நீ அணிந்திருந்தது
வெள்ளை வண்ணத்தில்
ஒரு கறுப்புச் சட்டை

நீ அக்கிரகாரத்தில் பிறந்த
பெரியார் திடல்

திருமணமே செய்துகொள்ளாத
உனக்குத்
தமிழகத்திலேயே பெரிய குடும்பம்

உன் பேனா
உரிமம் இல்லாமல்
நீ வைத்திருந்த ஆயுதம்

கலைஞர் உனக்கு
இரங்கற்பா எழுதவேண்டும்
என்பதற்காகவே
இறந்துபோனாயோ!

Pin It