அன்புக் கடன்
வே. இராஜகுணா, காயிதே மில்லத் கல்லூரி
உன் கருவறையில் இடம் கொடுத்து
உடலினுள்ளே உயிராய் வளர்த்து
செல்வமெனப் பெற்றெடுத்து
இரத்தத்தை உணவாக்கி
பாசமெனும் மலர்கோர்த்து
உன் புனித அன்பால்
என்னை வளர்த்த அன்னையே!
உன் ஆசைதான் என்ன?
இந்த பூத உடல் அழிந்து
இயற்கையோடு கலந்தாலும்
என் ஆத்மா மட்டும்
நன்றி சொல்லும்
என் தாயே உன் அன்புக் கடனுக்காக...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|