Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி- மார்ச் 2009

கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும்
இக்பால்

மீண்டும் ஒருமுறை உலகளாவிய பயங்கரவாதம் பற்றி வாய் ஓயாது பேசிச் சலித்தாகிவிட்டது. கூடவே யாரும் சந்தேகப்பட்டுவிடாமல் இருக்க மறக்காமல் தேஷ்பக்தியைப் பற்றியும் உணர்ச்சிவசப்பட்டு முழங்கி, "அரசியல்வாதிகளையெல்லாம் சுட்டுக் கொல்லணும்பா, பாரு, வரி கட்டுறொம், ஆனா உசிருக்கு பாதிகாப்பு இல்லே, இனிமே எதுக்கு வரி கட்டணும்?" போன்ற தேஷ்பக்த வாதங்களை முன் வைத்த திருவாளர் மிடில்கிளாஷ், வழக்கம்போல் டி.வி. பார்த்து, "சூப்பரா பாலைத் தூக்குனாம் பாரு, நான் நினச்சமாரியே சிக்சர்... ஆனா அநியாயமா அவுட் டானாம்பா.."என்று சாராய வியாபாரி விஜய் மல்லையாவின் குதிரை லாயத்தில் புதிதாகக் கட்டப் பட்ட கிக்கெட் குதிரைகளின் இரண்டுகால் பாய்ச்சல் பற்றி சிலாகித்து புழகாங்கிதம் அடைந்து மல்லாக்கப் படுத்து தூங்கப் போய்விட்டார். சர்வதேச உயிர்க் கொல்லி விஷபானக் கம்பெனிகளுக்கு இந்தியாவில் விளம்பரப் பிராணியாக நடித்து லட்சக்கணக்கில் காசு சம்பாதிக்கும் சில கிரிக்கெட் குதிரைகள் "எனக்கு தேஷ்பக்திதான் முக்கியம்" என்று டி.வி.காமிராக்களின் முன் முழங்கியது வடிவேலுவே பொறாமைப் படக்கூடிய அளவுக்கு சூப்பர் காமெடி சீன். நான் சொல்ல வருவது 'இந்தியத்தொலைக்காட்சிகளில் முதல்முறையாக நேரடியாக ஒளிபரப்பப்பட்ட 66 மணிநேர பயங்கரவாதம்' பற்றித்தான் என்று நீங்கள் ஊகித்திருந்தால் அடுத்தமாத கேபிள் டி.வி.சந்தாவை உங்களுக்காக நான் கட்டுவேன். அது பயங்கரவாதமா கிக்கெட்டா என்று குழப்பம் வருகிற அளவுக்கு சி.என்.என்.நேரடி ஒளிபரப்பில் கீழ்மூலையில் ஸ்கோர் போடப்பட்டது. இறுதியாக 10 பயங்கரவாதிகள் சேர்ந்து 183 கொலைகள் செய்ததாக இறுதி ஸ்கோர் காட்டியது. இப்படி நான் சொல்வதால் பயங்கரவாதமும் கிக்கெட்டும் ஒன்றா என்று நீங்கள் கேள்வி கேட்டால், என் உறுதிமொழி வாபஸ், நான் கிரிக்கெட்டின் தாய்வீடான இங்கிலாந்தின் பிரதமரைக் கேட்டுத் தான் பதில் சொல்ல முடியும், அதுவரை நீங்கள் காத்திருக்கலாம்.

நவம்பர் 26ஆம் தேதி இரவு 1030 மணிக்கு மும்பை சத்ர பதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனில் நுழைந்த இரண்டு தீவிரவாதிகள் சரமாரியாகச் சுட்டதாகவும் ஒரு ரவுண்ட் சுட்டபின் தீர்ந்துபோன மேகசனை மாற்றி மீண்டும் புது மேகசைன் போடும் அளவுக்கு கால அவகாசம் இருந்ததாக அனைத்தையும் நேரில் பார்த்துக் கொண்டிருந்த நேர அறிவிப்பாளரான விஷ்ணு தத்தாராம் ஜெண்டே கூறுகின்றார். அதன்பின் சாவகாசமாக டாக்சியைக் கைப் பற்றி தாஜ் ஓட்டலுக்கு சென்றதாகவும்... மீண்டும் மறு ஒளிபரப்பு அவசியமில்லை என்பதால் விசயத்துக்கு வருகின்றேன். இந்த பயங்கரவாதத் தாக்குதலால் பயனடைந்தவர்கள் என்று இரண்டுபேரைக் கூற முடியும்- மீண்டும் ஒருமுறை தங்கள் தேஷ்பக்தியை நாடெங்கும் ஓடவிட்டு சிறுபான்மை மக்களுக்கு எதிரான உள்நோக்க அரசியலைக் கட்டவிழ்த்துவிட்ட ஆர்.எஸ்.எஸ்., அதன் அரசியல் முகமூடியான பி.ஜே.பி.;உலகளாவிய பயங்கர வாதத்தை வேரொடு அறுக்க அவதாரம் எடுத்த உலக ரட்சகன் அமெரிக்காவும் அதன் ஆயுத உற்பத்தியாளர் களும். டி.வி, செய்தித்தாள், இணையதளம் போன்ற ஊடகங்கள் 'இழவு வீட்டில் காசு வைத்து சூதாடி' நேரடி ஒளிபரப்பு செய்து தங்கள் பாக்கெட்டை நிரப்பிக் கொண்டதுடன், மேற்படி ஆர்.எஸ்.எஸ். + அமொக்க கூட்டணிக்கு பிரச்சாரம் செய்து எஜமான விசுவாசத்தை யும் காட்டிக் கொண்டன, ஒரேகல்லில் ரெண்டு மாங்காய். அதற்கு அடுத்துவந்த நாட்களில் இங்கிலீஷ், டமில் என எல்லா சானல்களிலும் வெள்ளையும் சொள்ளையு மான நபர்களும், படப்பிடிப்பு தளத்துக்கு வெளியே போனால் ஒருத்தர் மீது ஒருத்தர் சேறு, நரகல் என ஒன்று மிச்சம் வைக்காமல் கையில் கிடைப்பதெல்லாம் அள்ளி வீசத் தயங்காத கரைவேட்டி ஆசாமிகளும் உட்கார்ந்து கொண்டு தேஷ்பக்தி என்ற ஒன்றுதான் தங்களை இணைத்திருக்கும் கண்ணி என்பதாக உணர்ச்சிவசப் பட்டு பயங்கரவாதம் பற்றிபேசிப்பேசி மாய்ந்து போனார்கள். மூக்கைச் சிந்தி அழவில்லை என்பதுதான் பாக்கி. இதை ஊடக பயங்கரவாதம் என்று ஏன் சொல்லக்கூடாது?

மும்பை பயங்கரங்கள் குறித்து விலாவரியாகப் பேசுவ தானால், அதற்கு முன் இரண்டு கேள்விகளைப் பற்றிப் பேச வேண்டும். விடுதலை பெற்ற இந்தியாவின் பயங்கர வாதத்தை எங்கே இருந்து தொடங்குவது? உலகளாவிய பயங்கரவாத்தை எங்கே இருந்து தொடங்குவது? இந்த இரண்டு கேள்விகளையும் பேசாமல் பயங்கரவாதம் பற்றியும் தேஷ்பக்தி பற்றியும் உணர்ச்சிவசப்பட்டு பேசினால் இரத்த அழுத்தம் ஏறுவதைத் தவிர வேறு ஒரு பிரயோசனமும் இல்லை.

1947க்குப் பின்னான இந்தியாவின் பயங்கரவாதம் என்பது ஆகஸ்ட் 15க்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. அதன் உச்சகட்டம்தான் பிரிவினையின்போது வடக்கு, வட மேற்குப்பகுதிகளிலும் அதிகபட்சமாக பஞ்சாபிலும், கல்கத்தாவிலும் நடந்த கொடூரங்கள். இதைப்பற்றி தனியேதான் எழுத வேண்டும். இந்தப் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் இந்து, முஸ்லிம், சீக்கியர் என்று அனைத்துத் தரப்பாரும் இருந்தார்கள். அநேகமாக இந்தப் படுகொலைகள் அனைத்தும் எந்தவிதமான திட்டமிட லும் இல்லாமல், அன்றைக்கு நிலவிய சூழ் நிலையில் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் ஒரு மதத்தவர் மேல் மற்றவர் கொண்ட எதிர்ப்பு உணர்வாலும் நிகழ்ந்தவை, தனிநபர்களாலும் கூட்டமாகவும் நடத்தப்பட்டவை என்று கூறலாம். ஆனால் முதன் முதலாக, சுதந்திர இந்தியா வின் நன்கு திட்டமிடப் பட்ட, தனிநபர் மீதான ஒரு படுகொலை என்பது ஆர்.எஸ்.எஸ்.ஆல் நடத்தப்பட்டது. அதன் இலக்கு மஹாத்மா காந்தியடிகள். படு கொலைக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருந்தது: அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத் தினார். எனவே 1948 ஜனவரி 20லிருந்து பேசத் தொடங்குவதுதான் சரியாக இருக்கும். அன்றைக்கு பிர்லா மாளிகையில் காந்தியார் கூட்டத்தில் பேசும்போது, அதற்கு பத்தடிகள் பின்னால் உள்ள அறையிலிருந்து நாதுராம் கோட்சே வெடி குண்டை வீசவேண்டும், கூட்டத்தில் கலந்து விட்ட மதன்லால்பாவா காந்தியாரை துப்பாக்கியால் சுட வேண்டும் என்பதே திட்டம். ஆனால் அவர்களே எதிர்பாராத விதமாக, அந்த அறையின் ஜன்னல், தரையிலிருந்து எட்டு அடி உயரத்தில் இருந்ததால் அன்றைய முயற்சி வெறும் வெடிகுண்டு வீச்சோடு முடிந்தது, காந்தியார் இன்னும் ஒரு பத்துநாள் உயிரோடு இருந்தார். ஜனவரி 30 அன்று நாதுராம் கோட்சே அடுத்த முயற்சியில் காரியத்தை நிறைவேற்றினான். இந்து வைஸ்யரான மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தியை இந்து சித்பவன் பிராமணனான கோட்சே சுட்டுக் கொன்றான் (இந்துக்களே, ஒன்று படுவீர்! இந்துக்கடைகளிலேயே சாமான் வாங்குவீர், துப்பாக்கி வாங்குவீர்!) இப்படு கொலையைத் திட்ட மிட்ட அனைவரும் இந்துக்களே - கோபால் கோட்சே, அவன் தம்பி நாதுராம், மதன்லால் பாவா, கார்காரே, திகம்பர் பாட்கே, நாரயண் ஆப்தே, வீர சாவர்க்கார். (மாலேகாவ் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட இந்துத்துவா தீவிர வாதிகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த போலீஸ் அதிகாரி யின் பெயரும் ஹேமந்த் 'கார்காரே' என்பது வேடிக்கை!).

இந்தியாவில், ஒரு அரசியல் தலைவர் மீதான முதல் படு கொலையை நடத்தியது இந்துத்வா பயங்கரவாதம்தான் என்பதையும், "இந்து முஸ்லிம் ஒற்றுமையை" வலியுறுத் தியதற்கு எதிராகத்தான் அது நடத்தப்பட்டது என்பதையும் நாம் அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும். அன்றைக்கு கோட்சே செய்திருந்த ஆண்குறித் தோல்நீக்கமும் (இஸ்லா மிய மதச்சடங்கு), கையில் குத்தியிருந்த இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரும் எதிர்கால இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். என்ன செய்யப் போகின்றது என்பதை அறுதியிட்டுச் சொல்வனவாகவும் இரண்டு செய்திகளை விட்டுச் செல்வன வாகவும் இருந்தன. அவர்களது நோக்கம், ஒன்று: சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்ற, கால மெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய தேசப்பிதா என்று அழைக்கப்பட்டவரை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான் என்ற செய்தியைப் பரப்புவதன் மூலம், இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, சர்வதேச அளவில் முஸ்லிம் மக்க ளுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுவது, அனைத்து மத மக்களையும் 'முஸ்லிம் பயங்கர வாதத்துக்கு' எதிராகத் தூண்டி விடுவது. இரண்டு: அவர்களது இந்துத்வா, அகண்ட பாரதம் குறித்த மதிப்பீடுகளுக்கு நம்மால் வர முடிந்தது: இந்துத்வா தத்துவம் என்பது சூப்பர் டூப் புரட்டு; அது உள்ளீடற்ற ஒரு வறட்டுத் தத்துவம், நியாயமான தர்க்கவாதம் செய்யத்தக்க அளவுக்கு அடிப்படை நியாயம் ஏதும் அற்றது. ஹிட்லரின் நாஜியிசத்துக்கு நூறு சதவீதம் ஈடானது. எனவேதான் ஒரு பரந்த வெகுஜன வெளியில் திறந்த விவாதத்தில், தர்க்க விவாதத்தில் தம்மால் ஜெயிக்க இயலாது என்று தெரிந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். கும்பல், ஹிட்லர் கையில் எடுத்த "வன்முறை, அடாவடித்தனம், எதிர்ப்பவர்களைக் கொன்று விடுவது" என்ற அதே வழிமுறையைக் கையில் எடுத்தது. இன்றைய நிலையில் பயங்கரவாதத்தை அல்லது இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டி விட்டுத்தான் மறுவேலை என்று கங்கணம் கட்டிக் கொண்டு முதுகு வரை வாயைக் கிழித்துக்கொண்டு பேசும் ஊடகங்களும் ஆட்சியாளர்களும் கூட 1948 ஜனவரி 20, 30 பற்றியோ கோட்சேவின் முஸ்லிம் வேஷம் பற்றியோ பேசாமல் மிக ஜாக்கிரதையாக தவிர்த்தே வந்திருக்கின்றார்கள். அநேகமாக இனிமேல் பேசமாட்டார் களோ என்ற சந்தேகம் வருவதற்கு காரணம் உண்டு. காரணம், நமது பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்களில்கூட "காந்தியாரை ஒருவன் சுட்டான்" என்ற ஒற்றை வரியோடு காந்தியாரின் வரலாறு அல்லது கதை முடிந்து போகின்றது என்பது தற்செய லான ஒன்றல்ல. மத்திய, மாநில கல்வித்திட்டங்களை இயற்றுகின்ற பொறுப்பில் உள்ளவர்களும், இந்திய வரலாற்றை எழுதுகின்ற அதிகாரிகளும், பல்கலைக்கழக மானியக் குழுவில் இருக்கின்ற கனவான்களும் கோட்சேவின் தம்பி களாகத்தான் இருக்கின்றார்கள் என்பதைச் சொல்ல யாரும் தயங்க வேண்டாம். காந்தியாருக்கு நமது அரசு அதிகாரிகள் பரிவோடு செய்கின்ற அதிகபட்ச மரியாதை என்பது, அக்டோ பர் 2 பொது விடுமுறை (அன்று டி.வி.யில் இந்தியத் தொலைக்காட்சியில் முதல்முறையாக சில தொடைகளைப் பார்க்கலாம்), ஜனவரி 30 அன்று 11 மணிக்கு ஒரு 'சங்கு'. அநேகமாக அடுத்த சம்பளக் கமிஷன் தலைவர், "எதுக்கு இதெல்லாம், வேஸ்ட்; உற்பத்தியப் பெருக்கணும்" என்று கேள்வி கேட்டு இதற்கும் சங்கு ஊதிவிடுவார் என்ற சந்தேகம் உள்ளது.

1948 ஜனவரி 20, 30 ஆகியவற்றின் தொடர்ச்சியாக, அடுத்த ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கரவாத நிகழ்வாக, 1984 இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கிய இன மக்களுக்கு எதிரான காங்கிரசார் நடத்திய கொலை வெறித்தாண்டவத்தை சொல்லலாம். இன்று மத்திய ஆட்சியில் மந்திரிகளாக இருக்கின்ற, நுனிநாக்கு ஆங்கிலம் பேசுகின்ற பல கனவான்கள், அன்று டெல்லி வீதிகளில் கத்தியோடும் கட்டாரியோடும் பெட்ரோல் கேன்களோடும் பல சீக்கியர் களைக் கொன்று குவித்த பேர்வழிகள், கடைகளைச் சூறை யாடிக் கொள்ளை அடித்தவர்கள். இதன்பின் நிகழ்ந்த மிகப் பெரும் திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கர வாதமாக 1992 டிசம்பர் 6 அயோத்தி பாபர் மசூதி இடிப்பும் அதனைத் தொடர்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி.யின் கொலைவெறித்தாண்டவமும், இதற்கு எதிர் வினையாக நாடெங்கும் நடந்த குண்டுவெடிப்புக்களும். இந்த கொலைத்தாண்டவத்துக்கு தலைமை தாங்கி நடத்திய வர் பிற்காலத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும், துணைப்பிரதமராகவும், அதன்பின் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவருமாக அதிகபட்ச இசட் பிரிவு பாதுகாப்புடன் ஊர் சுற்றுகின்றார். இந்த ஆசாமி இப்போது தானே அடுத்த பிரதமர் என்ற கனவுடன் ஊர்ஊராக பிரச்சாரம் செய்து வருகின்றார். ஆனாலும் ஆச்சரியம் இல்லை. இந்திய ஜன நாயகம் இதை அனுமதித்துள்ளது. பாரத் மாதா கீ ஜே! தொடர்ச்சியாக, ஒரிசாவில் ஸ்டெயின்ஸ் பாதிரியாரையும் அவர் பிள்ளைகளையும் வைக்கோல் போரில் போட்டு உயிரோடு கொளுத்தியது, அதே ஒரிசாவிலும் குஜராத்திலும் கிறித்துவ, முஸ்லிம் மக்களை நடுவீதியில் கத்தியால் கிழிப்பது, அவர்கள் பெண்களை கூட்டாக வன்புணர்ச்சி செய்வது, நிர்வாணமாக ஊர்வலம் வரச்செய்வது, கர்ப்பிணி யாக இருந்தால் வயிற்றைக் கிழித்து சிசுவை தீயில் போட்டு வாட்டுவது, சிறுவர் சிறுமிகளை அறுத்து எறிவது எனத் தொடரும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிஷத், சிவசேனா போன்ற பயங்கரவாத இயக்கங் களைப் பற்றிப் பேசாமல் இந்தியாவில் பயங்கரவாதம் பற்றிய விவாதம் முழுமை பெறாது.

ஆர்.எஸ்.எஸ். கும்பல் பி.ஜே.பி. என்ற பெயரில் ஆட்சியில் இருந்த போது, தான் ஆட்சியில் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இந்திய அரசு எந்திரத்தை தனது இந்துத்துவா ஆசாமிகள் நடத்தவேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன், பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.ஹெச்.ஆர்), இந்திய தொல்லியல் துறை, உயர்கல்விக் கான பாடத்திட்டங்களை வடிவமைக்கின்ற குழுக்கள், நீதிபதிகள், ராணுவத்தின் உயரதிகாரிகள் என முக்கிய இடங்களில் இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். வெறியர்களைக் கொண்டு திட்டமிட்டு நிரப்பியது. தேசத்தின் கல்வி, கலாச்சார, நீதி நிர்வாக, அறிவுசார் துறைகளைக் கைப்பற்று வதில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெற்றி பெற்றது. கடந்த பி.ஜே.பி. ஆட்சியில் இடதுசாரிகள் இதுபற்றி தொடர்ந்து பேசியும் எச்சரித்தும் வந்தார்கள். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் ஆதரவுடன் இருந்த ஒரு ஆட்சியின் காலத்தில் இத்துறைகளைக் கைப்பற்றிய இந்துத்துவாவாதிகளை வெளியேற்ற குறிப்பிடத்தக்க வகையில் எதுவும் செய்ய இயலவில்லை. இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சிலில் மட்டும் சில மாற்றங்களைப் பார்க்க முடிந்தது. எனவே இந்திய ஆட்சியை, அதாவது அரசு எந்திரத்தை நடத்தியதும் நடத்துவதும் ஆர்.எஸ்.எஸ்.இன் இந்துத் துவா ஆட்கள்தான் என்று சொன்னால் தவறில்லை, உரக்கவே சொல்லலாம். நாம் வாய் மூடி மவுனமாக இருந்தால் எதிர் காலத்திலும் அவர்கள்தான் நடத்துவார்கள்.

அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம் குறித்து எந்த அளவுக்கு தீவிர மாகப் பேசப்பட்டதோ அதே அளவுக்கு தொடர்ந்து பேசப்பட வேண்டிய, பிரச்சாரம் செய்யப்பட வேண்டிய விசயம் இது. மாலேகாவிலும், ஹைதராபாத் மெக்கா மசூதியிலும், தமிழகத்தின் தென் காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திலும் குண்டுவைத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகளே என்று இப்போது தெரிகின்றது, பேசப்படுகின்றது. ஆனால், எங்கே யாவது தீபாவளி பட்டாசு வெடித்தாலும் உடனடியாக 'இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் இதன் பின்னால் இருப்பதாக' காவல்துறையினர் பேட்டி அளிப்பதும், சில இஸ்லாமிய இளைஞர்களை கைது செய்து டி.வி.க்களில் காட்டுவதும் சாதாரணமாக நடக்கின்றது. ராணுவமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. காஷ்மீரில் போலி என்கவுன்டர் களை நடத்தி அப்பாவி 16, 17 வயது முஸ்லிம் பையன்களை சுட்டு வீழ்த்தி தங்களது பதவி உயர்வுக்கு வழி செய்து கொண்ட இந்துத்துவா ராணுவ அதிகாரிகளைப் பற்றி சில காலம் முன்பு செய்தி வந்தது. ஆனால் இதுபற்றி அதன்பின் எந்தவிதமான தகவலும் இல்லை. மாலேகாவ், ஹைதராபாத், தென்காசி குண்டு வெடிப்புக்களைப் போலவே, இந்த போலி என்கவுன்டர்+பதவி உயர்வு குறித்தும், இதுவரை நிகழ்த்தப் பட்ட ராணுவ, போலீஸ் துப்பாக்கிச்சூடுகள், என்கவுன்டர் களில் எங்கேயெல்லாம் முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டார் களோ அவை அனைத்தையும் மீண்டும் விசாரணைக்கு உட் படுத்த வேண்டும் என்று கேட்பதிலும் நியாயம் உள்ளது.

இந்திய பயங்கரவாதத்தின் தொடக்கப்புள்ளி 1948 ஜனவரி 20 என்றால், நவீனகால உலகளாவிய பயங்கரவாதத்தை எங்கே இருந்து பேசத் தொடங்குவது? ஸ்பானிய மன்னனின் வேட்டை நாயான கொலம்பஸ், அமெரிக்க மண்ணில் கால் வைத்த நொடியில் இருந்து தொடங்க வேண்டும். அதை அமெரிக்க பயங்கரவாதம் என்று சொன்னால் தவறில்லை. வெள்ளையர்கள் குடியேற வெள்ளை மாளிகையைக் கட்டிய வர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து குடியேற்றப்பட்ட கறுப்பு மக்கள் என்பது வரலாறு. அந்த மாளிகையின் அஸ்திவாரமாக இருப்பது எது? கொலம்பசால் கொன்று குவிக்கப்பட்ட லட்சக்கணக்கான செவ்விந்திய மக்களின் ரத்தமும் சதையும். கரையில் இறங்கிய கொலம்பஸ் கும்பலைக் கண்டு ஓடிவந்த சூதுவாது ஏதும் அறியாத செவ்விந்திய மக்களை நோக்கி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் கொலம்பஸ் கண்மூடித் தனமாக சுடத் தொடங்கிய அந்த நொடியில் இருந்துதான் உலகளாவிய பயங்கரவாதம் பற்றிப் பேசத் தொடங்க வேண்டும். இயற்கையோடு இயைந்த சுகாதாரமான வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த செவ்விந்திய மக்க ளுக்கு கொலம்பசும் அவன் கும்பலும் கொடுத்த பரிசு, தாங்கள் எடுத்துச்சென்ற பால்வினை நோய்களும் துப்பாக்கிச்சூடும் தான். எனவே உலகளாவிய பயங்கர வாதத்தைத் தொடங்கி வைத்தது அமெரிக்காதான் என்றால் அது தவறு இல்லை. இது ஏதோ இன்றைய அரசியல் நிகழ்வுகளில் இருந்து பின்னோக்கி அமெரிக்காவின் மீது வீண்பழி போடும் முயற்சி அல்ல, நீண்ட நெடிய வரலாற்று உண்மை. தனது சுயநலனுக் காக எந்த நாட்டின் மீதும் ஆக்கிரமிப்பு நடத்தவும் உயிரியல், ரசாயன, பவுதீக, பொருளாதார.... என அனைத்து ஆயுதங் களையும் பிரயோகிக்க அமெரிக்கா என்றுமே தயங்கியது இல்லை. 1945 ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வீச்சு என்பது உண்மையில் ஒரு சோதனைதான். அணுகுண்டு வீசினால் உயிருள்ள மக்களும், பிற உயிரினங்களும், ஜடப் பொருட்களும் என்ன ஆகின்றன என்று சோதித்துப் பார்க்க விரும்பிய அமெரிக்க பயங்கரவாதிகளுக்கு, சோதனை எலி களாகத்தான் அன்றைக்கு அப்பாவி ஜப்பானிய மக்கள் பயன்படுத்தப்பட்டார்கள். இது அமெரிக்காவின் உலகளாவிய பயங்கரவாதம் இல்லையா? இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா கும்பல் கள் செய்கின்ற 'பயங்கரவாத' எதிர்ப்பு பிரச்சாரத்திலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து செய்து வருகின்ற 'பயங்கரவாத' எதிர்ப்பு பிரச்சாரத்திலும் ஒரு குறிப்பிட்ட மதத்தவர் - இஸ்லாமிய மக்கள் - உலக மக்களின் எதிரியாக நிறுத்தப்படுவது, ஒரு 'பொது எதிரி' யாக அடையாளப் படுத்தப்படுவது தற்செயலானதா திட்டமிடப்பட்டதா என்ற கேள்விக்கான பதிலை வரலாறு திட்டவட்டமாக வைத்திருக்கின்றது.

1900த்தின் முற்பகுதியில், ஈரானில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பின் அமெரிக்க பயங்கரவாதத்தின் இலக்கு அரபுப் பிரதேசத்தின் மீது விழுந்தது. அதன் நாடு பிடிக்கும் கொள்கை, கூடவே லத்தீன் அமெரிக்க, மத்திய கிழக்கு, அரபு நாடுகளில் ஒரு ரவுடியைப் போல் நுழைந்து கத்தியை வீசுகின்ற பயங்கரவாதப்போக்கு, இந்த நாடுகளின் மக்கள் மத்தியில் அமெரிக்காவுக்கு எதிரான தீராத பகையுணர் வைத் தோற்றுவிக்க காரண மாக இருந்தது. அமெரிக்காவின் தந்திரமே அதுதான்! அடுத்தவன் வீட்டுக்குள் அதிரடியாக ஒரு நாய் போல நுழைவது, அவனை வலுக்கட்டாயமாக எதிரியாக் குவது, அவன் திருப்பி அடிக்கும்போது அவனை 'தீவிரவாதி' யாக முத்திரை குத்துவது, 'பயங்கரவாதம்' பற்றி பேசுவது, அதன்பின் தான் ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருக்கும் மறைமுக செயல்திட்டங்களை (அஜெண்டா) அதிவேகமாக நிறைவேற்றுவது!
இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நுழை வதற்கான திட்டம் ஏற்கனவே அமெரிக்காவிடம் இருந்த திட்டம்தான். ஆனால் நுழைவதற்கான வாய்ப்பை, காரணத்தை மட்டும் எதிர்பார்த்திருந்தபோது, அமெரிக்காவால் கொம்பு சீவி வளர்க்கப்பட்ட பின்லாடனும் அல்-காய்தாவும் வழி ஏற்படுத்திக்கொடுத்தார்கள். 9/11ஐ ஒரு காரணமாகச் சொல்லிக்கொண்டு இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப் பதாக ஒரு பொய்க்காரணத்தைப் பரப்பி இராக்கில் நுழைந்தது, சதாம் உசேனையும் கொன்றது, இராக்கின் எண்ணெய் எடுக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது. 60 வருடங்களுக்கும் மேலாக பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் என்ற வெறிநாய்க்கு கறிபோடும் எஜமானாக இருப்பது அமெரிக்காவே. அமெரிக்கா மட்டும் அல்ல, இதர ஐரோப்பிய நாடுகளையும் சொல்லலாம். எகிப்தில் நெப்போலியன் ஆக்கிரமிப்பும் அதனைத் தொடர்ந்த எகிப்திய கலாச்சார அழிவும் (கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பழம்பெரும் சின்னமான ஸ்பிங்க்ஸ் சிலையின் முகத்தில் இப்போது நாம் பார்க்கும் வடுக்கள், குழிகள் யாவும் நெப்போலியனின் படைகளால் ஏற்படுத்தப்பட்டவை, தங்கள் பீரங்கிகளால் ஸ்பிங்க்சின் முகத்தை சுட்டார்கள்), அலெக்சான்ட்ரியாவின் புகழ்பெற்ற பண்டைய காலத்து நூலகத்தை அழித்தது, லிபியாவில் முசோலினி ஆக்கிரமிப்பும் அதன் பின் வந்த காலத்தில் ரொனால்ட் ரீகன், பெரிய ஜார்ஜ் புஷ், பில் கிளின்டன் ஆகியோரின் தொடர் தாக்குதல், முக்கியமாக லிபிய அதிபர் மும்மர் கடாபியின் மகளை குண்டு வீசிக் கொன்றது, அல்ஜீரியாவில் ப்ரான்ஸ் ஆக்கிரமிப்பு, இக்கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் சமயத்திலும் பாலஸ்தீனத்தில் தொடரும் இஸ்ரேலின் குண்டுவீச்சு அழிச் சாட்டியம், இரானையும் இராக்கையும் மோதவிட்டு ஆயுத விற்பனை செய்த தந்திரம் எனத் தொடர்கின்றது. அமெரிக் காவின் நோக்கம் பெட்ரோலியத்தை திருடுவதாக இருக் கலாம், ஆனால் பெட்ரோலிய வள நாடுகள் இயற்கையாகவே இஸ்லாமிய நாடுகளாக இருக்கும்போது, அங்கே மேற்கத்திய நாடுகளின் ஆக்கிரமிப்பும் அழித்தொழிப்பும் இஸ்லாமிய மண்ணின் கலாச்சார, மத அடையாளங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பாகவும் அழிவு வேலையாகவும் அமைந்து விடு கின்றது. அரபு பிராந்திய இஸ்லாமிய மக்களின் கோபத்தைத் தூண்ட முக்கிய காரணமாக இருப்பது, அமெரிக்கா தங்கள் மண்ணில் உள்ள பெட்ரோலியத்தை சுரண்டி எடுப்பது மட்டும் அல்ல - தங்களின் நீண்ட பாரம்பரிய மத, கலாச்சார அடையாளங்களுடன் கூடிய அன்றாட வாழ்க்கையை சீரழித் ததையும், மத, கலாச்சார அடையாள சின்னங்களை அழித் ததையும், மொத்தத்தில் அமெரிக்காவின் படையெடுப்பை தங்கள் மதத்தின் மீதான, கலாச்சாரத்தின் மீதான படை யெடுப்பாக, இன அழிப்பாக அவர்கள் பார்த்தார்கள், பார்க்கின்றார்கள். பிட்டிஷ் பத்திரிகையாளரான ராபர்ட் பிஸ்க் இவ்வாறு கூறுகின்றார்: "இராக் நாட்டின் முக்கிய உற்பத்திப் பொருள் காலிப்ளவர் மட்டுமே என்றிருந்தால், நீங்கள் உங்களிடம் உள்ள கடைசி டாலர் நோட்டையும் வைத்து தைரியமாக பந்தயம் கட்டலாம் - புஷ் இராக்கின் மீது படையெடுத்திருக்க மாட்டார்" (டால் டி'மோன்டி எழுதிய கட்டுரை, தி ஹிண்டு, 2008 டிசம்பர் 7).

மும்பை தாக்குதலின் உச்சகட்ட துயரமே உலகளாவிய பயங் கரவாதத்தின் தாய்வீடான அமெரிக்காவின் மந்திரி காண்டோ லிசா ரைஸ் இந்தியாவுக்கு வந்ததுதான். அப்படியே பாகிஸ்தானுக்கும் போனார். நாயைக் காவலுக்கு வச்சா கிடைக்கு ரெண்டு ஆடு வேணும்னு கேக்குமாம். ஆக இஸ்லாமிய நாடுகளின் மீதான படையெடுப்புக்கான எதிர் வினை என்பது அமெரிக்காவுக்கும் பிற ஐரோப்பிய நாடு களுக்கும் எதிரான இஸ்லாமிய மக்களின் கோபம் என்ற புள்ளியில் தொடங்கி அதன் நீட்சியாக இன்று அமெரிக்கா வுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் எதிரான 'இஸ்லாமிய' பயங்கரவாதமாக ஆக்கப்பட்டுள்ளது என்பதுதான் வரலாறு கூறும் உண்மை. இஸ்லாமிய மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதில் வெற்றி பெற்றுள்ள அமெரிக்க சார்பு ஊடகங்கள், "நீ ஏன் அவனை முதலில் அடித்தாய்?" என்ற எளிமையான கேள்வியை அமெரிக்காவிடம் கேட்பதில்லை, ஆனால் சர்வதேச சமுதாயத்துக்கு அந்தக் கடமை உள்ளது. தான் ஒரு உலக ரவுடி என்ற சுயரூபம் உலக சமுதாயத்தின் முன் அம்பலப்பட்டுப் போனதில் அமெரிக்காவுக்கு வருத்தம் உண்டு; 'உலகளாவிய பயங்கரவாதத்தின் மீது தாக்குதல்' என்ற தனது ஒற்றைத்திட்டத்தின் சதிவலையில் தான் மட்டும் தனித்து நிற்காமல் இந்தியாவையும் இணைப்பதன் மூலம், தனது செயலுக்கு நியாயம் கற்பிக்கலாம். இதற்காக தன்னைப் போலவே 'உலகளாவிய பயங்கரவாத'த்தின் மீது தாக்குதல் தொடுக்கக் கூடிய ஒரு கூட்டாளியாக இந்தியாவை மாற்ற அமெரிக்கா பெரும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை இந்த நோக்கில் பார்த்தால் மட்டுமே புரியும். 'நான் மட்டுமா ரவுடி, அவனும் தான்'. இதற்கு அமெரிக்கா வைத்துள்ள குறிதான் இந்தியா. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, அதாவது மும்பை தாக்குதலை சாக்காக வைத்து, பக்கத்தில் உள்ள பாகிஸ்தான் மீது போர் தொடுக்குமானால், தனது பிரச்சாரத்துக்கு அது ஆதரவாக இருக்கும் என்று அமெரிக்கா கணக்குப் போடுகிறது. இதற்காக, இந்தியாவுக்குள் தனது அடிமைகளான ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா அமைப்புக்கள் மூலம் "பாகிஸ் தான் மீது படையெடு!" என்று மக்களிடையே பொதுக் கருத்தை உருவாக்க முனைகின்றது; இந்துத்துவா பயங்கர வாதிகளைக் கொண்டு பத்திரிகைகளில் கட்டுரை, ஆசியருக்கு கடிதம் எழுதுவது, இன்டெர்நெட்டில் பிரச்சாரம் செய்வது, டி.வி.சானல்களில் வாக்கெடுப்பு நடத்துவது, செல்போனில் எஸ்.எம்.எஸ். பிரச்சாரம் என பல வகையிலும் பிரச்சாரம் செய்கின்றது.

மார்ச் 2003 தொடங்கி 2006 இறுதி வரை 6,50,000 இராக் மக்களை ஜார்ஜ் புஷ் கொன்று குவித்துள்ளான். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொதுசுகாதாரக் கல்வி மையத்தின் கணக்கோ இப்படிக் கூறுகின்றது: "...வருடத்திற்கு 1,43,000 மக்கள் செத்து மடிவார்கள் என மதிப்பிடப்பட்டிருந்தது (மார்ச் 2003க்கு முன்னால்). ஆனால் இன்றைய கணக்கு உண்மையில் இதை விடவும் அதிகம்". "பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக நாங்கள் பொய் சொன்னோம்" என அமெரிக்க கனவான்களே அருள்கூர்ந்து ஒத்துக்கொண்டபின் "அங்கி ருந்து வெளியேறு" என்று சொல்ல முடியாத அளவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் நியாயவான்களும் பொதுச் செயலாளரும் இந்தியாவில் இருக்கின்ற அமெரிக்க விசுவாசிகளும் வாயில் என்ன வைத்திருக்கின்றார்கள் என் பதை திறந்துதான் பார்க்க வேண்டும். 9/11ஆல் உண்மையில் பயனடைந்தவர்கள் யார்? மூவர்தான். அல்-காய்தாவும் அமெரிக்க ஆயுத உற்பத்தி முதலாளிகளும் அவர்களது கூட்டாளிகளான குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி அரசியல் வாதிகள்தான். இந்த இடத்தில், ஜூலை மாதம் இந்திய நாடளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற ரிலையன்ஸ் முதலாளி அம்பானியின் பணத்தை காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி என இரண்டு பேரும் பங்கு போட்டுப் பிரித்துக் கொண்டதும், இந்த இரண்டு தேஷ்பக்த கட்சிகளுக் கும் ஏஜெண்டாக ஆயுத வியாபாரியான சமாஜ்வாடி பொதுச் செயலாளர் அமர்சிங் இருந்ததும் உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்களை இப்படி வலுக் கட்டாயமாக எதிரியாக்கியது அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு எனில், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்களை வலுக்கட்டாயமாக எதிரியாக்கியது ஆர்.எஸ்.எஸ்., ஜனசங் ஆகிய இந்துத்துவா பயங்கரவாதிகளைச் சாரும். ஹெட்கே ராம் பாலிவார், கோல்வாகர், வீரசவர்க்கார், நாதுராம் கோட்சே வழியாக, ஷ்யாம ப்ரஸாத் முகர்ஜி, சுதர்சன், வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, ப்ரவீன் தொகாடியா, நரேந்திர மோடி, பால் தாக்கரே, ராஜ் தாக்கரே, ராம் கோபாலன், சோ ராமஸ்வாமி, இல.கணேசன் போன்ற தீவிர வாதிகளால் தொடர்ந்து இந்த "எதிரியாக்கல்" என்ற அஜெண்டா முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது பூட்டிக்கிடந்த பாபர் மசூதியைத் திறந்து இந்துத்துவா பயங்கரவாதிகள் பூஜை செய்ய அனுமதித்த அன்றைக்கு இவர்களின் வெற்றிப் பயணம் தொடங்கியது எனலாம். ஆனால் நாலுசுவருக்குள் வெறும் பூஜை மட்டுமே செய்து கொண்டிருந்தால் போதுமா? வி.பி.சிங் ஆட்சியின்போது அமலாக்கப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கையை ஒரு ஆயுதமாகக் கையில் எடுத்தது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கும்பல். தொடர்ந்து அயோத்தியில் கோவில் கட்ட தனது ரத்தயாத்திரையை நடத்தினார் அத்வானி. பீஹாரில் முதல்வராக இருந்த லல்லு பிரசாத் யாதவ் அத்வானியைக் கைது செய்ய, வி.பி.சிங் அரசுக்கான தனது ஆதரவை அத்வானி விலக்கிக்கொள்ள, மானம் என்ற வேட்டியே பெரிது என பதவித்துண்டைத் தூக்கி வீசி எறிந்து விட்டு கம்பீரமாக வெளியேறினார் வி.பி.சிங் (வேறு யாராவது நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல). தொடர்ந்து வந்த தேர்தலில் பேசாமடந்தையும் ஒருகாலத்தில் ஆர்.எஸ்.எஸ்.இல் உறுப்பினராக இருந்தவருமான நரசிம்ம ராவ் பிரதமராக, 1992 டிசம்பர் 6ஆம் நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்டது, நாடெங்கும் கலவரம் மூண்டது. ஆயிரக் கணக்கானோர் மாண்டனர். மும்பையிலும் கோவையிலும் குண்டு வெடித்தது ("அத்வானியை ஆண்டவன் காப்பாற்றி னான்"-ரஜினிகாந்த்). இஸ்லாமியர்களை 'வலுக்கட்டாயமாக எதிரி'யாக்குவதில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெற்றி கண்டது. முதலில் 'சர்ச்சைக்குரிய இடம்' என்று சொல்லி வந்த பத்திரிகைகளும் டி.வி.சானல்களும் நாட்கள் ஓடஓட ராமர் கோவில் என்றே எழுதவும் பிரச்சாரம் செய்யவும் தொடங்கி னார்கள். இப்போது 'சர்ச்சைக்குரிய இடம்' என்ற சொல் ஊடகங்களில் மறைந்துவிட்டது. அடுத்துவந்த வருடங் களில், டிசம்பர் 6 தேதியில் வேண்டுமென்றே செய்யப்படும் போலீஸ் கெடுபிடிகளால் பொதுமக்கள் மத்தியில் இஸ்லாமிய மக்கள்மீது வெறுப்புணர்வு திட்டமிட்டு வளர்க்கப் பட்டது. பூட்டு ரிப்பேர், குடை ரிப்பேர், பீடி சுற்றுவது, கைத்தறி நெசவு, பாய் முடைவது, கத்தி சாணை தீட்டுவது, மீன், கருவாடு, மாமிச விற்பனை, மிஞ்சிப்போனால் பெட்டிக் கடை அல்லது வெளிநாட்டில் கூலிவேலை என்று இந்திய சமூகத்தின் விளிம்புநிலைத் தொழில்களைச் செய்து தமது அன்றாட உணவுக்கான வழியை ஏற்படுத்திக் கொண்டிருக் கும் ஒரு சமூகத்தின் மீது 'தீவிரவாதிகள்' என்ற முத்திரை குத்தப்படுவதற்கு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு வழியைக் காட்டியது எனில், அதன் சார்பு செய்தித்தாள்களும் டி.வி.சானல்களும், விஜயகாந்த், அர்ஜூன் போன்ற 'தேஷ் பக்த' நடிகர்களின் திரைப்படங்களும் பெருமளவு அந்த வழி யில் தொடர்ந்து ஜாக்கிரதையாக ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கின்றது.

இஸ்லாமிய சமூகத்தின் இன்றைய அவலமான நிலைமையையும் பொரு ளாதார நிலைமையையும் சொல்லும் ராஜீந்தர் சச்சார் கண்டறி தல்களையும் அவரது அறிக்கையையும் வெறுப்புடன் பார்க்கின்றார்கள். கட்டுரையின் ஒரு இடத்தில் சொன்னது போல, இந்திராகாந்தியோ, ராஜீவ்காந்தியோ, நரசிம்மராவோ, வாஜ்பேயியோ, இப்போதுள்ள மன்மோஹன்சிங்கோ, ஆட்சியில் யார் இருந்தாலும் உண்மையில் இந்திய அரசு எந்திரத்தை ஓட்டிக்கொண்டிருப்பது இந்துத்துவாவாதிகளே. இதையும் மீறி ஹேமந்த் கார்காரே போன்ற போலீஸ் அதிகாரிகள் உண்மையைத் தேடிப்போனால் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் கொடுக்கப்படும் தொல்லை மிகப் பயங் கரமானது, பைத்தியம் பிடிக்க வைப்பது. ஒட்டுமொத்த அரசு எந்திரமும் இந்துமயமாக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.இன் "ஒரு மதம், ஒரு தேசம், ஒரு கலாச்சாரம், ஒரு மொழி" என்ற கொள்கை இந்த இந்துத் துவாவாதிகளின் அரசு எந்திரத்தால் தீவிரமாக அமலாக்கப் பட்டு வருகின்றது. போலீசிலும் ராணுவத்திலும் முக்கிய அதிகாரிகளாக இருக்கின்ற பலர், பதவி ஓய்வு பெற்ற மறுநாளே பி.ஜே.பி. யில் சேர்ந்துவிடுகின்றார்கள் என்பது இந்த வாதத்தை வலு வாக்குகின்ற வெட்டவெளிச்சமான ஆதாரம். இதுபோன்ற அதிகாரிகள் தமது பதவிக்காலத்தில் யாருக்கு ஆதரவாக, யாருக்கு எதிராக இருந்திருப்பார்கள்? பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஓரிருவர் மட்டுமே இந்து மதத்தைச் சேர்ந்தவர்களென்பதும் மற்ற அனைவரும் முஸ்லிம்களே என்பதும் இத்தோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இது முக்கியமான கேள்வி. ராணுவத்தின் முக்கிய ஆயுதங்கள், கருவிகள், போர்த்தளவாடங்கள், கட்டி டங்கள் அனைத்துக்கும் ராமாயண, மஹாபாரத பக்கங்களி லிருந்துதான் சம்ஸ்கிருதப் பெயர்கள் வைக்கப்படுகின்றன. பல உதாரணங்களைக் கூறமுடியும். ரஷ்யாவில் இருந்து ட்டீ-90 ரக போர் டாங்குகள் வாங்கி "பீஷ்மர்" என்று பெயர் வைத்தார்கள்! எங்கே இருக்கின்றது மதச்சார்பின்மை? அரசு அலுவலகங்களில் பஜனைகள் (தவறாமல் வெள்ளிக்கிழமை) ஒலிக்கின்றன. சமீப காலங்களில் ஆயுதபூஜை மிகத்தீவிர மாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு அலுவலகங்க ளில் பணியாற்றும் சிறுபான்மை மத மக்கள் (தலித்களையும் சேர்த்து) "நாம் பணி செய்வது ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் அலுவலகத்தில்" என்று நம்ப வேண்டுமா? இது இந்திய அரசே சிறுபான்மை மத மக்கள் மீது நடத்தும் பயங்கர வாதம் என்று சொன்னால் என்ன தவறு? இந்திய மக்களின் பணத்தில் சம்பளம் வாங்குகின்ற ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி "பகவத் கீதைதான் இந்த நாட்டின் தர்ம நியாய சட்டமாக இருக்க வேண்டும்" என்று கொக்கரிக்கின்றார்; சேது சமுத்திர விவகாரத்தில் மத்திய சட்டஅமைச்சர் "கடவுள் ராமர் இருப் பது சந்தேகத்துக்கு இடமற்ற ஒன்று; ராமர், இந்திய கலாச் சாரத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதி" என்று முழக்கமிடு கின்றார், இவர்கள்தான் சிறுபான்மை மத மக்களையும், இந்து மதத்திலேயே இருக்கின்ற தலித்துகளையும் காப்பாற்றுவார் கள் என்று நம்ப வேண்டுமா? ஒரு பந்த் நடந்தபோது "தமிழ் நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்" என்று கூரைமீது ஏறி நின்று கோஷம் போட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஒரிசாவிலும் குஜராத்திலும் முஸ்லிம், கிறித்துவ மக்களின் கழுத்தும் வயிறும் அறுக்கப்பட்ட போதும், முஸ்லிம், கிறித்துவ பெண்கள் கூட்டமாக வன்புணர்ச்சிக்கு உள்ளானபோதும், கயர்லாஞ்சியில் போட்மாங்கே என்ற தலித் குடும்பத்தினர் உயர்சாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டபோதும் எங்கே போனார்கள்.

2001 செப் 11 அமெரிக்காவில் அல்-காய்தா தாக்குதலுக்கு பின்பு "நியூஸ் வீக்" (24.9.2001) பத்திரிகை இப்படி எழுதியது: "சி.ஐ.ஏ. வின் மிக முக்கிய அதிகாரிகள் செப்.11 அன்று காலையில் திட்ட மிடப்பட்டிருந்த தமது பயணங்கள் அனைத்தையும் ரத்து செய்தார்கள். பாதுகாப்புக் காரணங்களுக்காக என்று மட்டும் கூறப்பட்டது". "வாஷிங்டன் போஸ்ட்" (மே 2002) இப்படி எழுதியது: "2001 கோடைகாலத்தில், அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ஜான் ஆஷ்க்ராப்ட், இனிமேல் பொதுவான பயணிகள் விமானத்தில் பயணம் செய்யக்கூடாது என அமெரிக்க அரசு முடிவு செய்தது - பாதுகாப்புக் காரணங்களுக்காக என்று மட்டும் கூறப்பட்டது". அவையன்றி, அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளான இஸ்ரேல், ஜெர்மனி ஆகியவற்றுடன், எகிப்து, ரஷ்யா ஆகிய நாடுகளும், 2001 செப்டம்பர் மாதத்துக்கு வெகுமுன்பே, "அமெரிக்காவில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடத்தப்படலாம், ஒரு பயணிகள் விமானம் இதற்காகப் பயன் படுத்தப்படக்கூடும்"என்றே அமெரிக்க அரசை எச்சரிக்கை செய்திருந்தார்கள் (தகவல்: www.wsws.org). அப்படியெனில், அல்-காய்தா தன் நாட்டின் மக்களைக் கொல்லட்டும் என்று ஜார்ஜ் புஷ் ஏன் காத்திருந்தார், உள்நோக்கம் என்ன என்ற மையமான கேள்விக்கு விடை கண்டால் மட்டுமே உலகளாவிய பயங்கரவாதம் குறித்து மேற்கொண்டு பேச முடியும்.

அதேபோல், மும்பை மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற உளவுத்துறை தகவல் கிடைத்த பின்னும் இந்திய ராணுவமோ போலீஸ் துறையோ, இன்று வெற்றுச்சவால்களை அள்ளி வீசும் டெல்லி சூரப்புலிகளோ ஏன் தற்காப்பு எச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ளவில்லை, உள்நோக்கம் என்ன என்ற மையமான கேள்விக்கு விடை கண்டால் மட்டுமே இந்தியாவில் பயங்கரவாதம் குறித்து மேற்கொண்டு பேச முடியும்.

புனாவில் உள்ள கோபால் கோட்சேவின் வீட்டில், நாதுராம் கோட்சேவின் சாம்பல் ஏன் இன்னும் கரைக்கப்படாமல் கலயத் தில் உறங்குகின்றது என்று பேச வேண்டியுள்ளது;'ராமருக்கு கோவில் கட்டுவதாக மசூதியை இடித்தவர்கள், ஐந்து வருடம் முழுமையாக ஆட்சியில் இருந்தபோதும் ஏன் கட்டவில்லை?' என்று கேட்க வேண்டியுள்ளது; கடந்த ஐந்து வருடங்களாக காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த பல தேசவிரோத, மக்கள் விரோத மசோதாக்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் அப்படியே நிறைவேற்றும் வண்ணம் அவையில் கூச்சல் குழப்பத்தை உண்டுபண்ண பாரதீய ஜனதாக் கட்சி காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் எவ்வளவு அன்பளிப்பாகப் பெறுகின்றது என்பது பற்றியும், இரண்டு கட்சிகளுக்கும் இடையே திரைமறைவில் இருக்கின்ற கள்ள உறவு பற்றியும் பேச வேண்டியிருக்கின்றது. விடுதலை பெற்ற அடுத்த வருடமே,காங்கிரஸ்காரர்கள் காஷ்மீரில் ராணுவ ஜீப் வாங்கிய விசயத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் ஊழலைத் தொடங்கி வைத்து காந்தியடிகளுக்கு மகத்தானஅஞ்சலி செலுத் தினார்கள். பாரத் மாதாவின் நேரடி வாரீசுகளான ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. தீவிரவாதிகளோ கார்கில் போரில் இறந்துபோன இந்திய ராணுவ வீரர்களின் உடல்களை எடுத்து வர சவப்பெட்டி வாங்கியதில் செய்த ஊழலும், டெஹல்கா பத்திரிகையாளர் களால் கேமராவில் படம் பிடிக்கப்பட்ட, பி.ஜே.பி.தலைவர் பங்காரு லட்சுமணனும் பதவியில் இருக்கின்ற ராணுவ அதிகாரிகளும் கூட்டணி அமைத்து கட்டுக்கட்டாக பணத்தை அமுக்கியதைக் காட்டும் ஆயுதபேர ஊழலும் தெருவுக்கு தெரு நாறியது. இவர்களின் லஞ்சலாவண்யப் பட்டியல் பக்கம் பக்கமாகப் போகும். இது ஒரு பானைச் சோற்றில் ஒரு சோறு மட்டுமே. தனித்தனியே கொள்ளை அடித்தது போதாது என்று, 2008 ஜூலை மாதம் நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, காங்கிரஸ், பி.ஜே.பி. இரண்டு பேருமே ரிலையன்ஸ் முதலாளி அம்பானியின் பணத்தை நாட்டுமக்களுக்குத் தெரியும்படி பகிரங்கமாகப் பங்கு போட்டுக்கொண்ட நேரடி ஒளிபரப்பை இந்திய மக்கள் பார்த்து "இவங்க எவ்வளவு நல்லவங்க" என்று பரவசம் அடைந்தார்கள். ஆக இரண்டு பேருமே தேஷ்பக்தி வேஷம் போட்டுக்கொண்டே இந்தியக்குடிமகனின் ஒவ்வொரு பைசாவையும் கூச்சநாச்சமின்றி நக்கித் தின்கிறவர்கள் என்பது வெட்டவெளிச்சம். இந்த லட்சணத்தில் இவர்கள்தான் பயங் கரவாதத்தை ஒழித்துவிடுவோம் என்று தெருத்தெருவாக ஓலமிடுகின்றார்கள்! நாம் நம்ப வேண்டுமாம்!

நமது மக்கள் அப்பாவிகள். தீவிரவாதிகள் என்றால் கறுப்பு நிறத்துடன், சவரம் செய்யப்படாத முகத்துடன், முக்கியமாக தாடியுடன், அழுக்கு உடையுடன், கையில் ஏ.கே.47 துப்பாக்கி, மார்பில் சுற்றப்பட்ட தோட்டா மேகசைன், கழுத் தில் சயனைடு குப்பியுடன், உருது பேசுபவனாக இருப்ப தாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தீவிரவாதிகள் வெள்ளைநிறத்துடன், சுத்தமாக சவரம் செய்யப்பட்டு அழகாக, லாஹூர் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற வனாக, இலக்கணம் தப்பாமல் ஆங்கிலம் பேசுபவனாக, முன்னாள் துணைப்பிரதமர்களாக, நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவராக, எதிர்கால பிரதமர் கனவுகளுடன் அதிக பட்ச இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருபவர் களாகவும் இருக்கின்றார்கள் என்பதை நம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கின்றது.

இறுதியாக, தனது பதவிக்காலத்தின் இறுதியில் இராக் நாட்டிற்கு சென்ற அமெரிக்க பயங்கரவாதி ஜார்ஜ் புஷ் மீது, முன்டாசர் என்ற அந்த இராக் பத்திரிகையாளன் 'பத்திரிகை யாளன்' என்ற மரபு மீறி தனது ஒரு ஜோடி காலணிகளையும் ஏன் வீசி எறிந்தான் என்பது குறித்தும், அவன் பணி புரிந்த பத்திரிகையின் ஆசிரியர் "முன்டாசர் ஒரு வீரம் மிக்க அரபு தேச பக்தன்; அவன் தேச பக்த உணர்வில்தான் அத்தகைய காரியத்தை செய்தான்" என்று பெருமைப்பட்டதையும், அரபுப் பிராந்திய மக்கள் ஏன் உணர்ச்சிவசப்பட்டு முன்டாசரை வாழ்த்துகின்றார்கள் என்பது பற்றியும் நமது மக்களுக்கு, குறிப்பாக நமது இந்திய ஊடக முதலாளி களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் சொல்ல வேண்டியிருக்கின்றது.

இவை அனைத்தையும் பேசாமல், பொத்தாம் பொதுவாக பயங்கரவாதம் பற்றிப் பேசுவதும், மனிதாபிமானம், 'நாமெல்லாம் ஒற்றுமையா இருக்கணும்' என்று அடிச்சு விடு வதும், வெடிகுண்டுகள் வெடித்தபின் அந்த இடத்தைக் கழுவிவிட்டு, டி.வி.காமிராக்கள் வந்தவுடன் கையிலிருக் கின்ற மெழுகுவர்த்தியை ஏற்றுவதும், செத்துப்போன போலீஸ் அதிகாரிகள் 'தேஷ்பக்தர்'கள் என்று கோஷம் போடு வதும், அவர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக யாராவது சொன்னால் உடனடியாக 'நீ தேச விரோதி' என்று கூச்சல் போடுவதும், ஒவ்வொரு முறை குண்டுவெடித்த பின்னாலும் டி.வி.சானல்களில் ஜாக்கிரதையாக காங்கிரஸ்-ஆர்.எஸ்.எஸ். வகையறா ஆட்களை உட்கார வைத்து பொத்தாம் பொதுவாக தேஷ்பக்தி பேசி "நாங்க வேற வேற கட்சின்னாலும் தேஷ் பக்தின்னா ஒண்ணா இருப்போம், பாருங்க" என்று பீத்திக் கொள்வதும், 'மீண்டும் அடுத்தவாரம் இதே நேரத்தில் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பின்போது சந்திப்போம்' என்று வணக்கம் கூறி விடை பெறுவதும் எதுக்கும் பிரயோசனப் படாது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com