாம்..
ஈயென இரந்தும்
ஈயாதவனுக்கு
வாழ்வே இறப்பு..
-------------------------

அறிவிக்கப்படுகிற வெற்றிக்கும்
அறிவிக்கப்படாத தோல்விக்குமான
வித்தியாசங்கள்..
சொல்லப்படாத காதலுக்கும்
சொல்லப்படுகிற நட்புக்கும்
இடையிலான வித்தியாசமே
------------------------------

எப்போதும்
இப்படியே இரு..
பெரும் துக்கமும்
சிறு சந்தோஷமும் தந்து..
கவிதைகளாவது பிறக்கட்டும்.
---------------------------

கடைசி ஆசை ஏதேனும்
உண்டா? என சாகும் தருவாயில்
கேள்வி கேட்கப்படுகிறது..
சொற்களை இழந்த நான்
என் அசைவுகளில் வெளிப்படுத்துகிறேன்..
உன்னுடன் வாழ வேண்டுமென
மறுதலிக்கத் திராணியற்று
மண்டியிடுகிறாயென் முன்
கண்களில் நீர் வழிய..
உன் கண்ணீரில் என் பிம்பங்கள்
அசைகிறது முடிவுறா காதலைக்
கொண்டாடியபடி..
--------------------------------
- இசை ப்ரியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It