dalit sankar with his wife kausalya

தருமபுரியில் இளவரசன் - திருச்செங்கோட்டில் கோகுல்நாத் - இன்று உடுமலை அருகே சங்கர்! இன்னும் எத்தனை எத்தனை  உயிர்கள் போகுமோ, எப்போதுதான் இந்தக் காட்டுவிலங்காண்டித்தனம் நம்மை விட்டு விலகுமோ என்று நெஞ்சம் பதைக்கிறது.

     சங்கரும், கவ்சல்யாவும் பொறியியல் கல்லூரியில் ஒன்றாகப் படித்தனர். மனம் ஒன்றியதால் மணம் முடித்தனர். சாதிகள் வேறு என்பதால் பெற்றோர்கள் ஏற்கவில்லை. எட்டு மாதங்களாகத் தனியே வாழ்ந்தனர். இப்போது அந்தப் பெண் கருவுற்றிப்பதாகச் சொல்கின்றனர்.

     கருவுற்ற பெண்களிடம் கனிவோடு நடந்து கொள்வது மனிதப் பண்பாடு. ஆனால் மனித நாகரிகம், மனிதப் பண்பாடு ஆகியனவற்றிற்கு நேர் எதிரான சாதி வெறி இருவரையும் பட்டப் பகலில் வெட்டிச் சாய்க்க முயன்றுள்ளது,  சங்கர் கொல்லப்பட்டார். கவ்சல்யா இப்போது மருத்துவமனையில், உயிருக்குப் போராடியபடி!

     இந்தப் படுகொலை, உடுமலைப்பேட்டைப் பேருந்து நிலையம் அருகில் பட்டப்பகல் இரண்டு மணிக்கு மிக வெளிப்படையாக நடந்துள்ளது. அங்கேயிருந்த  புகைப்படக் கருவியில் அது பதிவாகியுள்ளது. கொலை செய்து முடித்துவிட்டு, நிதானமாகத் தங்கள் வண்டியில் ஏறி அந்தக் கொலைகாரர்கள் செல்வதை நாம் படத்தில் பார்க்க முடிகிறது.

      சாதி வெறியும், செயலற்று இருக்கும் தமிழக அரசின் நிலையும் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளன.. வெட்கம் ஒருபுறம், வேதனை மறுபுறம்! கடந்த சில ஆண்டுகளாகவே இவை போன்ற கொடூரங்கள் தமிழ் நாட்டில் நடந்தேறிக் கொண்டுள்ளன. கையாலாகாத அரசும் அதற்கு ஒரு காரணம்.

       இந்தக் காட்டுவிலங்காண்டித் தனத்தையும், கைகட்டி நிற்கும் தமிழக அரசையும், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது. கொலையாளிகள் உடனடியாகக் கைது செய்யப் பட வேண்டும் என்னும் தமிழகத்தின் குரலை எதிரொலிக்கிறது!

- சுப.வீரபாண்டியன், பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை

Comments

3 comments

3
Ms.Surya
இதே பெண் அவளை விட மேல் சாதி பையனை காதலித்து இருந்திருந்தால் அதே பெண்ணின் உறவினர்கள் நாங்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தோம் என்று மார் தட்டிருப்பார்கள். மக்கள் மனதில் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
திருத்தமிழ் தேவனார்
சாதி கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க., ஆ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு இதில் பெரும் பங்கு உண்டு. சாதி கட்சிகள் வளர இவ்விரு கட்சிகளும் முக்கிய காரணமாகும். சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் கட்சி நடத்துவது தடை செய்யப்பட வேண்டும். முடிந்தால் சாதி இல்லாத சமூகம் படைக்க அரசு முன்வர வேண்டும்.
raja
Here I want to say one thing....if kousalya completes her studies and marry means no problem..before completion of her studies ( 2nd year student)and hastily marry kouslaya to shankar with the help of 20 of shankar's friend is it fair?
you nourish and give education to your daughter do you allow to your daughter to marry without completion of her studies and hastily marry? after shankar murder...what about his 20 friends who were conducting marriage ceremony of shankar?....
Before saying caste, first you think if it happenens to your family ,how you react?

in our area , Marrying pallar girl to parayar boy does not allow,
pallar caste is highest caste among S.Cs ....

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.