அன்பின் வடிவாய் பொன்நிகர் மனமாய் -
தண்தமிழ் உயிராய் பண்பே வாழ்வாய்
புதுமையே வழியாய்ச் சதுரப் பாடும்
விச்சையும் வல்ல பச்சை யப்பன்
புலமைக் கொருவன்! புதுநெறி களுக்கே
தலைமை ஏற்கும் தறுக ணாளன்!
நமது மொழியை நமது வழியை
நமது நாட்டை நமதுபண் பாட்டை
எதிர்க்கும் பகையை எரிக்கும் கதிர்இவன்!
கல்வியை மாணவர் வெல்லமாய்க் கொள்ள
ஆசுகள் நீக்கி அளித்தஆசிரியன்!
சொற்பெருக் காற்றலில் முற்பட நிற்பவன்!
அன்பு வெள்ளத் தெம்மை ஆழ்த்திய
நண்பன்! நிகரில் ஒண்மை யாளன்!
பண்டு முதலிவன் தொண்டே வாழ்வாய்
நிற்பது கண்டோம்! விற்பன னாமிவன்
வல்லாளன்எனப் பல்லாண் டிருந்து
தமிழ்நலம் காத்தே அமுத வாழ்வில்
“இன்றென இருத்தி” என்றே வாழ்த்தினம்!
வாழ்கபல் லாண்டு! வாழ்க!
சூழ்புவி எங்கும் தூய தமிழே!
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
சிந்தனையாளன் - நவம்பர் 2010
- விவரங்கள்
- மணி சித்தன்
- பிரிவு: சிந்தனையாளன் - நவம்பர் 2010