ஹோமியோபதி மருத்துவம் என்பது கலையும், அறிவியலும் கலந்த ஒரு புதிய அறிவியலாக விளங்குகிறது. இதனால் அறிவியலை மட்டுமே அறிந்த அறிஞர் பெருமக்களுக்கு, இம்மருத்துவமுறை வெறும் வெற்றுருண்டை (Placebo) மருத்துவமாக தோற்றமளிக்கிறது. இவர்களால் இம்மருத்துவ முறையை சரியாக, அதன் முழுமையான பொருளில் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அல்லது புரிந்துக் கொள்ள முடியாதது போல நடிக்கின்றனர்.

இதனால் இம்மருத்துவ முறையின் பயன் பாடு, உலக மக்களின் ஒரு சில பகுதியினருக்கு மட்டுமே கிடைக்கிறது. இதற்கான மூன்று முக்கிய காரணங்கள்:-

       1. ஹோமியோபதியின் உயிராற்றல் கோட்பாடு.

       2. ஹோமியோபதி மருந்துகளின் செயல்பாடு.

       3. ஹோமியோபதியின் வீரியக் கோட்பாடு.

இன்றைய அறிவியல் வளர்ச்சி என்பது இந்த மூன்று வினாக்களுக்கும் ஏற்ற விடையை அளிக்கக் கூடிய வகையில் வளர்ந்துள்ளது. ஆனால் இவர்கள் இதன் துணைக் கொண்டு, தங்களுக்கான விடையை தேடாதது தான் காரணமாகும். இன்றைய அறிவியல் அறிஞர்களும் மற்றும் ஹோமியோபதி மருத்துவர்களும் தங்கள் துறையைத் தவிர, பிற துறைகளைப் பற்றி சிறிதும் அறியாத மூடர்களாகவே இருக்கின்றனர்.

எனவே மேற்குறிப்பிட்ட மூன்று வினாக்களுக்கும் உரிய விடையைக் காண வேண்டுமா னால், இவர்கள் முதலில் உளவியல் அறிவைப் பெற வேண்டியது அவசியமாகும்.

1. உயிராற்றல் கோட்பாடு :-

உளவியல் முறையாகக் கற்ற எந்த அறிவியல் அறிஞராலும் மற்றும் ஹோமியோபதி மருத்துவ ராலும், உயிராற்றல் கோட்பாட்டை எளிதில் புரிந்துக் கொள்ள முடியும். உளவியல் இருவகையான மனங்கள் இருப்பதாகக் கூறுகிறது. ஒன்று, வெளிமனம். மற்றது, ஆழ்மனம் அல்லது உள்மனம்.

தினசரி நிகழும் நிகழ்ச்சிகளை மூளையில் வெளிமனம் பதிவு செய்கிறது. தினசரி நிகழும் இன்பம், துன்பம் போன்ற உணர்வுகளை உள் மனம் மூளையில் பதிவு செய்கிறது. மேலும், ஒருவர் வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ அவர்களு டைய ஆழ்மனதில் அல்லது உள்மனதில் பதிவு செய்த நேர்மறையான நிகழ்ச்சிகளும் மற்றும் நேர்மறையான கருத்துகளுமே காரணமாகும்.

மக்களில் பெரும்பாலோர் தங்களின் வாழ்க் கை, தலைவிதிப்படி நடப்பதாக நம்புகின்றனர். ஆனால் வெகு சிலரே வாழ்க்கையை தங்கள் விருப்பப்படி வாழ்கின்றனர். இவர்களுடைய வாழ்க்கை நம்பிக்கைக்குரியதாக, மகிழ்ச்சிக்குரியதாக மற்றும் திட்டமிட்டபடி நடப்பதாகவும் உள்ளது.

இதற்கு காரணம், அவர்கள் ஆழ்மனதில் பதிவு செய்த எண்ணங்களே ஆகும்.

நாம் சாதரணமாக, உடல் ஆரோக்கியமாகத் திகழ, பச்சைக் காய்கறிகள், பழ வகைகள் மற்றும் கீரை வகைகள் போன்ற நல்ல நிலையில் உள்ள உணவுப்பொருட்களை உண்ண வேண்டும் என்பதை எல்லா அறிவியல் அறிஞர்களும் மற்றும் ஹோமியோபதி மருத்துவர்களும் உணர்ந்துள்ளனர். ஆனால் இதே காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை போன்றவை அழுகியிருந்தலோ அல்லது கெட்டுப்போயிருந்தலோ அதை உண்ணுவதில்லை. காரணம் ஆரோக்கியம் கெட்டுப் போகும் என்பதை உணர்ந்திருப்பது தான்

ஆனால், மனம் கெட்ட எண்ணங்களைப் பதிவு செய்வதால், ஆரோக்கியம் கெட்டுப்போகும் என்பதை இவர்கள் அறியாத நிலையில் உள்ளனர். வாழ்க்கை ஆரோக்கியமானதாக, ஒளிமயமானதா கத் திகழ, தங்கள் நல்ல எண்ணங்களைப் பதிவு செய்ய வேண்டும். நல்ல நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டும். நல்ல செயல்களை சமுதாயம் முன்னேற செயல்படுத்த வேண்டும். மேலும் இந்த செயல்பாடுகள் நிகழ நமது சமுதாயம் அவருக்கு உதவ வேண்டும்.

தீய எண்ணங்களும் மற்ற தீய செயல்களும் நிகழ்கின்ற சமுதாயத்தில், இவைகளே மக்கள் மனதில் பதிவாகின்றன. இதனால் அவர்களுடைய ஆரோக்கியம் கெடுகிறது. ஆகவே, சமுதாயத்தில் நிகழும் எல்லா தீய கருத்துக்களையும் தாங்களே விமர்சனம் செய்து, தங்கள் ஆழ்மனதில் நல்லவற்றை மட்டுமே, நேர்மறையானதை மட்டுமே பதிவு செய்து வந்தால் ஆரோக்கியமாக வாழமுடியும்.

இந்த ஆழ்மனத்தை அல்லது உள்மனத்தை தான் பேராசான் ஹானிமன் அவர்கள், தனது ஹோமியோபதி தத்துவ நூலான ஆர்கனானில்

“உயிராற்றல்” (Vital Energy) என்று பெயரிட்டு, அதன் தன்மையை பின்வருமாறு விளக்குகிறார்.

உயிராற்றல் தான் ஒரு மனிதனை நோயிலிருந்து மீட்டெடுத்து, அவனை ஆரோக்கியமான வனாகக் காப்பாற்றுகிறது. அதன் மூலம், அவனை உயர்ந்த இலட்சியம் உள்ளவனாக மற்றும் பகுத்தறிவு மிக்கவனாக மாற்றுகிறது (மணிமொழி - 9)

இந்த உயிராற்றல் என்பது மூளையைப் போன்ற பருப்பொருள் அல்ல. அது, “ஆற்றல்” (Dynamic) வடிவில் உள்ளது என்கிறார்.

இந்த உயிராற்றல் குறித்து காலஞ் சென்ற ஹோமியோ மருத்துவர் த.ச. இராசாமணி பின்வருமாறு விளக்குகிறார்:-

உலகில், நேர்முனை (Positive) மற்றும் எதிர்முனை (Negative) என்ற இரு ஆற்றல்கள் உள்ளன. இவைகளுக்கிடையே இடைவிடாத போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டம் தான் ஒருவனை ஆரோக்கிய நிலையிலோ அல்லது நோய் நிலையிலோ வைக்கிறது. போராட்டத்தில் நேர்முனை சக்தி கூடும் போது, ஆரோக்கியம் நிலவுகிறது. மாறாக எதிர்முனையின் சக்தி கூடும் போது நோய் பீடிக்கிறது.

ஒருவன், ஹோமியோபதி மருந்தை நோய் நிலையில் பயன்படுத்தும் போது, அவனுடைய உயிராற்றலின் சக்தி கூடி, அது, நோய் ஆற்றலை வீழ்த்துகிறது. அதாவது ஒருவன் நோய்வாய்ப் படும் போது, அவனுடைய உயிராற்றல் நோயின் ஆற்றலால் வீழ்த்தப்படுகிறது. வீழ்ந்த உயிராற் றலை, ஹோமியோபதி மருந்தின் ஆற்றல் தட்டி எழுப்பி, அதனை மீண்டும் சக்தி மிக்கதாக மாற்றுகிறது.

இதை, எப்படி இன்றைய அறிவியலின் அடிப்படையில் புரிந்துக் கொள்வது? ஒரு பொருளை ஆற்றலாக மாற்ற முடியும். அதே போல, ஆற்றலை பொருளாக மாற்ற முடியும் என்ற இயற்கை விதியை அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டின் விளக்கிவிட்டார்.

ஐன்ஸ்டினின் இந்த அறிவியல் விதியின் அடிப்படையில், ஹோமியோபதியின் உயிராற்றல் கோட்பாடு, ஹோமியோபதி மருந்துகளின் செயல்பாடு மற்றும் ஹோமியோபதியின் வீரியக் கோட்பாடு ஆகியவற்றை சரிவர புரிந்துக் கொள்ள முடியும் அல்லவா?

ஹோமியோபதி மருந்துகளின் செயல்பாடு :-

உலகிலுள்ள மற்ற மருத்துவ முறைகளில் எல்லாம், மருந்துகள் இன்று பருப்பொருள் வடிவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்துகளின் செயல்பாடு குறித்து, இன்றைய அறிவியல் அறிஞர்களும் மற்றும் ஹோமியோபதி மருத்து வர்களும் எந்தவித வினாக்களையும் எழுப்புவ தில்லை. ஆனால், இவர்கள் ஹேமியோபதி மருந்துகளின் செயல்பாடு குறித்து மட்டும் பல் வேறு வினாக்களையும், பல்வேறு எதிர்ப்புகளை யும் எழுப்புகின்றனர்.

அணுவைத் தொடர்ந்து பிளக்கும் போது, அது ஒரு கட்டத்தில் சக்தியாக மாறுகிறது என்ற விளக்கத்தைப் புரிந்து கொண்ட இவர்களால் பேராசான் ஹானிமன் விளக்கிய ஹோமியோபதி கோட்பாடுகளை மட்டும் தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறுவது, இவர்களின் கபட நாடகத்தையும் மற்றும் அறியாமையையும் பறைச் சாற்றுகிறது அல்லவா?

திடீர் வகை நோய்களை (Acute Diseases) ஹோமியோபதி மருந்துகள், அந்த நோயைத் தூண்டும் காரணத்தை (Maintaining Cause) களைவதன் மூலம் அந்நோயை வீழ்த்தி விடுகிறது.

நாட்பட்ட வகை நோய்களை (Chronic Diseases) ஹோமியோபதி மருந்துகள், அந்நோய்க்கான அடிப்படைக் காரணத்தை (Fundamental Cause) தீர்ப் பதன் மூலம் தனது செயல்பாட்டை நிகழ்த்துகிறது.

நாட்பட்ட வகை நோய்கள் நிலவ,

1. சோரா நச்சு.

2. சைக்கோசிஸ் நச்சு மற்றும்

3. சிபிலிஸ் நச்சு

ஆகியவை அடிப்படைக் காரணங்களாக திகழ் கின்றன.

  1. சோரா நச்சு முறிவு மருந்துகளின் செயல்பாடு என்பது நோய் நிலையில், செயல்பாடு குறைவுற்ற உறுப்புக்களைத் தூண்டி அவற்றின் திறனை, பழைய ஆரோக்கிய நிலைக்கு மாற்றுவது என்பதாகும்.
  2. 2. சைக்கோசிஸ் நச்சு முறிவு மருந்துகளின் செயல்பாடு என்பது உடலில் ஏற்படும் தசை வளர்ச்சிகளை கரைப்பதாகும். உதாரணத்திற்கு, தோலில் ஏற்படும் பாலுண்ணிகள் மற்றும் மரு போன்ற திசு வளர்ச்சி, மூளைக்கட்டிகள் மற்றும் கருப்பை கட்டிகள் போன்றவற்றை கரைக்கிறது.
  3. 3. சிபிலிஸ் நச்சு முறிவு மருந்துகளின் செயல்பாடு என்பது உடல் உறுப்புகளில், குறிப்பாக இதயம், மூளை, மத்திய நரம்பு மண்டலம், கண் மற்றும் பிறப்புறுப்புகளில் ஏற்படும் புண்ணையும் மற்றும் பிற அழிவுகளையும் குணப்படுத்துகிறது அல்லது தணிக்கிறது மற்றும் இதன் காரணமாய் ஏற்படும் அதீத வலியுணர்வையும் குறைக்கிறது.

வீரியக் கோட்பாடு :

பேராசான் ஹானிமன் முதன் முதலில் ஹோமியோ மருத்துவச் சிகிச்சை அளிக்கும் போது, அலோபதி மருத்துவ முறை போன்று, பருப்பொருள் வடிவிலேயே ஹோமியோபதி மருந்துகளைப் பயன்படுத்தினார். ஆனால், தன் அனுபத்தின் மூலம் பருப்பொருள் வடிவில் மருந்தளிக்கும் போது, நோய் தணிவதற்கு மாறாக அதிகரிக்கும் என்ற உண்மையைக் கண்டறிந்தார்.

எனவே, மருந்தின் அளவைப் படிப்படியாகக் குறைத்தளித்தார். இப்படி மருந்தின் அளவு குறையக் குறைய நல்வ விளைவுகள் ஏற்பட்டன.

இறுதியில் அவர், “வீரியப்படுத்துதல்” என்ற ஹோமியோபதி கோட்பாட்டைக் கண்டறிந்தார். இக்கோட்பாடு, மருந்தின் ஆற்றலை அதிக அளவில் உயர்த்துகிறது என்ற உண்மையை உணர்ந்தார்.

முதலில் அவர் ஹோமியோ மருந்துகளை, முதலாவது வீரியத்திலிருந்து முப்பதாவது வீரியம் வரை பயன்படுத்தினார். இதனால் நோயை குணப்படுத்த, மருந்தைப் பல வேளைகள் (Doses) கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

அதன் பிறகே, மருந்தை உயரிய வீரியத்தில் ஒரு வேளை மட்டும் (Single Dose) கொடுத்து, நோயைக் குணப்படுத்தலாம் என்ற மருந்தைக் கண்டறிந்தார். 

அப்படியும் கூட, சில மருந்துகளின் ஒரு வேளைச் செயல்பாடு பயன் தர நீண்ட நாட்களை எடுத்துக் கொண்டன. எனவே, அவருடைய வாழ்நாளின் இறுதிஆண்டுகளில், “50 மில்லிசிமல்” என்ற புதிய வீரியக் கோட்பாட்டைப் பற்றி தனது இறுதிப் பதிப்பு (6வது பதிப்பு) ஆர்கானில் விரிவாக விளக்கியுள்ளார். இதன் மூலம், தன் வாழ்நாள் இலட்சியமான, நோயாளருக்கு உடனடி யான, துயரம் விளைவிக்காத, நிரந்தர குணமடைவை ஹானிமனால்தான் இறப்பதற்குள் ஏற்படுத்த முடிந்தது.

இதனால் தான் அவருடைய கல்லறையில், நான் வீணே வாழவில்லை என்ற வாசகம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த சமுதாயத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் பேராசான் ஹானிமனைப் போல வாழ உறுதி எடுக்க வேண்டும்.

Pin It