ஊழலுக்கு எதிராகப் பேசிப் பேசித் தன்னை ‘மிஸ்டர் கிளீன்’ என்று காட்டிக் கொண்டவர் மோடி.

பெங்களுர் எடியூரப்பா தொடங்கி மும்பையைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வரை ஊழல் பேசப்பட்டது.

இப்பொழுது ஜீ.... பூம்பா பூதத்தைப் போல ‘ஜெய் ஷா குண்டால்’ என்ற மாபெரும் ஊழல், அமித்ஷா மகன் வடிவில் உருவெடுத்துள்ளது.

2012 ஆம் ஆண்டில் ரூபாய் 50,000 இல் நிறுவனம் தொடக்கம். முதலாண்டில் 6,230 ரூபாய், 2013 இல் 1,724 ரூபாய், 2014 இல் 18,728 ரூபாய் இழப்பு ஏற்பட்ட இந்த நிறுவனத்திற்கு 2015 - 2016 நிதியாண்டில் மட்டும் 80 கோடி ரூபாய் வரவு செலவு ஆகியுள்ளது.

இது எப்படிச் சாத்தியமானது-? இதற்குப் பின்புலமாக இருந்தவர் அன்றய மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல். இது எப்படி மிஸ்டர் கிளீன் மோடிக்குத் தெரியாமல் போயிருக்கும்.

பாஜக மோடி ஆட்சியின் மிகப் பெரும் ஊழல் மட்டுமன்று, அதிகார வரம்பு மீறலும் இதில் உள்ளடங்கிருக்கிறது.

பத்துமடங்கு வருமானம் உயர்ந்தாலே அத்தனை துறைகளையும் பயன்படுத்தி விசாரணை செய்யும் மோடி, ஜெய் ஷா நிறுவன வருமானம் ஒரே ஆண்டில் மட்டும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதை மோடி விசாரணை நடத்தாதது ஏன் என்று ராகுல்காந்தி குரல் எழுப்-புகிறார். இவர் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்.

ஆனால், பாஜகவைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுள் ஒருவரான யஷ்வந்த் சின்ஹாவே இந்த ஊழலுக்கு எதிராக அறிக்கை வெளியிடுகிறார்.

அமித் ஷா மகன் ஜெய் ஷாவைப் பாதுகாக்க மத்திய அமைச்சர் இவ்விவகாரத்தில் இறங்கி உள்ளதாகவும் -

இந்த மாபெரும் ஊழல் குற்றச்சாட்டில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட் ஜென்ரல் துஷார் மேத்தா, இந்தத் தனிநபர் வழக்கில் எப்படி வாதாடலாம், மத்திய சட்ட அமைச்சகம் இதற்கு எப்படி அனுமதி அளித்தது, இது மிகப்பெரும் விதிமீறல், ஊழல் என்கிறார்கள் யஷ்வந்த் சின்ஹா, சந்துருகன் சின்ஹா.

முந்தய காங்கிரஸ் ஆட்சியின் போது ஊழலுக்கு எதிராக என்று சொல்லி அன்னா அசாரே, கிரன்பேடி போன்றோரை வைத்துப் போராட்டம் நடத்தினார் மோடி.

இன்று அசாரேயைக் காணவில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் கிரன்பேடிக்குக் கிடைத்துவிட்டது.

ஜெய் ஷா ஊழலுக்கு மோடி வாய்திறக்காமல் இருப்பது ஏன்-? விசாரணை நடத்தாமல் இருப்பது ஏன்-?.

பதில் சொல்லும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

பாஜக ஆட்சியின் சரிவுக்கு விழுந்த பெரிய அடி இது.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.