கண்ணீர் வணக்கம்
விதைகளாய் மண்ணில் விழுந்து மறைந்த
புலிகளே! உங்கள் பாதம் வணக்கம்- வீரக்
கதைகளாய் எங்கள் நெஞ்சில் நிறைந்த
புயல்களே! எங்கள் கண்ணீர் வணக்கம்!
அனல் மழை என குண்டுகள் பொழிந்து
ஆயிரமாயிரம் எறிகணை சொரிந்து
பசியெனும் புதுவகை ஆயுதம் தரித்து
பகைவனால் அழியுண்ட மக்களே வணக்கம்!
புதைகுழி யாவும் விதைகுழியாகும்-எம்
பூமியில் மறுபடி பூக்களும் பூக்கும்
தலைமுறை உங்கள் கனவினைக் காக்கும்-விழி
மலர்ந்துமே உங்கள் கல்லறை பாடும்!
கடந்த 3 வருடங்களாக சிங்கள இனவாதம் தொடுத்த போரினால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட, அல்லலுற்ற லட்சக்கணக்கான தமிழ் சொந்தங்களுடன் சமூக விழிப்புணர்வு தனது துயரங்களைப் பகிர்ந்து கொள்கிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|