தூரன் குணா கவிதைகள்
சமயங்களில் திரு ஜ் அவர்களின்
வேட்டை நாய்க்கும்
அம்சம் கூடிவிடுகிறது 24/7 ல் போஷிக்க வாலில்லாதவர்கள் இருக்கிறார்கள்
எலும்போடு கறி
அன்னாருக்கு எப்போதுமுண்டு
தனிமை வாய்க்கையில்
சிம்மாசனத்தில் மல்லாந்து ஓய்வெடுக்கவும் ஓய்ந்தபோது காலை(ஒன்று!) தூக்கி
ஆசிர்வதிக்கவும் பழகிக்கொண்ட பின்
சரமாரியாக விழுகிறது கும்பிடு அவர்களின் எல்லைவரை வாலாட்டிக்கொள்வது அவ்வப்போது இனாம்
உறுமி மிரட்டுவதோ கடித்துக் குதறுவதோ
முகக்குறிப்பிலிருந்தே செயலாற்றுகையில்
மகிழும் திரு ஜ் ன் வருடலில் பூரித்து குட்டி யானையாய் திமிறி அலையுமதற்கு நசுக்கப்பட்ட விரைகள்
பற்றிய ஞாபகங்கள் இப்போது ஏதுமில்லை
ஆண்மகன் வசிக்கும் வீடு
ஊரின் ஆகாசம் நீலம் பாரிக்கும் மதியங்களில்
பூட்டிய வீட்டின் கரிந்த அடுப்பின் நுனியோரம்
உப்பாய் நுரைத்து பொங்கத்துவங்குகின்றது
முந்தைய இரவில் உதிர்ந்த துயரம்
கடைசியாய் சாணம் மெழுகியது நேற்றாயினும்
என்றோ ஈசானிய மூலையில் சிந்திய உதிரத்தின் தாரையிலிருந்து
அடர்வண்ணத்தில் சீறியெழுகிறது செந்நிற ஊற்று
ஒரு பாதரச கோட்டின் புறங்களில் பெருகும்
இரு வண்ணக் குளங்களில் கரைந்தழிவன
நிறம் திரியும் சுவர்களிலிருந்து குழந்தைகளின் அறுபட்ட கனவுகள்
ஊரின் ஆகாசம் செந்நிறமாகும் அந்தியில் தாழ் நீக்குபவளின் காலிடுக்கில் தட்டோ ட்டு கூரைவரை உயர்ந்துவிட்ட குளங்கள்
நூலிழை நதிகளாய் உருக்கொண்டு
பாய்ந்து மறைய தன் வாசனையில்
வீட்டைச் சீராக்குபவள்
அடுப்போரம் குனிந்திருக்கிறாள் இன்றைக்கும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|