Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
பிப்ரவரி 2009
தமிழ் இனத்தை அழித்தொழிக்க இந்திய காங்கிரஸ் அரசு நடத்தும் போர்

புதினம் செய்திப் பிரிவு மிகக் கவனமாக - ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் - சேகரித்த விபரங்களின் படி கடந்த ஒரு மாத காலத்திற்குள், அதாவது 2009ஆம் ஆண்டு பிறந்த பின்னர் மட்டும் இலங்கையில் 439 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர்.

Sonia gandhi பச்சிளம் குழந்தைகளும், பாலகர்களும், சிறுவர்களும், முதியோர்களும் என படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,772. அதாவது - சராசரியாக - ஒவ்வொரு நாளும் 14 தமிழர்கள் கொல்லப்பட்டு, 57 தமிழர்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்த ஒவ்வொரு நாளும், போர்க் களத்தில் வீழ்ந்து போன, விழுப் புண்பட்ட புலிப் போராளிகளின் எண்ணிக்கை இங்கே சேர்க்கப்படவில்லை. இறந்து போன, போர்க் காயமடைந்த அவர்களும் தமிழர்களே. இது தவிர, வன்னியில் இருந்து வெளியேறிய 160 வரையான தமிழ் இளம் பெண்களும், இளைஞர் களும், இரகசியமான சித்திரவதை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, வதை செய்யப்பட்டு கொன்று புதைக்கப்பட்டதாக வெளியில் சொல்ல முடியாத ஆதாரங்களில் இருந்து நம்பகமான தகவல்கள் உண்டு.

தெளிவாக, இது ஓர் இனப்படுகொலைப் போரே அன்றி வேறொன்றும் அல்ல. ஆனால், இந்த இனப் படுகொலைப் போரை நடத்துவது யார் என்பதிலும், அதற்கு எதிராக நாம் செய்ய வேண்டியது என்ன என்பதிலும்தான் நமக்கு தெளிவு தேவை.

இது இந்தியாவின் போர், சிறிலங்கா ஒரு பொம்மை மட்டுமே. இந்தப் போர் ஒரு முடிவுக்கு வருவதற்கு, இந்தியா விடப்போவதே இல்லை. அதா வது, சிறிலங்கா விரும்பினாலும் கூட இந்தப் போர் நிற்கப் போவதில்லை. இந்தியப் படை அதிகாரி கள், வன்னிப் போர் முனையில், வெறுமனே பிரதான கட்டளை மையங்களில் மட்டுமன்றி, நேரடியான போர்ச் செயற்பாடுகளிலேயே ஈடுபடுகின்றனர்.

இந்திய உளவு வானூர்திகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை 24 மணி நேரமும் கண்காணித்தபடியே உள்ளன. இந்திய கடற் கண்காணிப்பு கதுவீ கருவிகள் வங்காள விரிகுடாவை 24 மணித் தியாலமும் கண்காணித்த வண்ணம் உள்ளன. இந்தியாவின் கண்களுக்குத் தப்பி ஒரு மீன்பிடிப் படகு கூட அங்கு நீந்த முடியாது. இந்தத் தகவல்கள் எல்லாமே விடுதலைப் புலிகளுக்குத் தெளிவாகத் தெரிந்திருப்பினும்கூட, அரசியல் இராஜதந்திர நோக்கங்கள் கருதி, சில விடயங்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாதவர்களாக அவர்கள் உள்ளனர். ஒரு புறத்தில் போரை நடத்திக் கொண்டு, மறுபுறத்தில் அனைத்துலக நாடுகளிடம் இருந்து வரக் கூடிய அழுத்தங்கள் எல்லாவற்றையும் முறியடிப்பதற்கான இராஜதந்திர ஆலோசனைகளையும் சிறிலங்காவுக்கு வழங்குகின்றது இந்தியா. பொருளாதாரம் சீரழிந்து சிறிலங்கா வீழ்ந்தாலும், அதனை முட்டுக் கொடுத்துத் தூக்கிவிட்டு, இந்தியா இந்தப் போரை நடத்தும். ஆட்பலம் குறைந்து சிங்களப் படை தவித்தாலும், தன் படைகளை இந்தியா போருக்கு அனுப்பும்.

பிண மலையாகத் தமிழர்கள் வன்னியில் குவிந்தாலும் சரி, முத்துக்குமாரர்களாக சாஸ்திரி பவன் முற்றத்தில் எரிந்தாலும் சரி, சோனியாவின் ஆன்மா கரையப் போவதில்லை.

தமிழ்த் தேசிய எழுச்சித் தீயை அணைத்து அடக்கும் வரை, காங்கிரசின் இந்திய வல்லாதிக்கம் ஓயப்போவதில்லை. சிவசங்கர் மேனனையும், பிரணாப் முகர்ஜியையும், தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த உணவு மூட்டைகளையும் சிறிலங்காவுக்கு பகிரங்கமாக அனுப்பி, மற்றநாட்டுக்காரர்களைத் தள்ளி நிற்க வைத்து விட்டது இந்தியா. நோர்வேயின் எரிக் சொல்கெய்ம், மிக அண்மையில், புலிகளிடம் நேரடியாகவே சொல்லி விட்டார், “இப்போது எமது கையில் எதுவுமே இல்லை”, என்று.

உலகத் தமிழர்களே! இது நமக்குரிய நேரம். இதுவேதான் நமக்கான நேரம்! நமக்காக எழுந்துவிட்ட ஏழு கோடி தமிழகத் தமிழர்களுடன் சேர்ந்து, உலகத் தமிழர்கள் நாம் நம்மைப் பழி தீர்க்க முனையும் இந்தியாவின் இந்த குரூர வெறிக்கு ஒரே யடியாக முடிவு கட்டவேண்டும்.

ஊரில் நடைபெறும் நிகழ்வுகளின் செய்திகளைப் பார்த்து, கொதிப்படைந்து, ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உணர்வுப் பெருக்கோடு எதையாவது செய்து கொண்டிருக்கின்றோம். உலகு எங்கும், கவனஈர்ப்பு நிகழ்வுகள் செய்து, ஆர்ப்பாட்டப் பேரணிகள் வைத்து, மனுக்கடிதங்கள் எழுதி, மனிதச் சங்கிலிகள் பிடித்து, நம்முடைய கோபத்தையும், ஆதங்கத்தையும் பிழையான இடங்களின் மீது நாம் காட்டிக் கொண்டிருக்கின்றோம். சிறிலங்கா அரசின் மீது அழுத்தம் போட்டு தமிழர் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்துமாறு உலக நாடுகளையும், ஐக்கிய நாடுகள் சபையையும் நாம் வேண்டுகின்றோம்.

ஆனால், தமிழர் இனப் படுகொலையை நிகழ்த்துவது சிறிலங்கா அல்ல; அது இந்தியாவே என்பதை நாம் உணர வேண்டும். சிறிலங்கா இப்போது வெறும் பொம்மை மட்டுமே; இது இந்தியா இயக்கும் போர் என்பது எல்லாருக்குமே தெரியும். இப்போதுள்ள சூழலில், தென்னாசியாவில், இந்தியாவை மீறி எதுவுமே நடக்கப் போவதில்லை. மேற்குலக நாடுகள் என்றாலும் சரி, ஐக்கிய நாடுகள் சபை என்றாலும் சரி, ஆகவும் மிஞ்சிப் போனால், நமது ஆய்க்கினை தாங்காமல், ஒரு அறிக்கையை விடுவார்கள்; கவலை தெரிவிப்பார்கள். அதற்கு மேல் அவர்கள் எதுவுமே செய்ய மாட்டார்கள்; அவர்களால் எதுவும் செய்யவும் இயலாது. இந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்; இந்தப் போரினை நடத்துவது.

அதை ஒருங்கே குவித்து, சரியான இலக்கை நோக்கி நகர வைக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த நாடுகளிலுள்ள தமிழ் செயற்பாட்டாளர்களின் கைகளிலேயே இப்போது உள்ளது. என்றுமில்லாத அளவுக்கு பேரெழுச்சி கொண்டுள்ள தமிழக மக்களுக்குப் பின்னால் உலகத் தமிழர்கள் உடனேயே அணிதிரள வேண்டும். விடுதலைப் புலிகளின் கோலாகலமான ஒரு போர் வெற்றிக்காக இரண்டு வருடங்கள் நாம் காத்திருந்தோம். எதுவுமே நடக்கவில்லை. நடக்க இந்தியா விடவில்லை. இப்போது - காங்கிரஸ் ஆட்சியின் கேவலமான ஒரு வீழ்ச்சிக்காக நான்கு மாதங்கள் காத்திருக்க எமக்கு அவகாசம் எதுவும் இல்லை; அதன் பிறகு கூட ஏதாவது நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

உலகு எங்கும் உள்ள இந்தியத் தூதரகங்களை நாம் இப்போதே முற்றுகைக்கு உள்ளாக்க வேண்டும். தொடர்ச்சியாக - இடைவிடாமல் ஒருங்கு திரட்டப்பட்ட செயல் வீச்சோடு - அதை நாம் பல்லாயிரக்கணக்கில் திரண்டு செய்ய வேண்டும். இதே போல ஒவ்வொரு நாடுகளிலும் செய்ய வேண்டும். தமிழர் பிரச்சினை தவிர வேறு எதைப் பற்றியுமே சிந்திக்க முடியாத - நாளாந்த அலுவல்களில் சிரத்தைக் காட்ட முடியாத - செயலிழப்பு நிலைமைக்கு வெளிநாட்டு இந்தியத் தூதரகங்களை நாம் உள்ளாக்க வேண்டும்.

நமது இடைவிடாத முற்றுகைகள் மூலம் - தூதரக அதிகாரிகளையும் தூதுவர்களையும் செயற்பட முடியாத அளவு எரிச்சலுக்கும், சினத்திற்கும் உள்ளாக்க வேண்டும். தமது தூதரகங்களுக்கே சென்றுவர முடியாதுள்ள, தமது பணிகளை ஆற்றமுடியாதுள்ள தமது கையாலாகாதத்தனத்தை அவர்கள் டெல்லித் தலைமைக்கு முறையிட வைக்க வேண்டும்.

தமிழ் இனத்தைப் படுகொலை செய்து அழிக்கும் போரின் சூத்திரதாரி சிறிலங்கா அல்ல; இந்தியாதான் என்பதை இந்த உலகின் முற்றத்தில் நாம் ஓங்கி ஒலிக்க வேண்டும். இந்தியா நடத்தும் இந்தப் படுகொலைப் போரின் பழியை இந்தியாவின் தலையிலேயே நாம் சுமத்த வேண்டும். ஒரு பழம்பெரும் இனத்தை அழிக்கும் நாடு என்ற அவமான வெட்கத்தை இந்தியாவின் முகத்தில் நாம் பூச வேண்டும். அதனை நோக்கியே நமது செயற்பாடுகள் யாவும் அமைய வேண்டும். உண்மையில் - மேற்குலகத் தலைவர்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் நாம் நேரடியாக எதனையுமே சொல்ல வேண்டியதில்லை. படுகொலை செய்து கொண்டிருக்கும் இந்தியாவைக் கூனிக் குறுக வைத்து, தமிழர்களின் விடயத்தில் இந்தியாவின் விருப்பத்தை மீறிய முடிவுகளை எடுக்கும் சூழலுக்குள் மேற்குலக நாடுகளை நாம் நிர்ப்பந்திக்க வேண்டும். மேற்குலக நாடுகளை அவ்வாறான முடிவுகளை எடுக்க வைப்பதன் மூலம், சோனியா காந்தியின் குரூர விருப்பங்களை மீறிய முடிவுகளை எடுக்கும் சூழலுக்குள் காங்கிரஸ் தலைமையை நாம் நிர்பந்திக்க வேண்டும்.

நாம் தெளிவாக இருப்போம் - சிறிலங்கா அல்ல, இந்தியாவே தமிழர்களின் எதிரி. அதனையே நாம் இலக்கு வைக்க வேண்டும். மேற்குலக நாடுகளையும், அதன் தலைவர்களையும் நோக்கி நமது கவனத்தையும் சக்தியையும் சிதற விடாமல், இந்தியாவை நோக்கியே நமது எண்ணங்களையும் செயல்களையும் நாம் ஒருங்கு குவிக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு ஒரேயடியாக முடிவு கட்ட வேண்டும். இந்தியாவை நோக்கிய நமது செய்தி உலகம் முழுவதிலும் ஒன்றாகவே இருக்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி!
சிறிலங்காவுக்கான போர் உதவிகள் அனைத்தையும் நிறுத்து!

ஒவ்வொரு நாளும் 15 தமிழர்கள் சாகின்றனர். ஓய்ந்திருந்து யோசிக்க எமக்கு நேரமில்லை. அவர்களையும் எம் தேசத்தையும் காக்கும் வழியும் எமக்குத் தெரிகின்றது. செயற்படுவோம், இப்போதே!

- தமிழ் இனத்தை அழித்து ஒழிக்க
- போர் நடத்தும் காங்கிரஸ்
- துணை போகும் திமுக.
- பாராட்டி மகிழும் ஜெயலலிதா
- பார்த்து மகிழும் சிபிஎம் கம்யூனிஸ்டுகள்

தமிழர்களாகிய நாம் இது போன்ற கட்சிகளில் இருந்து விலக வேண்டிய நேரம் இது. இது போன்ற கட்சிகளில் இருந்து உடனே விலகி தமிழ்த் தேசிய இயக்கங்களில் சேர்ந்து நம்முடைய தமிழ் இனத்தைக் காப்பாற்றுவோம்.

(நன்றி: புதினம்.காம்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com