தொடர்புடைய படைப்புகள்

farmers

மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நீண்ட விவாதங்களுக்குப் பின் கொண்டு வந்தது. அந்தச் சட்டமே விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதாக இல்லை என்ற கடுமையான விமர்சனத்தை விவசாய அமைப்புகள் கூறிவந்தன. அதே நேரத்தில் காங்கிரஸ் அரசின் புதிய சட்டமானது தங்கள் தொழில் விரிவாக்கத்திற்கு கூடுதலான செலவை உருவாக்குகிறது என கார்பரேட் நிறுவனங்கள் குரல் எழுப்பி வந்தன.

மத்தியில் நரேந்திர மோடி அரசு வந்தவுடன் கார்பரேட் குழுமங்கள் தங்கள் நலனுக்கு பாதகமாக இருக்கின்ற நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் விதிகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தன. நீண்ட கால விவாதத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டுவந்த சட்டத்தை கார்பரேட் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத்தின் முன் வைத்து விவாதிக்காமல் அவசரச்சட்டத்தின் மூலம் மோடி அரசு மாற்றம் செய்துள்ளது.

இந்த அவசரச்சட்டம் பல்வேறு தேவைகளுக்கும் விவசாயிகளின் ஒப்புதலுடன் தான் நிலம் எடுக்க வேண்டும் என்று இருந்த பிரிவை விவசாயிகளின் ஒப்புதல் இன்றியே நிலத்தை எடுக்கலாம் என்று மாற்றியுள்ளது. இது விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள நிலத்தை கார்பரேட் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப பறித்துக் கொள்வதாகும்.

இந்த மிகமோசமான நிலம் கையகப்படுத்தும் அவசரச்சட்டத்தை விவசாயிகள் கடுமையாக எதிர்க்கின்றோம். நசிந்து வரும் விவசாயிகளின் நிலத்தையும் அவசரச்சட்டம் மூலம் மோடி அவர்களின் அரசு பறிப்பது வேதனையானது.

தமிழகத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இந்த சர்வாதிகாரமாக போடப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை நீக்கக் குரல் கொடுக்க வேண்டும் என தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

- கி.வே.பொன்னையன், தலைவர், தற்சார்பு விவசாயிகள் சங்கம்

Comments

2 comments

2
A.Arulraj
ivai vivasaikalauku ethiranathu.eppadi modi Arasu kattaiyapaduthinal kadumaiyana vilaivukalai santhikum , market rate koduthalai kastam ,ithilum govt rate market rate vida 100 madanku kuraivu ,,vivasaiyathai alika ninathal nadum alium,modi arasum alium
syed
நிச்சயமாக இந்த சட்டம், களத்தில் எதிர்கொள்ளப்படும் போது, சமூக புரட்சியாளர்கள் எதிர்நோக்கி இருக்கும் தருணத்தை, அடித்தட்டு மக்களே முன்னின்று எடுத்து செல்லக்கூடிய ஒரு சூழலை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த அவசரச் சட்டத்திற்கு முன்பாக, காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்ட சீர்திருதற்திக்கு காரணமான மேற்கு வங்க சிங்கூர் போராட்டமே அதற்க்கு சாட்சி.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.