வெளுத்து வெண்பஞ்சு ஆகிப் போன முடிக்கு ஹேர் டை அடித்து, முகத்தின் சுருக்கங்களை மறைக்க பவுடர் பூசி, காலத்தில் தொலைத்த இளமையை மறைக்க டி ஷர்ட் போட்டு, இன்னமும் கல்லூரி கேர்ள்ஸ்சோடு காபிஷாப் போவதாக மொட்டைக் கடுதாசி ஒன்றை தனக்குத் தானே எழுதிக் கொள்ளும் ரோகியை நீங்கள் பார்த்ததுண்டா? புத்தகக் கண்காட்சியில் பார்த்திருக்கலாம்.

யாராவது வந்து கையெழுத்து கேட்க மாட்டார்களா, ஒரு பெண்ணாவது வந்து தன்னிடம் பேசி விட மாட்டாளா என்று ஏங்கிப் போய் உயிர்மை வாசலில் கிடந்து கண்டு கொள்ளாமல் கடந்து செல்லும் ஜனசமுத்திரத்தை எரிச்சலுடன் பார்த்து, அவமானத்தை மறைக்க‌ குனிந்து மொபைலை நோண்டி... so called (!) இலக்கியவாதியாக இருப்பது எத்தனை அவஸ்தைகள்? Seeking famous is disgusting one.

charu_350தமிழ் இலக்கிய ஜாம்பாவான்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ளும் சில‌ எழுத்தாளர்களைப் பார்க்கும்போது பரிதாபமாகத்தான் இருக்கிறது. விட்டால் "என்னைப் பாராட்டுங்க... பாராட்டுங்க" என்று தரையில் விழுந்து நக்கி நாத்தாங்கால் நட்டு விடுவார்கள் போலிருக்கிறது. Comic people!!

குஷ்டத்தில் பல வகை உண்டு. குஷ்டநோயானது பதினெட்டு வகைப்படும். அதாவது, வாதத்தால் கபாலகுஷ்டமும், பித்தத்தால் அவதும்பரகுஷ்டமும், சிலேஷ்மத்தால் ருசியஜிம்மிககுஷ்டமும், சிலேஷ்மபித்தத்தால் சருமகுஷ்டமும், ஏககுஷ்டமும், கிடிப குஷ்டமும், சித்மகுஷ்டமும், அலசகுஷ்டமும், சிலேஷ்ம வாதத்தால் வியாதிகாகுஷ்டமும், திரிதோஷத்தால் தத்துருகுஷ்டமும், புண்ட ரீக குஷ்டமும், சதாருகுஷ்டமும், விஸ்போடகுஷ்டமும், பாமா குஷ்டமும், சர்மதளகுஷ்டமும், காசசகுஷ்டமும், பிறக்கும். இவற்றுள் அவதும்பரம், மண்டலம், ருசியஜிம்மிகம், புண்டரீகம், கபாலம், காகசம் என்னும் ஆறு குஷ்டங்களை மகாகுஷ்டங்களென்று கூறுகின்றார்கள். இவைகள்தான் நாட்டு வைத்தியத்தில் உள்ள குஷ்ட வகைகள் இவைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து எளிதில் சரிப்படுத்தி விட முடியும்.

சாருவுக்கு வந்திருப்பதும் ஒருவகையான மனக் குஷ்டம்தான். Mental disorder. அதனால்தான் எப்போதும் தான் குடிக்கும் ரெமிமார்ட்டின், அப்சல்யூட் ஓட்கா, நாற்பதாயிரம் ரூபாய்க்கு கண்ணாடி, ஆண் விபச்சாரம், குப்பி கடித்தல், குண்டியடித்தல், குமட்டில் குத்தல், செக்ஸ் என்று தன்னை ஒரு பிளே பாய் ரேஞ்சுக்கு பில்டப் செய்து கொண்டிருக்கிறார். தேகம் என்னும் மரண மொக்கை நாவல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் "சரோஜாதேவி புத்தகங்களை மிஞ்சி விட்டாய்" என்று சொன்னாராம். உண்மையில் மிஷ்கின் அப்படி பட்டவர்த்தனமாக உண்மையைச் சொல்லியிருக்க வேண்டியதில்லை. அது ஊரறிந்த ரகசியம்தானே!  ஆனால், 'உனக்கு நடிப்பே வரவில்லை' என்று மிஷ்கின் சொன்னதன்மூலம் சாருவின் கதாநாயகக் கனவு உடைந்ததுதான் அவரது கடுப்பிற்குக் காரணம்.

தன்னுடைய பசி, தன்னுடைய காமம், தனக்கு வேண்டிய சரக்கு, தனக்கு வேண்டிய மதிப்பு இவைகள் எதுவும் தன்னிடம் இல்லை என்பதும் கிடைக்க வேண்டிய வயதிலும் இதெல்லாம் தனக்குக் கிடைக்கவில்லை என்பதும்தான் சாருவின் வருத்தமாக இருக்கிறது. கடந்த கால சாருவின் வாழ்வு தொடர்பாக கொஞ்சம் விசாரித்தாலும் ஒரு மேல் மத்திய தரவாழ்வை அவர் வாழ்ந்ததும், அவர் பேசுகிற விளிம்பு வாழ்வுக்கும் அவருக்கும் எப்போதுமே தொடர்பெதுவும் இருந்திருக்கவில்லை என்பதும் தெரியவரும். மத்திய அரசு ஊழியரான அவர் சராசரி இந்தியர்களின் வாழ்வை விட சிறந்த வாழ்வையே இன்று வரை வாழ்கிறார். He is being sophisticated man.

தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கிற சாருவை கேரள ஊடகங்கள் கொண்டாடிக் கொண்டிருப்பதாகவும் ஐஸ்வர்யாராய்க்குப் பிறகு நான்தான் கேரளாவில் பேமஸ் என்றும் தமிழ்நாட்டில் தனக்கு மரியாதை இல்லை என்றும் புலம்பல்... இதற்கு ஜால்ரா தட்ட சில அல்லக்கைகள் வேறு...

சேட்டன்களிடம் ஷகீலாகூட பேமஸாக இருந்தார்தான். ஷகீலாவைக் கொண்டாடிய மலையாளிகள் இப்போது சாருவைக் கொண்டாடுகிறார்கள். தமிழர்களுக்கு என்ன வந்தது? அவர்கள் 'இலக்கிய சுப்பிரமணியசாமி' என்பதைத் தாண்டி எந்த மரியாதையையும் சாருவுக்குத் தரத் தயாராக இல்லை. 'நான் எவ்வளவு பெரிய ரவுடி தெரியுமா?' என்று ஒருவன் விடாமல் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்றால், அவன்தான் அந்த ஊருலே பெரிய டம்மிப் பீஸூ. He is not worth for anything.

‘திருவனந்தபுரத்தில் கூப்பிட்டாங்க... பாலக்காட்டிலே கூப்பிட்டாங்க... கொச்சியிலே கூப்பிட்டாங்க...’ (தமிழ்நாட்டில் ஒரு பயபுள்ளயும் ஒரு காலத்துலேயும் கூப்பிடாது). என்று பிலாக்கணம் வைப்பதற்கு பேசாமல் சாரு அங்கேயே குடியேறிவிடலாம். முல்லைப் பெரியாறுக்கு மலையாளிகளைப் பழிவாங்கிய மாதிரியும் இருக்கும்; தமிழகத்தில் ஒரு ஊளைச் சத்தம் குறைந்த மாதிரியும் இருக்கும்.

Premature ejaculation ஆக சாரு நிவேதிதா வெளித்தள்ளுவதை எல்லாம் புத்தகங்களாக்க மனுஷ்யபுத்திரனுக்கு வேண்டுமானால் அவசியம் இருக்கலாம். ஆனால் அதைக் கொண்டாட வேண்டிய‌வேண்டிய அவசியம் வாசகர்களுக்கு இல்லை.

பெரும்பாலான ஏழைகளைக் கொண்ட நாடு நம் நாடு. அவர்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது. அன்றாடம் கூலி உயர்வு கேட்டு அவர்கள் போராடினால் அடியும் உதையும்தான் கிடைக்கிறது. காலையிலிருந்து மாலை வரை உழைத்து வாங்கிய கூலியில் வயிறார உண்ட காலம் மாறி அன்றாடம் கத்தரிக்காய் குழம்புக்கே வழியில்லாமல் போய் விட்ட நிலையில், எழுத்தாளனுக்கு மட்டும் சமூகம் செய்யணுமாம். Ridiculous!! சமூகத்திடம் எதிர்பார்ப்பது கூட சரிதான். ஆனால் சமூகத்திற்கு நீங்க என்ன செய்தீங்க சாரு?

நீங்க குடியிருக்கிற வீட்டின் உரிமையாளரின் மகள்கள் உள்ளாடையில் சுய இன்பம் அனுபவித்து வடித்து விட்டது‌, பேருந்தில் செல்லும் ஒரு சாதாரண பெண்ணின் சேலையில் விந்து வடிப்பது இவற்றைத்தானே உங்கள் எழுத்துக்கள் பேசுகின்றன. இதுதான் தமிழக மக்கள் சந்திக்கும் பிரச்சனையா? சமூகம் உங்களைக் கொண்டாடவிடவில்லை என்று வருத்தப்படுகிறீர்களே? உங்கள் எழுத்துக்களைக் கொண்டு போய் சமூகத்திடம் கொடுத்து அம்மா...தாயே நான் இதை எல்லாம்தான் இத்தனை நாளாய் எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னைக் கொண்டாடுங்கள் என்று சொல்லுங்கள் உங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்...

இவ்வளவு சீர்கேட்டையும் ஒழுக்கக்கேட்டையும் கொண்ட எழுத்துக்களை ஆளும் கட்சி கனிமொழி முன்னிலையில் வெளியிடுவதால் ஆபாசம் இல்லாமல் ஆகி விடுமா?

மக்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன. அதை மறைத்து கொண்டாட்டங்களைக் கசிய விடுவதும், மக்களுக்காகப் போராடுகிறவர்கள் மீது அம்புகளை ஏவுவதும்தான் - ஆளும் வர்க்கங்கள் தங்கள் சார்பு எழுத்தாளர்களுக்கு இட்ட பணிகள். அதில் சாருவுக்கு போதை பொருள் சப்ளை பண்ணுகிற வேலை. அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார் சாரு.

Comments

18 comments

18
guna
சாரு நிவேதிதா ஒரு காமெடியன் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் விடுற பீலாக்களையும் நம்பி, ஜால்ரா அடிக்க ஒரு கூட்டம் பின்னாலேயே திரியுது. என்னத்தைச் சொல்ல? இவர் கேரளாவில் பேமஸ் என்று சொல்லும்போது, மளையாளிகளின் இலக்கிய அறிவு மீது பெரும் சந்தேகம் எழுகிறது..
SRIRASA
சாருவுக்கு இப்போது மட்டுமா? கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இதே வேலைதான். அப்படித்தான் ஒரு இருபது ஆண்டுகளுக்கும் முன் மதுரையில் மகாத்மா பள்ளியில் நிஜ நாடக இயக்க நாடக விழா நடந்து கொண்டிருக்கையில் விழாவின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத நாடகம் ஒன்றை 'இரண்டாவது ஆட்டம்' என்ற பெயரில் அரங்கேற்றி அரங்கை ஆபாசப் படுத்தினார். நாடகம் ஆரம்பிப்பதே கரமைதுனத்திலிருந்து... அப்புறம் ஹோமோ செக்ஸ் என்று அரங்கை அதிர வைக்க முயன்றார். பின்நவீனத்துவத்தைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகம் செய்கிறாராம். நாங்கள் சில நண்பர்கள் சேர்ந்து கொதித்தெழுந்து விட்ட சரமாரிகளில் மனிதர் தெறித்து ஓடியவர்தான்... மதுரைப் பக்கம் ரொம்பநாளாய் ஆளையே காணோம். அப்போது அவரிடம் இதே நாடகத்தை மேலமாசி வடக்குமாசி வீதி முக்கில் மேடை அமைத்துத் தருகிறோம் போடத் தயாரா என்றோம்... ஆனால் அன்று கலை உரிமையின் பேரில் தீவிர இடதுசாரிகள் போல் நடித்த வெ.மு.பொதியவெற்பன், விளிம்பு நிலைக் கலைஞரெனத் தம்மை அழைத்துக் கொள்ளும் கே.ஏ.குணசேகரன் போன்றோரெல்லாம் அவர் செய்ததற்குச் சப்பைக் கட்டுக்கள் செய்து வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். கோமல் சாமிநாதன் போன்றவர்கள் மௌனமாய் அதிர்ந்துபோய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மிக நன்றாக நடந்த அந்த நாடக விழா இது போன்ற நாசகாரக் கும்பல்களால் திட்டமிட்டுக் குலைக்கப்பட்டது. இந்த விழாவின் அதிர்ச்சியில் ரொம்பநாள் மதுரையில் நாடக விழாக்களே நடக்காமல் இருந்தது... சாரு இன்னமும் கூட மதுரையை மறந்திருக்க மாட்டார்... அப்புறம் இருபது வருடங்கள் கழித்தும் அவரது தீராநதி பேட்டியில், சமீபத்திய விகடன் பேட்டியில் அதைப்பற்றிப் புலம்பித்தள்ளியிருக்கிறார்... அவர் எப்போதுமே அம்மணக்குண்டி எழுத்தாளர்தான்... சரோஜாதேவி வகையறாக்கள் நல்ல எழுத்தாளர்கள். அவர்கள் தங்களுக்கான இலக்கிய அந்தஸ்து எதையும் எவரிடமூம் கோரிப் பெறுவதில்லை. ஏதே ரெண்டு எழுதினோம். காசு சம்பாரித்தோம் என்பதோடு, அவர்களின் நோக்கம் முடிந்து விடுகிறது...இவர்கள் போன்றவர்கள் தான் ஆபத்தானவர்கள்...
karunakaran
I read it in one blogspot...//
உண்மையில் சாரு இந்தக் காலப் பகுதிகளில் எழுதிய அனேக பத்திகளும் கட்டுரைகளும் வெறும் பித்தலாட்டம் மட்டுமே. நித்தியானந்தர் புற்று நோயைக் கூடு விட்டு கூடு பாய்ந்து குணப்படுத்தினார் என்பது தொடங்கி தனது புத்தகங்களின் விற்பனை நித்தியானந்தரின் சீடராகவோ / பக்தராகவோ மாறிய பின்னர் எவ்வாறு கூடியது என்பது வரை அவர் உளறியதை நினைத்தால் அவரின் எந்த ஒரு தீவிரமான வாசகனுக்கும் கூட வேடிக்கையாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது நித்தியானந்தரின் வீடியோ சர்சைகளின் பின்னர் திடீரென்று பல்டி அடித்து நித்தியானந்தர் பற்றி தான் முன்னரே அறிந்து தான் மெல்ல மெல்ல அவரை விட்டு விலகியதாகவும், அவர் தனக்கு காய்ச்சல் வந்திருந்தும் கூட தன் மனைவி அவந்திகாவை ஆசிரமத்தை விட்டு விலகாமல் “அய்யாவுக்கு சுகமாகி விடும்” என்று கூறினார் நித்தியானந்தர் என்றும் இப்போதும் கூறும் சாரு, முன்னர் உலகில் உள்ள எல்லாப் பிரச்சனைகளுக்கும் சர்வர்ரோக நிவாரணி போன்று நித்தியானந்தரை முன் மொழிந்ததை இட்டு இது வரை எந்த வருத்தத்தையும் வெளியிடவில்லை. //
Rajesh srinivasan
nethiyadi.
GOKULPRASAD
ennavendru solvathu?
charuvin irattai nilai eppothum vasagarhalal ariyapatta ondru than.
"manam kothi paravayil" myskinai paaratti ezhuthi irunthaar.
saroja devi puthaham endru "thehathai" vimarsitha adutha thiname mysskinai patri thitta arambithu vittar.
yaravathu soru pottu anuppunga.
pichakaranga tholla thaang mudiyala.
nithyanandavai patri oru kaalathil paaratti ezhuthiyavar thaane ivar?
oru velai sex vishayathil avanukkum ivarukkum otrumai iruppathu kaaranamaaha irukkalam
அரசன்
சாரு ஒரு நல்ல மன நல மருத்துவரைப் பார்ப்பது நல்லது. மருத்துவரைப் பார்ப்பதர்கு முன் சில ப்ளாக்கர்ஸ்சையும் அவர் கூட அழைத்துச் செல்வது நல்லது.
மாற்றுக்கருத்து ஆசிரியர் குழு
இந்த கட்டுரை மிக சிறந்த பதிவு ஆகும்.சாரு போன்ற போலிகள் கண்டிப்பாக அம்பலப்படுத்த வேண்டும். தமிழ் உலகத்திற்கு தேவை நல்ல எழுத்தாளர்கள் ,இவரை போன்ற கலையை மாசுபடுத்தகூடியவர்கள் அல்ல.
ஷாகுல் எம் காசிம்
"சேட்டன்களிடம் ஷகீலாகூட பேமஸாக இருந்தார்தான். ஷகீலாவைக் கொண்டாடிய மலையாளிகள் இப்போது சாருவைக் கொண்டாடுகிறார்கள்" ஒப்பீடு சரியானதே......
பிரபு
// சாரு அங்கேயே குடியேறிவிடலாம். முல்லைப் பெரியாறுக்கு மலையாளிகளைப் பழிவாங்கிய மாதிரியும் இருக்கும் //
மலையாளிகளுக்கு நல்ல பரிசு....
இளநங்கை
தரமான கட்டுரையாகத் தெரியவில்லை. வடிவேலு போன்ற நகைச்சுவையாளர்களின் வரிகளைக் கொண்டு நானும் ரவடி நானும் எழுத்தாளன் என்பதாக சாருநிவேதிதாக பறையடித்துக் கொண்டதாக எழுதும் போக்கு கவர்ச்சியாக மட்டுமே உள்ளது. மலையாள உலகம் அவரைக் கொண்டாட காரணத்தைத் தெளிவுப்படுத்தியிருக்க வேண்டும். சிறந்த நாவல்கள் அங்கு தோன்றியுள்ளன என்பது வரலாறு. அவர்களுடைய இலக்கிய வாசிப்பு, தரம் குறித்து கேள்வி கேட்பதற்கு முன் சிறிது சிந்தித்து இருக்க வேண்டும். சாரு போன்றோர்களுக்கான அங்கீகாரத்தை அவர்கள் உண்மையில் அளித்தார்களா? சாரு மீது உங்களின் கோபம் மலையாள வாசகர்களின் தரத்தைச் சந்தேகிப்பது நியாயமாகப் படவில்லை. நம்மைவிட மொழியையும் படைப்புகளையும் மதிப்பவர்களே.
keetru nandhan
போலிப் பெயர்களிலும், நாகரிகமற்ற வார்த்தைகளிலும் இடப்பட்ட பின்னூட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. யுவகிருஷ்ணா மற்றும் கீற்று வாசகர்களுக்கு: படைப்புகளைப் படித்து, பிரசுரிப்பதற்கு நேரம் போதாத நிலையில், பின்னூட்டங்களுக்கு அதிகம் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. தவறான பின்னூட்டங்கள் குறித்து [email protected] முகவரிக்குத் தெரியப்படுத்தினால், அவை நீக்கப்படும். கீற்றின் இலக்கு பொருத்தமற்ற திருவுருக்கள்தான்; அவற்றின் ரசிகர்கள் அல்ல. ரசிகர்களை கீற்று பரிதாபத்துடனும், கவலையுடனுமே அணுகுகிறது.
யுவகிருஷ்ணா ஒரிஜினல்
கீற்றும், அதன் வாசகர்களும் **** மனோபாவத்துக்கு என்றோ மாறிவிட்டார்கள் என்பதற்கு மேலே என் பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் பின்னூட்டங்களும், என்னைத் தாக்கி எழுதப்பட்டிருக்கும் பின்னூட்டங்களும் மற்றொரு சான்று.

அனேகமாக இவற்றை கீற்று நிர்வாகத்தினரே செய்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு
லக்கிலுக் (எ) யுவகிருஷ்ணா
ஐ.எஸ்.ஓ. 9001 சான்று பெற்ற ஒரே ஒரிஜினல்.
யுவகிருஷ்ணா ஒரிஜினல்
//ரசிகர்களை கீற்று பரிதாபத்துடனும், கவலையுடனுமே அணுகுகிறது.//

அப்படியாயின், கீற்றுவை கீற்றுவே பரிதாபத்துடனும், கவலையுடனும் அணுகிக்கொள்ள வேண்டியதுதான் :sad: இப்படிக்கு லக்கிலுக் (எ) யுவகிருஷ்ணா ஐ.எஸ்.ஓ. 9001 சான்று பெற்ற ஒரே ஒரிஜினல்.
|2011-01-24 13:15:59
யுவகிருஷ்ணா ஒரிஜினல்
என்ன ரமேஷ் பதிலை காணோம். *** ***** **** ********

லக்கிலுக் (எ) யுவகிருஷ்ணா
Vishwanathan
சாருவையெல்லாம் ஒரு ஆளா மதித்து ஒரு கட்டுரை எழுதுவது டைம் வேஸ்ட். தோழர் பாமரன் சொன்னமாதிரி சாரு ஒரு இலக்கிய சு.சுவாமி; காமெடி பீஸு. அவ்ளோதான்.
asokan
charuvai anantha vikatan ponra oralavu tharamulla pathirikkaikal uthara vendum.
Mathivanan
மிகச் சிறந்த பதிவுகள். அவர் எப்போது இலக்கியம் படைத்தார் என்று தெரியவில்லை. என்னுடைய கவலையெல்லாம் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அல்லது சொல்லப்படும் புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றித்தான்.
tm bala
ஷாரு ஒரு செரொ (zero) யென்பது அவரின் zero degree செருப்படியொடு சொல்லி விட்டது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.