நீ அணிந்திருந்தது
வெள்ளை வண்ணத்தில்
ஒரு கறுப்புச் சட்டை

நீ அக்கிரகாரத்தில் பிறந்த
பெரியார் திடல்

திருமணமே செய்துகொள்ளாத
உனக்குத்
தமிழகத்திலேயே பெரிய குடும்பம்

உன் பேனா
உரிமம் இல்லாமல்
நீ வைத்திருந்த ஆயுதம்

கலைஞர் உனக்கு
இரங்கற்பா எழுதவேண்டும்
என்பதற்காகவே
இறந்துபோனாயோ!

Comments

1 comment

1
dhiva
Very nice

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.