ஜோதி பெருமாள் கவிதைகள்
அருவியாய் வீழ்ந்து சிதறி
காட்டாறாய்ப் பெருக்கெடுத்து
சமவெளி ஆற்றின் வேகத்தில் நிதானித்து
கவனம் திரும்பிய அந்தக்
கலவிமுடிவின் நொடிகளில்
மின்னலாய் மனதுள்
தோன்றி மறைகிறது
மாலையில் கேள்வியுற்ற
உறவினள் மரணம்
குறுகுறுத்த மனவெளியில்
படபடத்துக் கடக்கின்றன
சமாதானப் பறவைகள்
பின்னது இயற்கையெனில்
முன்னதும் அதுவேயெனக் கூவிபடி.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|