இற்றைத் திங்கள்
- யாழி
எந்த ஜன்னல் கண்ணாடியும்
நொறுங்குவதில்லை பந்துபட்டு
மாணவர் விடுதியில் மகன்.
ஸ்டிக்கர் ஒட்டாமல்
மைபடாத முகம் பார்க்கும் கண்ணாடி
மகளிர் விடுதியில் மகள்.
சுண்ணாம்பு தடமோ!
வெற்றிலைக் கறையோ படாத சுவர்கள்
முதியோர் இல்லத்தில் அம்மா, அப்பா.
கலைக்கப்படாமல் அலமாரி
பராமரிக்கப்படாத தோட்டம்
ஒட்டடை படிந்த அடுக்கனை
அலுவலகத்தில் அவனும் அவளும்.
வெறுமைகளை
குடியமர்த்தியபடி வீடுகள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|