Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2006
தேவேந்திர பூபதி கவிதைகள்

இப்போதெல்லாம்
காதலை ஒழித்து கட்டுவது பற்றி
ஆலோசிக்கிறேன் இடையில்
தாமரையைப் புனைப்பெயராகக் கொண்ட
ஒருத்தி குறுக்கிடுகிறாள்
ஆண்களைக் காதலிப்பது மகா பாவம்
என அவள் ஒரு முறை சொல்லக் கேட்டிருக்கிறேன்
அவள் தன் கணவனை விட்டு காதலுடன்
ஓடிப்போன சமயம்
எனக்கது ஒரு தகவலாகவும் சற்றே இரக்கமாகவும் இருந்தது
என் அலுவலகக் கோப்புகளில் தொடர்ந்து
விரல்கள் நோகும் வரை கையெழுத்திட்டுக் கொண்டே இருக்கிறேன்
தாமரை ஆரம்பத்தில் என்னைத்தான்
காதலித்தாள் எனச் சொல்வது இப்போதைக்குப் பொருத்தமானது
அவமானங்களின் நிழல்வெளியில்
எத்தனை காலம் மறைந்தழிந்தாளோ
எந்த பரிதாபத்தின் விழுப் பல் பட்டதோ
இடையில் அவள் இறந்தும் போய்விட்டாள்
தாமரை என்பது ஒரு பெண்ணின் புனைப்பெயர்
காதலுக்குரியது என்று
நான் வைத்திருந்த புனைவு ஒன்று அவளுடனேயே
இறந்து விட்டதால்
எனது நிஜப்பெயரை வைத்துத்தான்
இக் கவிதையை நான் எழுதவேண்டும்
துரதிர்ஷ்டம்.

2.

பெண்களைக் கவிதைகளாகவும்
மௌனங்களைப் பூக்களாகவும்
வைத்திருந்தவனின் வீட்டிற்கு
விருந்திற்குச் சென்றேன்
அவன் இரண்டு கவிதைகளை
வாசிக்கக் கொடுத்தான்
ஒவ்வொரு வார்த்தைகளும்
பிரபஞ்சத்தின் ஒளியை
இருளின் சப்தத்தை வெளிப்படுத்திய போது
கைகளில் மகரந்த வாசனை வீசியது
என்னை அவனது தோட்டத்திற்கு
அழைத்துச் சென்று
உதிராத மலர்களை பறித்துத் தரும்போது
அவை என் அன்னையின் நறுமணத்தை நினைவூட்டின
அப்போது 30 வினாடிகளையும் ஒரு புவி ஈர்ப்பு விசையையும்
தாவரங்களில் தொங்கும் நீர்த்துளிகள்
தாங்கிக் கொண்டிருந்தன.

--------------------------------------

இடம் மாறும் பறவைகள்

பறவைகள் இடம் மாறிப் பிழைப்பது போல
நான் ஒரு ஊழியனாகவும்
எனது சிறிய குடும்பத்தின் கூடு ஒன்றை
தோளில் தாங்கியவனாகவும் இருக்கிறேன்
என் அதிகாரத்தின் கடைசிக் கண்ணியில்
எனது சிறிய குழந்தையின் நடைக் காட்சிகள்
இரக்கமற்ற தொலைக்காட்சி அலைவரிசை போல
மாறிக் கொண்டிருப்பது ஒரு அறியப்பட முடியாத சோகம்
அவனறிந்த வெளி, பள்ளிகள்
சில நண்பர்கள், வாகன ஓட்டிகள்
என் அலுவலகம், பிறகு என் இலக்கியத் தோழர்கள்
கூடவே தோட்டத்து அணில்களோடு
அவனது பரிச்சியத்தை
வேரோடு அகற்றி நான் இடம் மாற்றும்போது
அவனது கனவுகளில்
உறைந்திருக்கும் ஓவியம் எவ்வாறு
வண்ணமழிந்து கசியும் என்பதுதான் திடுக்கிடலாய் இருக்கிறது
அவன் யாவற்றின் பெயர்களையும்
சலசலத்தபடி உதிர்த்துக் கொண்டே இருக்கிறான்
மிக இயல்பாக எனது வீட்டின் சாமான்கள்
அவனது உடையாத விளையாட்டுப் பொருட்களுடன்
மூட்டை கட்டப்படுகின்றன.
பற்றற்றவள் போல் என் மனைவி அதில் ஈடுபடுகிறாள்
ஒரு குழந்தை அவள் கைகளுக்குள் வினோதமாய் ஒடுங்குகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com