நூல் அறிமுகம்
மந்திரச்சிமிழ் (வடதிசை மக்களின் தேவதைக் கதைகள்) (பாகம் 1, 2)
ஆசிரியர்: ஜரினா ஜெலிஸ்நோவா,
தமிழில்: கயல்விழி, விலை : ரூ. 70.00, 60.00
இக்கதைகள் கவித்துவமும், கற்பனையும் கதை கூறலின் சுதந்திரத்தைக் கொண்டாட்டத்துடன் கூறுபவை. வேறுபட்ட கலாச்சாரப் பின்புலமாயினும் மாய நிகழ்வு களும் உணர்வோட்டமும் நம் கதை மரபோடு மிக இணக்கமாக இளம் வாசகர்களுக்கு விருந்தாக அமைகின்றன.
அவன் விதி
ஆசிரியர் : மிகயீல் ஷோலகவ்,
மொழி பெயர்ப்பு : மீனவன்,
விலை : ரூ. 30.00
நோபல் பரிசு பெற்ற சோவியத் எழுத்தாளரான மிகயீல் ஷோலகவின் இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் எழுதப்பட்ட குறுநாவல் இது.
வெண்ணிற இரவுகள்
ஆசிரியர்: ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி,
மொழி பெயர்ப்பு : ரா. கிருஷ்ணையா,
விலை : ரூ. 40.00
உலகின் தலைசிறந்த நாவலாசிரியர்களில் ஒருவரான ருஷ்ய எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் குறுநாவல் இது. என்றைக்கும் எப்போதும் புதிய பரிமாணங்களை, அனுபவங்களை அள்ள அள்ளக் குறையாமல் கொடுத்துக் கொண்டிருக்கும் காதல் கதை.
வானம் பார்த்த பூமி
ஆசிரியர்: வஞ்சி நாயகன், விலை : ரூ. 50.00
கொங்கு நாட்டின் மண்ணையும், மண் சார்ந்த வட்டாரச் சொற்களையும் கொண்டு கதை மாந்தர்களின் வழியே விவசாய நிலங்கள் பறிபோவதைக் கூறும் நாவல்.
ஓட்டகக் கண்
ஆசிரியர் : சிங்கிஸ் ஐத்மாத்தவ்,
தமிழில் : யூமா. வாசுகி, விலை : ரூ. 30.00
லெனின் பரிசு பெற்ற நாவலாசிரிய ரான சிங்கிஸ் ஐத்மாத்தவின் நாவல் இது.
சிக்கலான கண நேர பொழுதுகளை சரியாக கணிக்க முடியாமல் வாழ்வின் திசைகள் எப்படி மாறிப் போகின்றன என்பதை கூறுகிறது இக் குறுநாவல்.
கவிதை வளர்த்த மணிக்கொடி
ஆசிரியர்: க. உமாமகேஸ்வரி, விலை : ரூ. 50.00
கலை கலைக்காகவே என்று செயல்பட்டு வந்த அரசியல் பேசாத இலக்கியவாதிகளின் இதழான மணிக்கொடி இதழைப் பற்றிய ஆய்வேடான இந்நூலில் கவிஞர் சிற்பியின் முன்னுரை சேர்க்கப்பட்டுள்ளது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|