என்னுடைய கவிதை
விஜய் விக்னேஷ், லயோலா கல்லூரி
தினமும் குளியல்
பாதாளச்சாக்கடைக்குள்
உணவு இடைவேளை
மலம் அள்ளிய கையோடு
அள்ளிக் கொட்டுகிறோம்
எவன் எவனோ
பேண்ட பீயை
இருந்தாலும் பார்ப்பதில்லை
இது எவன் சாதிப் பீயென்று
மூத்திரச் சந்துக்குள்ளதான்
முடிந்தவரை தூங்குகின்றோம்
மூச்சு போனதுன்னா
போனது போனதுதான்
எங்காச்சும் இழவுன்னா
எடுத்தெறிஞ்சு ஓடுகின்றோம்
பொணம் பொசுக்கி முடிச்சாத்தான்
சோறுதண்ணிக் காய்ச்சுகின்றோம்
செருப்பு தைச்சு கிடைச்ச காசு
செலவுக்கு இருந்தாலும்
வட்டிக் கட்டி முடிச்சபின்பு
வறுமைதான் மிஞ்சுதுங்க...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|