2008 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 26 ஆம் நாள் நமது மும்மை நகரம் மிகவும் மர்மமான முறையில் திடீரென தாக்கப்பட்டது. இதில் இந்தியாவில் 16 குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய இந்துத்துவ தீவிரவாதிகளைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்திய காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரேயும் கொலை செய்யப்பட்டார். அவர் அப்போது மராட்டிய மாநில தீவிரவாதத் தடுப்புப்படையின் தலைவராக இருந்தார்.

மும்பைத் தாக்குதலே ஹேமந்த் கர்கரேயைக் கொலை செய்வதற்கான முன்னேற்பாடு என்பதை நிரூபிக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தபோது, ‘கசாப்’ஐ திடீரென இரகசியமாகத் தூக்கிலே போட்டதாகக் கூறி, உடனேயே புதைத்து விட்டாகவும் செய்திகளைப் பரப்பி விட்டார்கள். கசாப்போடு மொத்த விவகாரத்தையும் புதைத்துவிட்டார்கள். இதில் புதைந்துபோன பல உண்மைகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

நமது இந்திய அரசு திடீரென ஒரு அதிர்ச்சியை (21-11-2012 காலை 7.30 மணிக்கு) மக்கள் மன்றத்தில் வைத்தது. அதுதான் அஜ்மல் கசாப்-ஐ யாருக்கும் தெரியாமல் தூக்கிலிட்டது. யாருக்கும் தெரியாமல் என்பதில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அவர்களும் அடங்குவார்கள்.

நாட்டின் நிருவாக இயந்திரத்தை இயக்கும் மாலுமி, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே தொலைக்காட்சியைப் பார்த்துத் தான் 26/11 மும்பை தாக்குதலில் பழி சுமத்தப்பட அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதைத் தெரிந்து கொண்டாராம்.

டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைப் போல் மிகவும் முக்கியமானவர் சோனியா காந்தி. ஏனெனில் நாட்டை ஆளும் கூட்டணியின் தலைமைக் கட்சி காங்கிரஸ்-ன் தலைவர். சோனியாகாந்தி அவர்களும் தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டராம். அவ்வளவு இரகசியமாக ‘கசாப்’-ஐ தூக்கிலிட வேண்டிய காரணம் என்ன?

கருணை மனு

இதில் அனைவர் கண்களிலும் மண்ணைத் தூவும் மற்றொரு செய்தி என்னவெனில், 'கசாப்' தனது தண்டனைக்கு எதிராக நமது குடியரசுத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்த 'கருணை மனுவும்' நிராகரிக்கப்பட்டு விட்டதாம். இந்த நிராகரிப்பு, நவம்பர் 8 ஆம் நாள் நடந்தது என நமக்கு 21 ஆம் நாள் செய்தி சொல்லின. ஆனால் அடுத்த நாள் நமது பத்திரிகைகள் எல்லாம் நவம்பர் ஐந்தாம் நாளே அந்த நிராகரிப்பு நடந்ததாக குறிப்பிட்டன. இதில் எது உண்மை என யாரும் கேட்டிடக் கூடாது. ஏனெனில் இந்தியாவில் அப்படியொரு நீதி நிருவாகம் நடந்து கொண்டிருக்கின்றது. உண்மையைச் சொன்னால் திரைமறைவு நிருவாகம் ஒன்றை மத்திய உளவுத்துறை நடத்திக் கொண்டிருக்கின்றது.

குடியரசு தலைவர் அவர்களுக்கு, அவர்கள் அலுவலகத்திற்கு அனுப்பட்ட, கருணை மனு நிராகரிக்கப்பட்டது தெரியுமோ என்னவோ, யாமறியோம்.

அந்தத் திறைமறைவு நிருவாகம் அவ்வளவு அழுத்தம் நிறைந்தது போலும். தன் முன்னால் வரும் கருணை மனுவை ஏன் நிராகரித்தேன் என்பதற்கான காரணங்களைக் குடியரசு தலைவர் மக்கள் மன்றத்திற்கு சொல்லியாக வேண்டும். இஃது இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வரும் நியதி. ஆனால் இங்கே பத்திரிகையாளர்கள், தகவல் அறியும் உரிமையின் கீழ் தகவல் கேட்ட பின்பும் அது கிடைக்கவில்லை (இந்தக் கட்டுரை அச்சேறும் வரை அது தான் நிலை.)

இன்று கசாப், நாடறிந்த கொலைகாரன். அப்படிதான் ஊடகங்கள் மக்கள் மன்றத்தை நம்ப வைத்துள்ளன. அவனது கருணை மனுவை நிராகரித்த தேதியையும், காரணங்களையும் அத்துணை மறைவாக வைத்திட வேண்டிய காரணம் என்ன?

கசாப்-ஐ இரகசியமாகத் தூக்கிலிடாமல் வழக்கமான தூக்குத் தண்டனைகளைப் போல், தேதியை மக்களுக்கு அறிவித்துத் தூக்கிலிட்டால், என்ன நடக்கும்? அப்போதும் ஊடகங்கள் நமக்குக் காட்டும் முகங்கள், ஏதோ 26/11க்கு நீதி கிடைத்துவிட்டதாக பாராட்டித்தான் இருக்கும். யதார்த்தங்கள் இப்படி இருந்திடும் போது, அத்துணை அவசரமாக இரகசியமாகத் தூக்கிட வேண்டிய காரணம் என்ன?

அரசியல் காரணம்!

நம் நாட்டில் எது நடந்தாலும் அதற்கோர் அரசியல் பின்னணி இருப்பது வழக்கம்.

இந்த வகையில் கசாப்-ஐ இரகசியமாகத் தூக்கில் போட்டதற்கும் ஓர் அரசியல் காரணம் சொல்லப்படுகின்றது. அது நவம்பர் 22 ஆம் நாள் நாடாளுமன்றம் கூடிட இருந்தது. எதிர்கட்சிகள், நம்பிக்கை இல்லா தீர்மானம் உட்பட பல கபளீகரங்களை செய்திட இருந்தன. இதனால், கசாப்-ஐ தூக்கில் போட்டு எல்லாக் கட்சிகளிடமும் ஓர் இணக்கத்தைச் சம்பாதிக்கலாம் என அரசு முடிவு செய்திருந்தது. அப்படியானால், சோனியாவும், மன்மோகனும் நாங்கள் தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டோம் எனச் சொன்னது பொய்யா?

ஊர் அறிய இதைச் செய்திருந்தால், இதனால் இன்னும் அதிகமான இணக்கம் கிடைத்திருந்திருக்கும். மக்களும், இப்போது போல் அரசை ஆகோ, ஓகோ எனப் பாராட்டி இருப்பார்கள் என்பதே உண்மை. இத்தனையும் இருக்கும் போது ஏன்? இரகசியமாகத் தூக்கிலிட வேண்டும்.

ஆகவே இரகசியமாகத் தூக்கிலிட்டதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றிற்குள் புகுமுன் கசாப்-இன் பக்கம் சற்றே திரும்புவோம்.

அவன் பட்ட சித்திரவதைகளால் ஏற்கெனவே மடிந்து கொண்டிருந்தான். பொய் வாக்குமூலங்களை வாங்குவதற்கு அவனைப் படுத்திய சித்திரவதைகள் அவை.

தான் சற்றும் அறிந்திடாத ஒரு குற்றத்திற்கு இப்படி சித்திரவதை செய்கின்றார்களே என்ற மன வேதனையில் அவன் எப்போதோ மனதால் மடிந்து போயிருந்தான். அவன் நீதிமன்றங்களில், நீதிபதியிடம் பேசிட வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் என்னை தூக்கில் போட்டுவிடுங்கள் என்றே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். மரணந்தான் அவனுக்கு விடுதலை, நிம்மதி!

கிடைத்த மரணம் சித்திரவதைகளிலிருந்து விடுதலை. இன்னும் சொன்னால் சிறைச்சாலையில் அவன் அடிக்கடி தன் தலையை சுவற்றில் மோதிக்கொண்டான். இதனை அசிஸ் சவுதிரி என்ற எழுத்தாளர், (இவர் மும்பை தாக்குதலில் தன் உறவினரில் சிலரை இழந்தவர்) கூறுகின்றார்: TH:23/11/2012.

யார் இந்த கசாப்?

இந்த ‘கசாப்’ நமக்குச் சொல்லப்படுவதைப் போல், பாகிஸ்தானில் இருந்து 2008 ஆம் ஆண்டு மும்பையைத் தாக்குவதற்காக வந்தவனல்ல. அவன் 2006 ஆம் ஆண்டு வறுமை தாளாமல் நேப்பாள்- என்ற நமது அண்டை நாட்டுக்கு பிழைப்புத்தேடி வந்தவன். அவன் மட்டுமல்ல இப்படி எத்தனையோ பேர் பாகிஸ்தானிலிருந்து வயிறு பிழைக்க நேப்பாளுக்கு வந்திருக்கின்றார்கள்.

இவர்களில் யாரும் நேப்பாளத்திற்குள் ஊடுருவி விடவில்லை. அவர்கள் அத்தனை பேருமே முறையான document-கள் வழி நேப்பாளத்திற்குள் வந்தவர்கள்தாம். பல நேரங்களில் அவர்களை நேப்பாள அரசு கைது செய்து முறையான வேலை அனுமதியைப் பெற்று வந்திட வேண்டும் என திரும்ப அனுப்பியுள்ளது.

இப்படிக் கைது செய்யப்படுவர்களில் சிலரை இந்திய உளவுத்துறை இங்கே கடத்தி வந்துவிடுவது உண்டு. சிலரை இந்தியாவைத் தாக்கிட நேப்பாளத்திற்கு வந்ததாகவும், பின்னர் நேப்பாளத்திலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருந்தாகவும் கூறி முறையாக அழைத்து வருவதும் உண்டு. எப்படி அழைத்து வந்தாலும், அவர்களை நேப்பாளிலிருந்து அழைத்து வந்ததாகவோ, கடத்தி வந்ததாகவோ பதிவு செய்வதில்லை. இத்தனைக்கும் நமது இந்தியாவிற்கும் நேப்பாளத்திற்கும் Deportation  Agreement என்று சொல்லக் கூடிய தேவைப்படும் நபர்களை அனுப்பித் தந்திட வேண்டும் என்ற ஒப்பந்தம் இருக்கின்றது.

ஆனால் நம்மவர்கள் நமது உளவுத்துறையின், ஏற்பாட்டின் கீழ் அவர்களை இந்தியாவில் ஒரு பயங்கர பதுங்குமிடத்தில் வைத்துக் கைது செய்ததாகவே காட்டுவார்கள். இந்த மொத்த விவகாரத்தையும் தி வீக் ‘The Week’ பத்திரிகை வெளியிட்டிருக்கின்றது.

அப்படி நேப்பாளிலிருந்து கொண்டு வரப்படுபவர்களை என்ன செய்வார்கள்? அவர்களை இந்தியாவிலிருக்கும் பல்வேறு சித்திரவதைக் கூடங்களிலும் வைத்து சித்திரவதைச் செய்வார்கள். பின்னர் அவர்களைத் தங்கள் விரும்பும் இடத்தில் வைத்து, விரும்பிய குண்டு வெடிப்புகளில் சம்மந்தப்படுத்திக் காட்டுவார்கள். உண்மையில் அந்தக் குண்டு வெடிப்புகளை நடத்தியவர்கள், அபிநவ்பாரத் போன்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்.

இப்படித்தான் அஜ்மல் கசாப் சிக்க வைக்கப்பட்டான். அவன் 2006 முதலே நமது உளவுத்துறையின் கைகளில் இருக்கின்றான், என்பதை நமது முன்னாள் காவல்துறை அதிகாரி ஷி.வி.முஷ்ரிப் அவர்கள் எழுதிய “கர்கரேயை கொலை செய்தது யார்?” என்ற நூலில் தெளிவுபடுத்துகின்றார்.

நேப்பாளத்திலுள்ள உச்ச நீதிமன்றத்தில் இவருடைய வழக்கு 2006இலேயே நடந்தது. இவருக்காக பாகிஸ்தானைச் சார்ந்த, வழக்கறிஞர் சி.வி.பாரூக் என்பவர் வந்து வாதிட்டார். ஆனால் அந்த வழக்கில் நேப்பாள உச்ச நீதிமன்றம் கசாப்-ஐ விடுதலை செய்ய மறுத்து விட்டது. காரணம் கேட்டபோது “Not on the Merits of the Case, but on the Technical Grounds” எனக் கூறியது. இதன் பொருள், அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பதனால் அல்ல; மாறாக, அவரை விடுதலை செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முறையாக அமையவில்லை என்பதனால்தான். இப்படி நேப்பாளத்தில் உச்சநீதிமன்றம் வரை விவாதித்திற்குள்ளானவர் 2008 இல் தாக்குதல் நடந்தபின் கையில் ஒரு AK 47 ரக துப்பாக்கியுடன் அத்துணை ஒய்யாரமாக நடந்து வருவானாம். இருவர் படம் எடுப்பார்களாம். நம்புங்கள் எங்களை என்கின்றார்கள் மும்பை தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தவர்கள். கசாப்-ஐ 2006இலேயே இந்திய உளவுத்துறையிடம் நேப்பாள் அரசு ஒப்படைத்தது என்கின்றார் வழக்கறிஞர் சி. வி. பரூக். Source:  The News Revalpindi, Tol: DEC16, 2008.

கர்கரேயைக் கொலை செய்தது யார்? என்ற நூலை நாம் தமிழகத்தில் அறிமுகப்படுத்திய நாள் முதலே, நாம் ஒரு செய்தியை நினைவுபடுத்தி வருகின்றோம்.

மும்பை CST என்ற சக்கரவர்த்தி சிவாஜி இரயில் நிலையம் என்ற மும்பை விக்டோரிய ரெயில் நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர்கள் முகத்தை நன்றாக மூடிக்கொண்டுதான் தாக்குதலை நடத்தினார்கள். அவர்கள் துப்பாக்கிகளை இயக்கிய வேகம் யாரும் அவர்களைப் படம் எடுக்கும் நிலையில் இல்லை. ஆகவே அஜ்மல் கசாப்-ஐ அங்கே ஜோடித்திருக்கின்றார்கள், வீடியோக்களில் தங்கள் விளையாட்டுக்களைக் காட்டி. இதனை மும்பை ரெயில் நிலையத்தில் உணவு விடுதி நடத்தி வரும் ஷஷிகுமார் சிங் என்பவரும் உறுதி செய்துள்ளார்.

தாக்குதலை நடத்தியவர்களை போட்டோ எடுத்து யார்?

மும்பை ரெயில் நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர்களை போட்டோ எடுத்தாகக் கூறப்படுபவர்கள் இரண்டு பேர். இவர்கள் இருவரும் இருவேறு பத்திரிக்கையைச் சார்ந்தவர்கள்.

ஒருவர் மும்பை மிரர் என்ற ஆங்கில பத்திரிகையைச் சார்ந்தவர்: பெயர் செபாஸ்டின், டி சவோசா. மற்றொருவர் “புடாரிபூன்” என்ற மராட்டிய பத்திரிகையைச் சார்ந்தவர். இந்த இரண்டு போட்டாக்களும் ஒன்று தான். அதாவது அது அவர்களின் கைகளில் (மேற்படி)யாளர்களால் திணிக்கப்பட்டவை. ஆனால் வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, "இந்த இருவரையும் சாட்சியம் கூறிட கொண்டு வாருங்கள்! அவர்களிடம் அவர்கள் எப்படிப் படம் எடுத்தார்கள் என்பதை விசாரிக்க வேண்டும்" என கேட்டார்கள், அஜ்மல் கசாப்பிற்காக அரசு நியமித்த முதல் வழக்கறிஞர்கள்.

அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்திட இயலாது என அடம்பிடித்தார் நீதிபதி. "அவர்களை குறுக்கு விசாரணைச் செய்ய அனுமதிக்க மாட்டோம். அவர்கள் எழுதி தந்துள்ள அறிக்கையை அப்படியே அட்டி இன்று ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார் நீதிபதி தகல்யானி. "அவர்களை நீதிமன்றம் கொண்டு வந்தாக வேண்டும். அவர்களிடம் போட்டோ எப்படி எடுத்தார்கள் என்பதையெல்லாம் விசாரித்தாக வேண்டும்" என அடம்பிடித்தார் அரசு தரப்பில் கசாப்பிற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்.

நீதிபதி அந்த வழக்கறிஞரை மாற்றினாரே அல்லாமல், போட்டோ எடுத்தவர்களை சாட்சியம் சொல்ல தருவிக்கவில்லை. அடுத்து இன்னொரு வழக்கறிஞரை நியமித்தார்கள். அவர் தான் அப்பாஸ் காஸ்மி. அவர் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தார். ஒன்று அஜ்மல் கசாப்-ஐ ஒரு முறையேனும் சந்திக்க வேண்டும். அதுவும் தனிமையில். இரண்டு, போட்டோ எடுத்தவர்களை நேரில் விசாரிக்க வேண்டும்.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி இரண்டு கோரிக்கைகளையுமே நிராகரித்தார். அத்தோடு அந்த வழக்கறிஞரையும் நீதிபதி நீக்கிவிட்டார். இறுதியில் கசாப்பின் தரப்பில் பொம்மைதாம் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பெயர் K.P. பாவர். TH: 1/12/009. அவர் கசாப்-ஐ ஊசி போட்டுக் கொல்ல வேண்டும் என்று கசாப்பிற்காக வாதாடினார். என்னே நீதி இங்கே!.

அரசே நியமித்த வழக்கறிஞர் அரசே வெளியே தள்ளியது...?

26/11 வழக்கை நடத்திய நீதிபதி எம்.எல்.தகாலியானி அவர்கள், தன் சார்பில் ஒரு விஷயத்தை ஏற்க வேண்டும் என்றார் வழக்கறிஞர் அப்பாஸ் காசிமி அவர்களிடம். அது, "இந்த வழக்கில் 71 சாட்சிய அறிக்கைகளை வைத்திருக்கின்றோம். அஜ்மல் கசாப் சார்பில் அவற்றை ஏற்றுக் கொள்ளப்பட்ட சாட்சியங்களாக அங்கீகரிக்க வேண்டும். இந்த 71 சாட்சிய அறிக்கைகளையும் தந்த சாட்சியங்களை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும், அவர்களை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் எனக் கேட்கக் கூடாது."

இதனையும் அப்பாஸ் காஸ்மி ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் நீதிமன்றத்திலேயே பகிரங்கமாக வழக்கறிஞர் அப்பாஸ் காஸ்மி அவர்களைக் கண்டித்தார் நீதிபதி தகல்யானி.        

20,000 பக்கங்களைப் படிக்க.

கசாப் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை 20,000 பக்கங்களைக் கொண்டது. இதைப் படிக்க, சிறப்பு நீதிமன்ற நீதிபதி தகால்யானி கொடுத்தது எட்டே நாள்கள் தாம். இந்த எட்டு நாள்களில், மூன்று நாட்கள் கசாப்-இன் வயது பற்றிய விவகாரத்தில் கடந்துவிட்டன. மீதமுள்ள ஐந்து நாள்களில் 20,000 பக்கங்களைப் படித்திட முடியாது என்ற கோரிக்கையை அவசர நீதிபதி தகாலியானி ஏற்றுக் கொள்ளவில்லை ஐந்து நாள் கால அவகாசத்தை அப்பாஸ் காசிமி ஏற்றுக் கொள்ளவில்லை. SOURCE: FRONTLINE SEPT 16, 2012. GAISIW Kasab case

இதுவும் அப்பாஸ் காசிமியை வெளியேற்றிட, அதாவது கசாப்பிற்காக வாதாடுவதிலிருந்து அப்பாஸ் காசிமியை வெளியேற்றிட தகல்யானி கண்டுபிடித்த இன்னொரு காரணம். ஏனெனில் தகாலியானியை நியமித்தவர்கள் தூக்குத் தண்டனையை விரைந்து வழங்கிட வேண்டும் எனக் கட்டளை இட்டிருந்தார்கள்.

கசாப் -இன் வயது: நமக்குப் பொதுவாகக் காட்டப்படுவதைப்போல் கசாப் ஒரு வளர்ந்த வாலிப வயதைச் சார்ந்தவன். அவனுக்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் அவன் ஒரு ‘ஜீவனைல்’ என்ற குழந்தைகள் வயதிற்குள் வரும் ஒரு பையன் என்றே நினைத்தார்கள். ஆகவே அவனை நேரடியாகத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பை நீதிபதி தகாலியானிடம் கேட்டார்கள். நீதிபதி சந்திக்க விடமாட்டேன் எனக் கூறிவிட்டார். இதனால் கசாபுடைய வயதை அறிந்திட இருந்த அனைத்து வழிகளும் அடைக்கப் பட்டுவிட்டன.

ஆனால் நமது சட்டங்கள் குறிப்பாக “குழந்தைக் குற்றவாளிகள் சட்டம் 2001” என்ன சொல்லுகின்றது என்றால், குற்றவாளியின் வயதை சரியாக தெரிய வேண்டும் என்ற விண்ணப்பம் வைக்கப்படுமேயானால், அதனை நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்திட வேண்டும். உண்மையான வயதை அறிந்து ஆவணங்களில் கொண்டு வந்திட வேண்டும்.

ஆனால் நீதிபதி தகயல்யானி தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிட விரும்பினார். வயது குறித்த மனுதாக்கல் செய்யப்பட்ட அதே வேகத்தில் அதை நிராகரித்தார்.

அஜ்மல் கசாப்பிற்காக நமது இந்திய அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அப்பாஸ் காஸ்மி, மேல் முறையீட்டுக்குத் தயாரானார். உடனேயே சிறப்பு அரசு வழக்கறிஞர் யுஜ்ஜவால் நிக்காம் நீதிபதி தகல்யானி முன், அஜ்மல் கசாப்பின் வயதை அறியும் மனு ஒன்றை வேகமாகத் தாக்கல் செய்தார்.

இவ்வளவு அவசரப்பட்டதற்குக் காரணம் அஜ்மல் கசாப்பின் உண்மை வயது எங்கே வெளியே வந்து விடுமோ, எங்கே நாம் அவனை விரைந்து தூக்கிலிடுவது சிக்கலாகிவிடுமோ என்ற எண்ணங்கள்தாம்.

அஜ்மல் கசாப்-ஐ விரைந்து தூக்கிவிட்டால் தான், இங்கேயுள்ள பலரைக் காப்பாற்றிட இயலும். ஆகவே அரசு வழக்கறிஞர் யுஜ்ஜவால் நிக்காம் மனுவை (அதாவது அஜ்மல் கசாப் இன் வயதை அறியும் மனுவை) தனது சார்பில் பதிவு செய்தார். அதே வேகத்தில் அந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அஜ்மல் கசாப் இன் வயதை அறிந்திட ஏற்பாடு செய்தார்கள். அவன் குழந்தை குற்றவாளி வயதைக் கடந்த வயதுக்கு வந்துவிட்டான். “வயது சுமார் 21” என அறிவித்தார்கள். SOURCE: FRONT LINE: Sept 16, 2012.

யார் சொன்னது எனக் கேட்டபோது எக்ஸ்ரே வல்லுநர்கள் சொன்னார்கள் என்றார்கள். "அவர்களில் ஒருவரை நீதிமன்றத்தில் நிறுத்தி ஒரு நிமிடம் கேள்வி கேட்கலாமா" என்று கோரியபோது முடியாது, கூடாது எனக் கூறிவிட்டார்கள்.

"சரி அவர்கள் தந்த எக்ஸ்ரே அறிக்கையை வேறு ஒரு நிபுணரிடம் காட்டி ஒரு கருத்தைக் கேட்கலாமா? நீதியின் பெயரால் ஒரே ஒரு வாய்ப்பாவது வழங்கப்படுமா? அந்த X ray -ரிப்போர்ட்டின் உண்மை நகல் ஒன்று கிடைக்குமா?" எனக் கேட்டபோது, அதற்கும் அனுமதிக்கவில்லை. "நீ வெளியே போ" என அஜ்மல் கசாப்புக்காக வாதாட அவர்களே நியமித்த வழக்கறிஞரை தூக்கி வீசிவிட்டார்கள்.

இந்த தகவல்களைத் தரும் FRONTLINE இப்படிக் கூறுகின்றது “Getting other Experts Opinion may have helped kasmi in contesting the technical evidence”. ஏனைய நிபுணர்களின் கருத்தைத் தெரிந்திடுவது. காசிமிக்கு நீதிமன்றத்தில் காட்டப்படும் “டெக்னிக்கல்” சாட்சியங்களை எதிர்த்து வழக்காட பெரிதும் உதவி செய்திருக்கும். FRONT LINE; Sept 16, 2012. வயதைப் பொறுத்தவரை மருத்துவ சான்றிதழை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது வரையறுக்கப்பட்ட மருத்துவ நியதிகள். ஒரு குழந்தை குற்றவாளியை தூக்கில் போடுவது எல்லா விதத்திலேயும் தடுக்கப்பட வேண்டிய ஒன்று. அதேபோல் கசாப்பும் இன்னும் 9 பேரும் முதலில் ஒரு கப்பலில் பாகிஸ்தானிலிருந்து வந்தார்கள். பின்னர், அந்தக்கப்பலில் இருந்து வெளிபோந்த குயூபர் போட்டில் வந்தார்கள் -தீவிரவாதிகள் என கதை கட்டினார்கள்.

இந்த குயூபர் போட்டையும் பார்வையிடவேண்டும் என காசிமி கேட்டார். அதேபோல், இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 27 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட எல்லாத் தளங்களையும் பார்வை இடவேண்டும் எனக் கோரினார். இதற்கெல்லாம் நீதிபதி தந்த ஒரே பதில் - நீ ஒத்துழைக்கமாட்டேன் என்கின்றாய். வெளியே போ.

மூத்த வழக்கறிஞர் Fali S.நரீமான், அப்பாஸ் காசிமியை நீக்கிய விதத்தைக் காரணங்காட்டியே உயர் நீதிமன்றம், இந்த மொத்த தீர்ப்பையும் நிராகரித்திருக்கலாம். ஆனால் ஆச்சர்யப்படக் கூடிய அளவில் உயர்நீதிமன்றம், இந்த மொத்த விவகாரத்தையும் கண்டுகொள்ளவே இல்லை.

இதில் அதிர்ச்சிதரும் தகவல் என்னவெனில், உச்சநீதிமன்றம் ராக்கட் வேகக்தில் ஆகஸ்ட் 29இல் வழங்கிய தீர்ப்பிலும் இதைக் கண்டு கொள்ளவில்லை.

உயர்நீதிமன்றத்தில்:

உயர் நீதிமன்றத்தில் கசாப்புக்காக வைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர்கள் அமின் சோல்கர், பர்கானாஷா ஆகியோரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம், "தாங்கள் கசாப்-ஐ சற்று கூப்பிடு தூரத்தில் நின்றாவது சந்திக்க அனுமதி வேண்டும்" எனக் கேட்டார்கள்.

அதற்கு உயர்நீதிமன்றம் "அவன் உங்களையும் சிறையில் வைத்து ஏதேனும் செய்துவிடுவான். அதனால் சந்திக்க அனுமதிக்க முடியாது" எனக் கூறிவிட்டார்கள்.

அதன்பின் கசாப்-ஐ தூக்கில் தொங்கவிடும் ஆணையை உறுதி செய்யுமுன், அவனது மனநிலை பற்றிய ஆய்வு ஒன்றை நடத்திட வேண்டும் என்பது சட்டத்தின் தேவை. ஏனெனில் அவன் திருந்தும் வாய்ப்பிருந்தால் அல்லது சிறையில் சந்தித்த தனிமை போன்றவற்றால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், ‘mitigating circumstance’ தூக்குத் தண்டனையை தவிர்க்கும் சூழல் ஏற்படும். இது கருணை மனுவில் பெரிய அளவில் உதவி செய்யும்.

இதற்கான ஏற்பாட்டைச் செய்திட வேண்டும் என கசாபிற்காக உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், கேட்டபோது அந்தக் கோரிக்கையையும் தூக்கி வீசிவிட்டார்கள்.

ஒரு பாகிஸ்தான் குழந்தையை 2006 இல் நேப்பாளிலிருந்து பிடித்து வந்து 2008 மும்பை தாக்குதலின் ஒரே குற்றவாளி எனக் கூறி கொலை செய்துவிட்டார்கள். இதில் உச்ச நீதிமன்றமும் உடந்தை!

மேலும் விளக்கங்களுக்கு படியுங்கள் "கர்கரேயைக் கொலை செய்து யார்?"

நீதிபதி தகலியானி-இன் சட்டத் துரோகம்:

ஒரு வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு நிற்கும் ஒருவனுக்கு, வழக்காட வக்கில்லை என்றால், அரசு ஒரு வழக்கறிஞரை நியமிக்கின்றது. அவருக்குச் சம்பளமும் தருகின்றது.

வழக்கறிஞரை நியமிக்கும் உரிமைதான் அரசுக்கு இருக்கின்றதே அல்லாமல், அவரைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் உரிமை அரசுக்கில்லை. ஆனால் அந்த உரிமை குற்றம் சாட்டப்பட்ட திக்கற்ற குற்றாளிக்கு மட்டுமே உண்டு.

ஆனால் இங்கே கசாப்-ஐ தூக்கிலிட்டு, அத்தனை இந்து ராஷ்டிர சிற்பிகளையும் காப்பாற்றுவதே நோக்கம். அதனால் நமது நீதிபதிகள், நமது நாட்டுச் சட்டங்களுக்கு கசாப் வழக்கில் துரோகம் செய்வதை தேசிய சேவை என எடுத்துக் கொண்டார்கள்.

மேல் முறையீடு:

“என்னை விலக்கியது சரியல்ல, அதில் நீதிபதி சட்டத் துரோகத்தைச் செய்துவிட்டார்” என வழக்கறிஞர் அப்பாஸ் காஸ்மி அவர்கள் உயர் நீதிமன்றம் சென்றார். கசாப்-ஐ தூக்கில் போடும் வரை உயர்நீதிமன்றம் இந்த மனுவின் மேல் முடிவெடுக்கவில்லை. FRONTLINE: SEPT 16, 2012.

எப்படி இருக்கின்றது நீதிபரிபாலனம்? நம் நாட்டில் அரசியலில் முகவரி இழந்துவரும் சோற்றால் அடித்த பிண்டங்கள் பல, சட்டத்தின் எல்லா கதவுகளும் கசாப்பிற்கு திறந்து விடப்பட்டிருந்தன எனப் பிதற்றுகின்றன. வெட்கம்! வெட்கம்!! மாபெரும் வெட்கம்

புகைப்படமும் கசாப்பும்.

கசாப்-ஐ அதாவது அவன் லாவகமாக மும்பை CSTஇல் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தபோது படம் எடுத்த பத்திரிகையாளர்களை கடைசிவரை நீதிபதியிடமோ, நீதிமன்றத்திலோ நிறுத்திடவில்லை.

ஆனால் மும்பை CST ரெயில் நிலையத்தில் - துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் - 18 ‘CCTVS’ என்ற கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை துப்பாக்கிச் சூடு நடந்ததை மட்டுமல்ல, அங்கே நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் நீண்ட நாள்களாகவே படமெடுத்து வருகின்றன. அவற்றின் பதிவுகள் தாம் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதை நம்மைப் போன்றவர்கள், S.M. முஷ்ரிப் தலைமையில் கேட்டபோது "அந்த பதினெட்டுக் கேமராக்களும் அன்று வேலை செய்யவில்லை. ஆனால் மீதமுள்ள 20 கேமராக்களும் வேலை செய்தன" என்றார்கள். "இரண்டனவற்றை வேறு பக்கம் திருப்பி விட்டுவிட்டோம்" எனக் கூறிவிட்டார்கள்.

இந்து ரஷ்டிரவுக்காக அதாவது நம் நாட்டுக்கு எதிராக போர் தொடுத்துக் கொண்டிருப்பவர்களைக் காப்பாற்றிட நமது பிரதிநிதியான உள்துறை அமைப்பு செய்த ஏற்பாடு. அவர்கள் இப்போது நமது அரசாங்கத்தில் நமது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள் - என்னே அவலம்!

கசாப் - யாரைக் காப்பாற்ற இந்த அவசர தூக்கு?

உண்மையிலேயே மும்பைத் தாக்குதலை நடத்தியவர்கள் யார்? மும்பை ரெயில் நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர்களின் செல்போன்களும் சிம் கார்டுகளும் கிடைக்கவே செய்தன. மாவட்டம் வே தாலுக் கும்பப் புகார்வாடி கிராமத்தவர்களுக்குச் சொந்தமானவை.

ஒன்றின் உடைமையாளர் அஷோக் ஷார்க், அவர் அதனை இரத்தின கிரி என்ற இடத்தில் தொலைத்து விட்டதாகக் கூறினார். ஆனால் அதை பயன்படுத்திக் கொண்டிருந்தவர் சத்தீஷ்கர் மாநிலத்தில் சங்கப் பரிவாரத்தின் பிரச்சாரகர். இன்னொரு சிம் கார்டு, அதே முத்தாரா மாவட்டத்திலுள்ள வாலி தாலுகாவிலுள்ள ஒரு பெண்ணுக்குச் சொந்தமானது.

"இந்த சிம் கார்டு, இதனை பயன்படுத்தியவர்கள் - இவர்களையெல்லாம், ஏன் விசாரணைக்குக் கொண்டு வந்திடவில்லை?" எனக் கேட்டதற்கு, "இவர்களையெல்லாம் விசாரிக்க வேண்டும் என நாங்கள் கருதவில்லை" எனக் கூறிவிட்டார்கள்.

இவர்களையெல்லாம் விசாரித்தால் இங்குள்ள இந்துத்துவ அமைப்புகள், மொத்தமாக சிக்கி இருக்கும். அவர்களை காப்பாற்றத் தான் இந்த அவசர இரகசிய தூக்கு.

சட்டம் தன் கடமையைச் செய்ததா?

இல்லை! கசாப்-இன் கருணை மனுவை நிராகரித்திருந்தால் கூட, அவன் மீண்டும் நீதிமன்றங்களை அணுக உரிமை உண்டு. என்னென்ன காரணங்களுக்காகக் கருணை மனு நிராகரிக்கப்பட்டதோ அதை சீர்தூக்கிப் பார்த்திடும் அளவில் அவன் மறுபரிசீலனைக்கு மனு போடலாம். இதனை விளக்கமாக அறிந்திட பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைக் கொலை செய்த குற்றவாளி கேகர் சிங் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது ஓர் எடுத்துக்காட்டு.

பிரதமர் இந்திராகாந்தி கொலையும் கேஹர் சிங்கும் Kaher Singh Vs Union of India (AIR 1989 SC 653) 

கேகர் சிங் என்பவர் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைக் கொலை செய்தவர்; கொலை செய்திட சதிதிட்டம் தீட்டியவர் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பெற்றவர். குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப் பெற்றவர்.

அவர் தனக்கு வழங்கப் பெற்ற மரணதண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது; மரண தண்டனையை உறுதி செய்தது. அவருடைய மகன் குடியரசு தலைவருக்கு மனு ஒன்றை அனுப்பினான். அதில் "அரசியல் நிர்ணயச் சட்டம் பிரிவு 72இன் கீழ் தனது தந்தைக்கு கருணை காட்டிட வேண்டும். மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டான். அதையும் குடியரசு தலைவர் நிகராகரித்து விட்டார்.

பின்னர் கேகர் சிங் தான் குடியரசு தலைவரைத் தனியாகச் சந்தித்து சில விஷயங்களைப் பரிமாறிக்கொள்ள விரும்பி, அதற்காக மனு கொடுத்தார். இதனை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

"கருணை மனுவைத்தான், தான் பரீசிலிக்க முடியும். அஃதல்லாமல் வேறு யாரையும் அதுகுறித்து சந்திக்க இயலாது. காரணம் இதுவரை நம் நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் நெறிமுறைகளுக்கு அஃது நேர் எதிரானது" எனக் கூறிவிட்டார் குடியரசு தலைவர்.

குடியரசு தலைவரின் பதிலையும், கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும் டெல்லி உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார் கேகர் சிங். டெல்லி உயர் நீதிமன்றம் அவர் மனுவை நிராகரித்தது.

உச்ச நீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்றம் "குடியரசு தலைவரின் அதிகாரத்திற்கு எல்லாம் உட்பட்டது. கருணை மனுக்களை ஏற்றுக் கொள்வது அல்லது நிராகரிப்பது என்பது நீதிமன்றங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை குடியரசு தலைவர் பெறுவதுதான். ஆனாலும் நீங்கள் உச்ச நீதிமன்றம் உறுதி செய்த சாட்சியங்களை மறுபரிசீலனை செய்யலாம். நாங்கள் வழங்கியுள்ள தீர்ப்பையும் மறுபரிசீலனை செய்யலாம்" எனக்கூறியது. இதில் உச்ச நீதிமன்றம் குடியரசு தலைவரின் அதிகாரத்தின் எல்லை விரிவானது என்பதை விளக்கியது. அதனால் அனைவரும் குடியரசு தலைவர் தனது அதிகாரத்தை தாராளமாகப் பயன்படுத்தலாம் என்கின்றனர். உச்ச நீதிமன்றம் மேற்கொண்ட நிலைபாட்டைப் பாராட்டினார்கள்.

மொத்த சூழலையும் பாராட்டிய மாதாபுஷி கிரிதர் (இவர் ஹைதராபாத் சட்டக்கல்லூரி பேராசிரியர்) கூறுகின்றார். “நமது உச்ச நீதிமன்றம் தவறு செய்தால், அதனை குடியரசு தலைவர் சீர் செய்யலாம். குடியரசு தலைவர் தவறு செய்தால், உச்ச நீதிமன்றம் சரி செய்யலாம்" என்கின்றார். (The Hindu, No.22,2012.)

இந்த மொத்த விவகாரத்திலும் குற்றவாளிக்கு கருணை மனுவோடு விவகாரம் முடிந்திடவில்லை. குடியரசு தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்ததற்கான காரணங்களை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றமும், அதுவும் மறுத்தால், உச்ச நீதிமன்றமும் சென்றிட முடியும்.

நீதி தேடிடும் மீதமிருக்கும் வழிமுறைகளை முற்றாக மறுத்துவிட்டு சட்டம் தன் கடமையைச் செய்தது எனச் சொல்லுவது நாம் ஓர் சர்வாதிகார நாடு என்பதையே சொல்லும்.

சுருக்கமாக இந்துராஷ்டிரவின் சட்டம் செயலில் வந்துள்ளது. இதனால்தான் கசாப்-ஐ நமது நீதி நிறுவாகம் கொலை செய்துவிட்டது. இப்படித்தான் கசாப்-இன் கொலையை An Act of Constitutional Improperiety என்கின்றார்கள். அதாவது அரசியல் நிர்ணயச்சட்டத்தின்படி ஓர் அடாத செயல்.

உள்துறை அமைச்சர் ஷுஷில் குமார் ஷிண்டே-இன் அறியாமை.

ஏன் அவசர அவசரமாகத் தூக்கில் போட்டீர்கள் என்பதற்கு இப்படிப் பதில் சொல்லி இருக்கின்றனர். “நான் ஒரு காவல்துறை அடியாளாய் பயிற்சி எடுத்தவன். இவற்றில் இரகசியம் காப்பது என் இயல்பு." இப்போதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வருகின்றது. அதாவது காவல் நிலையத்தில் அமர்ந்து அப்பாவிகள் மீது பொய் வழக்குகளைப் போட்டுக் கொண்டிருந்தவர் மத்திய அமைச்சராகி இருக்கின்றார். அத்தோடு இப்படியும் கூறியுள்ளார்.

"இன்னொரு முறை மனித உரிமைகள் அமைப்புகள் இதில் பிரச்னைகளை உருவாக்குவார்கள் என்பதால் தான் நான் இரகசியமாக வைத்திருந்தேன்." இப்படி ஒரு மத்திய அமைச்சர் கூறியிருப்பது, நம் நாட்டை ஒரு சர்வாதிகார நாடாகவே மக்கள் மனதில் பதிய வைக்கும் என்கின்றார் இந்து பத்திரிகையின் கட்டுரையாளர்.

ஆனால் நமது ஷிண்டேயை விஞ்சி மனித உரிமை அமைப்புகள் வேகமாக செயல்படுகின்றன. மும்பையிலிருந்து ஓர் மனித உரிமை அமைப்பு அனுப்பிய சுற்றறிக்கை:

IB-இன் வேலை

ஆதிமுதல் அனைத்தும், IB என்ற மத்திய உளவுத்துறையின் வேலை இது என்கின்றார்கள்.

1. அஜ்மல் கசாப்-இன் கருணை மனுவை கசாப் தயாரித்ததாகக் கூறப்படுகின்றது. அதுவும் 3 முதல் 4 நாள்களுக்குள் தயாரித்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.

உண்மையில் கசாப்பிற்கு ஆங்கிலம் தெரியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆங்கிலத்தில் தான் வெளியே வந்தது. அது 400 பக்கங்களைக் கொண்டது. பிரபல வழக்றிஞர்களே 400 பக்கத் தீர்ப்பை படிக்க நாற்பது நாள்கள் கேட்டார்கள். ஆனால் ஆங்கிலம் தெரியாத கேசாப் 4 ஐந்து மூன்று முதல் 4 நாள்களில் படித்து, தனக்குத் தெரியாத மொழியில் கருணை மனுவை தயாரித்து விட்டானாம்.

அது உடனேயே உரிய துறைகள் மூலம் குடியரசுத் தலைவருக்கு விரைந்து சென்றதாம். குடியரசுத் தலைவர் 29 மனுக்கள் தனக்குப் பின்னால் இருக்க இந்த மனுவை முதன் முதலில் எடுத்தாராம். மறுத்தாராம்-கசாப் செத்தாராம். அனைத்தும் மத்திய உளவுத்துறையின் வேலை என்கின்றது மும்பை மனித உரிமை குழுமம்.

2. ஆனால் மேலே நாம் சொன்ன இந்த உண்மைகளையெல்லாம் மனுவாக மாற்றி மராட்டிய மாநில அரசிடம் தந்தார் வழக்கறிஞர் எங் சவுதிரி என்பவர். ஆனால் மத்திய உளவுத்துறை அதை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது. உச்ச நீதிமன்ற (அ) நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி அந்த மனித உரிமை அமைப்பின் அறிக்கை இப்படிக் கூறுகின்றது.

“உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் மத்திய உளவுத்துறை ஏமாற்றிவிட்டது. இந்தியாவிலுள்ள ஒரே ஏதேச்சதிகாரி மத்திய உளவுத் துறைதான். இது பிரதம அமைச்சர் குடியரசு தலைவர், அரசு அனைத்தையும் விஞ்சி அதிகாரம் கொண்டது. சொல்லப்போனால் நாடாளும் மன்றத்தை விஞ்சும் அதிகாரத்தைக் கொண்டது. இங்கே உச்ச நீதிமன்ற நீதிபதிகளையே அது வரை கோட்டில் கையெழுத்துப் போட செய்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்தத் தீர்ப்பைத் தயாரித்தவர்கள் தங்கள் புலனாய்வில் இடம் பெற்ற ஓட்டைகளையெல்லாம் அடைப்பதற்குரிய வரிகளை தீர்ப்பில் திணித்திருந்தார்கள். இந்த வரிகளை தொடக்க நாள் முதல் இந்தச் சதியின்  அனைத்து அம்சங்களையும் தெரிந்தவர்களால் மட்டுமே வரைந்திட முடியும். நீதிபதிகள் இருவரில் ஒருவர் முஸ்லிமாக இருந்ததால் உளவுத் துறையின் வேலை மிகவும் எளிதாகிவிட்டது. முஸ்லிம்கள் பதவியில் உயர, உயர அழுத்தங்களுக்கு எளிதில் ஆளாகிவிடுகின்றார்கள்." (page 6 of the Human Rights Report) பாபரிமஜ்ஜித் வழக்கில் IB பகிரங்கமாகத் தலையிட்டது என்பதை நாம் தெளிவு படுத்தி இருந்தோம்.

ராஜீ ராமச்சந்திரன்

இவர் அரசால் உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட நீதிமன்ற நண்பன். இவர் கசாப்பிற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையில் நட்பை ஏற்படுத்த வேண்டும். இதிலும் ராதாகாந்த் யாதவ் - இவர்தான் நமது சார்பில் கர்கரையைக் கொலை செய்தது யார்? என நீதிகேட்டு உச்சநீதிமன்றத்திற்கும் மும்பை உயர் நீதிமன்றத்திற்கும் கொண்டு சென்றவர் - தந்த தகவல்களின் அடிப்படையில் மிகவும் சிறப்பாக விவாதித்தார். கசாப் நிச்சயமாக விடுதலை பெறுவான் என நம்பினார். ஆனால் தீர்ப்பு அவருக்குப் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இதனால் அவருக்கு உச்ச நீதிமன்றம் தந்த 11.43 லட்சம் ரூபாயையும் அவருடைய உதவியாளருக்குத் தந்த 3.50 லட்சம் ரூபாயையும் மறுத்துவிட்டார்.

Comments

125 comments

125
ram
கொடூர மனமும் குரூர எண்ணமும் மானுடவியலுக்கே எதிரான சிந்தனையும் கொண்ட நோய் மனம் படைத்தவர்கள் மட்டுமே மேற்கூறிய கட்டுரையை எழுத முடியும்.
viyasan
///இந்த ‘கசாப்’ நமக்குச் சொல்லப்படுவதைப் போல், பாகிஸ்தானில் இருந்து 2008 ஆம் ஆண்டு மும்பையைத் தாக்குவதற்காக வந்தவனல்ல. அவன் 2006 ஆம் ஆண்டு வறுமை தாளாமல் நேப்பாள்- என்ற நமது அண்டை நாட்டுக்கு பிழைப்புத்தேடி வந்தவன்.///
அட‌ப்பாவிக‌ளா! முஸ்லீம் என்ற‌ கார‌ண‌த்துக்காக‌ க‌சாப்பைக் கூட‌க் காப்பாற்ற‌த் துடிக்கிறார்க‌ள். க‌சாப் ஆயுத‌மேந்தி அப்பாவிக‌ளைச் சுட்டுக் கொன்ற‌ ப‌ட‌ங்க‌ள் இணைய‌த்திலேயே கிடைக்கும் போது இப்ப‌டியொரு பொய்யா? ஆனால் ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளின் போராட்ட‌த்தை ம‌ட்டும் இழிவுப‌டுத்தி பொய்ப்பிர‌ச்சார‌ம் செய்ய‌ ஜெய்னுலாப்தீன் போன்ற‌ த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ளும் அவ‌ர்க‌ள‌து ஆத‌ர‌வாள‌ர்க‌ளும் த‌ய‌ங்கிய‌தில்லை. இந்த யுடியூப்பை பாருங்க‌ள்.

https://www.youtube.com/watch?v=SIKR6lPr3ao

(Kasab in action during 26/11 Mumbai terror attack)
http://cdn-wac.emirates247.com/polopoly_fs/1.448773.1331891930!/image/87097000.gif
viyasan
(Ajmal Kasab in Action)

http://www.indiamag.in/wp-content/uploads/2011/02/Ajmal-Kasab-221x300.jpg
viyasan
(Ajmal Kasab in Action)

http://1.bp.blogspot.com/-Tl9OkJgDbVY/TZ1rttMeuRI/AAAAAAAABP4/XuHhr9O60_Q/s1600/ajmal_kasab.jpg
Senthil
He is just supporting muslims. Please do not publish such articles in future. I just opened this site accidentally, after seeing this article i have decided not to visit again. Such people are very dnagerous for our country and culture.
Srini
muslims will never accept their mistakes
valluvan
இன்னும் எத்தனை காலம் தான் இந்த மக்கள் விரோத இந்திய அரசை நம்பிக் கொண்டிருப்பீர்கள்.

கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்றால், கேள்வி கேட்டவனை கேடுகெட்டவன் என்றும் தீவிரவாதி என்றும் முத்திரைக் குத்தும் முட்டாள்தனத்திலிருந்து எப்பொழுதுதான் நீங்கள் வெளிவருவீர்களோ!!

இவர் இங்கே குறிப்பிட்டிருக்கும் அனைத்தும் உண்மையே. ஒரு கொடூர கொலைக் குற்றவாளியை இப்படி இரகசியமாக தூக்கிலிட காரணம் என்ன. ஏனென்றால் சட்டத்தின் முன்பு அவனது குற்றங்களை நிரூபிக்க சாட்சியங்கள் இல்லை. அதனால் குற்றவாளியையே கொலை செய்து குற்றத்தை நிரூபிக்கும் கேவலமான இந்திய கலை தான் இது.

வாழ்க இந்த கேவலமான பாரதம்..
கந்தசாமி
இது ஒரு நல்ல கட்டுரையெ . கசப் பின் கொலை தவறான முன்னுதாரனம் .இந்தியா திருந்தாது .

கந்தசாமி
vinoth kannan
அண்ணே ரொம்ப தப்பு ணே...... கீற்றுக்கு என்று ஒரு மதிப்பு உள்ளது... அதை கெடுத்துவிடாதீர்கள்....
viyasan
///இந்த மொத்த விவகாரத்தையும் தி வீக் ‘The Week’ பத்திரிகை வெளியிட்டிருக்கின்றது. வழக்கறிஞர் சி. வி. பரூக். Source: The News Revalpindi, Tol: DEC16, 2008. . SOURCE: FRONTLINE SEPT 16, 2012. GAISIW Kasab///
இந்த‌க் க‌ட்டுரை இந்திய‌ அர‌சை ம‌ட்டும‌ல்ல‌ இந்தியாவின் நீதித்துறையின் ந‌டுநிலைமையை விம‌ர்சிக்கிற‌து. அதனால் க‌ட்டுரையாசிரியர் வெறும‌னே ஆதார‌ங்க‌ளைக் குறிப்பிடாமல் உரிய‌ இணைய‌ தொட‌ர்புக‌ளையும் (links) அளித்தால் இந்த‌க் க‌ட்டுரைக்கு மேலும் வ‌லு சேர்ப்ப‌து ம‌ட்டும‌ல்ல‌, ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் உண்மைக‌ளை இல‌குவாக‌ அறிய‌ முடியும். அதை விட‌ பாகிஸ்தானைச் சார்ந்த‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர் சி. வி. பரூக்கின் The News Revalpindi யில் வெளியிட‌ப்ப‌ட்ட‌ வாக்குமூல‌த்தை எப்ப‌டி ந‌டுநிலையான‌தாக‌க் கொள்ள‌ முடியும் என்ப‌து க‌ட்டுரையாசிரிய‌ர் மு.குலாம் முஹம்மதுக்கு ம‌ட்டும் தான் வெளிச்ச‌ம். இவ‌ர் பாக்கிஸ்தான் வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ப‌ரூக்கை ந‌ம்பும‌ள‌வுக்கு இந்தியப் ப‌த்திரிகையாள‌ர்க‌ளையோ அல்ல‌து நீதிய‌ர‌ச‌ர்க‌ளையோ ந‌ம்ப‌வில்லை என்ப‌து மிக‌வும் வ‌ருத்த‌த்துக்குரிய‌து.
Dinesh
மிக சிறந்த கட்டுரை. அவன் சுடறது தான் டிவியில் லிவெ ஆக காட்டினாங்களே இதுக்கு மேல் என்ன ஆதாரம் வேணும் என்று கேட்கும் தேசப் பற்றாளர்களும் 24x7 news channel correspondent களும் படிக்கவும். The week, Frontline இதழுக்கு பாராட்டுக்கள்.
ஷாலி
//கசாப்-ஐ அதாவது அவன் லாவகமாக மும்பை CSTஇல் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தபோது படம் எடுத்த பத்திரிகையாளர்களை கடைசிவரை நீதிபதியிடமோ, நீதிமன்றத்திலோ நிறுத்திடவில்லை.
ஆனால் மும்பை CST ரெயில் நிலையத்தில் - துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் - 18 ‘CCTVS’ என்ற கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை துப்பாக்கிச் சூடு நடந்ததை மட்டுமல்ல, அங்கே நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் நீண்ட நாள்களாகவே படமெடுத்து வருகின்றன. அவற்றின் பதிவுகள் தாம் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதை நம்மைப் போன்றவர்கள், S.M. முஷ்ரிப் தலைமையில் கேட்டபோது "அந்த பதினெட்டுக் கேமராக்களும் அன்று வேலை செய்யவில்லை. ஆனால் மீதமுள்ள 20 கேமராக்களும் வேலை செய்தன" என்றார்கள். "இரண்டனவற்றை வேறு பக்கம் திருப்பி விட்டுவிட்டோம்" எனக் கூறிவிட்டார்கள்.
இந்து ரஷ்டிரவுக்காக அதாவது நம் நாட்டுக்கு எதிராக போர் தொடுத்துக் கொண்டிருப்பவர்களைக் காப்பாற்றிட நமது பிரதிநிதியான உள்துறை அமைப்பு செய்த ஏற்பாடு. அவர்கள் இப்போது நமது அரசாங்கத்தில் நமது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள் - என்னே அவலம்!//
i: Ninety per cent of Indians are "idiots" who can easily be misled by mischievous elements in the name of religion, Press Council of India (PCI) chairperson Justice Markandey Katju claimed on Saturday. "I say ninety per cent of Indians are idiots. You people don't have brains in your heads....It is so easy to take you for a ride," he said at a seminar in New Delhi.விடுதலை புலிகள் விசயத்திலும் இதேபோன்று நம்ப வைத்து கழுத்தறுத்து முள்ளிவாய்க்காலில் முடித்துவைத்ததும் நண்பர் வியாசன் போற்றும் ரா,ஐபி,இந்திய உளவுத்துறையே!
thiru
boss peasaama neenga nalla comedy film kku kathai yealutha poanga.... bcoz oru kodura kolai kaaranukku "mannippu" kudukkalaam nnu "kuran " la kooda sollala.......internet thaaney nnu ippadi kirukku thanamaa kathai yealuthaatheenga... mumbai attack la iranthu poanaangaley onnum theriyaatha 126 appavigal... avargal aathmaa kooda uingalai mannikkaathu...
suvanappiriyan
பல தகவல்கள் புதியது. கட்டுரையாளர் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மும்பை தாக்குதலின் உண்மையான குற்றவாளிகள் இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ?
sp.maragathaselvam
வாழ்த்துக்கள் சிந்திக்க வேண்டிய கட்டுரை ,இந்து தீவிரவாதம் எவ்வளோ சக்தி படைத்தது என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது ,கட்டுரை எழுதிய தோழர்,பல ஆதாரங்களை கொடுத்தும் சில புல்லுருவிகள் அவரை கொச்சை படுத்துவது கேவலமான செயல் ,அறிவுள்ளோர் அவர் கொடுத்த ஆதாரத்தை தவறுன்னு நிரூபிக்க வேண்டுமே அன்றி வசை பாடுதல் அறிவிலிகளின் செயல்
Kanthazh
Mr. Viyaasan Mr Ram, and Mr senthil, Please answer the questions of Mr. Gulam raised. If you have any doubts abouts the article ask questions about that. Do not blame the writer if you don't have answers.
S.K.Shameemul Islam
The critiques of this article may also advised to kindly read the 2 articles published in The Hindu viz. "Kasab washed his hands; we stained ours (Dec.9,2012)" and "The Hangman's Justice(Nov.22,2012)" in the pages of Editorial and Readers' Editior, andl also Readers' Editior A.S.Panneerselvam's note "Principle, not Sentiment (Dec.10,2012)". You folks unable to swallow the bitter pills of fairness and Truth and chewing only the sweet poison of sentiment and populism.
Simply because the writer of this ariticle supposed to be a Muslim you talk all havoc. Please give your opinions on reasons and not on sentiments. We are not living in a Goebelsian country.
seyed muhammed
கருத்து சொல்லும் நன்பர்களிடம் ஒரு வேண்டுகோள்!தயவு கூர்ந்து சார்புடன் அனுகாதீர்கள். கசாப், முஸ்லிம், பாகிஸ்தான், தீவிரவாதம் போன்ற மூளை பதிவுகளை ஒதுக்கி வைத்து விட்டு கட்டுரை ஆசிரியர் தொகுத்தளித்துள்ள விவரங்களை பல தடவை படியுங்கள்;உங்களிடம் மாற்று தகவலோ செய்தியோ சான்றுகளோ இருந்தால் எழுதுங்கள்;உலகம் உங்களை போற்றும்.
கட்டுரை ஆசிரியரின் எழுத்தில் இந்தியாவின் முழு அதிகார வர்க்கத்தையே விமர்சனம் செய்துள்ளார்.அதும் நீதி பரிபாலினம் செய்வோரை குறித்து கடும் விமர்சனம் செய்துள்ளார்.இது உண்மை அல்ல;பொய் என்றால் அதை தெளிவு படுத்தலாம் கட்டுரையாளரின் எதிர்கால கட்டுரைகள் இனி பிரசுரமாகாதவாறு கீற்று தளத்தையும் நாம் எல்லோரும் சேர்ந்து நிர்ப்பந்திக்கலாம்.என்ன சகோதரர்களே!நான் சொல்வது சரியா?
seyed muhammed
கட்டுரையாளர்க்கு என் உள்ளம் கனிந்த ஸலாம் அஸ்ஸலாமுஅலைக்கும்!
இந்தியாவை ஹிந்து ராஜ்யமாய் அல்லது ராம ராஜ்யமாய் பெயரிடாமல் ஆள்வது எப்படி என்ற?என்ற சோதனை கால கட்டத்தில் நமது உளவு துறை சார்ந்த அதிகார வர்க்கம் உள்ளது;
இது போன்ற சோதனை கூடங்களில் குழுமியிருந்த சர்வாதிகாரர்கள் தான் தங்களையும் தங்களை சார்ந்திருந்தோரையும் அழித்து வரலாற்று பக்கங்களில் இடம் பிடித்துள்ளனர்.
இதற்கான அண்மை கால உதாரணம் யு.எஸ்.எஸ்.ஆரின் கே.ஜீ.பி.
இது மனிதர்களை படைத்த இறைவனின் நடைமுறை;அழிந்து தான் போவோம் என முடிவெடுத்தவர்களிடம் அழிவை தவிர வேறு எதையும் எதிர் பார்க்க முடியாது.
Guest
I red most of the articles in keetru but from right now I stop reading keetru because of this article...good bye....
viyasan
//அஜ்மல் கசாப்-ஐ யாருக்கும் தெரியாமல் தூக்கிலிட்டது. யாருக்கும் தெரியாமல் என்பதில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அவர்களும் அடங்குவார்கள்.//

இது உண்மைய‌ல்ல‌. அமைச்ச‌ர் சுசில்குமார் சின்டே க‌ருத்தை ஊட‌க‌ங்க‌ள் திரித்து வெளியிட்ட‌தாக இந்திய‌ அர‌சு அறிவித்த‌து. க‌சாப்பின் ம‌ரண‌ த‌ண்ட‌னை விட‌ய‌த்தின் ஒவ்வொரு நிக‌ழ்வும் பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன்சிங்கிற்கு அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து. க‌சாப்பின் க‌ருணை ம‌னு நிராக‌ரிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌தென்ப‌து ந‌வ‌ம்ப‌ர் 7 இல் பிர‌த‌ம‌ருக்குத் தெரியும். பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன்சிங் ம‌காராட்டிர‌ மாநில‌த்திற்கு நவ‌ம்ப‌ர் 10 - 11 இல் சென்றிருந்த‌ போது முத‌ல‌மைச்ச‌ர் பிரித்விராஜ் ச‌வானுட‌ன் 45 நிமிட‌ங்கள் க‌சாப்பைத் தூக்கிலிடும் விட‌ய‌த்தைப் ப‌ற்றிக் க‌ல‌ந்துரையாடிய‌து ம‌ட்டும‌ன்றி, முத‌ல‌மைச்ச‌ர் ச‌வானை முழுப்பொறுப்பையும் ஏற்குமாறு கேட்டுக் கொண்டார்.

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Kasab-s-execution-Manmohan-was-in-the-loop/Article1-963082.aspx

எந்த‌ நாட்டிலும் ஆளுங்க‌ட்சியின் த‌லைவ‌ரிட‌ம் நாட்டின் பாதுகாப்பு விட‌யங்க‌ளையோ அல்ல‌து வெளிவிவ‌கார‌ அர‌சிய‌லைப்ப‌ற்றியோ தெரிவிப்ப‌தில்லை. அவ‌ர் அந்த‌க் க‌ட்சியின் த‌லைவ‌ர் ம‌ட்டுமே த‌விர‌ அர‌சாங்க‌த்தின் த்லைவ‌ர‌ல்ல‌. உதார‌ண்மாக‌ ஜ‌னாப‌தி ஒபாமா அர‌ச‌ இர‌சிக‌ய‌ங்களை அல்ல‌து பாதுகாப்பு விடய‌ங்க‌ளை Democratic Party Chairman Ms. Debbie Wasserman Schultz இட‌ம் தெரிவிக்க‌ மாட்டார், தெரிவிக்க‌வும் கூடாது. சோனியா காந்தி வெறும் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ம‌ட்டும் தான், க‌சாப்பின் தூக்குத்த‌ண்ட‌னையைப் ப‌ற்றி அவ‌ருக்குத் தெரிவிக்க‌க் கூடாது, அப்ப‌டித் தெரிந்தாலும், தெரிந்ததாக‌ அவ‌ர் காட்டிக் கொள்ள‌வும் கூடாது, அத‌னால் தான் அவ‌ர் த‌ன‌க்குத் தெரியாதென‌ ம‌றுத்திருக்க‌லாம். அதை ஏதோ பெரிய‌ உல‌க‌ மகா க‌ண்டுபிடிப்பு போல் எழுதுகிறார் ஜ‌னாப். குலாம் முக‌ம்ம‌து.
viyasan
///இந்த நிராகரிப்பு, நவம்பர் 8 ஆம் நாள் நடந்தது என நமக்கு 21 ஆம் நாள் செய்தி சொல்லின. ஆனால் அடுத்த நாள் நமது பத்திரிகைகள் எல்லாம் நவம்பர் ஐந்தாம் நாளே அந்த நிராகரிப்பு நடந்ததாக குறிப்பிட்டன. இதில் எது உண்மை என யாரும் கேட்டிடக் கூடாது.///

ஒக்ரோப‌ர் 23 இல் க‌சாப்பின் கருணைம‌னு உள்நாட்ட‌மைச்ச‌க‌த்தால் நிராக‌ரிக‌ப்ப‌ட்டு விட்ட‌து, ஆனால் அந்த‌ முடிவை ஏற்றுக் கொள்வ‌தா அல்ல‌து நிராக‌ரிப்ப‌தா என்ற‌ இறுதி முடிவையெடுப்ப‌து ஜ‌னாதிப‌தியின் பொறுப்பு. ந‌வ‌ம்ப‌ர் 8 திக‌தியே க‌சாப்பின் க‌ருணை ம‌னுவை நிராக‌ரிப்ப‌தாக‌ ஜ‌னாதிப‌தியின் செயல‌க‌ம் உத்தியோக‌பூர்வ‌மாக‌ முடிவெடுத்த‌தாக அறிவித்தாலும் கூட‌, ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளுக்கொப்ப‌ நவம்ப‌ர் 8 க்கு முன்னாலேயே பிர‌த‌ம‌ருட‌னும், ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அமைச்ச‌ருட‌னும் த‌ன‌து முடிவைப் ப‌ற்றிக் கல‌ந்துரையாடியிருப்பார். அந்த‌ முடிவு அத‌ற்கு முன்னாலேயே ஊட‌க‌ங்க‌ளுக்கு க‌சிய‌ விட‌ப்ப‌ட்டிருக்கலாம். ஐக்கிய‌நாடுக‌ள் ச‌பையிலும் மேலைநாடுக‌ளிலும் கூட‌ ப‌ர‌ம‌ர‌க‌சிய‌மாக‌க‌ கருத‌ப்ப‌டும் முடிவுகள், உத்தியோக‌பூர்வ‌மாக‌ வெளியிட‌ப்ப‌டு முன்ன‌ர் வெளிவ‌ருகின்ற‌ன‌ அல்ல‌து அவை வேண்டுமென்றே ம‌க்க‌ளுக்கு ஆர்வ‌த்தையூட்டும் வ‌கையில் க‌சிய‌ விட‌ப்ப‌டுகின்ற‌ன‌. அப்ப‌டியிருக்கும் போது இந்தியாவில் ந‌வ‌ம்ப‌ர் 5 இலெயே க‌சாப்பின் க‌ருணைம‌னு ஜ‌னாப‌தியால் நிராக‌ரிக்க‌ப்ப‌ட்டு விட்ட செய்தி வெளிவ‌ந்த‌தில் எந்த‌ வித‌ ம‌ர்ம‌மும் இருக்க‌ முடியாது. அதைப் ப‌ற்றி விவாதிப்ப‌தே வீண் வேலை. அத‌னால் தான் ந‌வ‌ம்ப‌ர் 7 இலேயே ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அமைச்ச‌ருக்கும், மகாராட்டிர‌ முத‌ல‌மைச்ச‌ருக்கும், பிர‌த‌ம‌ருக்கும் க‌சாப்பின் க‌ருணை ம‌னு ஜ‌னாதிப‌தியால் நிராக‌ரிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌தென்ப‌து தெரியும் என‌ ஹிந்துஸ்தான்ரைம்ஸ் குறிப்ப்டுகிற‌து. ஊட‌க‌ங்க‌ளுக்கு உத்தியோக‌பூர்வ‌மாக‌, ந‌வ‌ம்ப‌ர் 8ம் திக‌தி முடிவையெடுத்ததாக‌, முடிவை வெளியிட்ட‌ நாள் ந‌வ‌ம்ப‌ர் 21 ஆக‌ இருக்கலாம், அதை வைத்து இதில் ஏதோ சூக்கும‌ம் இருப்ப‌தாக‌ வாதாடுவ‌து முட்டாள் த‌ன‌மாகும்.
Uthayam
இங்கு இக்கட்டுரைக்கு எதிர் கருத்து பதிபவர்கள் "கர்கரேயை கொன்றது யார்?" என்ற புத்தகத்தை படித்து விட்டு வந்திருந்தால் தான் இதிலுள்ள கேள்விகளை ஜீரணிக்க இயலும்.

இந்து ராஷ்டிரம் அமைக்க இஸ்ரேலிய மொசாத்துடன் இணைந்து பல்வேறு கட்டங்களில் திட்டங்கள் தீட்டப்பட்டு கச்சிதமாக செயல்பட்டு வருவதாக சொல்லப்படுவதையும் இத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.

இந்திய உளவுதுறையால் போலியாக சித்தரிக்கப்பட்டது "இந்தியன் முஜாஹிதீன்" என்ற அமைப்பு என்று முன்பொருமுறை இதே கட்டுரையாளர் மேடையில் பேசியதையும் நான் கேட்டிருக்கிறேன். தற்போது கூட சில எம்.பி.க்களின் குழுவொன்று பிரதமரிடம் சென்று "இந்தியன் முஜா-கிதீன் அமைப்பு இந்தியாவில் எங்குள்ளது" என்று கேள்விகளால் துளைத்திருக்கிறார்கள். உளவு துறையும் ஊடகங்களும் சேர்ந்து உருவாக்கிய கற்பனையான அமைப்பு தான் இது சொல்கிறார்கள். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த சதிக்குப்பின்னால் மாபெரும் ஆபத்து ஒளிந்திருக்கிறது.

எனக்கு இதைப்பற்றியெல்லாம் ஆராய மனமில்லை; தீவிரவாதியென்றால் அது முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் இல்லையென்றால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீங்கள் நினைத்தால், உங்களைப் போல சிந்தனைவாதிகளை உருவாக்குவது தான் "அவர்களின்" நோக்கம்.
kanthazh
நமக்கு விரும்பியதை மட்டுமே எழுத வேன்ட்ரும் என எதிர்பார்ப்பது எந்த வகைஇல் சரியானது ? கட்டுரை ஆசிரியரின் வாதம் சரியானதுதானா இல்லையா என்பது தான் சரியான வாதமாக இருக்க முடியும். அதர்ட்கு ஆதாரங்கழை முன் வைப்பது பிழை இருப்பின் அதனை நிருவுவதுதான் சரியான வழி. நான் இனி இப் பதிவுக்கு வரமாட்டேன் என அடம்பிடிப்பது குழந்தைத் தனமானது.

என்ன நான் சொல்வதில் பிழை ஏதேனும் இருக்கிரதா?
Well Said
எப்பா... சிந்திங்கப்பா... சிந்திச்சா சாமி கண்ண குத்திடுமா?
நம்பிக்கையாளன்
பொய்யையே திரும்ப திரும்ப சொல்லி பிறகு அதை உண்மையாகக நினைக்கும். உண்மை உலகுக்கு வருவதை விரும்பாது. அதுபோல எழுதபட்டிருக்கும் உண்மையை ஆதாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறதா? என்றுதான் பார்க்கவேண்டுமே அவந்தான் அறிவுல்லவன். தவிர வீண் சந்தேகத்தை ஏற்படுத்த கூடாது. அது அயோக்கியர்களின் செயல். குஜராத்தி, பாகல்பூரில், மும்பையில் இந்து வெறியர்கள் நடத்திய கலவரங்கள் பாபர் மஸ்ஜித் இடிப்பு எல்லாம நியாயத்தின் அடிப்படையில் நடந்ததா? அதை இன்று வரை , நீங்கள் ஒத்துககொண்டீர்களா? தனக்கு ஒரு நியாயம மற்றவாகளுக்கு ஒரு நியாயமா?
viyasan
///இந்த குயூபர் போட்டையும் பார்வையிடவேண்டும் என காசிமி கேட்டார். அதேபோல், இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 27 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட எல்லாத் தளங்களையும் பார்வை இடவேண்டும் எனக் கோரினார். இதற்கெல்லாம் நீதிபதி தந்த ஒரே பதில் - நீ ஒத்துழைக்கமாட்டேன் என்கின்றாய். வெளியே போ.////

இந்த‌க் க‌ட்டுரையாள‌ர் குலாம் முக‌ம்ம‌து அவ‌ர்க‌ள் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்து நூற்றுக்கும‌திக‌மான‌ இந்திய‌ர்க‌ளைக் கொன்று குவித்த‌ பாகிஸ்தானிய‌ராகிய‌ க‌சாப்பிற்காக‌ வ‌க்கால‌த்து வாங்குவ‌து அவ‌ர் முஸ்லீம் என்ற‌ கார‌ண‌த்தால் ம‌ட்டும் தான் போலிருக்கிற‌து. Frontline ; Sept 16, 2012 இல் V.வெங்க‌டேச‌ன் அவ‌ர்க‌ளால் எழுத‌ப்ப‌ட்ட க‌ட்டுரையை அப்ப‌டியே மேற்கோள் காட்டும் ஜ‌னாப் முக‌ம்ம‌து அவ‌ர்க‌ள் அதிலும் அவ‌ருக்கு விரும்பிய‌வ‌ற்றை ம‌ட்டும் எடுத்துக் கொண்டு முக்கிய‌மான‌ சில‌ விட‌ய‌ங்க‌ளை விட்டு விட்டார் போல் தெரிகிற‌து. குலாம் முக‌ம்ம‌து அவ‌ர்க‌ள் "கசாப்பும் இன்னும் 9 பேரும் முதலில் ஒரு கப்பலில் பாகிஸ்தானிலிருந்து வந்தார்கள். பின்னர், அந்தக்கப்பலில் இருந்து வெளிபோந்த குயூபர் போட்டில் வந்தார்கள் -தீவிரவாதிகள் என கதை கட்டினார்கள்" என‌க்கூறுகிறார் ஆனால் allegedly என்ற‌ ஆங்கில‌ வார்த்தைக்கு கருத்து ‍‍ அவ்வாறாக‌க் க‌ருத‌ப்ப‌ட்ட‌/ ந‌ம்ப‌ப்ப‌ட்ட‌/கூற‌ப்ப‌ட்ட‌/இன்னமும் நிரூபிக்க‌ப்ப‌டாத‌/விவாத‌த்துக்குரிய‌ என‌ மொழிபெய‌ர்க்க‌ப்ப‌ட‌ வேண்டுமேய‌ன்றி, "க‌தை க‌ட்டினார்க‌ள்" என்ற‌ல்ல‌. க‌தை க‌ட்டினார்க‌ள் என்ப‌து இல்லாத‌ பொய்யைக் கூறுவ‌து, ஆனால் குபேர் ப‌ட‌கு விட‌ய‌ம் அப்ப‌டியான‌த‌ல்ல. அந்த Frontline க‌ட்டுரையிலேயே "It had Kasab’s fingerprints and DNA samples" என்ப‌தை, அதாவ‌து அந்த‌ப் ப‌ட‌கில் க‌சாப்பின் கைய‌டையாளங்க‌ளும், ம‌ர‌ப‌ணுக்க‌ளும் இருந்த‌ன‌ என்றிருந்த‌தை ம‌ட்டும் குறிப்பிடாம‌ல் அப்ப‌டியே அமுக்கி விட்டார் அண்ண‌ன் முக‌ம்ம‌து. க‌சாப் அந்த‌ப்ப‌ட‌கில் வ‌ராம‌லிருந்தால் அவ‌ர‌து கைவிர‌ல‌டையாள‌ங்க‌ளும், ம‌ர‌ப‌ணுக்க‌ளும் எங்கிருந்து அந்த‌ப்ப‌ட‌குக்கு வ‌ந்த‌ன‌.

குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்ட‌ தீவிர‌வாதியின் கைய‌டையாள‌மும், ம‌ர‌ப‌ணுக்களும் அந்த‌ப் ப‌ட‌கில் இருப்ப‌தைக் காட்டிய‌ பின்ன‌ரும், அவ‌ர‌து வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ப‌ட‌கிருக்கும் இட‌த்தை நான் ப‌ரிசோதிக்க‌ வேண்டும் அத‌ன் பின்னால் தான் என்னால் சாட்சிக‌ளைக் குறுக்கு விசாரணை முடியுமென்றால் அந்த‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ரின் நோக்க‌ம் வ‌ழ‌க்கை இழுத்த‌டிப்ப‌தும், நீதிம‌ன்ற‌த்துட‌ன் ஒத்துழைக்காமையுமாக‌த் தானிருக்க‌ முடியும், அத‌னால் நீதிம‌ன்ற‌ம் அவ‌ருக்கு அனும‌தி ம‌றுத்திருக்க‌லாம். தெளிவாக‌த் த‌டய‌ங்க‌ளிருக்கும் போது மீண்டும் ச‌ம்பவ‌ம் ந‌ட‌ந்த‌ இட‌த்தைப் ப‌ரிசீலிக்க‌ வேண்டுமெனும் கோரிக்கைக‌ள் வ‌ழ‌க்கை தொட‌ர்ந்து ந‌ட‌த்துவ‌த‌ற்கு தேவைய‌ற்ற‌தாக‌ இருந்தால் அனும‌தி ம‌றுப்ப‌த‌ற்கு நீதிப‌திக்கு எல்லா நாட்டிலும் உரிமையுண்டு. அத‌ற்காக‌ அந்த‌ நீதிப‌தியை ப‌க்க‌ச்சார்புள்ள‌வ‌ர் என்ற‌ழைப்ப‌து அழ‌க‌ல்ல‌.
seyed muhammed
நன்பர் வியாசன் அவர்கள்
ஹிந்துஸ்த்தான் டைம்ஸின் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இது பிரதமருக்கு தெரியாமல் நடக்கவில்லை என்கிறார்.ஆனால் இந்தியாவின் உள்த்துறை அமைச்சரோ பிரதமருக்கு தெரியாது என்கிறார்;பொது மக்கள் யாரை நம்ப....வியாசன் தான் தீர்க்க வேண்டும்.
முழு கட்டுரையும் இது போன்ற தில்லுமுல்லுகளை தான் விவரிக்கிறது.
கசாப் பிடிபட்ட நாளிலிருந்தானாலும் சரியே மும்பை தாக்குதல் தொடங்கிய நாளிலிருந்தானாலும் சரியே தொடர்ந்து பல மாறுபட்ட தகல்வல்கள் பத்திரிக்கைகள் மூலமும் தொலைகாட்சிகள் வாயிலாகவும் அதிகார பொறுப்பிலுள்ளோரை மேற்கோள் காட்டி பரத்தப்படுகின்றன.இதுதான் மக்களாட்சியா?வெளிப்படையான சட்டத்தின் ஆட்சி இப்படித்தான் இருக்குமா?ஜனநாயகம் என்றால் இது தானா?இதை தானே கட்டுரை ஆசிரியர் விவரிக்கிறார்.அதற்கு பயன் படும் வகையில் கூடுதல் ஆதாரத்தை வழங்கி விட்டு கட்டுரையையும் கட்டுரை ஆசிரியரையும் விமர்சிப்பது சரியா?நன்பர் வியாசன் தான் தெளிவுபடுத்த வேண்டும்.
தயவு கூர்ந்து சார்புகளை உடைத்து விட்டு மனிதன் நம்மை போன்ற சக மனிதன் எனும் தளத்தில் நின்று சிந்தியுங்கள்.
அபு அஃப்ராஹ்
ஆர்.எஸ்.எஸ். போன்ற பிராமணீய இயக்கங்கள் தங்களுடைய ஆயிரக்கணக்கான கிளைகளின் மூலம் வெளிப்படையாக விஷம் கக்கிக் கொண்டிருக்கும் போது ஐ.பி. என்ற மத்திய உளவுத்துறை போன்ற நாட்டின் தலைமை உளவு நிறுவனங்கள் இத்தகைய பிராமணீய நிறுவனங்களின் சட்ட விரோத வகுப்புவாத செயல்களைப் பற்றி தகவல் தராமல் அரசாங்கத்தை இருட்டில் வைத்திருப்பதேன்?
இந்நாட்டை கடந்த 60 ஆண்டுகளாக வகுப்புவாத கலவரங்கள் கிழித்துப் போட்டிருக்கும் நிலையில் ஏன் ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை உரிய நேரத்தில் உண்மையான தகவல்களையும், அதன் நேர்மையான அறிவுரைகளையும் அரசாங்கத்திற்கு தரவில்லை? ஏன் அந்த கலவரங்களைக் கட்டுப்படுத்தவில்லை?
4 மிக முக்கியமானவர்களுக்கும் (வி.ஐ.பி), முக்கிய கட்டிடங்களுக்கும் மற்றும் மத தலங்களுக்கும் முஸ்லிம் தீவிரவாத இயக்கங்களின் மூலம் ஆபத்து என்ற பொய்யான தகவல்களை உளவு என்ற பெயரில் ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை ஏன் (இந்த 21-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து) செய்ய ஆரம்பித்தது?
5. பிராமணீய தீவிரவாத இயக்கங்களின் ஆயத்தங்கள், அதாவது தங்களுடைய தொண்டர்களுக்கு கொடுக்கக்கூடிய தீவிரவாத பயிற்சிகளை, ஆயுதங்களை யுத்த தளவாடங்களை, வெடி மருந்துகளைச் சேகரிப்பது, வெடிகுண்டுகளைத் தயாரிப்பது, மிக முக்கியமாக குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியது போன்றவற்றை ஏன் ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை அரசாங்கத்திற்கு தெரிவிக்கவில்லை? வெடிகுண்டுகள் வெடித்தவுடன் முஸ்லிம்கள் தான் இவற்றை செய்தார்கள் என உளவுத்துறையால் பல முஸ்லிம்கள் கைது செய்யப்பாட்டனர். இவற்றை கர்கரே கண்டுபிடிக்கும் வரை மத்திய உளவுத்துறைக்கு ஏன் உண்மை தெரியவில்லை? அல்லது தெரிந்தும் கண்டும் காணாமல் இருந்ததன் காரணம் என்ன? அல்லது மத்திய உளவுத்துறைக்கு போதுமான திறன் இல்லையா ? அப்படி திறன் இல்லையெனில் இந்த உளவுத்துறை நமக்கு எதற்கு ?
6. ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை அநிபிவ் பாரத்தைப் பற்றியும் ‘இந்து ராஜ்யத்தினை’ ஏற்படுத்தும் அதன் திட்டத்தைப் பற்றியும் அரசாங்கத்திற்கு தெரிவிக்காமல் அரசாங்கத்தை இருளிலேயே ஏன் வைத்தது?
7. ஐ.பி என்ற மத்திய உளவுத்துறைஇன் தலையாய கடமை உளவுத் தகவல்களைச் சேகரிப்பதாக இருந்தும் அதைச் செய்யாமல் ஏன் அது அனைத்து குண்டு வெடிப்புகளிலும் தேவைஇல்லாமல் தன்னிச்சையாக தலையிட்டுக் கொண்டிருக்கிறது?
8. முக்கியமாக ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை மும்பை தீவிரவாதத் தாக்குதலை பற்றிய தகவலை ஏன் மறைத்தது? அதை ஏன் மும்பை காவல் துறையுடனும், மேற்கு கடற்படையிடமும் பகிர்ந்துக் கொள்ளவில்லை?
9. ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை 26/11 தீஜீரவாதத் தாக்குதலில் உபயோகப்படுத்தப்பட்ட 35 சந்தேகத்திற்குரிய கைப்பேசிகளை பற்றிய தகவல்கள் தாக்குதல் நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பே கிடைத்தும் அவற்றை ஏன் தங்களின் கண்காப்பில் வைக்கவில்லை?
10 ஏ.டி.எஸ்ந் தலைவர் ஹேமந்த் கர்கரே மறைந்த சில மணி நேரங்களிலேயே மிகுந்த சர்ச்சைக்குரிய வகுப்புவாத சிந்தனை கொண்ட ரகுவான்சியை ஏன் ஏ.டி.எஸ் என்ற மும்பை தீவிரவாத தடுப்புப்படையின் தலைவராக நியமிக்க வேண்டும்?
11. மும்பை தாக்குதல் வழக்கின் விசாரணையை ஆரம்பத்தில் இருந்தே ஐ.பி ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் இந்த விசாரணைழீல் அமெரிக்க நிறுவனமான சி.ஐ.ஏ வின் விசாரணையை அனுமதித்ததன் மூலம் நம் நாட்டின் உள்நாட்டு ஜீவகாரத்தில் தலையிட அமெரிக்காவை ஏன் அனுமதித்தது?
இப்படி எகப்பட்ட விஷயங்கள் உள்ளன? விடை பெறுவதற்கு . இந்த விடைகளை காணாமல் கசாப் விஷயத்தை புரிந்து கொள்ளமுடியாது நண்பர்களே. இந்த கட்டுரை இடம் பெற்ற வைகறை வெளிச்சம் பத்திரிக்கையின் துணை ஆசிரியர் என்ற முறையில் எதிர் கருத்துகளை எழுப்பிய நண்பர்களுக்கு இதனை பதிலாக தெரிவித்து கொள்ள ஆசை படுகிறேன்.
Uthayam
அஜ்மல் கசாப்பிற்காக யாரும் இங்கு அழவில்லை. அவனது வழக்கில் எத்தனை ஓட்டைகள் எத்தனை கேள்விகள் இதற்கெல்லாம் யார் நியாயமான பதிலை தரப்போகிறார்கள்.? அஜ்மல் கசாபை முன்னிருத்தி விட்டு மற்றொரு தீவிரவாதம் அதன் பின் மறைந்திருக்கிறதே அதை எப்படி வெளிக்கொண்டு வருவது என்பதை தான் இக்கட்டுரை கவலைப் படுகிறது. கட்டுரையில் இருக்கும் மையக்கருத்தைக்கூட சரிவர விளங்காமல் துவேஷத்தை விதைக்க முயலுவது இன்னும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

இக்கட்டுரைக்கு மாற்று கருத்துடையோர் வரிக்கு வரி பதிலளித்து ஏன் ஒரு கட்டுரை எழுதக்கூடாது? அதை விட்டு விட்டு குட்டையை குழப்ப வேண்டாம்.
Guest
பார்ப்பனிய வஞ்சகர்களின் பல நூரு ஆண்டு கால வன்முரைப் பிழைப்பின் இன்ரய பழி ஆடுகள் இசுலாமியர்கள். பல்வேரு தேசிய இனங்கள்,சமநீதி பேசிய சமனம் ; பௌத்தம் உள்ளிட்ட சமயங்கள், என தனது தத்துவ, நடைமுரை வலைப் பின்னலுக்கு எதிரான அனைத்தையம் சிதைத்த, அழித்த அல்லது தனதாக்கிச் செரித்த வரலாட்ருப் பயங்கரவாதமே இப்பார்ப்பனியச்சாதியம். தனது பிழைப்பிர்க்கு, பூனூல் போட்டவர்களே எதிராக இருந்தாலும் அவர்களைஉம் எதிர்க்கும் அல்லது அழிக்கும்.அது அதன் தொலை தூர இலக்கின் உத்தி. ஆள்வோரைத் தனதாக்கி, அதனை தனதாக்கி அல்லது தனது கைப்பாவை ஆக்கி தன்னை நிலை நிருத்திக் கொள்ளும் பலமுள்ள ஒட்டுன்னி வர்க்கமாய் வாழ்ந்து வரும் இப்பார்ப்பனியத்தை, அதன் இருப்பில் தன் தொப்பை வளர்க்கும் அடகு முதலாளிகளை புரிந்து கொள்வோம். தேசிய இனக்கூரே நம்மை பெரும்பான்மை ஆக்கும். ஹிட்லரின் பாசிச இனவெறி நம்மை எதிரியின் கைகளில் சேர்க்கும். உழைக்கும் தமிழர் கூட்டனியே நம்மை பெரும்பான்மை ஆக்கும். எதிரிஐ சிறுபான்மையாக்கும்! - கருமதி
viyasan
-///ஒரு பாகிஸ்தான் குழந்தையை 2006 இல் நேப்பாளிலிருந்து பிடித்து வந்து 2008 மும்பை தாக்குதலின் ஒரே குற்றவாளி எனக் கூறி கொலை செய்துவிட்டார்கள். இதில் உச்ச நீதிமன்றமும் உடந்தை!//-

நாலாயிர‌த்துக்குமதிக‌மான‌ அமெரிக்க‌ர்க‌ளைப் ப‌டுகொலை செய்த‌ ஒசாமா பின்லாட‌ன் எப்ப‌டிக் கொல்ல‌ப்ப‌ட்டான், அவ‌ன‌து உட‌ல் எத‌ற்காக‌ இர‌க‌சிய‌மாக‌ அட‌க்க‌ப்ப‌ட்ட‌தென்ப‌து ப‌ற்றி அமெரிக்க‌ர்க‌ள் ப‌ல‌ர், அதை ஆதரித்தும், எதிர்த்தும் இன்றும் விவாதிக்கிறார்க‌ள். அது பேச்சு சுத‌ந்திர‌முள்ள‌ ஆரோக்கிய‌மான‌ ஜ‌ன‌நாய‌க‌த்தின் அறிகுறி, அதே போல் இந்தியாவிலும் க‌சாப்பின் ம‌ர‌ண‌த‌ண்ட‌னைய‌ப் ப‌ற்றி ந‌டைபெறும் க‌ருத்துப்ப‌ரிமாற‌ல்க‌ள் வ‌ர‌வேற்க‌த்த‌க்க‌து ம‌ட்டும‌ல்ல‌, அது இந்திய‌ ஜ‌ன‌நாய‌க‌த்தில் ம‌க்க‌ளுக்குள்ள‌ பேச்சு சுத‌ந்திர‌த்தைக் காட்டுகிற‌து. ஆனால் எந்த‌ அமெரிக்க‌னும் த‌ன‌து நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ஆயிர‌க்க‌ண‌க்கான‌ அமெரிக்க‌ர்க‌ளைக் கொன்று, அமெரிக்கா‌வின் இறையாண்மைக்குச் ச‌வால் விட்ட‌வ‌ர்க‌ளை அனுப்பிய‌ பின்லாடனை ஒரு அப்பாவிக்குழ‌ந்தை என்று கூற‌மாட்டான். ஆனால் இந்தியாவிற்குள் நுழைந்து, இந்தியாவில் நூற்றுக்க‌ண‌க்கான‌ இந்திய‌ர்க‌ளைக் கொன்ற‌ குழுவின‌ர்க‌ளில் ஒருவ‌னாகிய‌ க‌சாப்பை "ஒரு பாகிஸ்தான் குழந்தையை 2006 இல் நேப்பாளிலிருந்து பிடித்து வந்து 2008 மும்பை தாக்குதலின் ஒரே குற்றவாளி எனக் கூறி கொலை செய்துவிட்டார்கள். இதில் உச்ச நீதிமன்றமும் உடந்தை!" என‌ அப்ப‌ட்ட‌மாக‌,
ஆதார‌ம‌ற்ற குற்ற‌ம் சாட்டுகின்ற‌ இந்திய‌ர்க‌ள், இந்தியாவில் இருக்கிறார்க‌ள் என்ப‌து மிக‌வும் க‌வ‌லைக்குரிய‌ விட‌யம் ம‌ட்டும‌ல்ல‌, இந்திய‌ர்க‌ள‌னைவ‌ரும் சிந்திக்க‌ வேண்டிய‌ விட‌யமும் கூட‌.

அஜ்ம‌ல் க‌சாப் ஒரு பாகிஸ்தானிய‌ குடிம‌க‌ன் என‌ பாகிஸ்தான் பிர‌த‌ம‌ர் ந‌வாஸ் ச‌ரீப் ஒப்புக்கொண்ட‌ பின்பும், க‌சாப் இற‌ந்த‌வுட‌னேயே அவ‌ன் ஒரு மாவீர்ன் (ஹீரோ) என‌ பாகிஸ்தானின் ல‌ஸ்கர் இ தொய்பா புக‌ழார‌ம் சூட்டிய‌ பின்பும், பாகிஸ்தான் த‌லிபான்க‌ள் க‌சாப்பின் ம‌ர‌ண‌த்துக்கு இந்திய‌ர்க‌ளைப் ப‌ழிவாங்குவோம் என‌ அறிவித்த‌ பின்பும், இந்திய‌க்குடிம‌க‌ன்க‌ளில் சில‌ர் க‌சாப்பை "நேப்பாளத்திலிருந்து பிடித்து வ‌ந்த‌ பாகிஸ்தானின் குழ‌ந்தை" என, அதுவும் ஒரு பாகிஸ்தானிய ப‌த்திரிகையில், பாகிஸ்தானைச் சார்ந்த‌ ப‌ரூக் என்ற‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ரின் வாக்குமூலத்தின் அடிப்ப‌டையில், அவ‌னை பால்ம‌ண‌ம் மாறாச்சிறுவ‌னாக‌ வ‌ர்ணிக்க‌ முனைவ‌து, க‌சாப்பினாலும் அவ‌ன‌து ச‌காக்க‌ளாலும் கொல்ல‌ப்ப‌ட்ட‌ அப்பாவி இந்திய‌ர்க‌ளின் க‌ல்லறையில் காறி உமிழ்வ‌து போன்ற‌து ம‌ட்டும‌ல்ல‌, மிக‌வும் க‌வ‌லைக்குரிய‌துமாகும்.

பாகிஸ்தானைச் சார்ந்த‌ ப‌ரூக் என்ற‌ வ‌ழ‌க்கறிஞ‌ரின் வாக்குமூல‌த்தை ந‌டுநிலையான‌, உண்மையான‌ வாக்குமூல‌மாக‌ ஏன் ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ப‌தை க‌ட்டுரையாசிரிய‌ர் ஜ‌னாப் குலாம் முக‌ம்ம‌து அவ‌ர்க‌ள் தான் விள‌க்க‌ வேண்டும்.
viyasan
Mr. Seyed Mohammed,

அதே ஹிந்துஸ்த்தான் டைம்ஸில் உள்துறை அமைச்ச‌ரின் க‌ருத்துக்க‌ள் ஊடகங்க‌ளால் த‌வ‌றாக‌ப் புரிந்து கொள்ள‌ப்ப‌ட்டு விட்ட‌தாக‌, இந்திய‌ அர‌சு விள‌க்க‌ம் கொடுத்த‌ பின்ன‌ரும், உள்துறை அமைச்ச‌ரோ பிர‌த‌ம‌ருக்குத் தெரியாது என்கிறார் என‌ கிளிப்பிள்ளை மாதிரி ஒப்புவிக்கும் உங்க‌ளைப் போன்ற‌வ‌ர்க‌ளின் உள்நோக்கம் என்ன‌வென்று தெரிய‌வில்லை. இந்தியா நினைத்திருந்தால் க‌சாப்பை என்க‌வுண்ட‌ரில் கொன்றிருக்க‌லாம் ஆனால் ப‌ல‌ கோடிக‌ள் செல‌வில், ப‌ல‌முறை மேன்முறையீடு செய்வ‌த‌ற்கு வாய்ப்ப‌ளிக்கப்ப‌ட்டு இந்தியாவின் ச‌ட்ட‌த்தின்ப‌டி தீர்ப்பு அளிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. க‌சாப் ஒன்றும் வெறும் பாட்ட‌ரி வாங்கிக் கொடுக்க‌வில்லை, ஆனால் அவ‌ன் நேர‌டியாக‌ ப‌டுகொலைக‌ளில் ஈடுப‌ட்ட‌த‌ற்கு ஆதார‌ங்க‌ளுண்டு அதை விட‌ குபேர் ப‌ட‌கில் அவ‌ன‌து கைய‌டையாள‌ங்க‌ளும், ம‌ரப‌ணுக்களும் இருப்ப‌தும் நிரூபிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. ப‌த்திரிகைக‌ளும், தொலைக்காட்சிக‌ளிலும் வாயிலாக‌வும் ப‌ர‌ப்ப‌ப்ப‌டும் க‌ருத்துக்க‌ளின் அடிப்ப‌டையிலோ அல்ல‌து அர‌சிய‌ல்வாதிக‌ளின் பேச்சுக்க‌ளின் அடிப்ப‌டையிலோ நீதிம‌ன்ற‌ங்க‌ள் தீர்ப்பு வ‌ழ‌ங்குவ‌தில்லை. ஆனால் இந்த‌க் க‌ட்டுரையாசிரிய‌ர் க‌சாப்பின் க‌ருணை ம‌னு நிராக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌தாக‌ ஊட‌க‌ங்க‌ளில் வெளிவ‌ந்த நாட்க‌ளுக்கும், உத்தியோக‌பூர்வ‌மாக‌ அறிவிப்பு வெளியிட்ட‌ நாட்க‌ளுக்குமிடையில் முர‌ண்பாடிருப்ப‌து, ஏதோ க‌சாப்பை நிர‌ப‌ராதியாக‌க் காட்டும் ஆதார‌மாக‌ப் ப‌ட‌ம் காட்ட‌ முனைகிறாரே த‌விர‌ வேறொன்றுமில்லை. இப்ப‌டி உத்தியோக‌ அர‌சாங்க‌ள் அறிவிப்ப‌த‌ற்கு முன்ன‌ரே, ஊட‌கங்க‌ள் ஏற்க‌ன‌வே செய்தியை வெளியிடுவ‌தும், ப‌ல்வேறு வித‌மான‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளையும் அளிப்ப‌தும் இந்தியாவில் ம‌ட்டும‌ல்ல‌, மேலைநாடுக‌ளிலும் ந‌டைபெறும் சாதார‌ண‌ விட‌ய‌மாகும்.

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்து இந்தியாவின் இறையாண்மைக்குச் ச‌வால் விட்ட‌து ம‌ட்டும‌ல்லாம‌ல், நூற்றுக்க‌ணக்கான‌ இந்திய‌ர்க‌ளின் உயிரைப்ப‌லியெடுத்த‌வ‌ர்க‌ளில் ஒருவ‌னுக்காக‌ அழுகிற‌ இந்த‌ இந்தியர்க‌ளில் யாராவ‌து, 22 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக‌ செய்யாத‌ குற்ற‌த்துக்காக‌, பாகிஸ்தான் சிறையில் வாடும் அப்பாவியான‌ இந்திய‌ன் ச‌ர‌ப்ஜித்சிங்குக்காக‌ பாகிஸ்தானை எதிர்த்து, கீற்றில் ஒரு சில‌ வ‌ரிக‌ளாவ‌து எழுதியிருக்கிறார்க‌ளா என்ப‌தை அறிய‌ ஆவலாக‌ உள்ள‌து. இந்தியனான‌ ச‌ர‌ப்ஜித் சிங்கை விட‌, பாகிஸ்தானிய‌ரான‌ அஜ்ம‌ல் க‌சாப்புக்கும் இவ‌ர்களுக்குமிடையிலுள்ள‌ பாச‌ப்பிணைப்புக்கு என்ன‌ கார‌ண‌மாக‌விருக்க‌ முடியும். அத‌ற்குக் கார‌ண‌ம் அவ‌ர்க‌ளின் ம‌த‌ம் ஒன்று தான். இது தான் இல‌ங்கையிலும் ந‌ட‌ந்த‌து. இல‌ங்கையின் த‌மிழ்பேசும் முஸ்லீம்க‌ள் அவ‌ர்க‌ளின் இன‌, மொழிவ‌ழிச் ச‌கோத‌ர‌ர்க‌ளாகிய‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் முதுகில் குத்தினார்க‌ள். பாகிஸ்தானின் ஆத‌ர‌வையும், ஆயுத‌ங்க‌ளையும் இல‌ங்கை அர‌சுக்குப் பெற்றுக் கொடுத்து, ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளைக் க‌ருவ‌றுத்தார்க‌ள், அதே நிலை இந்தியாவிலும் ஏற்ப‌டாம‌லிருக்க‌ வேண்டுமென்ப‌தால் தான் நான் இப்ப‌டியான‌ க‌ட்டுரைக‌ளுக்குப் பதிலெழுதுகிறேனே தவிர‌, எனக்கு இந்துத்துவாவில் எந்த‌ ஈடுபாடும் கிடையாது.
ஷாலி
// பாகிஸ்தானின் ஆத‌ர‌வையும், ஆயுத‌ங்க‌ளையும் இல‌ங்கை அர‌சுக்குப் பெற்றுக் கொடுத்து, ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளைக் க‌ருவ‌றுத்தார்க‌ள், அதே நிலை இந்தியாவிலும் ஏற்ப‌டாம‌லிருக்க‌ வேண்டுமென்ப‌தால் தான் நான் இப்ப‌டியான‌ க‌ட்டுரைக‌ளுக்குப் பதிலெழுதுகிறேனே தவிர‌, எனக்கு இந்துத்துவாவில் எந்த‌ ஈடுபாடும் கிடையாது.//
“யோக்கியன் வர்றாரு..சொம்பை எடுத்து உள்ளே வை ...” என்ற கதைதான்.காலங்காலமாக ஈழத் தமிழினத்தை திட்டமிட்டு கருவறுத்த இந்திய பார்ப்பன உளவுத்துறையின் திருகு தாளங்களை நியாயப்படுத்தும் வியாசனும் ஒரு ஈழத்தமிழனா? கேவலம்,முஸ்லிம்கள் மேல் உள்ள வெறுப்பும் காழ்ச்புணர்ச்சியும் அவர் கண்ணை மறைத்துவிட்டது.பாகிஸ்தானும் ஆயுதம் கொடுத்தான்,இந்தியா உளவுத்துறையும் ஆயுதம் கொடுத்தது,சீனாவும் கொடுத்தான் ,ஏன் வியாசனின் அமெரிக்காவும் தான் கொடுத்தான். ஆனால் முஸ்லிமை மட்டுமே இவர் எதிர்ப் பாராம்..அவர் இந்துத்தவா இல்லையாம்.உண்மைதான் ஆனால் வியாசன் ஒரு ஈழத்வா.சாதிச் சனியனுக்கு சலங்கை கட்டும் சங்பரிவார்.இவர் ஒரு புலித்தோல் போர்த்திய கோமாதா. புலம் பெயர் தமிழர்கள் அறிவாளிகள்.பயிரையும் களையையும் பிரிக்கத்தெரிந்தவர்கள்.ஈழத்வாக்களை இனம் கண்டு கொள்வார்கள்.
samuththiram
நிச்சயமாக இந்த கட்டுரை நடுநிலை என்ற தளத்தில் இருந்து சிந்திப்பவர்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்,கசாப் அவனது சுய பிரியத்தில் தீவிரவாதியாக,கொலைக்காரனாக இந்தியர்களை அழிக்க நினைத்திருந்தால் எந்த இந்தியனும்(ஹிந்துக்களோ,முஸ்லீம்களோ,கிருத்துவர்களோ) அவனது செயலை மண்ணிக்க இயலாது,ஆனால் இது ஒரு திட்டமிடப்பட்ட சதி,நாடகம் எனும் பட்ச்சத்தில் காழ்புணர்ச்சியின் காரணமாக ஏற்றுக்கொள்ள மறுப்பது அறீவீனம்!!
சட்டம் ஒரு இருட்டரை என்பது என்னவோ இப்போது மைனாரிடிகளை பொறுத்தவரை உண்மைதான்போலும்...

/இன்னும் எத்தனை காலம் தான் இந்த மக்கள் விரோத இந்திய அரசை நம்பிக் கொண்டிருப்பீர்கள். கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்றால், கேள்வி கேட்டவனை கேடுகெட்டவன் என்றும் தீவிரவாதி என்றும் முத்திரைக் குத்தும் முட்டாள்தனத்திலிருந்து எப்பொழுதுதான் நீங்கள் வெளிவருவீர்களோ!! இவர் இங்கே குறிப்பிட்டிருக்கும் அனைத்தும் உண்மையே. ஒரு கொடூர கொலைக் குற்றவாளியை இப்படி இரகசியமாக தூக்கிலிட காரணம் என்ன. ஏனென்றால் சட்டத்தின் முன்பு அவனது குற்றங்களை நிரூபிக்க சாட்சியங்கள் இல்லை. அதனால் குற்றவாளியையே கொலை செய்து குற்றத்தை நிரூபிக்கும் கேவலமான இந்திய கலை தான் இது. வாழ்க இந்த கேவலமான பாரதம்///
viyasan
///அஜ்மல் கசாப்பிற்காக யாரும் இங்கு அழவில்லை.மாற்று கருத்துடையோர் வரிக்கு வரி பதிலளித்து ஏன் ஒரு கட்டுரை எழுதக்கூடாது?///
கேட்ட‌ கேள்விக‌ளுக்கே இன்னும் விள‌க்க‌த்தைக் காண‌வில்லை, அதற்குள் இது வேறா? அஜ்ம‌ல் க‌சாப் ஒன்றும் அநியாய‌மாக‌க் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌வுரிமைக்காக‌ப் போராடிய‌ மகாத்மாவும் அல்ல‌, பால்ம‌ண‌ம் மாறாத‌, க‌ண்ணைக் க‌ட்டிக் க‌ட‌த்திவ‌ர‌ப்ப‌ட்ட அப்பாவிச் சிறுவ‌னும‌ல்ல‌. பாகிஸ்தானை சார்ந்த‌ ப‌ரூக் என்ப‌வ‌ர் அப்ப‌டிச் சொல்கிறார் என்ப‌த‌ற்காக‌, அதை உண்மையான‌தாக‌ ஏற்றுக் கொள்ள‌ வேண்டுமென்ப‌தைப் போன்ற‌ முட்டாள்த‌ன‌மெதுவும் இருக்க‌ முடியாது. பாகிஸ்தானில் ஒசாமைவையும் தான் அப்பாவி என்கிறார்க‌ள். த‌ன‌து சொந்த‌நாட்டுக் குர்டிஸ் குடிம‌க்க‌ளை, பெண்க‌ளையும், குழ‌ந்தைக‌ளையும் ந‌ச்சுவாயுவையூட்டிப் ப‌டுகொலை செய்த‌ ச‌தாம் ஹீசைனையும் கூட‌த்தான் அப்பாவி எனப் ப‌ல‌ த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ள் இணைய‌த்த‌ள‌ங்க‌ளில் அழுது வ‌டித்தார்க‌ள், அத‌ற்காக‌ அவ‌ற்றையெல்லாம் எல்லோரும் உண்மையென‌ ஏற்றுக் கொள்ள‌ வேண்டிய‌ தேவை கிடையாது, ஏற்றுக்கொள்ள‌வும் மாட்டார்க‌ள். அது போல் தான் இதுவும். இந்தியாவில் எத்த‌னையோ ஒன்றும‌றியாத‌ அப்பாவிக‌ள் ப‌ல்லாண்டுக‌ளாக‌ச் சிறையில் வாடுகிறார்க‌ள். அப்பாவி ப‌டிப்ப‌றிவில்லாத‌ கிராமப் பெண்களைக் க‌ற்ப‌ழித்த‌வ‌ர்க‌ள் கூட, சட்ட‌த்திலுள்ள‌ ஓட்டைக‌ளாலும், அர‌சிய‌ல் செல்வாக்காலும் த‌ப்பித்துக் கொள்கிறார்க‌ள், செய்யாத‌ குற்ற‌த்துக்காக‌ அல்ல‌து அப்பாவித்த‌னமாக‌ எதற்கென்று தெரியாம‌ல் பாட்ட‌ரி வாங்கிக் கொடுத்த‌த‌ற்காக‌க் கூட‌, ம‌ர‌ண‌த்தின் வாயிலில், ப‌ல்லாண்டுக‌ளாக‌ சிறையில் வாடுகிறார்க‌ள். அவ‌ர்க‌ளுக்காக‌ எல்லாம் வீதிக‌ளைத் த‌டுத்து ஆர்ப்பாட்ட‌ம் செய்யாத‌வர்க‌ள், ஈழ‌த்தில் த‌மிழ‌ர்க‌ள் த‌ம‌து விடுத‌லைக்காக‌ப் போராடும் போது, அவ‌ர்க‌ளின் போராட்ட‌த்தைக் கொச்சைப்ப‌டுத்திய ஜெய்னுலாப்தீன் போன்ற‌வ‌ர்க‌ளின் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் இன்று ஒரு இந்திய‌க்குடிம‌க‌ன் அல்லாத‌, இந்தியாவுக்குள் அத்துமீறீ நுழைந்த‌, இந்தியாவில் ப‌ல‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ச்செய‌ல்க‌ளைப் புரிந்த‌தாக‌க் கூற‌ப்ப‌டும்,ல‌ஸ்க‌ர் இ தொய்பாவில் அவ‌ன் ப‌யிற்சி பெற்ற‌தற்கு ஆதார‌ங்க‌ளிருப்ப‌தாக‌க் கூற‌ப்ப‌டுகிறவ‌னுக்காக‌, அதுவும் அவ‌ன் இந்திய‌ர்க‌ள் ப‌ல‌ரைப் ப‌டுகொலை செய்த பின்ன‌ரும், அவ‌ன‌து வ‌ழ‌க்கில் ஓட்டைக‌ளிருக்கின்ற‌ன‌, கேள்விக‌ளிருக்கின்ற‌ன‌ என‌ குய்யோ, முறையோ என‌க் கூக்குர‌லிட்டால் அதன் க‌ருத்து, அவ‌ர்க‌ள் அஜ்ம‌ல் க‌சாப்புக்காக‌ அழுகிறார்க‌ள் என்ப‌தை விட‌ வேறு என்ன‌வாக‌விருக்கும் என்ப‌தை ஜ‌னாப் உத‌ய‌ம் தான் விள‌க்க‌ வேண்டும்.
uthayam
அபு அப்ராஹ் கேட்ட கேள்விகளுக்கும் ஐயத்திற்கும் பதில் சொல்ல முடியாத வியாசன் முஸ்லிம்களை குறி வைத்து தாக்குதல் நடத்துகிறார். இது பூனைக்குட்டி வெளியே வந்த கதை தான், இதில் வேறு இந்துத்துவத்தில் ஈடுபாடு கிடையாதாம். இந்துத்துவத்தில் ஈடுபாடு மட்டும் இல்லையென்றால் இதிலுள்ள உண்மைகள் உங்களுக்கு நியாயமாகப்பட்டிருக்கும். இப்போது கூட இக்கட்டுரையில் கேட்கப்பட்டிருக்கும் நியாயமான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் துளி கூட இல்லை, மாறாக இதிலிருந்து வேறு விஷயங்களை உணர்ச்சி பூர்வமாக அனுகி இதை நீர்த்துப்போக செய்ய சங்பரிவாருக்கே உரித்தான் பொய் பரப்புரைக்கு தயாராகுறீர்கள். இப்போது கூட கெட்டுவிடவில்லை, இக்கட்டுரைக்கு உங்களுக்கு மறுப்பு இருக்கும்பட்சத்தில் உங்கள் கருத்துக்களை கட்டுரையாக்கி கீற்றுவில் இணையுங்கள். அதை உங்களைப் போல ஒரு பக்கச்சார்பில்லாமல் நியாயமாக படிக்க நாங்கள் காத்திருக்கிறோம். அதை விட்டு விட்டு போகிற போக்கில் சேற்றை வாரி இறைக்க வேண்டாம். அவன் லஷ்கரே தொய்பா தீவிரவாதியாகவே இருக்கட்டுமே "இந்த சம்பவத்தில் அவனுக்கு எந்தளவிற்கு பங்கு இருந்தது" என்பது தான் கேள்வி. அதற்காக கசாபை யாரும் மகாத்மா என்று சொல்லவில்லை. நீதித்துறைக்குப்பின் ஒரு பயங்கரவாத சிந்தனை ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது அதன் விளைவுகள் தேச ஒற்றுமைக்கும் நீதிபரிபாலனைக்கும் வேட்டு வைப்பதாக இருக்கிறது என்பதை இக்கட்டுரை எச்சரிப்பதாகத்தான் நான் இதை பார்க்கிறேன். இந்த தேசம் நீதி வழங்குவதில் யாருக்கும் சிறிதும் அநீதியை இழைத்து விட கூடாது என்ற அக்கரையில் எழுதப்பட்டதாகவே இக்கட்டுரையைப் பார்கிறேன். நீதியில் பாரபட்சம் காட்டப்படும் ஒரு தேசத்தில் நிம்மதியான வாழ்வு என்பது கேள்விகுறியாகும்.

நாயை சுட வேண்டுமென்றாலும் சட்டப்படி செய்யுங்கள் என்பது தான் வாதம்.

சட்டத்தைக்கொண்டு தீர்ப்பை வழங்காமல் " நம்பிக்கையின் அடிப்படை" யிலும், " நாட்டு மக்களின் கூட்டு மனசாட்சி" அடிப்படையிலும் என்று நீதிமன்றம் வளைய ஆரம்பித்திருப்பதே இதற்கு சாட்சி.
sp.maragathaselvam
வியாசன் என்ற பெயரில் எழுதும் நபர் ,அவரின் எழுத்து இந்துத்துவ அடிவருடி அல்லது இந்திய கைக்கூலியாக இருப்பாரோ என்ற சந்தேகத்தை தருகின்றது ,இங்கு எதை பற்றி கட்டுரையோ அதை பற்றி பேசுவதே அறிவுள்ளோர் செயல் ,அதை விடுத்து ஈழம் ,ஈராக் ,என்று பேசுவதில் இருந்து உங்கள் நோக்கம் புரிகின்றது .இந்தியம் பேசி இஸ்லாமியர்களை வெறுக்க சொல்கின்றீரா ,நாங்களும் உங்களிடம் கேள்வி கேட்க முடியும் தருமபுரி சம்பவத்திற்கு கொதிக்காத உங்கள் ரத்தம் ஏன் இங்கு கொத்திகின்றது என்று ??????? வியாசன் அவர்களே ,கோடி கணக்கான பட்டியல் இன மக்கள் இஸ்லாத்தை தழுவும் நாள் மிக அருகில் நெருங்கிவிட்டது ,இஸ்லாமியர்கள் மேல் உள்ள வெறுப்பை இங்கே கொட்டவேண்டாம் ,இந்து ,இந்தியா ,இந்தி ,இஸ்லாமியர் ,அனைத்தையும் தாண்டி ,மனிதனாக பாருங்கள் ,இல்லை ஆணிய புடுங்காம இருங்க
viyasan
///புகைப்படமும் கசாப்பும். அவர்கள் துப்பாக்கிகளை இயக்கிய வேகம் யாரும் அவர்களைப் படம் எடுக்கும் நிலையில் இல்லை. ஆகவே அஜ்மல் கசாப்-ஐ அங்கே ஜோடித்திருக்கின்றார்கள்.///

ப‌த்திரிகைக‌ளிலும், தொலைக்காட்சிகளிலும் க‌சாப் தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌ போது எடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ங்க‌ள் எல்லாம் ஜோடிக்க‌ப்ப‌ட்ட‌வை, அது அஜ்ம‌ல் க‌சாப்பே அல்ல‌ என்று வாதாடுகிறார் இந்த‌க் க‌ட்டுரையாசிரிய‌ர் குலாம் முக‌ம்ம‌து. ஆனால் க‌சாப்பை பெற்று வ‌ள‌ர்த்து, வ‌றுமையின் கொடுமையால் அவ‌னை ல‌ஸ்க‌ர் இ தொய்பாவில் இணையுமாறு கேட்டுக் கொண்ட‌ அஜ்ம‌ல் க‌சாப்பின் த‌ந்தை தொலைக்காட்சிக‌ளில் அஜ்மல் க‌சாப்பின் ப‌ட‌ங்க‌ளைப் பார்த்து, அது த‌ன்னுடைய ம‌க‌ன் தான் என‌ ஒப்புக்கொண்டார் என‌ பாகிஸ்தான் ஊட‌க‌ங்க‌ள் உறுதிப்ப‌டுத்திய‌து கூட‌ இந்த‌க் க‌ட்டுரையாசிரிய‌ருக்குத் தெரியாது என்ப‌தை என்னால் ந‌ம்ப‌முடிய‌வில்லை. ஒருவ‌னின் சொந்த‌ த‌ந்தை த‌ன்னுடைய‌ ம‌க‌ன் தான் என்று அவ‌னை அடையாள‌ப்ப‌டுத்திய‌ பின்பும், அது த‌வ‌று, ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அவ‌ன‌து ப‌ட‌த்தை சோடித்திருக்கிறார்க‌ள் என்ப‌து வெறும் வித‌ண்டாவாத‌மேய‌ல்லாது வேற‌ல்ல‌. இப்ப‌டியான‌ பொய்ப்பிர‌ச்சார‌ங்க‌ள் தேவைய‌ற்ற‌ வாக்குவாத‌ங்க‌ளுக்கு தான் வ‌ழிவ‌குக்கின்ற‌ன‌.

https://www.youtube.com/watch?v=hwRgaTZEPsk
ஷாலி
வியாசன் என்ற விஷ வைரஸ் தொடர்ந்து நச்சுக்கருத்துக்களை பரப்பி வருகிறது.தாழ்த்தப்பட்டவர்கள்,சிறுபான்மை முஸ்லிம்,கிருஸ்துவ மக்களை தாக்கி தூற்றுவதே இதன் வேலை.நடுநிலை சிந்தனையாளர்களையும் தடுமாரச் செய்து இந்துத்வா பக்கம் இழுப்பதே இவரின் குறிக்கோள்.இந்த விஷக் கிருமி பரவுவதற்கு கீற்று இணைய தளம் உதவலாமா? தள நிர்வாகிகள் சற்று கவனமாக இவரை கவனிக்கவேண்டும்.ஒன்று பட்ட சமூதாய மக்களுக்கிடையே பிரிவினை செய்யும் எவருக்கும் கீற்று இடமளிக்கக்கூடாது.
அபூ அஃப்ரஹ்
ஒரு புதிய பொய்யை சொல்லும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் வியாசன்.
"வறுமையின் கொடுமையால் அவனை லஸ்கர் இ தொய்பாவில் இணையுமாறு கேட்டுக் கொண்ட அஜ்மல் கசாப்பின் தந்தை தொலைக்காட்சிகளில் அஜ்மல் கசாப்பின் படங்களைப் பார்த்து, அது தன்னுடைய மகன் தான் என ஒப்புக்கொண்டார் என பாகிஸ்தான் ஊடகங்கள் உறுதிப்படுத்தியது கூட இந்தக் கட்டுரையாசிரியருக்குத் தெரியாது என்பதை என்னால் நம்பமுடியவில்லை என கூறுகிறார் வியாசன். "
இதெல்லாம் எப்பொழுது நடந்தது, எந்த பாகிஸ்தான் ஊடகத்தில் இவை வெளிவந்தன என ஆதாரம் காட்டினால் உங்கள் பொய் எடுபடும்.
" ஒருவனின் சொந்த தந்தை தன்னுடைய மகன் தான் என்று அவனை அடையாளப்படுத்திய பின்பும், அது தவறு, மற்றவர்கள் அவனது படத்தை சோடித்திருக்கிறார்கள் என்பது வெறும் விதண்டாவாதமேயல்லாது வேறல்ல. இப்படியான பொய்ப்பிரச்சாரங்கள் தேவையற்ற வாக்குவாதங்களுக்கு தான் வழிவகுக்கின்றன" என்று மிகவும் அக்கறைப்பட்டிருக்கிறார்.
படத்தை பார்த்து அடையாளங்காட்டிய தந்தை அவனுடைய உடலுக்கு ஏன் சொந்தம் கொண்டாட வரவில்லை என்பது வியாசனுக்கு மட்டுமே வெளிச்சம். இல்லையா வியாசன் அவர்களே.
உங்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த விடயங்கள் எந்த பாகிஸ்தான் ஊடகத்தில் வெளிவந்தன என்பதை தெளிவுபடுத்த முடியுமா?
நொண்டி சாக்குகள் வேண்டாம். நான் ஏற்கனவே கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் காணாமல் அஜ்மல் கசாபை பற்றி விவாதிக்க நீங்கள் தகுதியுடையவர் ஆக மாட்டீர்கள். எனவே என் கேள்விகளுக்கு முதலில் விடை சொல்லுங்கள். இது ஒன்றும் தலை போகும் விக்ரமாதித்தன் கேள்விகள் அல்ல. சாதாரண பாமரனும் பதில் சொல்லக்கூடிய கேள்விதான். அபூ அஃப்ரஹ்
seyed muhammed
நன்பரே......வியாசரே!தொலைக்காட்சியில் நமது உள் துறை அமைச்சர் வழங்கிய பேட்டியை பார்த்தோரில் நானும் ஒருவன்.முதலில் ஒன்றை கூறுவதும் அது சாதகமில்லாமல் பாதகமாகி விட்டால் பல்லிப்பதும் இந்திய அதிகார அரசியல் வட்டாரத்தின் நகைச்சுவை ஒரங்க நாடகம்.
இதில் யாரும் யாருக்கும் சளைத்தோர் அல்ல.இப்படி வழங்கப்படும் மறுப்புரைகள் மறுப்புரைகளா?அல்லது தகுதியற்றவர்களின் முன் பின் முரண்களா?
இது போன்ற முரண்களால் உயிர்கள் பலியிடப்படுகின்றன என்று தான் கட்டுரை ஆசிரியர் வருத்த படுகிறார்.
கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ள முரண்களை முறை கேடுகளை ஒழுங்கீனங்களை மறுத்து அப்படி எல்லாம் நடக்கவில்லை என சொல்ல வழியோ வகையோ இல்லாததால் வார்த்தை விளையாட்டிற்கு தயாராகி விட்டீர்.
கசாப்பை தூக்கிலிடுவதிலுள்ள பிரச்சனை அல்ல.நீதி மன்றங்களும் நிர்வாகதுறைகளும் காவல் துறைகளும் உளவுத்துறைகளும் களங்கப்பட்டுள்ளன்,கறைபடிந்துள்ளன எனபது தான் வாத பிரதிவாதம்.
இன்று கசாப்பை தூக்கிலிட சதி செய்தவர்கள் நாளை வியாசரையும் கொல்லலாம்;சதி யாருக்கு எதிராக வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்;
எங்களை கொல்ல மாட்டார்கள் .....நாங்கள் கொல்லப்பட மாட்டோம் கொல்லும் தளத்தில் வசிப்பவர்கள் என மார் தட்டினால் உங்களை பார்த்து பரிதாப படுகிறோம்;வெகு விரைவில் அதிகார வர்க்கத்திற்கெதிரான குற்றப்பத்திரிக்கையை நீங்கள் வெளியிடுவீர்கள்.ஆம்!இது இறைவனின் உலகம்;இறைவன் அநீதி செய்வதை அநீதிக்கு துணை போவதை விரும்புவதில்லை.
seyed muhammed
கசாப் அப்பாவி அல்ல என்பதை நிரூபிக்க என்னிடம் ஆதாரம் இல்லை என்பதை எப்படி நாசூக்காக ஒப்பு கொள்கிறீர் வியாசரே!
உமது வார்த்தைகள் பேரறிஞர் அண்ணாவின் நீதி தேவன் மயக்கம் எனும் நாடக நூலிலுள்ள வாத பிரதி வாதங்களைத்தான் நினைவூட்டிய்து.அதில் ஒரு காட்சி
கம்பனிடம் ஏன் இராவணனை அரக்கனாக்கினீர்? அதை விட கொடிய பாவங்களை பஞ்சமாபாதகங்களை செய்தோரை எல்லாம் தேவாதிதேவர்களாக காட்டிவிட்டு இராவணனை மட்டும் ஏன் அரக்கனாக்கினீர்?என்ற கேள்விக்கு கம்பன் ப்தில் சொல்ல வழியின்றி இறுதியில் ஒப்பு கொள்வார் ஆம் என்னிடம் ஆதாரம் இல்லை என்பார்;
வியாசரே!வேண்டாம் விநாசகால புத்தி!
seyed muhammed
ஐயா வியாசரே!கைரேகை பதிவுகளும், மரபணுக்களும் குபேர் படகில் பதிவாகிருந்த நிலையிலுமா கசாப்பை காண அரசு நியமித்திருந்த வக்கீலுக்கும் அனுமதி வழங்கவில்லை? அதே அரசு நியமித்த வக்கீலுக்கு கசாப்பின் வயதை ஊர்ஜிதப்படுத்தும் எக்ஸ்ரேக்களை ஏன் வழங்கவில்லை? கசாப் துப்பாக்கியோடு அங்கும் இங்கும் அலைந்து திரிந்ததை படம்பிடித்த போட்டோகிராபர்களை சந்திக்க குறுக்கு விசாரனை செய்ய ஏன் அனுமதிக்க வில்லை? தன்னிடத்தில் தான் எல்லா ஆதாரங்களும் கொட்டி கிடக்கின்றனவே....!பார்த்து விட்டு போகட்டுமே பரதேசிகள் என்றல்லவா தூக்கி கொடுத்திருக்க வேண்டும். தான் நியமித்த வக்கீல் தான் சுழற்றும் குச்சிக்கேற்ப ஆடுரராமா எனும் குரங்கு போல் ஆடவில்லையே என்பதற்காக ஆளை மாற்றுகிறார் என்றால்.......இதற்கு பெயர் தான் நீதியா? பல முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக கூறும் கூப்பாட்டின் அழகா?
சதாமிற்காக கண்ணீர் சிந்தினார்கள் முஸ்லிம்கள்.... உண்மை; அதற்கும் இந்த கட்டுரைக்கும் என்ன தொடர்பு? மகாத்மா காந்தியை கொன்ற வழக்கில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டவர்களின் நிழற்ப்படங்கள் தொங்கும் புண்ணிய பாரத வர்ஷில், அதை திற்ந்து வைத்து ஆட்சி செய்த கட்சிகள் உள்ள பாரதத்தில், முஸ்லிம்கள் எந்த புறசூழலுக்கும் தாக்கத்திற்கும் ஆளாக கூடாது என்றால் நடக்குமா......? பாரதிய ஜனதாவிலுள்ள முஸ்லிம் பெயர் தாங்கிகள் யாரேனும் அழுதிருக்கலாம்! அதற்கும் இதற்கும் என்ன சார் சம்பந்தம்.
viyasan
/// " இதெல்லாம் எப்பொழுது நடந்தது, எந்த பாகிஸ்தான் ஊடகத்தில் இவை வெளிவந்தன என ஆதாரம் காட்டினால் உங்கள் பொய் எடுபடும்///

வெறும் கூகிள் தேடுத‌லியே இந்தியாவில் ம‌ட்டுமுள்ள‌,உல‌க‌ நாடுக‌ள் முழுவ‌திலுமுள்ள‌, அதிலும் பேச்சு சுத‌ந்திர‌முள்ள‌, ஜ‌ன‌நாய‌க‌நாடுக‌ளிலுள்ள் ந‌டுநிலையான‌, நாளித‌ழ்க‌ளிலும், தொலைக்காட்சிக‌ளிலும் இதைப்ப‌ற்றி வெளிவ‌ந்த‌ ஆதார‌ங்க‌ளைக் காண‌லாம். ஆனால் இந்திய‌ராகிய‌ ஜ‌னாப் அபூ அஃப்ரஹ் அவ‌ர்க‌ள் இந்திய‌ தொலைக்காட்சிகளையும், நாளித‌ழ்க‌ளையும், இணைய‌த்த‌ளங்க‌ளையும் ம‌ட்டும‌ல்ல‌ எந்த‌ நாட்டையும் ந‌ம்ப‌மாட்டாராம், இத‌ற்கான‌ ஆதார‌த்தைப் பாகிஸ்தான் ஊட‌க‌ங்க‌ளில் காட்டினால் மட்டும் தான் ந‌ம்புவாராம். என்னே விசுவாச‌ம். அத‌னால் பாகிஸ்தானில் தேசிய‌ அள‌வில் வாசிக்க‌ப்ப‌டும் நாளித‌ழும், பாகிஸ்தானின் மிக‌வும் முக்கிய‌ ஆங்கில‌ நாளித‌ழ்க‌ளிலுமொன்றாகிய‌ DAWN டோணில், பாகிஸ்தானிய‌ அர‌சு, அஜ்ம‌ல் க‌சாப்பின் அடையாள‌த்தைப் ப‌ற்றி ஆய்வுசெய்து அவ‌ன் பாகிஸ்தான் குடிம‌க‌ன் என்ப‌தையும், அவ‌ன‌து த‌ந்தை அமீர் க‌சாப், தாய் நூர் இல்லாஹி என்பதையும் அவ‌ர்க‌ள் ப‌ஞ்சாப் மாநில‌த்திலுள்ள‌ ஃப‌ரிக்கோட் என்ற‌ ஊரைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் என்ப‌தை உத்தியோக‌பூர்வ‌மாக‌ அறிவித்த‌து என்ப‌தை உறுதிசெய்திருப்ப‌தைக் காண‌லாம் அத‌ற்கான‌ இணைய‌ லிங்க்(link) ஐயும் கீழே த‌ந்துள்ளேன் வாசித்து ம‌கிழ‌வும்.

http://archives.dawn.com/archives/42931

Ajmal`s nationality confirmed
By Mubashir Zaidi

The official who confirmed to Dawn about the preliminary investigation report said Kasab was son of Amir Kasab and Mrs Noor Illahi.However, he said there was no doubt in the minds of the investigators that the captured terrorist was a Pakistani. “Sadly, it has been established that Kasab is a Pakistani national.”

அது ம‌ட்டும‌ல்ல‌ பிர‌ப‌ல‌ ப‌த்திரிகையாள‌ர் க‌ஸ்வ‌ர் அப்பாஸ் அவ‌ர்க‌ள் அஜ்ம‌ல் க‌சாப்பின் கிராம‌த்துக்கு நேர‌டியாக‌ விஜ‌ய‌ம் செய்திருந்த‌ போது ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை இந்தியா ருடேயில் விவ‌ரிக்கிறார் அதையும் வாசிக்க‌வும். இந்தியாவின் இந்தியா ருடேயை ந‌ம்பாது விட்டாலும் முஸ்லீமான‌ க‌ஸ்வ‌ர் அப்பாஸை ந‌ம்புவீர்க‌ள் அல்ல‌வா.

http://indiatoday.intoday.in/story/26-11-terror-attacks-handler-ajmal-kasab-family-in-faridkot-village-pakistan-punjab/1/229455.html

Kasab's family was tracked down by journalists. "I was in denial for the first couple of days, saying to myself it couldn't have been my son... Now I have accepted it as the truth. I have seen the picture in newspapers. This is my son Ajmal," said Amir Shahban Kasab, as he broke down in his courtyard talking to THE DAWN NEWSPAPER after his son's arrest in Mumbai. More embarrassment followed, when former prime minister Nawaz Sharif not only confirmed Kasab was from the village, but attacked Zardari's government for hiding the truth and placing a security cordon around Faridkot.
viyasan
-//படத்தை பார்த்து அடையாளங்காட்டிய தந்தை அவனுடைய உடலுக்கு ஏன் சொந்தம் கொண்டாட வரவில்லை என்பது வியாசனுக்கு மட்டுமே வெளிச்சம். இல்லையா//-

"படத்தை பார்த்து அடையாளங்காட்டிய தந்தை அவனுடைய உடலுக்கு ஏன் சொந்தம் கொண்டாட வரவில்லை" என்கிறார். அபு அப்ராஹ். அவ‌ர் என்ன‌ புதுக்க‌தை விடுகிறார் என்று தெரிய‌வில்லை. இந்தியாவில் எத்த‌னையோ குண்டுத்தாக்குத‌ல்க‌ள் பாகிஸ்தானிய‌ர்க‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டுள்ள‌ன‌, எந்த‌ பாகிஸ்தானிய‌ரின் த‌ந்தையாவ‌து முன் வ‌ந்து தீவிர‌வாதிக‌ளின் ச‌ட‌லங்க‌ளை கேட்டார்க‌ளா?, அப்ப‌டியிருக்க‌ க‌சாப்பின் த‌ந்தை ம‌ட்டும் அத‌ற்கு விதிவில‌க்கா. பாகிஸ்தானிய‌ பிர‌த‌ம‌ர் ந‌வாஸ் ச‌ரீபே, அஜ்ம‌ல் க‌சாப் ஒரு பாகிஸ்தானிய‌ர் என‌ உத்தியோகபூர்வ‌மாக‌ அறிவித்து விட்டார். க‌சாப் தூக்கிலிட‌ப்ப‌ட்ட‌தை இந்தியா பாகிஸ்தான் தூத‌ர‌க‌த்துக்கு உத்தியோக‌ பூர்வ‌மாக‌ அறிவித்தும், த‌ம‌து நாட்டுக் குடிம‌க‌னின் உட‌லை பாகிஸ்தான் கேட்க‌வில்லை. அப்ப‌டியிருக்க‌ ப‌டிப்ப‌றிவ‌ற்ற‌, அஜ்ம‌ல் க‌சாப்பின் த‌ந்தை உட‌லுக்கு ஏன் சொந்த‌ம் கொண்டாட‌வில்லை என்ப‌தைக் கேட்கும் அபு அப்ராஹ் ஐ நினைக்க‌ சிரிப்புத் தான் வ‌ருகிற‌து. யாராவ‌து நிருப‌ர்க‌ள் க‌சாப்பின் த‌ந்தையிட‌ம் கேட்டிருந்தால் அவர் ம‌க‌ன‌து உட‌லுக்குச் சொந்த‌ம் கொண்டாடியிருக்க‌லாம். அல்ல‌து "அப்பாவி" க‌சாப்புக்காக‌ கீற்றில் அழுப‌வ‌ர்க‌ள் எல்லோரும் சேர்ந்து இந்திய‌ அர‌சாங்க‌த்திட‌ன் க‌சாப்பின் உட‌லைப்பெற்று பாகிஸ்தானிலுள்ள‌ அவ‌ன‌து த‌ந்தைக்கு அனுப்பியிருக்க‌லாம். அதை விடுத்து க‌சாப்பின் த‌ந்தை அவ‌ன‌து உட‌லைச் சொந்த‌ம் கொண்டாட‌ வ‌ர‌வில்லை, என்ப‌தால் அவ‌ர் அவ‌ன‌து த‌ந்தைய‌ல்ல‌ என்றாகி விடுமா?

அது ஒருபுற‌மிருக்க‌, ரொய்ட்ட‌ர் செய்தி நிறுவ‌ன‌த்துக்கு இஸ்லாமாபாத்திலுள்ள‌ அவ‌ர்க‌ளின் நிருப‌ர் Mehreen Zahra-Malik அனுப்பிய‌ செய்தியில் ‍ க‌சாப்பின் ஆன்ட்டி Shahnaz Sughra " அவ‌ன் (க‌சாப்) இப்ப‌டி ஏதாவ‌து பிழைக‌ளைச் (கொலைக‌ளை) செய்திருந்தாலும் கூட‌ எங்களுக்கு அவ‌ன‌து உட‌ல் தேவை. அவ‌ன் அப்ப‌டியான‌ த‌வ‌றுக‌ளைச் செய்திருந்தாலும், நான் பெருமைப்ப‌டுகின்றேன் ஏனென்றால் அவ‌ன் (எங்க‌ளின்) எதிரிக்கு ஒரு பாட‌த்தை அவ‌ர்க‌ளின் சொந்த‌ நாட்டில் க‌ற்றுக் கொடுத்திருக்கிறான்" என்று தொலைபேசியில் ரொய்ட்ட‌ருக்குத் தெரிவித்தாராம். அத‌னால் முடிந்தால் அபு அப்ராஹும், செய்ய‌து முக‌ம்ம‌தும், ஷாலி முக‌ம்ம‌தும் ம‌ற்ற‌ க‌சாப்பின் அபிமானிக‌ளும் சேர்ந்து அவ‌ன‌து உட‌லைத் தோண்டியெடுத்து, அவ‌ன‌து ஆன்டி Shahnaz Sughra க்கு அனுப்பி வைக்க‌லாம் அல்ல‌வா?

This news is hell for us," Shahnaz Sughra, Kasab's aunt, told Reuters by phone. "...Even if he did something wrong, we just want his body. Even if he did something wrong, I am proud that he taught the enemy a lesson in their own country."

http://in.reuters.com/article/2012/11/21/ajmal-kasab-death-mumbai-attacks-idINDEE8AK06V20121121
viyasan
///இக்கட்டுரைக்கு உங்களுக்கு மறுப்பு இருக்கும்பட்சத்தில் உங்கள் கருத்துக்களை கட்டுரையாக்கி கீற்றுவில் இணையுங்கள். ///

ஜ‌னாப். அபு அப்ராஹ்,

ஏனைய‌ இணைய‌த்த‌ள‌ங்கள் போன்று கீற்று இணைய‌த்த‌ளத்துக்கும் த‌னிப்ப‌ட்ட‌ நோக்க‌ங்க‌ளும், இல‌ட்சிய‌ங்க‌ளும், கொள்கைக‌ளும் இருப்ப‌தில் இய‌ற்கையே. அத‌னால் கீற்று நிர்வாக‌ம் அவ‌ர்க‌ளின் கொள்கைக‌ளுக்கிணையாத‌ ஆக்க‌ங்க‌ளை வெளியிட‌ம‌றுக்க‌லாம், அத‌ற்கு அவ‌ர்க‌ளுக்கு உரிமையுண்டு. ஆகையால் இங்கு எழுத‌ப்ப‌டும் க‌ட்டுரைக‌ளும், பிர‌ச்சார‌ங்க‌ளும் ச‌ரியானவை, யாராலும் எதிர்க்க‌முடியாத‌ ஆணித்த‌ர‌மான‌ க‌ருத்துக்க‌ள் என்ப‌து க‌ருத்த‌ல்ல‌. அவ‌ற்றுக்கு எதிராக‌ யாராவ‌து எழுதினால் அது வெளியிட‌ப்ப‌டுமா இல்லையா என்ப‌தே கேள்விக்குறியாக‌ இருக்கும் போது, "உங்கள் கருத்துக்களை கட்டுரையாக்கி கீற்றுவில் இணையுங்கள்" என்ற‌ உங்க‌ளின் ச‌வாலைப் பார்த்து அழுவ‌தா, சிரிப்ப‌தா என்று தெரிய‌வில்லை. என்னுடைய‌ அனுப‌வ‌த்தில் கீற்று ஒரு நடுநிலையான‌ இணைய‌த்த‌ள‌ம‌ல்ல‌.

அதை விட‌ நான் ஏற்க‌னவே இந்த‌க் க‌ட்டுரையிலுள்ள‌ ப‌ல‌ க‌ருத்துக்க‌ளை ம‌றுத்து ஆதார‌ங்க‌ளுட‌ன் ப‌தில‌ளித்து விட்டேன். அத‌ற்கு அத‌ற்கு இந்திய‌ப்ப‌த்திரிகைக‌ள், தொலைக்காட்சிக‌ளில் அல்ல‌து வேறு எந்த‌ நாட்டிலும் வெளிவ‌ந்த‌ ஆதார‌ங்க‌ளை நான் ந‌ம்ப‌ மாட்டேன். பாகிஸ்தான் ஊட‌க‌ங்க‌ளில் வெளிவ‌ந்த‌ ஆதார‌ங்க‌ளை ம‌ட்டும் தா, என்று நீங்க‌ள் கேட்ட‌து வேடிக்கையாக‌ இருந்தாலும் கூட‌, அத‌ற்கும் பாகிஸ்தான் ஊட‌க‌த்தின் ஆதார‌த்தைத் த‌ந்தேன் அல்ல‌வா?
viyasan
///தள நிர்வாகிகள் சற்று கவனமாக இவரை கவனிக்கவேண்டும்///
வ‌ழ‌க்க‌ம் போல் எந்த‌வித‌ எதிர்ப்புமில்லாம‌ல் த‌னித்த‌வில் வாசிக்க‌ விரும்புகிறார் ஷாலி என்ப‌வ‌ர். பாவ‌ம், என்னுட‌ன் மோதிக்கொண்ட‌ ப‌ழ‌சை அவ‌ர் இன்னும் ம‌ற‌க்க‌வில்லை போலும். அத‌னால் தான் எதிர்க்க‌ருத்து தெரிவிப்ப‌வ‌ர்க‌ளை விச‌ம், வைர‌ஸ்,இந்துத்வா, ச‌னிய‌ன், ச‌ங்பரிவார் என்றெல்லாம் உளறுகிறார் போலிருக்கிற‌து. இங்குள்ள பல‌ருக்கும் இது ஒரு நோய், யாராவ‌து இவ‌ர்க‌ளின் க‌ருத்துக்க‌ளுக்கு எதிர்க்க‌ருத்து தெரிவித்தால் அவ‌ர்க‌ளைப் பார்ப்பானாக்கி, பூணூலையும் போட்டு, இந்துத்துவா என்ற‌ ப‌ட்ட‌மும் கொடுத்து ச‌ங்ப‌ரிவார்க‌ளாக்கி விடுவார்க‌ள். அது பார்ப்ப‌னீய‌த்தை எதிர்க்கிற‌ ஈழ‌த்த‌மிழ‌னாக‌ இருந்தாலும் ச‌ரி, வ‌ருடாவ‌ருட‌ம் ஐயப்ப‌னுக்கு மாலை போடுகின்ற, ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ஆதிதிராவிட‌ர்க‌ளில் ஒருவ‌னாக‌ இருந்தாலும் ச‌ரி. இங்குள்ள‌ ஒரே க‌ருத்துள்ள‌ கூட்ட‌ணி எழுத்தாள‌ர்க‌ளின் க‌ருத்துக்க‌ளுக்குப் ப‌க்க‌வாத்திய‌ம் வாசிப்ப‌வ‌ர்க‌ள் ம‌ட்டும் தான் கீற்றில் எழுத‌ அனும‌திக்க‌ப்ப‌ட‌ வேண்டுமென்ப‌து இவ‌ர்க‌ளின் ஆசை. என்ன‌ செய்வது, த‌ங்க‌ளின் பாட்டுக்குத் தாங்க‌ளே ச‌பாஸ் போட்டுக் கொள்வ‌தில் அலாதிப்பிரிய‌ம் சில‌ருக்கு.
:-)
viyasan
-///ஐயா வியாசரே!கைரேகை பதிவுகளும், மரபணுக்களும் குபேர் படகில் பதிவாகிருந்த நிலையிலுமா கசாப்பை காண அரசு நியமித்திருந்த வக்கீலுக்கும் அனுமதி வழங்கவில்லை? அதே அரசு நியமித்த வக்கீலுக்கு கசாப்பின் வயதை ஊர்ஜிதப்படுத்தும் எக்ஸ்ரேக்களை ஏன் வழங்கவில்லை? கசாப் துப்பாக்கியோடு அங்கும் இங்கும் அலைந்து திரிந்ததை படம்பிடித்த போட்டோகிராபர்களை சந்திக்க குறுக்கு விசாரனை செய்ய ஏன் அனுமதிக்க வில்லை? வியாசரே!வேண்டாம் விநாசகால புத்தி!///-


ஜனாப் செய்யது முக‌ம்ம‌துவுக்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்து ஆயிர‌க்க‌ண‌க்கான அப்பாவி இந்திய‌ர்க‌ளைக் கொலைசெய்து, கையும் மெய்யுமாக‌ப் பிடிப‌ட்ட‌ அஜ்ம‌ல் க‌சாப்பின் வ‌ழ‌க்கு விசார‌ணையைப் ப‌ற்றிய‌ அறிவு ஜ‌னாப் குலாம் முக‌ம்ம‌தின் இந்த‌க் க‌ட்டுரையுட‌ன் ம‌ட்டுப்ப‌ட்டது போல் தெரிகிற‌து. இந்த‌க் க‌ட்டுரையாசிரிய‌ர் குலாம் முக‌ம்ம‌து - Gaps in Kasab case என்று FRONTLINE இல் Nov. 03-16, 2012 இத‌ழில் V. வெங்க‌டேச‌ன் அவ‌ர்க‌ள் எழுதிய‌ க‌ட்டுரையை அப்ப‌டியே கொப்பிய‌டித்திருந்தாலும் கூட‌, சில‌ ப‌குதிக‌ளைப் பாகிஸ்தான் சார்பான‌ பாகிஸ்தானிய‌ நாளிதழ்க‌ளிலிருந்தும் எடுத்திருக்கிறார் போல் தான் தெரிகிற‌து. அத‌னால் தான் அவ‌ர் இன்னும் ஆதார‌ங்க‌ளைத் த‌ர‌வில்லை. கைரேகைய‌டையாள‌ங்க‌ளையும், ம‌ர‌ப‌ணு ப‌திவுக‌ளையும் பரிசோதிக்க‌ வேண்டுமென‌ க‌சாப்பின் வ‌ழக்க‌றிஞ‌ர் கேட்க‌வில்லை.
இந்தியாவின் ம‌ருத்துவ‌, விஞ்ஞான‌த்தின் உண்மைநிலையை அவ‌ர் ச‌ந்தேகிக்காத‌து ஒரு கார‌ணமாக‌ இருக்கலாம‌, அல்ல‌து ம‌ர‌ப‌ணு ப‌ரிசோத‌னை உண்மை என‌ மீண்டும் நிரூபிக்க‌ப்ப‌ட்டால் வ‌ழ‌க்கை த‌ன்னால் இழுத்த‌டிக்க முடியாதென்ப‌தையும் அவ‌ர் உண‌ர்ந்திருக்க‌லாம். 2009 இலேயே க‌சாப்பின் ப‌ல்ச‌ம்ப‌ந்த‌மான‌ 16 எக்ஸ்ரே ப‌ட‌ங்க‌ளையும், அர‌ச‌த‌ர‌ப்ப‌ற்ற‌ வ‌ல்லுன‌ரை நீதிம‌ன்ற‌த்துக்கு அழைத்து வ‌ந்து அவ‌ற்றைப் ப‌ரிசோதிக்க‌ வாய்ப்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌தால் தான் மீண்டும், வ‌ழ‌க்கைத் தாம‌த‌ப்ப‌டுத்தும் நோக்க‌த்துட‌ன் விடுக்க‌ப்ப‌ட்ட‌ வேண்டுகோளை நீதிப‌தி ம‌றுத்தார். க‌சாப்பின் த‌ந்தை ம‌ட்டும‌ல்ல‌, பாகிஸ்தானிய அர‌சும் க‌சாப்பின் அடையாள‌த்தை உத்தியோக‌பூர்வ‌மாக‌ உறுதிப்ப‌டுத்திய‌ பின்பு போட்டோகிராப‌ர்க‌ளை குறுக்கு விசார‌ணை செய்ய‌ வேண்டும், ப‌ட‌கு நின்ற‌ இட‌த்தைப் பார்க்க‌ வேண்டும் என்ப‌தெல்லாம் வ‌ழக்கை தாம‌திப்ப‌த‌ற்காக‌, இழுத்த‌டிப்ப‌த‌ற்காகச் செய்ய‌ப்ப‌டும் வேலை என்ப‌தை உண‌ர முடியாத‌ ஒருவ‌ர் நீதிப‌தியாக‌ இருக்க‌ முடியாது, அத‌னால் தான் நீதிம‌ன்ற‌ம் த‌ன‌து க‌ட‌மையைச் செய்ய‌ ஒத்துழைக்காத‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ருக்கு அனும‌தி ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌து. ஐயா செய்ய‌து, த‌ன‌து நாட்டு குர்தீஸ் இன‌ முஸ்லீம் பெண்க‌ளையும் குழ‌ந்தைக‌ளையும் கூட‌ ந‌ச்சுவாயூவையுட்டிக் கொலை செய்த‌ ச‌தாமுக்காக‌ த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ள் அழுது வ‌டித்த‌ ச‌ம்ப‌வ‌த்தை நான் கூறிய‌ கார‌ண‌ம், க‌சாப்பும் உங்க‌ளின் க‌ண்க‌ளில் சதாமைப் போல் ஒரு "அப்பாவி" என்ப‌தைக் காட்டுவ‌தாகத் தான். க‌சாப் அப்பாவி என்ப‌தை நிரூபிக்க‌ வேண்டிய‌வ‌ர் நீங்க‌ள் தான், என்னைப் பொறுத்த‌வ‌ரையில் இந்தியாவின் ச‌ட்ட‌ங்க‌ளின் ப‌டி, கையும் மெய்யுமாக‌ப் பிடிப‌ட்ட‌ ஒரு ப‌ய‌ங்க‌ர‌வாதிக்கு ச‌ட்ட‌த்தின் ப‌டி முழு வாய்ப்பும் அளிக்க‌ப்ப‌ட்டு தீர்ப்பு வ‌ழ‌ங்கப்ப‌ட்டு விட்ட‌து. அதை எதிர்க்கும் நீங்க‌ள் தான் க‌சாப் அப்பாவி என்ப‌தை நிரூபிக்க‌ வேண்டும். அதென்னையா "வேண்டாம் விநாசகால புத்தி!" என்ன‌ ப‌ய‌முறுத்தலா?

நான் முன்பே கூறிய‌து போல் இந்தியாவின் நீதித்துறையில் ஒட்டைக‌ளும், ஊழ‌ல்க‌ளும் இல்லாம‌லில்லை. எத்த‌னையோ அப்பாவி இந்தியர்க‌ள் நீதித்துறையால் வ‌ஞ்சிக்க‌ப்ப‌ட்டிருக்கிறார்க‌ள், எத்த‌னையோ குற்ற‌வாளிக‌ள் ச‌ட்ட‌த்திலுள்ள‌ ஒட்டைக‌ளையும், அர‌சிய‌ல் செல்வாக்காலும் த‌ப்பியிருக்கிறார்க‌ள். ஆனால் எத்த‌னையோ அப்பாவிக‌ள் இன்றும் சிறையில் உழ‌லும் போது, அப்பாவி இந்திய‌ர்க‌ள் ப‌ல‌ரின் ப‌டுகொலைக‌ளுக்குக் கார‌ண‌மாகி ஆதார‌ங்க‌ளுட‌ன் பிடிப‌ட்ட‌ பாகிஸ்தானிய‌ தீவிர‌வாதி அஜ்ம‌ல் க‌சாப்புக்கு 31 கோடி ரூபாவை வீணாக்கிய‌து ம‌ட்டும‌ல்ல‌, இந்தியாவின் ச‌ட்ட‌த்தின் ப‌டி மேன்முறையீடு செய்வ‌த‌ற்குப் ப‌ல‌முறைக‌ள் வாய்ப்ப‌ளிக்க‌ப்ப‌ட்ட‌தென்ற‌ உண்மையையும் ம‌றக்க‌க் கூடாது. கையும் மெய்யுமாக‌ப் பிடிபட்ட‌ க‌சாப்பை விட‌ உண்மையான‌ அப்பாவிக‌ள் ப‌ல‌ர் இன்றும் இந்தியாவின் சிறைக‌ளிலுள்ள‌னர், ஆனால் க‌சாப்புக்காக‌ அழுப‌வ‌ர்க‌ள், அந்த‌ இந்திய‌ர்க‌ளுக்காக‌ அழுவ‌தைக் காணோம். அப்பாவி இந்திய‌ர் ச‌ர‌ப்ஜித்சிங் 22 வருட‌ங்க‌ளாக‌ப் பாகிஸ்தான் சிறையில் வாடுகிறார். குலாம் முக‌ம்ம‌து, செய்ய‌து முக‌ம்ம‌து, ஷாலி முக‌ம்ம‌து அல்ல‌து அபூ அஃப்ரஹ் போன்ற‌வ‌ர்க‌ளில் எவ‌ராவ‌து அவ‌ருக்காக‌ பாகிஸ்தானை எதிர்த்து கீற்றில் சில‌ வ‌ரிக‌ளாவ‌து எழுதியிருக்கிறார்க‌ளா?
viyasan
"இங்கு இக்கட்டுரைக்கு எதிர் கருத்து பதிபவர்கள் "கர்கரேயை கொன்றது யார்?" என்ற புத்தகத்தை படித்து விட்டு வந்திருந்தால் தான் இதிலுள்ள கேள்விகளை ஜீரணிக்க இயலும்" என்றார் ஒருவ‌ர். ஆனால் இதிலுள்ள‌ வேடிக்கை என்ன‌வென்றால் WHO KILLED KARAKARE என்ற‌ புத்த‌க‌த்தை எழுதிய‌ S.M.MUSHRIF கூட‌ மும்பையைத் தாக்கிய‌ தீவிர‌வாதிக‌ள் ல‌ஸ்க‌ர் இ தொய்பா தான் என்ப‌தை ம‌றுக்க‌வில்லை. அவ‌ரே ஒரு நேர்காண‌லில் "Pakistan is our enemy and a threat from them is always there. They have caused enough damage in Kashmir. What happened in Mumbai is a reality. It was an attack by Pakistan-based groups and there is no denying that." என‌க்கூறியுள்ளார். ஆனால் ஆனால் கீற்றிலுள்ள‌ முஸ்லீம்க‌ளில் சில‌ரோ க‌சாப் பாகிஸ்தானிய‌ரா? பாகிஸ்தான் ஊட‌க‌ங்க‌ளிலிருந்து ஆதார‌ம் காட்டு என்கிறார்க‌ள். அதை நினைத்தால் சிரிப்ப‌தா அழுவ‌தா என்று தெரிய‌வில்லை.
அபூ அஃப்ரஹ்
சகோதரர் வியாசன் அவர்களே நாம் கேட்ட ஆதாரம் அஜ்மல் கசாப் பாகிஸ்தானை சேர்ந்தவனா என்பதல்ல? மீண்டும் ஒரு முறை நான் கேட்டுள்ளதை படித்துபாருங்கள்.
லஸ்கர் இ தொய்பாவில் இணையுமாறு கேட்டுக் கொண்ட அஜ்மல் கசாப்பின் தந்தை என குறிப்பிட்டுள்ளீர்களே அதற்கு தான் நான் ஆதாரம் . கேட்டேன். அஜ்மல் கசாப் பாகிஸ்தானில் இருந்து வேலை தேடி நேபாளத்திற்கு சென்றவன் என்பது கர்கரேவை கொலைசெய்தது யார் என்ற நூலில் உள்ளது தானே? நீங்கள் என்ன புதிதாக சொல்வது.
மேலும் உங்களை போன்ற வகுப்புவாத சிந்தனைகளில் ஊறிக்கொண்டிருக்கும் பலர் இதை விட ஆயிரம் இணைய தளங்களை இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவை அனைத்தும் இதே போன்ற செய்திகளைத் தான் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் கர்கரேவை கொலைசெய்தது யார்? என்ற நூல் இந்திய செய்திதாள்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் அதுவும் ஏதோ நீங்கள் சுட்டிக்காட்டும் ஒன்றுக்கும் உதவாத யாரும் அறியாத இணைய தளங்கள் அல்ல மிக முக்கியமான செய்திதாள்களாகிய டைம்ஸ் ஆஃப் இந்தியா சதாரா போன்ற பிரபலமான செய்திதாள்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டது. உலகளாவிய ஊடகங்களின் முஸ்லிம்களுக்கு எதிரான தீவிரவாதிகள் என்ற பொய் பிரச்சாரத்திற்கு பிறகும் சில நேரங்களில் வெளி வந்து விட்ட உண்மைகள் இவை., வேறு வழியில்லை இவற்றை நீங்கள் ஜீரணித்துத்தான் ஆகவேண்டும்.
இன்னும் சில புதிய கேள்விகளை உங்களிடம் கேட்கிறேன்.
1) ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை எந்த தப்பும் செய்யவில்லை என்றால் மும்பை தாக்குதலுக்கு பிறகு கர்கரேவை கொலை செய்தது யார் என்ற புத்தகம் வந்த பிறகு தேசிய புலனாய்வு துறை (என்.ஐ.ஏ) புதிதாக ஏற்படுத்தப்பட்டது. ஏன்?
2) ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இந்தியாவெங்கும் பல குண்டு வெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்ட பிறகும் நிற்காத குண்டு வெடிப்புகள் மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிகளான புரோகித், பெண்சாமியார் சாத்வி, அசிமானந்தா, தயனந்த பாண்டே போன்றோர் கைது செய்யப்பட்டவுடன் நின்றது எப்படி?
3) அசிமானந்தா அப்ரூவராக மாறி பக்கம் பக்கமாக ஒப்புதல் வாக்குமூலம் தந்தாரே அது பல பத்திரிக்கைகளில் குறிப்பாக டெகல்காவில் வெளிவந்ததே அது என்னவாயிற்று?
4) 30க்கும் அதிகமான ஐ,பி உயர் அதிகாரிகள் குறிப்பாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் சமீபத்தில் மாற்றப்பட்டனரே அது ஏன்?
5) ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை யாருக்கு கீழ் இயங்குகிறது? அதன் நடவடிக்கைகளுக்கு யாருக்கு பதில் சொல்கிறது? என்றும் அதன் நடவடிக்கைகள் நாடாளுமன்ற குழுவால் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்ற துணை ஜனாதிபதியின் கோரிக்கை என்னவாயிற்று? இக்கோரிக்கை ஏன் வைக்கப்பட்டது?
6) இதே கேள்வி உயர்நீதிமன்றத்திலும் கேட்கப்பட்டு ஐ.பி சில நாட்கள் இயங்கக்கூடாது என்று தடை ஏன் விதிக்கப்பட்டது?
7) நீங்கள் தற்போது சுட்டிக்காட்டியுள்ளது போன்ற ஒன்றுக்கு உதவாத இணையதளங்கள் அல்லாமல் பல பிரபலமான ஊடகங்களிலும் பல இணையங்களிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என சுட்டிக்காட்டப்பட்ட சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் இரயில் குண்டு வெடிப்பு தற்போது இந்திய (இந்து) தீவிரவாதியால் நடத்தப்பட்டது என்பதை என்.ஐ.ஏ (நன்றாக கவனிக்கவும் ஐ.பி அல்ல என்.ஐ.ஏ) கண்டுபிடித்துள்ளதே. அதற்காக இந்து தீவிரவாதி ராஜேந்திர சவுத்ரி என்பவன் கைது செய்யப்பட்டுள்ளானே. 2007ல் நடந்த இதை ஏன் ஐ.பி. கண்டுபிடிக்கவில்லை.
ஹ்ட்ட்ப்://இன்டிஅடொடய்.இன்டொடய்.இன்/ச்டொர்ய்/சம்ஜ்ஹௌட-எ௯ப்ரெச்ச்-ப்லச்ட்ஸசெ-கெய்ஸுச்பெச்ட்நிஅ-மெச்ச-ப்லச்ட்/1/238054.ஹ்ட்ம்ல்

8) இவன் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிலும் தொடர்புடையவன் என தற்போது தெரிய வந்துள்ளதே? அப்படியானால் இதுவரை பாகிஸ்தான் தீவிரவாதிகளின் செயல் ஸ்லீப்பர் செல்கள் மூலம் நடந்த தாக்குதல் என உங்களை போன்ற ஆட்கள் கூறி வந்த பொய்கள் என்னவாயிற்று. இந்த குண்டுவெடிப்புகளுக்காக கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் நிலை என்ன? இந்த குற்ற செயல்களுக்கு உடந்தையாயிருந்த ஐ,பி மும்பைத்தாக்குதலை திட்டமிடவில்லை என்பதை எவ்வாறு நம்பமுடியும்?
9) மும்பை ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானிலிருந்து 384 கால்கள் வந்தன. ஆனால் அஜ்மல் கசாபிற்கு ஒரு போன் கூட வரவில்லையே அது ஏன்?
10) மும்பை ஹோட்டல்களில் நடந்த தாக்குதல்களில் அப்பாவி மக்கள் இலக்கான போது கசாபும் அவனுடைய கூட்டாளி நடத்திய தாக்குதலில் மட்டும் (போலிஸ் அதிகாரிகள் வரும் வரை மறைந்திருந்து காத்திருந்து) கர்கரே, சலாஸ்கர், காம்தி போன்ற அதிகாரிகள் தாக்கப்பட்டது ஏன்? குறிப்பாக கர்கரே இலக்காக்கப்பட்டது எவ்வாறு? ஏன்?
11) சி.எஸ்.டி காமா மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் ( அதாவது அஜ்மல் கசாப்) மராத்தியில் சரளமாக பேசினான் என நேரில் பார்த்த சாட்சி அவனிடம் பேசிய சாட்சி கூறியுள்ளரே. அப்படியானால் மராத்தியில் பேசிய அந்த குற்றவாளி யார்?
12) ஃபைபர் போட்டில் வந்திறங்கிய குற்றவாளிகளை நேரில் பார்த்த அனிதா உத்தய்யா என்பவர் அந்த நபர்களில் அஜ்மல் கசாப் கிடையாது என உறுதி செய்தாரே அது என்னவாயிற்று. அவருக்கு எதிராக வழக்கு போடப்பட்டதே அது ஏன்?
13) குறிப்பாக சி.எஸ்.டி இரயில் நிலையத்தில் நிறுவப்பட்டிருந்த குற்றவாளிகளை படம் பிடித்த அந்த 16 சி.சி.டி.வி கேமராக்கள் அன்றுமட்டும் வேலை செய்யவில்லையே அது ஏன்?
இவ்வளவையும் செய்து விட்டு யாரோ அஜ்மல் கசாப் என்பவன் பாகிஸ்தானில் இருந்து படகில் வந்து சுட்டான் என்பதை நம்புகிறீர்களே நம்ப சொல்கிறீர்களேஅப்புறம் எதுக்கய்யா உளவுத்துறை, கடலோர காவல், கண்காணிப்பு மண்ணாங்கட்டி எல்லாம். . உங்களை பார்த்து அழுவதா சிரிப்பதா என்பது தெரியவில்லை.
இன்னும் ஏகப்பட்ட கேள்விகள் உள்ளன. நண்பரே...பதில் சொல்ல தயாராகுங்கள்.
viyasan
///லஸ்கர் இ தொய்பாவில் இணையுமாறு கேட்டுக் கொண்ட அஜ்மல் கசாப்பின் தந்தை என குறிப்பிட்டுள்ளீர்களே அதற்கு தான் நான் ஆதாரம் கேட்டேன். உங்களை போன்ற வகுப்புவாத சிந்தனைகளில் ஊறிக்கொண்டிருக்கும் பலர் ///

ச‌கோத‌ர‌ர் அபூ அஃப்ரஹ்,

ம‌ன்னிக்க‌வும் அதைக் குறிப்பிட‌ ம‌ற‌ந்து விட்டேன் போலிருக்கிற‌து. நீங்க‌ள் கேட்ட‌த‌ற்கு அதற்கு ஆதார‌ம் இணைய‌த்தில் நிறைய‌வே உண்டு. இத‌ற்கு மேலும் வேண்டுமானாலும் கேளுங்க‌ள். :-) வ‌குப்புவாத‌த்திலோ இந்துத்துவாவிலோ அல்ல‌து இந்தியாவிலோ என‌க்கு எந்த‌வித‌ப் பற்றோ அல்ல‌து வெறுப்போ கிடையாது. ஒருப‌க்க‌ச்சார்பான‌ பிர‌ச்சார‌ங்க‌ள் எங்கு ந‌ட‌ந்தாலும், என‌க்கு அது பிழையாக‌ப் ப‌ட்டால், அத‌ற்கு எதிர்க்க‌ருத்தைக் கூற‌ நான் த‌ய‌ங்கிய்தில்லை. அவ்வ‌ள‌வு தான்.

1) Some sources said his father asked him to join Lashkar-e-Taiba so that he could use the money they gave him to support the family.
Blakely, Rhys (2 December 2008). "CCTV shows start of Mumbai massacre". The Times (London). http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article5274161.ece.
2.) According to Kamaal, the 10-man Lashkar fidayeen team, of which he was a part, left Karachi on a small boat, and then boarded the merchant vessel al-Hussaini. After encountering Indian Coast Guard vessels on February 19, the team hijacked the Kuber, a Porbandar-based fishing boat that had been blown off course.
http://www.hindu.com/2008/12/01/stories/2008120157370100.htm

3.) Kasab says his father sent him to LeT
http://www.dnaindia.com/mumbai/report_kasab-says-his-father-sent-him-to-let_1210832

Blakely, Rhys (2 December 2008). "Father of Mumbai gunman, Azam Amir Kasab, 'paid by terrorists to hand him over'". The Times (London

4.) I am going away for jihad: Kasab told his mother in Pak

http://www.expressindia.com/latest-news/i-am-going-away-for-jihad-kasab-told-his-mother-in-pak/398067/

5.) We trained in Lashkar camps: Arrested terrorist
http://www.indianexpress.com/news/we-trained-in-lashkar-camps-arrested-terrorist/392088/
seyed muhammed
அய்யா வியாசரே!
கட்டுரையை மீண்டும் படியுங்கள்;கசாப்பை குற்றவாளியாக காட்ட"பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக வந்து அப்பாவி இந்தியர்களை கொன்றான்"என கிளிப்பிள்ளை போல் அதிகாரவர்க்கம் சொல்லும் பொய்யை தான் ஆய்வுக்குட் படுத்திருக்கிறார் கட்டுரையாசிரியர்;அதை மறுப்பதற்கான ஆதாரம் சட்டத்தின் சாட்சிகள் ஆகியவற்றை வியாசரிடம் எதிர்பார்க்கிறோம்;
அதை விட்டு விட்டு பிரண்ட்லைனின் கட்டுரை மட்டும் தானா?என வினா எழுப்புவது சரியாகுமா?
ஹிந்துஸ்த்தான் டைமின் செய்தியை தனக்கு ஆதாரமாக கொள்ளும் வியாசரின் உள்ளம் அறியும் இது பலஹீனமான ஆதாரம்.தொலைக்காட்சிகளில் பேசிவிட்டு எங்களின் பேட்டி திரிக்கப்பட்டு விட்டது என்ற பலஹீனத்தை ஆதாரமாக கொள்ளும் வியாசர் பிரண்ட்லைனை எதிர்க்க பலமான ஆதாரத்தை அல்லவ வழங்க வேண்டும்.
வழக்கு மன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் கேட்கிறார் அவருக்குரிய கால அவகாசத்தை நிர்ணயித்து கசாப்பை காணவும்,போட்டோ கிராப்ரை குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதி வழங்குவதில் என்ன கால தாமதமாகி விட போகிறது?கால தாமதம் செய்து குற்றவாளிக்கு சாதகமாக அதுவும் பஞ்சமா பாதக செயலை செய்த"அயோக்கியனுக்கு"உதவினால் வழக்குரைஞரின் வாழ்க்கையையே கேள்வி குறியாக்கலாமே.....பார் கவுன்ஸில் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளலாமே?உலகிற்கு முன்னால் இந்தியாவின் நீதியை உயர்த்திருக்கலாமே?அதை எல்லாம் விட்டு விட்டு அவசர கோலத்தில் ஏன் அள்ளி தெளித்திருக்கிறீகள்.
இது போன்ற பிரண்ட்லைனின் கட்டுரையை மேற்க்கோள் காட்டும் ஆசிரியரின் கட்டுரையை மறுத்து பல விசாலமாக ஆராய்ந்து பதில் தாருங்கள்.அதை விட்டு விட்டு கீறல் விழுந்த கிராமபோன் தட்டு போல் பாகிஸ்தானிலிருந்து வந்தான்,அப்பாவி இந்தியர்களை கொன்றான் என எழுதுவது வேண்டாமே;
நெஞ்சை நிமிர்த்தி முஸ்லிம்கள் சொல்கிறோம் குற்றவாளிகளை தண்டியுங்கள்;நீங்களாக ஒருவரை குற்றவாளியாக ஜோடித்து கொண்டு தண்டிக்காதீர்கள்;அதற்கு சதி செய்யாதீர்கள்;சதிக்கென்று ஒரு இயற்கை சுபாவம் உண்டு பிறரை சிக்க வைக்க தூண்டி கொண்டே இருக்கும் இறுதியில் தூண்டியவனை திட்டமிட்டவனை ஒத்துழைத்தவனை என எல்லோரையும் பலி கேட்கும்;உலக வரலாறு தரும் பாடம் இது.
சராப்த் ஜீ க்காக நாங்கள் கண்ணீர் சிந்துகிறோம்;ஆனால் இந்திய ஆளும் வர்க்கம் முறையாக பாகிஸ்தானுடன் இது போன்ற வழக்காடு மன்ற விஷயங்களில் நடந்து கொள்ள வில்லை என ஒரு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் போது முன்னால் அந்நாள் நீதிபதி கங்குலி அவர்கள் கூறியுள்ளார்கள்.அத்தோடு விடாமல் பாகிஸ்த்தான் உச்ச நீதிமன்றத்தையும் பாராட்டியுள்ளார்;இந்த செய்தியும் தி ஹிந்து பத்திரிக்கையில் வந்தது தான்.ஆதலால் ஆதாரம் எழுதுங்கள் நாங்களும் வியாசருடன் சேர்ந்து கசாபை தூக்கிலிட்டதற்காக மிட்டாய் வழங்கி கொண்டாடுவோம்
viyasan
///11) சி.எஸ்.டி காமா மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் ( அதாவது அஜ்மல் கசாப்) மராத்தியில் சரளமாக பேசினான் என நேரில் பார்த்த சாட்சி அவனிடம் பேசிய சாட்சி கூறியுள்ளரே. அப்படியானால் மராத்தியில் பேசிய அந்த குற்றவாளி யார்? 12) ஃபைபர் போட்டில் வந்திறங்கிய குற்றவாளிகளை நேரில் பார்த்த அனிதா உத்தய்யா என்பவர் அந்த நபர்களில் அஜ்மல் கசாப் கிடையாது என உறுதி செய்தாரே அது என்னவாயிற்று. அவருக்கு எதிராக வழக்கு போடப்பட்டதே அது ஏன்? 13) குறிப்பாக சி.எஸ்.டி இரயில் நிலையத்தில் நிறுவப்பட்டிருந்த குற்றவாளிகளை படம் பிடித்த அந்த 16 சி.சி.டி.வி கேமராக்கள் அன்றுமட்டும் வேலை செய்யவில்லையே அது ஏன்?///

ச‌கோத‌ர‌ர் அபூ அஃப்ரஹ்,

நீங்க‌ள் தும்பை விட்டு வாலைப்பிடித்து வீட்டிர்க‌ள் போலிருக்கிற‌து. இந்த‌ உள‌ற‌ல்க‌ள் எல்லாம் பாகிஸ்தானின் இஸ்லாமிய‌ (தீவிர‌வாத‌) இணைய‌த்த‌ள‌ங்க‌ளிலிருந்து சுட்ட‌வை என்ப‌து என‌க்கும் தெரியும். இன்று உங்க‌ளின் புண்ணிய‌த்தில் நான் அவ‌ற்றை எல்லாம் படித்து விட்டு, வாய் விட்டுச் சிரித்தேன். இவையெல்லாம் எப்ப‌டியான‌வையென்றால் 9/11 இல் நியூயோர்க்கைத் தாக்கி 4000 க்கும‌திக‌மான‌ அமெரிக்க‌ர்க‌ளைக் கொன்ற‌து அமெரிக்காவே என்று சில‌ முஸ்லீம்க‌ள் கூறுவ‌து போன்ற‌ சொன்ச்பிரச்ய் தெஒரிஎச் க‌ளைப் போன்ற‌து தான் நீங்க‌ள் கூறுப‌வையும். இதில் வேடிக்கை என்ன‌வென்றால் ஓசாமா பின்லாட‌ன் 9/11 தாக்குதலை ந‌ட‌த்திய‌து தானே என்று ஒப்புக்கொண்ட‌ பின்ன‌ரும் அமெரிக்க‌ர்க‌ள் தான் நியூயோர்க்கில் இர‌ட்டைக் கோபுர‌த்தையும் தாக்கினார்க‌ள், அவ‌ர்க‌ளே அமெரிக்க‌ர்க‌ளைக் கொன்றார்க‌ள் என‌ சில‌ முஸ்லீம்க‌ள் கூறுவ‌து போன்ற‌து தான் உங்க‌ளின் இந்த‌வாத‌மும். பாகிஸ்தான் அர‌சே க‌சாப் ஒரு பாகிஸ்தானிய‌க் குடிம‌க‌ன் என்ப‌தை ம‌ட்டும‌ல்ல‌, அவ‌ன‌து தாய், த‌ந்தை பெய‌ரையும் அவ‌ன‌து கிராம‌த்தையும் உத்தியோக‌பூர்வ‌மாக‌, உல‌க‌முழுவ‌தும் அறிவித்த‌ பின்பும், உங்க‌ளைப் போன்ற‌ த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ள் அவ‌ன் ம‌ராத்தி ச‌ர‌ள‌மாக‌ப் பேசினான் அத‌னால் அவ‌ன் ஒரு இந்துவாக‌த் தானிருக்க‌ வேண்டும் என்று வாதாடுவ‌தைக் கேட்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் உங்க‌ளைப் பார்த்துச் சிரித்தால் நீங்க‌ள் அவ‌ர்க‌ளுட‌ன் ச‌ண்டைக்குப் போக‌ மாட்டீர்க‌ளென‌ நம்புகிறேன். ஏனென்றால் இதைக் கேட்டால் யாருக்கும் நிச்சய‌மாக‌ச் சிரிப்பு வ‌ரும்.
seyed muhammed
சதாம் ஒரு பாதிஸ்டாக அதாவது இறைநம்பிக்கையற்றவனாக தன்னை பிரகடப்படுத்தி கொண்டு அமெரிக்கர்களின் தூண்டில் மீனாக மாறி குர்திஷ் முஸ்லிம்களையும்,ஈராக்கிய ஈரானிய முஸ்லிம்களையும் அமெரிக்க்-யூத ஆயுதஙகளை கொண்டு கொன்று குவித்த போது கண்ணீர் விட்டவர்கள் இந்திய முஸ்லிம்கள்;அதற்காக தங்கள் தொழுகைகளில் இறைவனிடம்,வதைக்கப்பட்ட அப்பாவி மக்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்காக.கையேந்தி பிரார்த்தித்தவர்கள் இந்திய முஸ்லிம்கள்;
கட்டப்பஞ்சாயத்து தலைவனாக பேட்டை ரெளடியாக இருந்து தன் அடியாள் சதாமை முஸ்லிம்களை அழிக்க தூண்டி கொண்டிருந்த அமெரிக்க அயோக்கியர்கள் நீதி தவறாத உத்தமர்களாக வேஷம் கட்டிய போது தான் முஸ்லிம்கள் அயோக்கியனா?அடியாளா?என்ற தேர்வில் அடியாளை தெரிவு செய்தார்கள்;உலகத்திற்கு அதன் மூலம் ஒரு செய்தியை சொன்னார்கள்;யாருக்கும் அடியாள் வேலை பார்க்காதீர்கள் என்றார்கள்;
இந்தியாவையும்,இந்தியர்களையும் எச்சரிக்கிறார்கள்;அமெரிக்காவிற்க்காகவோ வேறு எவனுக்காகவோ அடியாள் வேலை பார்க்காதீர்கள் முஸ்லிம்கள் வேண்டி கேட்கிறார்கள்;
சதாமிற்காக முஸ்லிம்கள் கண்ணீர் வடிக்க வில்லை.சதாமாலும் சதாமை ஏவிய அமெரிக்க அயோக்கியர்களால் கொன்று குவிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கண்ணீர் வடிக்கிறார்கள்;
அன்பரே!வியாசரே.....முஸ்லிம்களை படியுங்கள்;புரிந்து கொள்ளுங்கள்.
Guest
வாதத்தை திசை திருப்பி முஸ்லிம்களின் மேல் இந்துக்கள் வெறுப்பு கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு வியாசன், அவருக்கு இடப்பட்ட அஜண்டாவை நிறைவேற்ற இந்த கட்டுரைக்கு சம்பந்தமில்லாத கதைகளை சரடு விடுகிறார். இது இந்து முஸ்லிம் பிரச்சினை அல்ல. இந்திய-பாகிஸ்தான் பிரச்சினையும் அல்ல. இந்திய நீதித்துறையிலும் புலனாய்து துறையிலும், உளவு துறையிலும் புகுத்தப்பட்ட கறுப்பு ஆடுகளினால், என் தேசம் பாரபட்சமான தீர்ப்புக்கும் ,விருப்பு வெறுப்பான சட்டத்திற்குப்பாற்பட்ட துவேஷ நிலைமைக்கும் போய் கொண்டிருப்பதை எச்சரிப்பதாக எடுத்துக்கொண்டு அந்த கோணத்தில் பாருங்கள்.

காவி பயங்கரவாதம் என்று ஒன்று இருப்பதை "முஸ்லிம்களை தீவிரவாதி" யாக்கி பொதுவில் மறைத்துக்கொண்டவர்களின் சாயம் வெளுக்க ஆரம்பித்தவுடன் வியாசன் போன்றவர்களுக்கு வியர்க்க தொடங்கிவிட்டது. காவி தீவிரவாதிகளை கைது செய்தவுடன் இந்தியாவில் நடைபெற்று வந்த குண்டு வெடிப்புகள் முற்றுப்பெற்று வருகின்றன. இந்திய ராணுவத்திற்கு முதன் முதலில் "ஸ்லீப்பர் செல்லாக" அனுப்பபட்ட கர்னல் புரோகித் ஒரு காவி தீவிரவாதியே! அவன் மூலம் தான் ஆர் டி எக்ஸ் ராணுவத்திடமிருந்து தருவிக்கப்பட்டு மாலேகானில் வெடிக்கப்பட்டது. அபினவ் பாரத்தை சார்ந்த பெண் சாமியாரிணியின் கட்டளை பேரில் தான் இது நிகழ்த்தப்பட்டது. அவரை கைது செய்தவுடன் அத்வானி சென்று அப்போதைய உள்துறை மந்திரியை சந்திக்கிறார். சங் பரிவார்கள் கலகலத்து போய்விட்டார்கள் எங்கே நமது குட்டு உடைப்பட்டு போய் விடுமோ என்று இந்த கைதுக்கு காரணமான கர்கரே மேல் "கண்" வைக்க ஆரம்பிக்க, பிறகு அதுவே அவரது சாவு வரை போனது. கர்கரே சாவுக்கும் அஜ்மல் கசாப்பின் மரண தண்டனைக்கும் பிண்ணனியில் விடை தெரியாத மர்மம் இருந்து வருகிறது. இந்த மர்மத்தின் மேல் சிலபல கேள்விகளை எழுப்பினால் அதற்கு நியாயமான பதிலை சொல்ல திராணியற்றவர்கள் முஸ்லிம்களின் மேல் வெறுப்பை உமிழ்ந்து வழமை போல திசை திருப்புகிறார்கள்.

வியாசன் அவர்களே.. இக்கட்டுரைக்கு மறுப்பாக கீற்று அல்லாத வேறு எங்கு வேண்டுமானாலும் உங்கள் கருத்துக்களை கட்டுரையாக எழுதுங்கள். நான் வாசிக்க ரெடி. மெய்பொருள் காண்பதறிவு என்பதால் நான் விருப்பு வெறுப்பின்றி படிக்க தயார்.
முஹம்மத் ஆஷிக் - Citizen of Wo
அன்று தூக்கிலிடப்பட்டது அஜ்மல் கசாப் என்பவந்தான் என்பதற்கு என்னிடம் எவ்வித ஆதாரமும் இல்லை. இன்னும் அப்படி ஒருவன் இருந்தானா.... அந்த ஃபோட்டோ அவந்தானா... மேலும், இது விஷயமாக நமது ஊடக-நீதிமன்ற பதிவுகள்ஸெய்திகள் ஏதும் எனக்கு நம்பும்படியாக இல்லை. ஆனால்... உச்ச நீதி மன்ற உடன்பாட்டுடன் ரகசியமாக இந்திய நீதி தேவதையை அன்று தூக்கில் போட்டு தொங்க விட்டு இருக்கிறார்கள் என்று எவரேனும் சொன்னால்... அதை நம்ப இந்த பதிவை நான் ஆதாரமாக ஏற்றுக்கொள்கிறேன்..!
அபு அப்ரஹ்
இந்தியாவில் எத்த‌னையோ குண்டுத்தாக்குத‌ல்க‌ள் பாகிஸ்தானிய‌ர்க‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டுள்ள‌ன‌, எந்த‌ பாகிஸ்தானிய‌ரின் த‌ந்தையாவ‌து முன் வ‌ந்து தீவிர‌வாதிக‌ளின் ச‌ட‌லங்க‌ளை கேட்டார்க‌ளா?, அப்ப‌டியிருக்க‌ க‌சாப்பின் த‌ந்தை ம‌ட்டும் அத‌ற்கு விதிவில‌க்கா?
அய்யா வியாசர் எங்களுடைய கேள்வியே இதை பற்றி தான். இப்பொழுது தான் சரியான பாதைக்கு வந்துள்ளீர்கள். இந்தியாவில் எத்தனையோ குண்டு வெடிப்புகள் பாக்கிஸ்தானியர்களால் நடதப்பப்பட்டுள்ளன என்கிறீர்களே. எத்தனை குண்டு வெடிப்புகள் பாக்கிஸ்தானியர்களால் நடதப்பப்பட்டுள்ளன? அந்த விவரத்தை தான் கேட்கிறோம்? எத்தனை பாகிஸ்தானிய‌ரின் சடலங்கள் கேட்பாரற்று உள்ளன. ஏனிந்த பொய் ? கடந்த 10 வருடங்களாக அனைத்து இந்திய ஊடகங்களாலும் கூறப்பட்டு வந்த பொய்கள் தற்போது உடைக்கப்பட்டுள்ளனவே? ஐ.பி.இன் ஊதுகுழல்களாக செயல்பட்டு வந்த இந்த ஊடகங்கள் இப்போது தங்களின் தவற்றினை ஒப்பு கொல்லுமா ? மலேகான். நண்டேத், ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு. சம்ஜூதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு என அனைத்து குண்டு வெடிப்புகளிலும் என்.ஐ.எ வினால் (தேசிய புலனாய்வு நிறுவனத்தால்) இந்திய இந்து தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லாம் பாகிஸ்தானிய‌ர்க‌ளா? அதற்கான ஆதாரம் இதோ
http://www.thehindu.com/news/national/samjhauta-express-blast-prime-suspect-arrested/article4210219.ece
http://zeenews.india.com/news/nation/samjhauta-express-blast-nia-arrests-another-person-from-mp_817291.html
http://www.ndtv.com/article/india/samjhauta-express-blasts-case-after-confessing-in-court-accused-retracts-statement-outside-306360.
http://ibnlive.in.com/news/samjhauta-express-blast-nia-arrests-man-who-allegedly-planted-the-bomb/310630-3.html
பாகிஸ்தானிய‌ர்க‌ள் எப்படி பட்டவர்கள் என்பதை கீழே வரும் வீடியோ வை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
http://www.facebook.com/photo.php?v=2261527786320
Nakulan
///இந்தியாவில் எத்த‌னையோ குண்டுத்தாக்குத‌ல்க‌ள் பாகிஸ்தானிய‌ர்க‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டுள்ள‌ன‌, எந்த‌ பாகிஸ்தானிய‌ரின் த‌ந்தையாவ‌து முன் வ‌ந்து தீவிர‌வாதிக‌ளின் ச‌ட‌லங்க‌ளை கேட்டார்க‌ளா?///வியசன்

இந்தியாவில் நடந்த குண்டுத்தாக்குதல்கள் அல்லது பாகிஸ்தானில் றோவின் வழிகாட்டலின்படி நடந்த/நடக்கும் குண்டுத்தாக்குதல்கள் அல்லது ஈழத்தின் புலிப் பயங்கரவாதிகளின் குண்டுத்தாக்குதல்களில் இறக்கும் தீவிரவாதிகளின் பெற்றோர் எவராவது சடலங்களைப் பொறுப்பேற்க அரசாங்கம் விடுமா? சடலங்களைக் கேட்டாலும் அரசுகள் கொடுக்குமா? அப்படிக் கொடுத்தாலும், அந்த சடலங்களை புதைக்கும்போது சமூகத்தினால் எந்தளவு நிந்தனைகளுக்கு ஆவார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா?

இறந்த பாகிஸ்தானியரின் தந்தைகள், சடலங்களை கேட்கவே மாட்டார்களா?

எந்த‌ பாகிஸ்தானிய‌ரின் த‌ந்தையாவ‌து முன் வ‌ந்து தீவிர‌வாதிக‌ளின் ச‌ட‌லங்க‌ளை கேட்டார்க‌ளா என்று நீங்கள் எதை வைத்து சொல்கிறீர்கள்?
indian
நண்பர்களே,
ஹ்ட்ட்ப்://கேட்ரு.சொம்/இன்டெ௯.ப்ஹ்ப்?ஒப்டிஒன்=சொம்_சொன்டென்ட்&விஎந்=அர்டிச்லெ&இட்=22309
இந்த பதிவு ஒரு மிகப் பெரிய மோசடி& சதி.இந்தப் பதிவினை எழுதிய மு.குலாம் முகமது என்பவர் ஒரு மூத்த பத்திரிக்கையாளராக சொல்லிக் கொள்கிறார். இபோது தாருல் இஸ்லாம் என்னும் அமைப்பில் உறுப்பினராக உள்ளார்.
எஸ்.எம் .முஸ்ரிஃப் எழுதிய கர்கரே ஐ கொன்றது யார் என்னும் புத்தகத்தின் தமிழ்பதிப்பு வெளியீட்டுவிழாவை நடத்தியவர்களில் ஒருவர்தான் இந்த குலாம் முகமது.
ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.யொஉடுபெ.சொம்/நட்ச்?வ்=ல்5ட்7க்7ர்ன்௯ஓ4
ஃபிர்ச்ட் ஹெமன்ட் கர்கரெ ஆநர்ட் ஃபுன்ச்டிஒன் இன் மடுரை. டமில்னடு ஸெனிஒர் ஜொஉர்னலிச்ட் ம். குலம் மொஹமெட், மொஉலன மொஉலவி க்.ம்.ஈல்யச் றியஜி. ந்ஹொ கில்லெட் கர்கரெ? ஹெமன்ட் கர்கரெ, மஹரஷ்ட பொலிசெ'ச் ஆன்டி-டெர்ரொரிச்ம் ஸ்ஃஉஅட் சிஎஃப். ஸ்ம் முஷ்ரிஃப் இச் அன் எ௯ - ஈன்ச்பெச்டொர் கெனெரல் ஒஃப் பொலிசெ, மஹரஷ்ட்ர. ஆர்ரஙெட் & புப்லிஷெட் ப்ய்: டீஃப்ட் டருல் ஈச்லம் ஃபொஉன்டடிஒன் ட்ருச்ட் & வெர்கல் புப்லிசைடொன்ச், சென்னை.
யாரோ ஒரு பாகிஸ்தானி வக்கீல் ஃபாரூக் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பாகிஸ்தான் அரசு,நேபால் அரசு,இந்திய அரசு மூன்றுமே அவன் நேபாளில் கைது செய்யப்பட்டதை மறுக்கின்றன. பாகிஸ்தானி ஊடகங்கள் கூட அந்த ஃபாரோக்கின் கூற்றை சீரியசாக எடுக்கவில்லை.

இப்பதிவில் சொன்ன மற்ற விவரங்கள் அனைத்துமே முஷ்ரிஃபின் புத்தக விவரங்களே,ஆனால் இந்த பிரச்சாரம் தமிழில் அதிகம் முன்னெடுக்கப்படுவது சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.
இப்பதிவில் குலாம் முகமது பற்றிய விவரங்களை மறைக்க வேண்டிய மர்மம் என்ன??
இந்த கசாப் பற்றிய பிரச்சாரம் ஒரு சதி மட்டுமே!!
வந்தே மாதரம்!!
viyasan
///இந்தியாவில் எத்தனையோ குண்டு வெடிப்புகள் பாக்கிஸ்தானியர்களால் நடதப்பப்பட்டுள்ளன என்கிறீர்களே. எத்தனை குண்டு வெடிப்புகள் பாக்கிஸ்தானியர்களால் நடதப்பப்பட்டுள்ளன? அந்த விவரத்தை தான் கேட்கிறோம்? ///
இப்ப‌டியான‌ ஒரு கேள்வியை, இந்தியாவுக்குள்ளேயே கேட்கும‌ள‌வுக்கு பாகிஸ்தான் ஆத‌ரவாள‌ர்க‌ள் இந்தியாவிலிருக்கிறார்க‌ள் என்ப‌தை என்னால் ந‌ம்ப‌வே முடியவில்லை. காஸ்மீர் பிர‌ச்ச‌னையே இன்று வ‌ரை தீராம‌லிருப்ப‌த‌ற்குக் கார‌ண‌ம் பாகிஸ்தானிய‌ இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌ம் தான் என்ப‌து உல‌க‌த்திலுள்ள‌ குழ‌ந்தைக‌ளுக்குக் கூட‌த் தெரியுமே. இந்தியாவில் ந‌ட‌ந்த‌ எத்த‌னையோ குண்டுத்தாக்குத‌ல்க‌ளுக்கு பாகிஸ்தானிலுள்ள‌ இஸ்லாமிய‌ தீவிரவாதிக‌ள் உரிமை கொண்டாடிய‌தை உல‌க‌றியும். க‌சாப்பை இர‌க‌சிய‌மாக‌த் தூக்கிலிட்ட‌த‌ற்குக் கார‌ண‌மே க‌ண்ட‌ஹார் (Kandahar) ப‌ணய‌க்கைதிகள் ப‌ரிமாற்ற‌ம் போன்ற‌ ச‌ம்ப‌வ‌ம் மீண்டும் ந‌டைபெறாம‌ல் த‌டுப்ப‌த‌ற்காக‌த் தான். க‌சாப்பின் தூக்குத்த‌ண்ட‌னையை இர‌க‌சிய‌மாக‌ வைத்திருந்த‌தால் இந்தியாவில் ஆங்காங்கே ப‌ழிவாங்க‌ல் குண்டுவெடிப்புக‌ள் ந‌ட‌பெறாம‌ல் த‌டுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அப்ப‌டியிருந்தும் பாகிஸ்தானிய‌ ப‌ய‌ங்கர‌வாத‌ இய‌க்க‌ம் லஸ்க‌ர் இ தொய்பா க‌சாப்பை மாவீர‌ன் (Martyr) என‌ப் புகழ்மாலை சூடியுள்ள‌து, அத‌னால் க‌சாப் இப்பொழுது 72 க‌ன்னிக‌ளையும் என்ன‌ செய்வ‌தென்று தெரியாம‌ல் முழித்துக் கொண்டு கூட‌ இருக்க‌லாம், யார் கண்ட‌து. அப்ப‌டியிருக்க‌, இப்ப‌டி முழுப்பூச‌ணிக்காயைச் சோற்றில் ம‌றைப்ப‌து போன்ற‌ முட்டாள் தன‌மான‌ கேள்வியைக் கேட்டுத் த‌ம்மையே ந‌கைப்புரிக்குரியவ‌ர்க‌ளாக்கிக் கொள்ளும் பாகிஸ்தான் சார்பு இந்திய‌ர்க‌ளை நினைத்தால் என‌க்குச் சிரிப்புத் தான் வ‌ருகிற‌து. இந்த‌ முட்டாள் த‌ன‌த்திலும் வேடிக்கையென்ன‌வென்றால் இவ‌ர்க‌ள் எந்த‌ முஸ்றிஹ்ப் ( S.M.MUSHRIF) எழுதிய‌ "கர்கரேயை கொன்றது யார்" WHO KILLED KARKARE என்ற‌ புத்த‌க‌த்தைக் கொண்டு பாகிஸ்தானிய‌ இஸ்லாமிய‌ தீவிர‌வாதிக‌ள் இந்தியாவில் செய்த‌ பாவ‌ங்க‌ளைக் க‌ழுவ‌லாம் என்று நினைத்துக் க‌ன‌வு காண்கிறார்க‌ளோ அவ‌ரே rediff.com க்கு அளித்த‌ நேர்காண‌லில் இவ்வாறு: "பாகிஸ்தான் எங்க‌ளுடைய‌ எதிரி, அவ‌ர்க‌ளால் எங்க‌ளுக்கு ஆபத்து எப்பொழுதும் ஏற்ப‌ட‌லாம். அவ‌ர்க‌ளால் எங்க‌ளுக்கு காஸ்மீரில் போதுமான‌ள‌வுக்கு அழிவுக‌ள் ஏற்ப‌ட்டுள்ள‌ன‌. மும்பாயில் ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல் நித‌ர்ச‌ன‌மான‌ உண்மை.அந்த‌ தாக்குத‌ல் பாகிஸ்தானிலிருந்து இய‌ங்கும்‌ குழுவினாரால் நட‌த்த‌ப்ப‌ட்ட‌து அதை யாராலும் மறுக்க‌ முடியாது" என‌க்கூறுகிறார்.

"Pakistan is our enemy and a threat from them is always there. They have caused enough damage in Kashmir
What happened in Mumbai is a reality. It was an attack by Pakistan-based groups and there is no denying that."


ச‌கோத‌ர‌ர் அபூ அஃப்ரஹ் போன்ற‌வ‌ர்க‌ளும், இந்த‌க் க‌ட்டுரையாசிரிய‌ர் குலாம் முகம்ம‌துவும், ஏனைய‌ முக‌ம்ம‌துக்க‌ளும் "கர்கரேயை கொன்றது யார்?" என்ற‌ புத்த‌க‌த்தை வைத்து பாகிஸ்தானைச் சார்ந்த‌ இஸ்லாமிய‌த் தீவிரவாதிக‌ள் இந்தியாவில் செய்த‌ அட்டூழிய‌ங்க‌ளையெல்லாம் அப்ப‌டியே தூக்கி கையாலாகாத காவிப்ப‌டையின் மேல் போட்டு விடலாம் என்று க‌ன‌வு க‌ண்டு கொண்டிருக்க‌, பிள்ளையார் பிடிக்க‌ குர‌ங்காய் மாறிய‌ க‌தை போல, அந்த‌ புத்த‌க‌த்தை எழுதிய‌ S.M.MUSHRIFபே பாகிஸ்தானிலிருந்து இய‌ங்கும் தீவிர‌வாத‌க் குழுக்க‌ள் தான் மும்பாய் தாக்குத‌லைச் செய்த‌து ம‌ட்டும‌ல்ல‌, காஸ்மீரிலும் அழிவுக‌ளைச் செய்த‌னர் எனத் தெள்ள‌த் தெளிவாக‌க் கூறி தாளியை உடைத்து விட்டார் போலிருக்கிற‌து.. அதனால் எத்த‌னை குண்டு வெடிப்புக‌ள் பாக்கிஸ்தானிய‌ தீவிர‌வாதிக‌ளால் இந்தியாவில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ன‌ என்ற‌ புள்ளிவிவ‌ர‌த்தை என்னை விட‌ எச். எம். முஸ்றீஹ்ப் இட‌ம் கேட்டால் விள‌க்க‌மாக‌த் த‌ருவார் அல்ல‌வா?
ஏனென்றால் அவ‌ர் தான் பாகிஸ்தானிய‌ தீவிர‌வாதிக‌ள் காஸ்மீரில் செய்த‌ அழிவுக‌ளைப் ப‌ற்றி ம‌ட்டும‌ல்ல‌, மும்பாய்த் தாக்குத‌லையும் அவ‌ர்க‌ள் தான் செய்தார்க‌ள் என்கிறாரே. அவ‌ர‌து நேர்காண‌லை கீழேயுள்ள‌ இணைய‌ லிங்க்(link) இல் காணலாம்.

http://news.rediff.com/interview/2009/nov/25/anniversary-26-11-former-ips-officer-wants-karkare-death-probed.htm
Uthayam
//இப்ப‌டியான‌ ஒரு கேள்வியை, இந்தியாவுக்குள்ளேயே கேட்கும‌ள‌வுக்கு பாகிஸ்தான் ஆத‌ரவாள‌ர்க‌ள் இந்தியாவிலிருக்கிறார்க‌ள் என்ப‌தை என்னால் ந‌ம்ப‌வே முடியவில்லை//

நம்பத்தான் முடியாது. அஜ்மீர் தர்காவில் குண்டு வெடித்தவுடன் அதனை செய்தவர்கள் "ஹீஜி அமைப்பினர்" என்றும் "சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் குண்டு வெடிப்பையும்" பாகிஸ்தானியர் என்றும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பை இந்தியன் முஜாகிதீன் என்றும் பொய் கதைகளை புனைந்தவர்களின் சுயரூபம் வெளிப்ப்பட்டு அம்மணமாக நிற்கும் போது உங்களால் நம்பவே முடியாது. கோவை குண்டு வெடிப்பும் மும்பை குண்டுவெடிப்பும் தவிர முஸ்லிம்களால் நடத்தப்பட்டது என்று வேறு எந்த குண்டு வெடிப்பையும் உறுதியாக கூற முடியாது.

//க‌சாப் இப்பொழுது 72 க‌ன்னிக‌ளையும் என்ன‌ செய்வ‌தென்று தெரியாம‌ல் முழித்துக் கொண்டு கூட‌ இருக்க‌லாம்,//

வியாசனுக்கு தன்னிடம் முஸ்லிம் வெறுப்பை தவிர இந்தவிவாதத்தில் எவ்வித ஆதரமும் இல்லை என்பதை இந்த விவாதத்தில் இஸ்லாத்தை இழுத்து கேலி செய்ய வேண்டும் என்ற உங்கள் குயுக்தியும் குள்ள நரித்தனமும் உங்கள் வாதத்தின் மேல் சந்தேகம் கொள்ள செய்கிறது. இன்னமும் இந்த கட்டுரையின் மையக்கருத்தை இவர் புரிந்து கொள்ளவில்லை. பரிதாபம். மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலுரைக்க உங்கள் சிந்தனைகளை ஒருமுகப்படுத்துங்கள். மாறாக இஸ்லாத்தை இங்கு இழுக்க வேண்டாம் என்று வியாசனுக்கு எச்சரிக்கிறேன். இந்த விவாதத்தை வைத்து முஸ்லிம்களை அந்நியப்படுத்தி அவர்களை பாகிஸ்தானிய ஆதரவாளராக காட்டி தனது இந்துத்துவ விசுவாசத்தை காட்ட முயல்கிறார்.
வியாசனிடம் பதில் இல்லை என்பதை அவரின் இஸ்லாத்தை கேலி செய்யும் முயற்சியிலிருந்து தெரிந்து கொள்ளலாம். உரிய பதில் இல்லாதவர்கள் எதிராளியின் உணர்ச்சியினை தூண்டி உண்மையினை மறைக்கும் கேவலமான அனுகு முறையினை கையிலெடுப்பார்கள். இவர்கள் ஆபத்தான பாஸிஸவாதிகள்.

//இஸ்லாமிய‌த் தீவிரவாதிக‌ள் இந்தியாவில் செய்த‌ அட்டூழிய‌ங்க‌ளையெல்லாம் அப்ப‌டியே தூக்கி கையாலாகாத காவிப்ப‌டையின் மேல் போட்டு விடலாம் என்று க‌ன‌வு க‌ண்டு கொண்டிருக்க‌,// மாலேகான், நாந்தெத்,மக்கா மசூதி, அஜ்மீர் தர்கா, சம்ஜோதா, தென்காசி, இங்கெல்லாம் குண்டுகளை வெடித்து அப்பாவி இந்தியர்களைக் கொன்ற காவிப்படைகள் உங்களுக்கு "கையாளாகாத காவிப்படை" களாக தெரிகிறதா??. என்ன ஒரு நேர்மை? உங்களை இன்னார் என்று புரிந்துக்கொள்ள உதவி இருக்கிறீர்கள். நன்றி.
Nakulan
///இந்தியாவில் எத்தனையோ குண்டு வெடிப்புகள் பாக்கிஸ்தானியர்களால் நடதப்பப்பட்டுள்ளன என்கிறீர்களே. எத்தனை குண்டு வெடிப்புகள் பாக்கிஸ்தானியர்களால் நடதப்பப்பட்டுள்ளன? அந்த விவரத்தை தான் கேட்கிறோம்?

/// இப்ப‌டியான‌ ஒரு கேள்வியை, இந்தியாவுக்குள்ளேயே கேட்கும‌ள‌வுக்கு பாகிஸ்தான் ஆத‌ரவாள‌ர்க‌ள் இந்தியாவிலிருக்கிறார்க‌ள் என்ப‌தை என்னால் ந‌ம்ப‌வே முடியவில்லை.///

இந்தியாவில் எத்தனை குண்டுவெடிப்புகள் பாகிஸ்தானியர்களால் நடத்தப்பட்டன என்று யாராவது ஒருவர் கேட்டால், இதை இந்தியாவிலிருந்தே கேட்கலாமா என்றும் கேட்பவர்களை பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்றும் முத்திரை குத்துவது, பலே பலே.

///காஸ்மீர் பிர‌ச்ச‌னையே இன்று வ‌ரை தீராம‌லிருப்ப‌த‌ற்குக் கார‌ண‌ம் பாகிஸ்தானிய‌ இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌ம் தான் என்ப‌து உல‌க‌த்திலுள்ள‌ குழ‌ந்தைக‌ளுக்குக் கூட‌த் தெரியுமே.///

இந்திய இராணுவத்தில் அரை வாசிக்கு மேல் காஷ்மீரில் குவித்துக்கொண்டு, அப்பாவி காஷ்மீர் மக்களின் கொலை, கற்பழிப்பு போன்ற பாதகச் செயல்களுக்கு எல்லாம் காரணகர்த்தாக இருக்கிறார்களே, அவர்கள் காஷ்மீரை விட்டு வெளியேறும்வரை அங்குள்ள தீவிரவாதப் பிரச்சனை குறையாதுதான்.

///இந்தியாவில் ந‌ட‌ந்த‌ எத்த‌னையோ குண்டுத்தாக்குத‌ல்க‌ளுக்கு பாகிஸ்தானிலுள்ள‌ இஸ்லாமிய‌ தீவிரவாதிக‌ள் உரிமை கொண்டாடிய‌தை உல‌க‌றியும்///

அவர்கள் எதற்காக தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்பதும், இந்திய றோவின் வழிகாட்டலில் உள்ள அரச பயங்கரவாதக் குழுக்கள் நடத்தும் பயங்கரவாதங்களையும் உலகு நன்கறியும்.

///க‌சாப்பை இர‌க‌சிய‌மாக‌த் தூக்கிலிட்ட‌த‌ற்குக் கார‌ண‌மே க‌ண்ட‌ஹார் (கன்டஹர்) ப‌ணய‌க்கைதிகள் ப‌ரிமாற்ற‌ம் போன்ற‌ ச‌ம்ப‌வ‌ம் மீண்டும் ந‌டைபெறாம‌ல் த‌டுப்ப‌த‌ற்காக‌த் தான்.///

கந்தஹார் பரிமாற்றம் மீடியாவில் வந்தது.

அடிக்கடி நடைபெறும் பணயக் கைதிகளின் பரிமாற்ற விபரங்கள், சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தெரியுது.

/// க‌சாப்பின் தூக்குத்த‌ண்ட‌னையை இர‌க‌சிய‌மாக‌ வைத்திருந்த‌தால் இந்தியாவில் ஆங்காங்கே ப‌ழிவாங்க‌ல் குண்டுவெடிப்புக‌ள் ந‌ட‌பெறாம‌ல் த‌டுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.///

அரச மாமூல் கிடைக்கும்போது, பழிவாங்கல், குண்டு வெடிப்புகள் நடத்தி என்ன பயன்?

///அப்ப‌டியிருந்தும் பாகிஸ்தானிய‌ ப‌ய‌ங்கர‌வாத‌ இய‌க்க‌ம் லஸ்க‌ர் இ தொய்பா க‌சாப்பை மாவீர‌ன் (மர்ட்ய்ர்) என‌ப் புகழ்மாலை சூடியுள்ள‌து,///

தமிழ்ப் பயங்கரவாத இயக்கம், தற் கொலைக் குண்டு தாரிக்கேல்லாம் மாவீரன் பட்டமளிக்கலாம்.

லக்சர் தய்யிபா இயக்கம், கசாப்பிற்கு மாவீரன் பட்டமளிக்கும்போது, வியாசன் துவண்டு விடுகிறாரே.

Take it easy, Viyaasan.
Nakulan
/// "த‌மிழ்ப்ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌ம்" ஈழ‌த்த‌மிழ் த‌ற்கொலைக் குண்டுதாரிக‌ளுக்கெல்லாம் மாவீர‌ர் ப‌ட்ட‌ம‌ளித்த‌மைக்குக் கார‌ண‌ம் அவ‌ர்க‌ள் அந்த‌ இய‌க்க‌த்தின் அங்க‌த்த‌வ‌ர்க‌ள், அவ‌ர்க‌ளின் கொண்ட இலட்சிய‌த்துக்காக‌ ஆயுத‌மேந்தி, த‌ம்மையும் அழித்து அத‌னால் த‌மது எதிரிக‌ளை அல்ல‌து ஈழ‌விடுத‌லைப் போராட்ட‌த்தின் முதுகில் குத்திய‌வ‌ர்க‌ளை அழித்த‌வ‌ர்க‌ள். அத‌னால் அவ‌ர்க‌ளுக்கு மாவீர‌ர் என்ற‌ ப‌ட்ட‌த்தை "தமிழ்ப்ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌ம்" அளித்த‌து.///

கொள்ளை, கள்ளக் கடத்தல், கப்பம் வசூலித்தல், சும்மா தெருவில் நிற்பவன் போகிறவன் எல்லாரையும் சுட்டுக் கொல்லுதல், சிங்கள, முஸ்லிம் கிராமங்களில் புகுந்து நரபலி வேட்டையாடுதல்தான் அவர்களின் போராட்ட இலட்சியமா?

அதற்காகத்தானா அவர்கள் பூண்டோடு அழிக்கப்பட்டார்கள்?

அந்த தமிழ்ப் பயங்கரவாத இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களுக்கே, அந்தக் கூட்டத்தின் கொலை, கொள்ளை போன்ற இலட்சியங்கள் பிடிபடாமல், அந்த இயக்கத்தையே அழித்தொழிக்க அரசிற்கு உதவினார்களே? அவர்கள் கொண்ட கொலைகார இலட்சியம் மனித குலத்திற்கு உதவாது என்று தலைமைப்[ பொறுப்பில் இருந்தவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. உங்களுக்கு இன்னும் புரியவில்லை.
viyasan
//தமிழ்ப் பயங்கரவாத இயக்கம், தற் கொலைக் குண்டு தாரிக்கேல்லாம் மாவீரன் பட்டமளிக்கலாம். லக்சர் தய்யிபா இயக்கம், கசாப்பிற்கு மாவீரன் பட்டமளிக்கும்போது, வியாசன் துவண்டு விடுகிறாரே.///

இங்குள்ள‌ பாகிஸ்தானிய‌ வாலாய‌ங்க‌ளும், ப‌ல‌ முக‌ம்ம‌துக்க‌ளும், க‌சாப்பை அப்பாவியாக‌, குழ‌ந்தையாக‌, இந்துவாக‌, ச‌ங்ப‌ரிவாராக‌ எல்லாம் சித்த‌ரித்து அவ‌னை நிர‌ப‌ராதியாக்க‌ பத்தி ப‌த்தியாக‌ எழுதி முய‌ற்சித்துக் கொண்டிருக்கும் போது, பாகிஸ்தானைச் சார்ந்த‌ இஸ்லாமிய‌ பய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌மாகிய‌ லஸ்க‌ர் இ தொய்பா, த‌ம‌து இய‌க்க‌த்தைச் சேர்ந்த‌ க‌சாப்பிற்கு மாவீர‌ன் என்று ப‌ட்ட‌ம‌ளித்த‌தில் என்ன‌ த‌வ‌று என்று கேட்கிறார் ந‌குல‌ன் என்ப‌வ‌ர். இவ‌ர் எல்லா முக‌ம்ம‌துக்களின் முய‌ற்சிக‌ளையும் ஒரு நொடியில் த‌க‌ர்த்து விட்டார். இப்ப‌டியான‌ ந‌ண்ப‌ர்க‌ளிருக்கும் போது யாருக்கு வேண்டும் எதிரி? "த‌மிழ்ப்ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌ம்" ஈழ‌த்த‌மிழ் த‌ற்கொலைக் குண்டுதாரிக‌ளுக்கெல்லாம் மாவீர‌ர் ப‌ட்ட‌ம‌ளித்த‌மைக்குக் கார‌ண‌ம் அவ‌ர்க‌ள் அந்த‌ இய‌க்க‌த்தின் அங்க‌த்த‌வ‌ர்க‌ள், அவ‌ர்க‌ளின் கொண்ட இலட்சிய‌த்துக்காக‌ ஆயுத‌மேந்தி, த‌ம்மையும் அழித்து அத‌னால் த‌மது எதிரிக‌ளை அல்ல‌து ஈழ‌விடுத‌லைப் போராட்ட‌த்தின் முதுகில் குத்திய‌வ‌ர்க‌ளை அழித்த‌வ‌ர்க‌ள். அத‌னால் அவ‌ர்க‌ளுக்கு மாவீர‌ர் என்ற‌ ப‌ட்ட‌த்தை "தமிழ்ப்ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌ம்" அளித்த‌து.

அதே போல் க‌சாப்பும் ல‌ஸ்க‌ர் இ தொய்பாவிட‌ம் ப‌ய‌ங்கர‌வாத‌ ப‌யிற்சி பெற்ற‌ பாகிஸ்தானிய‌ர், இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்து நூற்றுக்க‌ண‌க்கான‌ அப்பாவி இந்திய‌ர்க‌ளையும், குழ‌ந்தைக‌ள் உட்ப‌ட‌ கொன்ற‌வ‌ர்க‌ளில் ஒருவ‌ன். அந்த‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌லை க‌ச்சித‌மாக‌ முடித்து, அத‌ற்குத் த‌ண்ட‌னையாக‌த் தூக்கிலிட‌ப்ப‌ட்டவ‌ன், அத‌னால் தான் பாகிஸ்தானிய‌ இஸ்லாமிய‌ ப‌ய‌ங்கர‌வாத‌ இய‌க்க‌மாகிய‌ ல்ஸ்க‌ர் ஈ தொய்பா அவ‌னுக்கு மாவீர‌ன் ப‌ட்ட‌ம் கொடுத்துக் கெள‌ர‌வித்த‌து என்ற‌ உண்மையை ந‌குல‌ன் என்ப‌வ‌ர் ஏற்றுக் கொள்வ‌தைப் போல், அபூஅஃப்ரஹ், குலாம் முக‌ம்ம‌தும், செய்ய‌து முக‌ம்ம‌தும், ஏனைய‌ முக‌ம்ம‌துக்க‌ளும் ஏற்றுக் கொள்கிறார்க‌ளா என்ப‌தை அவ‌ர்களிட‌ம் கேட்டுத் தெரிந்து கொள்ள‌வும். க‌சாப்புக்கு இஸ்லாமிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் மாவீர‌ர் ப‌ட்ட‌ம‌ளித்த‌தில் என‌க்கெந்த‌ வ‌ருத்த‌முமில்லை, என்னைப் பொறுத்த‌வ‌ரையில் லஸ்க‌ர் இ தொய்பா த‌ங்க‌ளில் ஒருவ‌னாகிய‌ இஸ்லாமிய‌ தீவிர‌வாதி க‌சாப்புக்கு மாவீர்ன் ப‌ட்ட‌ம‌ளித்த‌தில் எதுவித‌ த‌வறுமில்லை. பாகிஸ்தானைச் சார்ந்த‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌ம் க‌சாப்புக்கு மாவீர‌ன் என்று ப‌ட்ட‌ம‌ளித்துப் புக‌ழார‌ம் சூட்டிய‌து என்பதைச் சுட்டிக்காட்டினேனே த‌விர‌ அதைத் த‌வ‌று என்று கூறவில்லை, அப்ப‌டிக் கூற‌வும் முடியாது. பாவ‌ம், ந‌குல‌ன அவ‌ர்க‌ள் மிக‌வும் குழ‌ம்பிப் போய்விட்டார் போலிருக்கிற‌து. :-))
Nakulan
///என்னைப் பொறுத்த‌வ‌ரையில் லஸ்க‌ர் இ தொய்பா த‌ங்க‌ளில் ஒருவ‌னாகிய‌ இஸ்லாமிய‌ தீவிர‌வாதி க‌சாப்புக்கு மாவீர்ன் ப‌ட்ட‌ம‌ளித்த‌தில் எதுவித‌ த‌வறுமில்லை. பாகிஸ்தானைச் சார்ந்த‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌ம் க‌சாப்புக்கு மாவீர‌ன் என்று ப‌ட்ட‌ம‌ளித்துப் புக‌ழார‌ம் சூட்டிய‌து என்பதைச் சுட்டிக்காட்டினேனே த‌விர‌ அதைத் த‌வ‌று என்று கூறவில்லை, அப்ப‌டிக் கூற‌வும் முடியாது///

வியாசன் ஐயா, கசாப்பிற்கு மாவீரன் என்று பட்டமளித்தது, தவறில்லை என்று கூறுகிறீர்கள். அடுத்த வசனத்தில், கசாப்பிற்கு மாவீரன் பட்டமளித்ததை சுட்டிக்காட்டியது தவிர தவறு என்று கூறவில்லை என்றும் சொல்கிறீர்கள். அப்படிக் கூறவும் முடியாது என்றும் வேறு சொல்கிறீர்கள்.

நீங்களே முரண்பட்டு, நீங்களே குழம்பலாமா?
Nakulan
///பாகிஸ்தானைச் சார்ந்த‌ இஸ்லாமிய‌ பய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌மாகிய‌ லஸ்க‌ர் இ தொய்பா, த‌ம‌து இய‌க்க‌த்தைச் சேர்ந்த‌ க‌சாப்பிற்கு மாவீர‌ன் என்று ப‌ட்ட‌ம‌ளித்த‌தில் என்ன‌ த‌வ‌று என்று கேட்கிறார் ந‌குல‌ன் ///

கசாப்பிற்கு மாவீரன் என்று பட்டமளித்ததில் என்ன தவறு என்று நான் கேட்கவே இல்லையே.

கசாப்பிற்கு மாவீரன் என்று பட்டமளிக்கும்போது, நீங்கள் துவளுவதைத்தான் சொன்னேன்.

இறுதியாக, நீங்களே சொல்லிவிட்டீர்களே, கசாபிற்கு மாவீரன் பட்டமளித்தது தவறில்லை என்று.
Nakulan
///இங்குள்ள‌ பாகிஸ்தானிய‌ வாலாய‌ங்க‌ளும், ப‌ல‌ முக‌ம்ம‌துக்க‌ளும், க‌சாப்பை அப்பாவியாக‌, குழ‌ந்தையாக‌, இந்துவாக‌, ச‌ங்ப‌ரிவாராக‌ எல்லாம் சித்த‌ரித்து அவ‌னை நிர‌ப‌ராதியாக்க‌ பத்தி ப‌த்தியாக‌ எழுதி முய‌ற்சித்துக் கொண்டிருக்கும் போது,///

வியாசன், நான் என்ன எழுதினேனோ அதற்கு பதில் தந்தால் மிகவும் நல்லது என நினைக்கிறேன். அதல்லாமல், பிறரின் கருத்துக்களையும் என்னிடம் கொட்டி, ஆசுவாசப்படுவது நல்லதல்ல.
Nakulan
///அத‌னால் தான் பாகிஸ்தானிய‌ இஸ்லாமிய‌ ப‌ய‌ங்கர‌வாத‌ இய‌க்க‌மாகிய‌ ல்ஸ்க‌ர் ஈ தொய்பா அவ‌னுக்கு மாவீர‌ன் ப‌ட்ட‌ம் கொடுத்துக் கெள‌ர‌வித்த‌து என்ற‌ உண்மையை ந‌குல‌ன் என்ப‌வ‌ர் ஏற்றுக் கொள்வ‌தைப் போல், அபூஅஃப்ரஹ், குலாம் முக‌ம்ம‌தும், செய்ய‌து முக‌ம்ம‌தும், ஏனைய‌ முக‌ம்ம‌துக்க‌ளும் ஏற்றுக் கொள்கிறார்க‌ளா என்ப‌தை அவ‌ர்களிட‌ம் கேட்டுத் தெரிந்து கொள்ள‌வும்.///

லஸ்கர் தய்யிபா, கசாபிற்கு மாவீரன் பட்டமளித்தது நீங்கள் எழுதியபிந்தான் எனக்குத் தெரியும். அது உண்மையா பொய்யா என்பது நான் அறியாதது.

அப்படியிருக்க, நான் அதை உண்மை என்று ஏற்றுக்கொண்டதைப்போல நீங்கள் எழுதுகிறீர்களே. போதாததற்கு, உங்களுக்குப் பின்னூட்டம் இட்டவர்களிடம் நீங்கள் எழுதியதை ஏற்றுக்கொள்வார்களா என்று என்னை வினவவும் செய்கின்றீர்கள்.

தயவு செய்து, கேள்வி கேட்டவருக்கு பதில் எழுதப் பழகுங்கள்.
Nakulan
///க‌சாப்புக்கு இஸ்லாமிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் மாவீர‌ர் ப‌ட்ட‌ம‌ளித்த‌தில் என‌க்கெந்த‌ வ‌ருத்த‌முமில்லை, என்னைப் பொறுத்த‌வ‌ரையில் லஸ்க‌ர் இ தொய்பா த‌ங்க‌ளில் ஒருவ‌னாகிய‌ இஸ்லாமிய‌ தீவிர‌வாதி க‌சாப்புக்கு மாவீர்ன் ப‌ட்ட‌ம‌ளித்த‌தில் எதுவித‌ த‌வறுமில்லை.///

தமிழ்ப் பயங்கரவாதிகள், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும் குண்டு வைத்து கொன்றனர். அந்த தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு மாவீரர் பட்டம் அளித்தது தங்களின் பார்வையில் தவறில்லை. வருத்தமும் பட மாட்டீர்கள். நளினி போன்றவர்கள் சிறையில் இருப்பதற்கும் வருத்தப் படமாட்டீர்கள். அந்த தமிழ்ப் பயங்கரவாதிகளின் தலைவன் மண்டையில் கொத்து வாங்கி செத்ததைப் பற்றி வருத்தமோ தவறோ காண மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

கசாப்பின் செயல்களை பயங்கர வடிவமாக நீங்கள் சித்தரித்தீர்கள். எத்தனையோ இந்தியர்கள் ஆண், பெண், குழந்தைகள் என்ற வேறுபாடின்றி, சுட்டுக் கொன்றதைப் பற்றி மிகவும் கவலையுடனும் சிலாகித்தும் பந்தி பந்தியாக எழுதித் தள்ளினீர்கள். மாவீரன் என்று கசாப்பிற்கு சூடப்பட்டதையும் ஒரு வெறுப்பு கலந்த தொனியில் எழுதி தள்ளினீர்கள். இப்படியான கொடுமையான ஒருவருக்கு மாவீரன் என்ற பட்டம் அளித்ததைப்பற்றி கிஞ்சித்தும் வருத்தவும் இல்லை, தவறும் இல்லை என்று சொல்ல உங்களைப்போன்ற வந்தே மாதுரம் படிக்கும், ஓர் இந்திய நாட்டை நேசிக்கும் உங்களுக்கு எப்படி மனம் வருகிறது?

இந்திய நாட்டை நேசித்துக்கொண்டே, ராஜீவ் கொலையாளிகளை மாவீரர் என்று சொல்வது தவறல்ல என்று தங்களுக்கு தெரிகிறது போலும்.
viyasan
:-))))
seyed muhammed
தங்கள் கருத்துக்கு யாராவது எதிர் கருத்து கூறினால் அவர்களை ஹிந்துத்துவவாதிகளாகவும் பிராமணர்களாகவும் கற்பிப்பது ஒரு நடைமுறையாகிவிட்டது என ரெம்பவும் வருத்தப்பட்ட வியாசர் அவர்கள் மும்பை தாக்குதலில் ஈடுபட்டோர் மராத்தி பேசினார்கள்,குபேர் படகில் வந்தவர்களை அடையாளம் காட்டியவர் கசாப்பை அடையாளப்படுத்தவில்லை என்ற செய்திகளை படித்து விட்டு வாய் விட்டு சிரித்த வியாசர் முஸ்லிம்கள் எழுதியதால் இது பாகிஸ்தானின் தீவிரவாதிகளின் வலை தளத்திலிருந்து எடுத்தாளப்பட்டதாக எழுதுகிறார் வியாசர்;ஐயா இது எந்த ஊர் நியாயம்?முஸ்லிம்கள் எழுதினால் அது பாகிஸ்தானின் தீவிரவாதம் என எழுதுவது கூப்பாடு போடுவது எந்த ஊர் நியாயம் அல்லது எந்த கூட்டத்தின் நியாயம்?வியாசர் தான் விள.....க்க வேண்டும்.
மும்பை தாக்குதலில் ஈடுபட்டோர் மராத்தி பேசினார்கள் என்ற செய்தியை நானும் என் போன்றோரும் இந்தியாவில் வாழும் பத்திரிக்கை வாசிக்கும் பெரும்பாலானோரும் இந்தியாவில் இந்தியர்களால் பிரசுரிக்கப்படும் பத்திரிக்கைகள் வாயிலாக படித்து தெரிந்து கொண்டோம்;ஆனால் வியாசரோ!அவருக்கு நன்கு பரிச்சயமான பாகிஸ்தானின் தீவிரவாத வலை தளங்களில் படித்து வயிறு நோக சிரித்திருக்கிறார்.இதன் மூலம் வியாசரை வியாசரின் அடையாளத்தை புரிந்து கொள்ளலாம்.
இவர்கள் தான் கார்க்கரேயை கொன்றவர்கள்;கார்க்கரேயினால் கண்டுபிடிக்க பட்ட ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் பயங்கரவாத செயலால் இறந்து போன அப்பாவி இந்தியர்கள் அவர்களின் குடும்பங்கள் உண்மையை உணர்ந்து கார்கரேயை வாழ்த்தவும் ஹிந்து தீவிரவாதிகளை சபிக்கவும் தொடங்கியவுடன் கார்க்கரேயை கொன்றொழித்து விட்டார்கள் பாவிகள்;
வியாசரே!பிறரை தீவிரவாதியாக சித்தரிக்க பாகிஸ்தானை ஆதரிப்பவனா என கத்தி கூப்பாடு போடாமல் கேட்க பட்ட கேள்விக்கு கட்டுரைக்கு நேர்மையான முறையில் மறுப்போ அல்லது பதிலோ எழுதவும்;இல்லையென்றால் சும்மா இருக்கவும்.விமர்சனங்களை படிப்போர் படித்தோர் பளிச்சென்று புரிந்து கொள்வார்ரகள் யார் வியாசர்?வியாசரின் அடையாளம் என்ன?இனியும் முக்காடிட்டு கொண்டிருக்க வேண்டாம்;வழவழ கொழகொழ என வாயாடவும் வேண்டாம்.
viyasan
நான் இங்கு ப‌திலெழுதுவ‌தை நிறுத்தலாமென்றாலும் செய்ய‌து முக‌ம்ம‌து என்னை எழுதச் செய்யாது விட‌ மாட்டார் போலிருக்கிற‌து. ந‌ல்லது! மும்பை தாக்குத‌லில் ஈடுப‌ட்டோர் ம‌ராத்தி பேசிய‌தால் அவ‌ர்க‌ள் எல்லாம் இந்துக்க‌ளா? அப்ப‌டியானால் பெரும்பாலான‌ பாகிஸ்தானிய‌ர்க‌ளால் இந்தி பேச‌ முடியும் அல்ல‌து புரிந்து கொள்ள‌ முடியும் என்கிறார்க‌ள் அவ‌ர்க‌ள் எல்லாம் இந்திய‌ர்க‌ளா? க‌சாப் இந்தியாவில் சிறையிலிருந்த‌ போது ம‌ராத்தியில் சில‌ வச‌ன‌ங்க‌ளைப் பேச‌ப் பழ‌கிக் கொண்டான் என்ப‌தை நானும் இந்திய‌ ஊட‌க‌ங்க‌ளில் பார்த்திருக்கிறேன், அத‌னால் அவன் இந்திய‌னாகி விடுவானா? ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ இந்திய‌ர்க‌ளால் பாகிஸ்தானில் பேச‌ப்ப‌டும் உருது, ப‌ஞ்சாபி போன்ற‌ மொழிக‌ளைப் பேச‌முடியும் அத‌னால் அவ‌ர்க‌ள் எல்லோரும் பாகிஸ்தான் முஸ்லீம்க‌ளாகி விடுவார்க‌ளா? அதே போல், மும்பாயில் தாக்குத‌ல் ந‌ட‌ந்த‌ வ‌ந்த‌ ஜிகாதிக‌ள், மும்பாயில் பேச‌ப்ப‌டும் ம‌ராத்தி மொழியை ஏற்க‌ன‌வே க‌ற்றிருக்க‌லாம‌ல்ல‌வா? அது அவ‌ர்க‌ளுக்கு மும்பாயில் ம‌றைந்து வாழ‌ உத‌வுமென்று அவ‌ர்க‌ளை இங்கு அனுப்பிய‌ பாகிஸ்தானிய‌ தீவிர‌வாத‌ இய‌க்க‌த்துக்கு நிச்ச‌ய‌மாக‌த் தெரிந்திருக்கும். அத‌னால் அவ‌ர்க‌ளுக்கு ம‌ராத்திய‌ மொழியில் ப‌யிற்சிய‌ளிக்க‌ப்ப‌ட்டிருக்க‌லாம். அவ‌ர்க‌ள் ம‌ராத்தியில் பேசினார்க‌ள் என்ப‌த‌ற்காக, பாகிஸ்தான் உத்தியோக‌பூர்வ‌மாக‌ உல‌க‌ம் முழுவ‌துக்கும் க‌சாப் பாகிஸ்தானிய‌க் குடிம‌க‌ன் என‌ அறிவித்து ((ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எல்லாம் கொல்ல‌ப்ப‌ட்டு விட்ட‌தால், அவ‌ர்க‌ளின் குடியுரிமையை உறுதிப்ப‌டுத்த‌ வேண்டிய‌ தேவையேற்ப‌ட‌வில்லை), அவ‌ன‌து பெற்றோரையும் அடையாள‌ம் காட்டிய‌ பின்பும், அவ‌ன் இந்து அல்ல‌து மராத்தி என்று புல‌ம்புவ‌து, நியூயோர்க்கை அமெரிக்க‌ர்க‌ளே த‌ம‌து விமான‌ங்க‌ளைக் கொண்டு தாக்கி, 4000க்கும‌திக‌மான‌ அமெரிக்க‌ர்க‌ளைக் கொன்றார்க‌ள் என்று சில‌ முஸ்லீம்க‌ள் கூறுவ‌து போன்ற‌ Conspiracy theory க்கு வேண்டுமானால் உத‌வ‌லாம், ஆனால் உல‌கின் எந்த‌ நீதிம‌ன்ற‌த்திலும் அது எடுப‌டாது.

பாகிஸ்தானிலிருந்து இயங்குகின்ற‌ இணைய‌த்த‌ளங்க‌ளில் தான் கசாப் ஒரு இந்து, அவ‌ன் நேபாள‌த்துக்கு வேலைக்குப் போன‌வ‌ன் என்ற‌ உள‌ற‌ல்க‌ள் எல்லாம் உண்டு. அவ‌ற்றைப் ப‌டித்து நான் வாய்விட்டுச் சிரித்திருக்கிறேன். என்னுடைய‌ பாகிஸ்தானிய‌ ந‌ண்ப‌ன் ஒருவ‌னிட‌ம் நீங்க‌ள் பாகிஸ்தானிய‌ர்க‌ள் நேபாள‌த்துக்குக் கூட‌ வேலைதேடிப் போவீர்க‌ளா என்று கேட்ட‌த‌ற்கு அவ‌ன் சொன்ன‌ ப‌தில், " பாகிஸ்தான் ஏழைநாடு தான், ஆனால் நேபாள‌த்துக்கு வேலை தேடிப் போகும‌ள‌வுக்கு நாங்க‌ள் ஏழைக‌ள‌ல்ல‌ ( Pakistan is a poor country but we are not poor enough to go and work in Nepal)"ஜ‌னாப் குலாம் முக‌ம்ம‌து த‌ன‌து, Frontline க‌ட்டுரையையும், பாகிஸ்தானிய‌ ஊட‌க‌ங்க‌ளையும் மொழிபெய‌ர்த்தும், த‌ழுவியும் எழுதிய‌ இந்த‌க் க‌ட்டுரையில் "அவன் (க‌சாப்) 2006 ஆம் ஆண்டு வறுமை தாளாமல் நேப்பாள்- என்ற நமது அண்டை நாட்டுக்கு பிழைப்புத்தேடி வந்தவன்" என்ற‌தைப் பார்த்த‌தும் என‌க்கே அந்த‌ ச‌ந்தேக‌ம் ஏற்ப‌ட்ட‌துண்டு. அத‌னால் க‌சாப் நேபாள‌த்துக்கு வேலை தேடிப் போனான் என்று வாதாடுப‌வ‌ர்க‌ளுக்கு பாகிஸ்தானைப் ப‌ற்றியும் தெரியாது, நேபாள‌த்தையும் ப‌ற்றியும் புரியாது என்ப‌து தான் உண்மை.
IDEA
dont publish such a false stories ... which is highly impossible to even dream.... then hw can it be possible to be real....the persons who dont have any work will be doing this evil publishing act.........................................bulsit....
Nakulan
///மும்பாயில் தாக்குத‌ல் ந‌ட‌ந்த‌ வ‌ந்த‌ ஜிகாதிக‌ள், மும்பாயில் பேச‌ப்ப‌டும் ம‌ராத்தி மொழியை ஏற்க‌ன‌வே க‌ற்றிருக்க‌லாம‌ல்ல‌வா? அது அவ‌ர்க‌ளுக்கு மும்பாயில் ம‌றைந்து வாழ‌ உத‌வுமென்று அவ‌ர்க‌ளை இங்கு அனுப்பிய‌ பாகிஸ்தானிய‌ தீவிர‌வாத‌ இய‌க்க‌த்துக்கு நிச்ச‌ய‌மாக‌த் தெரிந்திருக்கும். அத‌னால் அவ‌ர்க‌ளுக்கு ம‌ராத்திய‌ மொழியில் ப‌யிற்சிய‌ளிக்க‌ப்ப‌ட்டிருக்க‌லாம்.///

வியாசனின் உளறல்கள், இந்திய றோ கூட, தோற்றுப் போகும்போல இருக்கிறது. இப்படித்தான், தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு ஊதுகுழலாக இருந்த வர்கள் செய்த வேலையும் இதுதான். தனது எதிரியை எந்தளவு மட்டம் தட்ட வேண்டுவேண்டுமோ, அந்தளவு மட்டம் தட்டினார்கள். இறுதியில் அழிந்தே போனார்கள்.
Nakulan
///பாகிஸ்தானிலிருந்து இயங்குகின்ற‌ இணைய‌த்த‌ளங்க‌ளில் தான் கசாப் ஒரு இந்து, அவ‌ன் நேபாள‌த்துக்கு வேலைக்குப் போன‌வ‌ன் என்ற‌ உள‌ற‌ல்க‌ள் எல்லாம் உண்டு. அவ‌ற்றைப் ப‌டித்து நான் வாய்விட்டுச் சிரித்திருக்கிறேன்.///

வாசகர்கள் கேட்பவற்றிக்கு பதில் சொல்லுங்கள். நீங்கள் சிரித்தாலும் அழுதாலும் யாரும் கருத்தில் எடுக்க மாட்டார்கள்.
Nakulan
///நியூயோர்க்கை அமெரிக்க‌ர்க‌ளே த‌ம‌து விமான‌ங்க‌ளைக் கொண்டு தாக்கி, 4000க்கும‌திக‌மான‌ அமெரிக்க‌ர்க‌ளைக் கொன்றார்க‌ள் என்று சில‌ முஸ்லீம்க‌ள் கூறுவ‌து போன்ற‌ சொன்ச்பிரச்ய் தெஒர்ய் க்கு வேண்டுமானால் உத‌வ‌லாம், ஆனால் உல‌கின் எந்த‌ நீதிம‌ன்ற‌த்திலும் அது எடுப‌டாது///

உங்களுக்குத் தைரியமிருந்தால், எங்கேயாவது ஒரு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யுங்கள். நீதிமன்றம் வழக்கைப் பரிசீலிக்குமா அல்லது தள்ளுபடி செய்யுமா என்பதை பிற்பாடு அறியலாம்.
Nakulan
///என்னுடைய‌ பாகிஸ்தானிய‌ ந‌ண்ப‌ன் ஒருவ‌னிட‌ம் நீங்க‌ள் பாகிஸ்தானிய‌ர்க‌ள் நேபாள‌த்துக்குக் கூட‌ வேலைதேடிப் போவீர்க‌ளா என்று கேட்ட‌த‌ற்கு அவ‌ன் சொன்ன‌ ப‌தில், " பாகிஸ்தான் ஏழைநாடு தான், ஆனால் நேபாள‌த்துக்கு வேலை தேடிப் போகும‌ள‌வுக்கு நாங்க‌ள் ஏழைக‌ள‌ல்ல‌ ///

இந்தியர்கள் வீசா இல்லாமலே இலங்கையில் போய் சட்ட விரோதமாக வேலை செய்கிறார்களே. தினமும் பிடிபடுகிறார்களே. இதில் எது ஏழை நாடு? இந்தியாவா இலங்கையா? வேலை தேடி ஒரு மனிதன் உலகில் எங்கும் போகலாம். அதற்காக, பாகிஸ்தானை இங்கு இழுத்து ஒரு நக்கல் பாணியில் ஒரு குதறல் ஏன்?
viyasan
///இந்தியர்கள் வீசா இல்லாமலே இலங்கையில் போய் சட்ட விரோதமாக வேலை செய்கிறார்களே. தினமும் பிடிபடுகிறார்களே. இதில் எது ஏழை நாடு? இந்தியாவா இலங்கையா? ///

பாகிஸ்தானை விட‌ நேபாள‌ம் ஏழைநாடு, அதனால் பாகிஸ்தானிய‌ர்க‌ள் யாராவ‌து நேபாள‌த்துக்கு வேலை தேடிப்போக‌மாட்டார்க‌ள் என்ற‌ க‌ருத்துக்கு மொட்டைத்த‌லைக்கும் முழ‌ங்காலுக்கும் முடிச்சுப் போடுவ‌து போல் இல‌ங்கையையும், இந்தியாவையும் ஒப்பிடுகிறார் ந‌குல‌ன். இதிலிருந்து என்ன‌ தெரிகிற‌தென்றால் அவ‌ருக்கு இல‌ங்கையையும், இந்தியாவையும் ப‌ற்றிக் கூட‌த் தெரியாது என்ப‌து தான். இந்தியா பொருளாதார‌த்தில் பெரிய‌நாடாக‌ இருக்க‌லாம் ஆனால் இன்றும், 30 வருட‌ யுத்த‌த்தின் பின்பும் கூட‌ வாழ்க்கைத்த‌ர‌த்தில் இல‌ங்கை, இந்தியாவை விட‌ முன்ன‌ணியிலுள்ள‌து. இல‌ங்கையின் GDP per capita $ $5700, இந்தியாவின் 3700 பாகிஸ்தான் 2800 நேபாள‌ம் 1250. ஏழைக‌ளுக்கும் ப‌ண‌க்கார‌ர்க‌ளுக்குமிடையேயுள்ள‌ இடைவெளி இந்தியாவை விட‌ இல‌ங்கையில் மிக‌வும் குறைவு. இந்தியாவைப் போல் இல‌ங்கையில் யாரும் திற‌ந்த வெளியை ம‌ல‌கூட‌மாக‌ப் பாவிப்ப‌தில்லை. எல்லா ச‌மூக‌ அபிவிருத்தி சுட்டிக்காட்டிக‌ளிலும் ( Social Development Indicators), அதாவ‌து எழுத்த‌றிவு ( (இல‌ங்கை 92.6%, இந்தியா 74% /பாகிஸ்தான் 69%), இல‌ங்கையில் 9% ம‌க்க‌ளும், இந்தியாவில் 30% ம‌க்க‌ளும் வ‌றுமைக் கோட்டுக்குள் கீழ் வாழ்கிறார்க‌ள். அதை விட‌, உய‌ர்வான‌ வாழ்க்கைக் கால‌ம் (Life expectancy rate), தொற்றுநோய்த் த‌டுப்பு (கொல‌ரா, போலியோ, தொழுநோய் போன்ற‌ தொற்று நோய்க‌ள் இல‌ங்கையில் முற்றாக‌ ஒழிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌ன‌),குறைந்த‌ள‌விலான‌ குழந்தைக‌ளின் இற‌ப்பு வீத‌ம் (infant mortality rate), குறைந்த‌ள‌விலான எய்ட்ஸ் நோய்த்தொற்று, தெற்காசியாவில் சுத்த‌மான‌, அழ‌கான‌ த‌லைந‌க‌ர‌ம் கொழும்பு தான், இப்ப‌டி எல்லாவ‌கையிலும் தெற்காசியாவில் முன்ன‌ணியில் இருக்கும் நாடு இல‌ங்கை, அதைப் போய் இந்தியாவுட‌னோ அல்ல‌து நேபாள‌த்துட‌னோ ஒரு முட்டாள் கூட‌ ஒப்பிட‌மாட்டான், ந‌குல‌னைத் த‌விர‌. இல‌ங்கைய‌ர்க‌ளிடையே வ‌ட‌க்கில் யாழ்ப்பாண‌த்த‌மிழ‌ர்க‌ளின் பொருளாதார‌பல‌ம் புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளால், ஈடுசெய்ய‌ப்ப‌டுவ‌தால் வ‌ட‌க்கிலுள்ள‌ த‌மிழ‌ர்க‌ளிட‌ம் அதிக‌ளவான‌ ப‌ண‌ம் இருப்ப‌து போன்று ப‌ல‌ரும் உண‌ர்வ‌தால் இப்பொழுது சிங்க‌ள‌வ‌ர்க‌ள் கூட த‌ம‌து பெட்டிக்க‌டைக‌ளைத் தூக்கிக் கொண்டு யாழ்ப்பாண‌த்துக்கு ஒடுகிறார்க‌ள். எந்த‌ ஒரு இல‌ங்கைய‌ரும் (என்னையும் சேர்த்து) வ‌ட‌ இந்தியாவில் புகையிர‌த‌த்தில் ப‌ய‌ண‌ம்செய்யும் போது நினைத்துக் கொள்வ‌தெல்லாம் நாங்க‌ள் முற்பிற‌ப்பில் எவ்வ‌ள‌வோ புண்ணிய‌ம் செய்திருக்க‌ வேண்டும், அத‌னால் தான் இந்தியாவில் பிற‌க்க‌வில்லை. :-))))
Nakulan
/// பாகிஸ்தானை விட‌ நேபாள‌ம் ஏழைநாடு, அதனால் பாகிஸ்தானிய‌ர்க‌ள் யாராவ‌து நேபாள‌த்துக்கு வேலை தேடிப்போக‌மாட்டார்க‌ள் என்ற‌ க‌ருத்துக்கு மொட்டைத்த‌லைக்கும் முழ‌ங்காலுக்கும் முடிச்சுப் போடுவ‌து போல் இல‌ங்கையையும், இந்தியாவையும் ஒப்பிடுகிறார் ந‌குல‌ன்.///viyaasar

இலங்கையையும் இந்தியாவையும் நான் எங்கே ஒப்பிட்டேன்? நான் கேட்டது இலங்கையா இந்தியாவா ஏழை நாடு என்பது? நீங்களோ GDP, Literacy rate, Life Expectancy என்று தொடங்கி, திறந்த வெளிக் கக்கூசுகள் வரை ஒப்பிடுகிறீர்கள். ஒப்பிடுவதற்கு திறந்த வெளிக் கக்கூசுகளா உங்களுக்கு கிடைத்தன? வேறொன்றும் இல்லையா? என்ன மட்டகரமான ஒப்பீடு? நீங்கள் சொன்னதுபோல், இலங்கையில் திறந்த வெளிக் கக்கூசுகள் இல்லவே இல்லையா? கடற்கரைகளுக்குப் போய் பார்த்ததில்லையா? தலைநகரிலேயே இருக்கிறதே.

உங்களைப் பார்க்கும்போது, இஸ்லாமிய எதிர்ப்பு, மறைமுகமான இந்திய எதிர்ப்பு, பாகிஸ்தான் எதிர்ப்பு போன்றவற்றை தன்னகத்தே கொண்ட ஒரு மனிதப் பிண்டமாக வலையங்களில் உலவுகிறீர்கள்.

ஏற்கனவே, இலங்கை எதிர்ப்பும் ஊறி இருந்தது. தற்போது, தமிழ்ப் பயங்கரவாதத்தை உள்ளத்திலும், இலங்கை ஆதரவை உதட்டிலும் மினுக்கிக் கொண்டிருக்கிறீர்கள். உள்ளத்தில் இருப்பது எத்தனை நாளுக்கு?
Nakulan
///ஏழைக‌ளுக்கும் ப‌ண‌க்கார‌ர்க‌ளுக்குமிடையேயுள்ள‌ இடைவெளி இந்தியாவை விட‌ இல‌ங்கையில் மிக‌வும் குறைவு.///

இலங்கை சிறிய நாடென்பதால் இந்த இடைவெளி இருக்கத்தான் செய்யும். நான் கேட்டது, வேலைக்கு வருவோர், போவதுபற்றி. இலங்கையை சிங்கப்பூருடனோ அல்லது மாலைதீவுடனோ ஒப்பிட்டால், இடைவெளி வேறுவிதமாக இருக்கும்.

இப்படிக் கேட்டவுடன், மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்று பிதற்றாதீர்கள்.
Nakulan
///இல‌ங்கைய‌ர்க‌ளிடையே வ‌ட‌க்கில் யாழ்ப்பாண‌த்த‌மிழ‌ர்க‌ளின் பொருளாதார‌பல‌ம் புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளால், ஈடுசெய்ய‌ப்ப‌டுவ‌தால் வ‌ட‌க்கிலுள்ள‌ த‌மிழ‌ர்க‌ளிட‌ம் அதிக‌ளவான‌ ப‌ண‌ம் இருப்ப‌து போன்று ப‌ல‌ரும் உண‌ர்வ‌தால் இப்பொழுது சிங்க‌ள‌வ‌ர்க‌ள் கூட த‌ம‌து பெட்டிக்க‌டைக‌ளைத் தூக்கிக் கொண்டு யாழ்ப்பாண‌த்துக்கு ஒடுகிறார்க‌ள்.///

புலம்பெயர்ந்த தமிழர்களால் ஈடுசெய்யப்படுவது என்பது மிகவும் குறைவு. அங்கு வாழும் மக்களாலும் பிற மாகாணங்களில் இருந்து வரும் எல்லா இன, மத மக்களாலும் முதலீடு செய்யப்படுகிறது. அவ்வளவுதான்.
Nakulan
///எந்த‌ ஒரு இல‌ங்கைய‌ரும் (என்னையும் சேர்த்து) வ‌ட‌ இந்தியாவில் புகையிர‌த‌த்தில் ப‌ய‌ண‌ம்செய்யும் போது நினைத்துக் கொள்வ‌தெல்லாம் நாங்க‌ள் முற்பிற‌ப்பில் எவ்வ‌ள‌வோ புண்ணிய‌ம் செய்திருக்க‌ வேண்டும், அத‌னால் தான் இந்தியாவில் பிற‌க்க‌வில்லை.///

இந்த வசனத்திலிருந்து, இந்திய நாட்டை இளக்காரமாகக் கருதும் நீங்கள், பாகிஸ்தானையும் அங்குள்ள முஸ்லிம்களையும் இந்திய முஸ்லிம்களையும் எதிர்த்து, காழ்ப்புணர்ச்சியுடன் ஒரு போபியாவாக வலையங்களில் வலம் வருவது உங்களுக்கே வேடிக்கையாக இல்லையா?
Nakulan
///இல‌ங்கையின் த‌மிழ்பேசும் முஸ்லீம்க‌ள் அவ‌ர்க‌ளின் இன‌, மொழிவ‌ழிச் ச‌கோத‌ர‌ர்க‌ளாகிய‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் முதுகில் குத்தினார்க‌ள். பாகிஸ்தானின் ஆத‌ர‌வையும், ஆயுத‌ங்க‌ளையும் இல‌ங்கை அர‌சுக்குப் பெற்றுக் கொடுத்து, ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளைக் க‌ருவ‌றுத்தார்க‌ள், அதே நிலை இந்தியாவிலும் ஏற்ப‌டாம‌லிருக்க‌ வேண்டுமென்ப‌தால் தான் நான் இப்ப‌டியான‌ க‌ட்டுரைக‌ளுக்குப் பதிலெழுதுகிறேனே தவிர‌, எனக்கு இந்துத்துவாவில் எந்த‌ ஈடுபாடும் கிடையாது.///

தமிழர்களின் முதுகில் இலங்கை முஸ்லிம்கள் எப்படிக் குத்தினார்கள் என்று விளக்குவீர்களா? இலங்கை முஸ்லிம்களின் நிலை, எந்த துறையிலும் பலவீனமானது என்பது உங்களுக்குத் தெரியும். இலங்கை முஸ்லிம்கள்தான், பாகிஸ்தானில் ஆயதங்களை வாங்குவதற்கு ஆதரவு அளித்தார்களா? அன்று தொடக்கம் இன்றுவரை, பாகிஸ்தானுடன் இலங்கை அரசு மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இலங்கை அரசு கேட்டால், பாகிஸ்தான் எதையும் செய்யும். இறுதிப் பயங்கரவாதம் முடிவிற்குக் கொண்டுவர, இந்தியா முழுமையாக உதவி செய்திருக்காவிட்டால், இலங்கை சங்கடத்தில் விழுந்திருக்கும் என்று இரண்டு தினங்களுக்கு முன் மகிந்தா சொன்னார். இப்பொழுது சொல்லுங்கள், யார் உங்களை கருவறுத்தது?
Nakulan
///ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளின் போராட்ட‌த்தை ம‌ட்டும் இழிவுப‌டுத்தி பொய்ப்பிர‌ச்சார‌ம் செய்ய‌ ஜெய்னுலாப்தீன் போன்ற‌ த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ளும் அவ‌ர்க‌ள‌து ஆத‌ர‌வாள‌ர்க‌ளும் த‌ய‌ங்கிய‌தில்லை. ///

மக்கள் ஆதரவுடன் நடப்பதுதான் போராட்டம். அதை விடுத்து, முஸ்லிம் மக்கள்மீது நடத்தப்பட்ட கொலை, கொள்ளைகள் போன்ற அழிச்சாட்டியங்களுக்குப் பெயர் பயங்கரவாதம்.

இலங்கை முஸ்லிம்களுக்கு நடந்த பாதகச் செயல்களை வெளிச்சம்போட்டு தமிழக மக்களுக்கு எடுத்துக் கூறியவர்களை நீங்கள் சாடலாமா?
Nakulan
அன்பு வியாசர் அவர்களே,

பசுவைப் (கசாப்) பற்றிக் கதைக்கப்போய், அதைக் கட்டப்பட்ட மரத்தைப் பற்றி நாம் கதைத்துக் கொண்டிருக்கிறோம்.

கசாப் விடயமாக தயவு செய்து, பிற வாசகர்கள் கேட்ட வினாக்களுக்கும் மறுமொழி தந்தால், எனக்கும் விளங்கக் கூடியதாக இருக்கும்.

பதிலளிப்பதை நிறுத்தினால், நீங்கள் முஸ்லிம்களைப் பற்றி இவ்வளவு தூரம் எழுதியதை அபாண்டமாகத் தான் கருதுவர்.
நிருபர்
கட்டுரையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மூளையை குடைந்து சுய சிந்தனயில் வெளிப்படும் பதில்கள் தேவை இல்லை .இக்கேள்விகள் இந்திய அரசாங்கத்தின் முன் வைக்கப்பட்ட கேள்விகள் . இந்திய அரசு மௌனம் சாதிப்பது சந்தேகத்தையே வலுப்பெற செய்கிறது
viyasan
ந‌குல‌ன் என்ற‌வ‌ர் அரைத்த‌ மாவையே அரைத்துக்கொண்டு, ஒற்றையா நின்று ஒப்பாரி வைக்கிற‌தைப் பார்க்க‌, "அழுவார் அழுவார் எல்லாம் தன்கரைச்சல் திருவ‌ன் பெண்டிலுக்கு அழ‌ ஆளில்லையாம்" என்ற‌ ஈழ‌த்துப் ப‌ழ‌மொழி தான் நினைவுக்கு வ‌ருகிற‌து. :-))
Nakulan
///ந‌குல‌ன் என்ற‌வ‌ர் அரைத்த‌ மாவையே அரைத்துக்கொண்டு, ஒற்றையா நின்று ஒப்பாரி வைக்கிற‌தைப் பார்க்க‌, "அழுவார் அழுவார் எல்லாம் தன்கரைச்சல் திருவ‌ன் பெண்டிலுக்கு அழ‌ ஆளில்லையாம்" என்ற‌ ஈழ‌த்துப் ப‌ழ‌மொழி தான் நினைவுக்கு வ‌ருகிற‌து. :-))///

அரைத்த மாவிற்கே (இலங்கை விவகாரம்) பதிலில்லை.

அரைத்துக் கொண்டிருக்கும் மாவிற்கு (கசாப்) பதில் வரவா போகிறது?

அரைத்துக் கொண்டிருக்கும் மாவை, அரைத்த மாவிற்குள் கலந்து, வியாசர் ஆரம்பப் பின்னூட்டத்தில் இருந்தே பின்னிப் பினைந்ததனால், எனக்கும் அரைத்த மாவை மேலும் அரைக்க தேவைப்பட்டது.

தயவு செய்து மீண்டும் இழுத்தடிக்காமல், பசுவைப் (கசாப்) பற்றிய வினாக்களுக்கு விடையளியுங்கள், எனக்காக அல்ல. தங்களை நோக்கி வினவிய வாசகர்களுக்காகவாவது.
viyasan
///(கசாப்) பற்றிய வினாக்களுக்கு விடையளியுங்கள், எனக்காக அல்ல. தங்களை நோக்கி வினவிய வாசகர்களுக்காகவாவது.///

க‌சாப்பை ப‌ற்றி ம‌ட்டும‌ல்ல‌, அத‌ற்கும‌திகமாக‌வே நான் ப‌தில‌ளித்து விட்டேன், என்னுடைய‌ க‌ருத்துக்க‌ளுக்கு ம‌றுப்புத் தெரிவிக்க‌ வேண்டிய‌வ‌ர்க‌ள், கசாப் போன்ற‌ ஜிகாதிக‌ளின் ஆத‌ர‌வாள‌ர்க‌ளும், அவ‌ர்க‌ளின் ந‌ண்ப‌ர் போல‌ ந‌டித்துக் கொண்டு நார‌த‌ர் வேலைபார்க்கும் ந‌குல‌னும் தானே த‌விர‌ நான‌ல்ல‌. "க‌ர்க்காரேயைக் கொன்ற‌து யார்?" என்ற‌ ஓரு முஸ்லீம் எழுதிய‌ புத்த‌க‌ம் ஒன்றை வைத்தே இந்தியாவில் இஸ்லாமிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்துக்குப் ப‌சுத்தோல் போர்த்திவிட‌லாம் எனச் சில‌ர் ப‌க‌ற்க‌ன‌வு காண்கிறார்க‌ள். ஆனால் அந்த‌ப் புத்த‌க‌ம் எழுதிய‌ முஸ்லீமை ம‌ட்டும் ந‌டுநிலையான‌வ‌ராக ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ஏன் ஏற்றுக் கொள்ள‌வேண்டுமென்ப‌தை எந்த‌ முக‌ம்ம‌துவும் இதுவ‌ரை விள‌க்க‌வில்லை. க‌ர்காரேயைக் கொன்ற‌வ‌ர் யார் என்ற‌ புத்த‌க‌ம் மும்பாய் தாக்குத‌லுக்கும் இந்தியாவில் பாகிஸ்தான் சார்பு இஸ்லாமிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்துக்குமுள்ள‌ தொட‌ர்பை ம‌றுக்க‌வோ அல்ல‌து க‌சாப் ஒரு பாகிஸ்தானிய‌ ஜிகாதிய‌ல்ல‌ என்று வாதாடுவ‌த‌ற்கோ பய‌ன்ப‌டுத்த‌ முடியாது, ஏனென்றால் அந்த‌ புத்த‌க‌த்தை எழுதிய‌ முஸ்லிமாகிய‌ முஸ்றீபே, "மும்பாயில் ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல் பாகிஸ்தானிலிருந்து இய‌ங்கும்‌ குழுவினரால் நட‌த்த‌ப்ப‌ட்ட‌து அதை யாராலும் மறுக்க‌ முடியாது" என‌த் தெளிவாக‌க் கூறிவிட்டார். "Pakistan is our enemy and a threat from them is always there. They have caused enough damage in Kashmir .What happened in Mumbai is a reality. It was an attack by Pakistan-based groups and there is no denying that." Janab- S.M.MUSHRIF
ஷாலி
நகுலன் நாரதர் வேலை பார்க்கிறாராம்.ஐயா,அமெரிக்கா அறிவுக்கொழுந்து! நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பதுதானையா இந்து தத்துவம். உமக்கு ஹிந்துத்த்வாவும் இந்தியா கக்கூசும்தான் தெரிகிறது..வேற ஒரு மண்ணும் தெரியல்லே. உமது இலங்கை நாற்றம் சகிக்கலை. என்ன செய்றது..வாரணம் வந்தாலும் ஒதுங்கனும், வராஹம் வந்தாலும்
ஒதுங்கித்தேன் போகணும்.
viyasan
///இக்கேள்விகள் இந்திய அரசாங்கத்தின் முன் வைக்கப்பட்ட கேள்விகள் . இந்திய அரசு மௌனம் சாதிப்பது சந்தேகத்தையே வலுப்பெற செய்கிறது ///

இந்திய அர‌சு ம‌ட்டும‌ல்ல‌ எந்த‌ அர‌சும் த‌ன்னுடைய‌ நாட்டில் எழுதப்ப‌டும் எல்லாக் க‌ட்டுரைக‌ளுக்கும், க‌தைக‌ளுக்கும், Conspiracy theoryக‌ளுக்கும் ப‌தில‌ளிப்ப‌தில்லை. தான் நினைப்ப‌வ‌ற்றை க‌ற்ப‌னையுட‌ன், மெருகூட்டி எழுதுவ‌து, எழுத்துச் சுத‌ந்திர‌முள்ள‌ எந்த‌வொரு ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின‌தும் குடிம‌க‌னுக்குமுள்ள‌ உரிமை, அவ‌ற்றுக்கெல்லாம் எந்த‌ நாட்டின் அர‌சும் ப‌தில‌ளித்துக் கொண்டிருப்ப‌தில்லை. அர‌சாங்க‌த்திட‌மிருந்து ப‌தில் கிடைக்க வேண்டுமென்றால், இந்த‌க் கேள்விகளை முஸ்லீம் உறுப்பின‌ர்க‌ள் நாடாளும‌ன்ற‌த்தில் எழுப்ப‌வேண்டுமே த‌விர‌, இணைய‌த்த‌ள‌ங்க‌ளில் எழுதிப் பய‌னில்லை. அது புத்த‌க‌த்தை விற்க‌ உத‌வுமே த‌விர‌, கேள்விக‌ளுக்கு அர‌சாங்க‌த்திட‌மிருந்து ப‌தில் கிடைக்க‌ச் செய்யாது. ஒபாமா ஒரு த‌ன்னின‌ச்சேர்க்கையாள‌ர் என்று கூட‌த்தான் புத்த‌க‌ங்க‌ளும், யுரியூப்புக்க‌ளும் வெளிவ‌ந்துள்ள‌ன‌, சில‌ர் அவ‌ரை அப்ப‌டியான‌ கிள‌ப்புக‌ளில் க‌ண்ட‌தாக‌க் கூட‌ச் ச‌த்திய‌ம் பண்ணுகிறார்க‌ள் அவ‌ற்றுக்கெல்லாம் ஒபாமாவோ அல்ல‌து அமெரிக்க‌ அர‌சோ ப‌தில‌ளிப்ப‌தில்லை. அது போல் தான் இதுவும். :-)) LOL
shueib
மறுபடியும் மொதல்ல இருந்தா?

கட்டுரையில கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுமையா வியாசரே!!!!!!!
sami
ஹலொ குலாம் கொஞ்ஞம் கோட மனசாட்ஷி இல்லாம எழுத வேன்டாம். அந்த தாக்குதலில் சொந்தம் யாராவது இரந்துஇரந்தால் தெரியும். பொய் சொல்ல அளவு இருக்கு
Nakulan
///இந்திய அர‌சு ம‌ட்டும‌ல்ல‌ எந்த‌ அர‌சும் த‌ன்னுடைய‌ நாட்டில் எழுதப்ப‌டும் எல்லாக் க‌ட்டுரைக‌ளுக்கும், க‌தைக‌ளுக்கும், சொன்ச்பிரச்ய் தெஒர்ய்க‌ளுக்கும் ப‌தில‌ளிப்ப‌தில்லை///

எந்த அரசும் எல்லாக் கட்டுரைகளுக்கும் பதிலளிக்காதுதான். இது சிறு பிள்ளையும் அறிந்த விடயந்தானே. உலகத்தில் உள்ள சில அரசுகள், தங்களது நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள், நீதிமன்றங்கள் தவறுகள் இழைத்து அதைச் சுட்டிக் காட்டும்போது அந்தத் தவறுகளை திருத்திக் கொள்கின்றன. போதாததற்கு நஷ்ட ஈடும் கொடுக்கப்படுகின்றது. சாதாரண தளங்களினூடாக சுட்டிக் காட்டினாலும், அந்த ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட நாடுகள் பரிசீலனை செய்யும். அப்படிப்பட்ட ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட நாடுகளுள் இந்தியாவைச் சேர்க்க முடியாதுதான்.
Nakulan
///தான் நினைப்ப‌வ‌ற்றை க‌ற்ப‌னையுட‌ன், மெருகூட்டி எழுதுவ‌து, எழுத்துச் சுத‌ந்திர‌முள்ள‌ எந்த‌வொரு ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின‌தும் குடிம‌க‌னுக்குமுள்ள‌ உரிமை, அவ‌ற்றுக்கெல்லாம் எந்த‌ நாட்டின் அர‌சும் ப‌தில‌ளித்துக் கொண்டிருப்ப‌தில்லை. ///

அப்படி அரசு பதிலளிக்காது என்று தெரிந்துதான், கசாபின் விடயத்தில் நீங்கள் நினைப்பதை எல்லாம் கற்பனையுடன் கலந்து, மெருகூட்டி எழுதுகிறீர்கள் போலும்.
Nakulan
///ஒபாமா ஒரு த‌ன்னின‌ச்சேர்க்கையாள‌ர் என்று கூட‌த்தான் புத்த‌க‌ங்க‌ளும், யுரியூப்புக்க‌ளும் வெளிவ‌ந்துள்ள‌ன‌, சில‌ர் அவ‌ரை அப்ப‌டியான‌ கிள‌ப்புக‌ளில் க‌ண்ட‌தாக‌க் கூட‌ச் ச‌த்திய‌ம் பண்ணுகிறார்க‌ள் அவ‌ற்றுக்கெல்லாம் ஒபாமாவோ அல்ல‌து அமெரிக்க‌ அர‌சோ ப‌தில‌ளிப்ப‌தில்லை.///

ஆவின் பாலகத்திலிருந்து, நீங்கள் கள்ளைக் குடித்தாலும் உங்களை நல்ல மனிதர் என்றுதான் சொல்வார்கள். நான் உங்களைப் பற்றி மாற்றிச் சொல்லி விட்டேனா?

திறந்தவெளிக் கக்கூசுகள் இல்லையென்று நீங்கள் பெருமைப்படும் உங்களது நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கூட, தன்னினச் சேர்க்கையாளராமே. உங்கள் அரசே அலட்டிக்கொள்ளாமல் இருக்கும்போது, தன்னினச் சேர்க்கை சர்வசாதாரணமாக நடைபெறும் ஒரு நாட்டில், ஜனாதிபதியாக இருக்கும் ஒபாமாவை தன்னினச் சேர்க்கையாளர் என்று கூறினால், அவர் கோபப்படுவாரா? அல்லது அரசுதான் பதிலளிக்குமா? Playboy Magazine இல் Celebrity ஆக உலா வந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.
Nakulan
///க‌சாப்பை ப‌ற்றி ம‌ட்டும‌ல்ல‌, அத‌ற்கும‌திகமாக‌வே நான் ப‌தில‌ளித்து விட்டேன், என்னுடைய‌ க‌ருத்துக்க‌ளுக்கு ம‌றுப்புத் தெரிவிக்க‌ வேண்டிய‌வ‌ர்க‌ள், கசாப் போன்ற‌ ஜிகாதிக‌ளின் ஆத‌ர‌வாள‌ர்க‌ளும், அவ‌ர்க‌ளின் ந‌ண்ப‌ர் போல‌ ந‌டித்துக் கொண்டு நார‌த‌ர் வேலைபார்க்கும் ந‌குல‌னும் தானே த‌விர‌ நான‌ல்ல‌///

பதிலளிக்கும்படி தங்களை வேண்டினால், முட்டாள் என்றும் நாரதர் வேலை பார்ப்பவர் என்றும் ஒற்றையாக நின்று ஒப்பாரி வைப்பவர் என்றும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறவர் என்றும் ஜிஹாதி என்றும் என்னை வர்ணிக்கிறீர்களே. இதுதான் தங்கள் பண்பா?

நீங்களோ, இங்கு பின்னூட்டம் இட்ட சகோதரர்களோ, கசாபோ, பாகிஸ்தானோ, இந்தியாவோ எனக்கு நண்பர்களல்ல என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
Nakulan
///க‌சாப்பை ப‌ற்றி ம‌ட்டும‌ல்ல‌, அத‌ற்கும‌திகமாக‌வே நான் ப‌தில‌ளித்து விட்டேன்,///

கசாப்பைப் பற்றி பதிலளித்துள்ளீர்கள் என்று சொன்னீர்கள். இங்கே, நீங்கள் முதலில் எழுதிய வசனம் இதுதான். **** அட‌ப்பாவிக‌ளா! முஸ்லீம் என்ற‌ கார‌ண‌த்துக்காக‌ க‌சாப்பைக் கூட‌க் காப்பாற்ற‌த் துடிக்கிறார்க‌ள். ***** அடுத்த வசனம், ஜெய்னுலாப்டீனிலிருந்து இஸ்லாமிய விரோத நடை காட்டத்துடன்தொடங்குகிறது, .

அதன்பின், You Tube, Link களுடன் வெளுத்து வாங்குகிறீர்கள். ஆனால், அதில் ஒரு புண்ணாக்கும் இல்லை. பின்னால், பாகிஸ்தானிய இணையத்தளங்களைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறீர்கள். அத்துடன், தான் எழுதும் நரகல் நடையை மதத்துடன் பொருத்தி எழுதுகிறீர்கள். லக்சர் தைபா, 4000 அமெரிக்கர் கொலை, பாகிஸ்தான் ஏழை நாடு, இன்னும் எத்தனையோ உளறல்களை எழுதித் தள்ளிய நீங்கள், வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மழுப்பிக் கொண்டே சென்றீர்கள்.
Nakulan
///க‌சாப்பை ப‌ற்றி ம‌ட்டும‌ல்ல‌, அத‌ற்கும‌திகமாக‌வே நான் ப‌தில‌ளித்து விட்டேன்,///

நானும் அடிக்கடி வேண்டிக்கொண்டேன், கசாபின் விடயமாக வாசகர்களின் வினாக்களுக்கு விடையளிக்கும்படி.

தாங்கள் எழுதிக் குவித்த அபத்தங்களைப் பற்றி நான் கேட்கவில்லை.

தங்களை நோக்கி வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில்தான் நான் கேட்டது.

உங்களிடம் காத்திரமான பதில் இல்லை. ஆக, உங்களிடம் உண்மை இல்லை.
Nakulan
///க‌சாப்பை ப‌ற்றி ம‌ட்டும‌ல்ல‌, அத‌ற்கும‌திகமாக‌வே நான் ப‌தில‌ளித்து விட்டேன்///

அதற்குமதிகமாக பதிலளித்துவிட்டேன் என்று நீங்களாகவே சுய திருப்தியடைவது, வாசகர்களை மேலும் தங்களின்பால் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும்.
Nakulan
///க‌சாப்பை ப‌ற்றி ம‌ட்டும‌ல்ல‌, அத‌ற்கும‌திகமாக‌வே நான் ப‌தில‌ளித்து விட்டேன்,///

மாவீரனுக்கு பதில் சொன்னீர்கள். ராஜீவ் காந்தியைக் கொன்ற மாவீரர்களைப் பற்றிக் கேட்டதற்கு, உங்களிடம் மயான அமைதி நிலவியது. பதில் இல்லை. தமிழ்ப் பயங்கரவாதம், மாவீரர் பட்டமளிப்பதையும் ஆதரித்தீர்கள். லக்சர் தைய்பா ஒரு பயங்கரவாத இயக்கம் என்று சர்வசாதாரணமாக சொன்னதுபோல், தமிழ்ப் பயங்கரவாதம் என்னும் பதத்தை மேற்கோளுடன் எழுதி, பட்டும் படாமல் விழுங்கினீர்கள். மாவீரன் பட்டமளிப்பதை தான் வருத்தப்படுவது இல்லை. அதில் எந்தத் தவறும் இல்லை என்று வாய் கூசாது சொல்லித் தொலைத்தீர்கள் . அடி வாங்கிச் செத்த தமிழ்ப் பயங்கரவாதிகளின் தலைவனைப் பற்றியும் எந்த வருத்தமோ தவறோ இல்லையா என்று கேட்டதற்கு தங்களது முகத்தில் ஈயாடல்.
Nakulan
///க‌சாப்பை ப‌ற்றி ம‌ட்டும‌ல்ல‌, அத‌ற்கும‌திகமாக‌வே நான் ப‌தில‌ளித்து விட்டேன்,///

இலங்கையா இந்தியாவா ஏழை நாடு என்று கேட்டதற்கு, இந்தியாவை திறந்த வெளிக் கக்கூசாக ஆக்கி விட்டீர்கள். இலங்கையில் திறந்த வெளிக் கக்கூசுகள் இருக்கின்றனவே என்று நான் சொல்ல, அதற்கு பதில் இல்லை. மேலும், தான் முற்பிறப்பில் செய்த புண்ணியம், இந்தியாவில் பிறக்கவில்லை என்றும் இலங்கையை பப்பாளி மரத்திற்கு ஏற்றிப் புகழ்ந்தீர்கள். இப்படி இந்தியாவை இகழக்கூடியவர், எப்படி பாகிஸ்தானிய ஜிஹாதிகளிடமிருந்து இந்தியாவிற்குப் பாதுகாப்பை அளிப்பார் என்று புரியாமல் இருக்கிறது. இப்படித்தான், வாசகர்களுக்கும் எனக்கும் வியாசன் என்னும் அன்பர் பதிலளித்த விதங்கள்.

இயேசு பிறக்காத இந்நாளில், நண்பர் வியாசனுக்கு எனது Merry Christmas வாழ்த்துக்கள்.
viyasan
ந‌குல‌னைப் பார்க்க‌ப் பாவ‌மாக‌ இருக்கிற‌து ஏனென்றால் எல்லோருக்கும் பேச‌ப்ப‌டும் விட‌ய‌ங்க‌ளை உட‌ன‌டியாக‌க் கிர‌கிக்கும் த‌ன்மையிருப்ப‌தில்லை தான், ஆனாலும் அவ‌ர‌து விட‌ய‌த்தில் க‌ட‌வுள் கொஞ்சம் அதிக‌மாக‌வே அநியாய‌ம் செய்து விட்டார் போலிருக்கிற‌து. ந‌குல‌ன் கிளிப்பிள்ளை மாதிரி மீண்டும், மீண்டும் ப‌திலைச் சொல்லு, ப‌திலைச் சொல்லு என்று புல‌ம்புவ‌திலிருந்து என்ன‌ தெரிகிற‌தென்றால், ஒன்று அவ‌ர் எந்த‌ப்ப‌திலையும் இன்னும் முழுமையாக‌ வாசிக்க‌வில்லை அல்ல‌து அவ‌ர் எத்த‌னையோ முறை ப‌டித்துப்பார்த்தும் அவ‌ரால் க‌ருத்தைக் கிர‌கித்துக் கொள்ள‌ முடிய‌வில்லை. அதாவ‌து அவ‌ருக்கு எதுவும் புரிய‌வில்லை. அத‌னால் தான் ப‌ந்தியில் ப‌க்க‌த்து இலைக்கார‌னுக்குப் பாய‌ச‌ம் கேட்ட‌வ‌ன் மாதிரி, ம‌ற்ற‌வ‌ர்க‌ள் கேட்ட‌ வினாக்களுக்கு அவ‌ர்க‌ளுக்கு விடைய‌ளியுங்க‌ள் என்கிறார். உதார‌ண‌மாக‌ "க‌சாப்பை ப‌ற்றி ம‌ட்டும‌ல்ல‌, அத‌ற்கும‌திகமாக‌வே நான் ப‌தில‌ளித்து விட்டேன்" என்று நான் சொன்ன‌ ஒரு வ‌ரியை அவ‌ர் ஒன்றுக்கு ஆறுமுறை எழுதியிருக்கிறார். சின்ன‌ வ‌ய‌தில் இப்ப‌டித்தான் ஒரு வ‌ரியையே மீண்டும், மீண்டும் எழுதும்ப‌டி அவ‌ர‌து ஆசிரிய‌ர்க‌ள் கேட்டிருப்பார்க‌ள் போலிருக்கிற‌து. என்ன‌ இருந்தாலும் இது ஒரு குறைபாடு, இப்ப‌டியானவ‌ர்க‌ளுக்கு பொறுமையுட‌ன் விளக்க‌ வேண்டிய‌து ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் க‌ட‌மை. அத‌னால் ந‌குல‌ன், த‌ன‌க்கு எந்த‌க் கேள்விக்கு நான் அளித்த‌ ப‌தில் புரிய‌வில்லை என்று ஒவ்வொரு கேள்வியாக‌க் குறிப்பிட்டால், ந‌குல‌னுக்கு கிர‌கிக்கும் த‌ன்மை அல்ல‌து ஒரு விட‌ய‌த்தைப் புரிந்து கொள்ளும் த‌ன்மை குறைவு போல் காண‌ப்ப‌டுவ‌தால், அவ‌ருக்காக‌ விள‌க்கமாக‌ நான் ப‌தில‌ளிக்கிறேன். ச‌ரி தானே? நான் ஏதாவ‌து எழுதினால் கீற்று வெளியிடுமா இல்ல‌யா என்ப‌து தெரியாது, அத‌னால் நான் எழுதாம‌ல் விட்டாலும், என்னைப் ப‌திலெழுத‌ச் செய்ய‌ வேண்டுமென்ப‌தற்காக‌, ஒரு த‌ர‌த்துக்குப் ப‌ல‌முறை ஒன்றையே எழுதும் ந‌குல‌ன் போன்ற‌வ‌ர்க‌ளுக்காக‌வே ஒருவ‌லைப்ப‌திவை உருவாக்கியுள்ளேன். ந‌குல‌ன், ம‌ற‌க்காம‌ல் அதைப்ப‌ற்றியும் உங்க‌ள் க‌ருத்தைத் தெரிவிக்க‌வும். ந‌ண்ப‌ர் ந‌குல‌னுக்கு Merry Christmas and a Happy New Year. :-)))LOL

http://www.viyaas.blogspot.ca/
Nakulan
///அத‌னால் தான் ப‌ந்தியில் ப‌க்க‌த்து இலைக்கார‌னுக்குப் பாய‌ச‌ம் கேட்ட‌வ‌ன் மாதிரி, ம‌ற்ற‌வ‌ர்க‌ள் கேட்ட‌ வினாக்களுக்கு அவ‌ர்க‌ளுக்கு விடைய‌ளியுங்க‌ள் என்கிறார்///

பின்னாலுள்ளதும் நீங்கள் எழுதிய பின்னூட்டம்தான். இரண்டையும் ஒப்பிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்.

///ல்ஸ்க‌ர் ஈ தொய்பா அவ‌னுக்கு மாவீர‌ன் ப‌ட்ட‌ம் கொடுத்துக் கெள‌ர‌வித்த‌து என்ற‌ உண்மையை ந‌குல‌ன் என்ப‌வ‌ர் ஏற்றுக் கொள்வ‌தைப் போல், அபூஅஃப்ரஹ், குலாம் முக‌ம்ம‌தும், செய்ய‌து முக‌ம்ம‌தும், ஏனைய‌ முக‌ம்ம‌துக்க‌ளும் ஏற்றுக் கொள்கிறார்க‌ளா என்ப‌தை அவ‌ர்களிட‌ம் கேட்டுத் தெரிந்து கொள்ள‌வும்///
Nakulan
///அத‌னால் ந‌குல‌ன், த‌ன‌க்கு எந்த‌க் கேள்விக்கு நான் அளித்த‌ ப‌தில் புரிய‌வில்லை என்று ஒவ்வொரு கேள்வியாக‌க் குறிப்பிட்டால், ந‌குல‌னுக்கு கிர‌கிக்கும் த‌ன்மை அல்ல‌து ஒரு விட‌ய‌த்தைப் புரிந்து கொள்ளும் த‌ன்மை குறைவு போல் காண‌ப்ப‌டுவ‌தால், அவ‌ருக்காக‌ விள‌க்கமாக‌ நான் ப‌தில‌ளிக்கிறேன். ச‌ரி தானே///

104 பின்னூட்டங்கள் சென்றபின், கேள்விக்கு பதில் அளிக்க தயாராகி விட்ட வியாசன் என்பவரைப் பார்த்து அதிசயிக்கிறேன். பாகிஸ்தான் ஊடக, இணையத்தளங்களைக் கிரகித்து வாய் விட்டுச் சிரித்தவர், சாதாரண என்னைப் போன்ற ஒருவரிடம் தடுமாறுவதை என்னவென்று சொல்ல? நீங்கள் என்னை நக்கலடித்த அரைத்த மாவிலிருந்து, கேள்விகளைக் கிரகித்து, பதிலை ஆரம்பியுங்கள். கேள்விகளையும், பதில்களையும் கிரகிப்பதில் தேர்ச்சி பெற்றவராக நீங்கள் விளங்குவதால், கேள்விகளைத் தெரிவு செய்ய உங்களையே நீங்கள் நியமித்து, நிதானமாக பதிலளியுங்கள், யாரையும் தாக்காமல் - எந்த மதத்தையும் இழிவாகக் கருதாமல்.
Nakulan
///உதார‌ண‌மாக‌ "க‌சாப்பை ப‌ற்றி ம‌ட்டும‌ல்ல‌, அத‌ற்கும‌திகமாக‌வே நான் ப‌தில‌ளித்து விட்டேன்" என்று நான் சொன்ன‌ ஒரு வ‌ரியை அவ‌ர் ஒன்றுக்கு ஆறுமுறை எழுதியிருக்கிறார்.///

6 முறையென்ன 60 முறை எழுதினாலும், பதிலா கிடைக்கப் போகிறது?
viyasan
சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் முஸ்லீம் எதிர்ப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ளை ம‌ட்டும் த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ள் அட‌க்கி வாசிப்ப‌தேன்?

http://viyaas.blogspot.ca/
Nakulan
///நான் ஏதாவ‌து எழுதினால் கீற்று வெளியிடுமா இல்ல‌யா என்ப‌து தெரியாது,///

பாவம், கீற்றுக்கு மேலும் சந்தேகமா? பாகிஸ்தான் ஊடகங்களும் இவருக்கு ஏற்கனவே அலர்ஜி. சென்ற இந்தியாவில் பிறக்காமைக்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று வேறு விசத்தைக் கக்கினார். இதன்பிறகு, கீற்றில் வரும் கட்டுரைகளுக்கும் தூற்ற ஆரம்பிப்பார் போல. இதனால்தான் என்னவோ, இப்படிப்பட்டவர்களை மகிந்தா பூண்டோடு அழித்தார். இதை நான் ஆதரிக்கவில்லை. இவர்களின் பச்சோந்தித் தனத்தைச் சொல்கிறேன்.
Nakulan
///நான் எழுதாம‌ல் விட்டாலும், என்னைப் ப‌திலெழுத‌ச் செய்ய‌ வேண்டுமென்ப‌தற்காக‌, ஒரு த‌ர‌த்துக்குப் ப‌ல‌முறை ஒன்றையே எழுதும் ந‌குல‌ன் போன்ற‌வ‌ர்க‌ளுக்காக‌வே ஒருவ‌லைப்ப‌திவை உருவாக்கியுள்ளேன்.///

தெருவில் போகும் ***** வலைப்பதிவுகளை உருவாக்கி, அதன் சூடு ஆறு முன்னே மூடு விழா நடத்தியதுதான் மிச்சம். அந்த வகையில், இவரும் வலைப்பகுதியை ஆரம்பித்து, கிரகித்தல் பயிற்சி செய்கிறாரோ?
Nakulan
வியாசர் ஐயா,

உங்களது தனி மனிதத் தாக்குதலை மூட்டை கட்டி வைத்துவிட்டு, கசாபின் விடயத்திற்கு வாருங்கள். உங்களிடம் பதில் இல்லை என்றவுடன், ஏற்கனவே பின்னூட்டமிட்டவர்கள் அமைதியாகி விட்டனர். உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் அவர்களின் பின்னூட்டங்களையும் வாசித்து, பதில் எழுதப் பாருங்கள். அப்போது, அவர்களின் பதில் உங்களுக்கு திக்கு முக்காடச் செய்யும்.

நானும் உங்களிடம் கேட்டுப் பார்த்து அலுத்து விட்டேன். ஒரு வலைப் பதிவில் வந்து எழுதுமாறு வேண்டுகிறீர். உங்கள் நழுவல் போக்கு பட்டவர்த்தனமாக தெரிகிறது. நீங்களோ எதையும் கிரகிப்பதில் தேர்ச்சி பெற்றவராக காட்டிக் கொள்கிறீர்? வாசகர்கள் எழுதிய வினாக்களைக் கூட, கிரகிப்பதில் தடுமாறக் கூடியவராக இப்பொழுதுதான் காண்கிறேன்.
Nakulan
///அத‌னால் தான் ப‌ந்தியில் ப‌க்க‌த்து இலைக்கார‌னுக்குப் பாய‌ச‌ம் கேட்ட‌வ‌ன் மாதிரி, ம‌ற்ற‌வ‌ர்க‌ள் கேட்ட‌ வினாக்களுக்கு அவ‌ர்க‌ளுக்கு விடைய‌ளியுங்க‌ள் என்கிறார்.///

என் வாழ்க்கையில் நான் ஒருபோதும் உங்களைப்போல் இலையில் சாப்பிட்டதில்லை. பாயசமும் சாப்பிட்டதில்லை. நான் பீங்கானில்தான் பிறந்ததிலிருந்து சாப்பிடுகிறேன். நான் சாப்பிடுவது மாட்டிறைச்சி, மீன், கடலுணவு வகையறாக்கள். உங்களுக்கு விடையளிக்க திணறினால், இலையில் சாப்பிட ஏன் மனம் வருகிறது?
நிருபர்
இந்திய அரசை மொத்தமாக குத்தைகைக்கு எடுத்தது போல் வியாசன் அவர்களின் பதில் உள்ளது
Nakulan
///சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் முஸ்லீம் எதிர்ப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ளை ம‌ட்டும் த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ள் அட‌க்கி வாசிப்ப‌தேன்///

கேள்விகளைத் தாருங்கள், பதில் அளிக்கிறேன் என்று வீராப்புப் பேசினீர்களே. இன்னும் கேள்விகளை கிரகித்து முடியவில்லையா? வாங்கிக் கட்டுவீர்கள் என்று பயமா? நாகரிகமான முறையில், பண்பான முறையில், மதங்களை நுழைக்காமல் எழுத முடியவில்லை என்ற மனத்தாங்களில்தானா, கீற்று தான் எழுதுவதை ஏற்றுக்கொள்ளுமா என்று கேட்டீர்கள்?

சிங்களவர்களின் முஸ்லிம் எதிர்ப்பு, தமிழ்நாட்டு முஸ்லிம்களின் அடக்கி வாசிப்பு என்று புதிய தலையங்கம் கொடுத்து, மீண்டும் கசாபின் விடயத்தில் இருந்து தப்பித்து ஓடுகிறீர்கள். இதற்கு பின்னால் நான் பதில் அளிக்கிறேன்.

மீண்டும் சொல்கிறேன், வாசகர்கள் (நான் உள்பட) கேட்ட கேள்விகளில் ஒன்றின் பதிலை எடுத்துப் போடுங்கள். வலைப்பதிவை ஒன்றை நடத்தும் உங்களுக்கு, கிரகிப்பதில் சிரமம் இருக்காது. மிகவும் புண்ணியமாக இருக்கும்.

பதில் எழுதுகிறேன் என்ற பெயரில் மீண்டும் தனி மனித தாக்குதல் தொடர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
viyasan
//வாசகர்கள் (நான் உள்பட) கேட்ட கேள்விகளில் ஒன்றின் பதிலை எடுத்துப் போடுங்கள்.//
முக‌ம்ம‌து ந‌குல‌ன், உங்க‌ளைப் போன்ற‌ எத்த‌னையோ பேரின் வித‌ண்டாவாத‌ங்க‌ளை நான் பார்த்திருக்கிறேன். முத‌லில் என்னுடைய‌ ப‌தில்க‌ளைப் பார்த்துப் புரிந்து கொள்ள‌ முய‌ற்சியுமையா? ஒரு க‌ட்டுரையைப் ப‌டித்து கேள்வி கூட‌க் கேட்க‌த்தெரியாத‌ உம‌க்கு ப‌தில‌ளிப்ப‌தே வீண் வேலை. "பப்பாளி மரத்திற்கு ஏற்றிப் புகழ்ந்தீர்கள்" என்ற‌தைப் பார்த்த‌துமே நீங்க‌ள் ஒரு இல‌ங்கை முஸ்லீம் என்ப‌து என‌க்குத் தெரியும். அத‌னால் தான் உங்க‌ளுக்குப் பொறுமையுட‌ன் ப‌திலெழுதினேன் அல்ல‌து எப்பொழுதோ காணாத‌து போல் விட்டிருப்பேன்.த‌லையைச் சுற்றி மூக்கைத் தொடாம‌ல் எந்த‌க் கேள்விக்குப் ப‌தில் உங்க‌ளுக்குப் புரிய‌வில்லை அல்ல‌து எந்த‌க் கேள்விக்குப் ப‌தில் உங்க‌ளுக்குத் தேவை என்ப‌தை ம‌ட்டும் எழுத‌வும்.
Nakulan
வியாசர் ஐயா, மீண்டும் தனி மனிதத் தாக்குதல் வேண்டாம் என்று சொன்னேனே. அதைக் கூட நீங்கள் புரியவில்லை. ஒரு கட்டுரைக்கு பல பின்னூட்டங்களை இட்ட உங்களிடம் இங்கு வந்த வாசகர்கள் தொடர்ந்து கேள்விகளைக் கேட்ட வண்ணம் இருந்தனர். கேள்விகளுக்குப் பதிலாக வானரம்போல, வேறு விடயங்களுக்குத் தாவிப் பாய்வதுபோல இருக்கிறது உங்கள் எழுத்துக்கள். போதாததற்கு நான் சிலோன் முஸ்லிம் என்றும் இன்னும் ஏதோதோ சொல்கிறீர்கள். நான் யாரால் இருந்தால் உங்கலுக்கென்ன? பிறரை மட்டம் தட்டிக் கதைப்பதே உங்கள் வேலையாகப் போய்விட்டது. சரி அதை விடுவோம். அபூ அபராஹ் என்னும் சதோதரர், 18.12.2012 இல் 13 கேள்விகள் வரை கேட்டார். அதற்கான விடைகளை நீங்கள் சொல்லவில்லை. அவற்றை ஒவ்வொன்றாக சொல்லுங்கள். இவை பாகிஸ்தான் தளத்திலில் இருந்து எடுக்கப்பட்டவை என்று சிரிக்க வேண்டாம். அவைகளில் நீங்கள் 2,3 கேள்விகளை தொட்டதாக எனக்கு நினைவு. மீண்டும் பாயாசக் கதை சொல்லாமல் பதில் சொல்லுங்கள். பின் ஒவ்வொன்றாக நான் கேட்கிறேன். மீண்டும் சொல்கிறேன், நாகரிகமாக, பண்பாக, எந்த மதங்களையும் தாக்காமல்.
Nakulan
இவை எல்லாவற்றுக்கும் பதில் அளித்துவிட்டேன் என்று மட்டும் சொல்ல வேண்டாம். அப்படி சொல்வதாயின், எந்த இடத்தில் பதில் அளித்தீர்கள் என்றும் சொல்லுங்கள். ஏனெனில், எனக்கு கிரகிக்கும் அறிவு குறைவு என்று நீங்கள் புகழாரம் சூட்டி இருப்பதனால்.
viyasan
//அபூ அபராஹ் என்னும் சதோதரர், 18.12.2012 இல் 13 கேள்விகள் வரை கேட்டார். அதற்கான விடைகளை நீங்கள் சொல்லவில்லை. அவற்றை ஒவ்வொன்றாக சொல்லுங்கள்//

ந‌குல‌ன் அவ‌ர்க‌ளே,

ந‌ல்ல‌து! நான் இந்த‌ த‌லைப்பின் கீழ் தொட‌ர்ந்து எழுதுவ‌தை விரும்பாவிட்டாலும் கூட‌, என்ன‌வோ கார‌ண‌த்துக்காக‌, இந்தியாவில் பாகிஸ்தான் சார்ந்த‌ பய‌ங்க‌ர‌வாத‌ம் ச‌ம்ப‌ந்த‌மான‌ விவாத‌ம் முடிந்து போவ‌தை நீங்க‌ள் விரும்ப‌வில்லை. அத‌னால் தான் ப‌க்க‌த்து இலைக்குப் பாய‌ச‌ம் கேட்ட‌வ‌ன் மாதிரி ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்குப் ப‌திலைக் கொடு, ப‌திலைக் கொடு என்று என்னை ந‌ச்ச‌ரித்துக் கொண்டிருக்கிறீர்க‌ள். உங்களின் ரோத‌னை தாங்க‌ முடியாம‌ல், நீங்க‌ள் கேட்டுக் கொண்ட‌வாறே, ஒவ்வொரு கேள்வியாக‌ப் ப‌திலெழுத முடிவு செய்து முத‌ல் கேள்விக்கு என்னுடைய‌ ப‌திலை எனது வ‌லைப்ப‌திவில் ப‌திவு செய்துள்ளேன். ஏனைய‌ கேள்விக‌ளுக்கும் எனக்கு நேர‌ம் கிடைப்ப‌தைப் பொறுத்து ப‌தில‌ளிக்க‌ப்ப‌டும். விரும்பினால் ப‌டிக்க‌வும். :-)

http://viyaas.blogspot.ca/
Nakulan
//நான் இந்த‌ த‌லைப்பின் கீழ் தொட‌ர்ந்து எழுதுவ‌தை விரும்பாவிட்டாலும் கூட‌, என்ன‌வோ கார‌ண‌த்துக்காக‌, இந்தியாவில் பாகிஸ்தான் சார்ந்த‌ பய‌ங்க‌ர‌வாத‌ம் ச‌ம்ப‌ந்த‌மான‌ விவாத‌ம் முடிந்து போவ‌தை நீங்க‌ள் விரும்ப‌வில்லை.///

உங்களுக்கு பதில் எழுதத் தெரியாது, எழுதினாலும் இங்கே பின்னூட்டமிட்டவர்கள் உங்களை நோக்கி சரமாரியாக கேள்விக்கணைகளைத் தொடுப்பார்கள் என்ற அச்சத்தினாலா, இந்தத் தலைப்பின் கீழ் தொடர்ந்து எழுத விரும்பவில்லை என்று சொல்கிறீர்கள். இதன்பிறகு, நீங்கள் பதில் எழுதவே தேவை இல்லை. நீங்கள் சாப்பிடும் பருப்பு, பாயாசம் எல்லாம் எல்லாருக்கும் விளங்கி விட்டது. உங்கள் நழுவல் போக்கு சிறுபிள்ளைக்கும் தெரிந்தது.
Nakulan
///அத‌னால் தான் ப‌க்க‌த்து இலைக்குப் பாய‌ச‌ம் கேட்ட‌வ‌ன் மாதிரி ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்குப் ப‌திலைக் கொடு, ப‌திலைக் கொடு என்று என்னை ந‌ச்ச‌ரித்துக் கொண்டிருக்கிறீர்க‌ள்.///

பாயசக் கதை வேண்டாம் என்றாலும், அதே பல்லவியைத்தான் பாடுகிறீர்கள். உள்ளே ஒன்றும் இல்லை. இதன்பிறகாவது, முஸ்லிம்களைப் பற்றி விமர்சனம் செய்யக் கூடாது என்று நான் சொல்லவில்லை. அப்படி எழுதும்போது, நேர்மையுடனும் கண்ணியத்துடனும் பிற மத, இனங்களை பற்றி மனித நேயத்துடனும் எழுதப் பழகுங்கள். சிங்களவருக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் கனல் பறக்க கடந்த 30 வருடங்களாக எழுதித் தள்ளிய உங்கள் அடிவருடிகளின் சாயல் உங்களைத் தொட்டுவிட்டது. அந்த அடிவருடிகளுக்கு என்ன நடந்ததோ உங்களுக்கும் நடக்காது என்பது என்ன நிச்சயம்?
Nakulan
///ஒவ்வொரு கேள்வியாக‌ப் ப‌திலெழுத முடிவு செய்து முத‌ல் கேள்விக்கு என்னுடைய‌ ப‌திலை எனது வ‌லைப்ப‌திவில் ப‌திவு செய்துள்ளேன். ஏனைய‌ கேள்விக‌ளுக்கும் எனக்கு நேர‌ம் கிடைப்ப‌தைப் பொறுத்து ப‌தில‌ளிக்க‌ப்ப‌டும்.///

உங்களைப் பார்க்க சிரிப்புத்தான் வருகிறது. நாள்தோறும் எழுதிய உங்களுக்கு இனி நேரமே கிடைக்காதுதான். எந்தத் தளத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக காரி உமிழ்ந்தீர்களோ, அதே தளத்தில் உங்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை. பதிவும் இந்தத் தளத்தில், உங்களின் இஸ்லாமிய விரோதப் போக்கும் இந்தத் தளத்தில், உங்களை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகளும் இந்தத் தளத்தில் இருக்கும்போது, விடைகள் எங்கோ இருக்கிறது என்று சொல்ல உங்களுக்கு நாக்கூசாது. அன்று தமிழன் இலங்கையில் தமிழ் ஈழம் கேட்டான். இன்று தமிழ் ஈழம் கிடைத்துவிட்டது, நாடு கழன்ற நிலையில் எங்கேயோ? இதுபோலத்தான் தங்கள் பதிலும். Bye!
viyasan
"த‌மிழ்ம‌க்க‌ளுட‌ன் பேசினால் த‌ங்க‌ளுட‌னும் பேச‌வேண்டும். த‌மிழ்ம‌க்க‌ளுக்கென‌ தீர்வு ஒன்று வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டால் த‌ம‌க்கும் தீர்வு வேண்டும். த‌மிழ்ம‌க்க‌ளுக்கு உல‌க‌நாடுக‌ள் உத‌வி செய்தால் அதில் த‌ங்க‌ளுக்கும் ப‌ங்கு வேண்டும் என்று வெட்க‌மில்லாம‌ல் கையேந்துகின்ற‌ இல‌ங்கை முஸ்லீம் த‌லைமைக‌ள் த‌மிழ் ம‌க்க‌ளுட‌ன் இணைந்து விடுத‌லைக்காக‌ப் போராடியிருந்தால் அவ‌ர்க‌ளின் கோரிக்கைக‌ள் நியாய‌மான‌தாக‌ இருந்திருக்கும். அதொன்றையும் செய்யாம‌ல் இன்று த‌மிழ் ம‌க்க‌ளுடைய‌ உத‌விக‌ளில் ப‌ங்கு கேட்ப‌து எந்த‌ வ‌கையில் நியாய‌மென்ப‌தை முஸ்லீம் த‌லைமை உண‌ராமலிருப்ப‌து ஏற்றுக் கொள்ள‌த்த‌க்க‌த‌ல்ல‌."

http://viyaas.blogspot.ca/
அபூ அஃப்ரஹ்
ஆர்.எஸ்.எஸ். போன்ற பிராமணீய இயக்கங்கள் தங்களுடைய ஆயிரக்கணக்கான கிளைகளின் மூலம் வெளிப்படையாக விஷம் கக்கிக் கொண்டிருக்கும் போது ஐ.பி. என்ற மத்திய உளவுத்துறை போன்ற நாட்டின் தலைமை உளவு நிறுவனங்கள் இத்தகைய பிராமணீய நிறுவனங்களின் சட்ட விரோத வகுப்புவாத செயல்களைப் பற்றி தகவல் தராமல் அரசாங்கத்தை இருட்டில் வைத்திருப்பதேன்? இந்நாட்டை கடந்த 60 ஆண்டுகளாக வகுப்புவாத கலவரங்கள் கிழித்துப் போட்டிருக்கும் நிலையில் ஏன் ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை உரிய நேரத்தில் உண்மையான தகவல்களையும், அதன் நேர்மையான அறிவுரைகளையும் அரசாங்கத்திற்கு தரவில்லை? ஏன் அந்த கலவரங்களைக் கட்டுப்படுத்தவில்லை? 4 மிக முக்கியமானவர்களுக்கும் (வி.ஐ.பி), முக்கிய கட்டிடங்களுக்கும் மற்றும் மத தலங்களுக்கும் முஸ்லிம் தீவிரவாத இயக்கங்களின் மூலம் ஆபத்து என்ற பொய்யான தகவல்களை உளவு என்ற பெயரில் ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை ஏன் (இந்த 21-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து) செய்ய ஆரம்பித்தது? 5. பிராமணீய தீவிரவாத இயக்கங்களின் ஆயத்தங்கள், அதாவது தங்களுடைய தொண்டர்களுக்கு கொடுக்கக்கூடிய தீவிரவாத பயிற்சிகளை, ஆயுதங்களை யுத்த தளவாடங்களை, வெடி மருந்துகளைச் சேகரிப்பது, வெடிகுண்டுகளைத் தயாரிப்பது, மிக முக்கியமாக குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியது போன்றவற்றை ஏன் ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை அரசாங்கத்திற்கு தெரிவிக்கவில்லை? வெடிகுண்டுகள் வெடித்தவுடன் முஸ்லிம்கள் தான் இவற்றை செய்தார்கள் என உளவுத்துறையால் பல முஸ்லிம்கள் கைது செய்யப்பாட்டனர். இவற்றை கர்கரே கண்டுபிடிக்கும் வரை மத்திய உளவுத்துறைக்கு ஏன் உண்மை தெரியவில்லை? அல்லது தெரிந்தும் கண்டும் காணாமல் இருந்ததன் காரணம் என்ன? அல்லது மத்திய உளவுத்துறைக்கு போதுமான திறன் இல்லையா ? அப்படி திறன் இல்லையெனில் இந்த உளவுத்துறை நமக்கு எதற்கு ? 6. ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை அநிபிவ் பாரத்தைப் பற்றியும் ‘இந்து ராஜ்யத்தினை’ ஏற்படுத்தும் அதன் திட்டத்தைப் பற்றியும் அரசாங்கத்திற்கு தெரிவிக்காமல் அரசாங்கத்தை இருளிலேயே ஏன் வைத்தது? 7. ஐ.பி என்ற மத்திய உளவுத்துறைஇன் தலையாய கடமை உளவுத் தகவல்களைச் சேகரிப்பதாக இருந்தும் அதைச் செய்யாமல் ஏன் அது அனைத்து குண்டு வெடிப்புகளிலும் தேவைஇல்லாமல் தன்னிச்சையாக தலையிட்டுக் கொண்டிருக்கிறது? 8. முக்கியமாக ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை மும்பை தீவிரவாதத் தாக்குதலை பற்றிய தகவலை ஏன் மறைத்தது? அதை ஏன் மும்பை காவல் துறையுடனும், மேற்கு கடற்படையிடமும் பகிர்ந்துக் கொள்ளவில்லை? 9. ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை 26/11 தீஜீரவாதத் தாக்குதலில் உபயோகப்படுத்தப்பட்ட 35 சந்தேகத்திற்குரிய கைப்பேசிகளை பற்றிய தகவல்கள் தாக்குதல் நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பே கிடைத்தும் அவற்றை ஏன் தங்களின் கண்காப்பில் வைக்கவில்லை? 10 ஏ.டி.எஸ்ந் தலைவர் ஹேமந்த் கர்கரே மறைந்த சில மணி நேரங்களிலேயே மிகுந்த சர்ச்சைக்குரிய வகுப்புவாத சிந்தனை கொண்ட ரகுவான்சியை ஏன் ஏ.டி.எஸ் என்ற மும்பை தீவிரவாத தடுப்புப்படையின் தலைவராக நியமிக்க வேண்டும்? 11. மும்பை தாக்குதல் வழக்கின் விசாரணையை ஆரம்பத்தில் இருந்தே ஐ.பி ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் இந்த விசாரணைழீல் அமெரிக்க நிறுவனமான சி.ஐ.ஏ வின் விசாரணையை அனுமதித்ததன் மூலம் நம் நாட்டின் உள்நாட்டு ஜீவகாரத்தில் தலையிட அமெரிக்காவை ஏன் அனுமதித்தது?
நான் முன்னரே கேட்டிருந்த இந்த கேள்விகளுக்கும் வியாசர் பொறுமையாக வியாசருக்கு எப்பொழுது முடிகிறதோ அப்பொழுது பதில் அளிக்கட்டும். அது என்ன கீற்றில் கேள்வி கேட்டால் உங்கள் பிளாகில் பதில் சொல்வது. என்ன உங்கள் பிளாகை முன்னேற்ற கையாளும் திட்டமா? உங்க மண்ணாங்கட்டி இணையத்திற்கு வந்து நாங்கள் பதில் பெற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மேலும் கீற்றின் பிரபலத்தை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைக்கும் உங்கள் தந்திரத்திற்கு யாரும் ஆளாகமாட்டார்கள்.
R.Puratchimani
நேபாளத்தில் கசாப் கைது செய்யப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் நேபாளிய அரசாங்கம் அதை மறுத்துள்ளது.ஆதாரம் கீழே.....
http://www.sify.com/news/nepal-denies-arrest-of-ajmal-kasab-in-2005-news-international-jeguOXfaegj.html

எப்படி மூளை சலவை செய்யமுடியுமோ அப்படி செய்கிறார்கள்...என்றுதான் இவர்கள் திருந்துகிறார்களோ அன்றுதான் முஸ்லிம்களுக்கு விடிவுகாலம்.
ஆறுமுகம்
விசாரணையின் போது எதுவும் வெளியிடப்படாமல் இப்போது சந்தேகத்தை கிளப்புவதும் முஸ்லிம் என்பதற்க்காக கசாப்பை துாக்கில் போட்டதாக கூறுவது இந்திய அரசுக்கு எதிராக இஸ்லாமியர்களை திருப்பும் சதி. இது உண்மையாக இருந்தால் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானவர்களை இந்த மாதிரிதான் துாக்கிலிட்டுருக்க வேண்டும். கர்கரேயை வைத்துக் கொண்டு கசாப்பையும் பாகிஸ்தானையும் காப்பாற்ற நினைத்ததால் ஏற்பட்ட தோல்வியின் பாதிப்பே கட்டுரையில் உள்ளது. சட்டம் நிறைவேற்றுவதை ரகசியமாக வைக்க கூடாது என்பதே எமது நிலைப்பாடு. இஸ்லாமிய நாடாக இருந்திருந்தால் தண்டனை காட்டுமிராண்டி தனமாக நிறைவேற்றப்பட்டிருக்கும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.