இப்பொழுது பலரும் ஆச்சரியப்படக்கூடும். பெரும்பாலும் நான், என் வாழ்க்கை முழுதும் இந்தியனாய் இருக்க பெரும் போராட்டத்தையும் முயற்சியையும் செய்துள்ளேன். இந்தியனாய் இருப்பதில் நான் பெருமையும் அடைந்திருக்கின்றேன்.  ஆனால் இனி இல்லை.

kashmir atrocity 600இன்று ஒரு இந்தியனாய் இருப்பதற்கான  தகுதியை, பெரும்பான்மையான மக்களின் கூட்டு மனசாட்சிபடியும் அதை தலைமை ஏற்று நடத்துபவராலும் மாற்றபட்டுள்ளது. இன்று நல்ல இந்தியன் நாளை துரோகி ஆகிறான்.

அடிப்படையில் ஒரு இந்தியன் என்பவன்; இந்து மதத்தில் பிறந்து, மாட்டு கறி உண்ணாமல், அரைக்கால் காக்கி உடை அணிந்து, இந்த அரசாங்கம் எதை செய்தாலும் அதை ஒரு சிறு கேள்வியும் கேட்காத புனிதர்கள்.தன் நாட்டை விட வெளி நாட்டில் அதிகம் இருக்கும் ஒரு பிரதமரின்  காலடி மண்ணை வணங்குபவர்கள். ஆயுத படைகள் செய்யும் அனைத்துக்கும் முழு சுதந்திரத்தை தருபவர்கள்.இவர்கள் அடுத்தவர்களை விட நாட்டு பற்று அதிகம் உள்ளவராய் தன்னை காட்டிக்கொள்வதற்காக  எப்படியாவது வரியை, இந்த நாட்டின் மக்களுக்கு அது நன்மை அளிப்பதாக இல்லாவிட்டாலும் அந்த வரியை செலுத்துவார்கள். ஒரு நல்ல இந்திய குடிமகன் என்பவன் அரசாங்கம் சொல்வதை ஆபத்து என்றும், அரசாங்கம் சொல்வதை உண்மை என்று நம்பும் கும்பல் மனப்போக்கினை பெற்றிருக்கவேண்டும்.

துரதிருஷ்டவசமாக எனக்கு இது, இந்தியன் என்ற என் நம்பிக்கைக்கு ஏற்புடையதாக இல்லை. என்னுடைய நம்பிக்கை என்பது  என்  நாட்டின் தந்தைகள் உருவாக்கிய  என் அரசியல் அமைப்பு சட்டத்தின் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது - நீங்கள் மிக வசதியாக மறந்து விட்ட அதை நினைவு படுத்துகின்றேன்.

“நாம், இந்திய மக்கள், உறுதி கொண்டு முறைப்படி தீர்மானித்து, கட்டமைக்கின்றோம் இந்தியாவை ஓர் இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற ஜனநாயக குடியாட்சியாக

நிர்ணயிக்கிறோம் இதன் எல்லா குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி;

எண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு சுதந்திரம்;

படிநிலை மற்றும் வாய்ப்பு சமத்துவம்; மற்றும் ஊக்குவிக்கின்றோம் அனைவரிடத்திலும்

சகோதரத்துவ மனப்பான்மையை, தனிநபர் கண்ணியத்தையும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டையும் உறுதிப்படுத்த.”

மதச்சார்பற்ற (?) - ஜனாதிபதி மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட  இப்தரில் கூட கலந்து கொள்ள முடியாதவர்களாக இந்நாட்டின் பிரதமரும் அவரது சாகாக்களும் இருக்கிறார்கள். மாட்டிறைச்சி வைத்திருந்தான் என்று  சந்தேகித்து ஒருவர் எந்த விசாரணையும் இன்றி கொலைசெய்யப் படுகிறார்.

ஜனநாயகம்  (??) -  ஹர்திக் படேல், கன்ஹையா அல்லது ஒரு உமரிடம் தான் இந்த நகைச்சுவை பற்றி கேட்கப்பட வேண்டும்.

நீதி (?) -  இதுவரை யாரையும் கொல்லாத முகநூலால் தீவிரவாதி ஆக்கப்பட்ட (தீவிரவாதி அல்ல)  ஒருவனை கொலை செய்து, அதன் தொடர்ச்சியாக 30 பேர் கொலை செய்ய பட்டிருக்கிறார்கள். கொஞ்சம் தர்கரீதியாக யோசிப்போமேயென்றால், தீவிர சிந்தை உடைய ஒவ்வொரு கோபம் கொண்ட இளைஞனையும்  இப்படி கொலை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

சுதந்திரம் (?) - ஆம், நான் இந்த பதிவை நான்கு நாட்களாக ஊரடங்கு உத்தரவு உள்ள, இணைய வசதி துண்டிக்கபட்ட சுதந்திரமான ஒரு ஊரில் இருந்து பதிவு  செய்ய வேண்டி உள்ளது.

சமத்துவம் (?) - யாராக இருந்தாலும் அவர்கள் வலதுசாரி இந்து அமைப்புக்கு சமமானவர் இல்லை.

சகோதரத்துவம் (?) - எங்கள் மீது எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இன்றி நடத்தப்படும் வன்முறைகளையும், படுகொலைகளையும் என் சகோதர்களாகிய நீங்கள் ஏன் குறைத்தபட்சம் ஒப்புக்கொள்ளக்கூட மறுக்கறீர்கள்.

நாங்கள் எங்கள் வேறுபட்ட கருத்தை கூறினாள் நாங்கள் உங்கள் கண்களுக்கு இந்தியர்களாக தெரிவதில்லை. நாங்கள் இறக்க மறுப்பதால், நீங்கள் உங்கள் முகங்களை திருப்பிக்கொண்டு எங்கள் இருப்பை அழிக்கின்றீர்கள். நாங்கள் ஒரு பர்கன்வானிக்கும் காணாமல் போன பிற இரண்டு லட்ச சொந்தங்களுக்காக புலம்பினாள் நாங்கள் உங்கள் கண்ணில் தீவிரவாதிகளாகிறோம். நாங்கள் இந்த நாட்டில் முதல் பிரதமர் கொடுத்த வாக்குறுதியை, இன்னும் நீங்கள் பூர்த்தி செய்யவில்லை என்று கூறினால் தேச துரோகி ஆகிறோம்.  நாங்கள் “Kunan Poshpor” அல்லது “Tufail Mattoo 2010” நீதி கேட்பதால் நாங்கள் பாகிஸ்தானி ஆகிறோம். நாங்கள் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை (AFSPA) இரத்து செய்ய கேட்டால்  நாங்கள் உங்கள் கண்ணில் அரசாங்கத்தின் விரோதி ஆகிறோம். நாங்கள் இப்பொழுது இருக்கும் உங்களை போல இந்தியர்களாக இருக்க மறுப்பதால், நாங்கள் காஷ்மீரி ஆகின்றோம்.

ஆகையால் இன்று நான் ஒரு காஷ்மீரி ஆகிவிட்டேன்.

நான் உங்களை போல் இருக்க மறுக்கிறேன்.

எனக்கென்று ஒரு மனசாட்சி இருக்கிறது,

ஒரு குரல் இருக்கிறது.

நீங்கள் என்னை அடக்க நினைக்கலாம், ஆனால் நான் அடங்கிவிட முடியாது.

அப்பாவி மக்களை கொன்ற அவமானத்தை மறைப்பதற்கு எவ்வளவு பெரிய கொடியினாலும்  - இந்திய கொடியினாலும் முடியாது

-  ஷாஜியா பாக்க்ஷி

தமிழில்: செ.நந்தகுமார், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்

Comments

6 comments

6
Manikandan
ஒரு பக்க சார்பாக மட்டுமே இந்த கட்டுரை இருக்கிறது....

உலகில் எங்கெல்லாம் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களால் மற்ற மதத்தவரோடு ஒற்றுமையாக வாழ முடியவில்லை. எங்கெல்லாம் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் மற்ற மத சிறுபான்மை மக்களால் வாழமுடிவது இல்லை. பாகிஸ்தானில் கூட சுதந்திரம் பெற்ற போது அங்கே ஹிந்துக்கள் 20 சதவீதம் பேருக்கு மேல் இருந்தார்கள் இன்று ஹிந்துக்கள் 1 சதவீதம் கூட இல்லை. காரணம் அவர்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்படுகிறார்கள் அல்லது அவர்கள் இன அழிப்பு செய்யப்படுகிறார்கள்.

காஷ்மீரில் கூட உண்மையான மண்ணின் மைந்தர்களான பண்டிட்டுகள் இன அழிப்பின் மூலம் கொல்லட்டு மிஞ்சி இருப்பவர்கள் அந்த மண்ணில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள். இந்த கொடுமைகளை பற்றி எந்த ஒரு மதசார்புப்பின்மைவாதிகளும் பேசியது இல்லை.

காஷ்மீரில் நடப்பது முற்றிலும் ஒரு மதவெறி போராட்டம் இந்தியாவின் குறை சொல்வது எல்லாம் சும்மா ஏதாச்சும் காரணம் வேண்டுமே அதற்காக இந்தியா இதை செய்தது அதை செய்தது என்று கதை விடுகிறார்கள். சொர்க்கமாக இருந்தால் கூட அது இஸ்லாமிய சொர்க்கமாக இருந்தால் மட்டும் தான் அதில் இருப்பார்கள் இல்லையென்றால் அவர்கள் நரகத்தில் வாழ்வதற்கும் தயாராக இருக்கிறார்கள் என்பது தான் வேதனையான உண்மை.

இஸ்லாமியர்களால் மற்ற மதத்தவரை ஏற்க முடியாமல் இருப்பதற்கு காரணம் அவர்களுக்கு ஊட்டப்படும் தீவிர மதவெறி ஆனால் அதை புரிந்துகொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. இஸ்லாமிய மத தலைவர்கள் மற்ற மதத்தவரை நேசிக்க வேண்டும், அதை அவர்கள் போதிக்க வேண்டும் அப்போது தான் உலக அளவில் இந்த மதவெறிக்கு ஒரு தீர்வு கிடைக்கும் இல்லை என்றால் உலகம் முழுவதுமே காஷ்மீரை பார்க்கலாம்.
Abdul Kader Syed
மணிகண்டனின் கருத்துக்களில் வார்த்தைக்கு வார்த்தை, இஸ்லாமிய எதிர்ப்பு வெளிப்படுகிறது. மணிகண்டனுக்கு காஷ்மீர் பற்றிய புரிதலும் இல்லை. இஸ்லாம் பற்றிய புரிதலும் இல்லை. இன்றும் கூட அமர்நாத் யாத்ரிகர்களுக்கு உதவிக் கொண்டிருப்பவர்கள் காஷ்மீர் முஸ்லிம்கள் என்பது அவருக்குத் தெரியவில்லை.
காஷ்மீர் பண்டிட்கள் சொகுசாக டில்லி ஜானக்புரியில் உல்லாசமாக இருப்பதும் இவருக்குத் தெரியவில்லை.
இந்திய ராணுவத்தினரால் ...கொத்துக் கொத்தாக கொலை செய்யப்படுபவர்கள் முஸ்லிம் ஆண்கள்.
கற்பழிக்கப்படுபவர்கள் முஸ்லிம் பெண்கள்.
குறிவைத்து முடமாக்கப்படுபவர்கள் சிறுவர்கள்.
இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும், தீவிரவாத பட்டமும் தேச துரோக சர்டிபிகேட்டும் அளித்து சகிப்பற்றவர்களாக சித்தரிக்கும் கேவலமான அரசும், ஊடகங்களும் இருக்கும் வரை இந் இழிநிலை மாறாது
Manikandan
Abdul Kader Syed: சகோ இன்னும் எவ்வுளவு பொய்கள் சொல்ல போகிறீர்கள் என்று தெரியவில்லை.

அமர்நாத் யாத்திரர்கள் தங்குவதற்கு தற்காலிக இடம் ஒதுக்கியதை எதிர்த்து காஷ்மீரிகள் எந்தளவுக்கு வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று யாருக்கும் தெரியாது என்று நினைத்து கொண்டு இருக்கிறீர்களா ?

ஒவ்வொரு வருடமும் அமர்நாத் யாத்திரீகர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் சுட்டு கொள்வது பற்றி யாருக்கும் தெரியாது என்று நினைத்து கொண்டு இருக்கிறீர்களா ?

இஸ்லாமிய தீவிரவாதிகள் காஷ்மீர் பண்டிட்டுகளை இனஅழிப்பு செய்ததை யாரும் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது... ஹிந்துக்கள் (உங்கள் வார்த்தைகளில் சொல்வது என்றால் காபிர்கள்) என்ற ஒரே காரணத்திற்காக பெண்களை கற்பழித்து ஆண்களை கொன்றது எந்த வகையில் நியாயம் ?

இவ்வுளவு துரோகத்திற்கு பிறகும் நீங்கள் பாகிஸ்தான் துரோகிகளை மதத்தின் பெயரால் உங்களை போன்றவர்கள் ஆதரிக்கிறீர்கள் பாருங்கள் இதை விட பெரிய நன்றிகெட்டத்தனம் வேறு என்ன இருக்க முடியும்.

உண்மையில் இஸ்லாமியர்கள் செல்லும் பாதையை நினைத்து எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. எந்த ஒரு மாற்று மதத்தையும் ஏற்காமல் அந்த மதத்தை பின்பற்றுகிறார்கள் மீது வெறுப்பை வளர்த்து கொண்டு இஸ்லாமியர்கள் தங்களை தாங்களே தனிமைபடுத்தி கொண்டு இருக்கிறார்கள். நிச்சயம் இது இஸ்லாமியர்கள் நலனுக்கும் நல்லது இல்லை உலக அமைதிக்கும் நல்லது இல்லை.
Manikandan
Abdul Kader Syed: பாகிஸ்தான் தீவிரவாதிகளின் பேச்சை கேட்டு அட்டகாசம் செய்யும் காஷ்மீர் இஸ்லாமியர்களுக்காக இவ்வுளவு வருந்தும் நீங்கள் என்றாவுது காஷ்மீர் பண்டிட்டுகளுக்காக ஒரு சொட்டு கண்ணீர் விட்டு இருப்பீர்களா ? நிச்சயம் இல்லை அது உங்கள் வார்த்தைகளில் இருந்தே தெரிகிறது... காஷ்மீர் பண்டிட்டுகளை அவர்கள் மண்ணில் இருந்து கொலை செய்து, அவர்களின் வீடுகள் சொத்துக்களை எல்லாம் பிடுங்கி விரட்டி அடித்து விட்டு அவர்கள் டெல்லியில் சொகுசாக வாழ்கிறார்கள் என்று மனசாட்சி துளியும் இல்லாமல் கதை அளந்திர்கள் பாருங்கள் அப்போதே உங்களின் மனித நேயம் பல் இளிக்கிறது.
குமாரசாமி
காஷ்மீர் பண்டிட்டுகளை கூண்டோடு வெளியேற வைத்தது அன்றைய கவர்னர் ஜக்மோகன். மணி கண்டனைப்போன்ற ஒரு இந்து . பண்டிட்டுகள் முழுமையாக ஒத்துளைத்தனர் ஆனால் அவர்களுக்கு கொடுத்த வாக்குறிதிகளை மன்மோகன் வகையறாக்கள் நிறைவேற்ற வில்லை. ஆரம்பத்ததில் அவர்களுக்கு டெல்லியில் கிடைத்த வசதிகள் படிப்படியாக குறைந்தது. குறைந்த பின்னால் உள்ளதை மனிகண்டன் சொல்லுவார் . ஆனால் ஆரம்பத்தை சொல்லமாட்டார். யாழ்பாணத்தில் இவர்கள் எதைச்செய்தார்களோ அதைத்ததான் காஷ்மீரிலும் செய்கிறார்கள். தமிழக மீனவர்களுக்கும் செய்கிறார்கள். மணிகண்டர்கள் இருக்கும் வரையில் அவர்களின் செயல்களுக்கு ஆதரவு கிடைக்கும். அந்த நம்பிக்கையில் தான் இது நடக்கிறது.தமிழர்களுக்கு மத்தியிலேயே இவர்களால் தமிழர்களுக்கு எதிராக பேச முடிகிற போது காஷ்மீரிகளுக்கு எதிராக பேச முடியாதா?.
Manikandan
குமாரசாமி: ஏண்டா அப்பாவி பண்டிட்டுகளை கொலை செய்திர்கள் என்று கேட்டால் இல்லாத கதையெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். இலங்கையில் விடுதலை புலிகள் இஸ்லாமியர்களை இன அழிப்பு செய்தது போல் காஷ்மீர் தீவிரவாதிகள் பண்டிட்டுகளை இன அழிப்பு செய்தார்கள். காஷ்மீரில் நடப்பது முற்றிலும் இஸ்லாமிய மதவெறி தீவிரவாதம் தான். இதுவே டெல்லியில் ஜனநாயக மதசார்பற்ற அரசாக இல்லாமல் ஒரு சுல்தானின் (இஸ்லாமிய) ஆட்சியாக இருந்திருந்தால் இப்படி பிரிவினை பேசி கொண்டு கல்லெறிந்து கொண்டு இருக்கமாட்டார்கள்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.