தொடர்புடைய படைப்புகள்

“ஏகலைவன்” மற்றும் “சர்வதேசியவாதிகள்” ஆகிய இருவரும் எமது முந்தையக் கட்டுரைக்கு எதிர்வினையாக இரு கட்டுரைகள் எழுதியிருக்கின்றனர். இது போன்ற ம.க.இ.க.வினரின் கட்டுரைகள் தாம் இவர்களை மேலும் அம்பலப்படுத்த மறைமுகமாக உதவுகின்றன என்பதால் இதனை மனமுவந்து வரவேற்போம். இதற்காக அவர்களுக்கு நன்றிகள் பல உரித்தாகுமாக!

 அடிப்படையற்ற அவதூறுகளுடன் கூடிய வசைகளை நாம் பொழிந்து விட்டோம் என்று ம.க.இ.க.வின் ஏகலைவன் குறைபட்டு கொள்கிறார். இதுவரை ம.க.இ.க. எழுதாத நாகரீகமற்ற வசைகளையும், அவதூறுகளையும் விடவா நாம் அதிகமாக எழுப்பிவிட்டோம்? 1976 இல் தொடங்கி இன்று வரை ம.க.இ.க. கும்பலின் “புரட்சிகர” விமர்சன பாணியே இது தானே! இவர்களது அரசியல் பாதையை உன்னித்துப் பார்த்தால் இது நன்கு விளங்கும் அன்றோ! இதோ ம.க.இ.க.வின் அரசியல் தத்துவப் பாசறையில் பயின்ற பிரச்சார பீரங்கி “சூப்பர்லிங்ஸ்”(Superlinks) கூறியிருக்கிறார் பாருங்கள். “மூஞ்சி மொகரக்கட்டைய விலாசத்தோட காட்டிடுங்க” என்று இவர்கள் கூறினால், நாம் எந்த அமைப்பு என்று கேட்பதாக அர்த்தமாம்.. புரி்ந்து கொள்ளுங்கள்... என்னே இவர்களது புரட்சிகர நாகரீகம்..! இந்தத் தவறை சுட்டிக் காட்டுவதால் எனக்கு “இலக்கிய ஆசான்” பட்டம் சூட்டி வெடித்திருக்கும் தோழர் ஏகலைவன், “சூப்பர்லிங்க்” செய்யும் இந்த “புதிய கலாச்சார” சேட்டை நடவடிக்கைகளை மெளனமாகத் தானும் அங்கீகரிக்கிறார். அடங்கேப்பா...! இவர்களது “புரட்சிகர” நடவடிக்கைகள் நம்மை பயங்கொள்ளவே வைக்கின்றன.

 இந்தியக் கம்யுனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யுனிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சிகளை போலி கம்யுனிஸ்டுகள் என்று தாம் ம.க.இ.க.வினர் அழைக்கின்றனர். இதன் சாரத்தில், இவர்களெல்லாம் போலிகள் என்றும் தாங்கள் தான் உண்மையான கம்யுனிஸ்டுகள் என்றும் ம.க.இ.க. தம்மை பறைசாற்றிக் கொள்கின்றனர். இவ்வாறெனில், தம் கட்டுரையின் தலைப்பில் “போலித் தமிழ்த் தேசிய அரசியல்” என்று ஏகலைவன் எழுதியிருப்பதால், ம.க.இ.க. “உண்மையான தமிழ்த் தேசிய அரசியல்” என்ற ஒன்று இருப்பதை ஏற்றுக் கொள்கின்றதா? என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது. தமிழ் உணர்வு, தமிழ்த் தேசியம் என்று கேள்விப்பட்டாலே இனவாதம், குறுந்தேசிய வெறி என்று குதறித் தீர்க்கும் ம.க.இ.க., நாளைக்கு நாங்கள் தான் உண்மையான தமிழ்த் தேசியப் போராளிகள் என்று தம்மைத் தாமே அழைத்துக் கொண்டாலும் நாம் ஆச்சர்யங்கொள்ளத் தேவையில்லை. இது அவர்களுக்கு கைவந்த கலை. ஒருவேளை, இக்கேள்வியிலிருந்து தப்பிப்பதற்காக, “தேசியம்” என்பதே கற்பிதம், முதலாளிகளின் கண்டுபிடிப்பு அதனால் நாங்கள் சர்வதேசியத்தைத் தவிர வேறு எந்த தேசியத்தையும் ஏற்கவே மாட்டோம்” என்று இவர்கள் வாதிட்டாலும் வாதிடுவார்கள். அதே நேரத்தில், மறைமுகமாக, இந்தியத் தேசியத்திற்கும் வால் பிடிப்பார்கள். 

 சரி, அவரது வாதத்தையே எடுத்துக் கொள்வோம். அதில், தமிழ்த் தேசிய அரசியல் என்பதே ஏகாதிபத்தியங்களின் எடுபிடி அரசியல் என்று தத்துவ மழை பொழிந்திருக்கிறார், ஏகலைவன். ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடிப்பதற்கு ஏற்ற சந்தையாக, ஏற்ற கட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ள ஏக “இந்தியத் தேசிய அரசியல்” தான் ஏகாதிபத்தியங்களுக்கு ஏதுவான அரசியல் களமே தவிர, தமிழ்த் தேசியம் அல்ல. தமிழ்த் தேசியம் தன் பிறப்பிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் களமாக பரிணமித்திருக்கிறது. உலகமயம் வேக வேகமாக அழித்து வருகின்ற தேசிய இன அடையாளங்களை உயர்த்திப் பிடித்து, அத்தேசிய இனங்கள் தமக்கான சுயநிர்ணய உரிமையை அடைவதற்காக தமக்கான விடுதலைப் போரை தொடங்கினால், அது ஏகாதிபத்தியங்களின் எடுபிடி அரசியல் என்றாகுமா? தமிழ் இனம் இந்தியத் தேசிய ஆதிக்கத்திற்குள் தான் கிடக்க வேண்டும் என்று எண்ணுகின்றது ஏகாதிபத்தியம். இவ்வாறு ஏகாதிபத்திய சக்திகள் தானே முன்னின்று எதிர்க்கின்ற, “தமிழ்த் தேசியம்” என்ற கோட்பாட்டை, ஏகாதிபத்தியத்திற்கு நன்மை பயக்கிறது என்று கூச்சலிட்டு, ஏகாதிபத்திய சக்திகளுக்கே பாடமெடுக்கிறார், ஏகலைவன். 

 “இந்தியத் தேசிய அரசியல்” தான் ஏகாதிபத்தியத்தை “கதிகலக்கும்” அரசியல் என்று ஏகலைவன் கருதுவாரானால், அந்தப் பிழை அவரிலிருந்து உதித்ததில்லை. அவர் சார்ந்திருக்கும் அமைப்பின் பிறப்பிலிருந்தே அது உதித்துள்ளது. புரட்சிகர சொல்லாடல்கள், வாய்ச்சவடால் பேச்சுகள், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சார இதழ்கள், கீழைக்காற்று என்ற புத்தக வெளியீட்டகம் என மக்கள் கலை இலக்கியக் கழகம் என்று சொல்லப்படுகின்ற ம.க.இ.க.வின் ஒருமுகம் தான் தற்பொழுது வெளியுலகில் பலருக்கும் தெரிந்திருக்கின்றது. இந்த அமைப்பிற்கு பின்னாலிருந்து இயக்கும் ஒரு “அகில இந்தியக்” கட்சி உள்ளது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அக்கட்சியின் பெயர், “இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி (மார்சிஸ்ட் - லெனினிஸ்ட்) - மாநில அமைப்புக் கமிட்டி, தமிழ்நாடு” என்பதாகும். ஆங்கிலத்தில் "CPI (ML)(SOC) State Organizing Commitee, Tamilnadu" - (சி.பி.ஐ.-எம்.எல்.-எஸ்.ஓ.சி.)என்பார்கள். அந்தக் கட்சியின் ஒரு மக்கள் திரள் அமைப்புத் தான், ம.க.இ.க. , பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு., வி.வி.மு., பெ.வி.மு., உள்ளிட்ட அமைப்புகள் எல்லாம். இன்றும் கூட எஸ்.ஓ.சி. கட்சி தடை செய்யப்பட்ட ஒர் அமைப்பல்ல. தடை செய்யும் அளவிற்கு இதுவரை அவர்கள் ஒரு துரும்பும் செய்ததுமில்லை. ஆனால், அந்தக் கட்சி தலைமறைவுக் கட்சி என்பது போல பிலிம் காட்டுவது நகைப்புக்குரிய இவர்களது “புரட்சிகர” “ரகசிய” நடவடிக்கைகளில் ஒன்றாகும். 

 “மாநில அமைப்புக் கமிட்டி, தமிழ்நாடு” என்று இருப்பதால், “மாநில அமைப்புக் கிமிட்டி, கேரளம்”, “மாநில அமைப்புக் கிமிட்டி, ஆந்திரம்” என்று பல கிளைகளைக் கொண்ட ஓர் “அகில இந்திய”க் கட்சி தான் இதுவோ என்று யாரும் எண்ணிவிடக் கூடாது. அப்படி எண்ணினால், நாம் முட்டாள்களே ஆவோம். அவ்வாறு நாம் எண்ண வேண்டும் என்பதற்காகவே, இக்கட்சியின் தலைமை ஓர் “அகில இந்திய”க் கட்சி போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தும் படியாக, பீலிம் காட்டும் நோக்கத்திலேயே இப்பெயரை நன்கு திட்டமிட்டு வைத்திருக்கின்றனர் போலும். இல்லையெனில், “மாநில அமைப்புக் கமிட்டி, தமிழ்நாடு” என்று பெயரை வைத்துக் கொண்டு மற்ற “மாநிலங்களில்” கிளையோ, அமைப்போ, உறவோ கொள்ளாமலும், அதற்கான நடவடிக்கைகளில் கூட இறங்காமலும் இருப்பது ஒன்றே இவர்களது பெயர் பித்தலாட்டத்திற்கு சான்றளிக்கும். தம் கட்சிப் பெயரில் உள்ள “இந்திய” என்ற வார்த்தை தான் ம.க.இ.க.வின் அரசியல் எது என்பதனை நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றது. தமது கட்சிப் பெயரில் கூட தமிழ்நாடு இந்தியத்தின் ஓர் அடிமை மாநிலமே என்று உணர்த்துமாறு “மாநில அமைப்புக் கமிட்டி, தமிழ்நாடு” என்றே வைத்துள்ள இவர்கள் தாம் தமிழ்நாட்டிற்கு உண்மையாகவே போராடும் புரட்சியாளர்களாம். நம்புங்கள். நாம் நம்பித் தான் தீர வேண்டும். ம.க.இ.க. அறைகூவல் விடுக்கிறது.

 ம.க.இ.க. சார்ந்திருக்கும் நாடு என்பது ”இந்தியத் தாய்த்திருநாடு”. ம.க.இ.க.வின் தேசியம் என்பது ”இந்தியத் தேசியம்” என்பது இவை மூலம் நமக்குப் புலனாகிறது. இருந்த போதும், காசுமீர், மணிப்புர், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் சுயநிர்ணய உரிமை வேண்டுமெனவும் முழக்கமிடுவது தான் ம.க.இ.க.வினரின் ஸ்டைல். ஒருவேளை புதிய ஜனநாயகப் புரட்சி ஏற்பட்ட பின்னர், இவர்கள் கூறுவது படி அனைத்து மாநிலங்களும் பிரிந்து போக வேண்டுமென முடிவெடுத்துவிட்டால், ”இந்தி”யப் புரட்சியை இதயத்தில் வைத்திருக்கும் எஸ்.ஓ.சி. கும்பல், அந்த இந்தியமே தகர்ந்து போவதற்கு அனுமதிக்குமா? அனுமதிக்கவே அனுமதிக்காது. கம்யுனிசத்தின் பெயரால் இன்றைக்கு சீனா எப்படி திபெத்தை அடக்கி ஒடுக்கி வருகின்றதோ, அதே கதி தான் நாளை இவர்கள் சுயநிர்ணய உரிமை வழங்கப்போவதாக பட்டியலிடும் அனைத்து மாநிலங்களின் கதியும். இவ்வாறு, ”இந்திய” என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு அவர்களை பின்னின்று இயக்கும் ”அகில இந்திய”க் கட்சி, எந்த நாட்டில் புரட்சி செய்யப் போராடுகின்றது? எந்த நிலப்பரப்பில் புரட்சி செய்யப் போராடுகின்றது? எந்த நில எல்லைக்குள்ளான பகுதிகளை புரட்சி செய்து கைப்பற்றப் போகின்றது? என்று திட்டமிடாமல், யார் எதிரிகள், யார் நண்பர்கள் என வெளிப்படையாகவும் வரையறுக்காமல் ”அரைகுறை” திட்டத்தைக் கூட வகுக்க வக்கில்லாத, இந்த ”இந்திய” கும்பல் தான், தமிழ்த் தேசியப் புரட்சியை பார்த்து கிண்டலடிக்கிறது. 

 “சமூகத்தில் நிலவுகின்ற மதம், சாதி, இனம் போன்ற வேறுபாடுகளை, அடையாளங்களை மிகைப்படுத்தி ஒரு கலாச்சாரமாகப் பராமரிப்பதன் மூலமாக வர்க்க அடையாளத்தை இல்லாமல் செய்துவிடலாம் என்று ஏகாதிபத்தியம் நம்புகிறது; ” என்றும் அக்கட்டுரையில் எழுதியிருக்கிறார், ஏகலைவன். வர்க்க அடையாளத்தை இல்லாமல் செய்து விட வேண்டும் என்ற நோக்கில் தான் ஏகாதிபத்தியம் மதம், சாதி, இனம் போன்ற அடையாளங்களை மிகைப்படுத்திக் காட்டுகின்றதாம். 

 ஈழத்தமிழினம் அழிவுக்குள்ளாகி வந்த சூழலில் அனைத்துத் தரப்பு மக்களும் தமிழகத்தில் “நாம் தமிழர், அங்கே அழிக்கப்பட்டு வருவது நமது இனம்” என்ற விரிந்த பார்வையில் களமிறங்கி போராடினர் என்று கூறினோம். இது இந்தியத் தேசிய வெறியர்களுக்கு மட்டுமல்ல, ம.க.இ.க.விற்கும் அவ்வாறே அதிர்ச்சியையும் வெறுப்யையும் ஏற்படுத்தியிருப்பதை உணர முடிகின்றது. ஈழத்தமிழினத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டு மக்கள் நடத்தியப் போராட்டத்தை பார்த்து நாம் கனவு காண்கிறோமாம், “சர்வதேசியவாதி”யின் புலம்புல்கள் இதனை உணர்த்துகின்றன. 

 ஆரிய பார்ப்பனியமே தமிழ் மக்களை சாதி ரீதியாக கூறு போட்டு பிளவுபடுத்தியது. தமிழ்த்தேசியர்கள், ஆரியப் பார்ப்பனியத்தை தம் முதன்மை எதிரியாகக் கணக்கிட்டு போராட வேண்டுமென நாம் சொல்கிறோம். தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும், சாதி இழிவுகளைத் தாங்கிக் கொண்டு ஆதிக்கச் சாதிகளின் கீழே அடிமைப்பட்டே கிடக்க வேண்டுமென எந்தத் தமிழ்த் தேசியவாதி எழுதினார்? பேசினார்? இதற்கு ம.க.இ.க. முகாமில் பதில் கிடைக்காது. 

 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான ஆதிக்கச் சாதிகளின் திமிர்த்தனத்தை எதிர்த்துப் போராடும் அதே வேளையில், சாதி வேற்றுமைகளைக் கடந்து தமிழர்கள் ஒன்றுபடுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டுமென்றே, தமிழ்நாட்டு தமிழ் உணர்வாளர்கள் விரும்புகின்றனர். உளவுத்துறை தான் முத்துராமலிங்கன் என்ற சாதி வெறி நாயைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஏவிவிட்டதா என்று எதிர் கேள்வி எழுப்பியுள்ளார், “சர்வதேசியவாதி”. இக்கேள்விக்கு எதிராக தோழர் ஏகலைவன் கூற்றுப்படி, “ஏகாதிபத்தியம் தான் வர்க்க அடையாளத்தை மறைக்க சாதி வேற்றுமையை மிகைப்படுத்திக்” காட்டியதா என்று நான் கேள்வி எழுப்பலாமா? தோழர் ஏகலைவன் கூற்றுப்படி, இங்கு நிலவும் சாதி, மத, இன வேறுபாடுகள் அனைத்திற்கும் ஒரே காரணம் ஏகாதிபத்தியம், ஏகாதிபத்தியம் மட்டுமே என எடுத்துக் கொள்ளலாமா? வர்க்க அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காகத் தான் ஏகாதிபத்தியம் இன அடையாளத்தை மிகைப்படுத்தி ஈழத்தில் தமிழினத்தின் மீது சிங்கள இனவெறி அரசை விட்டு அடக்குமுறையை ஏவியதா? வர்க்க அடையாளம தெரியக்கூடாதென்றக் காரணத்தினால் தான் ஏகாதிபத்தியம், இந்தியாவில் தீண்டாமை சாதி ஒடுக்குமுறையை மிகைப்படுத்தி பராமரித்தா? 

 இவற்றை நாம் எழுப்பவில்லை, ஏகாதிபத்தியத்திற்குத் தான் வர்க்க அடையாளத்தை மறைக்க வேண்டியத் தேவை இருக்கிறது என எழுதியிருக்கும் ஏகலைவனின் வரிகள் தாம் எம்மை இவ்வாறு எழுத வைத்திருக்கின்றது. “சர்வதேசியவாதி” இதனை தோழர் ஏகலைவனிடமே கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்ளலாம். இதற்கு நாம் தடையல்ல..

 தமிழ்த் தேசியர்களின் நிலைப்பாடு என்பது வெளிப்படையானது. ஆரியப் பார்ப்பனியமே தமிழினத்தின் முதல் பகையாக வரலாறெங்கும் விளங்கி வருகின்றது. இந்த ஆரியப் பார்ப்பனியத்தின் பாசிச சட்டவடிவு தான் ”இந்தியா” என்ற ஏகாதிபத்திய செயற்கைக் கட்டமைப்பு. இந்தக் கட்டமைப்புத் தகர்க்கப்பட்டு, அதில் சிறைபட்டிருக்கும் தமிழ் இனம், தமக்கான விடுதலையை வென்றெடுக்க வேண்டுமென நாம் விரும்புகிறோம். அதற்கான கோட்பாடாக தமிழ்த் தேசியத்தை முன் வைக்கிறோம். ஆரிய இந்தியத்தைக் கருவறுக்கப் போராடும் அதே வேளையில், தமிழ் இனத்திற்குள் படிந்திருக்கும் சாதி வேற்றுமை அழுக்குகளை அப்புறப்படுத்த வேண்டுமே தவிர, சாதி வேற்றுமையை மட்டும் அம்பலப்படுத்திக் கொண்டிருந்தால், அது நம் கழுத்தைச் சுற்றி அமர்ந்திருக்கும் இந்தியத் தேசியக் கருநாகத்தி்ற்கே நம்மை காவு கொடுத்து விடும். 

 சாதியக் கட்டமைப்புகளை தகர்க்கவும், அதன் சட்டவடிவான இந்தியத் தேசியத்தை உடைத்தெறியவும் கோரும் இந்தத் தமிழ்த் தேசிய அரசியல் தான் ஏகாதிபத்தியத்தின் எடுபிடி அரசியலாம், எழுதுகின்றார் ம.கஇ.க.வின் ஏகலைவன். காசுமீர் பிரச்சினையை முன்னிட்டு பாகிஸ்தான் உளவுத்துறை இந்தியாவை பிளவுபடுத்த சதி என்று இந்தியத் தேசியவாதிகள் வாந்தியெடுப்பதைப் போலவே, அவர்களது வளர்ப்புப் பிராணி ம.க.இ.க.வும் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி, ”இந்திய”த்தையும் சர்வதேசியத்தையும் பிளவுபடுத்த சதி என்று அவ்வாறே அவர்களது சொந்த பாணியில் வாந்தி எடுக்கின்றனர். 

 ஈழத்திற்கு எதிரான சிங்கள இனவெறி அரசின் போர் குறித்து ஒரு டுபாக்கூர் தீர்மானம் ஐ.நா. மன்ற மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டு வரப்பட்டது நம் அனைவருக்கும் தெரியும். அதில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து விட்டதாக இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பட்டிலிட்ட ம.க.இ.க.வின் புதிய ஜனநாயகம், சோசலிசக் கியுபாவையும், நிகராகுவா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க இடதுசாரி நாடுகளையும் அப்பட்டியிலில் சேர்க்கவில்லை. ”பிற நாடுகள்” என்ற பெயரில் இவை அமுக்கப்பட்டு விட்டனவே, இது தான் உங்களது சர்வதேசியத்தின் லட்சணமா? நீங்கள் போற்றி பாதுகாக்கும் கியுபா, நிகரகுவா உள்ளிட்ட லத்தின் அமெரிக்க இடதுசாரிகள் இலங்கை இனவெறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததை கண்டிக்கும் புரட்சிகர அரசியல் நேர்மை இல்லாத ம.க.இ.க., ”சர்வதேசியம“ பேசுகிறதாம். ஒருவேளை, இந்தப் போலிப் புரட்சியாளர்களின் அகராதியில் இந்த பித்தலாட்டத்திற்குப் பெயர் தான் சர்வதேசியம் என்பது போலும்.

 தமிழ்நாட்டின் தமிழ் உணர்வாளர்கள் கடந்த நாடாளுமன்றத் தோ்தலின் போது எடுத்த நிலைப்பாடுகள் மீது தோழர் ஏகலைவன் தம் கட்டுரையில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளனர். மேலும் அக்கட்டுரையில், நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தோ்தலில் தமிழ்நாட்டுத் தமிழ் உணர்வாளர்கள் மேற்கொண்ட நிலைப்பாடுகள் பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு ஆதவாகப் போய்விட்டதாம், ஒப்பாரி வைத்துள்ளார், ம.க.இ.க.வின் ஏகலைவன். அவரது விமர்சனங்களை ஆராய்வோம். 

 ஈழத்தில் தற்பொழுது நடந்து முடிக்கப்பட்டிருக்கும், இனவெறிப் போரை சிங்கள இனவெறி அரசைக் கொண்டு திட்டமிட்டும், முழு பலத்துடனும் நடத்தியது இந்திய அரசே என்பது தான் தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியர்கள் அனைவரும் கொண்ட ஒரே நிலைப்பாடு. இதில் மாற்றுக் கருத்து இல்லை. இதனால் தான், இந்தியாவின் துரோக முகத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், யார் இந்தப் போரை தலைமையேற்று நடத்துகின்றனரோ அந்த அரசை அம்பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அந்த அரசின் பெயரைச் சொல்லி “போரை நடத்துவது நீங்கள் தான் எனவே போரை நிறுத்து!” என்று பொருள்படும் விதமாக ”இந்திய அரசே! போரை நிறுத்து!” என்ற முழக்கம் தமிழ் உணர்வாளர்களால் முன் வைக்கப்பட்டது. இந்த முழக்கம் வெகு மக்களைச் சென்றடையும் பொழுது இந்திய அரசு இப்போருக்கு பின்னணியாக இருப்பது அம்பலமாகியது.
 
 இவ்வாறு செய்யாமல், தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, ”சிங்கள அரசே! போரை நிறுத்து!” என்றும் ”இலங்கை அரசே! போரை நிறுத்து!” என்றும் முழக்கமிடுவது என்பது, ”போரை சிங்கள அரசு தான் நடத்துகின்றது, இந்திய அரசுக்கு இதில் சம்பந்தமே இல்லை” என்று பறைசாற்றுவதற்கு ஒப்பாகும். இம்முழக்கம், ”இப்போரைப் பற்றி இந்தியாவிற்கு ஒன்றுமே தெரியாது, இலங்கை அரசு தான் போரை நடத்துகிறது, நாம் என்ன செய்ய முடியும்?” என்ற கேள்வியைத் தான் பாமர மக்களிடம் எழுப்பும். இதைத் தான் இந்தியத் தேசிய ஆளும் வர்க்கம் விரும்புகிறது. இந்த உளவியலைக் கட்டியமைக்கத் தான் இந்திய உளவுத்துறை கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்தது. போரை தலைமையேற்று நடத்தும் இந்திய அரசின் ”நற்பெயருக்கு” களங்கம் வந்துவிடக் கூடாதென்ற காரணத்தினால் தான், பார்ப்பன இந்தியத் தேசியத்தின் பாதந்தாங்கிகள், திட்டமிட்டு ”சிங்கள அரசே! போரை நிறுத்து!” என்றும் ”இலங்கை அரசே! போரை நிறுத்து!” என்றும் முழக்கங்களை ஏந்தி நின்றனர்.
 
 இந்திய அரசிற்கு தலைமையேற்று நடத்தும் பார்பபன பனியாக்களின் கட்சியான காங்கிரஸ் கட்சியும், அந்தக் கட்சியை விழுந்து விடாமல் தூக்கிப் பிடித்துப் பிழைப்பு நடத்தும் தமிழகத்தின் ”கருணா” கருணாநிதியும் இம்முழக்கத்தை முன்வைத்தே தம் போராட்டங்களை நடததினர். இதனால், தம்மை காத்துக் கொண்டிருக்கும், ”இந்தியத் தேசியத்தை” பாதுகாக்கும் ”பெரும்பணி”யை அவர்கள் செய்து கொண்டிருந்தனர். ”இலங்கை அரசே! போரை நிறுத்து!” என்று துரோக சக்திகள் ஒரே குரலில் முழக்கமிட்டனர். இதில் வினோதம், என்னவென்றால், ”நாங்கள் தான் உண்மையான புரட்சியாளர்கள்”, ”நாங்கள் தான் இந்தியத் தேசியத்தைத் திரைக் கிழிப்பவர்கள்”, ”தமிழ்த்தேசியர்கள் எல்லோரும் போலிகள்” என்று ஓலமிட்டனரோ அவர்களும் இதே குரலில் தான் முழக்கமிட்டனர் என்பது வேடிக்கையானது.
 
 இதனை ம.க.இ.க.வின் புதிய ஜனநாயகம் இதழ் அண்மையில் வெளியிட்ட ஒரு பிரசுரத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறது. ”இந்திய மேலாதிக்கத்திற்கு பலியான ஈழம்: வர்க்கப் பார்வையை மறுக்கும் தமிழ்த் தேசியர்களுக்கு மறுப்புரை” என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத்தால் வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தின் பக்கம் 24, பத்தி 4இல் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுருக்கிறது பு.ஜ.
 
””சிங்கள பேரினவாத அரசே, ஈழத்தமிழர்களின் மீதான இனப்படுகொலைப் போரை நிறுத்து” என்பதே சரியான கோரிக்கையாகும்”.

 அதாவது, இந்திய அரசு போருக்கு தலைமையேற்றிருப்பதை மறைத்து விட்டு, தமிழ்நாட்டில் சிங்கள அரசை எதிரியாகக் காட்டும் விதமாக, ”சிங்கள அரசே! போரை நிறுத்து!” என்ற முழக்கத்தை நாம் எழுப்ப வேண்டுமாம் பாடம் எடுக்கிறது ம.க.இ.க. நாம் ஏற்கெனவே சொன்னது போல் சிங்கள அரசிடம் கோரிக்கை எழுப்புவது போல் எழுப்பி, இந்தியத்தின் துரோகத்தை மக்களிடம் அம்பலப்படுத்தும் முழக்கத்தை முனைமழுங்கச் செய்து, இந்தியத்தின் துரோகத்தை மறைமுகமாக மறைத்திடும் மேற்கண்ட துரோக முழக்கத்தை, தி.மு.க. எழுப்பலாம், காங்கிரஸ் எழுப்பலாம், ஆனால், ”எங்கள விட்டால் தமிழ்நாட்டில் வேறு புரட்சியாளர்களே கிடையாது” என்று அடித்து வாதாடும் ம.க.இ.க. கும்பல் எழுப்பலாமா?
 
 ”இந்திய அரசே! போரை நிறுத்து!” என்ற தமிழ்த் தேசிய ஆற்றல்கள் எழுப்பிய முழக்கத்தின் மூலம் இந்தியத்தின் முகத்திரைக் கிழிபடுவதை ம.க.இ.க. கும்பலால் ஏன் தாங்கிக் கொள்ள முடியவில்லை? இந்தியத்தின் துரோகத்தை அம்பலப்படுத்தும் இம்முழக்கம் வெகுமக்களை சென்றடைவதை ம.க.இ.க.வின் தலைமை ஏன் விரும்பவில்லை? இது தான் நீங்கள் இந்தியத் தேசியத்தை அம்பலப்படுத்தும், திரைகிழிக்கும் லட்சணமா? இந்திய அரசை எதிர்க்க தங்களுக்கு மட்டுமே வக்கிருப்பதாக எழுதும் ம.க.இ.க. இவ்வாறு செய்யலாமா? எதிர்ப்பது போல் எதிர்த்தும் பேசி விட்டு, மறைமுகமாக பார்ப்பனியத் தந்திரத்துடன் அதனை ஆதரிப்பது என்பது தான் ம.க.இ.க.விற்கு கைவந்த கலையாயிற்றே. பிறகு வேறன்ன செய்வார்கள் இவர்கள்? ம.க.இ.க.வின் பார்ப்பனிய நடைமுறைத் தந்திரத்தை மட்டுமே இதிலிருந்து புரிந்து கொண்டு நாம் எச்சரிக்கை பெற வேண்டியிருக்கிறது.
 
 மேலும், தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியர்கள் அனைவரும் ம.க.இ.க.வை போலவே தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்க வேண்டுமாம், ஏகலைவன் நமக்கு அறிவுரை கூறியிருக்கிறார். இதனை ஆராய்வோம்.
 
 தேர்தல் தினத்திற்கான இடைவெளி குறைந்து வர வர, ஈழத்தில் தினம் தினம் செத்து விழும் தமிழர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்று கொண்டிருந்தது. சிங்கள அரசு குண்டுகளை மூர்க்கத்தனமாக வீசிக் கொண்டிருந்தது. அந்தக் குண்டுகளின் விசை டில்லியில் இருந்தது. தமிழ் மக்களின் ஓலம் தமிழ்நாட்டுத் தமிழர்களின் நெஞ்சைப் பிழிந்தது. போரைத் தலைமையேற்று நடத்திய இந்திய அரசை ஆள்வது, வழிநடத்துவது காங்கிரஸ் கட்சியே என்பது வெளிப்படை. எனவே எந்த விலைக் கொடுத்தாவது அக்கட்சியை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கி போரை நிறுத்த வேண்டும் என்பது மட்டுமே தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. காங்கிரசின் போர் வெறிப் போக்கில், அக்கட்சியுடன் உறவு வைத்துள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் உடன்பாடு உண்டு என்பதால், அதன் தோழமைக் கட்சிகளையும் நாம் வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஈழத்தின் போர்க் குண்டுகளின் வேகமும் ஈழத்தமிழனின் அவலமும் நெஞ்சை அப்பிய நிலையில், காங்கிரஸ் அணியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நிர்பந்தம் மட்டுமே தமிழ் உணர்வாளர்களுக்கு அப்பொழுது எழுந்தது.
 
 தமிழகத்தின் தேர்தல் கட்சிகள் அந்நேரத்தில் இரண்டு அணிகளாக பிளவுண்டிருந்தன. ஒன்று கருணாநிதி, காங்கிரஸ் பங்கேற்ற எதிரிகள் அணி. மற்றொன்று பார்ப்பன செயா, போலி கம்யுனிஸ்டுகள் உள்ளடக்கிய துரோகிகள் அணி. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. நிலைமை இவ்வாறிருக்க நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ் உணர்வாளர்கள் தமிழ்நாட்டுத் தேர்தல் கட்சிகளில் யாரையும் முழுமனதோடு ஆதரிக்க முடியாதென்பது தான் உண்மை. இவர்கள் அனைவரும் போலிகள் என்று அனைவருக்குமே தெரிந்துள்ளது. இச்சூழலில் காங்கிரஸை அதிகாரத்திலிருந்து விரட்டி போரை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தை செயல்படுத்த, தேர்தலை புறக்கணித்தல் என்ற முடிவை கைகளில் எடுக்கலாமா? அது வெகு மக்களை சென்றடைவது சாத்தியம் தானா? இத்தேர்தல் புறக்கணிப்பால் போர் நிறுத்தம் ஏற்பட்டு விடுமா? என்ற ஐயங்கள் எழும்பின.
 
 காங்கிரஸ் அதிகாரத்திலிருந்து இறக்கப்பட்டவுடன், பார்ப்பன பா.ச.க.வோ அ.தி.மு.க.வோ அல்லது மற்ற கட்சிகளோ இந்திய அரசிற்கு தலைமையேற்றால், ”ஈழம் உடனே கிடைத்து விடும்” என்று தமிழ்நாட்டில் ஒருத்தரும் நினைக்கவில்லை. உணர்ச்சிவயப்பட்ட சிலர் மட்டுமே அவ்வாறு கருதிக் கொண்டிருந்தனர். அந்நேரத்தில், தமிழகத் தமிழ் உணர்வாளர்களின் நோக்கம் வெளிப்படையானது, அது காங்கிரஸ் அணியினர் வீழ்த்தப்பட்டு, சிங்கள அரசுக்கு இந்திய அரசு கொடுத்து வரும் ஆதரவில் விரிசல் ஏற்பட்டு, உடனடி போர் நிறுத்தத்திற்கு வழி ஏற்பட வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே நம்மை இயக்கிக்கொண்டிருந்தது. இது மட்டுமே தற்காலிகப் போர் நிறுத்தத்தை மட்டுமாவது சாதிக்கும் என்று நம்பிய தமிழ் உணர்வாளர்கள் தான் இங்கு அதிகம்.
 
 மேலும், தேர்தல் குறித்து தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசிய சக்திகளுள், பல்வேறு முரண்கள் இருந்தன. அய்யா நெடுமாறன் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கம், தேர்தல் புறக்கணிப்பை தன் கட்சித் திட்டத்தில் கொண்டிருந்தாலும் கூட, அவ்வப்போது சூழ்நிலை கருதி தேர்தலில் பங்கேற்காமல் ஏதேனும் ஒரு அணிக்கு பிரச்சாரம் செய்வதை தன் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. ”பொடா” கொடுங்கோல் சட்டத்தை எதிர்ப்பதற்காக 2006 ஆம் ஆண்டுத் தேர்தலில் பார்ப்பன செயாவிற்கு எதிராக த.தே.இ. தமிழகமெங்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. பெரியார் திராவிடர் கழகம் பெரியார் காலந்தொட்டே தேர்தல்களில் பங்கெடுப்பதில்லை. புறக்கணித்ததும் இல்லை. பெரியார் காலம் தொடங்கி தேர்தல் குறித்த பெ.தி.க.வின் பார்வை வெளிப்படையானது. தேர்தலில் பங்கெடுக்காமல், அவ்வப்போது சூழ்நிலைக் கருதி தோ்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவர் அவ்வளவே. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், இந்திய அரசு நடத்தும் தேர்தல்களில் அடிமைச் சமூகமான தமிழ்ச் சமூகம் பங்கேற்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருப்பதால், தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தன. தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகளும் இவ்வாறே நிலையெடுத்தன.
 
 தேர்தல் குறித்த இவ்வாறான பல்வேறு முரண்களைக் கொண்டாகவே தமிழ்த் தேசிய அமைப்புகள் இருந்தன. இச்சூழ்நிலையில், ஈழத்தில் நடந்த போரின் கொடூர முகம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை கணக்கில் கொண்டு, எதிரிகள் அணி உடனடியாக அதிகாரத்திலிருந்து விரட்டப்பட வேண்டும் என்ற உளவியலே தமிழ்த் தேசிய இயக்கங்களையும் தமிழ்நாட்டு உணர்வாளர்களின் மனதிலும் மையம் கொண்டிருந்தது. இதற்காக காங்கிரஸ் அணியினரை குறிவைத்து ஆட்சியதிகாரத்திலிருந்து இறக்க வேண்டுமென முரண்களை மறந்து விட்டு தமிழ்த் தேசிய அமைப்புகள் ஒன்றுபட்டு பாடுபட்டன. இதில் என்ன தவறு இருந்தது?
 
 ஒருவேளை, ஆட்சியதிகாரத்திலிருந்து காங்கிரஸ் கட்சியை உடனடியாக இறக்கப்பட வேண்டும் என்பதில் ம.க.இ.க.விற்கு உடன்பாடில்லாமல் கூட இருந்திருக்கலாம். அதனால் தான் போகாத ஊர் ஒன்றிற்கு வழி காட்டியது ம.க.இ.க.
 
 இந்த அரசியல் சமூகச் சூழலில் தான், காங்கிரஸ் அணியினர் வீழ்த்தப்பட்டு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்ற தமிழ் உணர்வாளர்கள் மனதில் எழுந்த ஒற்றை நோக்கத்தை சீர்குலைத்து, மழுங்கடிக்கும் விதமாக ”தேர்தல் புறக்கணிப்பே தீர்வு” என்று சாமியாடிக் கிளம்பியது ம.க.இ.க. ம.க.இ.க.வினர் தம் அமைப்பு தொடக்கத்திலிருந்து தேர்தல்களில் பங்கேற்பதில்லை. அதனை புறக்கணிக்கக் கோரிப் பிரச்சாரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாகவே, இத்தேர்தலையும், ஈழத்தை முன்வைத்துப் புறக்கணிக்கக் கோரினர். வெகுமக்கள் இதற்கு செவிசாய்க்க மாட்டார்கள் என்பது தெரிந்தும், மக்களின் உளவியல் தேர்தல் புறக்கணிப்புக்கு ஏற்றதாக இல்லை என்பது தெரிந்தாலும், தனது வழக்கத்தை மாற்றக் கூடாதென ”தேர்தல் புறக்கணிப்பு” அறைகூவல் விடுத்தது ம.க.இ.க. தொடர்ந்து இதையே அவர்கள் செய்து வருவதால், இத்தேர்தலை அவர்கள் புறக்கணித்ததில் யாருக்கும் வியப்பேதுமில்லை.
 
 "இந்தத் தேர்தலில் வாக்களித்தால் இந்திய அரசின் துணையுடன் ஈழத்தில் நடந்து வரும் இன அழிப்புப் போருக்கு நாம் ஒப்புதல் கொடுத்தவர்கள் ஆவோம்" என்றது ம.கஇ.க. ஒருவேளை, வாக்களிக்காமல் நாம் அப்படியே இருந்து விட்டால் என்ன நடக்கும் என்று ம.க.இ.க. ஒரு போதும் எண்ணிப் பார்க்கவில்லை. ஈழத்தில் மக்கள் தினம் தினம் செத்து விழுவதைப் பற்றியோ, போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற உடனடி கடமையோ, அக்கறையோ அவர்களுக்கு கவலையில்லை. மாறாக, அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? “இந்தப் போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணித்து, புதிய ஜனநாயகப் புரட்சிக்கு மக்களைத் திரண்டெழச் செய்வதுதான்” அவர்களது நோக்கமாக இருந்தது.
 
 ஈழத்தில் செத்து விழும் பிணங்களைக் காட்டி பதவிப் பொறுக்குகின்றன, ஓட்டுக் கட்சிகள் என்று ஒப்பாரி வைத்த ம.க.இ.க., அவர்களை விட மிகக் கேவலமாக மார்க்சிய லெனினியத்தின் பெயரால் மோசடி செய்து கொண்டு, தங்கள் கட்சித் திட்டமான தேர்தல் புறக்கணிப்பை நிறைவேற்றிக் கொண்டு ஆள்பிடிக்க, இத்தேர்தலை பயன்படுத்துகிறோமே என்ற வெட்கம் சிறிதும் இன்றி செயல்பட்டது.
 
 நாளுக்கு நாள் ஈழத்தமிழர்கள் கொன்றொழிக்கப்படுவதால் வெளியேறும் இரத்தம் கடலை சிவப்பாகிக் கொண்டிருந்த நேரம் அது. அந்நிலையில், எப்பாடுபட்டாவது, எவ்விலை கொடுத்தாவது உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்ற முனைப்பு, வேகம் மட்டும் தமிழக மக்கள் மனதிலும், தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலும் குடி கொண்டிருந்தது என்பது ம.க.இ.க.வினருக்கு மட்டும் உறைக்காதது ஏன்?
 
 “போர்” என்ற கொடிய மின்சார நாற்காலியில் அமர்த்தப்பட்டு ஈழத்தமிழனின் உயிர் போய்க் கொண்டிருக்கிறது. அந்நேரத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சுகின்ற விசையை, அதிகாரத்தில் அமர்ந்திருப்பதால், தம் வசம் வைத்திருந்தது இந்திய அரசின் ஆளுங்கட்சியான காங்கிரசு கட்சி. உடனடியாக அந்த விசை நிறுத்தப்பட, அதிகாரத்தை பிடுங்குவது தான் தீர்வு. அதை ஓரளவு சாத்தியத்தியப்படுத்துவதற்கான ஒரு வழியை இந்த போலி ஜனநாயகத் தேர்தல் ஏற்படுத்தியிருந்த நிலையில், அதை புறக்கணிக்கத் தான் வேண்டுமா என்று அறவழியில் கூட இவர்கள் சிந்திக்கவில்லை. மாறாக, அந்த அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான உடனடி சக்தி நம்மிடம் இல்லை என்று தெரிந்தும் கூட, அந்த “போகாத ஊருக்கு போய்த் தான் தீருவேன்” என்று திட்டமிட்டு தன் அணியினரை வழிநடத்தியது, இந்தக் கூலிக்கும்பல்.
 
 அனைத்துக் கட்சிகளும் மக்களுக்கு எதிரானவர்கள் தாம் என்று அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கிறது. எல்லோரும் ”கொள்ளை” அடிப்பவர்கள் தாம் என்று மக்களுக்கு நன்கு புரிந்திருக்கிறது. இருந்தாலும், மக்கள் ”ஓட்டுரிமை” மீதும், இந்த முதலாளித்துவ போலி சனநாயக உரிமை மீதும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இந்த உளவியலை, மக்களின் நம்பிக்கையை ஒரே நேரத்தில், ஒரேடியாக நாம் தகர்த்து விட முடியாது. அதற்கான சக்தி, புரட்சிகர ஆற்றல்களிடம் இல்லை. இச்சூழலில், அதனை தகர்க்கும் அளவிற்கு மக்கள் மனதில் தேர்தல் அரசியல் மீதான வலுவான எதிர் கருத்தியலும் ஆழமாக பதியப்படவில்லை.
 
 மக்கள் மீது அரசின் மிக மூர்க்கத்தனமான பாசிச வெறி அடக்குமுறைகள் வேண்டுமானால், உடனடியாக மக்கள் மனதில் தேர்தல் சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை ஓரளவு தகர்க்கச் செய்யும். ஆனால், தமிழகத்தில் யதார்த்த நிலைமை அப்படி அல்ல. இங்கு மக்கள் மீதான அரசின் ஒடுக்குமுறை என்பது எவ்வளவு கொரடூரமாக இருந்தாலும், வெகு மக்கள் அதனை உடனடியாக உள்வாங்கிக் கொண்டு உணரக் கூடிய நிலையில் இல்லை. ஓட்டுக்கு பணம், இலவச சைக்கிள், இலவச அரிசி, இலவச தொலைக்காட்சி என்று மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு தற்காலிக மருந்துகளை வழங்கி, ஆளும் வர்க்கம் மக்களை மயக்கி வைத்திருக்கின்றது. இந்நேரத்தில், அரசின் மீதான மக்களின் எதிர் உளவியலை, ஆளும் வர்க்கம் மென்மையான முறையில் சரி கட்டுக் கொண்டிருந்தது. அரசின் ஒடுக்குமுறையைக் கூர்மைப் படுத்தி, அதனை அம்பலப்படுத்தி மக்களுக்கு தலைமையேற்று நடத்தக்கூடிய தமிழ்த் தேசிய புரட்சிகர ஆற்றல்கள் தமிழகத்தில் வலுவுடனும் இல்லை. இச்சூழலில், ஈழத்தை முன்வைத்து தமிழகத்தில் ”தேர்தல் புறக்கணிப்பு” என்பது சாத்தியமானதாக இல்லை என்பது தானே யதார்த்தம். ”பணம் கொடுத்தால் வாக்களிப்போம்” என்ற சந்தர்ப்பவாத உளவியலே பெரும்பாலான மக்கள் மனதில் ஆளும் வர்க்கத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது தானே உண்மை. இதனை மெல்ல மெல்ல மக்களுக்குப் புரிய வைத்து, வென்றெடுத்து மக்களை அணிதிரட்ட வேண்டும் என்பதும் உண்மை தான். ஆனால், அதற்கு இதுவா தகுந்த நேரம்? இது தான் அதற்கேற்ற காலச்சூழலா? அதற்கேற்ப தமிழ் மக்களை அணிதிரட்டும் விதமாக நமக்கு சக்தி இருந்ததா? எதுவும் இல்லை.
 
 ஒருவேளை, இச்சூழ்நிலையில் தமிழ்த் தேசிய சக்திகள் அனைத்தும் ம.க.இ.க. பாதையில் தேர்தல் புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தால், நிலைமை என்னவாகியிருக்கும்? எப்பொழுதும் போல் 60 சதவிகிதம் வாக்குப் பதிவாகியிருக்கும். ”தேர்தல் புறக்கணிப்பு” என்ற பெயரில் காங்கிரஸ் அணியினருக்கு எதிரான கோப அலை ”ஓட்டுகள்” அனைத்தும் ”புறக்கணிப்பு” என்ற பெயரில் சாக்கடையில் கலப்பது போல வீணாகியிருக்கும். இந்திய எதிர்ப்பு கோப அலைகள் ஓட்டுகளாக பரிணமித்து, ”தேர்தல் புறக்கணிப்பு” நீரோட்டத்தில் தணிந்து விட்டிருக்கும். எந்த எதிர்ப்புமின்றி காங்கிரஸ் எளிதாக பணநாயகம் கொண்டு வெற்றி பெற்றிருக்கும். ஆட்சிக் கட்டிலில் மீண்டும் ஏறிய திமிரில் போரின் வேகத்தை அதிகரித்து ஈழத்தமிழர்களை மேலும் அதிகமாக கொன்று குவித்திருக்கும். ”இந்த இனத்தை குண்டு வீசி அழித்தாலும் இவர்கள் நேரடியாக எம்மை எதிர்த்து போராட மாட்டார்கள்” என்ற ஆதிக்கத் திமிர் உளவியலை காங்கிரஸ் அணியினருக்கு மேலும் வலுப்படுத்தியிருக்கும். இவ்வாறான, இந்திய ஆளும் வர்க்கத்தின் நலனைக் காப்பதற்காகத் தான், ம.க.இ.க. விரும்புகின்றது போலும்.
 
 ஈழத்தமிழனுக்காகப் போராடுகிறோம் என்று ஓலமிட்டுக் கொண்டு, சிங்கள இனவெறியர்களின் நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக ம.க.இ.க. போன்றக் கும்பல்கள் தமிழகத்தில் இவ்வாறாக செயல்படுவதை எண்ணி தமிழனாக நாம் வெட்கப்படத்தான் வேண்டியிருக்கிறது. சிங்களர்களை ”பாட்டாளி”கள் என்ற பெயரில் ம.க.இ.க. கும்பல் வேண்டுமானால் பெருமையுடன் வாரி அணைத்துக் கொள்ளலாம். தேர்தலின் போது ம.க.இ.க.வினர் செய்த இந்த ”அரும்பணி”க்காக, சிங்களர்களும், ”பாட்டாளிகள்” என்று ம.க.இ.க.வினரை அழைத்து பரிசளித்து மகிழ்ந்து கொள்ளலாம்.
 
 தேர்தல் புறக்கணிப்பு காங்கிரஸ் அணியை ஒன்றும் செய்து விட முடியாது என்ற நிலையில், காங்கிரஸ் அணியினரை வீழ்த்தும் நோக்கில் அதற்கு எதிரணியினரை ஆதரித்து தமிழகத் தமிழ் உணர்வாளர்கள் பரப்புரை மேற்கொண்டனர். பெரியார் திராவிடர் கழகம், தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் வெளிப்படையாக காங்கிரசுக்கு எதிர் அணியினரை ஆதரித்துப் பரப்புரை மேற்கொண்டனர். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வெளிப்படையாக எக்கட்சியையும் ஆதரிக்காமல், ”காங்கிரசைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், தமிழின விரோதக் காங்கிரஸ் கட்சிக்கு யாரும் வாக்களிக்காதீர்” என்று, காலச்சூழல் கருதி வெகுமக்களின் உளவியலுக்கேற்ப பிரச்சாரம் செய்தனர். பல்வேறு தனித்தமிழ் இயக்கங்களும், தமிழ்ச் சங்கங்களும், தமிழ் உணர்வாளர் மன்றங்களும் இவ்வாறே செயல்பட்டன. தமிழ்த் திரையுலகினரும் இவ்வகையில் தங்கள் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். ”இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று திரையுலகில் வெளிப்படையான குரல்கள் எழும்பினாலும், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் அதனை கண்டித்தனர். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து மட்டுமே பரப்புரை செய்ய வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தினார்.
 
 தமிழ்த் தேசிய அமைப்புகளின் இவ்வகை பரப்புரைகளால் தான் தமிழகத்தில் காங்கிரஸ் அணியினருக்கு ஓரளவாவது எதிர்ப்புகள் பதிவாயின. ஈழத்திற்கு துரோகமிழைத்த காங்கிரசின் முக்கியத் தலைவர்கள் தங்கபாலு, மணிசங்கர் அய்யர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் தோற்றனர். காங்கிரஸ் அணியினருக்கு தமிழ்த் தேசிய ஆற்றல்களின், இந்தளவிலான எதிர்ப்பு கூட இருந்திருக்கக் கூடாது என்று தான் ம.க.இ.க. விரும்புகிறது, என்பதைத் தான் அதன் ”போகாத ஊருக்கு வழிகாட்டும்” - தேர்தல் புறக்கணிப்புப் பாதை நமக்கு உணர்த்துகிறது.
 
 ஈழத்தின் இன அழிவைக் கருதித் தேர்தல் கட்சிகளுடன் தமிழ் உணர்வாளர்களுக்கு ஏற்பட்ட இந்த ”திடீர்” உறவு ”தேர்ந்து தெளிந்து திட்டமிட்டு” உருவாக்கப்பட்டதாம். ம.க.இ.க. வாய்க்கூசாமல் புளுகுகிறது. இதையும் நம்பிக் கேட்பவர்கள் ம.க.இ.க.வில் இன்னும் இருப்பதால், அவர்கள் இதுவும் சொல்வார்கள், இதற்கு மேலும் கூட சொல்வார்கள். ”என்ன இருந்தாலும், பார்ப்பன செயா போன்ற சக்திகளுடன் தமிழ் உணர்வாளர்கள் போயிருக்கக் கூடாது” என்றும் ம.க.இ.க.வினர் முதலைக் கண்ணீர் வடித்து, தம் அணிகளுக்கு பாடமும் எடுப்பார்கள். இதற்கொரு வரலாற்று உதாரணத்தை நாம் எடுத்தாள வேண்டியிருக்கிறது.
 
 இரண்டாம் உலகப் போரின் போது, ஜெர்மனியின் இட்லர் தலைமையில் பாசிச இனவெறி அணியொன்று உருவாகியது. இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினியும் ஜப்பானும் அதில் பங்கு கொண்டிருந்தனர். அவ்வணி உலக நாடுகளை பாசிச வெறியுடன் பிடிக்கத் தொடங்கி ரசியாவிற்கு அருகில் வந்து நின்றது. அந்நேரத்தில், இந்தப் பாசிச அணி உலகையே அச்சுறுத்தும் அணியாக இருந்தது. இந்தப் பாசிச அணியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அனைவர் மனதிலும் எழுந்தது. ரசிய அதிபர் ஸ்டாலின் இதற்காக திட்டமிட்டார். ரசியாவை மட்டுமின்றி உலகையும் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக ஒரு ”பாசிச எதிர்ப்புக் கூட்டணி”யை உருவாக்கினார். அதற்காக அவர் யாருடன் கைக்கோர்த்தார் தெரியுமா? அன்றைய உலக ஏகாதிபத்தியங்களாக விளங்கிய இங்கிலாந்துடனும், அமெரிக்காவுடனும்.
 
 இந்த ”பாசிச எதிர்ப்புக் கூட்டணி”யை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பாரசீக நாட்டின் டெக்ரான் நகரில் நவம்பர் 26 1943இல் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட், பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் ஆகியோரை ரசிய அதிபர் ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். திட்டமிட்டார். பாசிசத்தை வீழ்த்தினார்.
 
 ஏகாதிபத்திய நாடுகளுடன் கைக்கோர்த்துவிட்டார் என்பதற்காக என்றைக்காவது, எந்த ம.க.இ.க.காரனாவது, ”இரும்பு மனிதர்” தோழர் ஸ்டாலினை ஏகாதிபத்தியக் கைக்கூலி என்று அழைத்திருப்பார்களா? ஓரளவு மார்க்சியம் தெரிந்தவர்கள் கூட ஸ்டாலினை இவ்வாறுப் பார்த்திருக்க மாட்டார்கள். ஒருவேளை, மனுநீதிக் கண்ணாடியுடன் மார்க்சியத்தைப் பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால், இவ்வாறு தெரிய வாய்ப்புண்டு. ம.க.இ.க.வினருக்கு எப்படியோ! ஒருவேளை, ம.க.இ.க.வினர் ஸ்டாலினை ”ஏகாதிபத்தியத்துடன் கூட்டு வைத்த சந்தர்ப்பவாதி” என்று இகழ்ந்துரைத்தால், அதைத் தமிழ்த் தேசியர்கள் ஒருநாளும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
 
 பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஸ்டாலின் எவ்வாறு எதிரிகளான ஏகாதிபத்திய நாடுகளுடன் கூட்டணி வைத்தாரோ, அதே போன்று தான், இந்திய சிங்கள இனவெறிப் பாசிச சக்திகள் மேற்கொள்ளும் இனவெறிப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசிய சக்திகள், ஈழத்திற்கு காலத்திற்கேற்ப ஓரளவு ஆதரவு தெரிவித்த தமிழ்நாட்டுத் தேர்தல் கட்சிகளுடன் உறவு கொண்டன. ஸ்டாலின் மேற்கொண்டால் அது ”போர் உத்தி”, ஆனால் தமிழ்த் தேசியர்கள் மேற்கொண்டால் அது ”சந்தர்ப்பவாதமா”? ரசிய நாட்டைக் காக்க ஸ்டாலின் செய்தால் அது ”நடைமுறைத் தந்திரம்”, தமிழ் இனத்தை அழிவிலிருந்து காக்க தமிழ்த் தேசியர்கள் செய்தால் அது ”பிழைப்புவாதமா”? ம.க.இ.க.வே இது தான் ஒவ்வொருவருக்கும் தனித்தனி நீதி வழங்கும் உங்களது ”மனுநீதி”ப் பார்வையா?
 
 புலிகளை மட்டும் எதிர்ப்பதாகவும், ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமைக்கு குரல் கொடுப்பவர்களாகவும் நாம் ம.க.இ.க.வினரை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ம.க.இ.க.வினர் ஈழத்தமிழர் ஆதரவு நிலையிலும் என்றும் உறுதியுடன் இருந்ததில்லை. இந்தியம் எப்படி பார்ப்பனிய சூழ்ச்சியுடன் ஈழத்தைக் கையாள்கிறதோ அதே போலத்தான் இவர்களும் காலத்திற்கேற்ப ஈழத்தைக் கையாள்கின்றனர். இதற்கு பல உதாரணங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக ஒரு உதாரணத்தை எடுத்துக் காட்டலாம்.
 
 1997 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் முன் முயற்சியில் ஈழத்தமிழர் ஆதரவை வெளிப்படுத்த ஒர் முழு அடைப்பு நடத்தப்பட்டது. தமிழக மீனவர் படுகொலை, ஈழத்தமிழர் படுகொலை உள்ளிட்டவற்றை மட்டுமே பிரதானப்படுத்தி நடந்த இம்முழு அடைப்புப் போராட்டத்தில் விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட எந்தக் கோரிக்கையும் எழுப்பப்படவில்லை. ஆயினும், புதிய ஜனநாயகம் இம்முழு அடைப்பில் கலந்து கொள்ளாமல் முழு அடைப்பை கேவலமாகவும் சித்தரித்து எழுதியது. 1997 ஆம் ஆண்டு சூலை 01-15 இதழில் பு.ஜ. இவ்வாறு தலைப்பிட்டு எழுதியது, ”முழு அடைப்பு முழுத் தோல்வி”. இம்முழு அடைப்பு தோல்வி அடைந்து விட்டதால், தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின் ஆதரவு சரிந்துவிட்டது என்றும் எழுதி ஈழத்தமிழர் ஆதரவு முழு அடைப்புப் போராட்டத்ததை புலிகள் ஆதரவு போராட்டம் என்பதாக சிங்கள அரசின் துணை அமைப்பு போலவே சித்தரித்து இழிவு படுத்தி எழுதியது பு.ஜ. அதே நேரத்தில், அம்முழு அடைப்பை அப்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க. ஆதரிக்கவில்லை. அ.தி.மு.க. மட்டும் ஆதரித்தது.
 
 முழு அடைப்பில் கலந்து கொள்ளாத ம.க.இ.க. வின் பு.ஜ. பின்பு சில மாதங்கள் கழித்து கீழ்க்கண்டவாறு எழுதியது.
 
“ஏற்கெனவே ஈழப்பிரச்சினையிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்ட தி.மு.க. ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டித்து நடந்த கடையடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு மறுத்தது; தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டிக்கக் கூட முதுகெலும்பின்றிக் கிடக்கிறது” -  (புதிய ஜனநாயகம், செப்டம்பர் 1997 பக்கம் 9)
 
 ஈழத்தமிழர் இனப்படுகொலையை கண்டித்து நடந்த கடையடைப்புப் போராட்டத்தில் ஆளும் திமுக கலந்து கொள்ளாததைக் கண்டித்து, அக்கட்சி முதுகெலும்பின்றிக் கிடக்கிறது என்று ஊளையிடுகின்றது பு.ஜ. அதே வேளையில், அப்போராட்டத்தில் ம.க.இ.க. ஏன் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கவுமில்லை. கண்டிக்கவுமில்லை. திமுக அப்போராட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால் கண்டிக்குமாம். ம.க.இ.க. கலந்து கொள்ளாதது ஏன் என்று கேள்வி எழுப்பினால் கண் மூடிக்க் கொள்வதோடு இல்லாமல், அப்போராட்டத்தை கொச்சைப் படுத்தியும் அவமதித்தும் எழுதுமாம். ஒருவேளை பு.ஜ. கூறுவது போல் ம.க.இ.க.வும் முதுகெலும்பின்றி தான் கிடக்கிறதோ என்று தான் எண்ணத் தோண்டுகிறது. இது தான் இவர்களது புரட்சிகர ஒழுக்கமும் அரசியல் நடைமுறையும் போலும்.
 
 பெரியார் பாணியில் ம.க.இ.க.வைப் பற்றிக் கூறினால், ஒரே வார்த்தையில் “வெங்காயம்!” என்று சொல்லாம். பார்ப்பதற்கு பெரிதாக மார்க்சியம், ஜனநாயகம், புரட்சி போன்ற பெருந்தோல்கள் போர்த்தப்பட்டு உள்ளே ஏதோ இருக்கிறது என்ற தோற்றத்தை அளிக்கும். ஆனால், உரித்துப் பார்த்தால் ஒன்றுமிருக்காது. அது தான் ம.க.இ.க...! த ஒன்லி “புரட்சியாளர்” ஆப் த வேர்ல்டு!...
 
- அதிரடியான் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

46 comments

46
லார்ட் லபக்கு தாஸ்
ஜூப்பர் அ(ஆ)ப்பு ஜூப்பர்
தியாகு
ஈழத்தில் நடக்கும் படுகொலைகளை தடுத்த நிறுத்த உடனடியாக காங்கிரசை பதவியில் இருந்து இறக்க தேர்தல் புறகணிப்பை மக இக சொல்லவில்லை

தேர்தல் புறகணிப்பு என்பது சந்தர்ப்பவாதமாக அது எப்போதும் சொல்லவில்லை முழக்கமே தேர்தல் பாதை திருடர் பாதை என்பதுதான்

குறுகிய நோக்கங்களுக்காக நீங்கள் செயா மாமியின் சேலையை பிடித்தாலும் தேர்தல் முடிந்தவுடன் மாமியும் கருணாநிதி மாமாவும் தன் வேலையைத்தான் செய்கிறார்கள்

ஒருவேளை நீங்கள் சிந்திப்பது போல இம்முறை மட்டும் ஓட்டு போடுங்கள் என மக இக சொல்லவில்லை

இந்திய பார்பன ஆளும்கும்பலை த்தான் முதல் எதிரிகள் என்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் கருணாநிதி போன்ற அடிவருடிகளை அம்பலப்படுத்தியும் தொடர்ந்து போராடிவருகிறது பேசி வருகிறது இந்திய ஆளும் வர்க்கம்தான் இந்த போரை நடஹ்துகின்றது என்பதிலும் காங்கிரசுக்கு பதில் பஜக வந்தாலும் இதையேதான் செய்யும் என்பதிலும் சொன்ன மக இக அரசனை நம்பினாலும் புருசனை நம்பினாலும் நடப்பது ஒன்றுதான் என்பதில் தெளிவாக இருந்தது

அதுதான் அதன் அரசியல் தெளிவு

இன்றைக்கு ஒன்று நாளைக்கு ஒன்றும் கொளத்தூர் மணி பேசலாம் நாம் பேச முடியாதே ஆகவே தேர்தல் புறகணிப்பு என்பது சந்தர்ப்பவாத கோசமல்ல மாறாக ஜெயாவுக்கு ஓட்டளியுங்கள் என்பதுதான் சந்தர்ப்பவாத கோசம்

//1997 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் முன் முயற்சியில் ஈழத்தமிழர் ஆதரவை வெளிப்படுத்த ஒர் முழு அடைப்பு நடத்தப்பட்டது. தமிழக மீனவர் படுகொலை, ஈழத்தமிழர் படுகொலை உள்ளிட்டவற்றை மட்டுமே பிரதானப்படுத்தி நடந்த இம்முழு அடைப்புப் போராட்டத்தில் விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட எந்தக் கோரிக்கையும் எழுப்பப்படவில்லை.//

ஈழத்தமிழர் ஆதரவு என்பதற்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆதாயம் இருக்கிறது ஓட்டு கட்சிகளை பொருத்தவரை

திராவிடர்கழகமோ ஒரு பேசனுக்காக போராட்டம் செய்யும் அதுக்கெல்லாம் உடனே ஓடிப்போய் ஆதரவு செய்தால்தான் இவர்களும் ஈழத்தமிழரை ஆதரிக்கிறார்கள் என நினைத்தால் முழு முட்டாள் தனம்

தெருத்தெருவாக ஈழ மக்களுக்காக இறங்கி போராட்டம் நடத்தியது மக இக அதனுடன் திக சேர்ந்து போராடியதா என்ன

//இந்தப் பாசிச அணி உலகையே அச்சுறுத்தும் அணியாக இருந்தது. இந்தப் பாசிச அணியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அனைவர் மனதிலும் எழுந்தது. ரசிய அதிபர் ஸ்டாலின் இதற்காக திட்டமிட்டார். ரசியாவை மட்டுமின்றி உலகையும் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக ஒரு ”பாசிச எதிர்ப்புக் கூட்டணி”யை உருவாக்கினார். அதற்காக அவர் யாருடன் கைக்கோர்த்தார் தெரியுமா? அன்றைய உலக ஏகாதிபத்தியங்களாக விளங்கிய இங்கிலாந்துடனும், அமெரிக்காவுடனும்.//

ஓகோ ஸ்டாலின் செய்ததை போன்ற ஒரு அறிவுபூர்வமான நாலையும் ஆராய்ந்து செய்த கூட்டனியா செயா கூட்டனி

நீங்கள் என்னதான் இப்போதைக்குத்தானேன்னு
செயாவை ஆதரித்தாலும் அவரது பார்வை ஓட்டு வேட்டையில்தான் இருக்கும் என்பது தெரியுமா

நாலைக்கே தேர்தலில் செயித்தால் ஈழத்தை வீட்டு கொல்லை புறத்தில் வீசுவார் என்றும் மக இக அறியும்

மொத்தத்தில்

நீங்களும் சரி இன விடுதலைக்கு போராடிய புலிகளும் சரி நண்பன் யார் எதிரியார் என தெரியாமல் இன்னும் இந்திய ஏகாதிபத்தியம் ஈழத்தை தரும் என்று மண்டியும் அரசியல் தெளிவற்ற போக்கில் ஆயிரக்கணக்கான மக்களை பலி கொடுக்கலாம்

விமர்சனம் செய்தால் சீர்குலைவு வாதிகள் என்பீர்கள். போக தெளிவற்ற அரசியலின் நாதாமாக செயல்பட்டு முடிவற்ற துயரை அனைவருக்கும் வழங்கி தியாகிகளாக வலம் வாருங்கல் வரலாறு உங்களை மன்னிக்காது
shanmugam
தெருத்தெருவாக ஈழ மக்களுக்காக இறங்கி போராட்டம் நடத்தியது மக இக ////////////

அதான் ஊருக்கே தெரியும்ல.....போராட்டம் எப்படின்னு !!
ஈழத்தை அங்கீகரி ந்னு ஒரு வார்த்தை கூட இல்லையே உங்க ஸ்லோகத்துல..!! நீங்க அப்படியே சிங்கள பாட்டாளியும் தமிழ் பாட்டாளியும் சேந்து ஒன்று பட்ட இலங்கை தேசிய புரட்சிக்கு வழி சொல்லிட்டாலும். மொதல்ல தமிழ்நாட்டுல கட்சிய போனி பண்ண வழியபாருங்கப்பூ!!
கலைஞர் வேட்டிய புடிச்சான், ஜெயா சேலைய புடிச்சான் இதையே கீறல் விழுந்த டேப் போல ஓட்டி கொண்டிருக்காமல், முச்சந்தி ஆர்பாட்டத்தை தவிற ம.க.இ.க.. என்ன செஞ்சதுன்னு கொஞ்சம் சொலுங்க ராசா!!
Dr. V. Pandian
பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் பெரியார் தி. க. வின் ஜெயலலிதா ஆதரவு நிலையை எதிர்த்து "எரியும் வீடும், அதிமுக தண்ணீரும்" என்ற தலைப்பில் கீற்றில் கட்டுரை எழுதினேன். அக்கட்டுரைக்கு வந்த, கிட்டத்தட்ட அனைத்து பின்னூட்டல்களுமே, ஜெயலலிதா ஆதரவுநிலை அப்போதய சூழ்நிலைக்கு சரியானதே என்று தெரிவித்தன.

தமிழர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுவது கண்டு, பிறகு நானும் எனது நிலையை மாற்றிக்கொண்டு, அதிமுக ஆதரவே அச்சமயம் சரியானதென கருத்து எழுதினேன். ஜெயலலிதா என்ற பாம்பு, தனி ஈழம் தான் தீர்வு என்று பேசியது, பாம்பின் விஷத்திலும் மருந்தெடுப்பதைப் போன்று, தமிழருக்கு உதவிய பேச்சுதான். நிற்க.

அறிவான தர்க்கங்கள் மண்டையில் ஏறாத "ஆட்டு மந்தைகள்" தான் மகஇக வின் தொண்டர்கள். இவர்கள் மகஇக வின் தலைமையை நல்ல "மேய்ப்பர்களாக" எண்ணி ஏமாறுகின்றனர். அவர்களின் எஜமானர்களும் தாங்கள் நல்ல மேய்ப்பர்கள் தாம் என்று நிறுவ சில பச்சைகளைக் காண்பிப்பர். அவைதான் புலிகளின் வீரமரணத்தைப் பாடுவது, சிதம்பரம் கோயிலில் தமிழைப் பாடவைப்பது போன்றவை.

ஆனால், இவர்கள் நன்றாக அம்பலப்பட்டுக் கொண்டுள்ளனர். நெருக்கடி இல்லாத நாட்களில் இவர்களது ஜம்பம் பலித்தது. இப்போது அம்பலமாகியுள்ளனர்.

நெருக்கடியில்லாத காலங்களில் தமிழன் வேஷம் போட்டு ஜெயித்த கருணாநிதி இப்டோது தேள் கொட்டிய திருடன் போல முழிக்கவில்லையா?

அதிரடியான் அவர்களே இவர்கள் நிறைய எழுதட்டும். படிக்கின்றவர்கள் ஒன்றும் கேனயன்கள் அல்லவே!
tamilmani
thiyagu.....? tamil tamilar movement...?
Dr. V. Pandian
சுப்பிரமணிய சாமி என்கிற பாரப்பனனை முட்டையால் அடித்ததற்காக நீதிமன்றத்தின் உள்ளேயே, நீதிமன்ற அனுமதியில்லாமலேயே, புகுந்து நரவேட்டை நடத்தப்பட்டது நினைவிருக்கிறதா?

ஒரு ஒற்றைப் பார்ப்பானின் மீது கைவைத்த உடனேயே எவ்வளவு பெரிய எதிர்விளைவு பார்ப்தீர்களா? அத்தனைக்கும் தமிழகத்தின் பார்ப்பனர் தொகை தமிழக மக்கள் தொகையில் வெறும் 3% சதிவீதம் மட்டுமே! இவ்வளவு குறைவாக உள்ள ஒரு கும்பலால் எப்படி இது நிகழ்த்தப் படுகிறது? அது தானய்யா இந்திய தேசியம் என்பது! இந்தியாவை ஆள்வது பாரப்பனீயம். இவர்கள் அரசின் மேல் பதவிகளில் நிரவிக் கிடக்கின்றனர்.

இவர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமானல் இடஒதுக்கீடு அவசியம். ஆனால், மகஇக இடொதுக்கீட்டுக் கொள்கையை நையாண்டி செய்கிறது.

பாரப்பனீயம் என்பது ஒரு மிகக் கொடிய கருத்தியல். அதை ஒழிக்க வேண்டுமானல் இந்தியா பல சேசங்களாகப் பிறிந்தால் தான் நிகழும். ஆனால், மகஇக இந்திய தேசியத்திற்காக அன்றாடம் பாடுபடுகிறது.

மகஇக என்பது மறைமுகப் பார்ப்பனீயம்! தொண்டர்களே! தோழர்களே! ஆட்டு மந்தைகளாக வாழாமல், ஆட்டிப் பாருங்கள் உங்கள் தலைமையை!
தியாகு
//மொதல்ல தமிழ்நாட்டுல கட்சிய போனி பண்ண வழியபாருங்கப்பூ!!
கலைஞர் வேட்டிய புடிச்சான், ஜெயா சேலைய புடிச்சான் இதையே கீறல் விழுந்த டேப் போல ஓட்டி கொண்டிருக்காமல், முச்சந்தி ஆர்பாட்டத்தை தவிற ம.க.இ.க.. என்ன செஞ்சதுன்னு கொஞ்சம் சொலுங்க ராசா!!//

அய்யா சண்முகம் கட்சிய போணி பண்றது ஆணி பண்றதெல்லாம் உங்களை போன்ற தமிழினவாதிகளின் வேலை

மக்களுக்கு தேவை இருந்தால் மக்களுக்காக ஒரு கட்சி இருக்கும் அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி
தியாகு
//தமிழர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுவது கண்டு, பிறகு நானும் எனது நிலையை மாற்றிக்கொண்டு, அதிமுக ஆதரவே அச்சமயம் சரியானதென கருத்து எழுதினேன். ஜெயலலிதா என்ற பாம்பு, தனி ஈழம் தான் தீர்வு என்று பேசியது, பாம்பின் விஷத்திலும் மருந்தெடுப்பதைப் போன்று, தமிழருக்கு உதவிய பேச்சுதான். நிற்க//

பின்னூட்டத்தை பார்த்து அரசியல் தீர்வுகளை உங்களை போல நாங்கள் எடுப்பதில்ல அய்யா பாண்டியன்

ஜெயா மாமியை நீங்க எந்த அடிப்படையில் ஆதரித்தீர்களோ அது அறிவு நாணயமற்ற மனசாட்சிக்கு விரோதமான செயல் என உங்களை போன்ற ஆட்களுக்கு விளங்காது

சந்தர்ப்பவாதம் தர்க்க மாகாது

தெளிவான பார்வை இல்லாவிட்டால் இப்படித்தான் மாமி பின்னாடியும் சாமி பின்னாடியும் போக வேண்டி இருக்கும்

சரி அதற்கு பிறகு ஏன் செயா மாமி போராட வில்லை ஈழத்தில் பிரச்சனை முடிந்து விட்டதா

அல்லது போயஸ் தோட்டத்துக்குள் ஈழ ஆதரவாளர்களை விடவில்லையா
Dr.V. Pandian
தோழர்களே!

ஏறத்தாழ 20 தினங்களுக்கு முன்பு எனக்கு கனேடியத் தமிழரிடமிருந்து வந்த ஒரு மின்னஞ்சல் கீழே தருகிறேன்.

HERE IS SOMETHING NEW from my African Canadian friend of mine

I met him after a long time at the mall.

He said what a terrible thing happened to our only brothers in Sri Lanka . He said, you listen carefully what I have to say. The Tamils are our only link to us in Asia .

We were devastated what the “White man did to you guys” according to him the Indians and the Europeans are the same Aryans. The war was unleashed by the Aryans on the Tamils to suppress their quest for freedom. You listen again he said The Singhalese are Aryans, The Indians are Aryans, The Europeans are Aryans so goes the story. Mention me a country that didn’t give arms to the Sri Lankan government he insisted.

You guys are stupid to have adopted the Aryan culture and you are a lost race of people, you must go back to your roots in Africa and harness the help of Africa and of courses our good friend Barack Obama. Next four years is critical he said. It is not a Sri Lankan war, it is a war against colored people by the white people, and it has been going for generations after generation.

He further said DNA analysis confirms that the Tamils have more in common with African than Indians. India used to belong to the Tamils but the Aryans invaded and took the power. Time to get it back he said.

An excellent food for thought, I thought, what do you think?
இதன் தமிழாக்கத்தை இங்கு தருகிறேன்:

எனது ஆப்பிரிக்க கனேடிய நன்பரிடமிருந்து புதிதாக சில. வெகு நாட்களுக்கு முன்பு ஒரு வணிக வளாகத்தில் அவரைச் சந்தித்தேன்.
அவர் சொன்னார், "எவ்வளவு பெரிய பயங்கரம் நிகழ்ந்துள்ளது நமது தமிழ் உடன்பிறப்புகளுக்கு! நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். ஆசியாவிற்கு தமிழர்கள் தான் எங்களுக்கான ஒரே தொடர்பு. உங்களுக்கு வௌ்ளை இனமக்கள் செய்ததைக்கண்டு பெருஞ்சோகமுற்றோம்." அவரைப் பொருத்தவரை இந்தியர்களும், ஐரோப்பியர்களும் ஒரே ஆரியர்கள் தான். தமிழர்களின் சுதந்திர வேட்கையை ஒடுக்க, ஆரியர்களால் இந்தப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டது. " மேலும் கவனியுங்கள், சிங்களவர் ஆரியர்கள், இந்தியர்கள் ஆரியர்கள், ஐரோப்பியர்களும் ஆரியர்கள், இப்படித்தான் இக்கதை நீள்கிறது. சிங்கள அரசுக்கு ஆயுதம் வழங்காத ஒரு அரசைக் காண்பிக்க முடியுமா?" என்று அழுத்தினார்.

"ஆரியப் பாண்பாட்டை ஏற்றுக்கொண்ட நீங்கள்அறிவீனர்கள். உங்களின் இனம், காணாமல் போன இனம். உங்களின் ஆப்பிரிக்க அடிப்படைகளுக்கு நீங்கள் மீண்டும் செல்ல வேண்டும் அம்மக்களின் உதவியை நாட வேண்டும், நமது நன்பர் ஒபாமா உட்பட. அடுத்த நான்கு ஆண்டுகள் முகாமையானவை. இது சிறிலங்கா போரல்ல. வௌ்ளையர்களால் கறுப்ர்கள் மீது நடத்தப்படும் போர். தலைமுறை, தலைமுறையாக இது இப்படியே போய்க்கொண்டுள்ளது."

அவர் மேலும் சொன்னார் " DNA ஆய்வு தமிழர்களுக்கும், ஆப்பிரிக்கர்களுக்கும் உள்ள ஒர்மையை உறுதிப்படுத்துகிறது. இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் இல்லாத ஓர்மை இது. ஒரு காலத்தில் இந்தியா முழுமையும் தமிழர்களுக்கு சொந்தமாயிருந்தது. ஆரியர் உள்நுழைந்து கைப்பற்றிக் கொண்டனர். திரும்பவும் பெற இதுவே நேரம்"
-------------
தற்போது பிரான்ஸிஸ் பாய்ல் தலித்முரசு பேட்டியில் சொன்ன பகுதியைப் படியுங்கள்.
//
பாலஸ்தீனத்தின் மீதும் பாஸ்னியா மீதும் சர்வதேச ஊடகங்கள் மிகுந்த கவனம் செலுத்தின. கெடுவாய்ப்பாக, அவை இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து கவனத்தில் கொள்ளவில்லை. இதை இனவெறி என்றே நான் கூறுவேன். தோலின் நிறம் பார்த்து செய்யப்படும் கொடுமை. சர்வதேச ஊடகங்கள், இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைகளையும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களையும், தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் போர்க் குற்றங்களையும் பிடிவாதமாக கண்டுகொள்ள மறுக்கின்றன. உலக ஊடகங்கள் பாஸ்னியா மீது கவனம் செலுத்தின. மிக அண்மையில் கடந்த டிசம்பர்-சனவரியில் காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. ஆனால், இலங்கைத் தமிழர்கள் பற்றி அவை கூறாததற்கு இனவெறியே காரணம். தமிழர்கள் திராவிடர்கள். உள்நாட்டு மக்கள். கறுத்த தோலுடையவர்கள். இந்தியாகூட வெள்ளைத் தோலுடைய ஆரியர்கள் என அழைக்கப்படுபவர்களால் ஆளப்படும் நாடு. இவையெல்லாம் என் கருத்துக்களில் பாதிப்பை ஏற்படுத்துபவை.

//
இப்போது புரிகிறதா? ஒரு வௌ்ளையரே இந்த ஆழமான உண்மையை உணர்ந்தவராக உள்ளார். ஹிந்து ராம், துக்ளக் சோ.ராமசாமி, தினமலர் வௌ்ளைப் பார்ப்பான்கலெல்லாம், நம் உழைப்பை உறிஞ்சிக்கொண்டே நம்மை அழிப்பது புரியவில்லையா? இவர்கள் நடத்தும் பத்திரிகைகளை முற்றாகப் பறக்கணியுங்கள். இவர்கள் எப்போதும் நமக்கு நல்லது சொல்ல மாட்டார்கள்.

நமக்கான ஊடகங்களை உருவாக்குங்கள். நமது ஊடகங்களுக்கு ஆதரவு கொடுங்கள். பார்ப்பனன் நமது வழிகாட்டியல்ல. அவர்களுக்கு புத்தி சொல்லக்கூடிய இலக்கியங்கள் நம்மிடம் உள்ளன. நமக்கு புத்தி சொல்லக்கூடிய ஒரு யோக்கியமான இலக்கியம் கூட அவனிடம் இல்லை. புரிந்து கொள்வீர்!
தியாகு
சு. சாமியின் மீது முட்டை வீசப்பட்டது தற்செயல் நிகழ்வென்றும் அது எதோ தமிழினவாதிகள் மட்டும் செய்த வேலை என்றுமா நினைக்கிறீர்கள்

என்றால் நடந்தது என்னவென கேட்டுவிட்டு பிறகு பேசுங்கள் டாக்டர் பாண்டி

மக இக இட ஒதுக்கீட்டை நையாண்டி செய்கிறது

இட ஒதுக்கீடு என்பது ஒரு தீர்வல்ல என்றுதான் சொல்கிறது அது ஒரு சீர்திருத்தம் அவ்வளவே அந்த மட்டிலும் அது சரி ஆனால் தாழ் த்த ப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை கைதூக்கிவிட சமூக முரண்பாடுகள் களையப்பட அது மட்ட்டுமே தீர்வல்ல என்றுதான் சொல்கிறது
உய்யலாலா
'என்னைப் போல உத்தமர் எவரும் இல்லை' என்று பீற்றித் திரிவதில், சிபிஎம் கட்சியை வெல்ல யாராலும் முடியாது... என்று தோழர் தியாகு (ஒரிஜினல்) ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அவர்கள் கூட பல இடங்களில் தங்களின் வரலாற்றுத் தவறுகளை, அப்போதைக்கு இல்லாமல், காலம் கடந்தாவது ஒப்புக் கொள்வார்கள்.
ஆனால், இந்த 'மகஇக- எஸ்ஓசி' கும்பல் இருக்கிறதே, இவர்களுக்கு எந்த விதமான நேர்மையும் கிடையாது. ஒருநாளும் தங்களின் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பொறுமையாக பதில் சொல்வது கிடையாது. கேள்வி கேட்டால், விமர்சனம் செய்தால் ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்து விடும். மணி, ஏகலைவன், சூப்பர் லிங்க், பகத், லேட்டஸ்ட்டாக தியாகு என பல முகமூடிகளில் நாகரிகமற்ற வகையில், ஒருமையில் வசைபாடுவார்கள்.
இவர்களின் 30, 35 ஆண்டுகால சாதனை என்னவென்றால், "பிழைப்புவாதிகள்- போலிகள்" என்ற இருவார்த்தைகளை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பதும், கேள்வி கேட்போர் மீது அந்த வார்த்தைகளைத் தூக்கிப் போட்டுத் தப்பித்துக் கொள்வதும்தான்.
நக்சல்பாரிகளாய் அணிவகுப்போம்... ஆயுதமேந்துவோம் என்று, இரவு நேரங்களில், முகத்தைக் கூட வெளியே காட்டாமல், சுவர் கண்ட இடமெல்லாம் வரைந்து போடுவார்கள். ஆனால், இதுவரை ஒரு அட்டைக் கத்தியைக் கூட இவர்கள் கண்ணால் பார்த்ததில்லை என்பதுதான் உண்மை. இப்போது லேட்டஸ்ட்டாக சுவர்களை விட்டுவிட்டு, கீ போர்டு புரட்சியாளர்கள் ஆகி விட்டார்கள்.
வர்க்கப் போராட்டம், சமூகநீதிப் போராட்டம் ஆகிய எல்லா போராட்ட பிராண்டுகளும் எங்களின் தயாரிப்பே என்று கூப்பாடு போடுவார்கள். ஆனால், இவற்றில் எந்த ஒரு போராட்டத்தையும் இதுவரை இவர்கள் நடத்தியது கிடையாது. வெறும் பில்டப் மட்டும்தான் அவர்கள் கற்ற வித்தை.
சமூக அநீதிகளுக்கு எதிராக, சாதி, மத தீயசக்திகளுக்கு எதிராக, பொருளாதார சுரண்டல்களுக்கு எதிராக இவர்கள் எத்தனை இடங்களில் களம் இறங்கியிருக்கிறார்கள்? போராட்ட அணுகுண்டுகள் மூலம் தீர்வைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள் என்றால், ஒரு மண்ணும் கிடையாது.
சர்வதேசியவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் இவர்கள், ஈழச் சிக்கலில், ஈழப் பாட்டாளியையும், சிங்களப் பாட்டாளியையுமாவது, ஒன்றிணைக்க என்ன முயற்சி எடுத்தார்கள் என்றால் ஒன்றுமில்லை.
சரி, ஆணியே புடுங்க வேண்டாம்... என்று விட்டுவிடலாம்.
இவர்கள் போற்றிப் பாடும் சீனா, ஈழத்தமிழர்களை கொன்றழிக்க ஆயுதம் கொடுத்த போது, இவர்கள் கொதித்து எழுந்து விட்டார்களா? இல்லையே...
சர்தேசியவாதிகள், தங்களின் சர்வதேசிய கைச்சரக்கை சீனாவிடம் காட்டியிருக்கலாமே, ஏன் முடியவில்லை...? ஒரு முக்கல் முனகல் போராட்டம் கூட நடக்கவில்லையே ஏன்?
மகஇக எப்போதுமே தேர்தல் புறக்கணிப்பைச் செய்து வருகிறதாம். தமிழ் தேசியர்களோ சந்தர்ப்பவாதமாக இந்தமுறை மட்டும் ஜெயா மாமிக்கு ஒட்டுப் போடுங்கள் என்று சொன்னார்களாம்.
மகஇக கும்பல் இங்கு தேர்தலைப் புறக்கணிப்பதால், யாருக்கும் என்ன நஷ்டம்? ஒன்றுமில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால், மாவட்டத்துக்கு நாலு பேர். அவர்களும் தலைமறைவுப் புரட்சி(!)யாளர்கள். இவர்கள் தேர்தலைப் புறக்கணித்து ஆகப்போவது ஒன்றுமில்லை.
ஆனால், இவர்கள் புகழ்பாடக்கூடிய இந்திய மாவோயிஸ்டுகள், மேற்கு வங்காள மாநிலத்தில், அங்குள்ள கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான ஆட்சியை- இவர்களின் பாஷையில் சொல்ல வேண்டுமானால், போலி கம்யூனிஸ்டுகளை ஓழிக்க, மம்தா பானர்ஜி கட்சியுடனும், காங்கிரசுடனும் கூட்டணி சேர்ந்தார்களே, அது சந்தர்ப்பவாதம் இல்லையா...? அத்வானியைக் கூட்டி வந்து அரிவாள் சுத்தி இடம்பெற்ற செங்கொடிகள் பறக்க, பாராட்டுக் கூட்டம் நடத்தினார்களே.. அது சந்தர்ப்பவாதம் அல்லாமல், வர்க்கப் போராட்டமா?
கேட்டால், போலி கம்யூனிஸ்டுகள், மேற்கு வங்காளத்தில் விவசாயிகளைக் கொன்று குவிக்கிறார்களாம்.. எனவே, அவர்களை வீழ்த்த யாரோடும் இவர்கள் கூட்டணி போடுவார்களாம்.
ஆனால், தமிழ்த் தேசியர்கள் மட்டும், தங்களின் ரத்த சொந்தங்கள் நாளும் செத்தாலும், விரலைச் சூப்பிக் கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டுமாம்....
ரஜபக்சே, சோனியா, தமிழகத்து கருணா கூட்டத்துக்கு பாடம் புகட்ட, கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்த நினைத்தால், அது சந்தர்ப்பவாதமாம்..!
***
தோழர் அதிரடியானுக்கு வேண்டுகோள். போலிகளை அடையாளம் காட்டும் கட்டுரைகளை நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும். தமிழ்த் தேசியத்திற்கு எதிரிகளும், துரோகிகளும் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.
kavi
//ஹிந்து ராம், துக்ளக் சோ.ராமசாமி, தினமலர் வௌ்ளைப் பார்ப்பான்கலெல்லாம், நம் உழைப்பை உறிஞ்சிக்கொண்டே நம்மை அழிப்பது புரியவில்லையா? இவர்கள் நடத்தும் பத்திரிகைகளை முற்றாகப் பறக்கணியுங்கள். இவர்கள் எப்போதும் நமக்கு நல்லது சொல்ல மாட்டார்கள்.//
அய்யா..எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..
சின்னக்குத்தூசி, வ.கீதா போன்ற வெள்ளைப் பார்ப்பான் / பாப்பாத்திகளும் நம்ம உழைப்பை உறிஞ்சிக்கிட்டே நம்மை அழிக்கிறவங்களா? பார்ப்பானாப் பொறந்ததாலே ஒருத்தனை நம்பக்கூடாது..அது தமிழனுக்கு எதிரானதுன்னு நீங்க கருதும்போக்குதான்..ம.க.இ.க..பார்ப்பான் தலைமை..ன்னு சொல்லச் சொல்லுது. அப்படின்னா சின்னக்குத்தூசி..வ.கீதா இவங்கள் எல்லாம் எப்படிப்பட்டவங்க? இவங்களும் பார்ப்பன சாதிக்காரங்கதானே?
கொஞ்சம் வெளக்கறீங்களா?
தியாகு
உய்யலாலா இதான் சொந்த பேரா

உங்கள் பேரும் உங்கள் அரசியல் ஏன் வெளியிடவில்லை

இதோ எனது பிளாக்

http://www.thiagu1973.blogspot.com

உங்கள் சொந்த பெயரில் பேசாத நீங்கள்தாம் முகமூடி பற்றி வாய்கிழிய பேசுகிறீர்கள்

அதுதான் முரண்பாடு

மற்றபடி உங்கள் குற்றச்சாட்டுகள் பைசா பிரயோசனம் இல்லாதவை
Thambi
Reply to thiyagu.

மதிப்பிற்கு உரிய தியாகு அய்யா அவர்களே, செயா கூட்டணி நாளையும் ஆராஞ்சி சிஞ்சுதா இல்ல பீராஞ்சு செஞ்சுதா அது எனக்கு தேவை இல்லை. அதிரடியான் அவர்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதில சொல்லுங்க. ஸ்டாலின் செஞ்சது சரியா? சரி என்றால் எப்படி?

இலங்கையில் மிகத்தீவிரமாக நடை பெற்று வரும் போர் தற்காலிகமாவது நிறுத்தப்படவேண்டும்.. அதற்கு அந்த காங்கிரஸ் அரசை வீழ்த்த வேண்டும் அதற்கு, அதன் எதிர் அணியினரை ஆதரித்தோ அல்லது காங்கிரசை புறக்கணிக்க சொல்லியோ தமிழ் உணர்வாளர்கள் எடுத்த முடிவு மிகவும் சரியானதே. செயா மாமி தமிழர் எதிரி என்றால் நீங்கள் அதை மக்களிடம் பிரச்சாரமாக செய்து இருக்கலாமே.செயாவை தோற்க்கடியுங்கள் என்று. அதைவிட்டுவிட்டு ஒட்டு மொத்தமாக தேர்தலை புறக்கணிக்க சொன்னது எந்த விதத்தில் நியாயம்? காங்கிரஸ் வந்தாலும் அதைத்தான் செய்யும் பா. ச. க. வந்தாலும் அதைத்தான் செய்யும் செயா வந்தாலும் போர் தொடரும், என்று நீங்கள் சொன்ன அந்த தேர்தல் புறக்கணிப்பு மட்டும் அங்கே போரை நிறுத்திவிடுமா?

ஈழத்தமிழர்கள் அங்கு கொத்து கொத்தாக கொல்லப்படும் நேரத்தில் இங்கே காங்கிரசை ஆட்சியை விட்டு இறக்கினால் தர்காலிக போர் நிருத்தமாவது ஏற்படும் அதனால் காங்கிரசை புறக்கணிப்போம் அல்லது அதன் எதிர் அணியினை ஆதரிப்போம் என்று தமிழ் தேசிய வாதிகள் எடுத்தமுடிவை சந்தர்ப்பவாதம் என்று சொல்லும் நீங்கள் காங்கிரசை ஆட்சியை விட்டு இறக்கினால் அங்கு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்படும் என்பதை தெரிந்தே உங்களது கொள்கையை காப்பாற்ற வேண்டும் நீங்கள் தான் உண்மையான புரட்சியாளர்கள் எனபதை காட்டவேண்டும் என்ற குறுகிய நோக்கத்தோடு, இந்த நேரத்தில் நமது தேர்தல் புறக்கணிப்புதான் சந்தர்ப்பவாதம். அதனால் இந்தமுறை தேர்தலை ஆதரித்து பிரச்சாரம் செய்வோம் என்ற முடிவை கூட எடுக்கத்தேரியாத அளவுக்கு மூளை மழுங்கி நீங்கள் எடுத்த முடிவு என்ன சந்தர்ப்பவாதம் இல்லையா? இது உங்களுக்கு ஏற்பட்ட பக்க வாதமாகத்தான் நான் கருதுகிறேன். இல்லை இல்லை இது பக்காவதம். ஏன் என்றால் மூளையும் செயலிழந்துபோனது அல்லவா..அடிக்கடி நம்மை மாற்றிக்கொள்வது மட்டும் சந்தர்ப்பவாதம் அல்ல சரியான நேரத்தில் நம்மை மாற்றிக்கொள்ளததும் சந்தர்ப்பவாதமே. உங்களை நினைக்கும்போது எனக்கு காமராசர் சொன்ன ஒரு கதைதான் நினைவுக்கு வருகிறது. தேசிய கீதம் பாடுகிறதே என்பதற்காக கிணற்றில் விழுந்து தத்தளிக்கும் குழந்தையை....... நீச்சல் தெரியாத ஒருவனை ஏன்டா குழந்தையை விட உனக்கு தேசியகீதம் பெரிதா என்று கேட்டால், அவன் தேசியகீதம் அல்லவா, அதை எப்படி நான் அவமதிப்பேன் என்று தன் கையாலாகதனத்தை மறைப்பானோ அது போலத்தான் உங்களது நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பும். கொள்கையை தூக்கி பிடித்து நீங்கள் இந்தமுறை மனிதாபிமானத்தை இழந்துவிட்டீர்கள்.

பெரியார் பாணியில் ம.க.இ.க.வைப் பற்றிக் கூறினால், ஒரே வார்த்தையில் “வெங்காயம்!” என்று சொல்லாம்.
வெங்காயத்தின் தோல்தான் கிருமிகளை அழிக்கும் அருமருந்து எனபதை திரு அதிரடியான் அய்யா அவர்களும் தெரிந்துகொள்ளவேண்டும்.
Dr. V. Pandian
கவி அவர்களே!
சற்று கவனமாக படியுங்கள். அமெரிக்கர் என்ற சென்றேறிகள் அக்கண்டத்தின் செவ்விந்தியர்களைக் கோடிக்கனக்கில் கொடூரமாகக் கொன்று, ஒவ்வொரு ஆங்கிலேயனும் ஆயிரக்கனக்கான ஏக்கர் நிலங்களைக் கைப்பற்றி, பண மிதமிதப்பில் ஐரோப்பிய பண்பாடுகளைக் கூட கைவிட்டு, கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வரன்முறையில்லாமல் கூத்தடித்த கும்பலின் வம்சாவழிதான். அது ஒரு கேடுகெட்ட தேசம். அம்மக்களில் பெரும்பாலான வௌ்ளையர்கள் கடைந்தெடுத்த அயோக்கியர்கள். அமெரிக்கா உலகெங்கும் செய்யும் அட்டகாசங்களை, அம்மக்கள் நினைத்தால் நிறுத்த முடியும். வியட்நாம் தவிர அவர்கள் அப்படி நிறுத்தியதாக வரலாறில்லை. (அங்கும் 50,000 த்திற்கும் மேலாக அமெரிக்க வீரர்களை இழந்த பின் தான் அது நடந்தது என்பது கூடுதல் செய்தி.) இதைப்பற்றி மேலும் அறிய திரு. ஞாணய்யா எழுதிய "அமெரிக்க பயங்கரவாதம்" (முழுப்பெயர் நினைவில்லை.) என்ற நூல் அனைவரும் படிக்கவேண்டிய நூல்.

இப்போது நமது சர்ச்சைக்கு வருகிறேன். அப்படிப் பட்ட ஒரு நிலத்தில் இருந்து தான் திரு. பிரான்ஸிஸ் பாய்ல் என்ற வௌ்ளையர் தான் தலித்முரசு பேட்டியல் பல உண்மைகளைக் கூறியுள்ளார். சிலர் நல்லவர்களாக இருப்பதால் மட்டும் அந்த சமுதாயத்திற்கு நற்சான்றிதழ் கொடுக்க முடியாது. எல்லா சமுதாயங்களிலும் குறிப்பிட்ட சதிவீதம் நல்லவர்கள் உண்டு. வௌ்ளைத் தோலுடைய சமுதாயத்தில் அந்த சதவீதமும் மிக மிகக்குறைவே!

சிம்புத்தேவனின் 23ம் புலிகசி படத்தில் ஒரு வசனம் வரும். புலிகேசியை எதிர்த்து சண்டையிட வந்த மன்னன் சொல்வான் "ஏண்டா வருமைக்குப் பிறந்தவனே!" என்று. அது போல, வௌ்ளைத் தோலுடையவர்கள் எல்லாம் "வருமைக்குப் பிறந்தவர்கள்". சூழ்ச்சி, தன்னலம், கறுப்பர்களைக் கேவலமாக எண்ணுவது (Blacks are mere vegetables!), அடுத்தவன் பொருட்களை அபகரித்தல் போன்ற குணங்கள் எல்லாம் "வரண்ட பனிப்பிரதேச" மக்களின் அடிப்படையான குணாதிசயங்கள்.

மேற்கத்திய உலகம், உலகையெல்லாம் கொள்ளையிட்டுத் தான் இன்று வளமாயுள்ளன. அங்கிருந்து ஆயுதமில்லாமல் வந்த வௌ்ளை பிராமனர்கள் (இது அவர்கள் இங்கு வந்தபின் சூட்டிக்கொண்ட பெயர்) நம்மை சூதால் அடிமைப்படுத்தி நம்மை நாசப்படுத்தினார்கள். அதன் பிறகு வந்த வௌ்ளையர்கள் ஆயுதம் வைத்திருந்ததால் அடக்குமுறையால் கொள்ளையடித்தனர். இப்போது நம்மிடமும் ஆயுதமுள்ளதால் மீண்டும் "பிராமன" சூழ்ச்சிக்கே திரும்பி, நமது அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கி, சிறப்பு பொருளாதார மண்டலம் என்று பல தந்திரங்களால், நம்மை அடிமைப்படுத்திக் கொள்ளை அடிக்கின்றனர்.

தற்சார்பு பொருளாதாரத்தைக் கட்டமைத்த புலிகளைக் கொன்றதும் இந்த திட்டமிட்ட செயல்பாட்டின் ஒரு அங்கம் தான். இவர்கள்ளோடு சேர்ந்து தான் மகஇக புலிகளைப் பாசிஸ்டுகள் என்றழைத்தது. இதையேதான் அனைத்து வௌ்ளையர்களும் சொல்லிக் கொண்டிருந்தனர். இப்போது புரிகறதா?

ஹிந்து ராம், துக்களக் கோமாளி, தினமலர்க் கும்பல் எல்லாம் வலுவான குப்பல்கள். எம்மிடம் பணம்புடுங்கி எம்மையே அழிக்கும் கும்பல். சின்னக்குத்தூசி எல்லாம் உதிரிகள்.

ஒரு இனமக்கள் தம்மின மக்களால் நடத்தப்படும் பத்திரிகைகளைத் தான் படிக்க வேண்டும். இது ஒரு அடிப்படையான உண்மை. இந்த உண்மையை அறியாமல் இருந்ததனால் எம்மக்கள் நாசமாய்ப் போனார்கள். நம்மோடு கூடவே வாழ்கிறானே என்று பார்ப்பானை அவர்கள் நம்பினார்கள். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் நம்முடன் வாழ்ந்தாலும் பார்ப்பான் பார்ப்பான் தான். குறுதியில் ஊறிய குணம் அது. எமக்கு நல்லதை நினைக்காது!
kavi
பாண்டியன் அவர்களே!

ஆயிரம் ஆண்டுகளாயினும் பாப்பான் குணம் மாறாது என்கிறீர்களே! அப்படியானால் எதன் அடிப்படையில் பாப்பாத்தி ஜெயலலிதாவுக்கு நீங்கள் எல்லாம் ஓட்டுக் கேட்டீர்கள்? பாப்பாத்தி ஜெயித்து வந்தால் தமிழர்களைக் காப்பாற்றுவாள் என்று நீங்கள் நம்பியது சரியான செயலா?

"தி.க. நாளிதழான விடுதலை, எழுத்தாளர் வ.கீதாவை "எஸ்.வி.ராஜதுரையின் பார்ப்பனத் தோழி' எனத் தரம்தாழ்ந்து எழுதியிருந்தது. இதனைக் கண்டித்து "வ.கீதா பிறப்பால் பார்ப்பனர்தான். ஆனாலும் பெரியாரியல்வாதி' என்று பெரியார் முழக்கம் எழுதியுள்ளது. மேலும் சின்னக்குத்தூசி, ஆந்திர நாத்திகர் கோரா, அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரி போன்றவர்களையும் பிறப்பால் மட்டும் பார்ப்பனர்களாகப் பார்க்கவில்லை என்று பெரியார் முழக்கம் அக்கட்டுரையில் உணர்த்தியுள்ளது. (பெரியார் முழக்கம் 19.03.2009)
"
பெரியார் முழக்கத்தின் இந்தப்பார்வை சரியா?

உங்கள் கூற்றுப்படியே, ஆயிரம் ஆண்டுகளானாலும் பாப்பான் குணம் மாறாது என்பது உண்மையின்னா... 'சாணாப் புத்தியும் பறப் புத்தியும் மாறாது..அவாள்லாம் சூத்திர பஞ்சமப்புத்தி உடையவா' அப்படிங்கற பாப்பானின் சிந்தனை சரிதானே...பாண்டியன்?
உய்யலாலா
உய்யலாலா இதான் சொந்த பேரா? என்று தியாகு கேட்டுள்ளார்.
'சூப்பர் லிங்ஸ்' என்றெல்லாம் பெயர் இருக்கும்போது, உய்யலாலா என்று பெயர் இருப்பதால், ஒன்றும் மோசமில்லையே...

அப்புறம் தனது 'பிளாக்' அட்ரசையும் தியாகு தந்துள்ளார்.
பிளாக்கை, யார் வேண்டுமானாலும், எந்த பெயரில் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாமே... அதற்கு வி.ஏ.ஓ. சர்டிபிகேட்டா தேவை...? ஒருவேளை தியாகு வி.ஏ.ஓ. சர்டிபிகேட் கொடுத்து, பிளாக் ஆரம்பிரத்திருக்கிறாரோ, என்னவோ...? ஆகவே, பெரிய ஆதாரத்தை தந்துவிட்டது போல, தியாகு குதூகலிக்க வேண்டாம்.
நான் முகமூடி என்று சொல்ல வந்தது, யோக்கிய சிகாமணிகள் போல - சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பல்வேறு பெயர்களில் உலவுவதைத்தான்.

அப்புறம் என் அரசியல் வெளிப்படவில்லை என்று, தியாகு கவலைப்படுகிறார்...
நான் எழுதியிருப்பதையெல்லாம்... படித்த பிறகுமா என் அரசியல் வெளிப்படவில்லை.... அய்யோ பாவம்..!
"பிழைப்புவாதிகள், போலிகள்" என்பது போன்ற 'பஞ்ச்' வார்த்தைகள் மூலம், ம.க.இ.க. அரசியல் தெள்ளத் தெளிவாக வெளிப்படுவது போல, எனது அரசியலை வெளிப்படுத்த வார்த்தைகள் கிடைக்கவில்லை... அப்படியிருக்கும்போது, தியாகுவுக்கு என் அரசியல் புரியாமல் தானே போகும்..!

கடைசியாக, 'உங்கள் குற்றச்சாட்டுகள் பைசா பிரயோசனம் இல்லாதவை' என்று தியாகு கூறுகிறார்...
அப்படியானால், ம.க.இ.க. கும்பல் கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு பின்னால், "பலகோடி ரூபாய் பண பிரயோசனம்" இருக்கிறது போலும்...
அட்றா சக்கை.... அட்றா சக்கை... அட்றா சக்கை....

பதில் சொல்ல மாட்டாமல் தப்பிக்குறதுக்கு, இப்படி ஒரு வழி... சபாஷ்!
Dr. V. Pandian
கவி அவர்களே!
ஜெயாவுக்கு ஓட்டு கேட்டதைப்பற்றி நானும் வேறு பல தோழர்களும் நல்ல பதிலளித்து விட்டோம். நீங்கள் நாணயமான விவாதம் செய்வதாயிருந்தால் அது நன்மை பயக்கும். ஜெயா பாப்பாத்தி ஒரு விஷப் பாம்பு. அது நல்லது செய்யும் என்று நப்பி நாங்கள் அப்போது ஆதரிக்கவில்லை. நம்பிக்கை துரோகியைவிட எதிரி மேல். கருணாநிதியை நம்பி கேவலமாக ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். ஜெயலலிதாவின் பொடா கைதுகளால் தான், பெங்களூரிலிருந்த நான் சென்னைக்கு மாற்றலாகி வந்தேன். போதுமா கவி!

அடுத்து அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியின் நூலை 50 படிகள் வாங்கி நன்பர்களுக்குப் பரிசளித்தேன். நான் ஏற்கனவே சொன்னேன். பாரப்பாரிடத்திலும் நல்லோர் உண்டு! அவர்கள் ஒரு சிறுபாண்மையினர். அவ்வளவே! எனது அணி பெரியார் முழக்கம் பக்கம் தான். நிச்சயமாக!

இன ரீதியான குணங்கள் மாற்றமடைய நூற்றாண்டுகளாகும். அதுவும் மாற்றத்திற்கான தொடர்ந்த, கடுமையான விழைவு இருந்தால் மட்டுமே! பார்பனர்களின் சிக்கலே, அந்த மாற்றத்திற்கான விழைவு அவர்களிடம் மிகவும் குறைவு. முந்தைக்கு இப்போது சற்று முன்னேற்றம் உள்ளது. சில உதிரிகள் தங்களைத் தமிழர்களாக ஆக்கிக் கொண்டுள்ளனர். பெயரும் தமிழில் மாற்றிக்கொண்டு விட்டனர். சமஸ்கிருதத்தை வீசியெறிந்து விட்டனர். இருந்தாலும், அவர்களோடு பழகும்போது அந்தப் பார்ப்பனக் குணங்கள் மேலழுவதை கண்கூடாக காண்கிறவர் நான்.

அதானல் யாராய் இருந்தாலும் இன ரீதியான குணங்கள் மாற்றமடைய நாட்களாகும் என்பது தான் உண்மை.

அவர்களது குணங்களுக்கான அறிவியல் காரணங்களைக் கொடுக்கும் போது, அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. தனது குணத்திற்கான அறிவியல், வரலாற்றுக் காரணங்களை உணர்கின்றவர்கள், அதை ஆய்வு செய்து ஒத்துக்கொள்பவர் தான் மாற்றம் அடைவார். ஒத்துக் கொண்டாலே மாறிய மாதிரி தான். அது போதும்.

அதனால் தான் அது போன்ற ஆய்வுகளை வௌியிடுகின்றேன். "ஆரியரும் அக்னியும்" என்ற எனது சமீபத்திய கீற்று கட்டுரையும் அந்த நோக்கில் தான்.

செயற்கையான வருமையில் ஆயிரம் ஆண்டு காலம் வாடிய பறையர் சமூகத்தை, அதனால் இவர்களுக்கு உண்டான சில குணக்கோளாறுகளை, ஆதரவோடும், பரிவோடும் நாம் அனுக வேண்டும். குற்றமிழைத்தவர்கள் அனைத்து மேல் சாதியினரும் தான். இதில் பெருங்குற்றம் இதன் மூலகர்த்தாக்களான பார்ப்பனர்களுக்கு. பரிவு காட்ட வேண்டியவர்களும் இவர்கள் அனைவரும் தான்.
தியாகு
//அப்புறம் தனது 'பிளாக்' அட்ரசையும் தியாகு தந்துள்ளார்.
பிளாக்கை, யார் வேண்டுமானாலும், எந்த பெயரில் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாமே... அதற்கு வி.ஏ.ஓ. சர்டிபிகேட்டா தேவை...?//

இணையத்தில் உலவ ரேசன் கார்டு கேட்பீர்கள் போல தெரிகிறது உங்களுக்கு ஆதாரம் தரவேண்டியதில்லை

எதோ தமிழ் தமிழர் இயக்க தியாகு ஒரிஜினல் என போட்டு உள்ளீர்களே அவரது ரேசன் கார்டு தந்தாரா

தியாகு என்பது எனது சொந்த பேர்தான் என சொல்லி உங்களிடம் நீருபிக்க வேண்டியது என்பது நான் போலி அல்ல என சொல்ல வேண்டியது இதெல்லாம் தேவையே இல்லை

என் பெயர் தியாகு நான் இந்த பெயரில் எனது அரசியல் கருத்துக்களை முன்வைக்கிறேன் எனது கருத்துக்களை எதிர் கொள்ளாமல் றுமனே போலிகள் முகமூடிகள் என மட்டும் சொல்லும் ஒரு அவதூறு தொகுப்புதான் உங்கள் கட்டுரை

மேலும் மக இக எடுத்துள்ள போராட்டங்களின் புள்ளி விபரங்களை நாங்கள் புஜாவில் எழுதி இருக்கிறோம் அதை படித்து ப்பாருங்கள் மேலும்

வாய்கிழிய பேசும் நீங்கள் ஈழத்துக்கு என்ன போராட்டம் நாடத்துனீர்கள் எதாவது ஆதாரம் இருக்கா உய்யலாலா என்ற பெயர் என்ன சொந்த பேரா என கேட்டேன் பதிலில்லை

எந்த பேராக இருந்தாலும் அது இங்கே முக்கியமல்ல என்று சொன்னால் உங்கள் போராட்டத்தின் நிகழ்ச்சி நிரலை கொடுங்கள்

//ஒருவேளை தியாகு வி.ஏ.ஓ. சர்டிபிகேட் கொடுத்து, பிளாக் ஆரம்பிரத்திருக்கிறாரோ, என்னவோ...? ஆகவே, பெரிய ஆதாரத்தை தந்துவிட்டது போல, தியாகு குதூகலிக்க வேண்டாம்.
நான் முகமூடி என்று சொல்ல வந்தது, யோக்கிய சிகாமணிகள் போல - சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பல்வேறு பெயர்களில் உலவுவதைத்தான். //

சந்தர்ப்பத்துக்கு எந்த சந்தர்பத்துக்கு ஏன் உலவ வேண்டும் அதற்கான தேவை என்ன எதுவும் இல்லை வெறும் வாய்சவடால் குற்றச்சாட்டுதான் இது

அப்புறம் என் அரசியல் வெளிப்படவில்லை என்று, தியாகு கவலைப்படுகிறார்...
நான் எழுதியிருப்பதையெல்லாம்... படித்த பிறகுமா என் அரசியல் வெளிப்படவில்லை.... அய்யோ பாவம்..!
"பிழைப்புவாதிகள், போலிகள்" என்பது போன்ற 'பஞ்ச்' வார்த்தைகள் மூலம், ம.க.இ.க. அரசியல் தெள்ளத் தெளிவாக வெளிப்படுவது போல, எனது அரசியலை வெளிப்படுத்த வார்த்தைகள் கிடைக்கவில்லை... அப்படியிருக்கும்போது, தியாகுவுக்கு என் அரசியல் புரியாமல் தானே போகும்..!

கடைசியாக, 'உங்கள் குற்றச்சாட்டுகள் பைசா பிரயோசனம் இல்லாதவை' என்று தியாகு கூறுகிறார்...
அப்படியானால், ம.க.இ.க. கும்பல் கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு பின்னால், "பலகோடி ரூபாய் பண பிரயோசனம்" இருக்கிறது போலும்...
அட்றா சக்கை.... அட்றா சக்கை... அட்றா சக்கை....

பதில் சொல்ல மாட்டாமல் தப்பிக்குறதுக்கு, இப்படி ஒரு வழி... சபாஷ்!
//
தியாகு
உங்கள் குற்றச்சாட்டு வெறும் உளறல் அதனால்தான் நான் பதில் போடவில்லை

சரி அதையும் பார்ப்போம்

//இவர்கள் போற்றிப் பாடும் சீனா, ஈழத்தமிழர்களை கொன்றழிக்க ஆயுதம் கொடுத்த போது, இவர்கள் கொதித்து எழுந்து விட்டார்களா? இல்லையே...
சர்தேசியவாதிகள், தங்களின் சர்வதேசிய கைச்சரக்கை சீனாவிடம் காட்டியிருக்கலாமே, ஏன் முடியவில்லை...? ஒரு முக்கல் முனகல் போராட்டம் கூட நடக்கவில்லையே ஏன்?//

சீனாவை எங்கே போற்றி பாடி இருக்கிறோம் என சொன்னால் புரிந்து கொள்வேன்

மாவோ தலைமையிலானா சீனா அதிகாரவர்க்க கும்பலிடம் போய் வெகுநாட்களாகி விட்டது

சீனாவின் இந்த நெறிபிறழ்வை சுட்டி காட்டியது முதலில் நாங்கள்தான் என்பது தற்போதைய சீனா அமெரிக்காவை விட எந்த வகையிலும் வேறுபட்டதல்ல என்றும் நாங்கள் பு.ஜவில் எழுதியது சுமார் பல ஆண்டுகளுக்கு முன்னமே இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் மக இக சீனாவை ஆதரிக்கிறது கம்யூனிஸ்டுகள் போலிகள் என உளறிக்கொட்ட இன்னும் எத்தனை பேர் கிளம்பி இருக்கிறீர்கள் ஹய்யோ ஹய்யோ

சின்னபுள்ள தனமா இருக்கு

//இக எப்போதுமே தேர்தல் புறக்கணிப்பைச் செய்து வருகிறதாம். தமிழ் தேசியர்களோ சந்தர்ப்பவாதமாக இந்தமுறை மட்டும் ஜெயா மாமிக்கு ஒட்டுப் போடுங்கள் என்று சொன்னார்களாம். மகஇக கும்பல் இங்கு தேர்தலைப் புறக்கணிப்பதால், யாருக்கும் என்ன நஷ்டம்? //

ஆமாம் நீங்க மாமிக்கு ஓட்டு போட்டதால் என்ன லாபம் யார் அறிவார் உங்களை தவிர

//கூட்டி கழித்துப் பார்த்தால், மாவட்டத்துக்கு நாலு பேர். அவர்களும் தலைமறைவுப் புரட்சி(!)யாளர்கள். இவர்கள் தேர்தலைப் புறக்கணித்து ஆகப்போவது ஒன்றுமில்லை. ஆனால், இவர்கள் புகழ்பாடக்கூடிய இந்திய மாவோயிஸ்டுகள், மேற்கு வங்காள மாநிலத்தில், அங்குள்ள கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான ஆட்சியை- இவர்களின் பாஷையில் சொல்ல வேண்டுமானால், போலி கம்யூனிஸ்டுகளை ஓழிக்க, மம்தா பானர்ஜி கட்சியுடனும், காங்கிரசுடனும் கூட்டணி சேர்ந்தார்களே, அது சந்தர்ப்பவாதம் இல்லையா...? அத்வானியைக் கூட்டி வந்து அரிவாள் சுத்தி இடம்பெற்ற செங்கொடிகள் பறக்க, பாராட்டுக் கூட்டம் நடத்தினார்களே.. அது சந்தர்ப்பவாதம் அல்லாமல், வர்க்கப் போராட்டமா?//

உய்யா உங்க உளறலுக்கு அர்த்தமே இல்லாம போய்கிட்டே இருக்கு மாவோ இஸ்டுகளை புகழை பாடுகிறோமா கூடவே மம்தாவின் புகழையுமா

மாவோ இஸ்டுகள் வேறு மக இக வேறு
சிபிஎம் வேறு சி பி ஐ வேறு என நான் உங்களுக்கு வகுப்பு எடுக்க முடியாது

அந்த கட்சி என்ன செய்தாலும் அதற்கு நாங்கள் விளக்கம் அளிக்க தேவை இல்லை இதெல்லாம் சொல்லித்தான் தெரியனுமா

இதானா உங்கள் குற்றச்சாட்டு

விவேக் பாணியில் சொன்னா போய் நல்லா படிச்சுட்டு வாங்க டாக்டர்னுதான் சொல்லனும்

உய் போய் விசயங்களை தெரிந்து கொண்டு வாங்க

//கேட்டால், போலி கம்யூனிஸ்டுகள், மேற்கு வங்காளத்தில் விவசாயிகளைக் கொன்று குவிக்கிறார்களாம்.. எனவே, அவர்களை வீழ்த்த யாரோடும் இவர்கள் கூட்டணி போடுவார்களாம்.
ஆனால், தமிழ்த் தேசியர்கள் மட்டும், தங்களின் ரத்த சொந்தங்கள் நாளும் செத்தாலும், விரலைச் சூப்பிக் கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டுமாம்....
ரஜபக்சே, சோனியா, தமிழகத்து கருணா கூட்டத்துக்கு பாடம் புகட்ட, கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்த நினைத்தால், அது சந்தர்ப்பவாதமாம்..!//

ஜெயித்தவுடம் மாமி சோனியாவுடன் கூட்டு சேர்ந்து இருக்கனும் அப்போ உங்க மூஞ்சிய பார்த்து இருக்கனும் செம காமடியா இருந்து இருக்கும்

நீங்களும் சரி , புலிகளும் சரி இந்திய ஆளும் வர்க்கம் ஈழத்தை எப்படியும் தரும் நட்பு சக்திகள் இருக்குன்னு நம்பும்வரை இதைத்தான் செய்வீர்கள் செய்தீர்கள்

ஆனால் சர்வதேச ராணுவ நிலைகளின்படியும் இந்திய ஆளும் வர்கஹ்தின் நலன்களின் படியும் அப்படி ஒரு ஈழ ஆதரவு கிடைக்காது என்பதை பலமுறை சொல்லியாச்சு
செவிடன் காதில் ஊதினசங்கு மாதிரி

இந்தியா ஆதரிக்கும் இந்தியா ஈழம் தரும் என்பதை எப்போ நிறுத்த போவீர்கள்
***
//தோழர் அதிரடியானுக்கு வேண்டுகோள். போலிகளை அடையாளம் காட்டும் கட்டுரைகளை நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும். தமிழ்த் தேசியத்திற்கு எதிரிகளும், துரோகிகளும் எங்கெல்லாம் //

அதிரடியான் ரொம்ப பயமா இருக்குங்க உங்களை பார்த்தா என்னமா கேள்வி கேக்குறீர்ங்க
தியாகு
//ஈழத்தமிழர்கள் அங்கு கொத்து கொத்தாக கொல்லப்படும் நேரத்தில் இங்கே காங்கிரசை ஆட்சியை விட்டு இறக்கினால் தர்காலிக போர் நிருத்தமாவது ஏற்படும் அதனால் காங்கிரசை புறக்கணிப்போம் அல்லது அதன் எதிர் அணியினை ஆதரிப்போம் என்று தமிழ் தேசிய வாதிகள் எடுத்தமுடிவை சந்தர்ப்பவாதம் என்று சொல்லும் நீங்கள் காங்கிரசை ஆட்சியை விட்டு இறக்கினால் அங்கு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்படும் என்பதை தெரிந்தே உங்களது கொள்கையை காப்பாற்ற வேண்டும் நீங்கள் தான் உண்மையான புரட்சியாளர்கள் எனபதை காட்டவேண்டும் என்ற குறுகிய நோக்கத்தோடு, இந்த நேரத்தில் நமது தேர்தல் புறக்கணிப்புதான் சந்தர்ப்பவாதம்//

ஈழப்போர் என்பதன் கடைசி கட்டத்தில் தேர்தல் வருது

அதற்கு முன்பே கிளிநொச்சி போய்விட்டது

பெரும் வாரியான புலிகள் தோற்றுவிட்டார்கள்

இருந்தாலும் ஒன்றும் பிரயோசன படாது

மேலும் மக்களை காப்பாற்ற போராட்டத்தை நாங்கள் நம்ப்பும்போது நீங்கல் ஓட்டு அரசியலை நம்பினீர்கள்

காங்கிரஸ் தமிழ் நாட்டில் வராவிடில் இந்தியாவில் இருந்தும் அது வராது என தப்பு கணக்கு போட்டீர்கள்

வலுவான எதிர் அணியாக பிஜேபி வந்தாலோ
அல்லது மூன்றாம் அணி வந்தாலோ

படுகொலைகளை நிறுத்த முடியும்மா/

இதில் யாருக்கு ஓட்டு போட்டாலும் இப்போ நடந்ததுதான் நடக்கும்

ஆனால் ஓட்டு போடாமல் எம்பிக்களை ஓட ஓட துரத்தி இருக்கனும்

அதை செய்யாமல் மாமிக்கும் பூமிக்கும் ஓட்டு கேட்டதன் மூலம் போராட்டத்தின் வீச்சை நீங்கள் தான் மழுங்கடித்தீர்கள்
புரச்சி
//.ம.க.இ.க..பார்ப்பான் தலைமை..ன்னு சொல்லச் சொல்லுது. அப்படின்னா சின்னக்குத்தூசி..வ.கீதா இவங்கள் எல்லாம் எப்படிப்பட்டவங்க? இவங்களும் பார்ப்பன சாதிக்காரங்கதானே?//

கவி கேட்டது மேலே இருக்கிறது, இதுக்கு நெரடியா ஆம் இல்லைனு சொல்லிட்டு அத விளக்குவது சுலபமான வேலை. அதை விட்டு விட்டு சம்ப்ந்தா சம்பந்தமில்லாமல் லெக்சர் அடிக்கிறார் பாண்டியன்... டாக்டர் பாண்டியன்.... இதுல பில்டப்பு வேற...

மருதையன் பார்ப்பன தலைமை எனில் வ. கீதா, சின்னக் குத்தூசி போன்றோருடன் கூடிக் குலாவும் பெரியாரிய, தமிழ்தேசியவியாதிகள் யார்? அவர்கள் பார்ப்பன தலைமைகளின் நண்பர்களா?

மேலும், செயா மாமியுடன் கும்மி அடித்தவர்களும், ஆர் எஸ் எஸ்க்கு ஜால்ரா தட்டி பெதிக தோழர் ராமகிருஷ்ணனை மேடையில் அவமானப்படுத்திய நெடுமாறன் போன்றோரும், இந்து பார்ப்பன் மதத்துக்கு வக்காலத்து வாங்கிய பெ. மணியரசன், ராசேந்திர சோழன் போன்றோரும் பார்ப்பன தலைமைகளா அல்லது கருப்பு பார்ப்பனத் தலைமைகளா?

டாக்டர் பாண்டியன் தனது சீரிய அறிவை பயன்படுத்தி இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்..,...

ஆமாம்... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி...

புரச்சி
புரச்சி
// இவ்வாறு செய்யாமல், தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, ”சிங்கள அரசே! போரை நிறுத்து!” என்றும் ”இலங்கை அரசே! போரை நிறுத்து!” என்றும் முழக்கமிடுவது என்பது, ”போரை சிங்கள அரசு தான் நடத்துகின்றது, இந்திய அரசுக்கு இதில் சம்பந்தமே இல்லை” என்று பறைசாற்றுவதற்கு ஒப்பாகும்.//

ஈழத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்து இந்திய மேலாதிக்கத்தை மையப்படுத்தி போராடியது ம க இகதான்.

ஏதோ ஒரு இடத்தில் சிங்கள பேரினவாதம் குறித்து வந்ததை வெட்டி எடுத்துப் போட்டு புரளி பேசுகிறார் அதிரடியான். அதுவும் உண்மையா என்பதை அந்த குறிப்பிட்ட வெளியீட்டில் படித்து உறுதி செய்ய வேண்டியுள்ளது.

கீழே உள்ளவை சில போரட்டங்கள் மற்றும் கட்டுரைகள் இவையணைத்திலும் மையப்படுத்தப்பட்டுள்ளது இந்திய மேலாதிக்கமே.

ம க இகவின் மையமானமுழக்கமே இந்தியாவை எதிர்த்துதான். ஏனேனில், இந்தியாவில் இருக்கும் முற்போக்கு, புரட்சிகர சக்திகள் இந்த வகையில்தான் ஈழ விடுதலைக்கு உதவ இயலும்.

மேலும், இதனை முன்னிட்டு எமது தோழர்கள் வரைந்த ஓவியங்களை பெயர் குறிப்பிடாமல் பயன்படுத்தியதுதான் தமிழ்தேசியவியாதிகளின் நேர்மை.

அதிலும் சிங்கள சின்னமான சிங்கம் இந்திய கொடியில் ரத்தம் வழிய ஏந்தி நிற்கும் ஓவியம் மிகப் பிரபலமானது

அந்த குறிப்பிட்ட ஓவியம்:
http://vinavu.files.wordpress.com/2009/03/eelam_mukilan.jpg

ஈழத்தமிழர் ரத்தம் குடிக்கும் சோனியாவே திரும்பிப் போ! படங்கள்! வீடியோ!
http://www.vinavu.com/2009/05/12/sonia-go-back/

ஈழம்…நேபாளம். தொடர்கிறது இந்தியாவின் மேலாதிக்க வெறி!
http://www.vinavu.com/2009/05/05/nepal1/

ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்கு பதிலடி கொடுப்போம்! – ம.க.இ.கவின் மே தினப் பேரணி – புகைப்படங்கள் !
http://www.vinavu.com/2009/05/05/pala-mayday-tanjore/

கொலைகார காங்கிரசடி – குதம்பாய் கொலைகார காங்கிரசடி…
http://www.vinavu.com/2009/04/10/elec096/

ஈழம்: எதிரி – துரோகிகளுக்கெதிரான கருத்துப்படங்களின் போர் !
http://www.vinavu.com/2009/03/26/eelam30/

ஈழம்: மருது , முகிலன் ஓவியங்கள் !
http://www.vinavu.com/2009/03/13/eelam29/

ஈழம்: திருச்சியில் இராணுவ அலுவலகத்தை மாணவர் முற்றுகை – படங்கள்!http://www.vinavu.com/2009/02/13/eelam23/

ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள் !
http://www.vinavu.com/2009/02/05/eelam21/

மன்மோகன் – ராஜபட்சே கொடும்பாவி எரிப்பு ! ம.க.இ.க தோழர்கள் கைது !! படங்கள் !!!
http://www.vinavu.com/2009/02/02/eelam19/

ஈழம்: சென்னையில் பு.மா.இ.மு மாணவர்கள் சாலை மறியல் – வீடியோ !
http://www.vinavu.com/2009/02/01/eelam17/

பொய்யடியானின் பிற பொய்கள் அடுத்து வரும்.

இது போன்ற பொய்களை பிரசூரிக்கும் கீற்றுவின் அக்கரை உண்மையில் போற்றத்தக்கது. ஏனேனில் இதன் மூலம் பிழைப்புவாத, சந்தர்ப்பவாத கும்பலின் பித்தலாட்டங்கள் அம்பலப்படுகின்றன அல்லவா?

புரச்சி
உய்யலாலா
மறுபடியும் தியாகுவுக்கு...

ஏப்பு.... நீங்கதானேப்பு, 'உய்யலாலா என்பது சொந்தப் பேரா?' என்று கேள்வி கேட்டீர்கள்... பிறகு நான் ஏதோ 'உங்களின் முகவரியைத் தந்தால்தான் ஒப்புக்கொள்வேன்' என்று அடம் பிடித்தது, போல பிளேட்டையே திருப்பிப் போடுகிறீர்களேப்பு...

இனிமேல் தனி பிளாக் உள்ளவர்கள்தான் பின்னூட்டம் போட வேண்டும் என்பதைப் போல, உங்களோட பிளாக் அட்ரசெல்லாம் தந்து "பயமுறுத்தி", எங்கே... நீயும் காட்டு பாப்போம்... என்று மிரட்டியதெல்லாம் நீங்கதானேப்பு...

அப்புறம் இப்ப, //இணைத்தில் உலவ ரேசன் கார்டு கேட்பீர்கள் போல தெரிகிறது... உங்களுக்கு ஆதாரம் தர வேண்டியதில்லை// என்று கோபத்துடனும் விரக்தியுடனும் கிளம்புகிறீர்களே... ஏம்ப்பு.. ஏன்?
நீங்க முகமூடி இல்லேன்னா, விட்டுபுட்டு போக வேண்டியதானேப்பு... அதவுட்டுப்புட்டு... கோபப்பட்டா... ஒருவேளை குறுகுறுக்குதோ...?

பரவாயில்லப்பு... உங்களுக்கு எஸ்ஓசி- மகஇகவுல, பிளேட்டை எப்படி திருப்பிப் போடுறதுன்னு, நல்லா...வே... டிரெய்னிங் கொடுத்திருக்காக...
***

அடுத்ததா, சீனாவை போற்றி புகழ்பாடவில்லை என்று கூறியதோடு //மாவோ தலைமையிலான சீனா அதிகார வர்க்கக் கும்பலிடம் போய் வெகுநாட்களாகி விட்டது// என்றும் வாக்குமூலம் தந்திருக்கிறீர்கள்...

அப்படின்னா, ஈழமக்களை கொன்றழிக்க ஆயுதம் கொடுத்த சீனாவைக் கண்டித்து எங்கேயெல்லாம் முழங்கினீர்களப்பு.... அதச் சொல்லுங்க...

அமெரிக்கா என்றவுடன் பாய்ச்சல் காட்டும் நீங்கள், சீனா என்றால் மட்டும் பதுங்குவது ஏனப்பு...? அதற்கு என்ன அர்த்தம்...?

இந்திய மாவோயிஸ்டுகளின் புகழை பாடவில்லை என்றும் சொல்கிறீர்களே... அப்படின்னா, போலி கம்யூனிஸ்டுகள அம்பலப்படுத்துற மாதிரி, அவங்களயும் தோலுரித்து, எங்கேயெல்லாம் நீங்கள் பேசியிருக்கிறார்கள்.... உங்களின் பு.ஜா. பு.க. கு.கூடையில் எத்தனை கட்டுரைகளைத் தீட்டியிருக்கிறீர்கள்... சொல்லுங்கப்பு...

எனக்கான பதிலிலும், வெகுநாசுக்காக, சீனாவையும், மாவோயிஸ்டுகளையும் போற்றிப் பாடவில்லை என்றுதான் கூறுகிறீர்களே தவிர, எல்லோரையும் போல அவர்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.... என்று கூறவில்லையே அப்பு...?

உங்களுக்கே உரிய "பிழைப்புவாதிகள்- போலிகள்" போன்ற வார்த்தைகள் மூலம் விமர்சிக்கலாமே... செய்வீர்களாப்பு....

செஞ்சாலும் செய்வீர்களப்பு....
நீங்கள் யாரைத்தானப்பு ஏத்துக்கிட்டீங்க....
உங்களத் தவிர எல்லோருமே அயோக்கியர்தானே....

பிடல் காஸ்ட்ரோவும், சாவேசும் கம்யூனிஸ்டுகள் கிடையாது...

சிபிஐ, சிபிஎம் கட்சியினர் போலி கம்யூனிஸ்டுகள்...

ரஜபக்சேவும் பாசிஸ்ட்... பிரபாகரனும் பாசிஸ்ட்....

காங்கிரசும், பாஜகவும் தரகு கூட்டம்...

ஆர்எஸ்எஸ்-ஐயும் பிடிக்காது... பெரியாரிய அமைப்புக்களையும் பிடிக்காது...

மாயாவதியையும் ஏற்க மாட்டோம்... திருமாவளவனையும் ஏற்க மாட்டோம்...

- இப்படி எஸ்ஓசி- மகஇக கும்பல், யாரைத்தான் விட்டுவச்சிருக்கு....

நல்லாருக்குப்பு.... உங்க பித்தலாட்ட அரசியல்.... இப்பிடியே மெய்ன்டென்ட் பண்ணுங்க...
தியாகு
மறுபடியும் உய்யலாலாவுக்கு

முகமூடிகள் பெயர் மாற்றி பேசுபவர்கள் எனும் உங்க ள் குற்றச்சாட்டுக்க்கு தகுந்த பதில் கொடுத்தால் உட்டுட்டு போகவேண்ட்\டியதுதானே உறுத்துதா என்பதுதான் உங்கள் பதில் சிரிப்புதான் வருது

அப்படி நீங்கள் சொல்வது அனைத்தையும் விட்டுட்டுதான் போகனும் உள்ளீடற்ற குற்றச்சாட்டுகளுக்கு போயிட்டு போகுதென்று விடவேண்டியதுதான்

//அப்படின்னா, ஈழமக்களை கொன்றழிக்க ஆயுதம் கொடுத்த சீனாவைக் கண்டித்து எங்கேயெல்லாம் முழங்கினீர்களப்பு.... அதச் சொல்லுங்க//

இவங்களை எதிர்த்து அவங்களை எதிர்த்து இப்படி எதிர்து எதிர்த்து எழுதினா போராட்டம் நடஹ்தினா யாரைத்தான் ஃநீங்கள் எதிர்க்கள யார்தான் உங்களூட நண்பன் என கேட்பீர்கள்

மீண்டும் வந்து எங்கே காங்கிரசை எதித்தீங்க எங்க பமக வை எதிர்த்தீங்கள் என கேட்பீங்கள்

உங்களுடைய கருத்துக்காக போராட்டம் நடத்த முடியாது அது தேவையற்ற சந்தர்ப்பவாத தன்மையுடையது இன்று ஜெயா மாமி பின்னே போகும் நாளை இன்னொரு மாமி பின்னே போகும் தமிழினவாதிகள் கருத்து

நீங்க பேசுவது உங்களுக்கு முரண்பாடாக தெரியவில்லை இதன் மூலம் சிந்தனையில் உள்ள முரண்பாடு அம்பலப்பட்டு போவது தெரிகிறதா உங்களுக்கு

நாங்கள் இந்திய ஆளும் கும்பலை சிங்களை ஆளும் கும்பலை மைய்யமாக எதிர்க்கிரோம்
புரச்சி
//
அடுத்ததா, சீனாவை போற்றி புகழ்பாடவில்லை என்று கூறியதோடு //மாவோ தலைமையிலான சீனா அதிகார வர்க்கக் கும்பலிடம் போய் வெகுநாட்களாகி விட்டது// என்றும் வாக்குமூலம் தந்திருக்கிறீர்கள்...

அப்படின்னா, ஈழமக்களை கொன்றழிக்க ஆயுதம் கொடுத்த சீனாவைக் கண்டித்து எங்கேயெல்லாம் முழங்கினீர்களப்பு.... அதச் சொல்லுங்க...

அமெரிக்கா என்றவுடன் பாய்ச்சல் காட்டும் நீங்கள், சீனா என்றால் மட்டும் பதுங்குவது ஏனப்பு...? அதற்கு என்ன அர்த்தம்...?

இந்திய மாவோயிஸ்டுகளின் புகழை பாடவில்லை என்றும் சொல்கிறீர்களே... அப்படின்னா, போலி கம்யூனிஸ்டுகள அம்பலப்படுத்துற மாதிரி, அவங்களயும் தோலுரித்து, எங்கேயெல்லாம் நீங்கள் பேசியிருக்கிறார்கள்.... உங்களின் பு.ஜா. பு.க. கு.கூடையில் எத்தனை கட்டுரைகளைத் தீட்டியிருக்கிறீர்கள்... சொல்லுங்கப்பு...//

கேள்விகள் அதிகம் கேட்டால் உய்யலாவுக்கு மண்டை சுரப்பு இளகிவிடுகிறது என்று தெரிகிறது.

சீனாவை மிக நேரடியாக விம்ர்சித்து அதனை எந்தவொரு முதலாளித்துவ நாட்டை போலவே விமர்சித்து பல கட்டுரைகள் புதிய ஜனநாயகத்தில் வந்துள்ளன.

மாவோயிஸ்டுகளை விமர்சனம் செய்து பல கட்டுரைகள், வெளியீடுகள் வந்துள்ளன. இதே இணையத்தில் இவையணைத்தும் கடுமையான விவாதங்களுக்கு ஆளாகியுள்ளன.

தமிழ் தேசிய வியாதிகளின் கட்டுரைகளில் குதர்க்க பின்னூட்டம் மட்டுமே இடும் உய்யால போன்றவர்களுக்கு இவை தெரிந்திருக்க நியாயம் இல்லை.

உய்யாலவின் பொய்கள் என்று தியாகு சுட்டிக் காட்டியுள்ளதில் வெளிப்படும் உய்யாலாவின் அரசியல் ஞானம் மேலே நான் சொல்லியுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.

மேலும், ஈழப் பிரச்சினையில் இந்தியாவை முதன்மையாக வைதத்ு எதிர்க்கவில்லை என்றார்கள். இந்தியாவைத்தான் நாங்கள் முதன்மையாக எதிர்த்தோம் என்றவுடன் இப்போது சீனாவை இழுக்கிறார்கள்.

அய்யா உய்யாலா, சீனா, இந்தோனேசிய, மற்றும் பல கிழக்காசிய லத்தீன் அமெரிக்க, மேல்நிலை, கீழ்நிலை வல்லரசு கில்லரசு நாடுகள் எவையெல்லாம் ஈழப் போரில் ஈடுபட்டனவோ அவையணைத்தையும் நாங்கள் அம்பலப்படுத்தியுள்ளோம்..

ஆனால் இதே நேரத்தில் ஆர் எஸ் எஸ்க்கு கூஜா தூக்குவது, வ. கீதா போன்ற பார்ப்பனர்களுடன் குலாவிக் கொண்டே இன்னொரு பக்கம் மறைமுக பார்ப்பனியம் என்பது, தமிழ் தேசியம் என்ற பெயரில் இந்துத்துவ பார்ப்பன மதத்துக்கு காவடி தூக்குவது, ஈழப் பிரச்சினையில் இந்திய அரசை அம்பலப்ப்டுத்த விடாமல் மக்களை மடை மாற்றி போராடுவது என்ற பித்தலாட்டங்கலை நீங்கள் செய்துள்ளது குறித்த எமது ஆதாரங்களுக்கு உய்யாலா உய் என்று எஸ்கேப் ஆகிறார்.

புரச்சி
புரச்சி
///
பிடல் காஸ்ட்ரோவும், சாவேசும் கம்யூனிஸ்டுகள் கிடையாது...

சிபிஐ, சிபிஎம் கட்சியினர் போலி கம்யூனிஸ்டுகள்...

ரஜபக்சேவும் பாசிஸ்ட்... பிரபாகரனும் பாசிஸ்ட்....

காங்கிரசும், பாஜகவும் தரகு கூட்டம்...

ஆர்எஸ்எஸ்-ஐயும் பிடிக்காது... பெரியாரிய அமைப்புக்களையும் பிடிக்காது...

மாயாவதியையும் ஏற்க மாட்டோம்... திருமாவளவனையும் ஏற்க மாட்டோம்.../////

மேலே உள்ளவர்களில் தமிழ் தேசிய வியாதிகளுக்கு யாரையெல்லாம் பிடிக்கும்?

நேற்று வரை காங்கிரசு பிடிக்கும்
இன்றைக்கு பாஜக பிடிக்கும்
நேற்று செயா மாமி பிடிக்கும்
ஆர் எஸ் எஸ் கள்ளத்தனமா பிடிக்கும்
இவர்களுக்கு பெரியார் ஒரு ஊறுகாய்
பிடல் காஸ்ட்ரோவும், சாவேசும் கம்யுனிஸ்டுகள் அப்படியே இவர்களுக்கு யாரெல்லாம் பிடிக்காதோ அவர்களெல்லாம் கம்யுனிஸ்டுகள்

இப்படி ஒரு கதம்பவாத தத்துவம் கொள்கை கண்ணோட்டமற்ற கும்பலுக்கு பெயர்தான் தமிழ் தேசிய வியாதிகள் கழகம்

வாழ்த்துக்கள்
புரச்சி
//உங்களத் தவிர எல்லோருமே அயோக்கியர்தானே....//

இப்படி நாங்க சொன்னமா? நாங்க சொல்லாததை சொன்னதா சொல்லித்தான் உங்க பித்தலாட்டங்களை அரங்கேற்ற வேண்டியிருப்பது உங்களது அரசியல் ஓட்டாண்டித்தனத்தையே காட்டுகிறது.

//
பிடல் காஸ்ட்ரோவும், சாவேசும் கம்யூனிஸ்டுகள் கிடையாது...

சிபிஐ, சிபிஎம் கட்சியினர் போலி கம்யூனிஸ்டுகள்...

ரஜபக்சேவும் பாசிஸ்ட்... பிரபாகரனும் பாசிஸ்ட்....

காங்கிரசும், பாஜகவும் தரகு கூட்டம்...

ஆர்எஸ்எஸ்-ஐயும் பிடிக்காது... பெரியாரிய அமைப்புக்களையும் பிடிக்காது...

மாயாவதியையும் ஏற்க மாட்டோம்... திருமாவளவனையும் ஏற்க மாட்டோம்...///

மேலே சொன்னதில் பெரியாரிய அமைப்புகளை பிடிக்காது என்று நாங்கள் சொன்னதற்கு என்ன ஆதாரம் உள்ளது? எதுவும் கிடையாது. கட்டுரைகளிலேயே முழுவதும் பொய்யையும் புரட்டையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எழுதும் இந்த வியாதிகள் பின்னூட்டங்களில் பொய் சொல்லுவது ஒன்றும் ஆச்சர்யமான விசயமல்ல.

மேலும் திருமாவளவனுடன் ஆரம்ப காலங்களில் மிக நெருங்கி இணைந்து செயலபட்டவர்கள் ம க இ கவினர். அவர் தேர்தல் அரசியல் நுழைந்த பிறகும் கூட இந்த நெருக்கம் தொடர்ந்தது. என்றைக்கு அவர் தலித்திய அரசியலை கைகழுவி அதன் அடுத்த கட்டமான் பிழைப்புவாத, கட்டபஞ்சாயத்து அரசியலுக்கு சென்றாரோ அன்றைக்குத்தான் முரன்பாடு முற்றியது. இதில் தவறொன்றும் இல்லையே? சரிதான் செயா மாமி, ஆர் எஸ் எஸ் கூஜா நெடுமாறன், மறைமுக பார்ப்பன பாத தாங்கி பெ மணியரசன் இவர்களுடன் சந்தர்ப்பவாதத கூட்டணி காணும், தமிழ் தேசியவியாதிகளுக்கு ம க இ க போல கறாராக விமர்சனம் செய்து அனுகும் நேர்மையான் முறை உவக்காதுதான்.

பொய்யை நம்பி புலவர் பட்டும் பெற விரும்புபவருக்கு சிறந்த இடம் தமிழ் தேசிய வியாதிக் கழகம் எனபது இதுவரையான பின்னூட்டங்களின் மூலம் தெரியவந்திருப்பது நல்ல விசயம்

புரச்சி
உய்யலாலா
தியாகு... புர..ச்சி..க்கு....

யப்பு, ஏன் இப்படி ரத்தக்கொதிப்பு இருக்குறது போல, கொதிக்கிறீக...

ஒரு பின்னூட்டம் போட்டால், பதிலுக்கு, அடுத்தடுத்து எவனும் உள்ளேயே நுழைய முடியாதபடி, பின்னூட்ட வெறிபிடித்து, பிய்த்து எறிகிறீர்களேயப்பு....

''வசவாளர்கள் கூட்டமான நம்மளயே இப்படி வறுத்தெடுக்குறாய்ங்ஞளே''ன்னு உள்ளுக்குள்ள புளுங்குதா... இல்ல, தொடர்ந்து இப்படி ஆப்படிக்கிறாய்ங்ஞளேன்னு பதட்டமாகுதா...?

அதான் ''எனது குற்றச்சாட்டுக்கள் எல்லாம் உள்ளீடற்றவை'' என்று கூறிவிட்டீர்களே..
பிறகெதுக்குப்பு... பின்னூட்டம் என்ற பெயரில் வரிசையாக பினாத்தல்களை அடுக்கி, கூப்பாடு போடணும்...?

"தேர்தல் பாதை திருடர்கள் பாதை" என்று முக்காலும் உணர்ந்து ஓதிய நீங்கள், //திருமாவளவனுடன் ஆரம்ப காலங்களில் மிக நெருங்கி இணைந்து செயல்பட்டவர்கள்தான் மகஇகவினர். அவர் தேர்தல் அரசியலில் நுழைந்த பிறகும் கூட இந்த நெருக்கம் தொடர்ந்தது//என்று கூறுவதில் இருந்தே, உங்களின் யோக்கியதை பல்லிளிக்கிறதேயப்பு...

இது ஒன்று போதாதா, உங்களின் பித்தலாட்டத்திற்கு...
இவான்
////////////பறையர் சமூகத்தை, அதனால் இவர்களுக்கு உண்டான சில குணக்கோளாறுகளை//////////////

ஆதிக்க சாதி வெறியர்களின் குணக்கோளாறுகளை பற்றி பேச வக்கில்லை! இவர்களெல்லாம்........
பறையன் பற்றி பேச வந்து விட்டார்கள்...
பறையன் என்று சொல்லும் நாக்கு, தேவர் சாதி வெறியன், வன்னிய சாதி வெறியன், பிள்ளை சாதி வெறியன் பற்றி பேசாத மர்மம் என்னவோ?

ஆதிக்க சாதி வெறியை தகர்த்தெறிய சொன்னால், ஒடுக்கப்பட்ட மக்களும், தலித்துகளும் கூட பார்பனர்கள் தானா?

==============

டாக்டர் பாண்டியன்,

நீங்கள் ஏன் எப்போதும் சம்பந்தா சம்பந்ம் இல்லாமல் பேசுகிறீர்கள்?

நாங்கள் எந்த கருத்தை பதிந்தாலும், பினூட்டமிட்டாலும், உஙளுக்கு பதில் சொல்லி, கேள்விகள் கேட்டாலும், ஏன் உங்களுக்கு உகந்ததை மட்டும் எடுத்து கொண்டு பதிலளிப்பது போல நடிகிறீர்கள்? (அல்லது) ஏன் திரித்து பதிலளிகிறீர்கள்?

நேர்மையாக விவாதத்திற்க்கு வரவும்!

(இதுக்காவது திரிக்காமலும், தனக்கு உகந்ததை மட்டும் எடுத்துகொள்ளாமலும் பதிலளிப்பார் என்று நம்புவோமாக..)
Superlinks
வாழ்த்துக்கள் தோழர் புரச்சி
என்னைப் போன்றவர்களுக்கு அதிக நேரம் கிடைப்பதில்லை அதற்கும் சேர்த்து நீங்களே தமிழினவாதிகளை ஒரு வழி பன்னுங்கள்.
அடித்து துவைக்க வாழ்த்துக்கள்.:-)
Dr. V. Pandian
"இவான்"!
நான் சொன்னதை அப்படியே தவறாமல் நிரூபிக்கிறீர்கள். எம்மக்களை, சிறுபாண்மை வகுப்பைச் சேர்ந்த நீங்கள், சிண்டு முடித்து பிறித்தாள முயல்கின்றீர்கள் என்று நான் சொன்னதை அப்படியே அச்சு அசலாக நிறுவுகிறீர்.

"அடிப்படைவாத" சிந்தனை கொண்ட உங்களுக்கு எம்மக்களின் மீதுள்ள "கரிசனம்" அப்பப்பா! அபாரம்! அபாரம்!!

பெண்களைக் கறுப்பங்கிக்குள் ஒடுக்கிவைத்து, அடிமைப்படுத்தி ஆளும் நீர், உமது வீட்டைச் சரிசெய்து கொண்டு பிறகு அடுத்தவன் சிக்கல்களில் தலையிட வேண்டும்.

சாத்தான் வேதம் ஓதுகிறதய்யா!

நான் எழுதியதிலிருந்து, ஒரே வாக்கியத்தில் உள்ள ஒரு பகுதியை மட்டும் பிரித்தெடுத்து, என்னை வம்பில் மாட்டிவிடத் துடிக்கும் உமது அயோக்கியத்தனம் அபாரம், அபாரம்!

எடுபடாது தோழரே!

இக்கட்டுரைக்கான எனது பின்னூட்டங்களை படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். ஒருவன் எழுத்துக்களிலிருந்து அவன் நேர்மையாக எழுதுகிறானா இல்லையா என்று புரிந்துகொள்ள முடியும். எம்மக்கள் அம்மாஞ்சிகளாக வாழந்த காலம் மலையேறி விட்டது.

சரியாகச் சொல்கிறேன் கேளும்! உலகில் உள்ள ஒவ்வொரு மக்கள் சமூகத்துக்கும் குணக்கேடுகள் உண்டு. இது அவர்கள் வாழந்த சூழல் காரணமாக வந்தவை. சில சூழல்கள் இயற்கையானவை. வரண்ட பாலைவனப் பகுதியில் வாழ்ந்த அரேபியர்கள் ஒருவனை ஒருவன் அடித்துப் பிடுங்கிக் கொண்டு, அடுத்தவன் பொருட்களை அபகரித்துக் கொண்டதால் தான், அந்தக் குணக்கேடுகளின் எச்சங்கள் இன்றும் தொடர்கின்றன. இது ஒரு சான்று.

சில சூழல்கள் செயற்கையானவை. தாழத்தப்பட்ட மக்கள் நிரத்தின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டு, ஒரு செயற்கையான வருமையில் ஆண்டாண்டு காலமாய் வாழப் பணிக்கப்பட்டார்கள். அதனாலும் சில குணக்கேடுகள் உருவாயின என்பது ஒரு அறிவியல் உண்மை.

நான் எம்மக்கள் யாரையும் சாதிப் பெயர்சொல்லிச் "சாடுவது" கிடையாது. அது மேலும் பிரிவினையைத் தான் உண்டாக்கும். உமக்கு, நான் மேலே சொன்னது போல, இனிக்கும் தான். ஆனால், அத்தகைய சாடல் எம்மக்களைப் பிரிக்கும். எம் சமூகத்தை சீரமைக்க, உம்மைப் போன்ற எதிரிகளிடம், பாடம் கற்கவேண்டிய அவசியம் இல்லை.

எனவே, நான் சமூகத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டுகிறேன். எமது சமூகம் மாறிக்கொண்டு வருகிறது. உம்மைப் போன்ற சிறபாண்மையினர் அந்த மாற்றத்தை விரும்பாமல், சிண்டு முடித்து விடுவதிலேயே குறியாய் இருக்கிறீர்கள்.
Dr. V. Pandian
தோழர்களே!
ஏறத்தாழ கடந்த இரண்டு ஆண்டுகளாக, கீற்றில் பதிவுகள் எழுதி வருகிறேன். இது வரை, தன்னிச்சையாக நான் இஸ்லாமியர்களைப் பற்றி எதுவுமே எழுதவில்லை. அதற்காண காரனம் அந்தச் சமூகம், தனது சிக்கல்களை தானே சீர்செய்து கொள்ளட்டும் என்பதால் தான். வேற்று சமூகம் அவர்களுக்கு அறிவுரை சொன்னால் அது எதிர்மறை விளைவுகளைத் தான் உருவாக்கும்.

இதற்கு சான்றாக பெரியாரின் நிலைப்பாட்டைச் சொல்லலாம். அம்பேத்கர் பெரியாரையும் பௌத்தத்திற்கு மாறவேண்டி வர்ப்புறுத்தினார். அதற்கு பெரியார் சொன்ன மறுப்பு சிறப்பானது. அவர் சொன்னார், நான் பெேளத்தத்திற்கு மாறியபின் இந்து மதத்தைப் பற்றிப் பேசினால், பௌத்தனான உனக்கு எங்கள் இந்து மதத்தைப் பற்றிப்பேச தகுதியில்லை என்பான். எனவே, இங்கே இருந்து கொண்டு கலகம் செய்வதுதான் சவுகரியம் என்றார்.

எனவே தமிழர்களின் சிக்கலில் இந்த "இவான்கள்" தலையிடுவது நமக்குக் குமட்டலைக் கொடுக்கிறது. தமது முதுகில் ஆயிரம் அழுக்கு வைத்துக்கொண்டு இவர்கள் நமக்கு பாடம் எடுக்க வருவது அபத்தம்.

எனவே, அவனவன் அவனவனது சிக்கல்களைக் கவனிப்பது தான் முறை. இல்லை என்றால் உண்மைகளைச் சொல்லி நாறடித்து விடுவோம்.

நான் நக்கீரன் பறம்பரை! எச்சரிக்கிறேன்!
புரச்சி
//
ஆனால் இதே நேரத்தில் ஆர் எஸ் எஸ்க்கு கூஜா தூக்குவது, வ. கீதா போன்ற பார்ப்பனர்களுடன் குலாவிக் கொண்டே இன்னொரு பக்கம் மறைமுக பார்ப்பனியம் என்பது, தமிழ் தேசியம் என்ற பெயரில் இந்துத்துவ பார்ப்பன மதத்துக்கு காவடி தூக்குவது, ஈழப் பிரச்சினையில் இந்திய அரசை அம்பலப்ப்டுத்த விடாமல் மக்களை மடை மாற்றி போராடுவது என்ற பித்தலாட்டங்கலை நீங்கள் செய்துள்ளது குறித்த எமது ஆதாரங்களுக்கு உய்யாலா உய் என்று எஸ்கேப் ஆகிறார்.//

உய்யாலா, மேல உள்ளதை மறந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். உங்களது பித்தலாட்டத்தை, கவாளித்தனத்தை அம்பலப்படுத்தும் மேலே உள்ள கேள்வியை பல இடங்களில் பின்னூட்டமிட்டுவிட்டேன். ஆனால் மிக எச்சரிக்கையாக உய் என்று எஸ்கேப் ஆகிறீர்கள்.

உங்கள் பயம் எமக்கு புரிகிறது. பயப்படாதீங்க ரொம்பவும் கேவலமாக அம்பலப்படுத்தப் போவதில்லை.

எங்க, பதில் சொல்லுங்க.. 1.. 2.. 3...

புரச்சி
புரச்சி
//வாழ்த்துக்கள் தோழர் புரச்சி
என்னைப் போன்றவர்களுக்கு அதிக நேரம் கிடைப்பதில்லை அதற்கும் சேர்த்து நீங்களே தமிழினவாதிகளை ஒரு வழி பன்னுங்கள்.
அடித்து துவைக்க வாழ்த்துக்கள்.:-)//

இவிங்கள்ளாம் தமிழினவாதிகளா?

தோழர் சூப்பர்லிங்க், இவிங்க்ள்ளாம் ஒன்னத்துக்குமில்லாத வேஸ்டுங்க. கழிசடைங்க. தமிழ், தமிழினம், தமிழ் தேசியம் இவற்றுக்கு உண்மையிலேயே நல்லது செய்வது என்கிற அம்சத்தில் ஒரு மசிரைக் கூடப் பிடிங்கிப் போட்டதில்லை. மாறாக, இவையெல்லாம் இவர்களின் பிழைப்புக்கான சாதனமாக மட்டுமே எஞ்சியுள்ளன.

புரச்சி
புரச்சி
//எனவே தமிழர்களின் சிக்கலில் இந்த "இவான்கள்" தலையிடுவது நமக்குக் குமட்டலைக் கொடுக்கிறது. தமது முதுகில் ஆயிரம் அழுக்கு வைத்துக்கொண்டு இவர்கள் நமக்கு பாடம் எடுக்க வருவது அபத்தம்.//

ஆக, இவரது கணக்கில் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் முஸ்லீம்கள் தமிழர்கள் இல்லையாம்.

என்னே அன்னாரின் சமூக ஆய்வு கண்ணோட்டம்.

இதுதான் பார்ப்பனியம், கோயில்களை, பார்ப்பனிய பண்பாட்டை தமிழன் பண்பாடு என்று மென்மையாக வருடுவது, அப்படியே இது போல இந்துத்துவத்தின் குரலை வேறு மாதிரி பேசுவது இவையெல்லாம்தான் பார்ப்பனியம்.

பாண்டியன் அவர்களே பார்ப்பனியம் ம க இ கவின் தலைமையில் இல்லை ஏனேனில் மருதையன் ம க இ கவின் செயலாளர் மட்டுமே. ம க இ கவை இயக்குவதும் அதன் கருக்குழு அதில் பார்ப்பனியத் தலைமை கிடையாது. ஆனால் உண்மையில் பார்ப்பனியம் பாண்டியனின் மண்டைக்குள் உட்கார்ந்திருக்கிறது.

புரச்சி
இவான்
டாக்டர் பாண்டியன்,

வட்ட மேசை மாநாட்டில் ஒடுக்கப்பட்டோருக்கு இரட்டை வாக்குரிமையை கோரிய தலைவர் டாக்டர்.அம்பேத்கரையும் 'மனுவாதிகள்' இந்துக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாக தான் குற்றம் சுமத்தினர் என்பதை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். சரி அதை விடுங்கள், நாம் விவாதத்திற்க்குள் வரலாம்!

"பறையர்" என்று ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெயரை முதலில் பயன் படுத்தியது நீங்கள் தான் என்பதையும், அதை சொன்ன உங்களது நாக்கு (பேனா, கீ போர்டு) ஏன் ஆதிக்க சாதியை சாடவில்லை, ஏன் பெயரைக்கூட பயன் படுத்தவில்லை என்பதையுமே எனது கேள்வியாக கேட்டிருந்தேன்!

மேலும்

"பறையர் சமூகத்தை, அதனால் இவர்களுக்கு உண்டான சில குணக்கோளாறுகளை, ஆதரவோடும், பரிவோடும் நாம் அனுக வேண்டும். குற்றமிழைத்தவர்கள் அனைத்து மேல் சாதியினரும் தான்"

- எனும் நீங்கள் மேல் சாதியினருக்கு (சாதிவெறி போன்ற) குணக்கோளாறுகளே இல்லை என்கிறீர்களா?, பின் ஏன் அவர்களது குணக்கோளாறுகளை பற்றியோ, அவர்களது சாதிபெயரை பயன் படுத்தக்கூட இல்லை என்பதில் இருந்து தான் எனது கேள்வியை எழுப்பி இருந்தேன்.

இதற்க்கு நான் சாதி வெறியை, பிரிவினையை தூண்டுவதாக பதிலளித்துள்ளீர்கள். எனது கேள்விக்கு இதுவா பதில்?? இது திசைதிருப்பல்...

நேர்மையாக பதிலளிக்க வேண்டுகிறேன்.

அடுத்ததாக, ஐயா, இவான் எனது புனை பெயர் உண்மை பெயர் அல்ல!

"Ivan's Childhood" என்ற ரசிய படத்தில் வரும் நாயகனான சிறுவனின் பெயரும், பாத்திரமும் எனக்கு பிடித்திருந்ததால் அப்பெயரை வைத்துக்கொண்டேன்!

மீண்டும் சொல்கிறேன். நான் ஒரு கம்யூனிஸ்ட்.
கம்யூனிஸ்டுகளுக்கு மதமில்லை, இனமில்லை, சாதியில்லை, தேசமும் இல்லை. வர்க்கம் மட்டுமே உண்டு!

இன்னும் அரை குறை நம்பிக்கை இருக்கிறது, இதிலுள்ள எதையும் கொண்டு திசைதிருப்பாமல் நேர்மையுடன் பதிலளிப்பீர்கள் என்று....

-இவான்
இவான்
////////அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியின் நூலை 50 படிகள் வாங்கி நன்பர்களுக்குப் பரிசளித்தேன். நான் ஏற்கனவே சொன்னேன். பாரப்பாரிடத்திலும் நல்லோர் உண்டு! அவர்கள் ஒரு சிறுபாண்மையினர். அவ்வளவே! எனது அணி பெரியார் முழக்கம் பக்கம் தான். நிச்சயமாக!/////

அப்படி இருக்கும் பட்சத்தில் தோழர்.மருதையனின் நடைமுறையில் எதை பார்ப்பனியமாக கண்டீர்கள்?

பார்பனீயத்தை வாழ்வில் கடைபிடித்துக்கொண்டே, ஒரு வரைமுறைக்குட்பட்டு விமர்சிக்கும் தாத்தாச்சாரி உமக்கு பார்ப்பனராக தெரியவில்லை! மாறாக பார்பனீயத்தை சமரசமின்றி எதிர்த்து போராடும் மருதையன் பார்பனர். இது யாருடைய கோளாறு?

(பார்பனீயத்தை சமரசமின்றி எதிர்த்து என்ன போராட்டம் என்று கேட்க்க மாட்டீர்கள் என்று நம்புக்கிறேன்!)

/////உண்மைகளைச் சொல்லி நாறடித்து விடுவோம்.
நான் நக்கீரன் பறம்பரை! எச்சரிக்கிறேன்!/////

எழுதுங்களேன் யார் வேண்டாம் என்றது???

/////ஏறத்தாழ கடந்த இரண்டு ஆண்டுகளாக, கீற்றில் பதிவுகள் எழுதி வருகிறேன். இது வரை, தன்னிச்சையாக நான் இஸ்லாமியர்களைப் பற்றி எதுவுமே எழுதவில்லை. அதற்காண காரனம் அந்தச் சமூகம், தனது சிக்கல்களை தானே சீர்செய்து கொள்ளட்டும் என்பதால் தான். வேற்று சமூகம் அவர்களுக்கு அறிவுரை சொன்னால் அது எதிர்மறை விளைவுகளைத் தான் உருவாக்கும்./////

என்னை மத முத்திரை குத்துவதை நிறுத்துங்கள் ஐயா. நான் கம்யூனிஸ்ட் மத சாக்கடைக்குள் திளைப்பவன் அல்ல.

யார் உங்களை விமர்சித்தாலும், அவரின் தனிப்பட்ட விடயத்தை தான் ஆராய்வீர்களோ?

பார்ப்பன தலைமை, இப்போது நான் இஸ்லாமியன்!!! ம்ம் இன்னும் என்ன வெல்லாம் வருமோ, எங்களுக்கு பயமாக இருக்கிறது! :-)

ஏன் உங்களுக்கு நான் இஸ்லாமியன் என்ற அய்யம் வந்ததோ என்று எண்ணும் போதே சிரிப்பு வருகிறதய்யா....!!

ஆதிக்க சாதிகள் பற்றிய உண்மையை நாங்கள் பேசினால், உண்மையை சொல்லி நாறடித்துவிடுவோம் என்கிறீர்!

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல உள்ளதய்யா உங்கள் பேச்சு...

//////இக்கட்டுரைக்கான எனது பின்னூட்டங்களை படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்./////

உங்கள் அமைப்பையோ, தமிழ் தேசியத்தையோ சேராத பொது வாசகரை கேட்டால் தெரிந்துவிடும் உண்மை!!!

நாங்கள் "இதுவரை எதுவுமே செய்யாத தமிழ் தேசியர்கள்" என்ற எனது குற்றசாட்டு/கேள்விக்கு மட்டும் பதிலளிக்காமலும், ம.க.இ.க வின் போராங்களை வரிசை படுத்தியிருந்தும் அதை மட்டும் லாவகமாக தவிர்த்து விட்டு பதிலளிப்பதும் உங்களுக்கே தெரியும் போது, பொது வாசகரை இப்படி நீங்கள் முட்டாளாக கருதக்கூடாது!

//////எனவே தமிழர்களின் சிக்கலில் இந்த "இவான்கள்" தலையிடுவது நமக்குக் குமட்டலைக் கொடுக்கிறது. தமது முதுகில் ஆயிரம் அழுக்கு வைத்துக்கொண்டு இவர்கள் நமக்கு பாடம் எடுக்க வருவது அபத்தம்.////////

நன்றாக இருக்கிறதய்யா உங்களின் வாதம். உங்களிடம் பிரச்சனை/அழுக்கு இருப்பதை சுட்டிக்காட்ட முயன்றால், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் உன் அழுக்கு என்று திசை திருப்புவீர்களா? இது தான் பகுத்தறிவோ?

சரி! உங்களிடமும் அழுக்கு இருப்பதாக இதன் மூலமாகவாவது ஒத்துக்கொண்டதற்க்கு நன்றி!

வாழ்க தமிழ் (கருப்பு) பார்ப்பனீயம்!
Dr. V. Pandian
கான்ஸ்ட்டான்ட்டைன் பெஸ்கி என்ற இத்தாலியர், ஏறத்தாழ 350 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்தார். கிருத்துவத்தைப் பரப்ப. இங்கு வந்து தமிழையும், இம்மன்னின் பண்பாட்டையும் கண்டு வியந்த அவர், தனது பெயரை "தைரிய நாதன்" என்று மாற்றிக்கொண்டார். அந்தப் பெயர் தமிழ் என்று நம்பியதால். பிறகு அது சமஸ்கிருதப் பெயர் என்று தெரிந்தவுடன் தனது பெயரை, "வீர மா முனிவர்" என்று தூய தமிழில் மாற்றிக் கொண்டார். அவர் கிருத்து புகழ்பாடும் காப்பியமும் தமிழில் செய்தார். அதைவிட, அவர் தமிழுக்கு இலக்கண நூல் எழுதினார். தமிழுக்கு எழுத்து சீர்திருத்தமும் செய்தார்.

இந்த நிகழ்விலிருந்து நாம் உணரும் செய்திகள் என்ன? தமிழை தனது மொழிபோல நேசித்தார்.

அடுத்த முக்கியமான செய்தி:

மதம் ஒரு கருத்தியல். ஒருவனின் பெயருக்கும் அவன் சார்ந்த மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆகையினால், கிருத்து மதத்தின் பீடமான இத்தாலியிலிருந்து வந்திருந்தாலும், அவர் ஒரு கிருத்துமத போதகராக இருந்தாலும், தான் அடிப்படையில் ஒரு இத்தாலிக்காரராக இருந்தாலும், தனது பெயரை தமிழில் மாற்றிக் கொள்வதை சரியானதாக நிலைநாட்டினார்.

இப்போது விடயத்திற்கு வருவோம். "இவான்" அவர்களை நான் தமிழுக்கு அப்பால் வைத்து சாடியிருந்தேன். ஏன்? அவரது பெயர்! அவர் இஸ்லாமியரா, கிருத்துவரா அல்லது நான்றியாத வேறு மதமா எனக்குத் தெரியாது. இப்போதும் அவர் தமிழரா இல்லையா என்றும் எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர் ஒரு இந்தியராகத் தான் இருக்கவேண்டும்.

ஆனால், 350 ஆண்டுகளுக்கு முன்பே, வீரமா முனிவருக்கு இருந்த பகுத்தறிவு, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்த இவருக்கு இல்லை.

இவர் தமிழரல்லாத இந்தியராக இருந்தால், நான் முன்பே சாடியபடியே, உம் தொழிலைப் பார்த்தாலே போதும் என்ற சாடுதல் பொருந்தும்.

இவர் தமிழர் தான் என்றால், மிக அடிப்படையான, பெயரில் கூட தமிழ் இல்லாத இவர், உளவியல் ரீதியாகத் தன்னை தமிழராக உணரமுடியாத இவர், தானும் தனிமைப்பட்டு (மத ரீதியாக), தமிழர்களைப் பிரித்தாலும் சூழ்ச்சியில் ஈடுபடுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு, அவரது எழுத்துகள் மூலமாகவே உள்ளாகிறார்.

தமிழருக்குள் அழுக்குகள் ஏறாளம். அதை எங்களால் களைந்து கொள்ள முடியும். அது ஒரு பக்கம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இன உணர்வில்லாத நீர் ஒதுங்கி இருப்பது தான் மேல்.

இஸ்லாத்தைக் விமரிசித்து எழுதினீரா? பெந்தகோஸ்தைக் கண்டித்து எழுதினீரா?

முதலில் அவற்றைச் செய்துவிட்டு, உங்களின் யோக்கியதையை நிறுவிவிட்டு, பிறகு இங்கு வாரும்.
Dr. V. Pandian
இவான் அவர்களுக்கான பதிலை அனுப்பியபின்பு தான் அவரின் பெயர் புனைந்து கொண்டது என்று அதற்குப் பின்பு வந்த அவரது பதிலில் தெரிந்து கொண்டேன். அதை அவர் முன்பே சொல்லி இருந்தால் எனது நேரம் சற்று மிச்சமாயிருக்கும். இருந்தாலும் நான் எழுதிய கருத்துக்கள் எல்லோருக்குமான விழிப்புணர்வு கருத்து தான். இதை முன்பே, ஒரு CPM இஸ்லாமிய தோழருக்கு எழுதி, அவர் என்னை இந்துத்வா கோல்வால்கருடன் இணைத்துப் பேசி, பிறகு எனது தௌிவான நிலைப்பாட்டை விளக்கினேன். நிற்க.

நான் எழுதியவற்றையும், இவான் எழுதியவற்றையும் முழுமையாகப் படிக்கின்றவர்கள் இருவரது கருத்தக்களையும் சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ளட்டும்.

இவர் தனக்கு மதமில்லை. சாதியில்லை என்கிறார். மிக்க நன்று.

ஆனால், தேசமில்லை என்கிறார். இனமில்லை என்கிறார்.

அப்படிப்பட்ட முதிரச்சி அவரது எழுத்துக்களில் இல்லவே இல்லை! சத்தியமாக இல்லை!

ஒவ்வொருவருக்கும் ஒரு பின்புலமுண்டு. நான் தமிழன். அதனால் தான் தமிழனுக்காக இவ்வளவு சிறத்தை எடுத்து எழுதுகிறேன்.

இவரது பினபுலம் எது?

இந்த "சர்வதேசிய மஹாத்மா" தனது சொந்த நாட்டு மக்களை, திரித்துப் பேசி, சிண்டு முடித்துவிட முயல்கிறார்.

இனம், சாதி, மதம், தேசம் கடந்த இந்த "மஹாத்மா" தனது எழுத்தக்களால் தன்னை ஒரு "ஹீனாத்மா" வாகத்தான் நிரூபிக்கிறார்.

அவரது எழுத்தக்களே அதற்கு சாட்சி!
உய்யலாலா
"தேர்தல் பாதை திருடர்கள் பாதை" என்று முக்காலும் உணர்ந்து ஓதிய நீங்கள், //திருமாவளவனுடன் ஆரம்ப காலங்களில் மிக நெருங்கி இணைந்து செயல்பட்டவர்கள்தான் மகஇகவினர். அவர் தேர்தல் அரசியலில் நுழைந்த பிறகும் கூட இந்த நெருக்கம் தொடர்ந்தது//என்று கூறுவதில் இருந்தே, உங்களின் யோக்கியதை பல்லிளிக்கிறதேயப்பு...

இதற்கு நீங்க பதில் சொல்லீட்டீங்களாப்பு...

***

அப்புறம்ப்பு... தமிழ்த் தேசியர்கள் ஒரு மசிரைக் கூட புடுங்கினதில்லை என்று சொல்லீட்டீக...
நீங்களே சொன்ன பின்னாடி ஏத்துக்கிட்டுத்தான ஆகணும்... இல்லனோ விடுவீகளா...?

எனவே, தமிழ் மக்களே இனிமேல் தமிழ்த் தேசியர்களை விட்டுவிட்டு, எல்லோரும் எஸ்ஓசி- மகஇக கும்பலிடம் போங்கள்.... அவர்கள் உங்களுக்கு நன்றாக புடுங்குவார்கள்....
தியாகு
////திருமாவளவனுடன் ஆரம்ப காலங்களில் மிக நெருங்கி இணைந்து செயல்பட்டவர்கள்தான் மகஇகவினர். அவர் தேர்தல் அரசியலில் நுழைந்த பிறகும் கூட இந்த நெருக்கம் தொடர்ந்தது//என்று கூறுவதில் இருந்தே, உங்களின் யோக்கியதை பல்லிளிக்கிறதேயப்பு...

இதற்கு நீங்க பதில் சொல்லீட்டீங்களாப்பு//

என்ன பதில் சொன்னாலும் அதற்கு பின்னூட்ட வெறின்னு சொல்வீங்க போங்க ராசா உங்கள மாதிரி அறிவாளி கூட பேச முடியாதுன்னு ஒத்துகிறோம்
மானுமுள்ள சுயமரியாதைக்காரன்
அதிரடியா இல்ல அடிவருடியா? ஏம்பா இந்த அடிவருடியான் கட்டுரை எழுதறதோட சரியா? பின்னூட்டத்துக்கு பதில் சொல்ல மாட்டாறா இல்ல விவாதிச்சா தேசிய கோவணம் வெளிய தெரியும் என்கிற பயமா?
இப்படிக்கு
மானுமுள்ள சுயமரியாதைக்காரன்
யோகேஷ்
மகஇகவை விமர்சிப்பது இருக்கட்டும், முதலில் நெடுமாறன், வைக்கோ,மற்றும் தமிழ் தேசியவாதிகளின் கழுத்தறுப்பு வேலைகளைப்பற்றி எழுதுங்கள் நண்பர்களே!
durai ilamurugu
இப்பொது தமிழ் தேசியர்கள் ராஜார சோழ்னனுக்கு 1000ஆண்டு விழா எடுக்கப் போகிரர்கலாம். இது என்ன தமிழ் தேசியமா? அல்ல்து பர்ப்பன தேசியமா? சொல்லுஙக அய்யாமர்களே
செந்தமிழ்ப்பாணன்
தத்துவார்த்த நிலைப்பாடு இல்லாத ஒரு அமைப்பு ம.க.இ.க என்பது பலபேருக்கு தெரியாது. மற்ற கம்யுனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடுகையோ, பத்ரிகைகளையோ,புத்தகங்களையோ படிக்க கூடாது என்பதும்,அவ்வாறு படிக்கும் தோழர்களும் ,கேள்விகேட்கும் தோழர்களும் நீக்கபடுவதும் ம.க.இ.க வில் தினமும் நடக்கும் நடைமுரையாயிற்று.இவர்கள் இன்னொரு ற்ஸ்ஸ் .காரணம் சமூகத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை கொழுந்து விட்டு எரிந்தால் போதும்!வரிந்துகட்டிக் கொண்டு வந்து விடுவார்கள்! அது கோயிலில் தமிழ் வண்டும்!,தீட்சிதர்கள் போராட்டம் தொடக்கி நாளைக்கு பிள்ளையார் சதுர்த்தியில் தமிழில்லை, திருப்பதியில் வரிசையில் தமிழருக்கு நியாயம், இப்படியே தமில்தசியம் பேசினாலும் பேசுவார்கள்! கம்யுனிஸ்டு கட்சியின் நிலைப்பாடுகள் கொஞ்சம் கூட இல்லாதவர்கள் இவர்கள்! இவர்களுக்கும்,இவர்களின் மூல உத்தி முழக்கத்திற்கும், இவர்களின் இந்த போராட்டங்களுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தம் இல்லாதவர்கள்!
இந்திய த்சியம் பேசும் இவர்கள் இன்று வரை குறைந்தபட்சம் கேரளாவில் கூட கிளை இல்லாதவர்கள் "இந்திய புரட்சி" பற்றி பேசுகிறார்கள் ! "அரசியல் படையும் இராணுவ படையும் அக்கம்பக்கமாய் " என்று கூறும் இவர்கள் இன்று வரை ஒரு இடத்தில் கூட இராணுவ படை கட்ட திட்டமோ! துப்போ! அற்றவர்கள்!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.