நம் தேசத்தினை 

துளிர்க்க துளிர்க்க 

கிள்ளி எறிந்துவிடுகிறது 

இனம்புரியாத மிருகத்தின் 

நகங்கள் 

 

சிதறிய நேசம் ஒன்றுகூடி 

போர்க்களத்தில் அணிவகுக்கையில் 

பலிபீடமாகிவிடுகிறது 

அக்களம் 

 

மரணவாயிலில் அன்பின் 

தாகத்தில் ஏங்கும் நம் இளமை 

அதன் மூச்சுக் காற்றின் 

உஷ்ணத்தில் ஆவியாகிவிடுகிறது 

 

ஆம் இனி அம்மிருகத்தின் 

உக்கிரம் தணிந்து பரிதாபத்தின் 

சின்னமாகிவிடும் 

இன்னும் பல நேசங்கள் 

உயிர் பெறாத உரை.

More articles by வீரகரன் மாதேஷ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.