Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜுலை - ஆகஸ்ட் 2007

நூல் விமர்சனம்

தெருவோரப் பூக்கள்
பெ. பகவத்கீதா

தமிழ் இலக்கியத்திலும் தமிழ்க் கவிதையிலும் ஈடுபாடு உடைய உலகத்தமிழ் கவிஞர் பேரவையின் திருச்சி மாநகர இணைச் செயலாளராகப் பணியாற்றும் சொ. வேல்முருகன் அவர்கள் இயற்றியிருக்கும் ‘தெருவோரப் பூக்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பு கவிதைகளின் வார்த்தைகளுக்கு விடியல் தேடும் நிஜங்களின் வார்த்தைகள். சில கவிதைகள் வாசிக்கப்படவேண்டியவை. சில கவிதைகள் நேசிக்கப்பட வேண்டியவை. சில கவிதைகள் சுவாசிக்கப்பட வேண்டியவை.

‘அப்பா’ என்னும் கவிதையில் ஒரு தந்தையின் பாச உணர்வு மட்டுமல்ல அவரின் தந்தை மகற்காற்றும் உதவி. அவையத்து முந்தியிருக்கச் செயல் என்னும் குறளின் வெளிச்சத்தைப் பறை சாற்றுகின்றது.

‘நீ வளர்த்த
விரத வேள்வியில்
நாங்கள்
வெளிச்ச விலாசமடைந்தோம்”.

கவிமணியின் சந்தநயமும் குழந்தையின் ஒலிக்கின்றது.
‘தங்கமகள் பின்னும்

‘கவலையோடு கற்பனையில்
அழுதவிழியில்

அர்த்தம் பார்த்தேன்’ என்னும் வரிகளிலும் ‘அரசின் தொட்டியெல்லாம்’ என்னும் கவிதையில் அரசின் தொட்டியெல்லாம் ஆயுள் வரை துணை வருமா? என்னும் வரிகளில் விடை காண முடியாக் கேள்வியில் ஜீவனின் உயிர்த் துடிப்பு கேட்கின்றது. கவிஞனின் கவிதையுணர்வு அழகுணர்வோடு மட்டுமே அமைவதில்லை. சமூக அக்கறை, மாறுபட்ட கற்பனையோடு உலா வருகின்றது.

‘தேடல்’ என்னும் கவிதையில்
‘இருட்டில் கிடைத்த
சுதந்திரத்தை
இருட்டியே
தேடும் பணியா’

வெளிப்படுகிறது.

‘கடலோர நினைவுகள்’ என்னும் கவிதையில்
‘தரையில் வலை விரித்து
தவறு செய்பவர்களையும்
பிடிக்க வாருங்கள்’ என்கிறது.

மற்றும் ‘மரணதேவன் உலாவரும் உல்லாசக்காளை’ என்னும் வரிகளில் ‘மதுவின்’ கொடுமையால் மனிதன் மரணத்தைத் தழுவும் வேதத்தின் கொடுமையைக் காணுகின்றோம்.

‘பற்றாக்குறை நிதி என்பதற்காக
பல குடல்களைப் பற்றி
எரிய வைத்திட வரும்
தீக்கு தீபமேற்றுவதோ’

என்னும் கவிதை வரிகள் மனித அழிவினைச் சுடரேற்றிக் காண்பிக்கின்றன.

தெருவோரப் பூக்கள்

ஆசிரியர் : மெய்யாத்தூர் சொ. வேல்முருகன்,
வெளியீடு : செண்பகம் பதிப்பகம், 13/1, ஏ, பார்சன் டெல்டா, ‘பி’ பிளாக், மாம்பழச் சாலை,
திருச்சி - 5, விலை : ரூ. 50.00


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com