தொடர்புடைய படைப்புகள்

"மாட்டுக்கறி தின்னும் புலையா - உனக்கு
மார்கழித் திருநாளா?'' - என்ற கேள்வியால்தான் அன்று நந்தன் முகத்தில் அறைந்தனர். இன்றும் தொடர்கிறது நந்தன் கதை.

உண்ணும் உணவு, செய்யும் தொழில் எல்லா வற்றுடனும் சாதி முடிச்சைச் சலிக்காமல் போட்டது, இந்துத்வாவின் வருண சமூகம். உண்ணும் உணவில் ஒருவருக்கு உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டதும், உண்ணும் உணவைக் கொண்டு ஒருவரின் சாதி நிர்ண யிக்கப்பட்டதும், உலகிலேயே இங்கு மட்டும்தான்.

brahmins_321ரத்தக்கண்ணீர் படத்தில் ராதா சொல்வார் - இங்கதான்டா சாப்பிடறதுல கூட ரெண்டு கட்சி வச்சிருக்கான் - என்று. அது கட்சியன்று, சாதி. இரண்டல்ல இரண்டாயிரம். பார்ப்பனர்கள் புலால் உண்ணாதவர்களாம். அதனால் உயர்ந்தவர்களாம். அவர்களைப் பார்த்து சைவப் பிள்ளை, சைவச் செட்டியார், சைவ முதலியார் என ஒரு வரிசை. பெரியார் சொல்வார், "இவனுங்க எல்லாம் ஒன்றரைப் பார்ப்பானுக்குச் சமம்'' வரலாற்றைப் புரட்டினால், புலால் உண்ணும் பழக்கமே எங்கிருந்து, யாரிடமிருந்து வந்தது என்பது புரியும். யாகம் நடத்தி, அந்த யாகத்தீயில் மாடுகளையும், குதிரைகளையும் வெட்டிப்போட்டு, நெய் வழிய வழிய புலால் உண்ட கூட்டம் எது என்பதைப் "புனித வேதங்கள்' புகலும்.

"ரிக்வேதகால ஆரியர்கள்' என்னும் நூலில் ராகுல சாங்கிருத்தியாயன், "அவர்களிலே (ஆரியர்களில்) மாமிசம் உண்ணாதவர்களே எவரும் இல்லை எனலாம். பெரிய பெரிய ரி´கள், முனிவர்களுக்கு விருந்து படைக்க வேண்டுமென்றாலும் புலால் மிகவும் அவசியமான ஒன்றாகும்'' என்று எழுதியுள்ளார்.

"தன் மகன் புலவனாகவும், புகழ்பெற்றவனாகவும், நல்ல பேச்சாளனாகவும், எல்லா வேதங்களையும் படித்தவனாகவும், முழு ஆயுளைக் கொண்டவனாகவும் இருக்க வேண்டுமென விரும்பினால், தாயானவள் நெய்யுடன் கலந்த பொலி எருது அல்லது எருதுவின் மாமிசம் கலந்த சாதம் சாப்பிட வேண்டும்'' என்கிறது பிரகதாரண்ய (6-4-18) உபநிடதம்.

அன்று வாழ்ந்த ஜீவகாருண்ய சீலர் புத்தர் மட்டுமே. "அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று' என உரைத்தவர் வள்ளுவர் மட்டுமே. மற்ற அனைவரும் மாட்டுக்கறி தின்ற மகானுபாவர்கள் தாம்!

அவர்கள் தின்ற போதெல்லாம், மாட்டுக்கறி என்பது மாமுனிவர்களின் உணவாய் இருந்தது. அதனையே நாம் தின்னத் தொடங்கிய பின், அது அருவெறுக் கத்தக்க உணவாகிவிட்டது. கொல்லாமை அறம் கூறி அன்று பெளத்தமும், சமணமும் மக்களிடம் செல்வாக்குப் பெறுவதை அறிந்த ஆதி சங்கரர், அதனைத் தன் கொள்கையாக வரித்துக் கொள்ள முயன்றார்.

பெளத்தத்தின் பல சிறப்புக் கூறுகளைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, தன் மதமே அஹிம்சை போற்றும் அரிய மதம் என ஆரவாரம் செய்தார். அதனால்தான்அவரைப் "பிரசன்ன பெளத்தர்' (பெளத்தத்தின் பின்னால் மறைந்து நிற்பவர்) என்று இன்றும் கூறுகின்றனர். இப்படித்தான் பார்ப்பனர்கள் "சைவர்களாக' ஆயினர். அவர்கள் சைவர்கள் ஆனவுடன், அசைவர்கள் ஈனப்பிறவிகள் என்று அறிவிக் கப்பட்டனர்.

அசைவம் என்று சொல் லப்படும் புலால் உண்ணும் பழக்கத் திலும் பல நிலைகள் கற்பிக்கப் பட்டன. ஆடு, மீன், கோழி தின்பவர்கள் சற்று உயர்தரம். "கோமாதா' என்று போற்றப்படும் மாட்டின் கறியை உண்பவர்கள் புலையர்கள், கீழானவர்கள். அவர்களைத் தீண்டவே கூடாது. பன்றிக்கறி தின்பவர்களோ அவரினும் கீழான வர்கள். பூனைக்கறி, நரிக்கறி தின்பவர் கள் எல்லோரும் இழிவானவர்கள்.

எழுதப்படாத சட்டமாக இன்றுவரை நம் சமூகத்தில் இதுதானே நிலவுகிறது? உழைக்கும் மக்கள் மாட்டுக்கறியை விரும்பி உண்பதற்கான காரணம் என்ன? குறைந்த செலவில், நிறைந்த புரதம் அதில் உள்ளது என்பதுதான். வெயிலில் போராடி, வியர்வை சிந்தி உழைப்போர் தங்களுக்குத் தேவையான புரதச் சத்தைப் பெறுவதற்கு அந்த உணவை நாடுகின்றனர். அதிலென்ன குற்றம்? அதிலென்ன அருவெறுப்பு? கோழி, கண்டதையும் தின்கிறது. மீனோ அழுக்கையே ஆகாரமாகக் கொள்கிறது. அவற்றை எல்லாம் தின்னலாமாம். அது நாகரிகமாம். ஆனால், புல், வைக்கோல், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு ஆகியனவற்றை மட்டும் உண்டு வளரும் பசு மாட்டின் கறி அருவெறுப்பாம். எந்த ஊர் நியாயம் இது! அவாளின் அந்த ஊர் நியாயம்தான்...வேறென்ன?

மேலை நாடுகளில் நூற்றுக்கு தொன்னூறு பேருக்கு மேல், மாட்டுக்கறியும், பன்றிக்கறியும்தான் உண்கிறார்கள். அமெரிக்காவில் வான்கோழிக் கறிதான் சிறப்பு விருந்து. தென் அமெரிக்காவில் குதிரைக் கறியும், அரபு நாடுகளில் ஒட்டகக் கறியும் சாதாரணமானவை. சீனாவில் தவளை, பாம்பு எல்லாம் உணவு வகைகளே. கொரிய நாட்டின் தலைநகரில் (சீயோல்) நாய்க்கறிக்குத் தனி வரவேற்பு உண்டு.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான உணவுப் பழக்கம் உள்ளது. அவரவரின் தேவை, சுவையைப் பொறுத்ததாகவும், அந்தந்த நாட்டுச் சூழல், பருவநிலைகளைப் பொறுத்த தாகவும் உணவுப் பழக்கம் அமைகின் றது. ஆனால் உணவை வைத்து உயர்வு தாழ்வு எங்கும் கற்பிக்கப்படுவதில்லை, இந்தியாவைத் தவிர.

அதனால்தான், ஜெயலலிதா மாட்டுக்கறி தின்னும் பழக்கமுடையவர் என்று நக்கீரன் எழுதியவுடன், அவர்களின் அலுவலகத்தைக் கல்லால் அடிக்கின்றனர். எங்கள் தலைவியை எப்படி இழிவுபடுத் தலாம் என்கின்றனர்.

இதிலே இழிவு எங்கிருந்து வந்தது. ஒரு வேளை அவருக்கு அந்தப் பழக்கம் இல்லையயன்றால், நக்கீரன் தவறான செய்தி வெளியிட்டதாய்ச் சொல்லி, அதற்குரிய சட்ட நடவடிக்கையை எடுத்துக்கொள்ளட்டும். ஜெயலலி தாவை நக்கீரன் இழிவுபடுத்தி விட்ட தாக ஏன் சொல்ல வேண்டும்?

அப்படிச் சொல்வதன் மூலம், மாட்டுக்கறி தின்பது இழிவு என்று தானே ஆகிறது. அப்படியானால் மாட்டுக்கறி தின்பவர்கள் அனைவரும் இழிவானவர்கள் என்பதுதானே பொருள். அப்படிச் சொல்வது தீண்டாமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றம் என்பது ஒருபுறமிருக்க, மாட்டுக்கறி தின்னும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை இழிவானவர்கள் என்று சொல்ல எவனுக்கும் உரிமை யில்லை என்பதை உணர வேண்டும்.

மாட்டுக்கறி தின்பவர்கள் அனைவரும் இழிவானவர்கள் என்றால், அந்த இழிந்தவர்களின் வாக்குகள் இனி எங்களுக்கு வேண்டாம் என்று அவர்கள் முதலில் அறிவிக்கட்டும். அதன்பின், நக்கீரன் அலுவலகத்தைத் தாக்கலாம். அப்படித் தாக்குகிறவர்களும், மாட்டுக் கறி சாப்பிடாத "அவாளாகவே' மட்டும் இருக்க வேண்டும் !

Comments

12 comments

12
Uthayakumar Abimanasingham
அய்யா, இருக்கு வேததில் மாடு, குதிரை என்பவைகள் மாத்திரம் யாஹஙகளில் கொன்று தின்பது பற்றிக் கூற்ப்படவில்லை. "ஸோம" பானத்தினை அருந்தி, தேவ கன்னிகைகளுடன் களியாட்டம் செய்வது பற்றிய பல பாட்டுக்களும் உள்ளன.
இந்த நிலையில், 'இந்து' இந்தியாவில் மது பானம், போதைப்பொருள்கள் கட்டுப்படின்றி விற்க அனுமதி கிட்டைப்பதிலும் எந்தவித ஆச்சரியமும் இல்லை.
எமது மக்கள் பண்டைய நூல்களைப் படித்து சரியான விளக்கஙளை ஏற்படுத்திக் கொள்ளாவிடின் 'இந்து' ஆளும் வர்க்கஙகள் தமக்கு எற்ற் எல்லாம் செயும் நிலைதான் இந்தியாவில் ஏற்படும்.
திலிப் நாராயணன்
மாட்டுக்கறி சாப்பிடுவதை கைவிட்டவர்கள் மாட்டின் பாலை இன்னும் சாப்பிட்டுக்கொண்டிருப்பதேன். மாட்டின் பால் என்பது அதனுடைய ரத்தமன்றி வேறென்ன? ஆக அவர்களும் புலால் உண்ணும் புலையர் வகையறாதான். கற்பித்துக்கொண்டதுதான் கீழே மேலே என்பதெல்லாம்.
Chan
Heard that pork is prohibited in some religion. which is that ? Can Subavee elloborate on them in some article ?
Cibi
If eating beef is a non issue , why should nakheeran give so much importance to it and publish that as cover story.
sudha
She never told that beef eaters are undignified. Why you are making scene for that. Media has some responbilities through public. Leaving all the things they are doing experiments in such unwanted things....Is it so important to tell us Jayalalitha is eating beef or not. Or Nakkeeran is taking any enumeration who are all the brahmins eating Beef. Your article simply rounding all the way and ends with Jayalalitha. I don't know why?
ஆறுமுகம்
ஜெயலலிதா மாட்டுக்கறி உண்பதை இழிவாக கருதினால் (நக்கீரன் செய்தி அப்படித்தான் உள்ளது) அவர் அதை உண்பாரா? மாட்டுக்கறி சாப்பிடுவதை இழிவாக கருதவில்லையென்றால் அதை நக்கீரன் பத்திரிக்கை செய்தியாக வெளியிட வேண்டிய அவசியமே இல்லையே. அது போகட்டும் அடித்து நொறுக்கியது யார் அடிமைத்தமிழர்கள் தானே அவர்களை கண்டிக்க மனமின்றி அவர்களை வழிபடுத்தாமல் ஜெயலலிதாவை வசைபாடுவது எவ்வகையில் நியாயம்? பன்றி கறியை இஸ்லாமியர்கள் தானே வெறுக்கிறார்கள் அப்படியானால் அவர்கள் பார்ப்பனர் போல் ஆதிக்க வெறியர்களா? புத்தர் வள்ளுவரை தவிர அணைவரும் புலால் உண்பவர்கள் பட்டியலில் சேர்த்த வாழ்ந்து மறைந்த சைவ நெறி கடைபிடித்தவர்கள் அணைவரையும் நிந்திப்பது எவ்வாறு சரியாகும். இன்றும் இயற்கை உணவை மட்டுமே கொண்டு வாழ்வோறும் உள்ளனர். தவறு அடிதைத் தமிழனுடையாதாக இருக்க அதை கண்டிக்க மனமின்றி பார்ப்பனரை குறைகூறுவது சரியன்று.
seyed muhammed
எந்த ஒரு விமர்சனமானலும் அதில் இஸ்லாத்தை புகுத்துவது அண்மை கால பேஷனாகிவிட்டது.எவ்வித தகவலும் அறிவும் சரியான புரிதலுமின்றி கட்டுரைக்கு சம்பந்தமின்றி விமர்சனங்கள் எழுதுகிறார்கள்.
இந்த கட்டுரையிக்கு ஷான் என்பவர் எழுதியுள்ள விமர்சனம் அதற்கான சரியான உதாரணம்.
மாட்டுகறி தின்பதை ஜாதிய அடிப்படையாக்கி மனிதர்களை தாழ்வாய் கருதுகிறது பார்ப்பனியம் என்கிறார் கட்டுரையாளர்.இதை மறுத்தோ ஆதரித்தோ கருத்து எழுதலாம்.அதை விட்டு விட்டு பன்றியின் மாமிசத்தை தின்ன மறுப்பவர்களை பற்றி சுபவீ எழுத தயாரா?என கேட்ப்பது தன்னிடம் மறுத்து சொல்ல ஒன்றுமில்லை என்பதை தான் வெளிப்படுத்தும்.
இஸ்லாம் பன்றி முதல் பல காட்டு மிருகங்களை பறவைகளை தின்ன வேண்டாம் என தடுத்திருப்பது ஜாதிய பாகுபாட்டின் பின்புலத்தில் அல்ல.இதை தின்பவர்கள் யாராகினும் அவர்கள் இஸ்லாமிய சட்டப்படி குற்றவாளிகள்.சிலர் சிலர் தின்ன கூடாது என்ற எந்த பாகு பாடும் உணவிலில்லை.எல்லோருக்கும் ஒரே சட்டம்.சட்டத்தை வழங்கியவன் மனிதர்களை படைத்த ஒரே இறைவன்.
இப்பொழுது பன்றி ஏன் தின்ன கூடாது?பன்றி போன்று இன்னும் பல மிருகங்களின் பறவைகளின் இறைச்சியை ஏன் தின்ன கூடாது?என்பது நல்ல கேள்வி.எனினும் கட்டுரைக்கு சம்பந்தமில்லாதது.ஆதலால் அதை பற்றிஎழுத எனக்கு அனுமதியில்லை.ஷானுக்கு அவசியம் எனில் என்னுடை ய செய்யது முஹம்மது என்ற முக நூலிற்கு வருகை தந்தால் விளக்கம் தரலாம்.
கட்டுரையாளரின் மற்றுமொரு கருத்து நக்கீரனின் கட்டுரை சம்பந்த பட்டவர்களின் உள்ளத்தை புண்படுத்தியிருந்தால் அதை சந்திக்க சட்ட ரீதியான வழியிருக்க ஏன் இப்படி பட்ட ஆர்ப்பாட்டம் அலங்கோலம்?இது ஆயிரம் மில்லியன் கேளிவிகள்.இது போல் ஒவ்வொருவரும் தங்களின் ஆத்திரத்தை வெளிப்படுத்தினால் அம்மாவின் அரசாங்கம் ஏற்று கொள்ளுமா?
கருத்தானாலும் கற்பனையானாலும் அதற்கு தடையில்லா சுதந்திரம் வழங்க படவில்லை.எனக்கு தடை போட நீ யார்?என கேட்டவர்கள் தான் தன்னை விட எல்லா வகையிலும் தரம் தாழ்ந்த கல் மண் மரம் மிருகம் என எல்லாவற்றையும் கடவுளாய் கற்பனை செய்தார்கள்.அதன் விளவு மனிதனுக்கான பல பயன் பாட்டு பொருட்கள் விரையமாக்கபடுகின்றன வீணடிக்கப்படுகின்றன்.
16 ஜனவரி 2012 அன்று பங்காள தேச எல்லையில் எல்லை காவல் படையினரால் ஒரு அப்பாவி அடித்து துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளான்.அந்த அப்பாவி செய்த தவறு மாடு என்னுடையது.அதை நான் வளர்த்து பராமரிக்கிறேன்.நான் அதை விற்க உனக்கு ஏன் லஞ்சம் தர வேண்டும் என கேட்டது தான்.ஊழலை ஒழிக்க புறப்பட்ட உத்தமர்கள் யாரும் இதை கண்டித்து அறிக்கை விடவில்லை.மாட்டின் உதிரத்திலிருந்து கிடைக்க பெறும் பாலை உறிஞ்சி உறிஞ்சி குடிக்கும் யாரும் ஏன் மாட்டை தின்ன விடாமல் தடுத்தோம்?என பேட்டியும் கொடுக்கவில்லை.பசு பல கடவுளர்கள் வசிக்கும் குடி என்றால் இறைச்சி மட்டும் தான் கடவுளர்கள்வாழும் வீடா?இரத்தமில்லையா?யோசியுங்கள்!
Chan
@Seyed: Oh is it Islam, I didnt know that. I didnt bring Islam here, you brought Islam by the way :-)
சி.மதிவாணன்
மாடு பாலாகவும், வியர்வையாகவும்- அதாவது உழைப்பாக- மனிதனுக்கு, அவன் இருத்தலுக்குத் துணையாகிறது. அதனால், மாட்டைச் சார்ந்த பொருளாதாரம் இருந்தபோது மாட்டின் கறியை உண்பதற்கு தடை விதிக்க, அக்கால முறைமைப் படி மாட்டுக்கறி உண்பவர்களுக்கு சமூக விலக்குக் கொண்டுவந்தனர்.
இந்த காலத்தில், ஓர் உயிர் உயிரோடு இருக்க, தனக்கு உணவாக ஆகக் கூடிய உயிர் பொருளை உண்டுதான் ஆக வேண்டும் என்ற உயிரி விதியைப் புரிந்துகொண்ட இந்த காலத்தில், இழிவு பற்றி பேசுபவர்கள், அதை மையப்படுத்தி செயல்படுபவர்கள், கடந்த காலத்தின் இறந்த ஆன்மாக்களின் இன்றைய வடிவம் என்பது மட்டுமே உண்மை. அவர்கள் பேய்கள். இறந்த உயிர்களின் மறு வடிவம் அல்ல.. மாறாக, இறந்த கருத்துக்களின் மறுவடிவம்.. அதனை அடித்தளமாகக் கொண்டு வாழத் துடிக்கும் அரக்கர்களின்/அரக்கிகளின் இன்றைய வடிவம்..
Kirkkadav
@chan....Man you reek of uppercaste crookedness. Even a decently kid knows that muslims don't eat pork and in your comment it was pretty obvious that you were referring to them. Don't act smart and better wipe off that sly smirk on your face
Kirkkadav
One wonders why pork and beef eating Europeans single-handedly developed math and science. What is the contribution of these vegetarians to the field of science and math? Some say Indians invented zero (which is questionable) and yet after many centuries their contribution still remains 'zero'. Some might say what about Ramanujam and might brag that his ideas are indecipherable. When Archimedes, Newton, Fermat, Leibniz and other beef and pork eating mathematicians strengthened mathematics with decipherable theorems I wonder why a vegetarian mathematician should scribble something that doesn't make sense. Why do vegetarian nuclear scientists (ordinary but snobbish engineers who act as scientists) beg beef and pork eating scientists for ideas? Why do vegetarian software laborers from this country die to work for beef and pork eating Gates, Ellison, Page and likes? Take any field, beef and pork eating lot pioneered while vegetarians simply copied them. Putting aside the ethical issue for the moment I wonder in what way a vegetarian is better than a beef eating Pulayan. Ethical vegetarianism is most welcome but dogmatic casteist vegetarianism should be uprooted. If not for my addiction to fried fish (especially sear and pomfret) I too would have been a vegetarian.
rajasekar
in that nakheeran artcle the real issue and content is "ammu atha jayalalitha will eat beef and also cook well" so she (jaya ) not had brahmin mentality in had food.this is expressed by MGR.But those people who attacked Nakheeran office says that NO,NO AMMA IS BHRAMIN SHE ALREADY SAID IN LEGISLATIVE AND SHE GOT BACK UP BY CHO.RAMASAMY,THE HINDU,TIMES NOW,DINAMALAR,DHINATHANTHI, NDTV SO jaya will follow bhraminism and she oppose ST/SC and other rationalist people.Being it is true nakheeran try to imitate jaya as rationalist and non biased. In the world india si number 2 in Diabeties For The Diabeties the madicine Vitamin B12 was extract from COW AND BUFFALO LIVER so already india consume cow... that to most patient from Bhramin, Chettiyar,Mudhaliyar,Gounder,Nayakar,Sharma,Rao.......

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.