பாவம்! நம்முடைய பார்ப்பன ஆதிக்க இந்திய அரசு பார்ப்பன ஆதிக்கத்தைத்தான் தூக்கிப் பிடிப்போம் என்றும், சூத்திரர்கள் படும் துன்பங்களைப் பற்றி எள் முனையளவும் கவலைப்பட மாட்டோம் என்றும் எவ்வளவு தெளிவாகச் சொன்னாலும், இந்த சூத்திரர்கள் பார்ப்பன ஆதிக்க இந்திய அரசையே நம்பி இருப்போம் என்ற அடம்பிடித்தால், பாவம், பார்ப்பனர்கள் இதற்கு மேல் என்னதான் செய்ய முடியும்? அதுவும் சூத்திர மக்களின் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்கிற வர்களும் பார்ப்பனர்களுடன் சேர்ந்து ஒத்து ஊதினால்....?

இந்தப் பீடிகை எதற்கு? செய்தி என்ன? என்று கேட்கிறீர்கள்? ஒன்றுமில்லை. இரஷ்யாவில் உள்ள சைபீரியா பகுதியில் உள்ள ஒரு நீதிமன்றம் பகவத் கீதை நூலைத் தடை செய்யப் போவதாகக் கேள்விப் பட்டு, 19.12.2011 அன்று இந்திய நாடாளுமன்றமே அமளி துமளி பட்டுப் போனது. இந்த அமளி துமளியில் கட்சி எல்லைகளைக் கடந்து காங்கிரஸ், பா.ஜ.க., லல்லுபிரசாத் யாதவின் ராஷ்ட்டிரிய ஜனதாதளம், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, மாயா வதியின் பகுஜன் சமாஜ் கட்சி, மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், உலகில் பெரிய பிரளயம் ஏற்பட்டு விட்டதைப் போன்ற அவசர கோலத் தில் இதற்கு எதிராக இந்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துள்ளிக் குதித்தனர். மறு நாளே (20.12.2011 அன்று) இந்திய அரசு இரஷ்ய அரசிடம் சைபீரிய நீதிமன்றத்தின் இந்நடவடிக்கையைப் பற்றித்தனது தீவிரமான எதிர்ப்பைத் தெரிவித்தது.

இந்த எதிர்ப்புப் பற்றிய விவரத்தைத் தெரிந்து கொண்ட சைபீரிய நீதிமன்றம் தனது தடை உத்தரவை முழுமையாகப் பார்க்கும்படியும், பகவத் கீதையையோ, அதன் மொழி பெயர்ப்பையோ தடைசெய்யவில்லை என்றும், அதற்கு உரை எழுதியவர்கள், மாற்றுக் கருத் தினரை அவமதிப்பாக எழுதியுள்ள விளக்க உரைகளை மட்டுமே தடை செய்து இருப்பதாகவும் 23.12.2011 அன்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளது.

சரியான விளக்கங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டே இருந்தால் இறுதியில் பார்ப்பன ஆதிக்கப் பிடிப்பு தளர்வதில் கொண்டு போய் விட்டுவிடும் என்பதை அறியாதவர்களா பார்ப்பனர்கள்? சைபீரிய நீதிமன்றத்தின் விளக்கத்தைச் சிறிதும் பொருட்படுத்தாத இந்தியப் பார்ப்பன அரசு 27.12.2011 அன்று சைபீரிய நீதி மன்றத்தின் நடவடிக்கை இந்திய மக்களின் உணர்வு களைப் புண்படுத்துவதாகவும், இதற்கு முறையான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இரஷ்ய அரசிடம் உறுதியாகத் தெரிவித்தது.

இதன் தொடர் விளைவாக 28.12.2011 அன்று சைபீரிய நீதிமன்றம், பகவத் கீதையின் மீதல்ல; அதன் மொழிபெயர்ப்பின் மீதுமல்ல; அதற்கு எழுதப்பட்ட மாற்றுக் கருத்தினரின் மீது வன்முறையை ஏவிவிடும் விளக்க உரைக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. மாற்றுக் கருத்தினர் மீதான வன்முறைக்கு எதிரான வழக்கில் வெற்றி கண்ட பெருமிதத்தில் இந்திய அரசு 29.12.2011 அன்று தனது முழு மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டது.

தங்களை நாத்திகர்கள் என்ற பிரகடனம் செய்து கொண்டவர்கள் இந்திய அரசின் இந்த அடாவடிச் செயலைக் கண்டிப்பதற்குப் பதிலாக, பகவத் கீதை மக்கள் விரோதக் கருத்தைக் கொண்டுள்ளது என்று ஏற்கெனவே தாங்கள் கூறியுள்ள கருத்துகளையே மீண்டும் மறுபதிப்பு செய்துள்ளார்கள். சைபீரிய நீதி மன்றம் பகவத் கீதை மீதும், அதன் மொழிபெயர்ப்பின் மீதும் தடைவிதிக்கவில்லை என்றும் ‘ஹரே கிருஷ்ணா’ அமைப்பின் நிறுவனர் எழுதிய வன்முறையைத் தூண்டும் விளக்க உரைக்குத் தான் தடை விதித்துள்ளதையும் சுட்டிக்காட்டி, வன்முறையைத் தூண்டும் ஒரு தனி நபரின் விளக்க உரைக்கு அரசு வக்காலத்து வாங்கு வதைச் சுட்டிக்காட்டி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத் தத் தவறிவிட்டனர்.

இது ஒருபுறம் இருக்க, நமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், அவர்கள் ஒவ் வொரு நாளும் செத்துப் பிழைப்பதும், ஐம்புலன்களும் அவிந்துபோன ஒரு சதைப் பிண்டத்தினால் கூட அறிந்து கொள்ள முடியக் கூடிய அளவிற்கு, ஒரு கெட்டியான உண்மையாக இருக்கிறது. ஆனால் நமது இந்திய அரசினால் அதை நம்ப முடியவில்லையாம். தமிழக மீனவர்களுக்கு இந்தியக் கடற்படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றிற்கு 6.1.2012 அன்று பதிலளித்த இந்திய அரசு, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுத் தான் உள்ளதாகவும், இதை மெய்ப்பிப்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது. மேலும் அப்படி ஏதாவது தாக்குதல் நடந்து இருந்தால் அது இலங்கைக் கடல் பகுதியில்தான் என்றும், ஆகவே இதில் இந்திய அரசு தiயிடும் படியான காரணம் எதுவும் இல்லை என்றும் இந்திய அரசு கூறியுள்ளது. இதுமட்டுமல் லாமல் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடலுக்குள் செல்வதும் சிங்கள மீனவர்கள் தமிழகக் கடற்பகுதிக்குள் வருவதும் தான் மோதலுக்குக் காரணம் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளது.

மக்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பகவத் கீதைக்கு ஒரு தனிமனிதர் எழுதிய வன்முறை நோக்கங் கொண்ட விளக்க உரைக்கு வெகு தொலைவிலுள்ள அயல்நாட்டைச் சேர்த்த ஒரு நீதிமன்றம் தடைவிதித்ததினால் யாரும் எவ்விதப் பாதிப்பும் அடைய வில்லை. ஆனால் ஏதோ பிரளயமே ஏற்பட்டுவிட்டது போல் இந்திய அரசு துள்ளிக் குதிக்கிறது. பகவத் கீதைக்கு எத்தனையோ பேர்கள் விளக்க உரை எழுதி இருக்கிறார்கள். அவற்றில் ‘ஹரே கிருஷ்ணா’ இயக்க நிறுவனரின் உரைக்குத் தான் தடைவிதிக்கப்பட்டது. தேவைப்பட்டால் அவ்வுரைக்கு மாற்று உரை எழுதி, தடையை நீக்க மனு செய்யும்படி அவ்வியக்கத்தி னருக்கு இந்திய அரசு அறிவுறுத்தி இருக்கலாம். அதை விட்டுவிட்டு அரசு உறவிலேயே விரிசல் ஏற்பட்டு விடும்படியான அளவில் வெகுண்டு எழுந்தது.

ஆனால் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் விவகாரத்தில், இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டுவதைப் பற்றிக் குறிப்பிட்டு, அதனால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறிவிட்டு, தாக்கப்படுவதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று இந்திய அரசு கூசாமல் கூறுகிறது. சிங்கள மீனவர்கள் எல்லை தாண்டினாலும் பாதுகாப்பாகத் திரும்பி செல்வது போல, தமிழக மீனவர்களும் எல்லை தாண்டினாலும் பாதுகாப்பாகத் திரும்ப வேண்டிய ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் என்று இந்திய அரசு இம்மியளவும் அக்கறை கொள்ளவில்லை.

இந்த இரு நிகழ்வுகளிலும், பார்ப்பன இந்திய அரசை மக்கள் பிரதிநிதிகள் யாரும் கண்டிக்கவில்லை. முக்கியமாக ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு பதவிச் சுகம் அனுபவிக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் பார்ப்பன இந்திய அரசுடன் இணைந்து கூத்தடித்துக் கொண்டு இருக்கின்றன.

பார்ப்பனர்கள்தான் என்ன செய்வார்கள்? உழைக்கும் மக்கள் எவ்வளவு துன்பங்களுக்கு உட்பட்டாலும் அதைப்பற்றி அக்கறை கொள்ளமாட்டோம் என்றும், பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக ஏதாவது நடந்து விடுமோ என்று இம்மியளவு சந்தேகம் வந்தாலும், அதை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்போம் என்றும் தெளிவாகத் தெரிவிக்கவே செய்கின்றனர். நாம் அச்சத்தினாலோ, எச்சில் பொறுக்கும் ஆசையினாலோ, அல்லது மௌடீகத்தினாலேயோ இதைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் பாவம் பார்ப்பனர்கள் என்னதான் செய்வார்கள்?

Comments

21 comments

21
பியாரிலால்
நாத்திகர்கள் இயந்திரத்தனமாக பிரச்சினைகளை அணுகக் கூடாது என்ற கருத்து ஊன்றிக் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
ஆறுமுகம்
தடைவிதிக்கப்பட்ட பின் விலக்கவில்லை, தடை கோரியே வழக்கு தொடுக்கப்பட்டது. பகவத்கீதை பார்பனர்களுடையது என்பதற்க்கு என்ன ஆதாரம். திருவள்ளுவர் கூட பூனூல் அணிந்துள்ளாரே அவரும் பார்பனரா? அப்படியானால் திருக்குறள் பார்பனர் நூலா? ”பகவத் கீதையையோ, அதன் மொழி பெயர்ப்பையோ தடைசெய்யவில்லை என்றும், அதற்கு உரை எழுதியவர்கள், மாற்றுக் கருத் தினரை அவமதிப்பாக எழுதியுள்ள விளக்க உரைகளை மட்டுமே தடை செய்து இருப்பதாகவும் 23.12.2011 அன்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளது” - மாற்று கருத்தினரை எவ்வாறு அவமதிப்பாக எழுதபட்டுள்ளது என்று யாரும் குறிப்பிடவில்லை ஏன? எது மாற்று கருத்து? அது உண்மையிலேயே மாற்று கருத்தா அல்லது ஏமாற்று கருத்தா என்பதை அறிய தந்தால தானே சரி. ”அதற்கு எழுதப்பட்ட மாற்றுக் கருத்தினரின் மீது வன்முறையை ஏவிவிடும் விளக்க உரைக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது” எவ்வாறு கட்டுரையாளர் வன்முறையை ஏவிவிடுவதாக முடிவுக்கு வந்தார்? தங்களை நாத்திகர்கள் .... ”பகவத் கீதை” மக்கள் விரோதக் கருத்தைக் கொண்டுள்ளது என்று ஏற்கெனவே தாங்கள் கூறியுள்ள கருத்துகளையே மீண்டும் மறுபதிப்பு செய்துள்ளார்கள். ...வன்முறையைத் தூண்டும் ஒரு தனி நபரின் விளக்க உரைக்கு” - தனிநபர் உரை குறித்து கவலை கொள்வாதாயின் பகவத் கீதை மக்கள் விரோத கருத்தை கொண்டுள்ளதாக எவ்வாறு கூறமுடிகிறது. மக்கள் என்றால் எங்குள்ள மக்கள்? ”பகவத் கீதைக்கு ஒரு தனிமனிதர் எழுதிய வன்முறை நோக்கங் கொண்ட விளக்க உரைக்கு” - தொடர்ந்து எவ்வாறு ஆதரமின்றி வன்முறை நோக்கம் கொண்டதாக கூறமுடிகிறது? ”தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் விவகாரத்தில் ... அக்கறை கொள்ளவில்லை” - கீதை உரைக்கு இருந்த ஆதரவு தமிழக அரசியல் கட்சிகளிடம் இல்லையே அதற்க்கு யார் காரணம் பார்பனர்களா? நாம் அங்கீகரம் அளித்து வைத்துள்ள அரசியல் கட்சிகள் தனிபட்ட நலனுக்காக தமிழன் நலனை புறந்தள்ளியது தானே காரணம்? ஏன் இத்தாலி கப்பலை மடக்க முடிநதவர்களுக்கு சிங்கள படகை பிடிக்க முடியவில்லை. சிவப்பு நிறத்தில் உள்ளவர்களை கண்டு அவர்களை உயர்வாக என்னி ஏமாந்தது யார்? அல்லது தமிழல் அடுக்கு மொழியில் பேசுவதை கண்டு அடிமையாக இருக்க அவர்கள் உலகபெரும் பணக்காரர்களாக மாற்றியது யார்? அவர்கள் நெற்றிவேர்வை நிலத்தில் சிந்தி பாடுபட்டா தொழில் அதிபர்களாக மாறினர். அப்படியானால் ஏன் கல்உடைப்பவனும் செங்கள் சுமப்பவனும் நிலத்தில் பாடுவடுபவனும் முன்னேற முடியவில்லை? அவனுக்கு தேவை சில இலவசம் ... போதை ...
இராமியா
தங்களுடைய திருத்தம் சரி தான். தடை விதிக்கக் கோரிய வழக்கு தான் தள்ளுபடி செய்யப்பட்டது. சைபீரியாவில் உள்ள ஒரு கிருத்தவ அமைப்பு தான் ஹரே கிருஷ்ணா அமைப்பின் நிறுவனர் எழுதிய உரை மாற்றுக் கருத்தினர் மீது வன்முறையைத் தூண்டுவதாக உள்ளது என்று கூறி வழக்கு தொடுத்தது. அதைப் பற்றிய முழு விவரம் தெரிவிக்கப்படவில்லை. உரையாசிரியரின் விளக்கம் வன்முறையைத் தூண்டுவதாக உள்ளதாக வழக்கு தொடுத்த அமைப்பு தான் கூறி உள்ளதே தவிர நான் கூறவில்லை. வழக்கு அப்படி இருக்கையில் இந்திய அரசு தலையிடுவது தவறு என்பது தான் என்னுடைய நிலைப்பாடு. பகவத் கீதை மக்கள் விரோதக் கருத்தைக் கொண்டுள்ளதா இல்லையா என்பது இக்கட்டுரையின் மையப் பொருள் அல்ல. நண்பரே! இந்திய சமூக, பொருளாதார, அரசியல் வாய்ப்புகளில் 90%க்கும் மேலாக ஆக்கிரமித்து இருக்கும் பாரப்பனர்கள் அல்லாமல் மற்றவர்களா இந்நாட்டில் நடக்கும் கொடுமைகளுக்குக் காரணமாக அமைகின்றனர்? இங்குள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புத் தலைவர்கள் பார்ப்பனர்களிடம் சோரம் போனதையும் போவதையும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். இது நம்முடைய குறைபாடு. இதை நிவர்த்தி செய்து கொள்வது நமது கடமை. நாம் சரியான நபர்களைப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்காமல் தவறு செய்து உள்ளோம்; செய்து கொண்டும் இருக்கிறோம். நாம் தவறு செய்வதால் பார்ப்பன ஆதிக்கம் சரி என்று ஆகி விடாது. நாம் நமது தவறுகளைத் திருத்திக் கொள்ளும் வழிகளைத் தேட வேண்டுமே ஒழிய நம்மிடையே குறைபாடுகள் இருப்பதால் பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டு அடிமைகளாக இருப்போம் என்பது சரி அல்ல.
ஆறுமுகம்
”வழக்கு அப்படி இருக்கையில் இந்திய அரசு தலையிடுவது தவறு என்பது தான் என்னுடைய நிலைப்பாடு” - சீக்கியர்கள் தலைப்பகை அணியக்கூடாது என்று ஒரு அரசே நடைமுறைப்படுத்தியபோது அதில் எவ்வாறு தலையிட்டது.? ”நண்பரே! இந்திய சமூக, பொருளாதார, அரசியல் வாய்ப்புகளில் 90%க்கும் மேலாக ஆக்கிரமித்து இருக்கும் பாரப்பனர்கள் அல்லாமல் மற்றவர்களா இந்நாட்டில் நடக்கும் கொடுமைகளுக்குக் காரணமாக அமைகின்றனர்?” - வெள்ளையர்கள் ஆட்சி காலம் முதல் கல்வியில் பார்பனர்கள் விழிப்புடன் இருந்தனர். அதனால் அரசியல் மற்றும் பொருளாதார வகையில் பலன் அடைந்தனர். அந்த வெள்ளையர்கள் கல்விநிலையங்கள் கட்டியிருக்காவிட்டால் பார்பனர் அல்லாதவர்களுக்கு கல்வி கிடைத்திருக்காது. அதுவரை கல்வி ஆட்சியாளர்களுக்கே (மன்னர் ...) உரியதாக இருந்தது. எனவே 90 சதம் அவர்கள் இருக்க காரணம் பல நூறு ஆண்டுகளாக கல்வியில் விழிப்புனர்வு கொண்டதாலேயே பார்பனர்கள் அடைந்தனர். மற்றவர்களிடம் விழி்ப்புனர்வே இல்லை அதை பெரியார் காமராசர் போன்ற ஒரு சில தலைவர்களே உணர்ந்தனர் தீர்வுகளை தந்தனர். ”இது நம்முடைய குறைபாடு ” குறைகள் நம்மிடம் உள்ளதை அறிந்து அதை களைந்தாலே தவறு நேர்செய்யப்படும் அதை விடுத்து பார்பனரை தொடர்ந்து வசைபாடி பலன் அடைய முடியாது. ”நாம் தவறு செய்வதால் பார்ப்பன ஆதிக்கம் சரி என்று ஆகி விடாது.” -நாம் செய்யும் தவறுகளே மற்றொருவர் ஆதிக்கம் செலுத்த வழிகோலுகிறது. ”நாம் நமது தவறுகளைத் திருத்திக் கொள்ளும் வழிகளைத் தேட வேண்டுமே ஒழிய ” ஏற்கத்தக்கது அதற்க்கு ஒரே தீர்வு கல்வியில் விழிப்புனர்வே. வேலைவாய்ப்புள்ள கல்வியை தொடக்கத்திலேயே அறிந்து செயல்படுவதே சிறந்தது மாறாக கற்றதக்கு வேலை தேடி அது இல்லை அதனால் இடஒதுக்கீட்டு பங்கு இல்லை என்று வாதிடுவது ஏற்புடையதல்ல. ”நம்மிடையே குறைபாடுகள் இருப்பதால் பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டு அடிமைகளாக இருப்போம் என்பது சரி அல்ல.” - மானிடம் மட்டுமே உயர்வானதாக கருத்தப்படும் காலத்தில் யாருடைய ஆதிக்கத்தையும் ஏற்று அடிமையாக இருக்க வேண்டும் என்று யாரும் வற்புறுத்த முடியாது. ஆனால் ”நம்மிடையே குறைபாடுகள் இருப்பதால்” அடிமையாக நாம் இருக்க நாமும் காரணமே (அதற்க்கு தீர்வும் மேலேயே உள்ளது). இருப்பினும் பின்னூட்டங்களுக்கு உரிய பொறுமையோடு, ஏற்கதக்கதோ இலலையோ, தொடர்ந்து பதில் வழங்கும் செயல் பாராட்ட தக்கது. கட்டுரையில் தவறுகளும் பிழைகளும் இருப்பதில் குற்றமில்லை. பொருள் குறித்து வாதங்கள் முடிவுக்கு வரும் போது அது நடுநிலையானதாக இருக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு! முயற்சிகளுக்கு பாராட்டகள்!!
இராமியா
//சீக்கியர்கள் தலைப்பகை அணியக்கூடாது என்று ஒரு அரசே நடைமுறைப் படுத்திய போது அதில் எவ்வாறு தலையிட்டது.?// சீக்கியர்களைப் பற்றிய பிரச்சினையில் இந்திய அரசு எவ்விதமான அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. தன் நாட்டு மக்களின் பழக்க வழக்கம் பற்றி விளக்கம் அளித்து அதைக் கவனத்தில் கொள்ளும் படி தான் கேட்டுக் கொண்டது. //வெள்ளையர்கள் ஆட்சி காலம் முதல் கல்வியில் பார்பனர்கள் விழிப்புடன் இருந்தனர். அதனால் அரசியல் மற்றும் பொருளாதார வகையில் பலன் அடைந்தனர். அந்த வெள்ளையர்கள் கல்விநிலையங்கள் கட்டியிருக்காவிட்டால் பார்பனர் அல்லாதவர்களுக்கு கல்வி கிடைத்திருக்காது. அதுவரை கல்வி ஆட்சியாளர்களுக்கே (மன்னர் ...) உரியதாக இருந்தது. எனவே 90 சதம் அவர்கள் இருக்க காரணம் பல நூறு ஆண்டுகளாக கல்வியில் விழிப்புனர்வு கொண்டதாலேயே பார்பனர்கள் அடைந்தனர். மற்றவர்களிடம் விழி்ப்புனர்வே இல்லை அதை பெரியார் காமராசர் போன்ற ஒரு சில தலைவர்களே உணர்ந்தனர் தீர்வுகளை தந்தனர்// 'விழிப்புடன்' என்ற சொல்லக்குத் தங்களுடைய அர்த்தம் என்ன? தங்கள் கையில் உள்ள அரசதிகாரத்தை வைத்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் தாங்கள் அடைய வேண்டிய வாய்ப்புகளை அடைய விடாமல் தடுத்தனர் என்று தங்களுக்குப் படவில்லையா? இம்மாதிரியான கொடுஞ் செயல்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஒடுக்கப்பட்ட மக்கள் ஒற்றுமையாக இருந்து பார்ப்பனர்களை எதிர்ப்பதன் மூலமா? அல்லது ஒடுக்கப்பட்ட தங்களுக்குள் சண்டை போட்டக்‌ கொண்டா? //-நாம் செய்யும் தவறுகளே மற்றொருவர் ஆதிக்கம் செலுத்த வழிகோலுகிறது. ”நாம் நமது தவறுகளைத் திருத்திக் கொள்ளும் வழிகளைத் தேட வேண்டுமே ஒழிய ” ஏற்கத்தக்கது அதற்க்கு ஒரே தீர்வு கல்வியில் விழிப்புனர்வே. வேலைவாய்ப்புள்ள கல்வியை தொடக்கத்திலேயே அறிந்து செயல்படுவதே சிறந்தது மாறாக கற்றதக்கு வேலை தேடி அது இல்லை அதனால் இடஒதுக்கீட்டு பங்கு இல்லை என்று வாதிடுவது ஏற்புடையதல்ல// நாம் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள்? நம் மக்கள் கல்விலும் திறமையிலும் எந்த விதத்திலும் பார்ப்னர்களுக்குக் குறைவானவர்கள் அல்ல. ஆனால் அவர்களுக்கு முழுமையாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. வாய்ப்பு கிடைத்த மிகப் பல இடங்களில் அவர்கள் பார்ப்பனர்களை விடத் திறமைசாலிகள் என்று மெய்ப்பிக்கவே செய்துள்ளர். ஆனால் இந்த அனுபவங்களைக் கணக்கில் கொண்ட பார்ப்பனர்கள் நம் முன்னேற்றப் பாதையில் மேலும் மேலும் முட்டுக்கட்டைகளைப் போடகின்றரே ஒழிய, திறமைசாலிகள் முன்னணிக்கு வருவது நாட்டிற்கு நல்லது என்று நினைப்பதே இல்லை. பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களை அரவணைத்து உயர்நிலைகளில் வைத்துக் கொள்கின்றனரே தவிர ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்குப் பயிற்சி அளிப்பதே இல்லை. அது மட்டுமல்ல; ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் உள்ள திறமைசாலிகளையும் திறமைக் குறைவானவர்கள் என்று தவறான சித்திரத்தைக் காட்டுகின்றனர். //மானிடம் மட்டுமே உயர்வானதாக கருத்தப்படும் காலத்தில் யாருடைய ஆதிக்கத்தையும் ஏற்று அடிமையாக இருக்க வேண்டும் என்று யாரும் வற்புறுத்த முடியாது. ஆனால் ”நம்மிடையே குறைபாடுகள் இருப்பதால்” அடிமையாக நாம் இருக்க நாமும் காரணமே // நம்முடைய குறைபாடுகள் என்பது நம்முடைய புரிதலில் உள்ளது. வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் திறமைசாலிகள் என்று ஒடுக்கப்பட்ட மக்கள் மெய்ப்பித்து இருக்கும் போது வாய்ப்புகள் பெருகிப் பெருகி வராமல் தடுக்கும் சக்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். பார்ப்பனர்கள் தங்களுடைய சுய நலன்களுக்காக தங்களிடம் உள்ள அரசதிகாரத்தைப் பயன்படுத்தி நம்மை ஒடுக்குகின்றனர் என்பது என்னுடைய கணிப்பு. நாம் திறமையை மெய்ப்பித்த பின்பும் நமக்குத் திறமையில் குறைபாடு இருப்பதால் தான் வாய்ப்புகள் நமக்குக் கிடைப்பதில்லை என்று நினைத்துக் கொண்டு இருந்தால் அந்தக் குறைபாட்டை முதலில் நாம் நீக்கிக் கொள்ள வேண்டும்.
ஆறுமுகம்
”சீக்கியர்களைப் பற்றிய பிரச்சினையில் இந்திய அரசு எவ்விதமான அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. தன் நாட்டு மக்களின் பழக்க வழக்கம் பற்றி விளக்கம் அளித்து அதைக் கவனத்தில் கொள்ளும் படி தான் கேட்டுக் கொண்டது.” - மன்மோகன் சிங் நேரடியாகவே தலையிட்டார். [http://viduthalai.in/home/india/91-new-delhi/19965-2011-10-21-10-26-43.html]. "'விழிப்புடன்' என்ற சொல்லக்குத் தங்களுடைய அர்த்தம் என்ன?" - விழிப்புணர்வு என்று பொதுவான பொருளிலேயே கூறப்பட்டுள்ளது. ” தங்கள் கையில் உள்ள அரசதிகாரத்தை வைத்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் தாங்கள் அடைய வேண்டிய வாய்ப்புகளை அடைய விடாமல் தடுத்தனர் என்று தங்களுக்குப் படவில்லையா? ” - எவ்வகையில் தடுத்தனர்? அதிகாரம் மன்னர் வயைறாக்களிடமும் ஆங்கிலோயர்களிடமும் இருந்தது. பார்பனர்கள் தமிழகத்தை அல்லது இந்தியாவை எவ்வளவு காலம் விடுதலைக்கு முன் ஆண்டனர்?. ”இம்மாதிரியான கொடுஞ் செயல்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஒடுக்கப்பட்ட மக்கள் ஒற்றுமையாக இருந்து பார்ப்பனர்களை எதிர்ப்பதன் மூலமா? அல்லது ஒடுக்கப்பட்ட தங்களுக்குள் சண்டை போட்டக்‌ கொண்டா?” - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சட்டப்படி வழங்கப்பட்டுள்ள உரிமையை பெறமுடியாமல தடையாக உள்ளவர்களை சுட்டிக் காட்டினால் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதாக பொருளல்ல. இருப்பவனிடம் கொள்ளையடித்தால் (பார்பனர்களின் வாய்ப்பை பறித்தால் பாராட்டலாம் ஆனால் ஒடுக்கப்பட்டவரிலும் ஒடுக்கப்பட்ட அருந்ததியர் வாய்ப்னை சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிறமிப்பது ஆதிக்க வெறியே அது பிச்சை எடுப்பவனிடமே கொள்ளையடிப்பது போன்றதே). ”நாம் ... நம் மக்கள் கல்விலும் திறமையிலும் எந்த விதத்திலும் பார்ப்னர்களுக்குக் குறைவானவர்கள் அல்ல. .. ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் உள்ள திறமைசாலிகளையும் திறமைக் குறைவானவர்கள் என்று தவறான சித்திரத்தைக் காட்டுகின்றனர்” - அருந்ததியர்கள் மட்டும் திறமை குறைந்தவர்களா? எப்படி அந்த இடத்தை மற்றொருவர் (பார்பனர் அல்ல) ஆக்கிரமிக்கிறார் உண்மையில் அவர் ஒரு கல் லூரி முதல்வர் அவருக்கு கிடைக்காமல் அந்த தகுதி எதுவும் இல்லாதவர் நியமிக்க படுகிறார‌ே? ”நம்முடைய குறைபாடுகள் என்பது நம்முடைய புரிதலில் உள்ளது - குறைபாடு புரிதலில் உள்ளதென்றால் புரிதல் தன்மை குறைவு என்பதாகிறது பின்னர் சரியான புரிதல் இன்றி எவ்வாறு சரியான முடிவு இறுக்கும்? ”வாய்ப்பு கிடைத்த ...ஒடுக்குகின்றனர் என்பது என்னுடைய கணிப்பு. ” - அருந்ததியர் பிரிவில் உள்வர்கள் மட்டும் திறமை குறைந்தவர்களா? அவர் உண்மையில் திறன் உள்ளவர் எனபதை மேலே குறிட்டாகிவிட்டது ஆனால் ஆக்கிறமித்தவர் திறமை தகுதியில் குறைந்தவர் என்பதோடு அவர் சட்டப்படி அந்த இடத்தில் நியமிக்க படவே முடியாதவர் என்தும வலியுறுத்தபட்டுவருகிறது. ” நாம் திறமையை மெய்ப்பித்த பின்பும் நமக்குத் திறமையில் குறைபாடு இருப்பதால் தான் வாய்ப்புகள் நமக்குக் கிடைப்பதில்லை என்று நினைத்துக் கொண்டு இருந்தால் அந்தக் குறைபாட்டை முதலில் நாம் நீக்கிக் கொள்ள வேண்டும்.” - பார்பனர்களே திறமைமிக்கவர்கள் என்று ஒருபோதும் குறிப்பிடவில்லை அதற்க்காக அவர்கள் திறமை அற்றவர்கள் என்ற பொருளும் அல்ல. திறமைசாலிகள் அணைத்து பிரிவுகளிலும் இருக்கவே செய்கின்றனர். பார்பனர்கள் அவர்கள் சுயநலனுக்காக அதிகாரத்தை பயன்படுத்தி ஒடுக்குவது போல்தானே அருந்ததியர்களும் மற்றவர்களால் ஒடுக்கப்படுகின்றனர்.
இராமியா
சீக்கியர்களைப் பற்றித் தாங்கள் கொடுத்து இருக்கும் விடுதலை ஏட்டின் செய்திக் குறிப்பு நான் சொன்னதையே உறுதிப்படுத்தி இருக்கிறது. சீக்கியர்கள் விஷயம் எந்த ஒரு தனி நபரையும் குறித்து அல்ல. மேலும் அதைக் குறித்து நாடாளுமன்றம் அல்லோல கல்லோலப் படவில்லை. பார்ப்பனர்கள் நம்முடைய வாய்ப்புகளை எவ்விதம் பறிதத்தனர் என்று வினவி இருக்கிறீர்கள். அதன் விவரங்களை எல்லாம் எழுத வேண்டுமானால் பல புத்தகங்களை வெளியிட வேண்டி இருக்கும். அதை அவ்வப்போது நீதிக் கட்சியினரும் பெரியார் தொண்டர்களும் செய்துள்ளனர். கேந்திரமான இடங்கள் அனைத்திலும் அவர்கள் 90%க்கும் அதிகமாக ஆக்கிரமித்து உள்ளனர் என்ற ஒரு செய்தியே அவர்கள் அயோக்கியத்தனமாகத்தான் அப்படி செய்துள்ளனர் என்ற முடிவிற்கு வர போதுமான காரணமாகும். நண்பரே! ஒடுக்கப்பட்ட வகுப்பினரில் ஒருவரை ஒருவர் சுரண்டிக் கொள்வதை ஒப்புக் கொள்ள முடியாது; ஒப்புக் கொள்ளக் கூடாது என்று தெளிவாக நான் கூறிய பிறகும் அதையே திரும்பத் திரும்ப நீங்கள் கூறுதன் நோக்கம் புரியவில்லை. என்னுடைய வாதம் எல்லாம் நமக்குள் உள்ள வேற்றுமைகளைப் பெரிது படுத்துவதன் மூலம் மிக மிக ..... மிகக் கொடூரமான பார்ப்பனச் சுரண்டலில் இருந்து மீளும் வழிகளை அடைத்துக் கொள்ளக் கூடாது என்பது தான். நாம் பார்ப்பனர்களை விடத் திறமையில் குறைந்தவர்கள் அல்ல என்று புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். மேலும் சட்டப்படியும் நமக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறுகிறீர்கள். அப்படி இருக்கும் போது ‌கேந்திரமான இடங்களில் நமக்கு ஏன் இடம் கிடைக்காமல் போகிறது?
ஆறுமுகம்
விடுதலையில் தலைப்பே அதை உறுதிபடுத்துகிறது. [http://viduthalai.in/home/india/91-new-delhi/19965-2011-10-21-10-26-43.html ] "சீக்கியர்கள் அணியும் தலைப் பாகைக்கு தடையை நீக்க பிரான்சிடம் இந்தியா கோரிக்கை" - என்பது தான் தலைப்பு
”பிரான்சில் ... பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக் கொண்டிருந்தன. சனவரி 25ந் தேதி டெல்லி வந்த சார்கோசியிடம் மன்மோகன் சிங் தலைப்பாகை பிரச்னை குறித்துப் பேசினார். மன்மோகன்சிங் உடல்நிலை குன்றி, மருத்துவ மனையிலிருந்த நேரம் அது ... இருந்தாலும் அதையும் பரிசீலப்பதாக சார்கோசி தெரிவித்தார்.” [http://www.keetru.com/literature/essays/pa_seyaprakasam_1.php] - மன்மோகன் நேரடியாக தலையிட்டதை காட்டுகிறது. ”மேலும் அதைக் குறித்து நாடாளுமன்றம் அல்லோல கல்லோலப் படவில்லை. பார்ப்பனர்கள் நம்முடைய வாய்ப்புகளை எவ்விதம் பறிதத்தனர் என்று வினவி இருக்கிறீர்கள். - நாடளுமன்றம் மக்கள் விரும்பும் எந்த பொருள் குறித்தும் விவாதிக்கவே உள்ளது. எனவே தடைகோரியவழக்கு குறித்து விவாதித்ததில் எந்த தவறும் இல்லை. அங்கு விவாதத்தில் ஈடுபட்டவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்பினர்களே. ”கேந்திரமான இடங்கள் அனைத்திலும் அவர்கள் 90%க்கும் ... முடிவிற்கு வர போதுமான காரணமாகும்.” - அது ஏனைய பிரிவினர் கல்வி விழிப்புனர்வு இல்லாத காலத்தில் கல்வியை அடைந்தவர்கள் பெற்ற பலன் இப்போது சில (அ) பல உயர்பதவிகள் பார்பனர்கள் வகிக்கலாம். அந்த அலுவலகத்தில் மலையாளிகளே அதிக அளவு உள்ளதாக முலலை பெரியாறு பிரச்சினைக்கு பின் வாதிடப்படுகிறது. காரணம் கல்வியில் இந்தியாவில் கேரளாவே நூறளவு (100%)-ஐ அடைந்ததாக அறியப்பட்டுள்ளது. ”ஒடுக்கப்பட்ட வகுப்பினரில் ஒருவரை ஒருவர் சுரண்டிக் கொள்வதை ஒப்புக் கொள்ள முடியாது; ஒப்புக் கொள்ளக் கூடாது என்று தெளிவாக நான் கூறிய பிறகும் அதையே திரும்பத் திரும்ப நீங்கள் கூறுதன் நோக்கம் புரியவில்லை.” - இல்லாத எதிரியை எதிர்க் சொல்கிறீர்கள், நடக்கும் கொடுமையயை தடுக்க வேண்டும் என்று வாதிடுகிறேன். சட்டப்படி ஒரவன் நியமிக்கபடவே முடியாத நிலைய‌ில் அவனை எதிர்பதை விட சட்டம் வழக்குதை தடுபவரை எதிர்த்தே தீரவேண்டியுள்ளது. காரணம் உள் இடஒதுக்கீடு உரிய பிரதிநிதித்துவம் (விகித அளவில்) இல்லாத காரணத்தினாலேயே வற்புறுத்தப்படுகிறது அதையும் அடையவிடாது தடுப்பது எவ்வாறு நியாயம், மேலும் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை மதம் மாறியவர்கள் இந்து மத்திலும் சான்றிதழ்களை வைத்துக் கொண்டு உண்மையாக யாருக்கு அதன் பலன் கிடைக்க வேண்டுமோ அவர்களுக்கு கிடைக்க விடாமல் தடுக்கின்றனர் என்பது தெளிவு. உரிய விகிதம் கிடைகாக்காமல் தடுக்கப்பட்டால் அதறக்கு காரணம் பார்பனர் அல்ல சட்டப்படி கிடைப்பதையும் புறவழியாக பறிப்பவர்களே. ”என்னுடைய ... கொள்ளக் கூடாது என்பது தான்” - பார்பனர் சுரண்டலை ஒருபோதும் நியாயப்படுததுவதில்லை அதை ஏற்பதும் இல்லை. ”நாம் பார்ப்பனர்களை விடத் திறமையில் குறைந்தவர்கள் அல்ல என்று புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்.” - தவறான வாதம், திறமை உள்வர்கள் அணைத்த பிரிவிலும் உள்ளனர் அருந்ததியரிலும் உள்ளனர் அவர்தம் திறமை புறந்தள்பட்டுள்ளது காரணம் பார்பனர் அல்ல என்பதே வாதம். அதே வேளை பார்பனர்கள் அணைவரும் திறமையற்றவர்கள் என்று வாதிடப்பவில்லை என்றே விளக்கப்பட்டுள்ளது. ” மேலும் சட்டப்படியும் நமக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறுகிறீர்கள். அப்படி இருக்கும் போது ‌கேந்திரமான இடங்களில் நமக்கு ஏன் இடம் கிடைக்காமல் போகிறது?” - ஏனைய பிரிவினர் கல்வி விழிப்புனர்வு இல்லாத காலத்தில் கல்வியை அடைந்தவர்கள் பெற்ற பலன் இப்போது சில (அ) பல உயர்பதவிகள் பார்பனர்கள் வகிக்கலாம். அந்த அலுவலகத்தில் மலையாளிகளே அதிக அளவு உள்ளதாக முலலை பெரியாறு பிரச்சினைக்கு பின் வாதிடப்படுகிறது. காரணம் கல்வியில் இந்தியாவில் கேரளாவே நூறளவு (100%)-ஐ அடைந்ததாக அறியப்பட்டுள்ளது என்று ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது.
இராமியா
நண்பர் ஆறுமுகம் அவர்களே! இந்திய நாட்டின் ஒரு பகுதி மக்களின் பழக்க வழக்கங்களைப் பற்றிய பிரச்சினையில் பிரதமரோ மற்றவர்களோ பேச மட்டுமே செய்தனர். ஆனால் வன்முறையைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு தனி நபரின் விளக்க உரைக்காக நாடாளுமன்றமே அல்லோல கல்லோலப்பட்டதும் அந்நாட்டு தூதர் கூப்பிடப்பட்டு அழுத்தம் கொடுக்கப்பட்டற்கும் வேறுபாட்டைக் காண முடியவில்லையா? //நாடளுமன்றம் மக்கள் விரும்பும் எந்த பொருள் குறித்தும் விவாதிக்கவே உள்ளது. எனவே தடைகோரியவழக்கு குறித்து விவாதித்ததில் எந்த தவறும் இல்லை// நண்பரே! சூத்திர, பஞ்சம மக்களின் கொடூரமான பிரச்சினைகளுக்கும் தீர்வு விருப்பம் இல்லாமலும், பார்ப்பனர்களுக்கு, அதுவும் ஒரு தனி நபரின் செய்கையால், ஒரு வேளை பிரச்சினை வந்து விடுமோ என்ற இம்மியளவு சந்தேகம் வந்தாலும், பிரளயமே வந்து விட்டது போன்ற உணர்வுடன் துள்ளிக் குதிப்பதுமான நாடாளுமன்றமும் அரசின் பிற அமைப்புகளும் இருப்பதை சூத்திரர்களும் பஞ்சமர்களும் ஒப்புக் கொள்ளக் கூடாது என்று உங்களுக்குத் தோன்றவே இல்லையா? அதற்கு அரசிலும், சமூக பொருளாதார நடவடிக்கைகளிலும் கேந்திரமான இடங்களில் பார்ப்பனர்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்தே தீர வேண்டும் என்றும் நம்முடைய பங்கை நாம் அடைந்தே தீர வேண்டும் என்றும் உங்களுக்குத் தோன்றவே இல்லையா? நண்பரே! விழிப்புணர்வு இல்லாத காலத்தில் கல்வி பெற்றவர்கள் உயர்நிலைப் பதவிகளை அடைந்து இரக்கிறார்கள் என்றால் வெள்ளையர்கள் வெளியேறி 64 ஆண்டுகளில் இன்னும் யாரும் விழிப்புணர்வு பெறவே இல்யைா? இன்னும் கேந்திரமான இடங்கள் அனைத்திலும் பார்ப்பனர்கள் 90%க்கும் அதிகமாக ஆக்கிரமித்து இருக்கிறார்களே? மற்றவர்களுக்கும் வாய்ப்பு தரத்தான் செய்கிறோம் என்று சொல்வதற்காக அளிக்கப்படும் இம்மியளவு வாய்ப்பும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு அடிபணிபவர்களுக்குத் தானே? விதிவிலக்காக குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற நாராயணன் (நாராயணன் அவர்கள் மலையாளி தான். ஆனால் மலையாளிகள் என்று கூறிக் கொள்பவர்கள் அவரைச் சேர்த்துக் கொள்ளவில்லை. காரணம் அவர் உயர்சாதிக் கும்பலைச் சேர்நதவர் அல்ல, அவர் ஒரு தலித். இந்த வேறுபாட்டையும் நண்பர் கவனத்தில் கொள்வது நல்லது.) அவர்கள் வினா எழுப்பிய கோப்புகள் அவர் பதவிக் காலம் முடியும் வரையில் பதில் அளித்துத் திரும்ப அனுப்பப்படவில்லையே? இவற்றை எல்லாம் செய்பவர்கள் உங்களுக்கு எதிரிகளாகத் தெரியவே இல்‌லை என்றால், அதற்கு யாரும் உதவ முடியாது.
pukalenthi
///திருவள்ளுவர் கூட பூனூல் அணிந்துள்ளாரே அவரும் பார்பனரா? அப்படியானால் திருக்குறள் பார்பனர் நூலா?///

ஆறுமுகத்தின் அறிவு ஆழம் இந்த கூற்றின் மூலம் தெரிந்துவிட்டது. இவ்வளவு பதில்கள் அவருக்கு சொன்னது வெட்டியாகிப்போனது.
திருவள்ளுவர் பெயர் உருவம் எல்லாம் எல்லாம் நாம் கற்ப்ப்த்துககொண்டது என்கிற் உண்மை கூட தெரியதவராக இருக்கிறாரே
ஆறுமுகம்
pukalenthi: ”///திருவள்ளுவர் ... ஆறுமுகத்தின் அறிவு ஆழம் இந்த கூற்றின் மூலம் தெரிந்துவிட்டது. இவ்வளவு பதில்கள் அவருக்கு சொன்னது வெட்டியாகிப்போனது. திருவள்ளுவர் பெயர் உருவம் எல்லாம் எல்லாம் நாம் கற்ப்ப்த்துககொண்டது என்கிற் உண்மை கூட தெரியதவராக இருக்கிறாரே” - நாம் கற்பித்துக் கொண்ட உறுவத்திலும் நாம் ஏன் பூனூலைக் கொண்டுவர வேண்டும் அறிவு ஆழம் அப்படியானால் யாருக்கு இல்லை பார்பனனுக்கா இல்லை ... உருவாக்கியவர்களுக்கா? இல்லை இந்த கேள்வியை முன்வைபவருக்கா? ”நாம் கற்ப்ப்த்துககொண்டது என்கிற் உண்மை கூட தெரியதவராக இருக்கிறாரே” என்பதை அறிந்தே நீங்கள் கூறுவதாக எண்ணுகிறேன்
pukalenthi
மனிதன் கற்ப்பிதுகொண்டவைளை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டியதில்லை என்றுதன் சொன்னேன். பூணூல் போடாத திருவள்ளுவர் படஙளும் சந்தையில் கிடைக்கபெறுகிறது...
வள்ளூவன் பூணூல் போட்டவர போடாதவறா அவர் பெயர் வள்ளுவர் தான என்பதெல்லம் ...கேள்விக்குரியதுதான்....சந்தேகத்துக்குள்ளான ஒன்று சான்றாவது எஙனம்?..ஐயோ ஆறுமுகம்
ஆறுமுகம்
pukalenthi: ”மனிதன் கற்ப்பிதுகொண்டவைளை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டியதில்லை என்றுதன் சொன்னேன்.” - மனிதன் கற்பித்தவை என்பதில் வேறுயாரோ ஒருவர் என்றால் விட்டுவிடலாம் அதை இங்கு குறிப்பிட வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் அணைத்திற்க்கும் பார்பனர்களே காரணம் என்ற வகையில் குற்றசாட்டு முன்வைக்கப்படும் போது நமது தவறுகளை சுட்டிக்க காட்ட வேண்டியுள்ளது. தவறு கள் தவிர்க்கப்பட வேண்டும். இங்கு நாம் உறுவாக்கியவற்றில் கூட பார்ப்பனர் அடையாளங்களை ஏன் வைக்க வேண்டும்? அதை உறுவாக்கியவர்கள் பார்பனர்களா? அவர்கள் அறிவாழம் இல்லாதவர்களா? அல்லது அதை ஏற்றுக் கொண்டவர்கள் எவ்வாறு அதை ஏற்றுக் கொணடனர்? அவர்கள் அறிவாழம் இல்லாதவர்களா? அல்லது அதை அப்படியே இன்றும் எந்த கேள்வியும் இன்றி பயன்படுத்துகிறோமே அவர்கள் பார்பனர்கள் மட்டுமா? அவர்கள் அறிவாழம் இல்லாதவர்களா? இதையெல்லாம் முன்வைத்தால் அதை சொன்வனுக்கு அறிவாற்றல் அவன் பார்ப்னனா? அவர்கள் அறிவாழம் இல்லாதவர்களா? அப்படியானால் பார்பனர் மட்டும் தான் அறிவாளியா? ”பூணூல் போடாத திருவள்ளுவர் படஙளும் சந்தையில் கிடைக்கபெறுகிறது... வள்ளூவன் பூணூல் போட்டவர போடாதவறா அவர் பெயர் வள்ளுவர் தான என்பதெல்லம் ...கேள்விக்குரியதுதான்....சந்தேகத்துக்குள்ளான ஒன்று சான்றாவது எஙனம்?..ஐயோ ஆறுமுகம்” - பிரச்சினை பூணூல் போட்ட திருவள்ளுவர் படமா இல்லை பூணூல் போட்ட திருவள்ளுவர் படமா என்பதல்ல? அதன்வழி முன்வைக்கப்பட்டுள்ள வினாவை மறந்துவிட்டு பூணூலை மட்டும் பார்த்தால் இவ்வாறுதான் தேவையற்ற வினாக்களுக்கு பதில் சொல்ல வேண்டி வரும். நாம் கற்பித்துக் கொள்வதில் கூட பார்பன அடையாளங்களை வைப்பதும் அதை ஏற்பதும் அறிவாழம் மிக்க செயல் என்றால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம்? அறிவாழம் மிக்கவர்கள் அவற்றை தவிர்த்திருக்கலாமே. சந்தேகத்துக் குறியதை எப்படி தமிழர் அடையாளத்திற்க்கு மாற்றாக பார்பன அடையாளங்களுடன் படைக்கப்பட்டது? அதை அப்படியே ஏற்றுக் கொண்டனர்.? கீதையை பார்பனர் படைப்பாக கட்டுரையாளர் தொடர்பு படுத்தியுள்ளதை காண்க. பின்னூட்டத்தில் ஏன் திருவள்ளுவர் பற்றி கேள்வி எழுப்பட்டுள்ளது என்பது விளங்கும்.
இராமியா
நண்பர் ஆறுமுகம் அவர்களே! நாடாளுமன்றம் மக்களுடைய பிரச்சினைகளை விவாதிக்கத் ‌தான் உள்ளதே ஒழிய தனிப்பட்ட நபர்கள் வன்முறையைத் தூண்டும் செயல்ளைச் செய்யும் போது அதைத் தாங்கிப் பிடிப்பதற்காக இல்லை. சைபீரிய நீதி மன்றம் ஒன்றில் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் ஒருவருக்கு தாக்கீது அனுப்பினால் அதற்கு அந்த தனி நபர் விடை அளித்துக் கொள்ள வேண்டுமே ஒழிய நாடாளு மன்றத்திற்கோ அரசுக்கோ வேலை எதுவும் இல்லை. (நண்பர் வன்முறையைத் தூண்டும் பகுதி எது என்று கேட்கிறார். அது நமக்குக் கிடைத்த செய்தியில் கிடைக்கப் பெறவில்லை என்பதை ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன்) அந்த தனி நபர் இந்தியராக இருக்கும் பட்சத்தில் அவர் அயல் நாட்டு அரசினால் எதாவது துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டால், நமது அரசு அதில் தறையிட்டு நியாயம் கிடைப்பதற்காகச் செயல் படலாம். ஆனால் எதுவுமே நடக்காமல் இருக்கும் போதே பார்ப்பனச் சார்புக் கருத்தியலுக்கு ஒருவேளை வந்து விடுமோ என்ற இம்மி அளவு ஏற்பட்டாலேயே குதி குதி என்று குதிக்கின்ற இந்திய அரசு அமைப்புகள் நம் மீனவர்கள் அடிபட்டு மிதிபட்டு செத்துக் கொண்டும் இருக்கும் போது அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று கூறுவதும் தான் இக்கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளன. நீங்கள் பார்ப்பனராக இல்லாத பட்சத்தில் இந்திய அரசின் கொடூரமான ஓர வஞ்சனைகள் பற்றி நியாயமான சினம் எழத்தான் செய்யும். அப்படி இல்லாமல் பிரச்சினைகளின் மையக் கருத்திற்கு வராமல் பார்ப்பன ஆதிக்கத்தின் கொடூரங்களைப் பற்றிய விவாதத்தைத் திசை திருப்புவதிலேயே குறியாக இருப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது? நீங்கள் எங்களுடைய கருத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை விட புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் என்பதே தங்களுடைய பின்னூட்டங்கள் தெரிவிக்கின்றன.
ஆறுமுகம்
இராமியா 2012-02-28 16:27:13: ”நண்பர் ... முடியவில்லையா? //நாடளுமன்றம் மக்கள் விரும்பும் எந்த பொருள் குறித்தும் விவாதிக்கவே உள்ளது. எனவே தடைகோரியவழக்கு குறித்து விவாதித்ததில் எந்த தவறும் இல்லை//”- பிரதமர் பேசமட்டும் செய்யவில்லை கட்டுரைகளை நன்கு வாசிக்க அமைச்சர்களும் ஈடுபடுத்தபட்டுள்ளனர். வன்முறையை தூண்டுவதாக தனிநபர் யார் வேண்டுமானாலும் எது குறித்தும் குற்றம் சாட்டலாம் அவை சரியா ? என்பதை ஆராயாமல் அந்த செயலை ஆதரிப்பது எவ்வாறு சரியாகும். தனிநபரின் விளக்க உரையில் எந்த பகுதி வன்முறையை தூண்டுவதாக உள்ளது என்று ஆதரித்து எழுதுகையில் ஏன் குறிப்பிட வில்லை? நாடளுமன்றம் மக்கள் பிரதிநிதிகள் விரும்பும் கருத்து குறித்து விவாதிக்க வே உள்ளது. எனவே சீக்கியர்கள் தலைப்ப‌ாகைக்காக நாடாளுமன்றம் அல்லோல கல்லோபடவில்லை என்பதறக்க்காக பிற பிறச்சினைகளிலும் எந்து எதிர்ப்பும் என்று அணைவரும் இருக்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம். பிற பிரச்சினைகளில் அதை தொடர்படையவர்கள் தான் அணைவரது கவணத்தையும் ஈர்க்க வேண்டும். சீக்கியர்கள் தலைப்பாகைக்கு அந்த நாட்டு அதிபரிடமே அழுத்தும் தரபட்டதை மறந்து விட்டு தூதரிடம் அழுத்தம் தந்த‌தை குற்றம் சாட்டுவது எவ்வாறு நியாயம்? ”நண்பரே! சூத்திர, .. தோன்றவே இல்லையா? ” - நாடளுமன்றம் சூத்திர, பஞ்சம மக்களின் கொடூரமான பிரச்சினைகளுக்கும் தீர்வு விருப்பம் இருக்க கூடாது என்று நியாயப்படுத்த வில்லை. இதற்காக ஏனைய பிரச்சினைகளில் நாடாளுமன்றம் ஈடுபடக் கூடாது என்று வாதிடுவதும் சரியல்ல. நாடளுமன்றத்தில் எத்தனை சதவீதம் பார்பனர்கள் உள்ளனர். இந்தியாவில் பட்டியல் வகுப்பில் உள்ளவர்கள் கட்டாயமாக தேர்ந்தெடுக்க படவேண்டும் என்பதற்க்காக ”ரிசர்” தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனரே. ”அதற்கு அரசிலும், சமூக பொருளாதார நடவடிக்கைகளிலும் கேந்திரமான இடங்களில் பார்ப்பனர்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்தே தீர வேண்டும் என்றும் நம்முடைய பங்கை நாம் அடைந்தே தீர வேண்டும் என்றும் உங்களுக்குத் தோன்றவே இல்லையா? ” - ஒன்று இல்லை பல அலுவலகத்தில் குறிப்பிட்ட சாதியின்ர் அதிகம் உள்ளனர் என்பதற்க்காக அவர்கள் ஆக்கிரமிப்பாளராக கருத முடியாது. சட்டப்படி நியமிக்கப்படும் இடங்களில் அதற்க்கு புறம்பாக நியமிக்க படுபவர்கள் மட்டுமே ஆக்கிரமிப்பாளர்கள். அந்த வகையில் அருந்ததியர் இடத்தில் நியமிக்கபடுவோரும் மதம்மாறி பலனடைபவர்கள் இந்து மத்தில் உள்ள பட்டியல் வகுப்பினரில் வாய்ப்பை பறிப்பதுமே ஆக்கிரமிப்பாகும். ”நண்பரே! விழிப்புணர்வு ... பெறவே இல்யைா? ” - விழிப்புணர்பு பெறும் முன்னர் மனனர் ஆட்சிகாலம் முதல் கல்வியில் முன்னனியில் இருந்தவர்களை 64 ஆண்டுகளில் முழவதுமாக எவ்வாறு பதவில் இருந்து முற்றாக மாற்ற முடியும்.? மேலும் கல்வியில் விழிப்புணர்வு என்பது வெறும் தமிழ் பட்டங்களை பெறுவது மட்டுமல்ல அணைத்து துறைகளிலும் படித்தவர்கள் உரிய கல்வி தகுதியோடு என்னிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளது. வெள்ளையர்கள் இருந்தகாலத்திலும் அதறக்கு பிந்தைய காலத்திலுமே கல்வி பெற்றோம் அதன் அளவு என்பது அணைத்து துறைகளிலும் முழுமையானதல்ல மாறக ஒரு சில் பாட பிரிவுகளில் மிக அதிகமாகவும் சில துறைகளில் இல்லை யெனும் அளவும் உள்ளதை காணமுடியும். ”இன்னும் கேந்திரமான ... அவர் ஒரு தலித்..” - ஒரு அலுவலகத்தில் அதிக அளவு ஒரு பிரிவினர் பணியாற்றுவதால் அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கருத முடியாது. சில் நிறுவனங்களில் சில பணிகளில் பட்டியல் இனத்தினர் அவ்வாறு உள்ளனர். மலையாளிகளும் அதிக அளவு கல்வி அறிவு பெற்றவர்கள் என்பதை நினைவு கூறுக. கல்வி அறிவே தலித் சமுதாயத்தை சேரந்த நாராயணனை பதவிக்கு அமர்த்தியது அப்படியானால் சாதி அல்ல என்று தாங்களே ஒப்புக் கொள்வதாகிறது. ”இந்த ... அதற்கு யாரும் உதவ முடியாது.” - அவர் பதவில் அவர் சந்திக்கும் சிக்கல்களுக்கு உரிய அதிகாரம் இருக்கையில் அவர்தான அதற்கு முடிவு கண்டிருக்க வேண்டும். பதவியில் அமர்ந்த பின் அணைவரும் சந்திக்கும் பிரச்சினை அணைத்து தரப்பினரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து வேலை வாங்குவதே அவர் பணியாகும். அவர் எழுப்பிய கேள்விகள் அதற்க்கு பதிலளிக்க கடமைப்பட்டவர்கள் கீழ்நிலை அதிகாரிகள் அதறக்கு சாதியை குற்றமாக்க முடியாது. பார்பனர் அல்லாதோர் ஆதரைவை முழுமையாக பயன்படுத்தியிருக்க வேண்டும்.
ஆறுமுகம்
”நாடாளுமன்றம் ... பிடிப்பதற்காக இல்லை.” - சலமன் ருஷ்டியின் புத்தகம் தஸ்லிமா நஸ்ரின் எழுத்துகள் மற்றும் ஏசு பற்றிய சினிமா இவற்றை மக்கள் மன்றம் இந்தியாவில் ஏன் தமிழகத்திலும் விவாதித்து தடை கூட விதித்ததே! அவை தனி நபர் படைப்பன்று ஒதுக்க வில்லை. மாறாக கீதை வெளிநாட்டு படைப்பல்ல. அதன் மீது மதிப்பு கொண்டவர்கள் கோரிக்கையின் மீது , மற்றவர்களுக்கு பிடிக்க வில்லை என்பதால், மக்கள் பிரதிநிதிகள் விவாதிப்பது தவறன்று. ”சைபீரிய .. எதுவும் இல்லை.” - நாடளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் கொண்டுவரும் எந்த பிரச்சினைகுறித்தும் விவாதிக்கவே உள்ளது. அது குறித்து முடிவு செய்ய வேண்டியது மக்கள் பிரதிநிதிகள் தான். அவர்கள் அதை மக்கள் மன்றத்தில் எழுப்பியது தவறாகாது. தனி நபர் கருத்தை ஏற்று தான் சைபீரிய நீதி மன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. ”(நண்பர் ... இருக்கிறேன்) ” - வன்முறை தூண்டும் வகையில் என்று யார் வேண்டுமானாலும் கருத்து கூற முடியும். கீதை இப்போது தோன்றியதல்ல. கிடைக்க பெறதா செய்தியை வைத்துக் கொண்டு குற்றம் சாட்டுவது சரியன்று. ”ஆனால் எதுவுமே .. அமைப்புகள்” - கீதை அல்லது அதன் தனிநபர் உரை பார்பன சார்பு கருத்தியலானது என்பதை கட்டுரையாளர் எவ்வாறு முடிவு செய்தார். உரையின் எந்த பகுதி பார்பன சார்பு கருத்தியலானது? ”நம் மீனவர்கள் அடிபட்டு மிதிபட்டு செத்துக் கொண்டும் இருக்கும் போது அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று கூறுவதும் தான் இக்கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளன. நீங்கள் பார்ப்பனராக இல்லாத பட்சத்தில் இந்திய அரசின் கொடூரமான ஓர வஞ்சனைகள் பற்றி நியாயமான சினம் எழத்தான் செய்யும்.” - மீனவர்கள் அடிபட்டும் சுடப்பட்டும் செத்தபோதும் செத்துக் கொண்டிருந்த போதும் நமது ரத்தத்தின் ரத்தங்கள் உடன் பிறப்புகளை தேர்வு செய்து அணுப்பி வைத்துள்ளேமே அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர். அது குறித்து தமிழர்களின் பிரதிநிதிகளாக உள்ளவர்கள் செய்யாமல் இருந்த செயலுக்கு அவர்கள் மீது தான் பழிசுமத்த முடியுமே தவிர மற்றவர்கள் அவர்கள் அறிந்த பிரிச்சினை குறித்து மக்கள் மன்றத்தில் எழுப்பிதை குற்றமாக்க முடியாது. நமது செய்ய மறந்த செயலை மற்றவர்கள் செய்வதால் தவறாகாது. ஆட்சியில் அங்கமாக தமிழக கட்சிகள் உள்ளன அவர்களை ஏன் கண்டிக்க வில்லை? ”அப்படி ... பின்னூட்டங்கள் தெரிவிக்கின்றன.” - ஆதிக்கம் யார்செய்தாலும் அதை எதிர்பதுடன் ஆதிக்கத்‌தின் கொடுரத்தை உணரச் செய்வதுடன் மாற்றுக் கருத்தையும் சேர்த்தே முன்வைக்கப்படுகிறது. அணைத்திற்கும் தர்க்க ரீதியாகவும் பதில் தரப்பட்டுள்ளது. கருத்துகள் உரிய ஆதாரத்துடனே பின்னூட்டமாக தரப்பட்டுள்ளது.
இராமியா
நண்பர் ஆறுமுகம் அவர்களே! நீங்கள் புரிந்து கொண்டு தான் பேசுகிறீர்களா என்பது தெரியவில்லை. சைபீரிய நீதிமன்றம் ஒன்றில் ஒரு தனி நபரின் விளக்க உரை வன்முறையைத் தூண்டுதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் தாக்கீது அனுப்பப்பட்டதற்கும் நீங்கள் குறிப்பிடும் மற்ற நிகழ்வுகளுக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள அளவு வேற்றுமை இருப்பது புரியவே இல்லையா? மேலும் வன்முறையைத் தூண்டும் கருத்து இருப்பதாக வழக்கில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது என்ற செய்தியைக் கூற வேண்டும் என்றால், அந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விஷயங்களையும் படித்த பின்பு தான் பேச வேண்டும் என்பது எந்த தர்க்க நியாயத்திலும் சேராது. அது சரி! நண்பரே! நாடாளு மன்ற உறுப்பினர்கள் நம் மீனவர்கள் அடிபட்டும், மிதிபட்டும், செத்துக் கொண்டும் இருக்கும் பிரச்சினையைக் கண்டும் கொள்ளாமல், யாரும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் வெறுமனே ஒரு தாக்கீது அனுப்பிய செயலுக்காகத் துள்ளி எழுகிறது என்றால் அது வெகு மக்களுக்கு எதிரான செயல் என்று உங்களுக்குத் தோன்றவே இல்லையா? நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு வெகுமக்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் உரிமையையா மக்கள் அளித்து இருக்கிறார்கள்? அது சரி! நமது இந்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைப் பற்றிப் பேசும் போது அது தமிழ் நாட்டுப் பிரதிநிதிகளை அப்பழுக்கற்றவர்கள் என்று சொன்னதாக உங்களால் எப்படி கற்பனை செய்து கொள்ள முடிகிறது? அது என்ன நம் மீனவர்கள் சாவதை விட வெறும் ஒரு தாக்கீது தங்களை இந்தப் பாடு படுத்துகிறது?
ஆறுமுகம்
”நண்பர் ... புரியவே இல்லையா?” - மற்ற நிகழ்வுகள மட்டும் முக்கியத்துவம் மிக்கவையானது இல்லை என்பதே கருத்து. அதிகாரத்தில் உள்ளவர்களிடம் ஒரு கோரிக்கை முன்வைக்கப்படும் போது அது குறித்து நடவடிக்கை எடுக்கவே அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அளவில் வேறுபாடு இருப்பது தவிர்க்க முடியாது அணைத்தும் ஒரே அளவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. தனிநர் குற்றம்சாட்டி வழக்கு தொடுப்பதை அப்படியே ஏற்று கீதை வன்முறையை ஆதரிப்பதாக கூறுவதை ஏற்கவில்லை ‌ஏனெனி்ல் சில் மதங்களில் வன்முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது அதற்கு புனித பட்டமும் கூட வழங்கப்பட்டள்ளது எனவே தனிநபர்கள்கள் உள்நோக்கத்துடன் ஒரு மதம் தொடர்பான கருத்துகளுக்கு கலங்கம் கற்பிக்க முயற்ச்சி செய்வதை தடுக்க வே குரலெலுப்பியுள்ளனர். ”மேலும் வன்முறையைத் ... அளித்து இருக்கிறார்கள்?” - தனிநபர் யார்வேண்டுமானாலும் எதைகுறித்தும் குற்றம் சுமத்த முடியும். கீதையை (தனிநபர் கருத்து வாயிலாக) அந்த நபர் குற்றம் சுமத்த முயற்சிப்பதை தடுக்‌கவே குரல் கொடுத்தனர். அந்த தனிநபர் தவறான செயலை கண்டிப்பதை குறை கூற முடியாது. பிரச்சினையை எழுப்பியவர்கள் மக்கள் பிரதிநிதிகள் அவர்கள் தாம் உயர்வாக நினைப்பதை சிறுமைபடுத்துவதை கண்டு பாராளுமன்றத்தின் கவனத்திற்க்கு கொண்டுவந்தால் அது வெகுமக்களுக்கு எதிரானதாகாது அவர்கள் வெகுமக்களுக்கு எதிராக எதையும் செய்யவில்லை. இந்நாட்டில் பெரும்பான்மை மக்கள் மதிப்பு வைத்தகள் கீதைக்கு தனிநபர் உரைவழியாக கலங்கம் ஏற்படுத்த நினைப்பதை தடுக்கவே போராடினால். நீதிமன்றம் அந்த தனிநபர் வழக்கை தள்ளுபடி செய்ததை கவணிக்க. ”அது சரி! நமது ... படுத்துகிறது?” - தமிழ்நாட்டு பிரதிநிதிகளை அப்பழுக்கற்றவர்கள் என்று சொன்னதாக எங்கும் குறிப்பிடவில்லை. கீதைகுறித்து ஒரு பிரிவு மக்கள் பிரதிநிதிகளுக்கு இருந்த உணர்வு தமிழ்நாட்டு மக்கள் பிரதிநிதிகளுக்கு இல்லாமல் போனதற்க்கு அவர்கள் மீதுதான் வரத்தப்படவேண்டுமே தவிர நமது மக்கள் பிரதிநிதிகளிடம் இல்லாத உணர்வு ஒற்றுமை மற்றவர்களிடம் உள்ளதற்க்காக வருத்தபடமுடியாது ( நமது பிரதி‌நிதிகளின் செயலற்ற தன்மை அல்லது சுயநல செயல்களுக்கு மற்றவர்கள் இணைந்து செயல்படுவதை குற்றம் சுமத்த முடியாது குற்றவாளிகள் தமிழக அரசியல்வாதிகளே என்பது கருத்து). தமிழ மக்களுக்கு ‌எதிரான செயல்களை ஆதரித்து எதுவும் கூறப்படவில்லை மாறாக தமிழக மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளில் தமிழக பிரதிநிதிகளின் செயல்பாடு இன்மையை தான் குறை கூறவேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டது. நமது மீனவர்கள் சாவதை எந்த இடத்திலும் நியாப்படுத்தவில்லை, மாறாக, அது குறித்த தமிழ பிரதிநிதிகளின் செயலறற்ற தன்மையைதான் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதறக்காக மற்றவர்கள் அவர்கள் விரும்பும் கருத்து குறித்து நடவடிக்கை எடுக்க வைப்பதை குற்றம் சுமத்த முடியாது. அவர்களிடம் உள்ள ஒற்றுமை மற்றும் சாதுரியம் நம்மிடம் அது இல்லை. அது குறித்தே நாம் வருந்த வேண்டுமே தவிர அந்த ஒற்றுமை மற்றும் சாதுரியம் மற்றவர்களிடம் உள்ளதற்க்காக அவர்கள் மீது வருத்தப்படுவதில் நியாயம் இல்லை என்றே முன்வைக்கப்பட்டுள்ளது.
இராமியா
நண்பர் ஆறுமுகம் அவர்களே! கீதை உரை பற்றிய சர்ச்சசையைத் தொடர்புள்ள யாரும் கோரிக்கையாக நாடாளுமன்றத்தின் முன் வைக்கவில்லை. நாடாளுமன்றம் தானாகவே எடுத்துக் கொண்டது. சைபீரிய நீதிமன்றம் கீதையின் மீது நடவடிக்கை என்ற பிரச்சினையே இல்லை என்றும் ஹரே கிருஷ்ணா இயக்க நிறுவனரின் உரை மீது தான் வழக்கு என்றும் தெளிவாக அறிவித்த பின், அதுவும் அந்தத் தனி நபருக்கு எந்த விதமான தாக்குலும் இல்லாமல் வெறுமனே ஒரு தாக்கீது மட்டுமே அனுப்பப் பட்ட நிலையில், நாடாளுமன்றத்திற்கு கோரிக்கை கிடைத்து இருந்தாலும் தாக்கீதுக்கு விடையளிக்கும் படி அறிவுரை தான் கூறப்பட்டு இருக்க வேண்டுமே ஒழிய இவ்வாறு அல்லலோல கல்ல‌லோலப் பட்டது எந்த நியாயத்திலும் சேர்த்தி இல்லை. அதே சமயம் தமிழக மீனவர்கள் கொடூரமாகத் தாக்கப்படும் பொழுது அதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி இருப்பதை எந்த விதத்திலும் நியாயப் படுத்த முடியாது. கீதையைப் பற்றி எந்த வித சர்ச்சையும் எழுப்பப் படாத நிலையில் அது வன்முறையைத் தூண்டுகிறதா இல்லையா என்ற சர்ச்சையை நண்பர் ஏன் எழுப்புகிறார்? அது புனித நூல் என்று எழுதப்பட்டு உள்ளதைப் போலவே, அது மக்கள் விரோத நூல் என்றும் எழுதப்பட்டு இருக்கவே செய்கிறது. கீதையைப் பற்றி விவாதம் செய்யும் பொழுது அப்பிரச்சினையை நண்பர் விவாதிக்கலாம். இக்கட்டுரையில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினை ஒரு தனி நபரின் உரையின் மீது தொடுக்கப்பட்ட வழக்கிற்காக, அதுவும் அந்த தனி நபர் எந்த விதத்திலும் தாக்கப்பபடாத நிலையில், நாடாளுமன்றம் ஏன் துள்ளிக் குதிக்க வேண்டும் என்பது தான். மேலும் நமது மீனவர்கள் அடிபட்டும், மிதிபட்டும், கொலையே செய்யப்பட்டும் கொடுமைப் படுத்தப்படும் பொழுதும், நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல; அதற்கு ஆதாரம் இல்லை என்று கூசாமல் பொய் சொல்வது ஏன் என்பதும் இக்கட்டுரையின் மையக் கருத்து. நண்பர் இதைப் பற்றி விவாதிக்காமல் வேறு எதை எதையோ ஏன் பேசுகிறார்?
இராமியா
நண்பர் ஆறுமுகம் அவர்களே! நம் பிரதிநிதிகள் நமக்குத் துரோகிகளாக இருக்கிறார்கள் என்பதால் பார்ப்பனர்களின் தேசத் துரோகச் செயல்கள் நியாயமாகி விடாது. முதலில் பார்ப்பனர்களின் அப்பாவித்தனமான ‌வெளிப்பாட்டில் மயங்கும் மனநிலையில் இருந்து வெளியே வாருங்கள். இன்று நம் முன் ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றில் எதை முதலில் அணுகுவது? கேந்திரமான இடங்களில் பார்ப்பனர்கள் 90%க்கும் அதிகமான இடங்களில் ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பதைத் தடுத்து ஒடுக்கப்பட்ட மக்களைப் பார்ப்பனர்கள் புறந்தள்ள முடியாத அளவில் இடம் பெறச் செய்தால் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டு உள்ள நிகழ்வுகள் மட்டுமல்ல; உலகில் வேறு எங்கும் இல்லாத இந்தியாவின் பிரத்யேகப் பிரச்சினைகள் அனைத்தும் ஒரு முடிவிற்கு வந்து விடும். பிறகு மற்ற பிரச்சினைகளை எளிதாக அணுக முடியும். அப்படி நடக்காத வரையில் நம் பிரச்சினைகள் எதற்கும் தீர்வு கிடைக்காது. ஈழத் தமிழர் பிரச்சினையில் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அதாவது 97% மக்களின் எண்ணத்திற்கு எதிராக இந்திய அரசினால் எப்படி முடிவெடுக்க முடிந்தது? முடிவெடுக்க வேண்டிய கேந்திரமான இடங்களில் 90%க்கும் அதிகமாக மக்கள் விரோதிகளான பார்ப்பனர்கள் ஆக்கிரமித்து இருப்பதால் தான். தி.மு.க. தலைவரின் மீதான குற்றச்சாட்டுகள் 100% ஐ விட அதிகமாகவே உண்மை. ஆனால் வேறு யாராவது நேர்மையான மனிதர் ஒருவர் அவருடைய இடத்தில் இருந்திருந்தால் நிலைமை வேறு விமாக இருந்திருக்குமா? நிச்சயமாக இல்லை. அண்ணல் அம்பேத்கர் மிகவும் அறிவுக் கூர்மை மிக்க திறமைசாலி. அவர் சாதிக் கொடுமைகளைக் களைய தனது அறிவுக் கூர்மையையும் திறமையையும் நேர்மையாகத் தான் அர்ப்பணித்தார். நல்ல முடிவு கிடைக்கவில்லையே! அம்பேத்கர் அவர்களாலேயே முடியாத ஒன்றை ஒடுக்கப்பட்ட மக்களின் துரோகியான தி.மு.க. தலைவரிடமா எதிர்பார்பார்க்கிறீர்கள்? நம்முடைய முதல் பணி கேந்திரமான இடங்களில் பார்ப்பனர்கள் 3%ஐ விட அதிகமாக அடைய முடியாத படி பார்த்துக் கொள்வது தான். அதைவிட முக்கியமாக பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்ப விடாமல் பார்த்துக் கொள்வதும் தான். அப்படிச் செய்து விட்டால் சாதிக் கொடுமை அடிப்படையில் எடுக்கப்படும் செயல்களுக்கு முடிவு கட்டி விடலாம். மற்ற பிரச்சினைகளின் தீர்வுகளுக்கான வழிகளை அடுத்து அணுகலாம். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பொதுக் கருத்தை எட்டவும் செய்வது தான் நம் முன்னால் உள்ள முதன்மையான பணி.
ஆறுமுகம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியல் இருந்து 40 எம்பிக்களை தேர்ந்தெடுத்து அணுப்பியுள்ளோம். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை அவையின் கவனத்திற்க்கு கொண்டுவர அவர்களே கடமைப்பட்டவர்கள். அவர்கள் எதிர்தரப்பினருக்கு உள்ள உணர்வு கூட அற்றவர்களாக இருந்தனர் இருக்கிறனர். நாம் நாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளைத்தான் குற்றம் சுமத்தலாம். அது ஏன் திரு.மு.கருணாநிதி அவர்கள் என்ன சொன்னார்? பேராசைகொண்டு எல்லை தான்டுவதாக குற்றம்தான் சுமத்தினார். இப்போது கூட கூடங்குளம் போராட்டத்தை நடத்தும் மக்களுக்கு எதிராகத்தான் செயல்படுகிறார். நாம் யரை தமிழன் தமிழின தலைவன் என்கிறோமோ அவர் தான் தமிழின படுகொலை நடக்கும் போது ஆட்சியில் இருந்தவர் அவரது ஆதரவில் தான் அதற்க்கு ஆதரவு தந்த அரசு மத்தியில் இருந்தது என்பதை கவணிக்க. நமது மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பணம் பன்னும் வேலையே பெரிதாக கருதுவதால் போட்ட பணத்தை எடுக்க எந்த இடஞ்சலும் வந்துவிடாமல் பார்த்துக் கொண்டனர். அடிமைகளுக்கு போதை ஏற்ற மதுவும் களியாட்டத்தை கண்டு சோம்பேறியாக இருக்க தொலைக்காட்சியும் வாங்கி கொண்டதோடு வாக்களித்தற்க்கான பலன் தமிழனுக்கு முடிந்த போனது. நிலைமை இவ்வாறு நமது பிரதிநிதிகளை குற்றம் சுமத்துகையில் பார்பனர்களை குறை கூறி பயனில்லை. எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.