என்னைக் கவிதை
எழுதச்சொல்லி
கட்டாயப் படுத்தாதீர்...
உங்களின் பிறந்த நாளுக்கான
பரிசாகவோ,
உங்கள் பதவி உயர்வுக்கான
வாழ்த்தாகவோ,
உங்கள் மேடையில்
உங்களைப் பற்றிய
துதியாகவோ
இருப்பதைக் காட்டிலும்
ஒரு குழந்தையின் கையில்
உடைந்த
பொம்மையாகவேனும்
இருக்கவே விரும்புகிறது
என் கவிதை...

- இரா.பூபாலன்

Pin It