நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு கூட்டத்தில் பேசும்போது, "தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டால் 400 கோடி தருவதாகச் சொன்னார்கள். தெருக்கோடியில் நின்றாலும் நிற்பேனே இல்லாமல், கோடிகளுக்கெல்லாம் இந்தச் சீமான் மயங்க மாட்டான்" என்று பேசினார். அது மட்டுமல்லாமல், 'நாங்கள் சத்தியத்தின் பிள்ளைகள்' என்று அடிக்கடி கூறிக் கொண்டார்.

அந்த சத்தியத்தின் பிள்ளைகளிடம் சில கேள்விகள் -

அப்படி 400 கோடி ரூபாய் பேரம் பேசியவர்கள் யார்?அவர்களை பற்றித் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவித்தீர்களா? லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தீர்களா?

நீங்கள் அறிவும், மான உணர்ச்சியும் உடைய சத்தியத்தின் பிள்ளைகள் என்பதால், கண்டிப்பாக இந்நேரம் புகார் கொடுத்திருப்பீர்கள் என்றும், அந்த உண்மைகளை வெளியிடவும் முன்வருவீர்கள் என்றும் நம்புகிறோம்.

ஒருவேளை வெளியிடாமல், இதற்கும் விடை சொல்லாமல் மெளனமாக இருந்தால், நீங்கள் மிகப் பெரிய ஊழலுக்குத் துணை போனவர் ஆவீர்கள் என்பதுடன், பேரம் படியாததால்தான் உண்மையை வெளியிட மறுக்கின்றீர்கள் என்றும் ஆகும்.

சத்தியத்தின் பிள்ளைகளே, உண்மை அறியக் காத்திருக்கின்றோம் !

         - சுப.வீரபாண்டியன்

Comments

2 comments

2
ஆனந்தன்
வணக்கம். பெரியார் ஒரு பழுத்த பழம் என்றால், அதை உண்டு தமதாக்கிக் கொள்ளாமல், கொஞ்சம் தள்ளி வைத்துவிட்ட பின்னால் அது மெல்ல மெல்ல அழுகிப் போவதைத் தவிர என்ன நிகழும்! உலகெங்கும் சரியான சித்தாந்தங்களுக்கு, அதைப் பின்பற்றுபவர்களால் இதுதானே நடந்திருக்கிறது. அதை உண்டதாகச் சொன்னவர்கள் மெல்ல மெல்ல அழுகத் துவங்கும் போது ஆரம்பகட்டத்தில், அதில் நன்மை 99% மும் கெடுதி 1% மும் இருக்கும். காலப்போக்கில், அதில் நன்மை 0% கெடுதி 100% என்றாகிவிடுவது நியதி அல்லவா! இது சரியான சித்தாந்தத்தின் பிழையால் நிகழ்ந்ததல்ல; மாறாக, அதைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்பவர்களின் பலவீனத்தால்தான் ஆகும். இந்த உலகத்தின் எந்த சீர்திருத்தமும் குறிப்பிட்ட ஆயுள் கொண்டதுதானே! ஆரம்பத்தில் இருந்த பெருமைகளுக்காக, தி.மு.க – வின் பிந்தைய துரோகங்களை சலுகைகளாக அனுமதிப்பது தாராளவாதமாகாதா? உலகமயமாக்கலில், இந்தியப் பாராளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் அதிகாரம் இருப்பதாக நம்புகிறீர்களா? ஒவ்வொரு முறையும் பா.ஜ.க – தனது வெறியாட்டங்களை அதிகம் நிகழ்த்தியது தாம் அதிகாரத்தில் இல்லாதபோதுதானே! நிரந்தர அதிகாரமுள்ள அதிகார வர்க்கத்தில் தமது ஆட்களை அமர்த்திய பின் அவர்களுக்குத் தற்காலிக அதிகாரம் இரண்டாம்பட்சம்தானே. மேலும், பா.ஜ.க – வும் காங்கிரசும் நேர் எதிரான கட்சிகள் என்றா நீங்கள் நம்புகிறீர்கள்! உலகமயமாதலுக்கு பாசிசமும் பாசிசத்துக்கு உலகமயமாயதலும் துணைபுரியத்தானே செய்யும். உலகமயமாதலில் பா.ஜ.க – வுக்கும் காங்கிரசுக்கும் வித்தியாசம் உண்டா? தி.மு.க தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் பாசிசத்தையும் உலகமயமாதலையும் எதிர்க்க முடியும் என்றா நம்புகிறீர்கள்? புறநிலை எதார்த்தத்துக்கு இசைவில்லாத அகநிலை தோல்வியடையாதா? சீமான் கட்சி அதன் அக முரண்பாட்டினாலேயே சீரழியப் போகிறது, தி.மு.க – வைப் போல. நன்றி.
ஆனந்தன்
வணக்கம். பெரியார் ஒரு பழுத்த பழம் என்றால், அதை உண்டு தமதாக்கிக் கொள்ளாமல், கொஞ்சம் தள்ளி வைத்துவிட்ட பின்னால் அது மெல்ல மெல்ல அழுகிப் போவதைத் தவிர என்ன நிகழும்! உலகெங்கும் சரியான சித்தாந்தங்களுக ்கு, அதைப் பின்பற்றுபவர்கள ால் இதுதானே நடந்திருக்கிறது . அதை உண்டதாகச் சொன்னவர்கள் மெல்ல மெல்ல அழுகத் துவங்கும் போது ஆரம்பகட்டத்தில் , அதில் நன்மை 99% மும் கெடுதி 1% மும் இருக்கும். காலப்போக்கில், அதில் நன்மை 0% கெடுதி 100% என்றாகிவிடுவது நியதி அல்லவா! இது சரியான சித்தாந்தத்தின் பிழையால் நிகழ்ந்ததல்ல; மாறாக, அதைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்பவர்களின் பலவீனத்தால்தான் ஆகும். இந்த உலகத்தின் எந்த சீர்திருத்தமும் குறிப்பிட்ட ஆயுள் கொண்டதுதானே! ஆரம்பத்தில் இருந்த பெருமைகளுக்காக, தி.மு.க – வின் பிந்தைய துரோகங்களை சலுகைகளாக அனுமதிப்பது தாராளவாதமாகாதா? உலகமயமாக்கலில், இந்தியப் பாராளுமன்றத்துக ்கும் சட்டமன்றங்களுக் கும் அதிகாரம் இருப்பதாக நம்புகிறீர்களா? ஒவ்வொரு முறையும் பா.ஜ.க – தனது வெறியாட்டங்களை அதிகம் நிகழ்த்தியது தாம் அதிகாரத்தில் இல்லாதபோதுதானே! நிரந்தர அதிகாரமுள்ள அதிகார வர்க்கத்தில் தமது ஆட்களை அமர்த்திய பின் அவர்களுக்குத் தற்காலிக அதிகாரம் இரண்டாம்பட்சம்த ானே. மேலும், பா.ஜ.க – வும் காங்கிரசும் நேர் எதிரான கட்சிகள் என்றா நீங்கள் நம்புகிறீர்கள்! உலகமயமாதலுக்கு பாசிசமும் பாசிசத்துக்கு உலகமயமாயதலும் துணைபுரியத்தானே செய்யும். உலகமயமாதலில் பா.ஜ.க – வுக்கும் காங்கிரசுக்கும் வித்தியாசம் உண்டா? தி.மு.க தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் பாசிசத்தையும் உலகமயமாதலையும் எதிர்க்க முடியும் என்றா நம்புகிறீர்கள்? புறநிலை எதார்த்தத்துக்க ு இசைவில்லாத அகநிலை தோல்வியடையாதா? சீமான் கட்சி அதன் அக முரண்பாட்டினாலே யே சீரழியப் போகிறது, தி.மு.க – வைப் போல. நன்றி.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.