Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2007
நாட்டார் வழக்காற்றியல், மார்க்சியம், அறிவியல்

ந.மெல்பின் ஆன்றோ

நாம் வாழும் சமூகத்தை புரிந்துகொள்வதில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன. ஒவ்வொருவரும் தாம் சார்ந்திருக்கும் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு சமூகம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு சமூகத்தை புரிந்துகொள்ள முற்படுகின்றனர். ஒவ்வொருவரின் ஆய்வு களும் அதுகுறித்த முடிவுகளை நோக்கி நகர்ந்தபோதிலும் சமூகச் சிக்கல்களுக்கு முடிவுகள் கிடைத்தவாறில்லை. அவ்வாறு சில சமூகச் சிக்கல்களுக்கு முடிவுகள் கிடைத்ததும் அக்காலகட்டத்தில் அது உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட போதும் அம்முடிவுகள் சில காலங்களுக்குப் பின் நீர்த்துப்போய்விடுகின்றன. ஒருகாலத்தில் உண்மை என்று கருதப் பட்டது இன்னொரு காலத்தில் உண்மை என்று கருதப்படவில்லை. ஆகவே எது உண்மை எது உண்மையல்ல என்பது காலத்தால் முடிவு செய்யப் படுகிறது. காலம் என்பது வெறுமனே கால அளவை குறிப்பது மட்டு மல்லாமல் அன்றைய அறிவியல் வளர்ச்சி, சமய, சமூக, பொருளாதார மாற்றம், சமூகம் குறித்தான கருத்தாக்கங்களையும் உள்ளடக்கியது. பல நேரங்களில் தேடல்கள் அனைத்தும் உண்மையை தேடுபவையாக இல்லை.

நாம் சார்ந்திருக்கும் சித்தாந்தங்களை, கருத்தாக்கங்களை வலுப்படுத்துப வையாகவே காணப்படுகின்றன. இதனால் சமூகம் குறித்த தேடல் முடிவு கள் அக்காலகட்டத்தில் சரியானதாக இருப்பினும் காலப்போக்கில் நீர்த்துப் போகின்றன. பலநேரங்க ளில் நமது கருத்தாக்கப் பின்னணி தேடலுக்கு வலு சேர்க்காமல் தடை யாகவே காணப்படுகிறது.

மனித இனம் தோன்றியதிலிருந்து இவ்வுலகம் குறித்தான தேடல்களில் மனிதன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். புரிந்த விசயங்களை தக்கவைத்துக் கொண்டதோடு புரி யாதவைகளுக்கு தற்காலிக முடிவு களை தேடிக்கொண்டு/தற்கால முடி வுகளை வைத்துக் கொண்டு நகர்ந் துள்ளதை காண முடிகிறது. புரிந்த வற்றையும் புரியாதவற்றையும் தனித் தனியே பிரித்துப் பார்ப்பதரிது. மாறாக ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. புரிந்த வையும் காலமாற்றத்தில் நம்பிக்கை களாகவும் சடங்குகளாகவும் உருவெ டுத்தன. ஒவ்வொரு சமூகமும் பின் பற்றி வந்த வாழ்க்கை முறை அந்தந்த சமூகத்தின் பண்பாடாகவும் உருவெ டுத்தது. பண்பாட்டை முற்றிலுமாக ஏற்றுக்கொண்டு இவையனைத்தும் உண்மையென்றும்/ பொய்யென்றும் புறக்கணித்து விடவும் முடியாது.

அறிவியல் வளர்ச்சி காரணமாக நிரூ பிக்க முடிந்த விசயங்களை மட்டும் இச்சமூகம் அறிவியல்பூர்வமானது என்றும் ஏற்றுக்கொண்டு நிரூபிக்க வும், புரிந்துகொள்ளவும் முடியாத வற்றை மூடப்பழக்க வழக்கங்கள் என்றும் புறக்கணித்தது. புரிந்து கொள்ள முடியாதவற்றை எல்லாம் அறிவியல் பூர்வமானது அல்ல என்று புறக்கணிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இச்சமூகம் எவ்வாறு மூடப்பழக்க வழக்க மாயையில் சிக்கித் தவிக்கி றதோ அதுபோலவே அறிவியல் மாயையிலும் சிக்கித் தவிக்கிறது என்பதுதான் உண்மை. சமூகமானது அறிவியல் என்ற பெயரில் தனக்கென கட்டுப்பாடுகளை, வரைமுறைகளை அமைத்துக்கொண்டு புரிந்தவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு புரியாத அனைத்தையும் புறக்கணித்து வந்தி ருப்பதை உணர முடியும். இவ்வாறு அறிவியலால் புறக்கணிக்கப்பட்ட இரு முக்கியமான கூறுகள்: 1)கடவுள் 2)மண்சார் அறிவியல். ஆவி குறித்த நம்பிக்கை, மந்திரம், சடங்குகள், கடவுள் என்ற கூற்றினுள் அடங்கும். மருத்துவம், பயன்பாடு, பொருட்கள் மண்சார் அறிவியல் என்ற கூற்றினுள் அடங்கும்.

புரிந்தவற்றை அறிவியல் என்ற கருத் தாக்கத்தின் கீழ் வகைமைப்படுத்தி, அறிவியல் சாராதவை என்று பல வற்றை புறக்கணிக்கும்போது ஏன் புறக்கணிக்கப்படுகின்றன என்று விளக்கும் கடமை இருக்கிறது. ஆனால் எந்தவொரு விளக்கமு மின்றி புறக்கணித்திருப்பது உண்மை சார்ந்த தேடலாக அல்லாமல் ஏதோ வொரு மாயையில் சிக்கித் தவிக்கிறது என்பதே உண்மை. நம்மில் பலரா லும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவி யல் தனக்கென்று ஒரு அரசியலையும் வைத்திருக்கிறது. அறிவியல் புலம் ஐரோப்பியரால் வளர்த்தெடுக்கப் பட்டது. ஒரு நாடு இன்னொரு நாட்டு டன் படையெடுத்து வெற்றி கொண்டு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சுயலாபம் ஈட்டும் நிகழ்வு உலகம் முழுவதிலும் நடைபெறுகிறது. தங்களுக்கான பொருளாதார லாபத்தை பெற அந்நாட்டின் கலாச்சாரத்தை அழிக்க வேண்டியிருந்தது. உதாரணமாக பாரம்பரிய மருத்துவம், பொருளாதாரம் ஈட்டும் கூறாக அல்லாமல் தான் சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமையாகவே கருதப்பட்டது. நம்பிக்கை சார்ந்த பாரம்பரிய மருத்துவமுறையை அறி வியல் முன்வைக்கின்ற வரையறைக் குள் அடைத்து அதன் மருத்துவத் தன்மையை நிரூபித்திட முடியாது. இவ்வாறு பலநாடுகளிலுள்ள மண் சார் மருத்துவத்தை அழித்துதான் இன்றைய ஆங்கில மருத்துவம் பொருளாதாரத்தை ஈட்டியுள்ளதை அறிவோம்.

ஆகவே நம்முன் வைக்கப்பட்ட அறிவியல் யாருக்கான அறிவியல் என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும். அதுபோன்று கடவுள் குறித்த எந்த தெளிவும் நம்மிடையில் ஏற்படவில்லை. இவ்வுலகில் எல்லா சமூகமும் கடவுள் அல்லது ஆவியை புரிந்துகொள்ள முடியாததாலும் இவ் விதமான நம்பிக்கைகளை முறிய டித்தால் தான் பொருளாதார லாபம் ஈட்டமுடியும் என்ற காரணத்தாலும் கடவுள்/ ஆவி கருத்தாக்கத்தை புறக்கணித்தது. மட்டுமல்லாது முற் போக்கு சிந்தனையாளர்களும் சமூக மாற்றத்திற்காக வாழ்வை அர்ப்பணித் தவர்களும் சமூக மாற்றத்திற்கு கடவுள்/ ஆவிகள் மீதான நம்பிக்கை இடையூறாக காணப்பட்டதால் மேலைநாட்டு பொருளாதார லாபம் ஈட்டாளர்கள் அறிவியல் என்ற பெயரில் முன்வைத்த மூடப்பழக்க வழக்கங்கள் என்ற அதே உத்தியை அதன் அரசியல் மற்றும் ஆபத்து அறியாது முன்வைத்தனர். இதனால் தான் மார்க்சியமும் பெரியாரியமும் கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணித்தன.

மார்க்சிய, பெரியாரியவாதிகள் தம்மை நாத்திகவாதிகள் என்று அடையாளப்படுத்துவதில் பெரு மிதப்படுகிறோம். நாம் நம்மை நாத்திகவாதிகள் என்று சொல்வதில் எந்தவொரு தவறும் இல்லை. மாறாக கடவுள்/ஆவி குறித்த கருத்தாக்கங் களை புரிந்து வைத்திருக்கிறோமா என்ற வினாதான் சற்று குழப்பத்தை ஏற்படுத்துகிறது. கடவுள்/ ஆவி குறித்த கருத்தாக்கங்களை புரிந்து கொள்ள நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் உதவி செய்யும். இதற்காக நாட்டார் வழக்காற்றியல் என்ற அறிவியல் புலத்தின் பரிணாம வளர்ச்சியை தெரிந்து கொள்வது மிக மிக அவசியம்.

எல்லா அறிவியல் புலத்தைப் போல வும் நாட்டார் வழக்காற்றியலும் மேலைநாடுகளால் வளர்த்தெடுக்கப் பட்டது உண்மைதான். நாட்டார் வழக்காற்றியல் அறிவியல் புலமாக உருவாக அன்றைய அரசியல் சூழல் மிக முக்கிய காரணியாக அமைந்தது. ஒற்றைக் கலாச்சாரத்திற்கு எதிராக பன்மைக் கலாச்சாரத்தை வலுப்படுத் தவும், நொறுக்கப்பட்ட தேசிய அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்யவும் நாட்டார் வழக்காற்றியல் மிக முக்கிய பங்கு வகித்தது.

கிரிம் சகோதரர்களின் நாட்டார் கதை சேகரிப்புகள், ஹிட்லர் நாசிசத்தை வளர்க்கப் பயன்பட்டதை மறுக்க முடியாது. ஸ்வீடன் மற்றும் ரஷ்ய நாடுகளால் வெகுகாலமாக ஆளப் பட்ட பின்லாந்து, விடுதலை பெற்ற பின் பின்லாந்து என்ற ஒரு தேசியத்தை கட்டமைக்க தமது பண் பாட்டை மீட்டுருவாக்கம் செய்வது மிக அவசியமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் எலியாஸ் லான்ரட் என்னும் மருத்துவர் தங்கள் வாய் மொழியை சேகரிப்பதன் மூலம் பின் லாந்தின் தேசிய அடையாளத்தை கட்டியெழுப்ப முடியும் என்று கருதினார். அதன் முயற்சியாகத்தான் காலேவாலா என்ற நாட்டார் புராணக் கதை உருவாக்கப்பட்டு பின்லாந்தின் தேசிய அடையாளமாக உருப்பெற்றது. பின்லாந்தின் அரசியலை/ அடை யாளத்தை கட்டியெழுப்ப நாட்டார் வழக்காறு உதவியது.

மேலைநாடுகளில் ஏற்பட்டதுபோல் நாட்டார் வழக்காறுகளுக்கான அரசி யல் தேவை இந்தியாவில் உருவாக வில்லை. தமிழகத்தில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளை தொடங் கிய பெருமை பேரா.வானமாமலை யை சாரும். இருப்பினும் அவருக்கு முன்பே இங்கு பலர் நாட்டார் வழக் காறு சேகரிப்புகளை தொடங்கினர். தமிழகத்தில் நாட்டார் வழக்காறு எந்தவொரு அரசியல் பின் புலமு மின்றி தொடங்கப்பட்டாலும் சில ஆண்டுகளில் ஒடுக்கப்பட்ட மக்க ளின் உணர்வுகளை பதிவு செய்து அவர்களுக்கான அரசியலை தனது அரசியலாக கொண்டு செவ்வியல், மேலைக் கலாச்சாரத்திற்கு எதிராக தனது அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்தது.

தமிழகத்தில் நாட்டார் வழக்காற்றி யல் ஆய்வுகள் பேரா. வானமாமலை என்ற மார்க்சியரால் தொடங்கப் பட்டு அவருக்குப் பின் முன்னெ டுத்துச் சென்ற அவரது மாணவர்களும் இடதுசாரிகளாக இருந்தும் மார்க்சி யர்களுக்கும் நாட்டார் வழக்காற்றிய லாளர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி வெகுகாலமாக காணப் பட்டது. நாட்டார் வழக்காற்றியல் மாணவர்கள் இடதுசாரி பார்வையில் வளர்த்தெடுக்கப்பட்டாலும் இடது சாரி கொள்கையை முழுவதுமாக ஏற்கமுடியாத நிலையும் காணப் பட்டது. இந்த இடைவெளிக்கு மிக முக்கிய காரணம், மேலைநாடுகள் அறிவியல் என்ற மாயையில் பண் பாட்டை புறக்கணித்த அதே போக்கை மார்க்ஸியமும் கையாண்டது தான்.

மார்க்ஸ் பண்பாட்டுத் தளங்களுக்கு அதன் முக்கியத்துவத்தை கொடுக்கா மல் பொருளாதாரத்திற்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை புரிந்து கொள்ள அன்றைய கால பின்னணி துணை நிற்கும். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் முதலாளி களின் அதிக லாபமும், உழைப்பாளி கள் மீது திணிக்கப்பட்ட உழைப்புச் சுரண்டலுமே முக்கிய சவால்கள். பொருளாதார சமநிலை ஏற்பட்டால் பிற இன்னல்கள் தீர்ந்துவிடும் என்ற கருத்து அன்றைய சூழலில் சரியான தாக அமைந்திருக்கலாம். ஆனால் மார்க்சின் கருத்துக்களை மந்திரமாக கொண்டு செயல்பட்டால் பல வேளைகளில் தோல்வியைத் ஏற்படலாம். மேலைநாடுகளில் மார்க்ஸின் சித்தாந்தங்களை முன்னெடுத்துச் செல்ல பல சிந்தனையாளர்கள் உரு வாகினர். ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மார்க்ஸின் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்ல புதிய அணுகுமுறைகளையும் விளக்கங்களையும் அளிக்க பெயர் சொல்லுமளவுக்கு எந்தவொரு சிந்தனையாளரும் உருவாகவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

இந்தியாவில் சமய சமூக பண் பாட்டுக் கூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மார்க்சியத்தை முன் னெடுத்துச் செல்லமுடியுமா என்றால் இல்லை என்றே கூறவேண்டும். ஏனென்றால் அன்றைய சூழலில் மார்க்சுக்கு இருந்த சமூகச் சிக்கல் களைவிட இந்தியச் சூழலில் நமக்கு அதிக சிக்கல்கள் காணப்படுகின்றன. இந்திய சமூகமானது சாதியமைப் பால் துண்டுபட்டு சிதறிக் கிடக்கிறது. இங்கே காணப்படும் சமயமும் பன்மைத்தன்மை கொண்டதாகவே காணப்படுகிறது. சாதி, சமயம், பண் பாடு, பொருளாதாரம் அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந் துள்ளன. இன்றைய சூழலில் சமயம் என்ற அடித்தளத்தை தொடாமல் இந்திய சமூகத்தை புரிந்து கொள்வது மிக கடினம். எனவே இந்திய மண் ணுக்கான மார்க்சியம் இம்மண்ணின் பண்பாட்டை புரிந்துகொண்டதாக அமையவேண்டும். சாதி, சமயம், பண்பாடு, பொருளாதாரம் எவ்வாறு மக்கள் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை கீழ்வரும் களப்பணி தரவுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம், இஸ்லாமியர் அதிகம் வாழும் கிராமம். காலங் கால மாக தமிழ்வழி இஸ்லாமியராக இருப்பினும் வஹாபி அல்லது நிறு வன இஸ்லாமியத்தின் இன்றைய வளர்ச்சி மிகவும் குறிப்பிடத்தக்கது. தமிழ்வழி இஸ்லாம் மண்வாசனை உடையதாக காணப்படுகின்றது. பெரும்பாலும் மூதாதையர் ஆவிகள் மீது நம்பிக்கை கொண்ட இவர்களின் வழிபாட்டுத்தலம் தர்ஹா என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலான தர்ஹாக்களும் முன்னோர்/இஸ்லா மிய மறைபரப்பாளரின் கல்லறை மீது கட்டப்பட்டவை ஆகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைப் போல இங்கும் பல தர்ஹாக்கள் காணப்படுகின்றன. தென்னிந்திய தலைமை ரி•பாஈ தர்ஹா மேலப் பாளையத்தில் உள்ளது. ரி•பாஈ என்ற சொல் மதத்தலைவர்களை குறிக்கிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சில மறைமக்கள் பக்கீராக திருநிலைப்படுத்தப்படும் நிகழ்வு நடைபெறும். பக்கீர்கள் தமது மதத் திற்காகவும் மக்களுக்காகவும் அர்ப்ப ணித்துக்கொண்டு வரலாற்று ஆன்மீ கம், தத்துவப் பாடல்களை மக்கள் முன் பாடி அவர்கள் கொடுக்கும் சிறு உதவியைக் கொண்டு வாழ்க்கையை கழிப்பர். பொதுவாக இவர்கள் எங்கும் நிரந்தரமாக வாழ்வதில்லை. இவர்களின் பாடல்களும், இசை நிகழ்ச்சிகளும் வாழ்க்கை வட்ட சடங்குகளிலும் நிகழ்த்தப்படுகிறது. இவர்கள் பொருளாதாரத்தில் மிகவும்

பின்தங்கியவர்களாகவே காணப்படு கின்றனர். ஒருவர் பக்கீராக மாறிய வுடன் இவர்களின் ஆன்மீக தலை முறைப் பட்டியல் இவர்களுக்கு தரப் படும். பக்கீராக திருநிலைப்படுத்தப் பட்டால்தான் ஒருவர் ரி•பாஈ என்ற மதத்தலைவராக முடியும். ஆனால் ரி•பாஈ ஆகும் தகுதி தலைமுறை யாக வருவது. இவர்களின் தலை முறையில் வராத எந்த பக்கீரும் ரி•பாஈ ஆக முடியாது. பக்கீராக வாழ்வது தனது எல்லா ஆசைகளை யும் துறந்து துறவியாக மாறுவதாகும். பக்கீராக மாறும்போது உடலின் மயிர்கள் அனைத்தையும் நீக்கிய பின் குளித்து இயந்திரத்தால் நெய்யப் படாத கையினால் நெய்யப்பட்ட வெள்ளைத்துணி உடுத்தி ரி•பாஈக் கள் முன்பாக உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார். பின்னர் இவரது நம்பிக் கையை வலுப்படுத்தும் விதமாக ரி•பாஈக்கள் ஆசியுடன் தன் உடலில் பல பகுதிகளை ஊசி, ஆணி போன்ற வற்றால் குத்திக் கொள்கின்றனர்.

இச்சடங்குகளில் பங்கு கொள்வோர் மூன்றுநாட்கள் விரதம் இருக்க வேண்டும். விரதத்தின்போது மீன் உணவுகளை தவிர்க்க வேண்டும். அலகு குத்துதல் குறித்து தலைமை ரி•பாஈ குறிப்பிடும்போது ‘அலகு குத்துதல் என்பது மக்களை தம் நம்பிக்கையில் வலுப்படுத்தவும் எங்கள் மீதுள்ள ஆண்டவனின் சக்தியை நிருபிக்கவும் நிகழ்த்தப்படு கிறது’ என்றும் தனது தந்தை நெல்லை மாவட்ட ஆட்சியாளர் முன்பாக ஒரு நபரை இரண்டாக வெட்டி பின்பு மீண்டும் சேர்த்துள்ளார். இது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் எங்களது அதிகாரத்தில் மக்களுக்கு சந்தேகம் வரும்போது இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் நடத்திக்காட்ட வேண்டிய கட்டாயம் வருகிறது என் றும் கூறினார். இது குறித்து பக்கீராக மாறியவர், தனக்கு பக்கீராக எந்த ஒரு விருப்பமும் இல்லையென்றும் தனது தந்தையின் வற்புறுத்தலின் பேரில்தான் பக்கீராக மாறியதாகவும் தனது பிள்ளைகளை கண்டிப்பாக பக்கீராக மாற்ற மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

இத்தகவல்களைக் கொண்டு நாம் எந்தவொரு முடிவுக்கு வராமல் போனாலும் அச்சமூகம் குறித்த பல தகவல்களை பெறமுடியும். இவர் களின் வாழ்க்கை முறை, நம்பிக்கை, சமயம், பொருளாதாரம் அனைத்தும் எவ்வாறு பின்னிப்பிணைந்து காணப் படுகிறது என்பதையும் உணர முடிகி றது. இதுபோன்ற பல சடங்கியல் முறைகள் ஏறக்குறைய எல்லா சமூகத்தினரிடமும் காணப்படுகிறது.

தமிழ்ப் பண்பாட்டில் மருத்துவ குண மளிக்குமுறை முக்கியத்துவம் வாய்ந் ததாக காணப்படுகிறது. மக்களின் சமய நம்பிக்கைகளில் மருத்துவம் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது. மருத்துவத்திற்கும் சமயத்திற்கும் உண்டான உறவை கீழ்வரும் களப் பணி தரவுகளிலிருந்து அறியலாம். குமரி மாவட்டத்தில் நாகர்கோவி லின் தென்பகுதியில் 6கி.மீ. தொலை வில் வடக்கு சூரன்குடி என்றொரு கிராமம் உள்ளது. இங்கு இந்து நாடார் களும் தமிழ்வழி இஸ்லாமியரும் உள்ளனர். இங்கு தர்வேஷ் மீரான் தர்ஹா அமைந்துள்ளது. தர்வேஷ் மீரான் அரேபிய நாட்டை சார்ந்த மருத்துவர் என்று வாய்மொழி தகவல் கள் கிடைக்கின்றன. இவரது மகளின் கல்லறை அங்கிருந்து 20 கி.மீ தொலைவில் மனக்கரை கிராமத்தில் உள்ளது. சூரன்குடி குறித்த ஊர்ப் பெயர் காரணங்களாக கிடைக்கும் இரண்டு வாய்மொழிக் கதைகளில் ஒன்று பெரும்பாலரால் உண்மை என்று நம்பப்படுகிறது. அப்பகுதியில் அதிகம் காணப்பட்ட சூரன் என்ற முள்வகையால் காயப்படுகிறவர் சில நாட்களுக்குள் இறந்துவிடுவதாகவும், அப்பகுதி செல்வந்தரான நாடார் ஒருவர் அவ்வாறு காயமுற்ற போது தர்வேஷ் மீரான் மருத்துவம் செய்து குணப்படுத்தியதால் அவருக்கு சிறிது இடமும், பொருளும் கொடுத்து உதவியதாகவும் இதனால்தான் அவ் விடம் சூரன்குடி என்று பெயர் பெற்றதாகவும் கூறுகின்றனர்.

தர்வேஷ் மீரானின் இறப்புக்கு பின் அவரது ஆவி அவரின் தலைமுறை சார்ந்த ஒருவரின் உடலில் வந்து மருத்துவம் செய்ததாகவும் கூறுகின்ற னர். தர்வேஷ் மீரானை ‘அப்பா’ என்றழைப்பதுபோல் அவரின் ஆவி புகும் நபரையும் அப்பா என்றே அழைக்கின்றனர். அவரது ஆவி வரும் நபர் வெள்ளிக்கிழமைகளில் தர்ஹாவில் ஆவிவயப்பட்டு புகழ்மாலை பாடுவதாகவும் ஞாயிறுகளில் காலை 6 முதல் 11மணிவரை நோயாளிகளுக்கு மருத்துவம் செய்வதாகவும் நம்புகின்றனர். தற்பொழுது தர்வேஷ் மீரானின் ஆவி வருவதாக நம்பப்படுபவரின் வயது 70 இருக்கும். இவருக்கு சொந்தமாக ஒரு மாவு ஆலை உள்ளது. பொருளாதாரத்தில் நடுத்தர வர்க்கத்தவர். இவரிடம் சாதி மத வேறுபாடின்றி அனைவரும் மருத்துவம் பெறுகின்றனர். யாரிடமும் நன்கொடையோ கூலியோ வாங்குவதில்லை. துணையாகவும், இவரது மருத்துவ நுணுக்கங்களை அறிந்து கொள்ளவும் ஆங்கில மருத்துவம் பயின்ற ஒரு மருத்துவர் சிகிச்சை நேரங்களில் உடனிருக்கிறார். அப்பா சிகிச்சையை தொடங்குவதற்கு முன்னும் பின்னும் தனது அறையில் சென்று வருகிறார்.

சிகிச்சை ஆரம்பிக்கும் முன்பு அறையினுள் செல்லும்போது சாதாரண நபராகவும் வெளியில் வரும் போது தர்வேஷ் மீரானின் ஆவியை கொண்டவராகவும் வருகிறார். சிகிச் சைக்கு பின்பு அறையினுள் செல்லும் போது தர்வேஷ் மீரானின் ஆவியை தன்னுள் கொண்டவராகவும் வெளியில் வரும்போது தனது சுய நினைவு களுடனும் வருகிறார். அறையில் குரான் மட்டும் மேசை மேல் வைக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் ஒவ்வொருவரும் தமது சமய முறைப்படி சமய சடங்குகளில் பங்கு கொண்டால்தான் இவர் மருத்துவம் செய்வார். புதிய நோயாளிகளை வெகுசுலபமாக ஏற்றுக் கொண்டு மருத்துவம் செய்வதில்லை. மாறாக அவர்கள் தொடர்ந்து இவரிடம் வந்தால்தான் மருத்துவம் செய்கிறார். இவரது மருத்துவ முறைகள் பொது வாக நாடித் துடிப்பு, சிறுநீர் ஆய்வு, படம் பிடித்தல் ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது. ஒருவரின் நாடித் துடிப்பை பார்த்தவுடனேயே ஒரு சில நோய்களை கண்டறிந்து மருத்துவம் செய்கிறார்.

மாதவிடாய் பெண்களும் கர்ப்பமான பெண்களும் தீட்டு என்று கருதப்படுவதால் இவர் நாடி பிடித்து பார்ப்பதில்லை. மாறாக அவர்களை அருகிலிருக்கும் அறையில் அனுப்பி மற்றொரு பெண்ணின் உதவியுடன் ஒருநூலை அப்பெண் நோயாளியின் கையில் கட்டி அதன் மறுமுனையை பிடித்து நோயாளியின் நாடித் துடிப்பை அறிகிறார். பொதுவாக எல்லா நோயாளிகளும் அவரிடம் வரும்போது தங்களின் சிறுநீரைக் கொண்டு வருகின்றனர். சிறுநீரைப் பார்த்தவுடன் நோயையும் பத்தியம் காக்க தவறியதையும் கண்டறிந்துவிடுகிறார். இவரது படம் எடுக்கும் உத்தி சற்றே வியப்பாகவே தெரிகிறது. அவருக்கு துணையாக இருக்கும் ஆங்கில மருத்துவர், நோயாளியை தனியறையில் நிர்வாணப்படுத்தி இளம் மா இலைகளை ஒவ்வொன்றாக உடலின் பல்வேறு பகுதிகளில் வைத்து எடுக்கின்றார்.

நோயாளி பெண்ணாக இருந்தால் ஒரு பெண்ணை அனுப்பி படமெடுக்கின்றனர். பின்பு அந்த மா இலை களைப் பார்த்து நோய்களை கண்டறிகின்றார். அவர் மருத்துவம் செய்யும் போது இதுகுறித்து அவரிடம் பேச நேரம் கிடைப்பதில்லை. அவர் சுய நினைவுடன் வந்த பின் கேட்டால் “எனக்கு தெரியாது” என்றே பதில் வருகிறது. படம் எடுத்தல் குறித்து ஆங்கில மருத்துவர் கூறும்போது உடல், மனதில் நடக்கிற மாற்றங்கள் எல்லாமே தோலில் பிரதிபலிக்கும். தோலின் மாற்றத்தை தெரிந்து கொண்டால் வியாதியை கண்டு பிடித்துவிடலாம். ஆனால் தோலின் மாற்றத்தை உணர்வது மிகக் கடினம். அவர் 15 வருடங்களாக இதைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்வதாக வும் ஆனால் மிக மிக சிறிய அளவே கற்றுக்கொள்ள முடிந்தது என்றும் தெரிவித்தார்.

வசதியான நோயாளிகளுக்கு அவர் மருத்துவம் செய்வதில்லை. நோயாளியின் தோற்றத்தைக் கொண்டு அவரது வசதியை கண்டறிகிறார். நோயாளி வீட்டில் திருமணம் ஆகாத பெண்கள் இருப்பின் பொருளாதாரத் தில் சற்று முன்னேறியவராக இருப்பி னும் சிகிச்சை கொடுக்கிறார்.

அமெரிக்கா ஆப்கன் மீது போர் தொடுத்து அப்பாவிகளை கொலை செய்து கொண்டிருந்த காலத்தில் களப்பணியின் போது கிடைத்த தகவ லையும் குறிப்பிடுவது அவசியம். அன்று சிகிச்சை கொடுக்கும்போது 9 மணியிலிருந்து 3 முறை, 10 மணிக்கு ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். 9.30க்கு ஒரு நோயாளி வந்தார். மீண்டும் கடிகாரத்தை பார்த்துவிட்டு நான் 10 மணிக்கு ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும், நீங்கள் இப்போது வந்திருக்கிறீர்களே என்றார். உடனே அந்த நோயாளி அப்பா எங்கே போகிறீர் என்றார். நான் ஆப்கானிஸ் தான் போகவேண்டும் என்றார். அப்பா அங்கு எதற்கு போகிறீர் என்று வினவ, நம்ம கஷ்டத்துக்கு காரணம் நம்மதான். ஆனா ஆப்கானிஸ்தானி லுள்ள அப்பாவி மக்கள் குண்டடிப் பட்டு சாவுறாங்க. அவங்களை காப்பாத்த போகனும் என்றார். அந்த நோயாளி நீங்கதான் 5 நிமிடத்தில் போயிடலாமே என்றார். அதற்கு அவர் ஆமா ஆமா என்று கூறிவிட்டு சிகிச்சை அளித்தார்.

இதேபோன்று இன்னொரு முறை ஒரு நோயாளியுடன் உரையாடியது: அவர் கிறித்துவ நாடார் சமூகத்தவர். பொருளாதாரத்தில் சற்று முன்னேறி யவர். “அப்பா” அந்த நோயாளி பற்றிய தகவல்களை அவரிடமிருந்து தெரிந்துகொண்டு நான் கிறிஸ்தவர் களுக்கு மருத்துவம் செய்வதென்றால் எனக்கு மேலிருந்து உத்தரவு வர வேண்டும். நீ இப்ப போ. நான் உங்க ஊருக்கு வருவேன். அப்ப அண்ணன் சவேரியாருகிட்ட உன்னைப் பத்தி கேட்பேன். அவர் உனக்கு மருந்து கொடுக்க சொன்னால் தருவேன் என்றார். நோயாளி கிறித்துவராக இருந்தால் விவிலியத்திலிருந்து சில கேள்விகள் கேட்பார்.

நமக்கிருக்கும் பகுத்தறிவு கண் களுடன் இதைப் பார்ப்போமானால் அத்தனை நிகழ்வுகளும் மூடப் பழக்கவழக்கமாகவும் ஏமாற்றுத்தன மாகவும்தான் தெரியும். ஆனால் இவற்றை புறக்கணிப்போமானால் சமூகத்தை புரிந்து கொள்ள முடியாது. ஆய்வுக்கு உட்படுத்துவோமானால் புரிந்துகொள்ள முடியும். சிகிச்சைக்கு முன் தனது அறைக்குள் செல்வதை கருவுலகுக்குள் செல்வதாகவும் அங்கு ஆவிவயப்பட்டு வெளியில் வருவதாகவும் சிகிச்சைக்குப் பின் மீண்டும் தனது அறைக்குள் சென்று சுயநினைவுடன் திரும்புவதும் குறி யீடுகளாக காணப்படுகின்றன. இது போன்ற குறியீடுகள் எல்லா இனக் குழுக்களிலும் ஆவிவயப்படும் பொழுது நிகழ்த்தப்படுகிறது.

அவரது மருத்துவ நுணுக்கங்கள் தமிழ் மருத்துவ நுணுக்கத்தோடு தொடர்புடையதாக இருப்பினும் இவர் தொடர்ந்து தன்னைப் பற்றி புனிதம் தொடர்பான ஒரு கதை யாடலை கட்டமைப்பதை காண்கி றோம். ஆனால் நோயாளிகள் குணம் பெறுவதை விபத்து என்று சொல்லி விட முடியாது. மாறாக மரபு அறிவி யலை கையில் கொண்டு தன்னைப் பற்றி ஒரு கதையாடலை தொடர்ந்து கட்டமைக்கிறார். அது என்னவென் றால் தான் செய்யும் மருத்துவ குணம் அளிக்கும் முறையில் தனக்கு எந்த பயனும் இல்லை என்றும் தான் இது போன்ற விசயங்களில் நம்பிக்கை கொண்டவன் அல்ல என்றும் தான் ஒரு நாத்திகன் என்றும் கூறுகிறார். இவர் செய்யும் இந்த நிகழ்வை விரும்புவதில்லை என்பதற்கும் முதல் களப்பணி தரவுகளில் பக்கீர் “நான் விரும்பி பக்கீர் ஆகவில்லை என்றும் எனது பிள்ளைகளை பக்கீ ராக்க மாட்டேன்” என்பதற்கும் வித் தியாசம் இருக்கிறது. பல நாட்டார் கலைஞர்களும் பக்கீர் கூறுவது போன்ற கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இக்கலைஞர்களும் பக்கீர்களை போல மிகவும் பின்தங்கிய பொருளாதார நிலையில் காணப்படுகின்றனர். கலையை நிகழ்த்தும் நேரத்தில் மட்டுமே முக்கியமாக கருதப்படும் இவர்களை பிற சமயங்களில் யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் “அப்பா”வைப் பொறுத்தமட்டில் அவருக்கு கிடைக்கும் மரியாதை நிரந்தரமானது. குணமளிக்கும் நேரங்களில் மட்டுமல்லாது பிறநேரங்களிலும் இவர் அப்பா என்றே அழைக்கப்படுகிறார். இவருக்கான சமூக சமய மரியாதை நிரந்தரமாக காணப்படுகிறது.

தமிழகத்தில் சமயங்கள் தொடர்ந்து மருத்துவ குணமளிக்கும் முறையை கையாண்டு வந்துள்ளன. இன்று தமிழகத்தில் காணப்படும் பல வழிபாட்டுத் தலங்களில் மருத்துவமே அந்த வழிபாட்டுத் தலம் உருவாக காரணமாக இருக்கிறது. உதாரண மாக மிக்கேல் ஆண்டவர் கோயில் - ராஜாவூர்/ அந்தோனியார் கோயில் - புளியம்பட்டி/அந்தோனியார் கோயில் - உவரி/ வேளாங்கன்னி கோயில் - வேளாங்கன்னி/ ஆத்தங்கரைப் பள்ளிவாசல்- நான்குநேரி.

தமிழகத்தில் அம்மன் வழிபாடு எல்லா பட்டிதொட்டிகளிலும் காணப்படுகிறது. அம்மன் வழிபாடு குறித்து பண்டிதர் அயோத்திதாசர் குறிப்பிடும்போது சாமளை நோய்க்கு மருத்துவம் செய்த வையார் காலப்போக்கில் அம்மனாக மருவி உள்ளது என்ற கருத்தை வெளிப்படுத்துவார். ஆக மண்சார்ந்த நாட்டார் சமயம் மருத்துவம் சார்ந்ததாகவே உள்ளது. இந்தியா வந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயத்தினரும் இந்த மருத்துவ குணத்தையே ஆயுதமாகக் கொண்டனர். ஆக பண்பாட்டின் அத்தனைக் கூறுகளையும் நாம் புரிந்து கொண்டால்தான் நம் சமூகத்தை புரிந்து கொள்ள முடியும்.


கட்டுரையாளர்: பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறையின் ஆய்வு மாணவர்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com