தங்க நிற மீன்களை கண்ணாடிக்குளத்தில்
சுமந்தலைகிறாள் சஹானா
அலையடிக்காத அதன் கரைகளில்
மோதி உடைகின்றன நீர்க்குமிழிகள்
உள்ளுக்குள் வேர்விட்ட மரம்
கிளைவெடித்த குளம் நிறைக்கிறது

சுற்றும் சக்கரத்தின் முனைகளில்
பெருக்கெடுக்கின்றன
நதியோடு எதிர்முனைப்பில் நீந்திய காலங்கள்
கடலாகிறது குடுவை நதியாடுகின்றன மீன்கள்
வீசியெறியும் உணவின் ஈர்ப்பில்
கரையுடைக்கின்றன

கரங்களை உயர்த்தி ரட்சிப்பின்
மீட்சியை அவற்றுக்கும் தருகிறாள் சஹானா

- கென்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.