திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மாவட்டம் சார்பாக கல்வி வள்ளல் காமராசர், சாதி ஒழிப்பு போராளி இரட்டை மலை சீனிவாசன் ஆகியோரின் பிறந்த நாள் தெருமுனைப் பரப்புரைக் கூட்டம் பள்ளியாடி சந்திப்பில் 15-07-2017 சனிக்கிழமை மாலை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் வே.சதா தலைமையில், பள்ளியாடி சி.இளங்கோ முன்னிலையில் கழகப் பெரியார் பிஞ்சு ஆர்மலின் கடவுள் மறுப்பு வாசகத்துடன் துவங்கியது. கழகத் தோழர் தக்கலை விஸ்ணு வரவேற்புரையாற்றினார்.

மாவட்டச் செயலாளர் தமிழ் மதி, பெரியார் தொழிலாளர் கழக மாவட்டத் தலைவர் நீதி அரசர், தமிழ் நாடு அறிவியல் மன்ற மாவட்டத் தலைவர் மணிமேகலை, இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர், ஜெயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிறப்புப் பேச்சாளராக மதிமுக மாநிலப் பேச்சாளர் அனல் கண்ணன் “காமராசரும் பெரியாரும்” என்றத் தலைப்பில் உரையாற்றினார்.

நிகழ்வில் மாவட்ட பொருளாளர் மஞ்சுகுமார், பெரியார் தொழிலாளர் கழக மாவட்டச் செயலாளார் ஜாண் மதி, முன்னாள் மாவட்டத் தலைவர் சூசையப்பா, தோழர்கள் சாந்தா, இராஜேஸ் குமார், சுனில் குமார், ஜார்ஜ் ஸ்டீபன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இறுதியாக கழகத் தோழர்.தக்கலை அனிஸ் நன்றி கூற கூட்டம் இனிதே முடிவுற்றது.

இக்கூட்டம் இரு கோரிக்கைகளை அரசுக்கு வைத்தது.

மாத்தூர் பகுதியில் இரு மலைகளுக்கிடையில் தண்ணீரைக் கொண்டுச் செல்வதற்கு வசதியாக ஆசியாவிலேயே உயரமான தொட்டிப் பாலத்தை காமராசர் கட்டினார். இன்று சுற்றுலாத் தலமாகவும் இருக்கிறது. ஆனால் அதைக் கட்டிய காமராசரின் நினைவாக அவ்விடத்தில் எதுவுமில்லை.

1. தமிழக அரசு அத்தொட்டிப் பாலத்திற்கு “காமராசர் மாத்தூர் தொட்டிப் பாலம்” என்று பெயரிடவும்,

2. அப்பகுதியில் அவரின் முழு உருவச்சிலையை வைக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

கூட்டம் துவங்குவதற்கு முன்பு பகுத்தறிவுத் துண்டறிக்கைகள் பள்ளியாடி பகுதி முழுவதும் இளங்கோ தலைமையில் கழகத் தோழர்களால் வழங்கப்பட்டது.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.