Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Vanam
Vanam
செப்டம்பர் 2007

செத்த ஆந்தையின் முகத்தில் துக்கம் கொஞ்சம் கூடுதல்தான் ராணிதிலக்

நிசப்தத்தில் உறையும் ஒரு கோயிலுக்கு முன் அமர்ந்து
மன்றாடுதலுக்காக யாரும் உள்ளே வராதபடி
குழந்தைமையின் முகத்துடன் காவல் காக்கும்
ஓர் ஆந்தையை நான் பார்த்தேன்
இளம் இரவில் இந்த உலகைக் காத்தபடி வாழும் அது
அதே இடத்தில் இக்காலைவேளையில்
செத்துக்கிடப்பது துர்சகுனம்தான்
இன்று மட்டும் ஏன்
சாலைகள் சயான மனோநிலையில் இல்லை
ஏன் தென்னங்கீற்று இன்று பழுப்பேறிக்கிடக்கிறது
வயலில் நாரைகள் ஏன் இரை உண்ண வரவில்லை
ஏன் இப்போது மட்டும்
நான் அமரும் வேம்பு
துக்கத்தில் அசைவதாகத் தோன்றுகிறது
நான் பார்க்கும் முன்பகல்
ஏன் வெறுமையில் அலைகிறது
நான் அமர்ந்திருக்கும் மரத்தின் நிழல்
என் இதயத்தைப்போல் ஏன் சுருங்கிச் சுருங்கி விரிகிறது
நான் கண்ணைமூடி மௌனமாக அமர்ந்திருக்கிறேன்
மென்மையான சப்தங்கள் சில
தூறியபடி என் முன்னால் விழ
திறக்கிறேன் கண்களை
வேம்பின் பழுத்த இலைகள் உதிர்கின்றன
என் துயரத்தின்மீது செத்துக்கிடக்கும்
ஆந்தையின் மஞ்சள் நட்சத்திரமுகத்தை நினைத்து
ஓர் பழுத்த இலையை எடுத்து சுவைக்கிறேன்
அதில் அவ்வளவு கசப்பு இல்லை
எல்லா துக்கங்களையும் இதுபோல் தூக்கி எறியவே முயல்கிறேன்
துரதிர்ஷ்டமான அது
நம் நிழலுடன் சேர்ந்தேவிடுகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.