இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட் உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் சந்தித்தன. இந்தியாவின் பல தனியார் நிறுவனங்களில் கூட அரை நாள் விடுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசு அலுவலகங்கள் மதியத்திற்கு மேல் காற்றாடியது. கடந்த இரு தினங்களாக வடக்கிந்திய ஆங்கில ஊடகங்களில், இந்தப் போட்டியைக் குறித்து பல விவாதங்கள், கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இந்தப் போட்டியைக் காண்பதற்காக இந்தியா வருமாறு பாகிஸ்தான் பிரதமரையும், குடியரசுத் தலைவரையும் வேண்டி விரும்பி அழைத்திருக்கிறார் இந்தியப் பிரதமர். போட்டியைக் காண வந்த மக்களின் நடுவில் சோனியாவும் அவர் மகன் ராகுல் காந்தியும் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறார்கள்.  நடிகர்கள், நடிகைகள் எனப் பலபேர் போட்டியைக் காண வந்திருந்தார்கள்.

வழக்கம் போல நடக்கும் கிரிக்கெட் சூதாட்டத்தில் சுமார் ரூ. 5000  கோடி வரைப் புழங்கியதாகத் தகவல்கள் உள்ளன.

ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்? இந்திய தேசப்பற்றுதான் காரணமா? அப்படி தேசியப் பற்று தான் காரணமென்றால் மற்றப் போட்டிகளுக்கும் இவ்வளவு ஆடம்பரங்கள் நிகழ்ந்திருக்கவேண்டுமே? ஏன் நடக்கவில்லை? ஏன் என்று சிறு குழந்தைக்குக் கூடத் தெரியும். அதுவே இந்து மதவாதம். பாகிஸ்தானை எதிரி நாடு என்று காண்பதில் தம் இந்திய தேசிய உணர்வே இருக்கிறது என்று எண்ணும் இந்து தேசியவாதம். இந்தியர்களின் முஸ்லிம் மத வெறுப்பினை வெளிச்சம் போட்டுக்காட்டுவதே இவ்வகையான போட்டிகள்தான் .

பாகிஸ்தானுடன் இரண்டு  பெரிய போர்களையும் ஒரு சிறிய போரையும் இந்தியா சந்தித்திருக்கிறது. அவ்வப்போது எல்லைக்கோட்டில் சில துப்பாக்கிச் சூடுகளையும் இரு நாடுகளும் நடத்தி வந்தன. பாகிஸ்தான் இந்தியாவின் நேசநாடுகளில் ஒன்று அல்ல. எதிரியே! ஆனால் இந்தியாவுக்குத்தான் திரும்பிய திசையெங்கும் எதிரிகள் உள்ளனரே!

பாகிஸ்தானை மதவாத நாடு அல்ல என்று யாரும் சொல்லவில்லை. பாகிஸ்தான் ஒரு Islamic Republic என்பது  அந்நாட்டின் அரசியல் சட்டத்திலேயே உள்ளது. பாகிஸ்தான் தன்னை, மிக நேர்மையுடன் ஒரு முஸ்லிம் நாடு என்றே கூறிக்கொள்கிறது. மதத்தின் அடிப்படையிலேயே அந்நாடு தோன்றியதை யாரும் மறுக்கவில்லை.

ஆனால், இந்திய பாகிஸ்தான் மோதல்கள், விளையாட்டுப் போட்டிகளில் கூட, போர்களைப் போலவே சித்தரிக்கப்படுவத்தின் ரகசியம் என்ன?  அப்படி என்றால் இந்தியாவும் தன்னை ஒரு இந்து தேசம் எனக் கூறிக்கொள்ள  முடியுமா? இவ்வளவு இந்துப் பாசிச வெறிபிடித்த தேசமும், இந்துவெறி பிடித்த மக்களும் எப்படி தங்களைக் கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல் Secular Republic என்றுக் கூறிக்கொள்கிறார்கள்?

இந்துவெறி பிடித்த வடக்கிந்திய ஊடகங்கள், அந்த வெறியை மக்களின்பால் ஊட்டி, இந்திய தேசியத்தை இந்து தேசியமாக மாற்றுவதில் எப்படி வெற்றி காண்கிறார்கள்?

இந்திய தேசியவாதத்தின் மாய மழுப்பலில், கரைந்துபோகும், மறக்கப்படும் விஷயங்கள் ஏராளம். திரும்பும் திசையெல்லாம் பிரச்சினைகளைக் கொண்ட இந்தியா, தேசியம் என்ற ஒற்றைப் போர்வையைக் கொண்டு தான் வடிவமைத்த எதிரியை நோக்கி மக்களின் கவனத்தைத் திசைத்திருப்புவதற்கே  இந்த தேசியம் பயன்படுகிறது. வேறொன்றுக்கும் பிரயோஜனமில்லை.

அதனால், இந்தியா மத உணர்வைப் பயன்படுத்தி குளிர்காய்கிறது என்று மட்டும் குற்றம் சாட்டிவிடமுடியாது. வெறும் அரசின் முயற்சிகளாலும் மாயத் தோற்றங்களாலும் மக்களை இந்த அளவுக்கு வெறிபிடிக்கச் செய்ய இயலாது. இந்திய இந்து மக்களுக்கே இயல்பாக தம் இரத்தத்தில்  இந்துப் பாசிச வெறி ஊறிப்போயிருந்தாலொழிய  இது சாத்தியப்படாது.

இந்த போட்டியைக் கண்டுகொண்டிருந்த என் கன்னட நண்பன் ஒருவனைக் கேட்டேன்.

நான்: "இந்தியா ஜெயிக்குமா, இல்ல பாகிஸ்தான் ஜெயிக்குமா?"

அவன்: " ஏன்றி ஹெலுத்தாயிதீரா! இந்தியாவே win மாடு பேக்கு"

நான்: "யாக்கு?"

அவன்: "முஸ்லிம் நம்புகே ஆகல்லா! அதுக்கே"

மிகத்தெளிவாக கூறிவிட்டான் அவன்!

கடைசியில் இந்தியாவே போட்டியில் வென்றது. ஆனால், அங்கு ஒவ்வொரு பந்துக்கும் ஒலித்த கோஷங்களின் அடிநாதம் இந்து பாசிசவெறியும், முஸ்லிம் மதவெறுப்பும், இந்தியப்போலி தேசியமும்தான் என்பது கண்கூடு.

இந்திய தேசியத்தின் ஆழம் போகப்போக அதன் அசல் நிறமான காவியே கண்ணுக்குப் படுகிறது.  அது காவியின் நிறமா? இல்லை காய்ந்துபோன ரத்தத்தின் நிறமா என்று வேறுபடுத்திப்பார்க்க முடியவில்லை.

குறிப்பு:

தேசத்தைத் தாய்க்குச் சமம் என உளறும் தேசியவாதிகளுக்கு ஒன்று சொல்கிறேன். தாய்நாடு என்பது ஒன்றும் தாய்க்குச் சமம் அல்ல. வேணும்னா உன் தாய் பிறந்த நாடுன்னு வேணா சொல்லிக்கலாம். மத்தபடி அது ஒரு இடம். அது தாய்க்கும் சமமல்ல. நாய்க்கும் சமமல்ல.

Comments

4 comments

4
kumar
Yes, We are hindus. India is only for hindus. Not to muslims and silent terrorist christians. You guys just get out of my hindu nation.
mohamed thowfeeq
nna oru muslim naan ippodhu oru indian yenakku indian yenbadharku migauvm perumayaga ulladhu yen hindhutuva teeviravadhigal kidayadha india amaidhiyana naadu idhu pol yendha naadum yengaluku salugai tharavillai
S.Jambulingam
நண்பர் இளவா அவர்களுக்கு!

ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். எந்த அளவுக்கு பாகிஸ்தான் இந்தியாவை எதிர்க்கிறது, விரோதம் கொண்டிருக்கிறது என நீங்கள் கருதுகிறீர்களோ, அதற்கும் சற்று மேலாகவே, பாகிஸ்தான் எதிர்ப்புணர்வு இங்கு நிலவுகிறது. ISI-ன் செயல்களை நாம் விமர்சிக்கும்போது RAW-ன் கொலைபாதகங்களையும் நாம் விமர்சிக்கத்தான் வேண்டும்.

நீங்கள் கூறும் முஸ்லிம் நேசிப்பு என்பது வெறும் முகமூடி நண்பரே! தான் மதச்சார்பற்றவன் என உலகிற்குப் பறைசாற்றிக்கொள்ளத் தேவைப்படும் . யுக்தி! இந்த யுக்தியை சாதாரணப் பாமரன் கூட தன்னையும் அறியாமல் கையாளுகிறான். இந்தியாவில் முஸ்லிம்களின் சுதந்திரம் என்பது ஏதேனும் இந்து-முஸ்லிம் கலவரம் வெடித்தால் தெரிந்துபோகும். ஏற்கனவே பலமுறை நடத்திக் காட்டப்பட்ட காட்சிகள் அதனை நமக்குக் கூறுகின்றன. நீங்கள் வேண்டுமானால் முஸ்லிம்களை சக மனிதர்களாக, நண்பர்களாக

நேசிக்கலாம். பொதுவாக இந்தியர்களும் அவ்விதமே எனக் கூறுவது எங்ஙனம்?

பாகிஸ்தானில் ஒரு இந்துவின் இருப்பு என்பது கேள்விக்குரியதுதான்! நான் மறுக்கவில்லை. ஏனெனில் அது முஸ்லிம் நாடு! பெரும்பான்மைவாதம் அங்கு நிலவுவதில் வியப்பேதுமில்லை. ஆனால், மதச்சார்பின்மையை உரக்கக்கூவிக்கொண்டு பெரும்பான்மைவாதம் பழகுவதில்தான் நான் தவறு கண்டுபிடிக்கிறேன்.

பாகிஸ்தான் இந்தியாவுடன் சண்டைக்கு வந்ததாகக் கூறுகிறீர்கள். வரலாற்றைச் சற்று திரும்பிப் பாருங்கள். காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்தது ' Instrument of Accession '- -ன் படி. அதாவது எழுதி வாங்கப்பட்டது. பொதுமக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தியிருந்தால், இந்தத் துயரங்கள் எதுவும் நிகழ்ந்திருக்காது. ஏனெனில் காஷ்மீரில் அப்போது மன்னர் மட்டுமே இந்து. பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்கள். ஆனால் ஜுநாகர்-ல் மன்னர் விரட்டி அடிக்கப்பட்டார். மக்கள் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. ஏனெனில் மன்னர் முஸ்லிம், மக்களெல்லாம் இந்துக்கள்.

ஒன்று புரிந்துகொள்ளுங்கள் நண்பரே! காஷ்மீர் என்பது இந்திய உடலின் பாகமல்ல. தானே வேண்டி விரும்பி வரவழைத்துக்கொண்ட கட்டி.
ilavaa
thavarana karuthu. thani nadu vangiya pirakum sandaiku varubavarkal avarkalthan. India eppothum samthanathaye virumbum nadu. atharkaka nammai adaka ninaipavarkalai thooki vaithu kondadum alavirku naam thanmanam ilanthu vidavillai. muslim kalai innum naam nesipathal than avarkal suthanthiramaka ulavi kondirukirarkal. Ungalal adithu solla mudiyuma oru hindu pakistanil intha alavuku iruka mudiyum endru. pakistan india vudan sandiku varamal irunthal siru kulanthai kooda kekum nallavarkalai ean ivalavu verupai parkireerkal endru. Aanal indru pirakum kulanthai kooda pakistan verupil irukirathenral ithu india vin thavaralla. kashmir vendam endru avarkalum solla povathillai, india than udambin oru pakuthiyai vetti vidavum povathillai... it vil continue forever...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.