Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
ஏப்ரல் 2009
ரஞ்சனி கவிதைகள்

விரகம்...

Indian Lady உறவுகள்
நடத்தும்
நாடகங்களால்
உணர்வுகள்
மேடையில்
அந்தரித்து
தவிக்கிறதது

உறவில் எழுதி
நாட்க் குறிப்புக்களை
உரத்தே வாசிக்கிறது
பிரிவின் விரகம்

ரணம்பட்டு
அலையும்
உயிரிலிருந்து
வடிகிறது
வார்த்தைகள்
வக்கிரமாகி.

குழம்பிய நாட்குறிப்பிலிருந்து...

மொழிக்கும்
சிந்தனைக்கும்
தீராத வாக்குவாதம்
பாதுகாப்புத்தேடி
அலைகிறது
வார்த்தைகள்
எழுதமுயல்கையில்
அழுகிறது கவிதை

மனதின் வலிகளுக்குள்
கனவுகள் கொல்லப்பட
கற்பனையும்
வெற்றுத்தாளும்
ஒன்று கூடல்
நடத்துகிறது ..


மைன் நதியில்..

மங்கிய மின் ஒளியில்
நனைந்து கொண்டிருக்கும்
மைன் நதியில்
உறங்கிக் கொண்டிருக்கும்
நகரத்தை
படம் பிடிக்கும்போது

எங்கிருந்தோ வந்து
தழுவிய பனிக்காற்று
நதியுடன் போராடி
என் நினைவுகளை
மீட்டுச்செல்கிறது

கலங்கிய நதியில்
அதிர்கிறது நகரம்
கலைந்து போகிறது
புகைப்படக் கனவும்..


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.