வாக்களிப்போம் 49 O – முதலாளித்துவ கட்சிகளுக்கு எதிரான எமது மறுப்பைப் பதிவோம்.
தமிழ்நாடு உட்பட நான்கு மாநிலங்களில் இம்மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதையொட்டிச் சனநாயகம் என்ற பெயரில் மாபொரும் நாடகங்கள் அரங்கேறத்தொடங்கியுள்ளது. புதிய தேர்தல் கூட்டுகள் -உடைவுகள்- வாக்குக்காக இலவசப் பொருட்கள்- ஊழல் என்று எமக்குச் சுடச்சுடச் செய்திகள் தினமும் சொல்லப்படுகிறது! லாப்டாப் முதற் கொண்டு பஸ் பாஸ் வரை யார் கூடுதல் இலவசங்களை வழங்குவது என்று தி.மு.க வும-; அ.தி.மு.க வும் அடித்துக் கொள்கின்றன. இதற்குள் பா.ஜ.க பசுமாடு இலவசமாக வழங்கப் போகிறதாம்! அவர்களை அண்டிய ஏனைய சிறு கட்சிகளும் தம்மால் முடிந்ததைச் சுருட்டிக் கொண்டு போவதில் குறியாயிருக்கின்றன. தமிழ்த்தேசியத்தின் காப்பாளர்களாகப் பாவனை செய்து காவடி ஆடிய வைகோவின் கட்சி ம.திமு.க வை அம்மா துரத்தியதும் தற்போது தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்கிறார்கள் அவர்கள். இந்திய அரசின் உதவியுடன் ராஜபக்ச ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த போது கூட அவருக்குத் தேர்தல் புறக்கணிப்பு அக்கறை வரவில்லை.
ஸ்பெக்ட்ரம் ஊழல் முதற்கொண்டு மாபெரும் ஊழல்களை எம்மை வேடிக்கை பார்க்க வைத்து விட்டு அவர்கள் எமக்குத் தேர்தல் களியாட்டங்கள் காட்டுகிறார்கள். இந்தக் கட்சித் தலைமைகளின் ஓட்டாட்டித்தன ஊழல்களில் அவரது பங்கும் அனைவரும் அறிந்தது தானே. நம்மிடம் திருடிய பணத்தை வைத்து நமக்குப் படம் காட்டுவது போதாதென்று நமது வாக்குகளையும் கேட்கிறார்கள்.
இவர்கள் நாடகங்களில் நமக்கொரு லாபமும் இல்லை. சனநாயகம் என்று சொல்லி எங்கள் பெயரில் அவர்கள் போடும் ஆட்டத்துக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்? கடும் உழைப்பின் பின்பும் காற்காசுக்கு வழியின்றித் தவிக்கும் நமக்கு இவர்கள் நாடகத்தில் என்ன பங்கிருக்கிறது? உணவுப்பொருட்களின் விலை வானைப் பிளக்கிறது. பெற்றோல் ரொக்கட் விலை விற்கிறது. பெரும் கம்பனிகளின் வளர்ச்சிக்கு 88 000 கோடி ரூபாய் ஒதுக்கும் மத்திய அரசு உணவு மான்மியமோ அல்லது பெற்றோலுக்கான விலையைக் குறைக்கவோ தயாராக இல்லலை. அவர்கள் அரசு-அவர்கள் கட்சிகள் நமக்கானதில்லை. நம்மை எத்தனை பாடு படுத்துகிறார்கள்.
நகரை அழகுபடுத்துகிறோம் என்று சொல்லி நம்மை நகரில் இருந்து வெளியே தூக்கி வீசுகிறார்கள். புதிய கார்களுக்கு வழியேற்படுத்த எமது வீடுகளை புல்டோசரால் இடித்துத் தரைமட்டமாக்குகிறார்கள்.
இலவச மின்சாரம் மற்றும் விவசாயிகளுக்கு இலவச மானியம் என்று பொய்க்கதை பேசிவிட்டு தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நமது நிலங்களைத் திருடிப் பல்நாட்டுக் கம்பனிகளுக்கு இலவசமாக கொடுக்கிறார்கள்.
லட்சக்கணக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தப் போவதாகத் தொடர்ந்து கதை விடுகிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் வழமை போலவே தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைத்து நம்மை வேலை நீக்கம் செய்யும் கம்பனிகளுடன் சேர்ந்து எமது உரிமைகளைத் தாக்குகிறார்கள்.
பாடசாலைச் சீருடை தருவோம் மற்றும் பாடசாலை உபகரணங்கள் லாப்டாப் தருகிறோம் என்று வாக்குக்காக ஒரு பக்கம் ஏமாற்று வித்தை. மறு பக்கம் அரசுப் பள்ளிகள் எவ்வித வசதியுமின்றிக் கற்பிக்கப் போதிய ஆசிரியர்கள் இன்றி மிக மோசமாக நடத்தப்படுகின்றன.அதனால் தனியார் பள்ளிகள் கொள்ளை இலாபமீட்ட வழியேற்படுத்துகிறார்கள்.
அரச மருத்துவச்சாலைகள் மற்றும் அரச சுகாதார அமைப்புகளைத் திட்டமிட்ட முறையில் கொஞ்சம் கொஞ்சமாகச் சீரழித்து வருவதன் மூலம் சாதாரண மக்கள் எட்ட முடியாத தனியார் மயமாக்கப்பட்ட மருத்துவசாலைகளை ஊக்குவிக்கிறார்கள். இதற்குள் இலவச மருத்துவ காப்பீடு தருவதாக வாக்குக்காக ஒரு பொய்ப்பிரச்சாரம் வேறு நடக்கிறது.
இந்த ஏமாற்று வித்தைகளை இனியும் நாம் பொறுத்துக் கொள்ள முடியாது.
ஒரு கலர் ரீவிக்காக ஏமாந்துவிடும் இளிச்சவாயர்கள் அல்ல நாம். இலவச கலர் ரீவியை மறுப்போம். நியாயமான வேலைநேரத்துக்கும் ஓய்வுநேரத்துக்கும்மான உரிமையை கோருவோம்.
இலவச அரிசி கொடுப்பதாக ஏமாற்றுவதை மறுத்து வேலை செய்யும் உரிமையையும் நியாயமான ஊழியம் வழங்கும் கோரிக்கையையும் நாம் முன்வைப்போம்.
வெறும் லாப்டாப் பென்சில் பேனாக்களுக்கு ஏமாந்துவிடுபவர்கள் அல்ல நாம். நம் அனைவருக்குமான இலவசக்கல்விக் கோரிக்கையை முன்வைத்துப் போராடுவோம்.
அனைவருக்குமான இலவச மருத்துவசேவையைக் கோருவோம்.
நாடகக்காரக் கட்சிகள் எதற்கும் நாம் வாக்களிக்க மாட்டோம் என்று எதிர்ப்பைப் பதிவு செய்யும் அதேவேளை அதிகாரத்தை எமக்காகக் கைப்பற்றும் ஒரு புரட்சிகரக் கட்சியை உருவாக்க நாமனைவரும் ஒன்றுபடுவோம். தொழிலாளர் நலன்களை – ஒடுக்கப்படுவோர் நலன்களை முதன்மைப்படுத்திய உண்மையான சனநாயக உரிமைகளை மதிக்கின்ற நமக்கான கட்சியை நாம் தான் உருவாக்க வேண்டும்.
மக்களுக்காக மக்களால் ஒருங்கமைக்கப்படும் ஒரு மாற்றுக் கட்சி இன்று அவசியத் தேவை. இது பற்றிய செயற்பாட்டுக்கு அல்லது உரையாடலுக்கு உடனடியாக எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்.
45க்கு மேற்பட்ட நாடுகளில் ஒடுக்கப்படுபவர்களின் எதிர்ப்பை ஒருங்கமைத்து வரும் தொழிலாளர்களின் சர்வதேசியத்துக்கான அமைப்பின் இந்திய பிரிவான புதிய சோசலிச மாற்று இந்தியாவில் ஒடுக்கப்படுபவர்களுக்கான ஒரு மாற்றை உருவாக்க தொடர்ந்து போராடி வருகிறது. இந்த எதிர்ப்பியக்கத்தில் சேர்ந்து கொள்ள விரும்புபவர்கள் அல்லது எம்மைப்பற்றி மேலதிக விபரங்கள் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் பின்வரும் விலாசம் அல்லது தொலைபேசி மூலம் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
விலாசம் : PO BOX 1828 Banglore 560018
தொலைபேசி : 09551251841
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இருக்கிற இம்சை போதாதுன்னு புதிய இம்சையா.
அறிவு நிலை என்பது அனைவருக்கும் பொது. அனைத்து சாதியினரிலும் அறிவுத் திறன் குறைந்தவர்களும் நடுநிலை அறிவுத் திறன் கொண்டவர்களும் உயர்நிலை அறிவுத் திறன் கொண்டவர்களும் உள்ளனர். அறிவுத் திறன் மிகுந்தோர் உயர்நிலையில் வேலை செய்யலாம். அறிவுத் திறன் குறைந்தோர் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடல் உழைப்பு மிகுந்த வேலைகளில் ஈடுபட வேண்டும்.
அப்படிப் பார்க்கும் பொழுது பார்ப்பனர்களில் உள்ள அறிவுத் திறன் குறைந்தோர் அப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடுவதில் இருந்து எப்படியோ தப்பி விடுகின்றனர். இது அறிவுத் திறன் மிகுந்த ஒடுக்கப்பட்ட மக்கள் கீழ் நிலைப் பணிகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் முடிகிறது. இந்நிலை மாற்றப்படாத வரை (ஒடுக்கப்பட்ட மக்கள் உரிய வாய்ப்பு கிடைக்காமல்) மக்களின் அறிவு வளம் வீணாவதையும் (திறமையற்ற பார்ப்பனர்கள் உயர்நிலையைத் தக்க வைத்துக் கொள்வதால்) நிர்வாகம் சீர்கெடுவதையும் தடுக்க முடியாது. இது கொடூரமான தேசத் துரோகம். அது மட்டுமல்ல. அண்ணல் கூறியது போல் சாதியைச் சந்திக்காமல் (அதாவது பார்ப்பன அதிகாரப் பிடிப்பை வேரறுக்காமல்) வலிந்து வர்க்க்ப் புரட்சியைக் கொண்டு வந்தால் அது முளையிலேயே முறிந்து விடும்.
பாரிஸ் கம்யூன் இப்படிப்பினையைத ் தான் தருகிறது. அரசுப் பொறியமைவை அப்படியே வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடித்த பாரிஸ் கம்யூன் வெற்றி 72 நாட்களுக்கு மேல் நீடிக்கவில்லை.
அதே போல் பாரப்பன ஆதிக்க இந்திய அரசுப் பொறியமைவை மாற்றாமல் வர்க்க வேறுபாட்டை மட்டும் கணக்கில் கொள்வது இந்தியாவில் சோஷலிசப் புரட்சி வந்து விடக் கூடாது என்ற அதீத முன்னெச்சரிக்கை யாக இருக்கலாம். அல்லது உயிரோட்டமான மார்க்ஸியத்தை வறட்டுத்தனமாகப் புரிந்து கொள்வதாக இருக்கலாம். நாடாளுமன்றத் தேர்தலில் பங்கெடுப்பது, அங்கிருந்து கம்யூனிசக் கோட்பாடுகளை மக்களிடையே சேர்ப்பதற்குத் தானேயொழிய நாடாளுமன்றத்தில ேயே கரைந்து போவதற்கு அல்ல.
இன்று தேர்தலில் நிற்பவர்கள் அக்கடமையைச் செய்வார்கள் என்று நம்புவதற்குத் துளியும் முகாந்திரம் இல்லை. ஆகவே யாருக்கு வாக்களிப்பதிலும ் எவ்விதப் பயனும் இல்லை.
இன்று மனிதநேயம் கொண்டவர்கள் முன் இரண்டு முக்கியமான கடமைகள் உள்ளன. இன்று பெரிதாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் புவி வெப்ப உயர்வும் சுற்றுச் சூழல் கேடும் முதலாளித்துவ உற்பத்தி முறையில் தீர்க்க முடியாத நோய்கள். சந்தைப் பொருளாதாரமுறைய ின் படி இலாபம் தரும் தொழில்களில் தான் பணத்தையும் இயற்கை மூலாதாரங்களையும ் ஈடுபடுத்த முடியும். ஆனால் அப்படிப்பட்ட தொழில்கள் எல்லாம் புவி வெப்பத்தை உயர்த்துவனவாகவே உள்ளன. முதலாளித்துவ உற்பத்தி முறையைக் காவு கொடுத்தாலன்றி புவி வெப்ப உயர்வினால் உயிரினங்கள் அழிவதைத் தடுக்க முடியாது. இது உலகளாவிய பிரச்சினை.
இந்தியாவைப் பொறுத்த வரை, பார்ப்பன ஆதிக்கப் பிடிப்பு ஒழிந்தால் தான் திறமைசாலிகள் உயர்நிலைக்கு வர முடியும். இல்லையென்றால் பார்ப்பனர்களே உயர்நிலையில் இருந்து கொண்டு மனித வளத்தை வீணடித்துக் கொண்டிருப்பதும ், நிர்வாகத்தைச் சீரழித்துக் கொண்டிருப்பதும ான தேசத் துரோகங்கள் செழித்து வளர்ந்து கொண்டே இருக்கும். இந்த இரண்டு பணிகளையும் நினைத்துப் பார்க்கும் பொழுது தேர்தல் என்பது ஜுஜுபி. மனித நேயர்கள் தேர்தல் என்பதை மனதில் கொள்ள வேண்டியதே இல்லை. யார் வெற்றி பெற்றாலும் மனித நேயர்கள் செய்ய வேண்டிய பணியில் உதவி கிடைக்கப் போவதி்ல்லை. அவர்கள் சந்திக்க நேரும் இடையூறுகள் குறையப் போவதுமில்லை.
அது சரி, பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவா்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளில் ஈடுபட்டுத் தான் தீர வேண்டும் என்று கோருவதில் என்ன தயக்கம்? அவர்கள் தப்பிவிடுவதால் திறமை மிகுந்த ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் தகுதிக்குக் கீழான வேலைகளில் ஈடுபட வேண்டி ஏற்பட்டு நாட்டின் மனித வளம் வீணாவதைப் பற்றியும் நிர்வாகம் சீர்கெடுவதைப் பற்றியும் எப்படடி அக்கைற கொள்ளாமலேயே இருக்க முடிகிறது?
வேனாம் வேனாம் என்று சொல்லிச் சொல்லி ஒதுங்குவதால்தான ் சி.பி.எம் முதலான கட்சிகள் முற்போக்கு முகத்தோடு உலாவுகின்றன. அதைவிட்டு கேள்வி கேளுங்கள். பங்குபற்றுங்கள் . உங்களுக்கு கீழே ‘காமென்ட்’ அடித்திருப்பவரி ன் கன்பூயசனைப் பாருங்கள்!! – உரையாடலும் அதன் மூலமான தெளிவும் - சமரசமற்ற போராட்டமும் தேவை.
சேனன்
RSS feed for comments to this post