Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
மார்ச் 2009
திரைவிமர்சனம்
ஜெயமோகன் & பாலா கோஷ்டியின் கின்னஸ் சாதனை
அம்மி கொத்த மூணு வருஷம்!

தீசுமாசு டி செல்வா

Nan Kadavul உளறலும், திமிரும் சரிவிகிதத்தில் கலந்து வந்தால் தமிழ்ச் சினிமாவில் அதற்குப் பெயர் ‘பஞ்ச் டயலாக்’. சூப்பர் ஸ்டார் ஆரம்பித்து வைத்த இந்தக் கிறுக்குத்தனம் நம்ம இலக்கிய ‘மாமேதை’ ஜெய மோகன் வரைக்கும் வந்தே விட்டது.

வெண்டக்காயை வெளக்கெண்ணெயில் குழப்பி எடுத்த கதையா வளவளா எழுத்துக்களை வார்த்தைகளாக வடிக்கும் அண்ணன் ‘ஜெ.மோ’ சினிமா என்றதும் சொந்தச் சரக்கு வேலைக்காகாது என்று மணிரத்னம் ஸ்டைலில் வார்த்தைகளை இடம் வலமாக, வலம் இடமாக ஒடித்து, கடித்து, சப்பித் துப்பியிருக்கிறார். சும்மா சொல்லக்கூடாது. இடத்துக்கு ஏத்த வேஷம் கட்டுவதில் கில்லாடிதான் நம்மாளு. ஆனால் நான் கடவுளில் ‘ஜெ.மோ’வின் உரை வீச்சு இருக்கிறதே... ‘என்னமோ உளறிக்கிட்டுப் போறான்’ என்று சும்ம விட்டுவிட முடியாத விஷமத்தனம் தோய்ந்தவை.

சாம்பிளுக்கு ரெண்டு வரிகளைப் பார்ப்போம்:

‘வாழக் கூடாதவர்களுக்கு நான் தரும் தண்டனை மரணம்’.

‘வாழ இயலாதவர்களுக்கு நான் தரும் வரம் மரணம்’.

வாழக் கூடாதவர்கள் என்றால் யாரு?

ராஜபக்சே, சோனியா, சுப்பிரமணியம் சாமி வகையறா என நினைத்தால், அது நினைத்தவர்களோட கேணத்தனம். கை, கால் முடமானவர்களை, குருடர்களை வைத்துப் பிச்சையெடுத்துத் தின்கிறானே... அவன்!

அஞ்சு பைசா திருடியவனை எண்ணெய்க் கொப்பறைக்குள் தூக்கிப் போட்ட ‘அந்நியன்’ உங்க ஞாபகத்திற்கு வருகிறானா? நிச்சயம் வருவான். அவனுடன் நாகர்கோவில் நகர தெரு வீதி ஒன்றில் தள்ளுவண்டியில் நவாப்பழம் விற்றவனை சர்வதேச அளவுக்குச் சுரண்டல்காரனாகச் சித்தரித்து எழுதிய ஜெயமோகனும் நினைவுக்கு வர வேண்டும்.

ஆக, சரக்கு நம்மாளோட சொந்தச் சரக்குதான். கண்டிப்பாக ஷங்கர் - சுஜாதா கூட்டணியிடமிருந்து சுட்டதில்லை. அந்நியனுக்கு கருட புராணம். கடவுளுக்கு ஏழாவது உலகம்.

முடவனை, குருடனை வைத்துப் பிச்சையெடுப்பவன் சந்தேகமின்றி சமூகக் குற்றமிழைப்பவன்தான். அவனுக்கே ‘இம்மாம் பெரிய...’ தண்டனை நியாயம்தான் என்றால் கை, காலை முடமாக்கி பிச்சையெடுக்கத் துரத்துபவனுக்கு? நல்லாயிருந்த உடம்பை சர்க்கசில் காட்டும் ஒரு வினோதப் பிராணி போலாக்கி இப்போது மட்டுமல்ல, இனி வரும் தலைமுறைக்கும் பிச்சையெடுக்க வைத்தவனுக்கு...?

1984 டிசம்பர் மூன்று இரவில் விஷ வாயுவை திறந்துவிட்டு பல்லாயிரம் பேரைக் கொன்றதோடு சில லட்சம் பேரை ஊனமாக்கி போபால் நகரத் தெருக்களில் பிச்சையெடுக்க வைத்தானே... யூனியன் கார்பைடு ஆன்டர்சன்! அவனைத்தான் சொல்கிறேன். அவனுக்கு என்ன தண்டனை?

போபால் காசிக்கு ரொம்பப் பக்கம்தான். தண்டனையை முடித்து விட்டு, பொழுது சாய்வதற்குள் சுடுகாட்டு ‘டூட்டி’க்குத் திரும்பி விடும் தூரம்தான். ‘ஆன்டர்சன் தப்பியோடிவிட்டான்... என்ன பண்ண முடியும்?’ என்று கையைப் பிசைய வேணாம். அவனிடம் பொறுக்கித் தின்ற கும்பல் இப்போதும் அங்குதான் இருக்கிறது! அகோரி ருத்ரனை அங்கே அனுப்பி வைக்கலாமே!

அவன் மட்டுமா... நூறு கோடி இந்தியர்களையும் காட்டி உலக வங்கியில் தொடர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறாரே மன்மோகன்! டெல்லிக்குப் போய் ஒரு ‘ருத்ர தாண்டவம்’ ஆடிப் பார்த்திருக்கலாமே பாலா?

ஆடினால் டவுசர் கிழிஞ்சி தொங்கிடும்.

வாழக் கூடாதவர்களை வகைப்படுத்திய லெட்சணம்தான் இப்படி...! வாழ முடியாதவர்களையாவது சரியாக அடையாளம் காட்டியிருக்கிறார்களா என்று பார்த்தால்... ரெண்டு கண்ணும் தெரியாத குருட்டு பிச்சைக்காரி - அல்லது அவளைப் போன்றவர்கள் வாழக் கூடாதவர்களாம்! அதாவது, உழைக்க வலுவற்றவர்களை, ஊனமுற்றவர்களை கருணைக் கொலை செய்துவிடப் பரிந்துரைக்கிறார்கள் இந்தக் காந்தி தேசத்துப் புத்திரர்கள்.

அதிர்ச்சியான செய்திகளை காட்சிப்படுத்துவதன் மூலமே தங்களை வித்தியாசமான படைப்பாளிகளாகக் காட்டிக்கொண்டு வரும் இலக்கியவாதி ஜெயமோகனையும், இயக்குனர் பாலாவையும் பார்த்து நெஞ்சில் ஈரமுள்ளவர் யாரும் ‘அடப் பாவிகளா’ என கத்தாமல் இருக்க முடியாது.

அறுபது லட்சம் யூதர்களைக் கொன்று குவித்த ஜெர்மன் நாஜிகள், அத்துடன் நிற்காமல் ஒரு லட்சம் உடல் ஊனமுற்றவர்களையும், மனநோயாளிகளையும் - அவர்கள் ஜெர்மானியராகவே இருந்த போதும் விஷ வாயுவைச் செலுத்திச் சாகடித்தார்கள் இரண்டாம் உலகப் போரில்! ‘இனத்தூய்மை’ இதற்கு காரணமாகச் சொல்லப்பட்டாலும், வேண்டாத சுமை ஒன்று இறக்கி வைக்கப்பட்டது என்றே அவர்கள் நிம்மதி அடைந்தார்கள்.

‘வலுத்தவன் மட்டுமே வாழ வேண்டும்’ என்ற இந்த ஆரிய வக்கிரத்தைத்தான் ‘நான் கடவுள்’ வழியாக நம்மிடம் இப்போது சுற்றுக்கு விட்டிருக்கிறார்கள். அய்யா படைப்பாளிகளே, இந்த வலுத்தவன் தியரியை நடைமுறைப்படுத்தியிருந்தால் - ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன்... நீங்க ரெண்டு பேரும் புதைக்கப்பட்ட இடத்தில் இந்நேரம் புல்லு முளைத்து, பெரிய விருட்சமே வளர்ந்திருக்குமய்யா!

“என்னடா படம் எடுத்திருக்கான்?” என காறித் துப்பியவர்களும் வியக்கும் விசயமொன்று படத்தில் இருக்கு.

- ‘இதுவரை நாம் பார்த்தறியாத, பார்க்க மறுத்த பிச்சைக்காரர்களின் இன்னொரு பக்கத்தை நம்ம செவுளில் அறைந்தது போல் சொல்லியிருக்கிறார் பாலா’. உண்மைதானா இது?

ஏ.எஸ். பிரகாசத்தின் ‘எச்சில் இரவுகள்’, துரையின் ‘பசி’, இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ படங்களில் கவுண்டமணி - செந்தில் சித்தரித்த பிச்சைக்காரர்களிலிருந்து பாலாவின் உலகம் எப்படி, எங்கே வேறுபடுகின்றது?

வேறுபாடு கண்டறிய இந்தக் கருமத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துத் தொலைக்க வேண்டியதில்லை. இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை வழிமறித்து “ஐயா, சாமீ...’ என்று தட்டை நம் முகத்திற்கு நேராக நீட்டுகிறார்களே... நகரங்களின் முக்கியச் சாலை சந்திப்புகளில்... பாவத்தை தொலைத்து பரகதி சேர்ப்பதற்காகவே இருக்கும் நமது அத்தனை திவ்விய ஷேத்திரங்கள் ஒவ்வொன்றின் வழிநெடுகிலும் ஒரு ஓரமாக அமர்ந்து நமது கருணையின் அளவைப் பரிசோதிக்க அபயக் குரல் எழுப்புகிறார்களே... பிச்சைக்காரர்கள்!

‘வேண்டாம்பா இந்தப் பொழப்பு! என்னோட வந்தா நல்ல ஒரு வேலையில் சேர்த்து விடுறேன்’ என்று காசுக்குப் பதில் கனிவை நீட்டி அவர்களிடம் உரையாடிப் பாருங்கள்!

கையை நோக்கி நீண்ட பிச்சைப் பாத்திரம் அப்படியே ஓங்கி உங்கள் மண்டையில் ‘ணங்’ என்று அடிக்கும். ஆம், அவர்கள் பிச்சையெடுக்க மட்டுமல்ல, பொறுக்கித்தனத்திற்கும் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பேச்சில் வந்து விழும் வக்கிரமும், வசவும் பாலா காட்டிய உலகத்தைவிட பல மடங்கு அதிர்ச்சியை உங்களுக்கு அளிக்கும். உதிரித் தொழிலாளிகள், பண்ணை அடிமைகளிடமிருந்து பகடியாக வெளிப்படும் குமுறலை இவர்களிடம் கேட்க முடியாது. அது பாலா - ஜெ.மோ கற்பனையில் மட்டும்தான் சாத்தியம்.

சுருக்கமாகச் சொன்னால் செய்யும் ‘தொழிலில்’ இவர்கள் ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசிகள்.

இந்த ‘அனுபவம்’ உங்களுக்குக் கிடைத்தால் பாலா-ஜெ.மோ கூட்டு சேர்ந்து உருவாக்கி உலவவிட்டிருக்கும் கடவுளை விட, ஏனையோரின் முந்தையப் படங்கள் எதார்த்தத்தை நோக்கி கொஞ்சம் நெருங்கிச் சென்றிருப்பது புரியும்.

பாலா - ஜெயமோகன் கும்பல் கட்டமைத்த பிச்சைக்கார உலகிற்குள் நுழைந்து மயிர் சிலிர்த்து, மேனி நடுங்கிய ரசிக சிகாமணிகளுக்கு மேலுமொரு கேள்வி.

பிச்சைக்காரர்களின் மறுபக்கம் ஒருபுறம் கிடக்கட்டும். கங்கை நதிக்கரை ஓரத்து காசி நகரின் ‘அகோரிகள்’ எனப்படும் சுடுகாட்டுச் சாமிகளின் பக்கத்தையாவது சரியாக காட்டியிருக்கிறார்களா?

கங்கை நதி நீரில் மிதந்து வரும் மனித உடலை இழுத்தெடுத்து அதை ‘சகல மரியாதைகளுடன்’ கிடத்தி, பிணத்தின் மேலேறி ஆசனம் போட்டு ‘ஓம் சிவாய நமஹ’ என்று தியானம் (அது என்ன எளவோ) செய்பவர்களாக... புஷ்டியான பிணமென்றால் கைகளை வெட்டி சிக்கன் லெக் பீசைக் கடிப்பதுபோல் நரமாமிசம் தின்பவர்களாக... பிணம் பெண்ணாக இருந்துவிட்டால் அதோடு புணர்ச்சி செய்யக்கூடியவர்களாக... அகோரிகளின் மறுபக்கம் அல்ல, மொத்தப் பக்கமும் இதுதான்.

இதில் எதை உங்களுக்குக் காட்டினார் பாலா?

நல்ல படைப்பாளி அவன் அளித்த படைப்புகளால் மட்டுமல்ல, எடுக்க மறுத்த, மறந்தவைகளாலும்தான் அறியப்பட வேண்டும். சமூக அக்கறை கொண்ட படைப்பாளிகளுள் பலரும் அகோரிகள் என்கிற இந்த மனநோயாளிகளின் காட்டுமிராண்டித்தனத்தை அப்பட்டமாகத் தோலுரிக்கும் குறும்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார்கள். ஆனால், பாலா என்ன செய்திருக்கிறார்?

திகார் சிறையின் செல்களுக்குள் தனித்தனியே கொண்டுபோய் அடைக்கப்பட வேண்டிய அகோரிகளை, கலியை வேரறுக்க வந்த கிருஷ்ண பரமாத்மாவாக தமிழகத்திற்கு கூட்டி வந்திருக்கிறார். “ஓடிப் போங்கடா காட்டுமிராண்டிப் பயலுவளா?” என கல்லெடுத்து வீசி விரட்டப்பட வேண்டியவர்களை கைதட்டி ரசிக்க வைத்திருக்கிறார்.

சமூகம் குறித்து சரியான புரிதலுள்ளவர்கள் என நம்பப்படும் சில அறிவுஜீவிகள்கூட இந்த ரசனைக் கெட்ட கும்பலுக்குள் சிக்கியிருப்பது வேடிக்கையல்ல, வினோதமே.

தீபா மேத்தா என்று ஒரு சினிமா படைப்பாளி. எல்லோருக்கும் தெரிந்தவர்தான். அவரும் கேமராவோடு இதே காசிக்குதான் போனார். எடுத்ததும் இதே வணிக சினிமாதான். அவர் கண்ணில் மட்டும் கைவிடப்பட்டு, அபலைகளாக துரத்தப்பட்ட விதவைப் பெண்கள் பட்டது எப்படி?

வங்கத்திலிருந்தும் ஒருத்தர் காசிக்குப் போனார். படமெடுக்க அல்ல, பாவம் தொலைக்க! ‘புனித ஜலம்’ என்று வாய்க்குள் ஊற்றும் கங்கைத் தண்ணி எவ்வளவு அசுத்தமானது, கேடு கெட்டது என்பதை அங்கே கண்டவர், சென்ற வேலையை போட்டு விட்டு ஒரு குறும்படம் எடுத்து, புனிதத்தின் யோக்கியதையை ஊர் ஊராகக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

இப்போது சொல்லுங்கள்... உண்மையான படைப்பாளி இவர்களில் யார்?

‘கடவுளை’ கேமராவுக்குள் அடக்க மூணு வருசம் ஆச்சுதாம்.

சிலை வடிக்க மூணு வருசம் எடுத்துக் கொள்ளலாம். தப்பில்லை. வெறும் அம்மி கொத்த எதுக்கு மூணு வருசம்?

விடுபட்ட சில கேள்விகளும், பாலா & ஜெ.மோ. சொல்லாத பதில்களும்

‘அஹம் பிரம்மாஸ்மி’ என்றால் என்ன?

‘நான் கடவுள்’ அல்லது ‘நானே கடவுள்’ என்று அர்த்தமாம். சமஸ்கிருதத்தில் சப் - டைட்டில் போட்டு பார்ப்பனர்களை கொட்டகைக்கு இழுத்த புண்ணியவான்கள் ஏனைய இந்திய மொழிகளிலும் ரூபாய் நோட்டில் போட்டிருப்பது போல் தெலுங்கு, கன்னடம் என வரிசையாகப் போட்டு விளக்கியிருந்தால் இன்னும் கொஞ்சம் கூட்டம் சேர்த்து தயாரிப்பாளரின் தலையில் துண்டு விழுவதை தடுத்திருக்கலாம்.

‘தேவடியா மகன் புளுத்துவான்’ என வசனம் எழுதும் ஜெயமோகன் எப்படி ஒரு கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ். காரனாக இருக்க முடியும்?

சம்சாரம் செத்துப் போனதால் அதிர்ச்சிக்குள்ளான பால் தாக்கரே வீட்டுக்குள்ளாற இருந்த அத்தனை சாமி படங்களையும் அடித்து உடைத்தாராம். அவர் இப்ப கறுப்பு சட்டை மாட்டிக்கிட்டு தெருத் தெருவா பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்னு நெனச்சா அது நம்ம அறியாமை.

‘மருதமலை முருகன் அருளால் எல்லாமே வெற்றி’ என படத்தைத் தொடங்கும் ஒரு சினிமா தயாரிப்பாளர், படம் டப்பாவுக்குள் சுருண்டு விட்டால், தான் கையெடுத்து கும்பிட்ட முருகனையே செருப்பாலடித்து, அவன் ஆத்தா பார்வதி தொடங்கி, சம்சாரம் வள்ளி வரைக்கும் வசவு விடுவாராம். அவரும் நாத்திகராகி விடவில்லை.

ஒருவரி வசனத்திலோ, குறிப்பிட்ட ஒரு சம்பவத்தின் போது மட்டுமோ வெளிப்படும் கடவுள் மறுப்பு அற்ப ஆயுள் கொண்டது. பகலில் அடித்து ராவில் கூடிக் கொள்ளும் வெட்கங்கெட்ட புருஷன் - பொஞ்சாதி உறவு போல பழைய கதைக்கே திரும்பி விடும் வாய்ப்புள்ளது. ஜெயமோகனின் கடவுள் எதிர்ப்பு லெட்சணமும் அதுதான்.

‘மாட்டுக்கறி தின்னாலும் மலையாளி மூளையோடத்தான் இருக்கிறான்’. இந்த வசனத்தில் ஜெயமோகன் மலையாளிகளை பாராட்டுகிறாரா - இழிவுபடுத்துகிறாரா?

சுய விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். தலித் மக்களும், பாய்களும் திங்குற ஒரு கறியை தன் இனத்தானாகிய மலையாளி சப்புக் கொட்டித் தின்பதை ஒரு சுயம் சேவக்கால் எப்படிச் சகிக்க முடியும்? அதனால்தான் மலையாளியின் மூளைக்குள் இருப்பதை பாராட்டும்போதே, இரைப்பைக்குள் போய் விழுவதையும் நோண்டி ஒரு பிடி பிடிக்கிறார்.

‘மாட்டுக்கறி தின்னாலும் மலையாளிகள் மேன்மக்களே!’ ஜெயமோகன் தமிழர்களுக்குச் சொல்ல விரும்பும் சேதி அதுவே.

நான் கடவுளில் வரும் பிச்சைக்காரச் சிறுவன் அம்பானியைப் பற்றி எப்படி அறிவான்?

அறிய மாட்டான். மட்டுமல்ல, வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்பாக மடை மாற்றி 1200 கோடி சுருட்டி, வெறும் 500 கோடிகளை மட்டுமே தண்டம் கட்டிய கதையையும் அவன் அறிய மாட்டான். ஆனால், கதை எழுதிய ஜெயமோகன் அனைத்தும் அறிவார். அனைத்தையும் அறிந்தும் ‘அவரு செல்லு விக்கிறவரு’ என சாதாரண ஒரு புதுப்பேட்டை காயலாங்கடை வியாபாரியைப் போல் அம்பானிக்கு முகம் கொடுப்பதில்தான் ஜெயமோகன் என்ற இலக்கியவாதியின் சாமர்த்தியம் விளங்குகிறது.

முதல் தேதி சம்பளம் வாங்குவது அரசிடம்; முப்பது நாளும் சேவகம் செய்வது அம்பானியிடம்! அரசு வேலையிலிருக்கும் இலக்கிய கர்த்தாக்கள் நல்லாதான் பொழைக்கிறாங்க.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
jayanth
2009-03-08 04:41:00
bati_shta@yahoo.com

U review not shows film review.It is like TV serial.
In ur film review u add Rajini,Religion,History,Laguage...

1) If rajini is ur enimy means show ur angry straight to him not here.
2) Where the annian flims come in NAAN KDAVUL review.
3) Dont sent AGORI rutharan to catch Andrasen , behalf of that u go
their they r run away to suside...
4) Before review see full film.Just cut the half view ,questioning ur self
where do u find this trike...
5) More over histoyical intrest r with u,That r delivered in ur review...

i cant countinue ur full review its great mokkai...WAST Of TIME
First learn then do a job...........
Thax for ur feedback comment.........

Paruthi
2009-03-10 12:27:00
toparuthi@hotmail.com

I saw this movie last month. When the flim show over, lot of people say good one. But i feel something wrong with this movie. Heroism engarage drugs also said AGORI are like god.Leave is God is there or not, but using god name nothing contribute to nation wealth but living in nation also engarage drugs usage. If you have power to do anything why do you want kill beggars, give some life to them, example give the eys to blind heroine. Then we can accept AGORI are god. Destroy always very easy. Anyone can do, no need to AGORI.

Kumar
2009-03-10 11:34:00
mailtoskumar@gmail.com

விமர்சனம் என்ற போர்வையில் உங்கள் மன அரிப்பு தெளிவாக வெளிப்பட்டது.
இப்படி எழுதினால் சமூக விழிப்புணர்வு ஏற்படாது. மாறாக சமூகம் ஆழ்நிலை உறக்கத்திற்கு சென்றுவிடும்.

Milton
2009-03-12 01:04:00
amvinoth143@gmail.com

ஊன முற்றவர்கள் வாழ்க்கையை ஆராய்ந்து அதிலுள்ள உண்மைகளை,இடர்பாடுகளை காட்டிய பாலா,
இந்து மத சாஸ்திரத்தில் அகோரிகளாக சொல்லப்படுபவர்களின் நோக்கங்களை,குறிக்கோள்களை அதன் உண்மைகளை
(அது நியாயந்தானா மற்றும் பகுத்தறிவுக்கு உகந்தது தானா என்று)ஆராய்ந்து சொல்லாமல் விட்டுவிட்டார்.

ஜோசியத்தின் மேல் நம்பிக்கை கொண்டு மகனை காசியில் விட்டு விட்டுச் சென்ற தந்தையை காசிச் சாமியார் மூலம் சாடும் பாலா,பூசாரியிடம் இதுவரை பேசாத கடவுளா நம்மிடம் பேசிவிடப் போகிறது என்று பக்தனின் மூலம் சாடும் பாலா,வாய் பேசாமல்,காது கேட்காமல்,கண்ணை மூடிக் கொண்டிருக்கும் கடவுள் ஒரு கடவுளா என்று ஆர்யாவின் மூலம் சாடும் பாலா,சடை முடிஞ்சவன்லாம் சாமியா என்றும் நம்மள மாறி ஆளுங்கலுக்கு அந்த கடவுள் ஒரு தேவடியாபய்யன் என்று கதாபாத்திரங்கள் மூலமும் இறுதியாக உலகத்தை இரட்சிக்கப் பிறந்த இயேசு பிரான் எங்களை இரட்சிக்க வில்லையே என்றும் எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே என்ற அல்லாவிடம் நாங்கள் செய்த பாவம் என்னவென்று கேட்கும் பொழுதும்,எங்களை காக்க பிள்ளயார்,முருகன்,காளி யாரும் வரவில்லையே என்று ஆதங்கத்தை கொட்டும் பொழுதும் பகுத்தறிவு சிந்தனையை பரப்பிய பாலா எதை வைத்து அகோரி(ர)சாமியார்களுக்கு ஆதரவு அளிக்கிறார் என்று தான் புரியவில்லை.

நான் கடவுள் என்று சொல்லிக் கொண்டிருக்கிற ஆர்யா பூஜா அறிவுரை கூற வரும் பொழுது அவளை அடித்து விரட்டுவதும் கடவுள் செயலா என்று கேட்க தோன்றுகிறது.
கஞ்சா அடிக்கும் சாமான்யனை அடித்து லாடம் கட்டும் சமுதாயம் சாமியார் கஞ்சா அடித்தால் மட்டும் காலில் விழுவது முரண்பாடாகத் தெரிகிறது(மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கவனிக்க...!?)
மாட்டுக்கறி தின்னாலும் மலையாளத்தான் மூளையே மூளை என்ற வசனம் மலையாளிகளை பெருமைப்படுத்தவா இல்லை மாட்டுக்கறி தின்னும் சமுதாயத்தின் கீழ்தட்டில் இருப்பவர்களாக சொல்லப்படுபவர்களை சிறுமைப்படுத்தவா என்பது தெரியவில்லை
நீதிபதி(உயர் வகுப்பினராய் பறைசாட்டப்பட்டிருக்கிற...) எங்கயா நீ படிச்சேனு காவல் துறை அதிகாரியை நக்கல் பண்வது,விசாரிக்கிறேனு அவர்(ஆர்யா) மேலெ கை லாம் வச்சிடாதேனு சொல்வது...
மேற்கண்ட இரண்டு வசனங்களும் நிச்சயம் பார்ப்பவ(ன)ர்களை திருப்தி படுத்தியிருக்கும்.

தொடரும்...

Milton
2009-03-12 01:57:00
amvinoth143@gmail.com

வாழக் கூடாதவர்களுக்கு நான் தரும் தண்டனை மரணம்.
வாழ வழியில்லாதவர்களுக்கு நான் தரும் மரணம் வரம்.

இது தான் படத்தின் மையக்கருத்தாக சொல்லப்படுகிறது...
இதன் மூலம் என்னுள் எழுந்த சில வினாக்களை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.....

வாழ வழியிலாதவர்களை கொன்று விடுவது தான் பாலா சொல்லும் தீர்வு என்றால் அது எத்தனை முட்டாள்தனமானது.சமுதாயத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில பிரிவு மக்களும், நாம் கடந்து செல்லும் பாதையில் நமக்கு தென்படும் சிலரும் சராசரி மனிதர்கள் போல் வாழவழியில்லாதவர்களாய்,வாழ்க்கையின் பெரும் பகுதி கஷ்டப் படுபவர்களாய் தான் இருப்பார்கள்.அவர்களுக்காகப் போராடி அவர்களின் நியாயத்தை பெற்றுத்தந்து குறைந்த பட்சம் வாழ்க்கையின் மீதிப் பகுதியில் அவர்களின் நிம்மதிக்காக,அவர்களின் அடுத்த தலைமுறை முன்னேற்றத்திற்காக போராடுபவனே உண்மையில் சமூக புரட்சியாளன்,மனிதன்.அதை விடுத்து அவர்கள் அனைவரையும் காசியில் கஞ்சா அடித்துக் கொண்டு,சமஸ்கிருதத்தில் பிதற்றிக் கொண்டிருக்கும் அகோரிச் சாமியார்களை அழைத்து வந்து குறைந்தபட்சம் இவர்கள் அடுத்த பிறவியாவது இல்லாமல் இருக்கட்டும்,அனைவரையும் கொன்று விடுங்கள் என்று நாம் முடிவு எடுத்தால் அது எப்பேற்பட்ட முட்டாள்தனமாக,அறிவிலித்தனமாக இருக்கும் என்பதை சாதாரணமாக சிந்தனை உள்ளவர்கள் கூட உணர முடியுமே...

ஏழு பிறவியை படைத்த கடவுள்,ஒரு பிறவியில் மனிதன் செய்த நன்மை,தீமைகளுக்கேற்ப அடுத்த பிறவியில் அவன் நல்லவனாகவோ இல்லை தீயவனாகவோ பிறப்பான்,அது ஏழு பிறவியிலும் தொடரும் என்று இந்து மத புராணம் சொல்கிறது.அப்படி இருக்கையில் இடைச்செருகளாக இந்த பிறவியில் வாழ வழியில்லாதவர்களை அகோரிச் சாமியார்கள் கொன்று விடுவதாக கூறுவது
முரண்பாடாக தெரிகிறதே.....
மேலும் அவனவன் செய்த நன்மை தீமைகளை அந்தந்த பிறவியிலேயே மக்கள் அனுபவிக்கும்படி கடவுள் செய்வதாக இந்து மத புராணம் சொல்வதாகவும் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய கண்ணதாசன் சொல்கிறார்.
பார்ப்பான் கொலை செய்தால் அவனுக்கு மொட்டை அடிப்பதன் மூலம் பரிகாரம் கிடைத்து விடும்(அடுத்த பிறவிக்கு பாவத்தின் பலன் கொண்டு செல்லப்படாது) என்றும் சூத்திரன் கொலை செய்தால் அவனுக்கு மரண தண்டனையே தீர்வு என்றும்(அடுத்த பிறவிக்கும் பாவத்தின் பலன் கொண்டு செல்லப்படும்) இந்து மத ஆதி வேதமான மனுதர்மம் சொல்கிறது.
ஒவ்வொரு கால கட்டத்திலும் அவரவர் வசதிக்கேற்றபடி எழுதிச் சென்ற இவைகளில் எதை நம்புவது?
சரி..... நான் தான் கடவுள்,பிரம்மா தான் அகோரிச்
சாமியார் வடிவத்தில் இந்தச் செயலை செய்வதாக எடுத்துக் கொண்டால்,முற் பிறவியில் செய்த பாவத்தின் பலனாகத்தானே இப்பிறவியில் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்,இப்பிறவியில் செய்கின்ற நன்மை,தீமைகளுக்கேற்ற பிரதிபலனை அடுத்த பிறவியில் அனுபவிப்பது தானே முறை.அதை விடுத்து வாழ வழியில்லாதவர்களை கொன்று அடுத்த பிறவியை தடுப்பது எப்படி
நியாயமாகும்,தர்மமாகும்?

மேலும் ஏழு பிறவியிலும் கடவுள் மனிதனை வழி நடத்துவதாக,அவனின் நன்மை,தீமைகளுக்கு கடவுளே காரண கர்த்தாவாக இருப்பதாகவும் இந்து மதம் சொல்கிறது.அப்படி இருக்கையில் ஏன் ஒருவனை தீமை செய்பவனாக படைத்து அதற்குரிய தீமையின் பலனை அடுத்த பிறவியில் அவனை அனுபவிப்பதற்கு அந்தக் கடவுளே அவனை நிர்பந்திக்க வேண்டும்?மேலும் அவன் தீமையின்
பலனை அனுபவிக்கும்போது அவன் வாழ வழியற்றவன் என்று கூறி,அவனை கொன்று விட்டால் அடுத்த பிறவியை தடுத்து விடலாம் என்று அந்த கடவுளே(அகோரிகளை வழி நடத்தும் கடவுள் இல்லை அகோரிகளான அந்தக் கடவுள்) ஏன் முடிவு செய்ய வேண்டும்?
வாழ்வில் சுவாரசியம் வேண்டும் என்பதற்காக ஒருவனை நல்லவனாக படைத்து நன்மையின் பலனை அடுத்த பிறவியிலும்,கெட்டவனாக இன்னொருவனை படைத்து தீமையின் பலனை அவனின் அடுத்த பிறவியிலும் அனுபவிப்பதாக அவனை நிர்பந்திப்பது கடவுளின் ஓர வஞ்சனை ஆகாதா?இது தான் நேர்மையான கடவுள் செயலா?இது தான் கடவுளா?

rajesh kanakarajan
2009-03-14 06:43:00
krajesh@gmail.com

I am in sync with what you think. But I am not in sync with what you saw and how you saw. We everybody know it is a bad film and it is not "genuine" in portraying anything. If your review has concentrated on that part much it could be a good review. But comparing this with sankar's bad anniyan is not necessary at all. The quality of review lags by taking these trivial things...

harsa
2009-03-14 06:46:00
ammu4hari@yaoo.co.in

sir, I don't know why people are using such a bad language to express their feelings. are they using such words in their daily life? and you are repeating same words in your review also. why dont people try to be little more soft and decent?

மாசிலா
2009-03-14 08:52:00
champsdormes@gmail.com

"மட்டிப்பய மக்கள் தலித்துங்க திங்குற அதே மாட்டுக்கறி மாமிசத்தை நம்ம மலையாளி தின்றாலும் இவனுங்க அவனுங்களவிட புத்திசாலியாத்தான் இருக்கானுங்க" என வசனம் எழுதியிருநதா நல்லா பொருத்தமா இருந்திருக்குமோ?
ஆனால், இந்த வாதப்படி பார்த்தால், நாங்க திங்குற அதே மாட்டுக்கறியை போலவே வெள்ளைகாரனும் சாப்பிடறதாலேதான் அவன் (சிறந்த?) புத்திசாலியா இருக்கான் என புதுசா யாராவது வசனம் எழுதினாலும் தப்பு ஏதும் இருக்காது.

இது மாதிரியான வாதங்கள் எல்லாமே ஏதோ 'வாய கொடுத்து **தை புண்ணாக்கிக் கொண்ட' கதையாத்தான் போய் முடியும்.

Milton
2009-03-16 04:06:00
amvinoth143@gmail.com

ஹர்சா,
அந்த பெரியவரின் பார்வையில்,அப்பேற்ப்பட்ட இறுதியான விரக்தி நிலையில் அவரிடமிருந்து வெளிப்பட்ட அந்த வார்த்தை கண்டிப்பாக விரசமாக தெரிவதற்கு வாய்ப்பில்லை,தணிக்கை குழுவும் அதன் ஆழம் மற்றும் அர்த்தம் கருதியே அதை அப்படியே விட்டிருக்கக்கூடும்.செல்வா மற்றும் நான் சொல்வது உங்களுக்கு விரசமாகப் பட்டிருந்தால் இனிமேல் அதை தே......ன் என்று வேண்டுமானால் கூறிக்கொள்கிறோம்.

மாசிலா,
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.அறிவாளியாக இருப்பதற்கும் சாப்பாட்டிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று புரியவில்லை.பெரும்பாலான கண்டுபிடிப்பை கண்டறிந்த மேல் நாட்டினர் பெரும்பாலோரும் புலால் உணவு உண்பவரே...உங்களின் இரண்டாவது வசனத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது,ஏனெனில் அவ்விதம் ஏற்றுக்கொண்டால் அது மாட்டுக்கறி தின்னாத வர்களை ஏளனம் செய்வது போல் இருக்கும், நிச்சயமாக அப்படி ஒரு வசனத்தை யாராவது அவர்களின் படத்தில் வைப்பார்களா என்பது சந்தேகமே...!?
உங்களின் முதல் வசனமும்,படத்தின் வசனமும் கிட்டத்தட்ட ஒரே அர்த்தம் பொருந்தி தான் வருகிறது...
அதன் உள் அர்த்தம் மாட்டுக்கறி தின்பவர்கள் மூளை சரியாக வேளை செய்யாதவர்கள்,அறிவில்லாதவர்கள்.யாரை நீங்கள் தாக்குகிறீர்கள் என்பது சாதாரணமாக சிந்திப்பவர்களுக்கும் தெரியுமே... நிச்சயம் அது கண்டிக்கத்தகுந்ததே அன்றி,எதை கொடுத்தும் எதையும் புண்ணாக்குகிற செயல் அல்ல...

Milton
2009-03-16 06:06:00
amvinoth143@gmail.com

ராஜேஷ்,

சரி நான் கடவுளை சற்று தள்ளி வைத்து அன்னியனுக்கு ஆதாரமான கருட புராணத்தைப் பற்றி பேசுவோம்.
ஷ்ங்கர் ஒரு சிறந்த,பிரமாண்ட இயக்குனர் மற்றும் குறைந்த செலவில் தரமான படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் என்ற அளவில் அவரிடம் என்னிடம் மதிப்பு உள்ளது அவ்வளவு தான்(அவர் படத்தின் கதை மற்றும் கருத்தை தவிர்த்து பார்க்கும் பட்சத்தில்...)

5 பைசா திருடுவதும் தவறு தான்,5 கோடி பைசா திருடுவதும் தவறு தான்.ஆனால் இவர்கள் இருவர்க்கும் ஒரே தண்டனை என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?இந்த இரண்டு தவறுகளையும் எப்படி ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியும்?பசிக்காக திருடுபவனையும்,பரம்பரை தொழிலாக திருடுபவனையும் எப்படி நீங்கள் ஒரே மாறி பார்க்கிறீர்கள் என்று தான் புரியவில்லை!முதலாமவனுக்கு பசிக்கு ஆகாரமும்,வேலையும் கொஞ்சம் அறிவுரை மட்டுமே போதுமே திருந்துவதற்கு....அவனை நீங்கள் எப்படி இரண்டாமவனுக்கு இணையாக பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை...
பல்லுக்கு பல்,கண்ணுக்கு கண் என்ற அடிப்படையில் நாங்கள் எவருக்கும் மரண தண்டனையை எதிர்க்கவே செய்கிறோம் என்பது வேறு விடயம்.மரண தண்டனையை கடை பிடித்து வரும் சில நாடுகளிலும்,மரண தண்டனையை முழுமையாக கைவிடாத இந்தியா போன்ற நாடுகளிலும் குற்றங்கள் குறைந்தல்லவா இருக்க வேண்டும்?ஆனால் அவ்விதம் இல்லையே.....
தவறு செய்பவர்களுக்கு நரகத்தில் கொடுக்கும் தண்டனையாக கருட புராணத்தில் சொல்வதை இந்த உலகத்தில் கொடுப்பதாக அன்னியன் சொல்கிறார்.ஆனால் அந்த தண்டனை பார்ப்பனர்களுக்கு மட்டும் பாரபட்சமா இருக்கிறதே?மனு தர்மமும் அதன் வழி வந்த கருட புராணமும் என்ன சொல்கிறது?ஒரு பார்ப்பான் கொலை பாவம் செய்தால் அவனுக்கு மொட்டை அடிப்பதன் மூலம் அவனின் தவறு மன்னிக்கப்படும்,ஆனால் பார்ப்பான் அல்லாதாற்கு மரண தண்டனை தான் தீர்வு என்கிறது...என்ன பாரபட்சம் இது?
கருட புராணத்தின் சில பகுதிகளோ சிரு தவறு செய்பவர்களுக்கும் நரகத்தில் கொடுக்கும் மரண தண்டனையை பூலோகத்தில் அன்னியன் கொடுப்பதாக சொல்கிறது.கொலை தண்டனை தவிர மற்ற குற்றங்கள் செய்த பார்ப்பனர்களுக்கு தண்டனையே கிடையாது என்பதை படத்தின் மூலமாகவெ சுஜாதாவின்,ஷங்கரின் கைங்கர்யம் மூலம் விளக்கலாம்.
பூங்காவில் சோம்பேறியாய் படுத்து கிடப்பவனை கொல்லும் அன்னியனுக்கு அந்த சோம்பேறியை விட குற்றம் அதிகமாக(எல்லா குற்றமும் அவர்களுக்கு ஒன்று தான் என்பது வேறு விடயம்)புரிந்த அதாவது இலஞ்சம் கொடுத்து காரியம் சாதித்த கதா நாயகி பாப்பாத்தி என்ற ஒரெ காரணத்தால் மட்டுமே அவளை கொல்ல வரும்போது மட்டும் இந்த ரெமோ எங்கே இருந்து வந்து அவள் கொலை படாமல் தடுக்கிறான் மட்டும் என்று புரியவில்லை!?
மேலும் சபா நடத்துபவர் பார்ப்பனன் என்பதால் மட்டுமே,அவர் என்ன தான் சிபாரிசு செய்து தவறு செய்தாலும் அன்னியன் அவரையும் கொல்லாமல் விட்டு விடுகிறான்.....யார் காதில் அய்யா பூ சுற்றுகிறீர்கள்?இது எல்லாம் பார்ப்பான் தவறு செய்தாலும் அவனுக்கு தண்டனை கிடையாது என்பதை வலியுறுத்திய இந்து மத கருட புராண,மனு தர்ம குப்பைகளை ஆதரிக்கும் சுஜாதா மற்றும் ஷங்கரின் பித்தலாட்டம் தானே....

selva
2009-03-16 08:00:00
rjsksfm@gmail.com

Hi my man this is selva, i think u r mad.. adheppadiya eppadi mathavangala kurai pesiyea vaazharinga?
niyayamana kurai sonnalkooda yeathukkalaam.. abaththamaa erukku unga kurai.. oruthan padaippa asinga paduthaathinga sir. thappu pandravana thandikkuramadhiri padam erukku.. edhu oru sample avvalavudhaan.. adha vittutu oorla endha thappellaam nadakkudhu, avan thappu pandran evan eppadi thappu pandran avanaiyellaam thandikkalaiya, avan pandradhu thappu ellayanu ketkuradhu muttal thanama ellalayaa? 3 maninera padathula mudindhatha thaanga sir kaatta mudium.. mudintha sir oru padatha selavu panni eduthu adhula neenga sonna andhu visha vaayuva thirandhuvittu makkala konnavana azhikura maadhiri kaattunga naanga paarkurom...

kurai pesi pesi veena pogaathinga yaa.......
solradha niyayama sollunga naanga adhai mathikkurom ketkurom...
naan periya puthisaalinu kaattikka eppadiyellaam vimarsanam pannaathinga mr.

அ.ச.கண்ணன்
2009-03-17 08:14:00
kannan.maha7@gmail.com

நூறு கோடி இந்தியர்களையும் காட்டி உலக வங்கியில் தொடர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறாரே மன்மோகன்! டெல்லிக்குப் போய் ஒரு ‘ருத்ர தாண்டவம்’ ஆடிப் பார்த்திருக்கலாமே பாலா?

ஆடினால் டவுசர் கிழிஞ்சி தொங்கிடும்.

வாழக் கூடாதவர்களை வகைப்படுத்திய லெட்சணம்தான் இப்படி...! வாழ முடியாதவர்களையாவது சரியாக அடையாளம் காட்டியிருக்கிறார்களா என்று பார்த்தால்... ரெண்டு கண்ணும் தெரியாத குருட்டு பிச்சைக்காரி - அல்லது அவளைப் போன்றவர்கள் வாழக் கூடாதவர்களாம்! அதாவது, உழைக்க வலுவற்றவர்களை, ஊனமுற்றவர்களை கருணைக் கொலை செய்துவிடப் பரிந்துரைக்கிறார்கள் இந்தக் காந்தி தேசத்துப் புத்திரர்கள்.

அதிர்ச்சியான செய்திகளை காட்சிப்படுத்துவதன் மூலமே தங்களை வித்தியாசமான படைப்பாளிகளாகக் காட்டிக்கொண்டு வரும் இலக்கியவாதி ஜெயமோகனையும், இயக்குனர் பாலாவையும் பார்த்து நெஞ்சில் ஈரமுள்ளவர் யாரும் ‘அடப் பாவிகளா’ என கத்தாமல் இருக்க முடியாது.

நல்ல விமர்சனம் வாழ்த்துகள் ...

Subavee Thaasan
2009-03-18 03:22:00
subaveethaasan@gmail.com

செல்வா,

எம் மக்களுக்கு விளங்க வைப்பதில் எங்களில் சிலர் பைத்தியமாகத்தான் திரிகிறோம்,என்ன செய்வது இடையில் அவர்களின் மனதை குழப்பும் உங்களை போன்றோரையும் கடக்க வேண்டியிருக்கிறது!?

அதெப்படியா.. நம் மக்களை ஏளனப்படுத்தும்,ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தூக்கிப்பிடிக்கும்,சாதி வேறுபாட்டை நிலை நிறுத்தும் மனு தர்ம குப்பைகள் எல்லாம் உங்களுக்கு படைப்பாகத் தோன்றுகிறது?அந்த குறைகள் எல்லாம் எப்படி உங்களின் அறிவுக் கண்களிலிருந்து தப்பித்து சென்றுவிடுகிறது என்று தான் எங்களுக்கு புரியவில்லை.

சேரன்,தங்கர் பச்சான் மற்றும் பல முற்போக்கு,யதார்த்த,சமுதாய,பகுத்தறிவு சிந்தனையுள்ள இயக்குனர்களின் படைப்புகள் பலவற்றை குறை இல்லாமல் மற்றும் சில குறைகள் இருந்தாலும் அதை தவிர்த்து,ஒதுக்கி விட்டு ஏற்றுக் கொண்டவர்கள் தான் நாங்கள்.ஏன் பாலாவின் முந்தைய படைப்புகளை கூட அதே அளவில் தான் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்,அவர் ஒரு சிறந்த யதார்த்த இயக்குனர் என்பதில் சந்தேகமில்லை.ஆனால் விஷமத்தனமான,சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு விளைவிக்கும்,பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை எந்தவித குறைகளோடும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெரியார் வளர்த்தெடுத்த இந்த மூளைக்கு இல்லையே என்ன செய்வது!!!
பாலாவின் ஜெயமோகன் கூட்டணியும்,ஷங்கரின் சுஜாதா கூட்டணியும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

நம்ம ஆளுங்களெ வச்சி(பாலா மற்றும் ஷங்கர்)படம் எடுத்து, நம்ம ஆளுங்களெயே(செல்வா மாறி) அதுக்கு ஒத்து ஓத வைக்கிற அவனுங்கெ நிச்சயமாவே விஷ்மக்காரனுங்கெ தான்,பெரியார் சொன்ன மாறி பாம்பையும்,அவனுங்களையும் பாக்கும் போது அவனுங்களெ(அவனுங்கெ உயர் சாதி திமிர்லெ) அடிக்கறது தப்பே இல்லெ....

சரி விஷயத்துக்கு வருவோம்.....கொஞ்சம் சுய மற்றும் பகுத்தறிவு சிந்தனையோடு சிந்திக்க முயற்சி பண்ணுங்கள்.

தப்பு பண்றவங்கள தண்டிக்கிற மாறி தான் படம் இருக்குறதா சொல்றீங்க.....(இந்த உங்கள் கருத்து நான் கடவுளின் இறுதிக்காட்சிக்கு உடன்படாது என்று நம்புகிறேன்!?)
நல்லது.3 மணி நேர படத்தில் அனைத்தையும் சொல்வது என்பது இயலாத காரியம் தான் ஆனால் குறைந்தபட்சம் நியாயத்தையாவது காட்டிருக்கலாம் என்பதே எங்களின் ஆதங்கம்.
நாங்கள் கேட்க முற்படுவதை மறுபடியும் உங்களுக்கு கீழே விளக்கமாக தருகிறேன்...
எல்லா குற்றத்தையும் ஒரே தட்டில் வைத்து அனைத்திற்கும் ஒரே விதமான தண்டனை என்பது நியாயமானதா?அதுவும் எந்த குற்றத்திற்கும் மரண தண்டனை என்பது பொருத்தமானதா?
சோம்பேறிகளுக்கும் மரணதண்டனை கொடுக்கும் உங்கள் மனுதர்மம்,கருட புராணம் பார்ப்பனர்களுக்கு மட்டும் விதிவிலக்களிப்பதேன்?ஏன் இந்த பாரபட்சம்?இது தான் உங்களின் நியாயமா?தர்மமா?
ஷங்கர் ஒரு சிறந்த,பிரமாண்ட இயக்குனர் அவ்வளவு தான்,அவருக்கு சமூக அக்கறை இருக்கிறது என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.தயவு செய்து ஜென்டில்மேன்,அன்னியன் போன்ற விஷமத்தனமான கருத்து கொண்ட படங்களை எடுப்பதை கைவிடுங்கள்.வரலாறு,அரசியல்,சமூக நீதியை பற்றி தெரிந்திருந்தால் அதை உங்களின் படங்களில் கையாளுங்கள்,இல்லையென்றால் சாதாரண,யதார்த்த கதைகளை,கருத்துக்களை கையாளுங்கள்.போராளிகளை தீவிரவாதிகளாக சித்திரித்த மணிரத்தினத்திற்கும் இது பொருந்தும்.

நாங்கள் அல்ல எம் மக்கள் வீணாகப் போய் விடக்கூடாது,அவர்களுக்கு பகுத்து அறியும் திறன் வேண்டும் என்பதற்காகத்தான் எங்கள் பாட்டானார் பெரியாரின் ஏன்,எதற்கு,எப்படி என்ற கேள்விகளை என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்,அது உங்களுக்கு குறையாகத் தெரிந்தால் அது எங்களுக்கு நிறைவையே தரும்.
இந்த நியாயத்தையே நீங்கள் மதிக்கவில்லை(ஏற்றுக்கொள்ளவில்லை)என்றால் வேறு எதைத்தான் ஏற்பீற்கள்!?
எங்களின் புத்திசாலித்தனத்திற்காக அல்ல,எம் மக்கள் புத்தி மழுங்கடிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்குத்தான் இவ்விதம், நாங்கள் விமர்சனம் செய்கிறோம் என்று உங்களுக்கு புரிந்தால் சரி.....



குடிகாரன்
2009-03-19 10:22:00
velichathil@gmail.com

நான் கடவுள் அக்மார்க் தமிழ் மசாலா படம் என்பதில் சந்தேகமே இல்லை. வித்தியாசமான ஹீரோயிசப் படைப்பு. எல்லாப் படங்களிலும் ஹீரோக்களின் அறிமுகத்தை பாடலோடு தொடங்குவார்கள். இப்படத்திலும் அவ்வாறே இருக்கிறது. தொடர்ந்து ஹீரோ வில்லனை அழிக்க சென்னை வருகிறார். வில்லன் செய்யும் வில்லக் காட்சிகள் விரிகின்றன. ஹீரோயினை அழகாகக் காட்ட வேண்டுமா என்னவென்று வித்தியாசமான சிந்தனையில் அழகான மேக்கப்பில்லாத பிச்சைக்காரியாக ஹீரோயின். பாலியல் பலாத்காரம். ஹீரோ காப்பாற்றுகிறார். போராட்டத்தில் ஹீரோயின் சாக வேண்டும். அதிலும் வித்தியாசமான பார்வையில் ஹீரோவே கொல்கிறார். வேறென்ன விஷேசம் இருக்கிறது நான் கடவுள் படத்தில். எழுத்தாளர்கள் கூட்டணி வைத்துக் கொண்டு தமிழக மக்களின் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள். உலகத்தரமாம். போங்கய்யா நீங்களும் உங்க விமர்சனங்களும். எல்லாம் அரசியல்...

bhagatsingh
2009-03-28 04:51:00
bhagatsingh1909@gmail.com

நான் கடவுள் படம் இது இந்த ஆண்டின் மிகசிறந்த படமாக வேளிவந்து உள்ளது. விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை மிக சிறபாக இயக்குனர் பால படம் பிடித்து உள்ளார் . ஜெயமோகன் மிகசிரபாக வசனம் எளிதி உள்ளார். பிச்சைகர்ர்களின் பின்புலத்தில் இவளவு கொடுமைகள் உள்ளன என்பது மனதை உருக்கு வதாக உள்ளது . பிசைஎடுப்பவர்களிடம் சுரண்டி வாழும் முதலாளிகளை தோல் உரிகிறார் பாலா . இது போன்ற படங்களை விமர்சனம் செயும் தார்மிக உரிமை எதுவுமே தி.மு.க விற்கு பினாமியாக செயல்படும் உங்கள்ளுக்கு இல்லை .

உங்களை போன்ற போலிகளை நிச்சயம் நான் அம்பலப்படுத்துவேன்
நான் கடவுள் அல்ல
மனிதன்
அனால் உங்களை போன்ற போலி அல்ல

Subavee Thaasan
2009-03-29 05:07:00
subaveethaasan@gmail.com

பகத்சிங் அவர்களே,
குறைந்த பட்சம் பெயரளவிலாவது(உங்களின் பெயர் அளவில்...) உங்களிடம் பகுத்தறிவு மற்றும் முற்போக்கு சிந்தனைகளை எதிர்பார்த்தது எங்களின் தவறு தான்...
படத்தின் ஒரே ஆறுதல் ஊன முற்றவர்களின் வாழ்க்கையை பிரதிபலித்தது தான்,அதை தவிர்த்து எந்தவொரு ஆக்கப்பூர்வமான வசனங்களையோ, நடவடிக்கைகளையோ,முடிவுகளையோ பாலா மற்றும் ஜெய மோகனிடம் இருந்து வெளிப்படவில்லை என்பது தான் எங்களின் வருத்தம்.
ஊன முற்றவர்களை சுரண்டி வாழும் முதலாளிகளை தோல் உரிக்கும் பாலா,அதே ஊன முற்றவர்களுக்கு அபத்தமான முடிவை இந்து தர்ம அகோரிப்படி தரும் நான் கடவுளுக்கு சிவப்புக் கம்பள விரிக்கும் விளக்கம் தான் புரியவில்லை.
ஒரு திருத்தம் நாங்கள் எந்த மு.க விற்கும் பினாமிகள் அல்ல,அய்யா தந்தை பெரியாரின் வழியில்...பகுத்தறிவு,முற்போக்கு,சமதர்ம சிந்தனை கொண்ட திராவிடர்களின் பினாமிகள் என்று சொல்லுங்கள்,மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறோம்.
அன்பரே, நீங்கள் மட்டும் அல்ல நாங்களும் மற்றும் எவரும் மனிதர்கள் மட்டுமே...உங்களின் எழுத்துக்கள் மூலம் எங்களால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது நீங்கள் யார் மற்றும் எது போலி என்று!?

bhagatsingh
2009-04-09 03:04:00
bhagatsingh1909@gmail.com

ஏய் தம்பிகளா , உங்களை விமர்சனம் செய்தால் உடனே என்னை பகுத்தறிவு அற்றவன் பார்ப்பான் என்பது பெரியார் காட்டிய பாதைய சரி ஒரு கேள்வி congrass katchiyai vimarsan cheiyum neengal enn thi .mu.ka ,athan atiyal rowdhy thirumavalavani kondadukeerkal ungalukku pen irupathu ellam thi.mu.ka. than neenkal polikaly

GURU
2009-04-19 10:40:00
GPGURUCA2008@GMAIL.COM

விமர்சனம் செய்ய வேண்டும் என்றே
எழுதபட்ட கட்டுரை போல தெரிகிறது.
பொறாமைகள் பலவிதத்தில் வெளிப்படும்.
அதில் இது ஒரு வகை. சுத்த உளறல்.

Subavee Thaasan
2009-04-25 05:48:00
subaveethaasan@gmail.com

அண்ணன்களா,

எங்களை விமர்சனம் செய்ததால் அல்ல,பார்ப்பனீய கருத்துக்கு ஒத்து ஊதுவதால் தான் எங்களுக்கு அந்த சந்தேகமே எழுகிறது.
சரி உங்களுக்கான விடைக்கு வருவோம்.
காங்கிரஸ் பற்றி விமர்சனம் செய்வதற்கு வழுவான காரணங்கள் இருப்பதால் தான் விமர்சனம் செய்கிறோம் அது உங்களுக்கும் தெரியும்( நான் கடவுளிடமிருந்து எப்படி காங்கிரஸிற்கு வாதம் போனது என்பது விளங்கவில்லை,சரி அதை ஒதுக்கி விடுவோம்)
ரவுடி பட்டம் கட்டும் அளவிற்கு திருமா அப்படி என்ன செய்து விட்டார் என்பதை சற்று விளக்கினால் நல்லது.சாதி மதக் கலவரங்களுக்கு தூபம் போட்டாரா?அடிதடி,அராஜக,கொலை,கொள்ளை அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறாரா?
சத்திய மூர்த்தி பவனில் நடந்த நிகழ்வுகளை நீங்கள் அந்த அடிப்படையில் பார்த்தால் அது உங்களின் பார்வை கோளாறு.அங்கு நடந்த நிகழ்வுகளுக்கு காங்கிரஸ் தொண்டர்களும் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க மறைக்க முடியாது.ஈழத் தமிழர் பிரச்சனைக்காக தொண்டர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பால் ஏற்பட்ட நிகழ்வுகள் அவை.
தாழ்த்தப்பட்டவர்களின் பிரதினிதியாக இருப்பது தான் பிழையாக உங்களுக்கு தெரிகிறதா என்பது எனக்கு தெரியவில்லை.
ஆனால் ஓட்டு அரசியலில் எல்லா கட்சிகளுமே விமர்சனத்திற்கு உட்பட்டவை தான்,அது மறுக்க முடியாத உண்மையே...
நான் ஏற்கனவே கூறியது போல நாங்கள் எந்த மு.க விற்கும் பினாமிகள் அல்ல,அய்யா தந்தை பெரியாரின் வழியில்...பகுத்தறிவு,முற்போக்கு,சமதர்ம சிந்தனை கொண்ட திராவிடர்களின் பினாமிகள் என்று சொல்லுங்கள்,மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறோம்.
எங்களை போலிகள் என்று கூறுவதில் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் தாராளமாக கூறிக்கொள்ளுங்கள்.
ஆனால் போலிகள் யாரென்று உங்களின் விமர்சனங்களை படிப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.

bhagatsingh
2009-06-04 05:19:00
bhagatsingh1909@gmail.com

தம்பிகளே
நீங்கள் பகுத்து அறிதல் பற்றி என்ன நீனைகிகீறீர்கள் என்பது எனக்கு தெரியாது அனால் நான் பகுத்து அறிதல் என்றல் பெரிவரியான உழைக்கும் மக்களை கொண்ட இந்த சமுதாயத்தில் அவர்களின் வாழ்கையில் ஒளி ஏற்ற கூடிய நல்ல கருத்துகளை கூற வேண்டும் என்று தான் நீனைகிறேன்



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP