வடுக்கள் பிரேம பிரபா
உனக்கென்ன
ஒரு சொல்
வீசி விட்டுப் போகிறாய்
வேர்கள் கிளைத்து
இறக்கைகள் படர்த்தி
திசைகள் மாறி
பார்வையின் நுகர்வை வேரறுத்து,
சுவாசத்தின் தடம் புரண்டு,
வெற்றுடல் சுமந்து,
மாலையில் மௌனத்துடன்
உன்னை வரவேற்க
மென்விரல் பற்றி
புதுச்சினேகம் வளர்த்து
உடன் மன்னிக்கவும் மன்றாடுகிறாய்.
கடந்து போகிறது நம் வாழ்க்கையும்
சொற்களைச் சுமந்த
வடுக்களையும்
வடுக்களுடன் என் மனமும்
மன்னிப்பைச் சுமந்த வடுக்களுடன்
உன் தோள்களும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|