வணக்கம்!
நான் 'சுதா காந்தி'
'இணைய வழி கல்வி' குறித்து பல கேள்விகள் கருத்துகள் உலவி வந்த நிலையில், எனக்கு இணைய வழி கல்வி 'குழந்தைகளின் கற்றலுக்கு ஏற்றதல்ல' என்ற நிலைப்பாட்டை, சில குழந்தைகளுடன் பேசிய போது பெற்றேன். அதன் தொடர்ச்சியாக, இணைய வழி கல்வி என்பதே, தேர்வு மதிப்பெண் என்ற அடிப்படையில் அவசியமாகிறது என்ற பார்வையும் கொண்டேன்.
அதை குழந்தைகளே சொல்லும் வகையில் இந்த ஆவணப் படத்தை உருவாக்க முற்பட்டேன்.
என்னுடைய முதல் முயற்சி இந்த ஆவணப் படம். மேலும் பட இயக்கம் குறித்து பெரிய அறிவு இல்லை என்பதால், இது பெரிய நேர்த்திகளுடன் இருக்காது, எனினும் கருத்தை கொண்டு சேர்த்து விட வேண்டும் என 'கடிவாளம்' முடித்து உங்கள் பார்வைக்கு வைத்தும் விட்டேன்.
இதன் தொடர்ச்சியாக வரும் சில கேள்விகளுக்கும் இதே முறையில் ஆவண படம் உருவாக்கி அதை தெளிவு படித்த நினைக்கிறேன். ஆகவே, நண்பர்களே, உங்கள் மேலான கருத்துக்களை என் 'முகநூல் பக்கத்தில்' தெரிவித்தால், அதை ஒரு ஆவணமாகக் கொண்டு அடுத்தடுத்த படைப்புகளை இன்னும் நேர்த்தியுடன் தர தலைபடுவேன்.
அதன் யூடியூப் லிங்க்.
என் முகநூல் பக்க லிங்க்.
https://www.facebook.com/660916014004788/posts/3045193988910300/
அனைவருக்கும் நன்றி!
- சுதா காந்தி