கந்துவட்டி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் உழைக்கும் மக்கள் அக்கொடுமையிலிருந்து மீள முடியாத சூழலை வட்டி வசூலிப்போர் திட்டமிட்டு உருவாக்குகின்றனர்.

ஒரு இலட்சம் ரூபாய் வாங்குகிறவர்கள் ஒரே முறையில் திருப்பித் தர இயலாத நிலையில் தவணை முறையில் தரும்போது நான்கைந்து இலட்சம் வரை வசூலிப்பதும் தர மறுப்போரை அடியாட்களை வைத்து மிரட்டுவதும், உதைப்பதும் பகிரங்கமாகவே நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

கொள்ளை நோயால் உயிரிழப்பு, வேலையின்மை, விவசாயம் செய்ய இயலாத நிலை, பணமதிப்பு இழப்பால் தொழில் நலிவு, பண இறுக்கம் அதனால் ஏற்படும் மன இறுக்கம், விலைவாசி உயர்வு, கிராம்புறங்களில் நூறுநாள் வேலைத் திட்டம் தொய்வு, தமிழக அ.தி.மு.க அரசின் தான் தோன்றித்தனமான போக்கு, மோடியின் மக்கள் விரோத அரசின் முட்டாள்தனமான திட்டங்களால் மேலும் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளும், துன்பங்களும் சொல்லி மாளாதவை.

பொதுவாகவே இப்படிக் கந்து வட்டி தொடர்பாக அடிதடி, கட்ட பஞ்சாயத்து, நில மோசடி, கள்ளக் காதல் கொலைகள், குண்டு வீச்சு, மதக் கலவரம், மிரட்டல் போன்றவற்றைப் பெயரெடுத்த இந்துத்வா குண்டர்களே நடத்துவதால் அரசும், அதிகாரமும் தாராளமாய் அவர்களுக்குத் துணை போகின்றன.

கொடுத்தோரின் கொடுமை தாளாமல் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் ஆறுமுறை மனு அளித்தும் நியாயம் கிடைக்காத நிலையில் மனம் நொந்து தன் ஒன்றரை வயதும், அய்ந்து வயதுமான பிள்ளைகள் மனைவி ஆகியோரோடு தீக்குளித்து இந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நிலை என்ன என்பதை உலகுக்குப் பறை சாற்றினார் இசக்கிமுத்து.

இப்படி நாளும், பொழுதுமாய் கந்துவட்டியினரால் சப்தமின்றி பலருடைய மரணம் இந்த மண்ணில் தொடர்ந்துக் கொண்டுதானிருக்கிறது.

கந்து வட்டி தடுப்புச் சட்டங்களோ வெறும் ஏட்டுச் சுரைக்காயாய்ப் பயனற்று கிடக்கின்றன.

இதுவரை இப்பிரச்சினையில் விளக்கமோ, நடவடிக்கை குறித்த செய்திகளையோ வெளியிடாமல் அமைதி காக்கும் தமிழக அ.தி.மு.க அரசின் ஆணவத்தை என்னவென்று சொல்வது?

தான் வாங்கிய 1.45 இலட்சம் கடனுக்காக 2.50 இலட்சம் ரூபாய் கொடுத்தும் கொடுமைப்படுத்திய கந்துவட்டியினரை மட்டுமா கைது செய்வது?

வட்டி வசூலிக்க காவல்துறையே இசக்கி முத்துவின் வீட்டிற்க்கு சென்றதும், வட்டி கேட்டு மிரட்டியதும் சட்ட விரோத செயல் அல்லவா?

ஆறு முறை மனு அளித்தும் முறையாக பரிசீலிக்காத ஆட்சியரின் அலட்சியத்தை என்ன சொல்வது.

இவைகளை மூடி மறைக்க முயற்சிக்கும் பா.ஜ.கவின் பினாமி தமிழக அரசின் செயல் ஆணவப் போக்கு அல்லவா?

கந்துவட்டிக்காரர்களிடம் நத்திப் பிழைக்கும் அரசியல்வாதி, அரசு அதிகாரி எவராயினும் தண்டிக்கப்பட வேண்டும்.

இன்று நான்குபேரின் நிலையைப் போல், நாளை எத்தனை பேர்களோ என அச்சம் ஏற்படுகிறது. நடுவண் இந்துத்வா அரசும், மாநில அடிமை அரசும் மக்களைப் பற்றிச் சிறிதும் கவலையின்றித் தான்தோன்றித் தனமாக இருக்கின்றன.

மக்களோ ஒவ்வொரு நாளும் தங்களின் குடும்ப, உறவுகளின் செலவு, அடிப்படைத் தேவைகளுக்கே மனதளவில் தீக்குளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இது போதாதென்று..,

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போல் இச்சம்பவத்தில் பகுத்தறிவை இணைத்து முடிச்சு போடுகிறார் “ஹரிஹர இராஜ ஷர்மா!”

பக்தி குறைந்ததும், பகுத்தறிவு வளர்ந்ததும் தான் தீக்குளிப்புக்கான காரணமென மனநோயாளி போல் உளறிக் கொட்டியிருக்கிறார் எச்.இராஜ சர்மா.

ஒரு கொடூரமான மரணத்திலும் அரசியல் செய்யும் இப்படிப்பட்ட இந்து வெறியர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும்.

நந்தனாரையும், வள்ளளாரையும் தீயில் பொசுக்கிய பார்ப்பனக் கூட்டம் -

தமிழர்களின் வரலாற்றை யாகக்குண்டத் தீயில் எரித்த வர்ணாசிரமக் கூட்டம் -

கணவன் இறந்தவுடன் மனைவியை சேர்த்துத் தீயில் தள்ளிய ஆரிய ஹரிஹர ராஜ ஷர்மாக்கள் -

சீதையின் கற்பைச் சோதிக்கத் தீக்குளிக்க வைத்த இராமனின் தொண்டர் கூட்டம் -

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியில் மண்டல் குழு பரிந்துரைக்கு எதிராக டெல்லியில் அப்பாவியை நெருப்பைப் பற்றவைத்துக் கொன்ற இந்துத்வா கூட்டம் -

குஜராத்தில் முசுலீம் பெண்களையும், குழந்தைகளையும் எரியும் நெருப்பில் போட்டு “பாரத் மாதா கீ ஜே” எனக் கொக்கரித்த கூட்டம் -

மூவாயிரம் ஆண்டுகளாய் சூத்திர மக்களுக்கெதிராய் அக்கினி பகவானையே ஆயுதமாய் பயன்படுத்தியது இப்போது வாய் கிழிய நாடகமாடும் பார்ப்பன

எச்.ராஜ ஷர்மா இந்துத்வா கூட்டமன்றோ!

ஆனால் இவைகளை எல்லாம் முழுச் சோற்றில் பூசனிக்காய் மறைப்பதைப் போல் பேசுவதை என்னவென்று சொல்ல!

“எம் மக்களின் பணமும், நேரமும் வீண் சடங்குகளுக்காகவும், சம்பிரதாயத்திற்காகவுமே அழிக்கப்பட்டு வருகிறதே” என வேதனைப்பட்டு, பார்ப்பன இந்து மத அயோக்கியச் செயல்களைத் தோலுரித்து, சிக்கனத்தையும், சேமிப்பையும் எமக்கு கற்றுத்தந்த அறிவு ஆசான் தந்தை பெரியாரையும், பகுத்தறிவையும் சாடுகிற பார்ப்பன இராஜாக்களின் சதிப் பேச்சுக்கள் இனி இங்கே எடுபடாது.

ஏனெனில் “பெரியார்” என்பது ஓர் மனிதரைக் குறிப்பதன்று; பெரியாரென்பது அடக்குமுறைக்கெதிரான கருத்தியல்.

கடவுளோ, கந்து வட்டியோ எதுவாயினும் சுரண்டல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும், அடிமை முறைக்கும் எதிராய்ப் பெரியார் என்றென்றும் எழுவார்.

இது பெரியார் மண். இங்கே பார்ப்பன பசப்பு வார்த்தைகள் இனி மனநோயாளிகளின் உளறல்களாகவே கொள்ளப்படும்.

தீக்குளிப்பினால் ஏற்பட்டுள்ள மனித உயிர்களின் இழப்பை மனிதாபிமானத்தோடு அணுகாமல் மதவெறியோடு அணுகும் மனித வடிவில் உலவும் மிருகங்களை இனி நாட்டில் அதிகம் பேச வைப்பதே சமூக நீதிக்குப் பேராபத்து.

நீட் தேர்வின் நெருக்கடியால் தூக்கிலிடப்பட்ட அனிதா, சாதிய வெறிக்குப் பலியான இளவரசன், கோகுல்ராஜ், சங்கர், பார்ப்பன வெறிக்கு பலியான இராம் குமார், கந்து வட்டிக் கொலைகள் என இக் கொடுமைகளை மக்கள் பார்த்துச் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

ஒரிருநாள் வருத்தம், அஞ்சலி, கண்டனம் என்பதோடு கடந்து போய்விடாமல் அத்துனை அரச பயங்கரவாதப் பச்சைப் படுகொலைகளும் பட்டியலிட்டு நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் எச்.இராஜாக்களின் கருத்தியலை ஒழிக்க வேண்டியது கருஞ்சட்டைகளின் தொடர் பணியாக்குவோம்.

இசக்கிமுத்துவின் குடும்ப இழப்பின் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இனி இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்காதவாறு சட்டங்கள் நேர்மையாய் அமல்படுத்திட வேண்டும்.

இல்லையேல்..,

இதேநிலை நீடிக்குமானால் மக்களின் மனங்களில் உள்ளே சிவந்துக் கொண்டிருக்கும் நெருப்புக் கங்குகள் ஆட்சியாளர்களையும், குறிப்பாக எம் மக்களின் இழப்பை கேலிக் கூத்தாக்கும் எச்.இராஜாக்களின் இந்துத்வா, பா.ஜ.கவையும் நோக்கிப் பாயும்!

Pin It